வியாழன், 18 செப்டம்பர், 2025

இறுதிப் பேருரை

19-09-2025

ரபீஉல் அவ்வல்- 26


بسم الله الرحمن الرحيم  

 இறுதிப் பேருரை



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة

நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உபதேசித்தார்கள். குறிப்பாக சகோதரத்துவம், வட்டி, கொலை, குலப்பெருமை, பெண்களின் நலம் நாடுதல், கடன், வாரிசுரிமையின் சட்டங்களைப் பேணுதல், நமபிக்கை மோசடி, அமானிதம், தஜ்ஜால் வருகை ஆகிய பல விஷயங்களைக் குறித்து பேசினார்கள்  அவற்றில் சிலவற்றை விரிவாக காண்போம்.          

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் உரிமைகளை பேணுவது பற்றி..

عَنْ أَبِي بَكْرَةَ رَض قَالَ خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ قَالَ أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِاسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ ذُو الْحَجَّةِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الْحَرَامِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ فَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ فَلَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ(بخاري- باب الْخُطْبَةِ أَيَّامَ مِنًى-كتاب الحج

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.  அப்போது இது என்ன நான் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஹஜ்ஜுப் பெருநாளுக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது (கண்ணியமான) ஹஜ்ஜுப் பெருநாள் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன மாதம் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த மாதத்திற்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது  (கண்ணியமான) துல்ஹஜ் மாதம் அல்லவா என்றார்கள்.  நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன ஊர் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஊருக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது கண்ணியமான ஊர் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.   பின்பு நபி ஸல் அவர்கள் இந்த நாள் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த மாதம் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த ஊர் எவ்வளவு கண்ணியமானதோ அதேபோன்று ரப்பை சந்திக்கும் நாள் வரையிலும்  (நீங்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும். )  உங்களுக்கிடையில் ஒருவருடைய உயிரையும் உடைமையையும் மற்றவர் கண்ணியமாக கருத வேண்டும்.  என்று கூறி விட்டு நான் எனக்கு ஏவப்பட்டதை உங்களுக்கு அறிவித்து விட்டேனா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதன் பிறகு யாஅல்லாஹ் நீயே இதற்கு சாட்சி என்று கூறி, இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இதை அறிவிக்கட்டும். சில நேரங்களில் இந்த உபதேசத்தை என்னிடம் நேரடியாக கேட்டவரை விட  யாருக்கு இது சொல்லப்பட்டதோ அவர் மிகவும் பேணி நடப்பவராக இருக்கலாம். எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு காஃபிர்களாக ஆகி விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.

وَمَنَاط التَّشْبِيه فِي قَوْله :كَحُرْمَةِ يَوْمكُمْ  وَمَا بَعْده ظُهُوره عِنْد السَّامِعِينَ لِأَنَّ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم كَانَ ثَابِتًا فِي نُفُوسهمْ مُقَرَّرًا عِنْدهمْ  بِخِلَافِ الْأَنْفُس وَالْأَمْوَال وَالْأَعْرَاض فَكَانُوا فِي الْجَاهِلِيَّة يَسْتَبِيحُونَهَا فَطَرَأَ الشَّرْع عَلَيْهِمْ بِأَنَّ تَحْرِيم دَم الْمُسْلِم وَمَاله وَعِرْضه أَعْظَم مِنْ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم (فتح الباري)

ஹஜ்ஜுப் பெருநாள், முஹர்ரம் மாதம், மக்கா நகரம் ஆகியவற்றின் கண்ணியமும், உயர்வும் முற்காலத்தில் இருந்தே மக்கள் மனதில் நன்கு பதிந்திருந்தது. ஆனால் அவற்றின் கண்ணியத்தை விளங்கி வைத்திருந்த அளவுக்கு மக்களின் மனதைப் புரியாதவர்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள். அதனால் தான் நபி ஸல் அவர்கள் அதை ஒப்பிட்டு நபி ஸல்  ஒரு முஃமினின் கண்ணியமும், உயிரும், உடைமையும் இந்த நாளின் கண்ணியத்தை விட உயர்வானது என்றார்கள். 

மனித உயிரின் மதிப்பைப் பற்றி மேலும் விரிவாகப் புரிய வைப்பதற்காக அதே நாளில் நபி ஸல் கூறிய அறிவுரை 

وفي رواية لمسلم "قال "أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ... (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الْحَجِّ-2334

وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ (أي متروكة لا قصاص ولا دية ولا كفارة) وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِى بَنِى سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ (مسلم) فَقَالَ الْمُحَقِّقُونَ وَالْجُمْهُور اِسْم هَذَا الِابْن إِيَاس بْن رَبِيعَة بْن الْحَارِث بْن عَبْد الْمُطَّلِب . قَالُوا : وَكَانَ هَذَا الِابْنُ الْمَقْتُولُ طِفْلًا صَغِيرًا يَحْبُو بَيْن الْبُيُوت ، فَأَصَابَهُ حَجَر فِي حَرْب كَانَتْ بَيْن بَنِي سَعْد وَبَنِي لَيْث بْن بَكْر ، قال الولي العراقي : ظاهره أنها تعمدت قتله (شرح النووي)

(கொலை, வன்முறை எண்ணம், பழிவாங்குதல் போன்ற) அறியாமைக் காலத்தின் அத்தனை மடமைகளையும் என் காலுக்குக் கீழ் அடக்கி விட்டேன்.  அறியாமைக் காலத்தின் பழிவாங்குதலும் என் இரண்டு பாதங்களுக்கு அடியில் நசுக்கப்பட்டு விட்டது முதலாவதாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் பால்அருந்திக் கொண்டிருந்த குழந்தை.... இவரை ஹுதைல் என்பவர் கொலை செய்தார். 

விளக்கம்- அறியாமைக் காலத்தில் கோபம், பொறாமை போன்ற சிறுசிறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால் 10 தலைமுறை கடந்தாலும் கூட அந்த கொலைக்காக பழிவாங்கும் படலம் தொடரந்து கொண்டேயிருக்கும். அத்தகைய வன்முறை எண்ணத்தை முற்றிலுமாக கைவிடும் விதத்தில் நபி ஸல் அவர்கள் பேசினார்கள். பழிவாங்குதல் கிடையாது என்பதை முதலில் தன் குடும்பத்தில் இருந்தே ஆரம்பித்து வைக்கும் விதமாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் என்றார்கள். நபி ஸல் அவர்களின் குடும்பமான ஹாரிஸ் கோத்திரத்தைச் சார்ந்த இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் உள்ள தாய்மார்களிடம் பால் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த கோஷ்டி மோதலில் அந்தக் குழந்தை மீது ஒரு கல் பட்டு அக்குழந்தை இறந்து விட்டது. சரியாக கூற்றின் படி  ஹுதைல் என்பவர் வேண்டுமென்றே கல்லை வீசினார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கொலையால் இரு குடும்பத்தாருக்குமிடையே பெரும் பகை நீடித்தது. அதை நபி ஸல் முடித்து வைக்கும் விதமாக என்னுடைய குடும்பத்தைச் சாரந்த அந்தக் குழந்தை கொல்லப்பட்டதை நாங்களே மன்னித்து விடுகிறோம். இனி யாருடைய மனதிலும் அதற்குப் பழி வாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது என்றார்கள்.    

எப்போதோ உள்ள பகையை இப்போதும் மனதில் வைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினை வெறு(த்து பேசாமல் இரு)ப்பது கூடாது. குறைந்த பட்சம் இருவரும் சந்தித்து இவரோ அல்லது அவரோ முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர் யார் முதலில் ஸலாம் கூறிப் பேச்சைத் துவங்குகிறாரோ அவர் தான் சிறந்தவர்.   அதே நேரத்தில் ஒருவரை தீன் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெறுத்தால் அது தவறல்ல. போருக்கு வராமல் சிலரிடம் நபி ஸல் அவர்கள் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) مُكَافِئِ أي المجازي غيره بمثل فعله 

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்போன உறவுகளையும் வலியச் சென்று மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார். 

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

மக்கள் எனக்கு நல்லது செய்தால் நானும் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தால் நானும் அவர்களுக்கு  கெடுதல் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். மாறாக உங்களில் உள்ளத்தில் பின்வருமாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எனக்கு நல்லது செய்தாலும்  நான் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தாலும் நான் அவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டேன்.

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

மிஸ்தஹ் என்பவர் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் ஏழை உறவினர் ஆவார். அவருக்கு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வந்தார்கள். அதைத் தவிர வேறு வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. இந்நிலையில் ஆயிஷா ரழி உடைய அவதூறு விஷயத்தில் இவரும் சம்பந்தப்பட்டு விட்டார். ஆனால் பிறகு தவ்பா செய்து விட்டார். அதற்காக தண்டனை அவருக்குத் தரப்பட்டு விட்டது. எனினும் அபூபக்கர் ரழி அவர்கள் மனச் சங்கடம் காரணமாக இனிமேல் நான் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான். நீங்கள் ஒரு தவறு செய்த பின் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா அதுபோல் நீங்களும் அவரை மன்னித்து விடுங்கள் என்ற ஆயத் இறங்கியவுடன் அவரை மன்னித்து எப்போதும் போல உதவித்தொகை வழங்க ஆரம்பித்தார்கள்

இன்னா செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவர் சொன்னது போல தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வதால் பகைமை நீங்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ(مسلم)معناه كأنما تطعمهم الرماد الحار

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு ஒரு உறவினர் உள்ளனர். நான் அவர்களுடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை வெட்டி வாழுகின்றனர். நான் அவர்களுக்கு நல்லது செய்தாலும் அவர்கள் எனக்கு கெடுதலே செய்கின்றனர். இந்நிலையில் நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் நீ செய்வதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே அவர்களின் வாயில் சூடான மண்ணைப் போடுவதற்குச் சமம். அதாவது அவர்களை வாயடைப்பதற்குச் சமம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் புறக்கணித்தாலும் நீ அவர்களுடன் பேசுவதே அவர்களின் தவறுக்கு ஒவ்வொரு தடவையும் தண்டனை கொடுத்ததற்குச் சமம். அவ்வாறு நீ செய்வது உனக்குத் தான் நல்லதாக அமையும். அவர்களுக்கு தீமையாகவே அமையும். நீ அவ்வாறு செய்யும் வரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியாளர் உனக்கு இருந்து கொண்டிருப்பார்.        

அடுத்தவர்களின் விஷயத்தில் அவசியமில்லாமல் தலையிடுவதை தவிர்த்தாலே பகைமை உணர்வு குறையும்

عن أَنَس رضي الله عنه قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ (احمد)

பெண்களின் நலன் பேணுவது பற்றி இறுதிப்பேருரையில் அறிவுரை

وفي رواية لمسلم  (في خطبة حجة الوداع) ...فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ.. (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الْحَجِّ-2334 قال الزرقاني (بِأَمَانِ اللَّهِ) أي بأن الله ائتمنكم عليهن فيجب حفظ الأمانة وصيانتها بمراعاة حقوقها والقيام بمصالحها الدينية والدنيوية - بِكَلِمَةِ اللَّهِ أي الصيغ التي ينعقد بها النكاح من الإيجاب والقبول (مرعاة)

 பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் அவர்களை உங்களிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளான். (அவர்களின் உலகியல் ரீதியான நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். மறுமை சார்ந்த நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். அவர்களின் உரிமைகளைப் பேண வேண்டும்.) மேலும் கலிமாவுடன் (இணைந்த ஈஜாப் கபூல் மூலமாக) அந்தப் பெண்களை நீங்கள் அந்தப் பெண்களை கரம் பற்றுகிறீர்கள். உங்கள் மீது அவர்களுக்குள்ள கடமையாகிறது நீங்கள் வெறுக்கும்படியாக அந்நிய ஆண்களுடன் படுக்கையை அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்களை காயம் படாமல் அடிக்கலாம். அவர்கள் மீது உங்களுக்குள்ள கடமையாகிறது நல்ல முறையில் அவர்களுக்கான உணவு, உடைகளைத் தர வேண்டும்.                    

மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் வேறு சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு வாழ்வது

روي أن رجلا جاء إلى [عمر رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا)  (عشرة النساء للنسائي)

 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                  

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.                                                    

அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.            

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பது அவர்கள் பக்கம் முழுமையாக சாய்ந்து விடக்கூடாது என்பதையும் குறிக்கும்.

பெண்களிடம் ஆலோசனை கேட்கலாம். நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்தலாம். நபி ஸல் அவர்கள் ஹுதைபிய்யா சம்பவத்தின் போது துணைவியார் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனைப்படி தலைமுடியை இறக்கியதால் அதுவரை காஃபிர்களுக்கு இவ்வளவு தூரம் நாம் பணிய வேண்டுமா என்ற ஆதங்கத்தில் நபி ஸல் அவர்கள் சொல்லியும் இஹ்ராமைக் களையாமல் இருந்த சஹாபாக்கள், நபி ஸல் அவர்களே இஹ்ராமைக் களைந்ததால் தாங்களும் இஹ்ராமைக் களைந்தார்கள். இதற்குக் காரணம் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனை தான். ஆனால் எல்லா முடிவுகளையும் அவர்களிடமே விட்டு விட்டு வெறும் பொம்மை மாதிரி இருந்து விடக்கூடாது.                                                                          

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் தர்ம ம் செய்பவர்களாகவும், உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படுவதாவும் அமையுமோ அதுவரை இந்த பூமியின் மேற்பரப்பு அதன் கீழ்பரப்பை விட நல்லது. நீங்கள் இந்த பூமியில் வாழ்வது ஆனால் எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் உள்ளவர்களாகவும், உங்களின் ஆலோசனைகள் பெண்களிடமே ஒப்படைக்கப் படுவதாகவும் ஆகி விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு அதன் மேல்பரப்பை விட நல்லது. இந்த பூமியில் வாழ்வது நல்லதல்ல (எனும் அளவுக்கு இந்த பூமிக்கு சுனாமி, கொரோனா போன்ற பல சோதனைகள் வந்து கொண்டேயிருக்கும்.)                         

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ (مسلم)  كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ (فإن أول فتنة بني إسرائيل) يريد قتل النفس التي أُمِر بنو إسرائيل فيها بذبح البقرة واسم المقتول عاميل قتله ابن أخيه أو عمه ليتزوج ابنته أو زوجته وقال في المطامح يحتمل كونه أشار إلى قصة هاروت وماروت لأنهما فتنا بسبب امرأة من بني إسرائيل ، ويحتمل أنه أشار إلى قضية بلعام بن باعوراء لأنه إنما هلك بمطاوعة زوجته وبسببهن هلك كثير من العلماء (فيض القدير)

பனீ இஸ்ராயீல் சமூகத்தில் முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பகரா சூராவில் வரும் சம்பவத்தையும் குறிக்கும். தனது மகளை திருமணம் செய்து தராத சித்தப்பாவைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எதிர் கோஷ்டியினர் வசிக்கும் பகுதியில் வீசியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இறை உத்தரவுப்படி மாட்டை அறுத்து அதன் வாலை சித்தப்பாவின் கப்ரு மீது அடித்த தில் அவர் எழுந்து என்னைக் கொன்றது என்னுடைய சகோதர ர் மகன் தான் என்று கூறி விட்டு மீண்டும் கப்ருக்குள் சென்றதால் பிரச்சினை ஓய்ந்தது.

முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது பகரா சூராவில் வரும் ஹாரூத் மாரூத் சம்பவத்தையும் குறிக்கும்.

முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பல்அம் இப்னு பாஹூராவின் சம்பவத்தையும் குறிக்கும்.

பல்அம் இப்னு பாஹூரா விஷயமாக கூறப்படும் பல்வேறு செய்திகளில் ஒன்று

عَنْ اِبْن عَبَّاس"وَاتْلُ عَلَيْهِمْ نَبَأ الَّذِي آتَيْنَاهُ آيَاتنَا فَانْسَلَخَ مِنْهَا " قَالَ هُوَ رَجُل أُعْطِيَ ثَلَاث دَعَوَات يُسْتَجَاب لَهُ فِيهِنَّ وَكَانَتْ لَهُ اِمْرَأَة لَهُ مِنْهَا وَلَد فَقَالَتْ اِجْعَلْ لِي مِنْهَا وَاحِدَة قَالَ فَلَك وَاحِدَة فَمَا الَّذِي تُرِيدِينَ ؟ قَالَتْ اُدْعُ اللَّه أَنْ يَجْعَلنِي أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَدَعَا اللَّه فَجَعَلَهَا أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَلَمَّا عَلِمَتْ أَنَّ لَيْسَ فِيهِمْ مِثْلهَا رَغِبَتْ عَنْهُ وَأَرَادَتْ شَيْئًا آخَر فَدَعَا اللَّه أَنْ يَجْعَلهَا كَلْبَة فَصَارَتْ كَلْبَة فَذَهَبَتْ دَعْوَتَانِ فَجَاءَ بَنُوهَا فَقَالُوا لَيْسَ بِنَا عَلَى هَذَا قَرَار قَدْ صَارَتْ أُمّنَا كَلْبَة يُعَيِّرنَا النَّاس بِهَا فَادْعُ اللَّه أَنْ يَرُدّهَا إِلَى الْحَال الَّتِي كَانَتْ عَلَيْهَا فَدَعَا اللَّه فَعَادَتْ كَمَا كَانَتْ وَذَهَبَتْ الدَّعَوَات الثَّلَاث (تفسير ابن كثير

இவருடைய வணக்க வழிபாட்டின் காரணமாக மூன்று பிரத்தியேக துஆக்கள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன அதன் மூலம் பெரிய கோரிக்கையை அல்லாஹ்விடம் கேட்டிருக்கலாம் ஆனால் இந்த மனிதர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு அதை வீணாக்கினார் அந்த மனைவியின் மூலமாக இவருக்கு ஆண்மக்கள் இருந்தனர் அதாவது முதலில் அவர் மனைவி அவரிடம் ஒரு துஆவை எனக்காக பயன்படுத்துங்கள் என்று கேட்க, சரி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று இவர் கூற, பனீ இஸ்ராயீல் சமூகத்தில் மாபெரும் அழகியாக நான் மாற வேண்டும் என்றாள் இவர் துஆ செய்த போது அவ்வாறே மாபெரும் அழகியாக மாறினாள் ஆனால் அழகு வந்தவுடன் இவரை உதாசீனம் செய்து வேறொரு அழகிய ஆண்மகனை நாடி அவள் சென்று விட்டாள் இவருக்கு கோபம் வந்து மற்றொரு 2ம் துஆவைப் பயன்படுத்தி அவளை நாயாக ஆக்கும்படி பிரார்த்திக்க, அவ்வாறே அவள் நாயாக உருமாறினாள் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவளுடைய ஆண்மக்கள் இவரிடம் வந்து தம் தாயை மீண்டும் மனுஷியாக மாற்றும்படி துஆ செய்யக் கூறியபோது அவ்வாறே மூன்றாவது துஆவைப் பயன்படுத்தி பிரார்த்தித்தார் அவள் மனுஷியாக மாறினாள் இவ்வாறு மனைவிக்காகவே மூன்று பிரத்தியேக துஆக்களையும் அவர் வீணாக்கினார்.                  



மனித உரிமை மீறல் தொடர்பான பல்வேறு நபிமொழிகள்

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ....وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ (بخاري 7042  

எவர் ஒரு சமூகத்தாரின் பேச்சுக்களை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்கிறாரோ மறுமை நாளில் அவருடைய காதில் ஈயத்தை நரக நெருப்பில் காய்ச்சி ஊற்றப் படும்

வியாழன், 11 செப்டம்பர், 2025

மலர்ந்த முகமும் மாநபி(ஸல்) அவர்களும்

 12-09-2025

ரபீஉல் அவ்வல்-  19 بسم الله الرحمن الرحيم  

 மலர்ந்த முகமும் மாநபி (ஸல்) அவர்களும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

நற்குணங்கள் என்று எதுவெல்லாம் இருக்குமோ அத்தகைய அனைத்து  நற்குணங்களுக்கும் நபி ஸல் அவர்கள் உரித்தானவர்களாக இருந்தார்கள். 

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« إِنَّمَا بُعِثْتُ لأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلاَقِ (سنن الكبري للبيهقي 

பொதுவாக நற்குணத்தின் சிறப்பு

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا ».(سنن الكبري للبيهقي

عَنْ مَسْرُوقٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَضِىَ اللَّهُ عَنْهُ يَقُولُ : إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَأَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ أَخْيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا. رَوَاهُ مُسْلِمٌ

இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي

நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]

உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின் அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.               

படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம்

திருமணம் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிய வருகிறது

நற்குணத்தின் அடையாளங்களில் ஒன்று மலர்ந்த முகம் 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الْأَذَى (ترمذي

நற்குணம் என்பது மலர்ந்த முகத்துடன் இருப்பது, உபகாரம் செய்வது, யாருக்கும் தீங்கு தராமல் இருப்பது என அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறினார்கள்.

மலக்குகள் விண்ணுலகில் நபி ஸல் அவர்களை வரவேற்ற போது முக மலர்ச்சியுடன் வரவேற்றார்கள்

قَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي بَعْضُ أَهْلِ الْعِلْمِ عَمّنْ حَدّثَهُ عَنْ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنّهُ قَالَ تَلَقّتْنِي الْمَلَائِكَةُ حِينَ دَخَلْت السّمَاءَ الدّنْيَا ، فَلَمْ يَلْقَنِي مَلَكٌ ؟ إلّا ضَاحِكًا مُسْتَبْشِرًا ، يَقُولُ خَيْرًا وَيَدْعُو بِهِ حَتّى لَقِيَنِي مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ . فَقَالَ مِثْلَ مَا قَالُوا ، وَدَعَا بِمِثْلِ مَا دَعَوْا بِهِ إلّا أَنّهُ لَمْ يَضْحَكْ وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ مَا رَأَيْت مِنْ غَيْرِهِ . فَقُلْت لِجِبْرِيلَ يَا جِبْرِيلُ مَنْ هَذَا الْمَلَكُ الّذِي قَالَ لِي كَمَا قَالَتْ الْمَلَائِكَةُ وَلَمْ يَضْحَكْ ( إلَيّ ) ، وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ الّذِي رَأَيْتُ مِنْهُمْ ؟ قَالَ فَقَالَ لِي جِبْرِيلُ : أَمَا إنّهُ لَوْ ضَحِكَ إلَى أَحَدٍ كَانَ قَبْلَك ، أَوْ كَانَ ضَاحِكًا إلَى أَحَدٍ بَعْدَك ، لَضَحِكَ إلَيْك ، وَلَكِنّهُ لَا يَضْحَكُ هَذَا مَالِكٌ خَازِنُ النّارِ (سيرة ابن هشام

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் முதல் வானில் நான் நுழைந்த போது என்னை சந்தித்த மலக்குகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். எனக்காக துஆ செய்தனர். அவர்களில் ஒரு மலக்கு மட்டும் எல்லோரையும் போல் வாழ்த்தினார் ஆனால் அவர் முகத்தில் மட்டும் முகமலர்ச்சியைக் காண முடியவில்லை அதற்கு நான் காரணம் கேட்டபோது அவர் தான் நரகத்தின் காவலாளி மாலிக் அலைஹ்ஸ்ஸலாம் அவர் இதற்கு முன்பு யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்தாலோ அல்லது இதற்குப் பின்பும் யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்திருந்தால் நிச்சயம் உங்களைக் கண்டு சிரித்திருப்பார். அவர் இதுவரை சிரித்த தில்லை. காரணம் நரகத்தைக் கண்டதில் இருந்து அவர் சிரித்ததில்லை. என்று பதில் கூறப்பட்டது.                                     

நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்

عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். 

كان النبي صلى الله عليه وسلم كالرجل من رجالكم ، إلا أنه كان أكرم الناس ، وألين الناس ضحّاكا بسّاما [ مكارم الأخلاق لابن أبي الدنيا

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).    

சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதை (புன்னகைப்பதை) மார்க்கம் வலியுறுத்துகிறது. 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم

நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي

அநாகரீகமாக நடந்து கொண்ட கிராமவாசியிடமும் புன்னகையை வெளிப்படுத்திய நபி ஸல்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري) باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ-كتاب اللباس 5809

அனஸ் ரழி கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். நூல்: புகாரி 5809

தோழர்களிடம் கடுகடுப்பாக இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.

عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا : حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ : كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى

ஜைதுப்னு தாபித் ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.) நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன் இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.                                  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348

ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348

முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல் யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.

عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.         

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள். 

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல் அவர்கள்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.

அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.


வியாழன், 4 செப்டம்பர், 2025

நபி நேசம் நம் சுவாசத்தை விட..

 05-09-2025

ரபீஉல் அவ்வல்-12 بسم الله الرحمن الرحيم  

நபி நேசம் நம் சுவாசத்தை விட மேலானது

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

உயிருக்கும் மேலாக நபிகளாரை நேசிக்க வேண்டும்

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ (6) الاحزاب -  

அல்லாஹ் ரஸூலை விட மற்றவைகளை அதிகமாக நேசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதால் கிடைக்கும் பலன்கள்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ (بخاري3688

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கியாமத் எப்போது வரும் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கியாமத் நாளுக்காக நீர் என்ன தயாரித்து வைத்துள்ளீர் என்று கேட்க, அதற்கு அவர் |(பெரிதாக) எதுவும் என்னிடம் இல்லை. எனினும் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நேசிக்கிறேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள்  நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடன் சுவனத்தில் இருப்பீர் என்று பதில் கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கியது.நான் நபி ஸல் அவர்களையும், அபூபக்கர் (ரழி) உமர்  (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். அவர்கள் அளவுக்கு நான் அமல் செய்யவலில்லை. எனினும் அவர்களை நான் நேசிப்பதால் அவர்களுடன் சுவனத்தில் இருப்பேன் என்பதை ஆதரவு வைக்கிறேன். புகாரீ3688                           

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் வெளிப்பாடாக

அவர்களுடன் சுவனத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபித்தோழர்கள்

عَنْ عَائِشَة قَالَتْ جَاءَ رَجُل إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُول اللَّه : إِنَّك لَأَحَبّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبّ إِلَيَّ مِنْ أَهْلِي وَأَحَبّ إِلَيَّ مِنْ وَلَدِي وَإِنِّي لَأَكُون فِي الْبَيْت فَأَذْكُرك فَمَا أَصْبِر حَتَّى آتِيك فَأَنْظُر إِلَيْك وَإِذَا ذَكَرْت مَوْتِي وَمَوْتك عَرَفْت أَنَّك إِذَا دَخَلْت الْجَنَّة رُفِعْت مَعَ النَّبِيِّينَ وَإِنْ دَخَلْت الْجَنَّة خَشِيت أَنْ لَا أَرَاك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى حَتَّى نَزَلَتْ عَلَيْهِ وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ( تفسير ابن كثير

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் நீங்கள் எனக்கு என் உயிரை விடவும் என் மனைவியை விடவும் என் பிள்ளைகளை விடவும் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள். நான் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி உங்களின் ஞாபகம் வந்தால் உடனே உங்களை வந்து  பார்த்து விடுகிறேன். இந்த நிலையில் ஒரு விஷயம் என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனக்கும் மவ்த் உண்டு. உங்களுக்கும் மவ்த் உண்டு. எனினும் உங்களின் வஃபாத்துக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். நாங்கள் கீழ்நிலையில் இருப்போம் எனவே இந்த உலக வாழ்வுக்குப் பிறகு உங்களைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலை என்னை வாட்டியது. இதன் விளக்கம் தெரியாமல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அதனால் ஓடோடி வந்தேன் என்றார். நபி ஸல் அவர்கள் சற்று மவுனமாக இருந்தார்கள். சற்று நேரத்தில் மேற்படி வசனம் இறங்கியது. 

عَنْ سَعِيد بْن جُبَيْر قَالَ : جَاءَ رَجُل مِنْ الْأَنْصَار إِلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَحْزُون فَقَالَ لَهُ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " يَا فُلَان مَالِي أَرَاك مَحْزُونًا " فَقَالَ يَا نَبِيّ اللَّه شَيْء فَكَّرْت فِيهِ فَقَالَ مَا هُوَ ؟ قَالَ نَحْنُ نَغْدُو عَلَيْك وَنَرُوح نَنْظُر إِلَى وَجْهك وَنُجَالِسك وَغَدًا تُرْفَع مَعَ النَّبِيِّينَ فَلَا نَصِل إِلَيْك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَتَاهُ جِبْرِيل بِهَذِهِ الْآيَة " وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ " الْآيَة فَبَعَثَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَبَشَّرَهُ . (تفسير ابن كثير)

மற்றொரு அறிவிப்பில் (நன்கு திடகாத்திரமாக இருந்த) ஒரு சஹாபீ  கவலையுடன் (உடல் மெலிந்து) நபிகளாரிடம் வந்தபோது ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்க, யாரஸூலல்லாஹ் நாங்கள் காலையிலும் மாலையிலும் உங்களுடனே இருக்கிறோம் உங்களின் திருமுகத்தை தினமும் காண்பதிலும் உங்களுடன் அமருவதிலும் நாங்கள் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் உங்களின் மறைவுக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். உங்களை நெருங்க முடியாதவர்களாக மறுமையில் ஆகி விடுவோமோ என்ற கவலைப் படுகிறோம் என்று கூற, சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இந்த வசனத்துடன் இறங்கினார்கள்                                              

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தோழர்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا (مسلم4742

உஹதுப்போரில் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஏழு அன்சாரித் தோழர்கள் மற்றும் இரண்டு குரைஷித் தோழர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிரிகளுடன் தனித்து விடப்பட்டார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்ட  அந்த சூழ்நிலையில்  (நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தில்) தமது தோழர்களிடம் கூறினார்கள். உங்களில் யார் எதிரிகளிடமிருந்து இறைத்தூதரைப் பாதுகாக்கும் கேடயமாக இப்போது செயல்படுகிறாரோ அவருக்கு சுவனம் உண்டு என்றவுடன் முதலில் ஒரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட  நிலையில் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த சுபச்செய்தியைக் கூறினார்கள்.  அதற்குப் பின் மற்றொரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இப்படியாக ஏழு அன்சாரித்தோழர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். (இறுதியில் அல்லாஹ்வின் அருளால் நபி(ஸல்) அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்) அப்போது நபி(ஸல்)அவர்கள் அவ்விரு குரைஷித் தோழர்களிடம் கூறினார்கள். குரைஷித் தோழர்களான நாம் நமது அன்சாரித்தோழர்களுக்கு சரி சமமாக நடந்து கொள்ளவில்லை. அதாவது அந்த ஏழு பேர் மட்டுமே ஷஹாத த்திலும் சுவனத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முந்திக் கொண்டார்கள்.                        

விளக்கம்- அனைத்து நபித் தோழர்களுக்கும் நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை இருந்தது. இருப்பினும் அதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி இருந்தது.ஒருவர் ஷஹீதாக்கப்பட்டவுடன் உடனே வேகமாக களத்தில் இறங்குவதில் அன்சாரித்தோழர்கள் மிக வேகமாக இருந்தார்கள்.                                                       

عن مخرمة بن بكير عن أبيه قال : بعثني رسول الله صلى الله عليه و سلم يوم أحد لطلب سعد بن الربيع و قال لي : إن رأيته فاقرئه مني السلام و قل له : يقول لك رسول الله صلى الله عليه و سلم : كيف تجدك ؟ قال : فجعلت أطوف بين القتلى فأصبته وفي آخر رمق و به سبعون ضربة ما بين طعنة برمح و ضربة بسيف و رمية بسهم فقلت له : يا سعد إن رسول الله صلى الله عليه و سلم يقرأ عليك السلام و يقول لك : خبرني كيف تجدك ؟ قال على رسول الله السلام و عليك السلام قل له : يا رسول الله أجدني أجد ريح الجنة و قل لقومي الأنصار لا عذر لكم عند الله أن يخلص إلى رسول الله صلى الله عليه و سلم و فيكم شفر يطرف قال : و فاضت نفسه رحمه الله [ مستدرك الحاكم   وفي رواية يقول سعد : جزاك الله عنا و عن جميع الأمة خيرا 

ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி (ஸல்) அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ (ரழி) எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது (ரழி) அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்  

நபிகளாரின் மீதுள்ள பிரியத்தால் அவர்களின் புனித உடம்பை முத்தமிடும் பாக்கியம் பெற்ற சஹாபீ

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي فَقَالَ اصْطَبِرْ قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ (ابن ماجة- بَاب فِي قُبْلَةِ الْجَسَدِ- كِتَاب الْأَدَبِ

உஸைத் இப்னு ஹுழைர் என்ற நபித்தோழர் தமாஷாகப் பேசுவார்.  ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களும் விளையாட்டாக அவரது இடுப்பில் ஒரு குச்சியால் குத்தினார்கள். இதன் பின்பு அந்த சஹாபீ யாரஸூலல்லாஹ் என்னுடைய இடுப்பில் நீங்கள் குத்தி வலியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே அதற்குப் பழிக்குப் பழியாக நான் உங்களை அதே போன்று குத்துவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும் என்ற போது நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவர் யாரஸூலல்லாஹ் நீங்கள் என்னைக் குத்தும்போது என் உடம்பில் சட்டை இருந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்பில் சட்டை உள்ளதே என்று கூற, நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை உயர்த்திக் காண்பிக்க, அவர் நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் புனித மேனியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ் இதைத் தான் நான் விரும்பினேன் என்றார்.                                                              

மேற்படி ஹதீஸ் பின்வரும் அறிவிப்பில் ஸவாத் ரழி என்ற சஹாபீ விஷயமாக வருகிறது

عن سَوَاد بْن عَمْرٍو قَالَ : أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَأَنَا مُتَخَلِّقٌ بِخَلُوقٍ فَلَمَّا رَآنِى قَالَ لِى :« يَا سَوَادُ بْنَ عَمْرٍو خَلُوقُ وَرْسٍ أَوَلَمْ أَنْهَ عَنِ الْخَلُوقِ؟ ». وَنَخَسَنِى بِقَضِيبٍ فِى يَدِهِ فِى بَطْنِى فَأَوْجَعَنِى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْقِصَاصَ قَالَ الْقِصَاصَ فَكَشَفَ لِى عَنْ بَطْنِهِ فَجَعَلْتُ أُقَبِّلُهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَدَعُهُ شَفَاعَةً لِى يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري للبيهقي

ஸவாத் இப்னு அம்ர் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒரு நறுமணத்தைப் பூசிய படி நான் வந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த போது அவர்களின் கையில் வைத்திருந்த குச்சியைக் கொண்டு என் வயிற்றில் இடித்து விட்டார்கள். எனக்கு வலித்தது. நான் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே என்னை அடித்ததற்கு நான் உங்களைப் பழி வாங்க வேண்டும் என்றேன். நபி(ஸல்)அவர்கள் தன் வயிற்றைத் திறந்து காட்டினார்கள், நான் அவர்களின் வயிற்றை முத்தமிட்டு, யாரஸூலல்லாஹ் மறுமையில் என் சிபாரிசுக்காக விட்டு வைக்கிறேன் என்றேன்                                                                 

நபி (ஸல்) அவர்களை உளமாற நேசிப்பவர்களின் அடையாளங்களில் சில

யார் மீதும் சிறிதளவும் பொறாமை கொள்ளாமல் எதார்த்தமான உள்ளத்துடன் இருப்பது நபிகளார் சுன்னத். 

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ ثُمَّ قَالَ لِي يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ (ترمذي) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

அனஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்கள் உன்னால் இயன்ற வரை யார் மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளாமல் இரு அது தான் எனது சுன்னத்தாகும். எனது இந்த நடைமுறையை எவர் பின்பற்றுவாரோ அவர் என்னை நேசித்தவர் ஆவார். என்னை நேசித்தவர் என்னோடு சுவனத்தில் இருப்பார் என்றார்கள் - நூல் திர்மிதீ                                                             

عن ابن مسعود رضي الله عنه قال  قال  رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يُبَلِّغُنِي احدٌ من اصحابي عن احد شيئا فاِنِّي اُحبُّ ان أَخْرُجَ اليكم وانا سليم الصدر  (ابوداود)

உங்களில் யாரும் யாரைப் பற்றியும் குறையாக என்னிடம் வந்து பேச வேண்டாம். காரணம் நான் உங்களிடமிருந்து விடை பெறும்போதும் யாரைப் பற்றியும் தவறான எண்ணம் இல்லாமல் விடைபெற நினைக்கிறேன்.

أَنَسُ بْنُ مَالِكٍ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ مِنْ هَذَا الْفَجِّ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، قَالَ : فَطَلَعَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وَضُوئِهِ قَدْ عَلَّقَ نَعْلَهُ فِي يَدِهِ الشِّمَالِ ، فَسَلَّمَ ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ مَرَّتِهِ الأُولَى ، فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الأُولَى ، فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : إِنِّي لاحَيْتُ أَبِي ، فَأَقْسَمْتُ أَلا أَدْخُلَ عَلَيْهِ ثَلاثًا ، فَإِنْ رَأَيْتَ أنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَنْقَضِيَ الثَّلاثَةُ ، فَعَلْتَ ، قَالَ : نَعَمْ ، قَالَ أَنَسٌ : فَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ ثَلاثَ لَيَالٍ ، قَال : فَلَمْ يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا ، غَيْرَ أَنَّهُ إذَا تَعَارَّ مِنَ اللَّيْلِ ، وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ، ذَكَرَ اللَّهَ ، وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلاةِ الْفَجْرِ غَيْرَ أَنَّهُ لا يَقُولُ إِلا خَيْرًا قَالَ : فَلَمَّا مَضَتِ الثَّلاثُ لَيَالٍ ، وَكِدْتُ أَحْتَقِرُ عَمَلَهُ ، قُلْتُ : يَا عَبْدَ اللَّهِ إِنَّهُ لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ وَالِدِي غَضَبٌ ، وَلا هَجْرٌ ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ ثَلاثَ مَرَّاتٍ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، فَطَلَعْتَ أَنْتَ الثَّلاثَ مَرَّاتٍ ، فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لأَنْظُرَ مَا عَمَلُكَ ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ ، فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ قَالَ : فَانْصَرَفْتُ عَنْهُ ، فَلَمَّا وَلَّيْتُ ، دَعَانِي ، فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لا أَجِدُ فِي نَفْسِي عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا ، وَلا أَحْسُدُهُ عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ : فَهَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ ، وَهِيَ الَّتِي لا تُطَاقُ  (أحمد

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம், நபி (ஸல்) அவர்கள். அப்போது உங்கள் முன் ஒரு சுவனவாசி வருகை தருவார். என்றார்கள்அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளூச் செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.

மறுநாள் நபிஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதால் அதே மனிதர் கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம் மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம் மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் நான் என் தந்தையைிடம் வாக்கு வாதம் செய்து, மூன்று நாட்கள் அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டேன். அந்த மூன்று நாட்கள் வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா என்று கேட்டார் அதற்கு அந்த அன்சாரித் தோழர் சரி என பதிலளித்தார்.

அனஸ் (ரலி அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் (ரலி அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை, ஆனால், தூக்கத்தில் விழிப்பு ஏற்பட்டு புரண்டு படுத்தால் அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார்

அப்துல்லாஹ் (ரலி அவர்கள் கூறினார்கள் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன், மூன்று இரவுகள் கடந்த பின் அவரது அமல்கள் மிகக் குறைவானது என நினைத்து அவரிடம் நான் கூறினேன். அல்லாஹ்வின் அடியாரே எனக்கும் என் தந்தைக்குமிடையே கோபமோ, வெறுப்போ கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார் என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள் தான் வந்தீர்கள் நான் உங்களது செயல்களை கவனித்து நான் உம்மை பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன் ஆனால் உமது செயல்கள் எதுவும் எனக்கு பெரிதாக தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல் அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்? என்று கேட்டேன் அதற்கு அவர் நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்ற போது என்னை அழைத்த அவர். நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும் நான் எந்த மனிதனையும் மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி அதனால் தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள் என்று கூறினார்கள்

மக்களிடம் விடுபட்டுப் போன ஒரு சுன்னத்தை உயிர்ப்பிப்பவருக்கு கிடைக்கும் நற்கூலி

عن كَثِير بْن عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنْ ابْتَدَعَ بِدْعَةً لَا يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ شَيْئًا (ابن ماجة) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

عن أبي هريرةَ ( رضي اللَّه عنه ) ، عن النبيِّ صلى الله عليه وسلم قَالَ : " المُسْتَمْسِكُ بسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي ، لَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ " ،(طبراني

காலம் கெட்டு விட்ட இந்த உம்மத்தின் கடைசிக் காலத்தில் என்னுடைய ஒரு சுன்னத்துக்கு உயிர் கொடுப்பவர் அதாவது நடைமுறைப் படுத்துபவரின் நற்கூலி நூறு ஷஹீதுகளின் நற்கூலியைப் போன்றதாகும். -  

கடைசி காலத்தில் ஒரே ஒரு சுன்னத்தைக் கடை பிடிப்பவருக்கு  இவ்வளவு சிறப்பை நபி ஸல் கூறுவதன் காரணம் அத்தகைய காலத்தில்  சுன்னத்தைப் பின்பற்றுவதில்  மிகப் பெரும் வெற்றிடம் இருக்கும் என்பதால்தான்

சுன்னத்துக்களைப் பின்பற்றுபவரால் தான் ஃபர்ளுகளை பரிபூரணமாக நிறைவேற்ற முடியும்.

உளூவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் உளூவில் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஷர்த். ஆனால் துவக்கத்தில் முகத்தைக் கழுவுதல் என்ற ஃபர்ளை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதற்கு முன்பு வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல் என்ற சுன்னத்துகளை நிறைவேற்றி விட்டு பிறகு முகத்தைக் கழுவுகிறோம். காரணம் வாய் கொப்பளிக்கும்போது தண்ணீரில் ஏதேனும் டேஸ்ட் மாறியிருந்தால் நாசிக்கு நீர் செலுத்தும்போது ஏதேனும் தண்ணீரில் ஏதேனும் வாடை மாறியிருந்தால் தெரிந்து விடும். வேறு தண்ணீரை மாற்றிக் கொள்ளலாம். ஃபர்ளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக சுன்னத்துக்கள் உள்ளன.              

நபிகளாரின் சுன்னத்தை சஹாபாக்கள் சின்னச் சின்ன விஷயங்களிலும் பின்பற்றினார்கள்

நபி ஸல் நடந்து போகும்போது குறிப்பிட்ட இடத்தில் பாதையை மாற்றிச் செல்வது போல் நடந்தார்கள் என்பதற்காக அவ்வாறே நடந்த சஹாபி 

عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ فَسُئِلَ لِمَ فَعَلْتَ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا فَفَعَلْتُ (احمد)  عَن ابن عُمَر  أنه كان يأتي شجرة بين مكة والمدينة ، فيقيل تحتها ، ويُخْبِرُ أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك.(بزار) الترغيب والترهيب (يقيل -قيلولة

நபி ஸல் அவர்களை சந்தித்த போது அவர்களின் சட்டையில் ஒரு சில பட்டன்கள் திறந்திருந்தது என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் கடும் குளிரிலும் அந்த குறிப்பிட்ட சட்டை பட்டன்களை பூட்டாத நபித் தோழர்கள்

عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ حَدَّثَنِي  مُعَاوِيَة بْن قُرَّةَ حَدَّثَنِي أَبِي قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعْنَاهُ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ قَالَ فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتَمَ قَالَ عُرْوَةُ ( اَحَدُ  الرواة) "فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا (ابوداود) بَاب فِي حَلِّ الْأَزْرَارِ - كِتَاب اللِّبَاسِ

நபி ஸல் அவர்கள் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டதால் அதையே தினமும் தன்னுடைய உணவாக ஆக்கியவர்

عن انس إِنَّ خَيَّاطًا2 دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسٌ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَتَتَبَّعُ6 الدُّبَّاءَ مِنْ حَوَالَيْ الْقَصْعَةِ قَالَ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ (بخاري) وفي رواية لمسلم فَمَا صُنِعَ لِى طَعَامٌ بَعْدُ أَقْدِرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ (مسلم) باب جَوَازِ أَكْلِ الْمَرَقِ- كتاب الأشربة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதை வெறுத்தார்களோ அதை முற்றிலும் வெறுத்த நபித்தோழர்கள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺوَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ رواه مسلم كتاب اللباس والزينة4238

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ ﷺرَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ ﷺخُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ قَالَ لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ ﷺرواه مسلم كتاب اللباس والزينة4243

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். தங்கத்தாலான மோதிரம் அவருடைய கையில் இருந்த து. அதைக் கழற்றி நபி ஸல் அவர்கள் வீசி எறிந்தார்கள். பிறகு கூறினார்கள். யார் நெருப்புக் கங்கு அணிவிக்கப் படுவதை விரும்புவாரோ அவர் தனது கையில் அதை அணிந்து கொள்ளட்டும். என்றும் எச்சிரித்தார்கள். பிறகு நபி ஸல் சென்ற பிறகு  அந்த மனிதரிடம் அந்த மோதிரத்தை எடுத்து வேறு வகையில் பயனடைந்துகொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர் அல்லாஹ் மீது சத்தியமாக  நபி ஸல் அவர்கள் வெறுத்து வீசி  எறிந்த  ஒன்றை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்.  என்றார்

عَنْ أَنَسٍ رضي الله عنه  قَالَ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتْ الْخَمْرُ قَالَ وَكَانَ أَبُو طَلْحَةَ قَدْ اجْتَمَعَ إِلَيْهِ بَعْضُ أَصْحَابِهِ فَجَاءَ رَجُلٌ فَقَالَ أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ قَالَ فَخَرَجْتُ فَنَظَرْتُ فَسَمِعْتُ مُنَادِيًا يُنَادِي أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَأَخْبَرْتُهُ قَالَ فَاذْهَبْ فَأَهْرِقْهَا قَالَ فَجِئْتُ فَأَهْرَقْتُهَا رواه احمد

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

அகிலத்தின் அருட்கொடை

 29-08-2025

ரபீஉல் அவ்வல்- 5


بسم الله الرحمن الرحيم  

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


{ وَمَا أرسلناك إِلاَّ رَحْمَةً للعالمين} ففيه مسائل :المسألة الأولى: أنه صلى الله عليه وسلم كان رحمة في الدين وفي الدنيا أما في الدين فلأنه عليه السلام بعث والناس في جاهلية وضلالة وأهل الكتابين كانوا في حيرة من أمر دينهم لطول مكثهم وانقطاع تواترهم ووقوع الاختلاف في كتبهم فبعث الله تعالى محمداً صلى الله عليه وسلم حين لم يكن لطالب الحق سبيل إلى الفوز والثواب فدعاهم إلى الحق وبين لهم سبيل الثواب وشرع لهم الأحكام وميز الحلال من الحرام (تفسير الرازي

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடை என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது

முதலாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீன் துனியா இரண்டுக்கும் ரஹ்மத் ஆக இருக்கிறார்கள்

தீனுடைய விஷயத்தில் அருட்கொடை என்பதன் விளக்கம் மக்காவாசிகள் நீண்ட நாட்கள் இறைத்தூதர் இல்லாத காரணத்தால் பெரும் வழிகேட்டில் இருந்த நேரத்தில் அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி அந்த குறையை தீர்த்து வைத்தான். அவர்களை இஸ்லாத்தின் பக்கம் இணையச் செய்தான்.                 

وثانيها :أن كل نبي قبل نبينا كان إذا كذبه قومه أهلك الله المكذبين بالخسف والمسخ والغرق وأنه تعالى أخر عذاب من كذب رسولنا إلى الموت أو إلى القيامة-عن ابن عباس رضي الله عنه في قول الله عز وجل "وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِّلْعَالَمِينَ" قال من آمن به تمت له الرحمة في الدنيا والآخرة ومن كفر به صرفت عنه العقوبة التي كان يعاقب بها الأمم يعني في الدنيا 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ (بخاري

      விளக்கம்- இரண்டாவதாக துன்யாவுடைய விஷயத்தில் அருட்கொடை என்றால் அல்லாஹுத்தஆலா இதற்கு முன்பு பல சமுதாயங்களை அழித்திருக்கிறான் காரணம் அவர்களுடைய இறைத்தூதர்களை பொய் படுத்தியதன் காரணமாக அந்த இறைத்தூதர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அல்லாஹ் அந்த மக்களை அழித்தான் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அப்படி துஆ செய்யவில்லை ஒவ்வொரு நபிக்கும் ஒரே ஒரு முக்கியமான துஆ செய்து பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது பல நபிமார்கள் அந்த துஆவை தன் உம்மத்தில் அல்லாஹ்வின் அழைப்பை புறக்கணித்தவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அந்த துஆவை பத்திரப்படுத்தி வைத்து மறுமையில் பரிந்துரை செய்வதற்காக ஆக்கிக் கொண்டார்கள் அதனால் தான் மக்காவாசிகள் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய போதும் அந்த மக்காவாசிகள் மீது வேதனை இறங்காத காரணம் அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருட்கொடை என்பதால் தான்.                          

மக்கத்து காஃபிர்கள் பெருமானாரிடம் நீர் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய பிறகும் அவர்களின் மீது வேதனை இறங்காத காரணமும் அண்ணல் நபி ஸல் காஃபிரகளுக்கும் அருட்கொடை என்பதால் தான்

وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ (32) وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ (33)الانفال-لما قال أبو جهل:اللهم إن كان هذا هو الحق من عندك" الآية، نزلت"وما كان الله ليعذبهم وأنت فيهم"كذا في صحيح مسلم


وثالثها : أنه صلى الله عليه وسلم كان في نهاية حسن الخلق قال تعالى{وَإِنَّكَ لعلى خُلُقٍ عَظِيمٍ [القلم: 4] عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ:إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً، وَلَمْ أُبْعَثْ عَذَابًا (شعب الايمان,طبراني) 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக துவா செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன் வேதனையாக அனுப்பப்படவில்லை என்றார்கள்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ قَالَ:لَمَّا كُسِرَتْ رُبَاعِيَّةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم َ وَشُجَّ فِي جَبْهَتِهِ فَجَعَلَتِ الدِّمَاءُ تَسِيلُ عَلَى وَجْهِهِ قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَبْعَثْنِي طَعَّانًا وَلَا لَعَّانًا، وَلَكِنْ بَعَثَنِي دَاعِيَةَ وَرَحْمَةٍ، اللهُمَّ اهْدِ قَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ(شعب الايمان- فظهر أنه يوم القيامة يقول:أمتي أمتي فهذا كرم عظيم منه في الدنيا وفي الآخرة وإنما حصل فيه هذا الكرم وهذا الإحسان لكونه رحمة كما قال تعالى..(تفسيرالرازي) - تمسكوا بهذه الآية في أنه أفضل من الملائكة قالوا : لأن الملائكة من العالمين . فوجب بحكم هذه الآية أن يكون عليه السلام رحمة للملائكة فوجب أن يكون أفضل منهم (تفسيرالرازي)

  உஹதுப் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்கள்

 ஷஹீதாக்கப்பட்டபோது அவர்களுடைய நெற்றியிலும் காயம் ஏற்பட்டது ரத்தம் அவர்களுடைய முகத்தின் வழியாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இவர்களுக்கு எதிராக துஆ செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் அல்லாஹ் என்னை சபிப்பவராக அனுப்பவில்லை மாறாக அழைப்பாளராக, அருட்கொடையாக அனுப்பியுள்ளான் என்று கூறியதுடன் யா அல்லாஹ் என் சமூகத்திற்கு நேர்வழி காட்டுவாயாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று துவா செய்தார்கள் 

இந்த உம்மத்துக்கு அண்ணல் நபி மாபெரும் அருட்கொடை என்பதை விபரிக்கும் நபிமொழி

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنْ النَّارِ وَهُمْ يَقْتَحِمُونَ فِيهَا (بخاري) باب الاِنْتِهَاءِ عَنِ الْمَعَاصِى كتاب الرقاق

ஒரு மனிதர் நெருப்பை மூட்டினார். அதன் சூழ்பாகங்கள் நன்கு எரிய ஆரம்பித்தவுடன் அங்கிருந்த பூச்சிகளும், மற்ற உயிரினங்களும் அதில் விழ முயன்றன.அந்த மனிதரோ அவைகளை நெருப்பில் விழுவதை விட்டும் தடுக்கிறார். அவரை மீறிக் கொண்டு அவைகள் மீண்டும் போய் விழுகின்றன. அவர் தடுத்துக் கொண்டே இருக்கிறார். அதுபோலத்தான் நானும், நீங்களும். நரகத்தில் விழ நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நான் உங்களின் இடுப்பைப் பிடித்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறேன்.


சிறுவர்களுக்கும் அருட்கொடை. தனக்குப் பின்னால் குழந்தை அழும் சப்தம் கேட்டால் தொழுகையை சுருக்கிக் கொள்வார்கள்

عَنْ أَنَسِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلَاةِ فَأُرِيدُ إِطَالَتَهَا فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ (بخاري710

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري5998

 

மனிதர்கள் அல்லாத மற்ற ஜீவராசிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள் என்பதால் தான் அவைகள் தங்களின் சிரமங்களை பெருமானாரிடம் முறையிட்டன

عن الوضين بن عطاء أن جزارا فتح بابا على شاة ليذبحها فانفلتت منه حتى اَتَت النبيَّ صلى الله عليه و سلم واتبعها فأخذها يسحبها برجلها فقال لها النبي صلى الله عليه و سلم إصبري لأمر الله وأنت يا جزار فسقها إلى الموت سوقا رفيقا (مصنف عبد الرزاق)

கசாப்புக் கடைக்காரர் ஒருவர் தன் ஆட்டை அறுப்பதற்காக கதவை திறந்தவுடன் அது நழுவி ஓடி நபி ஸல் அவர்களிடம் வந்தது. அதன் பின்னாலேயே விரட்டி வந்த அவர் அதன் காலை பிடித்து இழுத்துச் சென்றார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சற்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். அதை அறுப்பதற்காகத் தான் கொண்டு செல்கிறீர்கள் என்றாலும் அதில் மென்மையை கடைபிடியுங்கள் என்றார்கள்.                                                                                           

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ (ابوداود)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அன்சாரி தோழரின் தோட்டத்தின் பக்கமாக சென்ற போது அப்போது ஒரு ஒட்டகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தவுடன் அழுத ஆரம்பித்தது அதன் கண்களில் கண்ணீர் வடிந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஒட்டகத்தின் திமில்களை தடவினார்கள். உடனே அது அழுகையை நிறுத்தியது அமைதியானது பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டார்கள் அப்போது ஒரு அன்சாரி தோழர் வந்தார் அவர் இந்த ஒட்டகம் என்னுடையது என்றார் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வாயில்லா ஜீவன்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா நிச்சயமாக இதை நீங்கள் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று என்னிடம் இது முறையிடுகிறது என்றார்கள்

மரம், செடி கொடிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள்

عن جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ كَانَ الْمَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ مِنْ نَخْلٍ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ وَكَانَ عَلَيْهِ فَسَمِعْنَا لِذَلِكَ الْجِذْعِ صَوْتًا كَصَوْتِ الْعِشَارِ حَتَّى جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا فَسَكَنَتْ رواه البخاري باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب وفي رواية ..وصاح كما يصيح الصبي فنزل إليه فاعتنقه فجعل يهذي كما يهذي الصبي الذي يسكن عند بكائه فقال صلى الله عليه وسلم:لو لم أعتنقه لَحَنَّ إلى يوم القيامة"كان الحسن البصري إذا حدث بهذا الحديث بكى وقال:هذه خشبة تحن إلى رسول الله صلى الله عليه وسلم فأنتم أحق أن تشتاقوا إليه.(كتاب موسوعة الدفاع عن رسول الله صلى الله عليه وسلم)

பேரீத்த மர கிளைகள் மஸ்ஜிதுந் நபவியின் தூண்களாக இருந்தன. இருந்தது. அதில் ஒரு தூண் மீது சாய்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேருரை நிகழ்த்துவார்கள். பின்பு அவர்களுக்காக மிம்பர் தயாரானவுடன் அதில் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது இதுவரை எந்த தூண்  மீது சாய்ந்து உரை நிகழ்த்தினார்களோ அந்த தூண் சிறு குழந்தை தேம்பி அழுவது போன்று அழ ஆரம்பித்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் இருந்து கீழே இறங்கி வந்து அதை கட்டியணைத்தவுடன் அழும் குழந்தையை அதன் தாய் கட்டியணைத்தால் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்துமோ அது போன்று அழுகையை நிறுத்தியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அதை கட்டியணைத்திருக்கா விட்டால் இறுதி நாள் வரை அழுது கொண்டு தான் இருக்கும் என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுய தேவையை நிறைவேற்றும்போது மரங்கள் மறைத்துக் கொண்டதும் அந்த மரங்களுக்கு அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்..

عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح

  இந்தஹதீஸ் BAZZAR  எனும் நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில்  மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..                                            

நபியவர்களின் அழைப்பை ஏற்று அருகில் வந்த மற்றொரு மரம்

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ قَالَ إِنْ دَعَوْتُ هَذَا الْعِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَنْزِلُ مِنْ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ ارْجِعْ فَعَادَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ (ترمذي)

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார்.அவருக்கு நபி ஸல் அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்தார்கள். அதற்கு அவர் நீங்கள் இறைத்தூதர் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் இந்த பேரீத்த மரத்தின் ஒரு கிளையை நான் அழைத்து சாட்சி சொல்ல வைக்கட்டுமா என்று கேட்டு விட்டு, அந்தக் கிளையை அழைத்தார்கள். அந்தக் கிளை மரகத்தில் இருந்து இறங்கி வந்து நபிக்கு அருகில் மண்டியிட்டது. பின்பு நீ திரும்பிச் செல் என்று சொன்னவுடன் அது திரும்பவும் மேலே ஏறி அந்த மரத்துடன் இணைந்தது அந்த கிராமவாசி இஸ்லாத்தை ஏற்றார். நூல் திர்மிதீ     

                   

மற்றொரு அறிவிப்பில் அந்த மரமே நகர்ந்து வந்து மூன்று முறை கலிமா சொல்லி விட்டுச் சென்றதாக உள்ளது

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ:كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِى سَفَرٍ فَأَقْبَلَ أَعْرَابِىٌّ  فَلَمَّا دَنَا مِنْهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:أَيْنَ تُرِيدُ؟ قَالَ: إِلَى أَهْلِى قَالَ:هَلْ لَكَ فِى خَيْرٍ؟قَالَ:وَمَا هُوَ؟قَالَ:تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ فَقَالَ:وَمَنْ يَشْهَدُ عَلَى مَا تَقُولُ ؟ قَالَ :هَذِهِ السَّلَمَةُ فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهِىَ بِشَاطِئِ الْوَادِى فَأَقْبَلَتْ تُخُدُّ الأَرْضَ خَدًّا حَتَّى قَامَتْ بَيْنَ يَدَيْهِ فَاسْتَشْهَدَهَا ثَلاَثاً فَشَهِدَتْ ثَلاَثاً أَنَّهُ كَمَا قَالَ ثُمَّ رَجَعَتْ إِلَى مَنْبَتِهَا وَرَجَعَ الأَعْرَابِىُّ إِلَى قَوْمِهِ وَقَالَ: إِنِ اتَّبَعُونِى أَتَيْتُكَ بِهِمْ وَإِلاَّ رَجَعْتُ فَكُنْتُ مَعَكَ(دارمي)

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதற்கடுத்து நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் குடும்பத்தார்களிடம்  என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் நல்லது நடைபெற வேண்டாமா என்று கேட்க, நான் என்ன செய்ய வேண்டும். என்று அவர் கேட்டார். கலிமா சொல்ல வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூற, நீங்கள் சொல்வதற்கு என்ன சாட்சி என்று கேட்டார். இந்த மரம் (சாட்சி சொல்லும்) என்று கூறி அந்த மரத்தை அழைத்தார்கள். அந்த மரம் அதன் வேர்களோடு பூமியைக் கிழித்தபடி நகர்ந்து வந்து  நபி ஸ் அவர்களின் முன்னால் நின்றது அதனை சாட்சி சொல்லச் சொன்னார்கள் மூன்று முறை சாட்சி சொல்லி விட்டு அது திரும்பிச் சென்றது. அவர் இஸ்லாத்தை ஏற்றார்.  இஸ்லாத்தை ஏற்ற அந்த கிராமவாசி “நான் சென்று என் சமூகத்தினரிடமும் இதைக் கூறுவேன். அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களையும் உங்களிடம் அழைத்து வருவேன். இல்லா விட்டால் நான் திரும்பி வந்து உங்களுடன் தங்கி விடுவேன்”என்று கூறினார். -தாரமீ 

இறைச்சியில் விஷம் தடவப்பட்டுள்ளது என்ற விஷயத்தை அந்த இறைச்சியே நபியவர்களிடம் கூறியது எல்லாப் பொருட்களுக்கும் அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ ثُمَّ قَالَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ مَازِلْتُ أَجِدُ مِنْ الْأَكْلَةِ الَّتِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي(ابوداود

 கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது யூதப் பெண்ணொருத்தி (நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தாள். அதை நபி ஸல் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்தப்பெண்) பொறிக்கப்பட்ட விஷம் கலந்து ஆட்டிறைச்சியைப் பரிமாறினாள். அதில் சிறிதளவு நபி ஸல் சாப்பிட்டார்கள். பிஷ்ர் என்ற நபித் தோழரும் சாப்பிட்டார்.ஆனால் அவர் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவளை அழைத்து வரப்பட்டது. அவளிடம் உனக்கு என்ன கேடு. என்ன கலந்து கொடுத்தாய் என்று கேட்க, அதற்கு அவள் நான் அதில் விஷம் கலந்தேன். நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் உங்களுக்கு அது இடையூறு தராது.  நீங்கள் நபியாக இல்லா விட்டால் இந்த விஷத்தால் நீங்கள் இறந்து உங்களிடமிருந்து மக்களை நிம்மதி பெற வைக்க விரும்பினேன் என்றாள். ஒருவரை விஷம் வைத்துக் கொன்ற காரணத்தால் அவளுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டது.  நபி ஸல் அவர்களின் முஃஜிஸா காரணமாக அந்த விஷம் அப்போது எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நபி ஸல் அவர்களின் சகராத் வேளையில் மிகவும் சிரமப்பட்ட போது ஆயிஷாவே கைபரில் நான் உண்ட உணவின் விஷம் இப்போது என் தொண்டையை அறுக்கிறது என்றார்கள்.                   

அனைத்துப் பதவிகளையும் அண்ணல் நபிக்குத் தந்த அல்லாஹ் ஷஹாதத் என்ற பதவியையும் தருவதற்காக இவ்வாறு ஏற்படுத்தி யிருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.                                   

وفي رواية "فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبْهَا وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنْ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنْ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ..( ابوداود)

மற்றொரு அறிவிப்பில் அவளை மன்னித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அவளுக்கும் நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்

وفي رواية  ابي داود قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْفَعُوا أَيْدِيَكُمْ وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ لَهَا أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ قَالَتْ الْيَهُودِيَّةُ مَنْ أَخْبَرَكَ قَالَ أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي لِلذِّرَاعِ

மற்றொரு அறிவிப்பில் அவள் நபி ஸல் அவர்களிடம்  நான் விஷம் கலந்ததாக உங்களுக்கு யார் அறிவித்தார்கள் என்று கேட்ட போது தன் கையில் இருந்த ஆட்டின் முன் சப்பையைக் காட்டி இது எனக்கு   அறிவித்தது என்று கூறினார்கள் அப்படிப் பார்த்தால் அந்த இறைச்சிக்கும்  நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்

        

وَقَالَ الْبَيْهَقِيُّ فِي سُنَنه : اِخْتَلَفَتْ الرِّوَايَات فِي قَتْلهَا وَمَا رُوِيَ عَنْ أَنَس أَصَحّ ، قَالَ وَيَحْتَمِل أَنَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي الِابْتِدَاء لَمْ يُعَاقِبهَا حِين لَمْ يَمُتْ أَحَد مِنْ الصَّحَابَة مِمَّنْ أَكَلَ فَلَمَّا مَاتَ بِشْر بْن الْبَرَاء أَمَرَ بِقَتْلِهَا ، 

  

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை இந்த உலகில் உணராத முஸ்லிம்களும் மறுமையில் உணருவார்கள்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوْ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو النَّاسِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلَائِكَتَهُ وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي ائْتُوا نُوحًا فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُوسَى عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ فَيَسْتَحِي مِنْ رَبِّهِ فَيَقُولُ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ فَيَأْتُونِي فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي فَيُؤْذَنَ لِي فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ - يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {خَالِدِينَ فِيهَا} (بخاري 4476

ஷபாஅத் கிடைக்க வேண்டுமானால் பாங்கு சொன்ன பின் சலவாத் ஓதி இந்த துஆ ஓத வேண்டும் 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ  (مسلم) 875


வியாழன், 21 ஆகஸ்ட், 2025

பெருமானாரின் (ஸல்) பிறப்பின் சிறப்புகள்

   

22-08-2025

SAFAR- 27 بسم الله الرحمن الرحيم  

பெருமானாரின் (ஸல்) பிறப்பின் சிறப்புகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

தன்னுடைய  பிறப்பின் சிறப்பைப் பற்றி நபி ஸல் கூறிய மூன்று விஷயங்கள்

عن أَبي أُمَامَة رضي الله عنه قَالَ قُلْت يَا رَسُول اللَّه مَا كَانَ أَوَّل بَدْء أَمْرك ؟ قَالَ "دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبُشْرَى عِيسَى بِي وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد

அபூ உமாமா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் உங்களின் ஆரம்ப நிலை எவ்வாறிருந்தது  என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலனாகவும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட சுபச் செய்திக்குரியவராகவும் இருக்கிறேன் நான் பிறந்த போது என்னுடைய தாயாரிடமிருந்து ஒளி உருவாகி அந்த ஒளியில் ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்றார்கள். 

  மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட மூன்று விஷயங்களையும்  விபரித்துப் பேசலாம். 1. நபிகளாரின்  பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலன்  2. நபிகளாரைக் குறித்து  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய முன்னறிவிப்பு.  3. நபிகளார் ஸல் பிறந்த போது அவர்களின்  தாயார் கண்ட அதிசயங்கள்

1. நபி ஸல் அவர்களின் பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த  துஆவின் பலன் 

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ(129البقرة)

    நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன்களாக குர்ஆனில் கூறப்பட்டவர்கள் இரண்டு மகன்கள். 1. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஸாரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். 2. இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். இந்த இருவரில் இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் தான் நிறைய நபிமார்கள் வந்தார்கள். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் வந்த ஒரே நபி நம்முடைய நபி ஸல் அவர்கள் மட்டும் தான். அவர்கள் தான் நபி  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேற்படி துஆவுக்கு உரியவர்கள். 

  நபி இப்றாஹீம் அலை அவர்களை நினைவு கூரும்போதெல்லாம் தன் தந்தை என்று பெருமையுடன் கூறிய நபி ஸல்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود

தன் பேரப் பிள்ளைகளுக்கு நபி ஸல் மேற்காணும் வார்த்தைகளைக் கொண்டு நபி ஸல் ஓதிப் பார்ப்பார்கள். அப்போது பின்வருமாறு நினைவு கூருவார்கள்.   நபி இப்றாஹீம்  தன் பிள்ளைகளான  இஸ்ஹாக் அலை, இஸ்மாயில்  அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு இவ்வாறு தான் ஓதிப் பார்ப்பார்கள் என்றும் கூறுவார்கள்

2. நபிகளாரைக் குறித்து  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய முன்னறிவிப்பு.

பொதுவாக மற்ற மனிதர்கள் உலகில் பிறந்து வளர்ந்து பல சேவைகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைவார்கள். ஆனால் முன் வேதங்களின் முன்னறிவிப்பின் மூலமாக  பிறக்கும் முன்பே பிரபலம் அடைந்த மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

முன் வேதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்புகள்

   நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்ராத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது.  இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம்  29- ல் கூறப்பட்டுள்ளது.  இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.                 

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6 

மர்யமின் குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.”இஸ்ராயீல் மக்களே!  எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப் பவனாகவும்;  எனக்குப் பின் வரவிருக்கும் ”அஹ்மத் ” என்னும் பெயருடைய தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறியதை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக!) 

மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு-

         நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போதுஎன்றைக்கும் உங்களுடனே கூடஇருக்கும்படிக்கு சத்தியஆவியாக வேறொரு தேற்றரவாளரை அவர் உங்களுக்குத்தந்தருள்வார் (யோவான் 14:16) 'பிதாவிடத்திலிருந்து நான்உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)'அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி,. உன்னைப் போல ஒருதீர்க்க தரிசியை நான்அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என்வார்த்தைகளை அவர் வாயில்அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம்அவர்களுக்குச் சொல்லுவார்.என் நாமத்திலே அவர் சொல்லும்என் வார்த்தைகளுக்குச்செவிகேடாதவன் எவனோ அவனை நான்விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பர்.             



3. நபிகளார் ஸல் பிறந்த போது அவர்களின்  தாயார் கண்ட அதிசயங்கள்

وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد

 وهذا إِشَارَة إِلَى اِسْتِقْرَار دِينه وَنُبُوَّته بِبِلَادِ الشَّام وَلِهَذَا تَكُون الشَّام فِي آخِر الزَّمَان مَعْقِلًا لِلْإِسْلَامِ وَأَهْله وَبِهَا يَنْزِل عِيسَى اِبْن مَرْيَم إِذَا نَزَلَ بِدِمَشْق بِالْمَنَارَةِ الشَّرْقِيَّة الْبَيْضَاء مِنْهَا (تفسير ابن كثير)  وَلِهَذَا جَاءَ فِي الصَّحِيحَيْنِ"لَا تَزَال طَائِفَة مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقّ لَا يَضُرّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِي أَمْر اللَّه وَهُمْ كَذَلِك, قال معاذ رضي الله عنه "وَهُمْ بِالشَّامِ"(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ)كتاب المناقب  - " وبها تقع المحشر" وَانْحَشَرَ النَّاس مِنْ جِهَة الْمَشْرِق إِلَى الشَّام وَمِصْرَ 

ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்ற நபிமொழி பல கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறது. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் உமர் ரழி அவர்கள் காலத்தில் ஷாம் வெற்றி கொள்ளப்பட்டது என்பது மட்டுல்லாமல் கடைசி காலத்தில் இந்த ஷாம் தேசம் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் புகலிடமாக இருக்கும் என்பதோடு அங்குள்ள திமிஷ்க் நகரத்தின் மஸ்ஜிதில் கிழக்குப் பகுதியில் உள்ள மினாராவில் தான் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் இறங்குவார்கள் என்பதும் இந்த ஹதீஸில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.                              

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என் உம்மத்தில் ஒரு சாரார் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம்செய்பவர்களாலும் மாற்றுக்கொள்கை உடையவர்களாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு வரை இவர்கள் இவ்வாறு சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள்.                                                                    

முஆத் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறும்போது அவர்கள் ஷாமில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்

( حَتَّى يَأْتِي أَمْر اللَّه ) مِنْ الرِّيح الَّتِي تَأْتِي فَتَأْخُذ رُوح كُلّ مُؤْمِن وَمُؤْمِنَة .(شرح النووي

அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு என்பதற்கு விரிவுரைகள் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வந்து வாழ்ந்து அவர்கள் வஃபாத்தான பின்பு மீண்டும் மக்களிடம் பாவம்  பெருகி விடும்போது அல்லாஹ் முஃமின்களின் உயிரை மட்டும் இலகுவான முறையில் எடுத்துக் கொள்வான். அதன் பின்பு கெட்டவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தான் உலகம் அழியும். அவ்வாறு அல்லாஹ் முஃமின்களின் உயிரைக் கைப்பற்றும் வரை சத்தியத்தின் மீதே நிலைத்திருப்பார்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.  

நபி ஸல் அவர்களின் பிறப்பில் இன்னும் சில அதிசயங்கள்

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு, அந்த ஆண்டு அரேபியர்கள் மழையின்றி பசி மற்றும் தாகத்தால் கடும் நெருக்கடியில் இருந்தனர். ஆனால் ரசூல் அல்லா (ஸல்) அவர்களின் பிறப்புடன் எல்லாமே மாறியது. மழை பெய்தது. நிலம் பசுமையாகி பயிர்கள் ஆரோக்கியமாக இருந்தன. "அதனால்தான் அந்த ஆண்டு "வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டு" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அதற்கு முன்பு பானோ குரேஷ் நெருக்கடியில் இருந்தார். அப்போது நிலம் பசுமையாக இருந்தது. மரங்கள் பசுமையாக இருந்தன, எங்கும் திருப்தியும் செல்வமும் இருந்தது” (சீரத் ஹல்பியா, 1:47)

நபி(ஸல்) பிறந்த மாதம் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் ரபீஉல் அவ்வல் என்பது பெரும்பாலானோரின் கூற்று.

عن جابر وابن عباس  رضي الله عنهما  أنهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات وهذا هو المشهور عند الجمهور والله أعلم(السيرة النبوية - لابن كثير رح)

நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)

பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை

عن ابن عباس رضي الله عنه  أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية)  عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)

குழந்தையைக் கொடுத்தனுப்பி, அக்குழந்தை பற்றிய முன்னறிவிப்பையும் அப்துல் முத்தலிபிடம் கூறப்பட்ட போது.

قال محمد بن إسحاق: فلما وضعته بعثت إلى عبد المطلب جاريتهافلما جاءها أخبرته وحدثته بما كانت رأت حين حملت به وما قيل لها فيه وما أمرت أن تسميه فأخذه عبد المطلب فأدخله على هُبَلُ6 في جوف الكعبة فقام عبد المطلب يدعو ويشكر الله عزوجل ويقول: الحمد لله الذى أعطاني * هذا الغلام الطيب الاردان قد ساد في المهد على الغلمان * أعيذه بالبيت ذى الاركان حتى يكون بلغة الفتيان * حتى أراه بالغ البنيان أعيذه من كل ذى شنآن * من حاسد مضطرب العنان ذى همة ليس له عينان * حتى أراه رافع اللسان أنت الذى سميت في القرآن * في كتب ثابتة المثانى * أحمد مكتوب على اللسان (السيرة النبوية - لابن كثير) (دلائل النبوة للبيهقي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்

وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية  لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى  عليه  السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)

நான்கு தடவைகள் ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். 1.அவன் சபிக்கப்பட்ட போது 2. அவன் இறக்கப்பட்ட போது 3. நபி ஸல் அவர்கள் பிறந்த போது 4. அல்ஹம்து சூரா இறக்கப்பட்ட போது

மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறப்பதற்கு முன்பு ஏழு வானங்கள் வரை சென்று வருவதற்கு சக்தி தரப் பட்டிருந்த ஷைத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பின்பு மூன்றாவது வானத்தைக் கடந்து நான்காவது வானம் வரை மட்டுமே செல்ல அவனால் முடிந்தது. பிறகு நபி ஸல் என்றைக்கு பிறந்தார்களோ அன்று முதல் வானத்திற்கு மேல் செல்ல அவனால் முடியவில்லை. முதல் வானத்தை நெருங்கினாலே தீப்பந்தங்கள் மூலம் எரியப்படும்

3164 வருட பாரம்பரியமான கிஸ்ரா மன்னர்கள் ஆட்சி வீழ்வதன் அறிகுறியாக அம்மாளிகையின் ஸ்தூபிகள் சரிந்தன  பாரசீக நாட்டில் நெருப்பு வணங்கிகளின் சகாப்தம் வீழ்வதன் அடையாளமாக அணையா விளக்கு அணைந்தது

عن مخزوم بن هانئ المخزومى عن أبيه وأتت عليه خمسون ومائة سنة :لَمَّا وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَجَسَ إِيوَانُ كِسْرَى وَسَقَطَتْ مِنْهُ أَرْبَعَ عَشْرَةَ شُرْفَةً وَخَمَدَتْ نَارُ فَارِسَ وَلَمْ تَخْمَدْ قَبْلَ ذَلِكَ بِأَلْفِ سَنَةٍ وكانت مدة ملكهم ثلاثة آلاف سنة ومائة سنة وأربعا وستين سنة(سيرة ابن كثير)

பொருள் 1,குதிரை 2,நெற்றி முடி 3,மனம் அலைமோதுவது 4,முத்திரை 5,என் மீது விழும் 6,ஒரு பாறை 7,மூடி வைப்பது 8,உடைந்தது

நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்

قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك (السيرة النبوية لابن كثير)

இன்று இரவு ஒரு நபி பிறப்பார் என தவ்ராத் வேதத்தைக் கற்ற யூதர் சொன்ன சுபச்செய்தி

عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ ..فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)

ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள், “மக்காவில் ஒரு யூதர் இருந்தார், பிறந்த இரவில் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, “உங்களில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று குரைஷிக் குடும்பத்தைக் கேட்டார் மக்கள் இல்லை என்றார்கள்.  அவன் சொன்னான்“நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! இன்று இந்த உம்மத்தின் கடைசி தீர்க்கதரிசி பிறந்து விட்டார். நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.ஓ குரேஷ் பழங்குடியினரே! அவர் உங்களிடமிருந்து வந்தவர்" அவரது தோள்களில் தீர்க்கதரிசன முத்திரை உள்ளது. இந்த விஷயங்கள் பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளுக்குச் சென்று கேளுங்கள்” குரேஷி மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்,விரைவில் அவர்கள் அனைவரும் அப்துல் முத்தலிபுக்கு ஒரு பேரப்பிள்ளையை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் அவரது பிறப்பில் பல இயற்கைக்கு மாறான விஷயங்கள் மற்றும் அதிசயங்கள் நடக்கின்றன என்றும் அறிந்து கொண்டு, அவர்கள் மிக விரைவில் அவரிடம் திரும்பி வந்து,“நீங்கள் சொல்வது சரிதான்.  அப்துல்முத்தலிபுக்கு ஒரு பேரன் இருக்கிறார்”. என் சொந்தக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் அங்கு சென்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பார்த்தார் அப்போது அக்குழந்தையின் முதுகை நீக்கி காட்டப்பட்ட போது அவர்களின் முத்திரையைச் பார்த்து மயங்கி விழுந்து விட்டார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் காரணம் கேட்க, வருத்தத்துடன் கூறினார்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  நபித்துவம் பனீ இஸ்ரவேலிலிருந்து போய்விட்டது” ஓ குரேஷ் பழங்குடியினரே!  நிச்சயமாக பிற்காலத்தில் இவரின் புகழ் இந்த பூமியின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பரவும்.

என்றுமே தோன்றாத ஒரு நட்சத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பிறந்த தினத்தில் தோன்றிய போது இன்று ஒரு நபி பிறந்துள்ளார் என ஜுபைர் என்ற மாபெரும் யூத அறிஞர் சொன்னார்

قال الزبير بن باطا:قد طلع الكوكب الاحمر الذى لم يطلع إلا لخروج نبى أو ظهوره ولم يبق أحد إلا أحمد وهذا مهاجره.قال أبو سعيد فلما قدم النبي صلى الله عليه وسلم أخبره أبى هذا الخبر فقال رسول الله صلى الله عليه وسلم لو أسلم الزبير لاسلم ذووه من رؤساء اليهود إنما هم له تَبَعٌ (السيرة النبوية - لابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ تَابَعَنِي عَشَرَةٌ مِنْ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلَّا أَسْلَمَ (مسلم)

நபி(ஸல்)அவர்களின் மதீனா பிறப்பைப் பற்றி 700 வருடம் முன்பே யூதர்கள் “துBப்பஃ “மன்னரிடம் கூறினர்

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ (سورة الدخان37) وتُبَّع كان رجلاً من ملوك العرب من حِمير سُمّي تُبَّعاً لكثرة من تبعه وَاسْمه أَسْعَد أَبُو كُرَيْب بْن مليكرب الْيَمَانِيّ ذَكَرُوا أَنَّهُ مَلَكَ عَلَى قَوْمه ثَلَاثمِائَةِ سَنَة وَسِتًّا وَعِشْرِينَ سَنَة وَلَمْ يَكُنْ فِي حِمْيَر أَطْول مُدَّة مِنْهُ وَتُوُفِّيَ قَبْل مَبْعَث رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوٍ مِنْ سَبْعمِائَةِ سَنَة .وَذَكَرُوا أَنَّهُ لَمَّا ذَكَرَ لَهُ الْحَبْرَانِ مِنْ يَهُود الْمَدِينَة أَنَّ هَذِهِ الْبَلْدَة مَهَاجِر نَبِيّ فِي آخِر الزَّمَان اِسْمه أَحْمَد قَالَ فِي ذَلِكَ شِعْرًا وَاسْتَوْدَعَهُ عِنْد أَهْل الْمَدِينَة فَكَانُوا يَتَوَارَثُونَهُ وَيَرْوُونَهُ خَلَفًا عَنْ سَلَف وَكَانَ مِمَّنْ يَحْفَظهُ أَبُو أَيُّوب خَالِد بْن زَيْد الَّذِي نَزَلَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي دَاره وَهُوَ :شَهِدْت عَلَى أَحْمَد أَنَّهُ ... رَسُول مِنْ اللَّه بَارِي النَّسَم.. فَلَوْ مُدَّ عُمْرِي إِلَى عُمْره ... لَكُنْت وَزِيرًا لَهُ وَابْن عَم...وَجَاهَدْت بِالسَّيْفِ أَعْدَاءَهُ ... وَفَرَّجْت مِنْ صَدْره كُلّ غَم -وعن النبي صلى الله عليه وسلم: لا تسبوا تبعاً فإنه كان قد أسلم ما أدري أكان تبع نبياً أو غير نبي وقال كعب : ذم الله قومه ولم يذمه (تفسير ابن كثير)

துப்பஃ என்ற மன்னர் நபி ஸல் அவர்களுக்கு 700 வருடங்களுக்கு முந்தைய ஆட்சியாளர். 326 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். அந்தக் காலத்தில் இதுவெல்லாம் ச்ரவ சாதாரணம். ஃபிர்அவ்ன் 300 வருடங்கள் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடதக்கது. அத்தகைய துப்பஃ என்ற மன்னர் மதீனாவுக்கு வந்த போது  மதீனாவில் உள்ள தவ்ராத்தை கற்ற அறிஞர்கள் அவரிடம் இந்த ஊர் கடைசி காலத்தில் ஒரு நபி ஹிஜ்ரத் செய்து வருகை தரப் போகும் ஊர் என்றெல்லாம் கூற, அதைக் கேட்ட அவர் நபி ஸல் அவர்களைப் புகழ்ந்து சில கவிதைகளை எழுதி அதை மதீனாவாசிகளிடம் ஒப்படைத்தார். அதை காலங்காலமாக பாதுகாத்து வைத்திருந்தனர். முக்கியமாக அதைப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் தான் அபீ அய்யூபுல் அன்சாரி ரழி அவர்கள் 

(நபி ஸல் மதீனாவுக்கு வந்தபோது பலரும் தங்களின் வீட்டைத் தருவதற்கு முயன்ற போது  நபி ஸல் அவர்கள் இந்த ஒட்டகம் அல்லாஹ்வினால் உத்தரவிடப்பட்டுள்ளது இது எங்கே சென்று அமருமோ அது தான் நான் தங்கப் போகும் வீடு என்று கூறுவார்கள். அந்த ஒட்டகம் இந்த சஹாபீ வீட்டுக்கு முன்னால் தான் மண்டியிட்டது என்பது வரலாறு. மற்றொரு அறிவிப்பில் அந்த வீடும் அந்த அரசர் எழுதி வைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.)

நபி ஸல் அவர்களின் பிறப்பில் நமக்குப் படிப்பினைகள்

நபி ஸல் அவர்கள் பிறக்கும்போதே பல சோதனைகளை சந்தித்தார்கள். அல்லாஹ் தனக்குப் பிடித்தமானவர்களை அதிகம் சோதிப்பான்

தாயின் வயிற்றில் இருக்கும் போதே  தந்தையை இழந்தார்கள்

عن أيوب بن عبد الرحمن قال: خرج عبد الله بن عبد المطلب إلى الشام إلى غزة في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينة وعبد الله بن عبد المطلب يومئذ مريض فقال أتخلف عند أخوالى بنى عدى بن النجار.فأقام عندهم مريضا شهرا ومضى أصحابه فقدموا مكة فسألهم عبد المطلب عن ابنه عبد الله فقالوا:خلفناه عند أخواله بنى عدى بن النجار وهو مريضفبعث إليه عبد المطلب أكبر ولده الحارث فوجده قد توفى ودفن في دار النابغة فرجع إلى أبيه فأخبرهفوجد عليه عبد المطلب وإخوته وأخواته وجدا شديداورسول الله صلى الله عليه وسلم يومئذ حمل ولعبد الله بن عبد المطلب يوم توفى خمس وعشرون سنة(السيرة النبوية - لابن كثير

 வியாபார விஷயமாக மற்றவர்களுடன் அப்துல்லாஹ் அவர்கள் ஷாம் சென்ற போது வரும் வழியில் மதீனாவைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டதால் நான் மதீனாவில் என் மாமன்மார்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு வருகிறேன் என்றார் மற்றவர்கள் மக்கா திரும்பினர். அப்துல் முத்தலிப் மகனைப் பற்றி விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை கேட்டு அப்துல் முத்தலிப் கவலைப்பட்டு தன் மூத்த மகன் ஹாரிஸை மதீனாவிற்கு அனுப்பினார். அங்கு வந்த பின்பு தான் அப்துல்லாஹ் இறந்த விபரமும் அவரை தாருன் னாபிஙா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்தது அவ்விஷயத்தை கேட்டு அப்துல் முத்தலிப் அவர்களும் மற்றவர்களும் மிகவும் கவலைப்பட்டனர். அந்நேரத்தில் அவரின் வயது 25 மட்டுமே. மேலும் அந்நேரத்தில் நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார்கள்.

படிப்பினை- இன்றைக்கும் பலர் சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலும் பொறுமையிழந்து ஈமானுக்கு மாற்றமான வார்த்தைகளைக் கூற ஆரமபித்து விடுகின்றனர் அத்தகையவர்கள் நபி ஸல் அவர்களின் வாழக்கையை சிந்திக்க வேண்டும். பிறக்கும் முன் தந்தையை இழந்து, பிறந்த பின் ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டனாரையும் எட்டு வயதில் இழந்தார்கள்

பின்பு நபி ஸல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்தனர். மற்ற நான்கு பெண் மக்களில் மூன்று பேர் நபி ஸல் அவர்களின் ஜீவிய காலத்திலேயே இறப்பெய்தினர். ஆக இவ்வளவு சோதனைகள்ஏற்பட்ட்டன. இத்தனைக்கும் அவர்கள் தான் படைப்பினங்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்

புகழப்படுவதற்காகவே முஹம்மத் என்ற பெயர் வைக்கப்பட்ட சரித்திரம் 

فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا، فلما أكلوا قالوا: يا عبد المطلب، أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه، ما سميته ؟ قال: سميته محمدا.قالوا: فما رغبتَ به عن أسماء أهل بيته؟ قال: أردتُ أن يحمده الله في السماء وخَلْقُه في الارض.(السيرة النبوية لابن كثير)

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அப்துல் முத்தலி ஆடு அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார் அப்போது அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதான பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே இந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க முஹம்மத் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாரும் வைக்கவில்லையே என்று கேட்டனர் அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் உலக மக்கள் அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார். 

ومحمد معناه: المحمود في كل صفاته.-قال أهل اللغة: كل جامع لصفات الخير يسمى محمدا- قال بعض العلماء: ألهمهم الله عزوجل أن سموه محمدا لما فيه من الصفات الحميدة، ليلتقي الاسم والفعل، ويتطابق الاسم والمسمى في الصورة والمعنى، كما قال عمه أبو طالب، ويروى لحسان: وشق له من إسمه ليجله * فذو العرش محمود وهذا محمد (السيرة النبوية لابن كثير)


இறுதிப் பேருரை

19-09-2025 ரபீஉல் அவ்வல்- 26 بسم الله الرحمن الرحيم    இறுதிப் பேருரை https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTE...