06-06-2025
துல்ஹஜ்-9
بسم الله الرحمن الرحيم
உழ்ஹியாவின் சட்டங்கள்
மற்றும் ஈதுல் அழ்ஹா பயான்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இந்த வருடம் 2025-ல் ஜும்ஆ நாளுக்கு அடுத்த நாளே ஈதுல் அழ்ஹா வருவதால் முதல் நாள் ஜும்ஆவில் அறுப்பின் சட்டங்களைப் பேசி விட்டு, இரண்டாம் நாளான ஈதுடைய நாளில் பங்கு வைப்பதின் சட்டங்களையும் அகீகா மற்றும் நேர்ச்சை பற்றிய சட்டங்களையும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய தக்பீரைப் பற்றியும் பேசி விட்டு அதற்குப் பிறகு கடைசி காலத்தில் பாலஸ்தீன மண்ணில் நடைபெறப்போகும் மிகப்பெரிய யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தக்பீர் என்ற தக்பீர் முழக்கத்தைக் கொண்டே அல்லாஹ் வெற்றியைத்தருவான் என்ற முன்னறிவிப்பையும் பேசுவதுடன் இன்றைய சூழ்நிலையில் அந்த பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்களை சுட்டிக் காட்டி அதற்காக அழுது துஆச் செய்யும்படி ஒவ்வொரு முஃமினையும் தூண்ட வேண்டும்.
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ (37)الحج
சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன் நபி ஸல் குர்பானி கொடுத்துள்ளார்கள்
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود)
அறுப்பின் சுன்னத்துகள்-
குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி தக்பீர் சொல்வது நல்லது சலவாத் கூறுவதும் நல்லது என இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ:ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ فِى يَوْمِ الْعِيدِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا (إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ) (إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى اللَّهَ وَكَبَّرَ وَذَبَحَ (نسائ وتستحب الصلاة على النبيصلى الله عليه وسلم عند الذبح (الأم للشافعي)
நாம் குர்பானி கொடுக்கும்போது அல்லாஹும்ம ஹாதா மின்க்க வஇலைக்க ஃபதகப்பல் மின்னீ என்று ஓதலாம்.
எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை தீட்டுவது,
அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது நல்லதாகும்
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ1 (أحمد
உயிர் முற்றிலும் பிரியாத நிலையில் எந்தப் பிராணியின் தோல் உரிக்கப்படுமோ அது முறையாக அறுக்கப் பட்டிருந்தாலும் தானாக செத்த பிராணியைப் போன்றுதான். இதன் விளக்கம் என்னவென்றால் நாம் முறையாக பிராணியை அறுப்பதே நஜீஸாக இருக்கக்கூடிய இரத்தத்தை விட்டும் நீங்கி சுத்தமான இறைச்சி நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். மனிதன் உட்பட எந்த ஒரு உயிரிணமும் உயிரோடு இருக்கும்போது இரத்த ஓட்டம் எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எப்போது அப் பிராணி நாம் அறுக்காமல் இறந்து விடுகிறதோ அப்போது இரத்த ஓட்டம் நின்று விடுவதால் இரத்தம் மற்ற உறுப்புக்களின் பாகங்களோடு கலந்து விடுகிறது. அதனால் அந்தப் பிராணியே நஜீஸாகி விடுகிறது. அதே நேரத்தில் நாம் முறையாக அறுத்து அதன் துடிப்புகள் அடங்கும் வரை விட்டு விடுகிறோம். அதன் உயிர் முழுமையாக பிரியும்போது தான் முழு இரத்தமும் வெளியேறுகிறது. துடிப்புகள் அடங்கும் முன்பே நாம் அறுக்கும்போது இரத்தம் முழுமையாக வெளியேறுவதில்லை. அதன் உடல் பாகங்களோடு இரத்தம் கலந்து விடுவதால் அந்தப் பிராணியை நஜீஸ் என்கிறோம்.
وَلِأَنَّ الْمُنَجَّسَ هُوَ اخْتِلَاطُ الدَّمِ الْمَسْفُوحِ بِأَجْزَائِهِ عِنْدَ الْمَوْتِ ، حَتَّى حَلَّ الْمُذَكَّى لِانْعِدَامِ الدَّمِ فِيهِ (هداية
அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை பல முறை சாகடிப்பதாகும்
عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية) عن معاوية بن قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله (مستدرك الحاكم) كتاب الاضحية)
ஒருவர் கத்தியை தீட்டியபடியே ஆட்டைப் படுக்க வைத்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இதை ஒருமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா அல்லது பலமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா நீ ஆட்டைப் படுக்க வைக்கும் முன்பு மறைவாக கத்தியைத் தீட்டியிருக்க வேண்டாமா என நபி ஸல் அவர்கள் எச்சரித்தார்கள். மற்றொரு நபித்தோழர் நபி ஸல் அவர்களிடம் நான் ஆடுகளை அறுக்கும்போது அவைகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள விரும்புவேன் என்று கூறியவுடன் நபி ஸல் கூறினார்கள். நீர் அவ்வாறு அவைகள் மீது இரக்கம் காட்டினால் அல்லாஹ் உம் மீது இரக்கம் காட்டுவான் என்றார்கள்.
மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும்
والأولى أن تساق إلى المذبح برفق وتضجع برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد الشفرة قِبَالتها ولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق) عنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن ماجة) عن الوضين بن عطاء رضي الله عنه أن جزارًا فتح بابا علي شاة ليذبحها فانفلتت منه حتي جاءت الي النبي صلي الله عليه وسلم فأَتْبَعَها فأخذ يسحبها برِجْلِها4 فقال لها النبي صلي الله عليه وسلم اصبري لأمر الله وأنت يا جزار (مصنف عبد الرزاق) جزارகசாப்புக்கடைக்காரர்
நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது ஆட்டின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் அதன் காதை விட்டு விடு. அதன் பிடரியைப் பிடித்து இழுத்து வா என்றார்கள். காதைப் பிடித்தால் ஆட்டுக்கு வலி ஏற்படும். பிடரியைப் பிடித்தால் வலி ஏற்படாது என்பதால் இவ்வாறு. கூறினார்கள். மற்றொருவர் ஆடு அடைத்து வைக்கப்படிருந்த இடத்தைத் திறந்தார். அதிலிருந்து அந்த ஆடு நழுவி நேராக நபி ஸல் அவர்களை நோக்கி ஓடி வந்தது. அதை விரட்டி வந்த அதன் உரிமையாளர் அதன் காலைப் பிடித்து தரதரவென இழுத்தார். நபி ஸல் அவரைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் நீ இதை அறுக்கிறாய் சற்று பொறுமையைக் கடைபிடி என்றார்கள்.
மிருகங்களும் அடைக்கலம் தேடி வருகின்ற புகலிடமாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ(ابوداود
நபி ஸல் அவர்கள் சுவதேவைக்காக ஒரு அன்சாரித் தோழரின் பின் பக்கச் சுவற்றின் பக்கம் ஒதுங்கியபோது அங்கே ஒரு ஒட்டகம் நபி ஸல் அவர்களைக் கண்டவுடன் தேம்பி அழத் துவங்கியது. நபி ஸல் அவர்கள் அதன் திமிலைத் தடவிக் கொடுத்த பின் அது அமைதியானது உடனே நபி ஸல் அவர்கள் அதன் உரிமையாளரை அழைத்து நீர் இந்த வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா நீ அதைப் பட்டினி போட்டதாகவும், அதைக் கொடுமைப் படுத்தியதாகவும் என்னிடம் முறையிட்டது என நபி ஸல் கூறினார்கள்
அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்து அறுப்பது
استقبال الذابح القبلة وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع بدنها والثالث يوجه قوائمها5(مجموع
அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது
الْأَوْلَى في الْقُرَبِ أَنْ يَتَوَلَّاهَا الْإِنْسَانُ بِنَفْسِهِ وَإِنْ أَمَرَ بِهِ غَيْرَهُ فَلَا يَضُرُّ لِأَنَّهُ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ سَاقَ مِائَةَ بَدَنَةٍ فَنَحَرَ بيده نَيِّفًا وَسِتِّينَ ثُمَّ أَعْطَى الحِرْبَةَ عَلِيًّا فَنَحَرَ الْبَاقِيَ وَإِنْ كان لَا يُحْسِنُ ذلك فَالْأَحْسَنُ أَنْ يَسْتَعِينَ بِغَيْرِهِ كيلا يَجْعَلَهَا مَيْتَةً وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا بِنَفْسِهِ لِقَوْلِهِ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ لِفَاطِمَةَ رض قَوْمِي فَاشْهَدِي أُضْحِيَّتَكِ فإنه يُغْفَرُ لَك بِأَوَّلِ قَطْرَةٍ من دَمِهَا كُلُّ ذنبه (سنن الكبري للبيهقي)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் 100 ஒட்டகங்களை அறுத்தார்கள். அதில் 63 ஒட்டகங்களை தாமே அறுத்தார்கள். மீதியை அலீ ரழி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
குர்பானிப் பிராணியில் கூட்டு சேர்ந்து கொண்ட ஏழு பேர் அதனை அறுக்கும்போதும் கூட்டாக அறுத்த சம்பவம்
عن أَبي الأَسَدِّ السُّلَمِىّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنه قَالَ :كُنْتُ سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعَ كُلُّ رَجُلٍ مِنَّا دِرْهَمًا فَاشْتَرَيْنَا أُضْحِيَّةً بِسَبْعَةِ دَرَاهِمَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أَغْلَيْنَا بِهَا6 فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم: إِنَّ أَفْضَلَ الضَّحَايَا أَغْلاَهَا وَأَنْفَسُهَا فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يَأْخُذُ بِيَدٍ وَرَجُلاً بِيَدٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِقَرْنٍ وَرَجُلاً بِقَرْنٍ وَذَبَحَهَا السَّابِعُ وَكَبَّرْنَا عَلَيْهَا جَمِيعًا (مستدرك الحاكم) كتاب الاضحية) (طبراني)
ஒருமுறை நாங்கள் ஏழு பேர் ஒரு பிராணியில் கூட்டாக இருந்தோம். அதில் நபி ஸல் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். ஆளுக்கு ஒரு திர்ஹம் சேர்த்து வைத்து ஏழு திர்ஹத்திற்கு ஒரு பிராணியை வாங்கினோம். அந்தப் பிராணியை அறுக்கும் போது அதன் நான்கு கால்களை நான்கு பேர் பிடிக்க, அதன் இரு கொம்புகளை இருவர் பிடிக்க, ஏழாவது நபர் அதனை அறுத்தார்.
அறுக்கும் முறை
பிராணியின் கழுத்திலுள்ள இரத்தக்குழாய்கள், மூச்சுக்குழல், உணவுக்குழல் ஒரே நேரத்தில் அறுபட வேண்டும். அப்படி அறுத்தாலும் துடிப்பு அடங்கிய பின்பே தோலை உரிக்க வேண்டு இதனால் இரத்தம் விரைவாக வெளியேறி இறைச்சி சுத்தமாகும். கத்தி கூர்மையாக இருப்பதால் விரைவாக அறுக்க முடியும். அதனால் பிராணி வலியை உணர்வதில்லை. உதாரணமாக கூர்மையான பிளேடினால் ஏற்படும் காயம் உடனே வலியைத் தோற்றுவிப்பதில்லை. இரத்தம் வழிந்து சிறிது நேரம் கழித்தே வலியை உணர்கிறோம்.
.
மேல்நாடுகளில் பின்பற்றப்படும் ஸ்டன்னிங் முறையால் கறியும் சுத்தமாகாது. பிராணியும் வேதனையை உணரும்
இம்முறைப்படி பிராணியின் தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது. உடனே பிராணி செயலிழந்து விடுகிறது. ஆனால் நினைவை இழப்பதில்லை. பிராணி செயலிழந்து விடுவதால் அதற்கு எவ்வித வலியும் ஏற்படுவதில்லை எனக் கருதலாம். ஆனால் உண்மையில் பிராணி மிகுந்த வேதனையுடன் இருக்கிறது. மூளையும், நரம்பு மண்டலமும் செயலிழந்து விடுவதால் உடலில் துடிப்பு ஏற்படுவதில்லை. அதன் காரணமாக இரத்தம் உடலிலேயே தங்கி விடுகிறது. விரைவாக தசைகளை வெட்டுவதால் சிறிது இரத்தமே வெளியேறக்கூடும். எனவே இறைச்சி சுத்தமற்றதாக ஆகி விடுகிறது. அதன் தோற்றமும் மாறுபடுகிறது. சுவையும் குறைந்து விடுகிறது
ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்
1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ (طبراني
கூட்டுக் குர்பானியாக இருந்தாலும் அதன் இறைச்சியிலுருந்து கொஞ்சம் சாப்பிடுவது சுன்னத்.
போய் வாங்குவது கடும் சிரமம் என்று இருந்தாலே தவிர. சிலர் கூட்டுக் குர்பானிக்கு பணம் மட்டும் கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை உண்பதை கண்ணியக்குறைவாக கருதுவர். அது தவறாகும்
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28الحج) وفي حديث حجة الوداع... ثُمَّ انْصَرَفَ (رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ) إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرٍ فَطُبِخَتْ فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –قَالَ عَبْد اللَّه بْن وَهْب قَالَ لِي مَالِك أُحِبّ أَنْ يَأْكُل مِنْ أُضْحِيَّته لِأَنَّ اللَّه يَقُول" فَكُلُوا مِنْهَ
ஹஜ்ஜதுல் விதாவில் நபி ஸல் அவர்கள் மொத்தம் 100 ஒட்டகங்கள் குர்பானி கொடுத்தார்கள். தான் அறுக்கும் குர்பானி இறைச்சியில் சிறிதளவேனும் சாப்பிடுவது நல்லது என்ற அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அத்தனை ஒட்டகங்களில் இருந்தும் ஒவ்வொரு மாமிசத் துண்டை எடுத்து சால்னா காய்ச்சும்படி ஏவினார்கள். அந்த மாமிசத்தை உண்டதோடு, அந்த சால்னாவை சிறிதளவு குடித்தார்கள். அதாவது அத்தனை ஒட்டகங்களின் இறைச்சி சாறு அதில் இறங்கி விட்டதால் இவ்வாறு செய்தார்கள்.
நிறைமாத கர்ப்பமான ஆட்டை அறுப்பது அதன் குட்டியையும் அறுத்ததாக கணக்கிடப்படும்
ذَكَاة الْجَنِينِ عَنْ أَبِي سَعِيدٍ رض قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَنِينِ فَقَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ وَقَالَ مُسَدَّدٌ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ وَنَذْبَحُ الْبَقَرَةَ وَالشَّاةَ فَنَجِدُ فِي بَطْنِهَا الْجَنِينَ أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ قَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ رواه ابو داود
குர்பானித் தோலை விற்பது கூடாது. அறுப்பவருக்குக் கூலியாகவும் தரக்கூடாது. ஏழைகளுக்கு தரலாம். மஸ்ஜித் மதரஸாக்களில் அதை வாங்கினாலும் அதை ஏழை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.
ما ذا يفعل بجلدها؟ قال صاحب الهداية:ويتصدق بجلدها أو يعمل منه آلة تستعمل في البيت لقوله عليه السلام لعلي رض "تصدق بجلودها وخطامها ولا تعط أجر الجزار منها شيئا" ولقوله عليه السلام "من باع جلد أضحيته فلا أضحية له" لأن الاعطاء بجلدها او بجزء منهاأجرة في معني البيع
ஈதுல் அழ்ஹா பயான்
குர்பானிக் கறியை பங்கிடுவது தொடர்பான விளக்கங்கள்
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ففي تفسير القرطبي : فيه ثلاث وعشرون مسألة :
الرابعة عشرة: ذهب أكثر العلماء إلى أنه يستحب أن يتصدق بالثلث ويطعم الثلث ويأكل هو وأهله الثلث.
குர்பானி இறைச்சியை மூன்று பங்காக வைத்து ஒரு பங்கை தனக்கும்
மற்றொரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பது நல்லது
الثامنة : { فكلوا منها } أمر معناه الندب عند الجمهور ويستحب للرجل أن يأكل من هديه وأضحيته وأن يتصدق بالأكثر مع تجويزهم الصدقة بالكل وأكل الكل : { فكلوا منها وأطعموا } يدل على أنه لا يجوز بيع جميعه ولا التصدق بجميعه
தான் அறுத்த பிராணியில் கொஞ்சமேனும் சாப்பிட்டு பெரும்பகுதியை தர்மம் செய்வது நல்லது. குடும்பம் பெரிதாக இருந்தால் பெரும்பகுதியை தனக்கே உபயோகப்படுத்துவதும் கூடும். எக்காரணத்தைக் கொண்டும் குர்பானிக் கறியை விற்பது கூடாது. முற்றிலுமாக தர்மம் செய்வதும் குர்ஆன் ஆயத் அடிப்படையில் நல்லதல்ல.
நேர்ச்சையாக இருந்தால் முற்றிலுமாக தர்மம் செய்து விட வேண்டும். உறவினர்களுக்கு தர முடியாது
العاشرة (وليوفوا نذورهم) ويدل ذلك على أن النذر لا يجوز أن يأكل منه وفاء بالنذر وكذلك جزاء الصيد وفدية الأذى لأن المطلوب أن يأتي به كاملا من غير نقص لحم ولا غيره فإن أكل من ذلك كان عليه هدي كامل والله أعلم
நேர்ச்சை இரண்டு வகை
ومن نذر نذرا مطلقا فعليه الوفاء به وإن علق نذره بشرط فوجد الشرط فعليه الوفاء بنفس النذر (هداية
எனக்கு இந்தக் காரியம் நடந்தால் நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இது இரண்டாவது வகை. இந்த நேர்ச்சையைப் பொறுத்த வரை இவர் நினைத்த காரியம் நிறைவேறினால் மட்டுமே நேர்ச்சை கடமையாகும். மற்றொன்று எதையும் நிபந்தனையிடாமல் மனதில் ஒரு காரியம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இந்த நேர்ச்சைக்கு அந்தக் காரியம் நடைபெற்று முடிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது முன்பே அவர் நினைத்த நாளில் நிறைவேற்ற வேண்டும்.
எந்தக் காரியத்தையும் மனதில் நினைக்காமல் நேர்ச்சை செய்வதும் உண்டு.
عن ثَابِت بْن الضَّحَّاكِ قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ (ابوداود
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து நான் புவானா எனும் இடத்தில் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன் அதை அதே இடத்தில் நிறைவேற்றவா என்று கேட்க, அந்த இடத்தில் அறியாமைக் காலத்தின் சிலைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் கூறினார். மீண்டும் அவரிடம் அந்த இடத்தில் ஏதேனும் மாற்றாரின் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்று கேட்க இல்லை என்று அவர் கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அப்படியானால் அந்த நேர்ச்சையை அந்த இடத்தில் நிறைவேற்றுங்கள் என்றார்கள்.
எனினும் “எனது நோய் நீங்கினால்” என்று நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை
நோய் நீங்குவதை நிபந்தனையாக வைத்து அல்லது ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை. அது மக்ரூஹ். இந்தக் காரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நேர்ச்சை செய்து அக் காரியம் நிறைவேறும் முன்பு தர்மம் செய்வது மக்ரூஹ் அல்ல.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَنْذِرُوا فَإِنَّ النَّذْرَ لَا يُغْنِي مِنْ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنْ الْبَخِيلِ (مسلم
(ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து) நேர்ச்சை செய்யாதீர்கள். அது அல்லாஹ்வின் விதியில் நின்றும் எதையும் தேவையற்று வைக்காது. இந்த வகை நேர்ச்சை கஞ்சனிடம் இருந்து வெளிப்படுவதாகும்.
وجزم القرطبي في المفهم بحمل ما ورد في الأحاديث من النهي على نذر المجازاة فقال هذا النهي محله ان يقول مثلا ان شفى الله مريضي فعلي صدقة كذا ووجه الكراهة أنه لما وقف فعل القربة المذكور على حصول الغرض المذكور ظهر انه لم يتمحض له نية التقرب إلى الله تعالى لما صدر منه بل سلك فيها مسلك المعارضة ويوضحه انه لو لم يشف مريضه لم يتصدق بما علقه على شفائه وهذه حالة البخيل فإنه لا يخرج من ماله شيئا الا بعوض عاجل يزيد على ما اخرج غالبا وهذا المعنى هو المشار إليه في الحديث لقوله وانما يستخرج به من البخيل (فتح الباري
சுருக்கம்- “இன்ன காரியம் நடந்தால் தான்” என்று நேர்ச்சை செய்யும் ஒருவர் அது நடைபெறா விட்டால் நேர்ச்சையை நிறைவேற்ற மாட்டார். தான் செய்யும் தர்மத்திற்கு இவர் தன் காரியத்தைப் பகரமாக ஆக்குவதால் இவர் ஒரு வியாபாரியைப் போல ஆகி விடுகிறார் என்பதால் நபி ஸல் அவர்கள் இதை வெறுத்தார்கள்.
படிப்பினை- நேர்ச்சை செய்திருந்தால் தான் நாம் சாப்பிட முடியாது. குர்பானிக்கறியை சாப்பிடுவது சுன்னத்
அறியாமைக் காலத்தில் குர்பானி தருபவர் அதன் இறைச்சியை உண்பது ஹராம் என்றே கருதினர்
{ فكلوا منها } قال بعض العلماء : قوله تعالى : { فكلوا منها } ناسخ لفعلهم لأنهم كانوا يحرمون لحوم الضحايا على أنفسهم ولا يأكلون منها - كما قلناه في الهدايا - فنسخ الله ذلك بقوله : { فكلوا منها } وبقول النبي صلى الله عليه و سلم : [ من ضحى فليأكل من أضحيته ] ولأنه عليه السلام أكل من أضحيته وهديه (قرطبي) وقال الزهري : من السنة أن تأكل أولا من الكبد
இமாம் zuharee ரஹ் அவர்கள் கூறும்போது நாம் எடுத்து வைத்துக் கொள்ளும் பிராணியின் பாகங்களில் ஈரல் இருந்தால் நல்லது என்றும் அதை முதலாவதாக உண்பது நல்லது என்றும் கூறியுள்ளார்கள்.
குர்பானி இறைச்சியை சேமிப்பது பற்றிய சட்டங்கள்
குர்பானி இறைச்சியை வீணாக்காமல் அதை பதப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்துவது சுன்னத்
- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ
ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது
ஆரம்ப காலத்தில் சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தது பின்பு அனுமதிக்கப்பட்டது.
عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَدْ نَهَى عَنْ لُحُومِ الأَضَاحِىِّ بَعْدَ ثَلاَثٍ ، فَلَمَّا كَانَ الْعَامُ الْقَابِلُ وَضَحَّى النَّاسُ قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ إِنْ كَانَتْ هَذِهِ الأَضَاحِىُّ لَتَرْفُقُ بِالنَّاسِ كَانُوا يَدَّخِرُونَ مِنْ لُحُومِهَا وَوَدَكِهَا. قَالَ :« فَمَا يَمْنَعُهُمْ مِنْ ذَلِكَ الْيَوْمَ؟ ». قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ أَوَلَمْ تَنْهَهُمْ عَامَ أَوَّلَ عَنْ أَنْ يَأْكُلُوا لُحُومَهَا فَوْقَ ثَلاَثٍ؟ فَقَالَ :« إِنَّمَا نَهَيْتُ عَنْ ذَلِكَ لِلْحَاضِرَةِ الَّتِى حَضَرَتْهُمْ مِنْ أَهْلِ الْبَادِيَةِ لِيَبُثُّوا لُحُومَهَا فِيهِمْ ، فَأَمَّا الآنَ فَلْيَأْكُلُوا وَلْيَدَّخِرُوا ». تحفة 17901 رواه النسائ
ஆயிஷா ரழி கூறினார்கள். நிச்சயமாக நபி ஸல் அவர்கள் குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்தார்கள். (அப்போது குர்பானி கொடுப்பவர்கள் குறைவு என்பதால் குர்பானி கொடுப்பவர்கள் தேடிச்சென்று அனைத்து ஏழைகளுக்கும் தந்துவிட வேண்டும் என்பதால் அவ்வாறு கூறினார்கள்.) அடுத்த வருடம் நிறைய மக்கள் குர்பானி கொடுத்த போது அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அனுமதி கொடுத்தால் மீதமாகும் குர்பானிக் கறியை அவரவர் சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி ஸல் அவர்கள் அதில் என்ன தடை உள்ளது என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் கடந்த வருடம் நீங்கள்அதை தடுக்கவில்லையா என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் கடந்த வருடத்தில் நான் தடுத்த காரணம் குர்பானி கொடுக்க முடியாத வெளியூர் வாசிகளுக்கு பரவலாக குர்பானிக் கறி சென்றடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினேன். இந்த வருடம் நீங்கள் கொடுத்தது போக சேமியுங்கள்.
عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا وَأَمْسِكُوا مَا شِئْتُمْ وَنَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ وِعَاءٍ شِئْتُمْ وَلَا تَشْرَبُوا مُسْكِرًا رواه ابن ماجة
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் மூன்று விஷயங்களை விட்டும் உங்களைத் தடுத்திருந்தேன். கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன் (ஏனெனில் ஆரம்ப காலத்தில் காஃபிர்களின் கப்ருகள் தான் நிறைய இருந்தது.) இப்போது நீங்கள் ஜியாரத் செய்யுங்கள். அது உங்களுக்கு பல நலவுகளை அதிகப்படுத்தும். குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை உண்ணுங்கள். மீதியை (காய வைத்து) சேமித்து வையுங்கள். (முற்காலத்தில் மதுவுக்காகப் பயன்படுத்திய) சில பாத்திரங்களை (மக்களுக்கு மதுவின் நினைவு வரக் கூடாது என்பதற்காக) அதை பயன்படுத்த தடை விதித்திருந்தேன். இப்போது நீங்கள் அதைப் பயன்படுத்துங்கள். மதுவை அறவே அருந்தாதீர்கள்.
முடிந்த வரை மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைப்பதை விட காய வைத்துப் பயன்படுத்துவது சுன்னத்.
அய்யாமுத் தஷ்ரீக் என்பதன் பொருள் காய வைக்கும் நாட்கள் என்பதாகும்.
ايام التشريق – من شَرَّقَ يُشَرِّقُ )شَرَّقَ (காய வைத்தான்
- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ
ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது
மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து உண்பதால் பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் சாப்பிடுவதால் இரைப்பையில் நோய் ஏற்படும் அதனால் ஈரல், சிறுநீரகம், மூளை பாதிப்புகள் வரலாம்.
வாரக் கணக்கில் மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து எடுத்து சமைப்பதால் அதில் இயற்கையாக உள்ள புரதச் சத்துகள் அழிந்து அதன் தூய்மையும் பாதிக்கப்படும். சில சமயங்களில் அது விஷமாகவும் மாறி விடும் வாய்ப்பு உண்டு.
அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நாம் சொல்லும் தக்பீரின் தாத்பரியம்
ذكر في الكشاف أن الخليل لما أراد الذبح ونزل جبريل بالفداء خاف عليه العجلة فنادى من الهواء الله أكبر الله أكبر الله أكبر فسمعه الذبيح فقال لا إله إلا الله والله أكبر فقال الخليل الله أكبر ولله الحمد (حاشية الطحاوي
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கு மகனாரை அறுத்துப் பலியிட தயாரான போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் மகனாருக்குப் பகரமாக ஆட்டைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். தான் வருவதற்கு முன்னால் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசரப் பட்டு விடக் கூடாதே என்பதற்காக ஆகாயத்தில் இருந்தே அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டே வர, அதைக்கேட்ட மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று சொல்ல, இருவரின் சப்தத்தைக் கேட்ட நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று கூறினார்கள். இவ்வாசகங்கள்தான் தக்பீருத் தஷ்ரீக் என இன்று வரை உள்ளது
தகீபீருத் தஷ்ரீக் உடைய சட்டங்களில் சில....
ويجب تكبير التشريق من بعد فجر عرفة الى عصر العيد مرة فور كل فرض أدي بجماعة متسحبة على أمام مقيم بمصر وعلى من اقتدى به ولو كان مسافرا أو رقيقا أو أنثى عند الإمام أبي حنيفة رحمه الله وقالا تجب فور كل فرض على من صلاه ولو منفردا أو مسافرا أو قرويا الى عصر الخامس من يوم عرفة وبه يعمل وعليه الفتوى (نور الايضاح
صيغة التكبير والتكبير أن يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد (نور الايضاح
அரஃபா நாள் ஃபஜ்ரில் இருந்து பிறை 10 அசர் வரை ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்குப் பிறகும் இமாமும் மஃமூமும் ஒருமுறை தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும். பிரயாணியாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.
இச்சட்டம் இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களின் கருத்தின் அடிப்படையில் உள்ளதாகும்.
மற்ற இரு இமாம்களின் கருத்துப்படி இந்த தக்பீர் வாஜிப். அரஃபா நாள் ஃபஜ்ரில் இருந்து பிறை 13 அசர் வரை ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்குப் பிறகும் வாஜிப். தனித்துத் தொழுபவரும் ஃபர்ளுத் தொழுகைக்குப் பிறகு இதைக் கூற வேண்டும். இது தான் ஃபத்வா.
தக்பீர் தஹ்ரீமாவின் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
ஒவ்வொரு தொழுகையின் போதும் தக்பீர் தஹ்ரீமா கூறும் போது கைகளை காதின் சோனை வரை உயர்த்துவது சுன்னத். ஆனால் நாவினால் தக்பீர் கூறுவது ஃபர்ளாகும். கைகளைத் தூக்குவதின் நோக்கம் நான் இந்த தொழுகையை துவங்குகிறேன். எனவே என்னுடைய அனைத்து சிந்தனைகளையும் என் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டேன் என்பதும் நோக்கமாகும். மற்றும் ஒரு கூற்றின் படி அல்லாஹ்வின் முன்னிலையில் சரணடைதல் என்ற தாத்பரியமும் உண்டு
والتحريمة بلا فاصل والإتيان بالتحريمة قائما قبل انحنائه للركوع وعدم تأخير النية عن التحريمة والنطق بالتحريمة بحيث يسمع نفسه على الأصح (نور الايضاح
தக்பீர் தஹ்ரீமா கூறும் போது தனித்துத் தொழுபவர் குறைந்த பட்சம் தனக்குக் கேட்கும் அளவுக்கு தக்பீர் கூற வேண்டும். தனக்கே கேட்காத வகையில் வாயில் முனுமுனுத்தால் அது தக்பீர் தஹ்ரீமா கிடையாது. அவரது தொழுகையும் நிறைவேறாது.
மேலும் நின்ற நிலையில் தான் தக்பீர் தஹ்ரீமா கூற வேண்டும். குனிந்து கொண்டே கூறினால் நிறைவேறாது. (தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் ருகூவில் இருக்கும்போது வந்து சேர்ந்தால் பெரும்பாலும் மேற்படி தவற நடைபெற வாய்ப்பு அதிகம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَبَرَاءَةٌ مِنْ النِّفَاقِ (ترمذي)
எவர் நாற்பது நாட்கள் இமாம் ஜமாஅத்துடன் இமாமை தக்பீர் தஹ்ரீமாவில் பெற்றுக் கொண்டவராக தொடர்ந்து நாற்பது நாட்கள் தொழுவாரோ அவருக்கு இரண்டு விதமான விடுதலைகள் கிடைக்கும். 1. நரக விடுதலை 2. நயவஞ்சகத்தன்மையில் இருந்து விடுதலை
பொதுவாக தக்பீரின் சிறப்புகள்
உலகிலுள்ள முஸ்லிம்களின் நாவில் அதிகமாக உச்சரிக்கப்படும் திக்ர் “அல்லாஹு அக்பர்”
நாள்தோறும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கில் சர்வதேச அளவில் சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 13 கோடியே 50 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்” எனும் வார்த்தை ஒலிக்கிறது. (ஒரு பாங்கில் 6 முறை, ஒரு நாளில் சொல்லப்படும் ஐந்து முறை பாங்குகளிலும் சேர்த்து 30 முறை)அதே போன்று தொழுகையை நிறைவேற்ற சொல்லப்படும் இகாமத்தில் (ஹனஃபி மத்ஹபின் படி)13 கோடியே 50 லட்சம் முறையும், இதர 3
மத்ஹப்களின் படி 9 கோடியே 40 லட்சம் முறையும் “அல்லாஹு அக்பர் எனும் வார்த்தை ஒலிக்திறது.
ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 6 பாங்குகள் சொல்லப்படுகின்றது. அதன்படி சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 16 கோடியே 20 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்” எனும் வார்த்தை ஒலிக்கிறது.
நாள்தோறும் தவறாமல் ஐந்து நேரம் தொழும் பாக்கியம் பெற்ற முஸ்லிம் ஒருவர் தனது ஐந்து நேரத் தொழுகையிலும் 94 முறை “அல்லாஹு அக்பர்” என முழங்குகின்றார். ஸுப்ஹ் தொழுகையில் 11 தடவையும், ளுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளில் முறையே 22 தடவையும் (66) மக்ரிப் தொழுகையில் 17 தடவையும் அல்லாஹு அக்பர் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு பாங்கிற்கு பதில் சொல்கிற பழக்கம் இருக்கின்ற ஒரு முஸ்லிம் நாள்தோறும் அல்லாஹு அக்பர் எனும் தக்பீரை 30 முறை கூறுகின்றார்.தொழுகையும் பாங்கிற்கு பதில் சொல்கிற பேணுதலும் உள்ள ஒரு முஸ்லிம் நாள்தோறும் 124 முறை அல்லாஹு அக்பர் எனும் சங்க நாதத்தை கேட்கவும், உச்சரிக்கவும் செய்கின்றார்.
உலகில் அதிக முறை உச்சரிக்கப்படும் சிறப்பை அல்லாஹ் இந்த “தக்பீரைத்” தவிர வேறெந்த வார்த்தைக்கும் வழங்கவில்லை.
“அல்லாஹு அக்பர்” எனும் தக்பீரின் தாத்பரியம்
அல்லாஹு அக்பர் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போது அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் வேறு யாரும் எனக்குப் பெரிதல்ல என்ற சிந்தனை நமக்கு வர வேண்டும். ஹனஃபி மத்ஹபின் படி தக்பீர் தஹ்ரீமாவின் போதும் ஷாஃபி மத்ஹபின் படி ஒவ்வொரு முறை ருகூவு செய்யும்போதும் ருகூவில் இருந்து நிமிரும்போதும் இந்த தக்பீரை சொல்லும்போது கைகளைத் தூக்குவதின் தாத்பரியம் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை என் முதுகுக்குப் பின்னால் நான் ஆக்கி விட்டேன். அல்லாஹ்வை மட்டுமே எனக்கு முன் ஆக்கிக் கொண்டேன் என்பதாகும்.
கடைசி காலத்தில் “அல்லாஹு அக்பர்” எனும் தக்பீர் மூலம் கிடைக்கும் மாபெரும் வெற்றி
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ (مسلم)
ஒருமுறைநபி(ஸல்)அவர்கள்,"ஒரு பகுதி கரையிலும் மற்றொரு பகுதி கடலிலும் அமைந்துள்ள ஒரு நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''என்று கேட்டார்கள். மக்கள்,"ஆம் என்று பதில் அளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காதவரை யுக முடிவு நாள் இறுதிநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிடமாட்டார்கள்; அம்பெய்யமாட்டார்கள் அவர்கள்"லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றேகூறுவார்கள். உடன் அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் இரண்டாவது முறை தக்பீர் கூறுவார்கள். அதன் மறுபகுதி வீழ்ந்து விடும் பிறகு அவர்கள் மூன்றாவது முறைதக்பீர் கூறுவார்கள்.உடனே அவர்களுக்குவழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில்"தஜ்ஜால் புறப்பட்டு விட்டான் என்று கூறுவார் உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு(தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.
மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் பின்வருமாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157
கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.
இந்தஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நகரம் என்பது குஸ்ததீனியா கான்ஸ்டாண்டி நோபிள் என்றழைக்கப்பட்டு வந்த இஸ்தான்பூல்
(துருக்கியின் தலை நகரம்) நகரத்தையே குறிக்கும் என ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறுகின்றார்கள்
மேற்படி ஹதீஸின் மூலம் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையின் முக்கியத்துவத்த்தை உணர்த்துவதற்காக மேற்படி ஹதீஸ் கூறப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு படிப்பினை என்னவென்றால் இன்றைய சூழ்நிலையில் ஈமானை மட்டுமே மனதில் உறுதியாக தாங்கிய படி மற்ற அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இஸ்ரேலிய யூத விரோதிகளால் தடுத்து நிறுத்தப் படுகின்றன. பாலஸ்தீன மக்களுக்கு அல்லாஹ் இறுதியில் எப்படியும் வெற்றியைத் தருவான் என்பது உறுதியான விஷயமாக இருந்தாலும் இப்போதைக்கு அவர்கள் படும் துன்பங்களைக் கண்டு ஒவ்வொரு முஃமினின் உள்ளமும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் உதவி சீக்கிரமாக அவர்களுக்கு வராதா என்ற ஏக்கமும் கவலையும் ஒவ்வொரு முஃமினின் உள்ளத்திலும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே அந்தக் கவலையை நெஞ்சில் தாங்கியவர்களாக நாம் ஒவ்வொரு நேரத்திலும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
சிரியாவில் ஏற்படும் குழப்பங்கள், சண்டைகள் அனைத்து ஊர்களையும் பாதிக்கும்
عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلاَ خَيْرَ فِيكُمْ.. (ترمذي) باب مَا جَاءَ فِى الشَّامِ- كتاب الفتن (صحيح ابن حبان) باب ذكر الإخبار على أن الفساد إذا عم في الشام يعم ذلك في سائر المدن -(فَلاَ خَيْرَ فِيكُمْ أي للقعود فيها أو التوجه إليها)
சிரியாவிலும், ஈராக்கிலும், எகிப்திலும் தற்போது என்ன நடைபெறுகிறதோ அதைப்பற்றி அன்றே முன்னறிவிப்புச் செய்த நபி ஸல்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَعَتْ الْعِرَاقُ دِرْهَمَهَا وَقَفِيزَهَا وَمَنَعَتْ الشَّأْمُ مُدْيَهَا وَدِينَارَهَا وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ9 وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ شَهِدَ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ (مسلم) باب لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى–كتاب الفتن
معناه أن العجم والروم يستولون على البلاد فى آخر الزمان فيمنعون حصول ذلك للمسلمين (شرح النووي
பொருள்- இராக் அதன் அளவையான கஃபீஜையும், அதன் நாணயமான திர்ஹத்தையும் தர மறுக்கும். சிரியா அதன் அளவையான முத்யையும், அதன் நாணயமான தீனாரையும் தர மறுக்கும். எகிப்து அதன் அளவையான இர்தப்பையும், அதன் நாணயமான தீனாரையும் தர மறுக்கும். அதாவது இராக், சிரியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் மீது கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி விடும். முஸ்லிம்களுக்கு போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களையும் நிதியையும் சேர விடாமல் தடுப்பார்கள்
عَنْ أَبِي نَضْرَةَ قَالَ كُنَّا عِنْدَ جَابِرِ فَقَالَ يُوشِكُ أَهْلُ الْعِرَاقِ أَنْ لَا يُجْبَى إِلَيْهِمْ قَفِيزٌ وَلَا دِرْهَمٌ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الْعَجَمِ يَمْنَعُونَ ذَاكَ ثُمَّ قَالَ يُوشِكُ أَهْلُ الشَّأْمِ أَنْ لَا يُجْبَى إِلَيْهِمْ دِينَارٌ وَلَا مُدْيٌ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الرُّومِ ثُمَّ سَكَتَ هُنَيَّةً ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَلِيفَةٌ يَحْثِي الْمَالَ حَثْيًا لَا يَعُدُّهُ عَدَدًا (مسلم)5586 باب لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ - كِتَاب الْفِتَنِ
கலீஃபா என்பது மஹ்தீ அலை அவர்களாகும். முஸ்லிம்களுக்கு பெரும் சோதனைகள் ஏற்படும்போது இவர்கள் பிறப்பார்கள்
எங்கோ இருக்கும் முகம் தெரியாத முஸ்லிம்களுக்காக துஆ செய்வதில் சிறப்பு உண்டு.
عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ (مسلم) كتاب الذكر والدعاء والتوبة
முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் அதிகரிக்கும்போது தொழுகைக்கு உள்ளேயும் துஆ செய்யலாம். அது குனூத்தே நாஜிலா எனப்படும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لَحْيَانَ فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ فَأَمَدَّهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنْ الْأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمْ الْقُرَّاءَ يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ (بخاري) بَاب الْعَوْنِ بِالْمَدَدِ-كتاب الجهاد
மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது. அதேபோல் முந்திய ஹதீஸில் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வர விடாமல் தடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக அவர்களை விடுதலை செய்யப்படும் வரை இவ்வாறு துஆ செய்தார்கள்
துஆ கேட்பதில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து துஆச் செய்ய வேண்டும்
இஸ்லாமிய எதிரிகளுக்கு அல்லாஹ் உடனடியாக ஏதேனும் தண்டனையை வழங்கி உலக மக்களுக்கு பாடம் கற்பிக்க மாட்டானா என்று ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளமும் துடித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் உதவி தாமதமாகவும் வரும்
ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா அலைஹிஸ்ஸலாம் செய்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டாலும் 40 வருடங்களுக்குப் பின்பு தான் அவனை அழித்தான்
وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (89يونس)
قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة
எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும் சிரியவை முற்றிலுமாக அழிக்க முடியாது என்ற முன்னறிவிப்பு
நபிமொழிகளில், வரலாறுகளில் ஷாம் எனப்படுவது இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். ஷாமுக்காக நபி ஸல் அவர்களின் பிரத்தியேக துஆ உள்ளது
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضقَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنْ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُوبَى لِلشَّامِ فَقُلْنَا لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا (ترمذي) بَاب فِي فَضْلِ الشَّامِ وَالْيَمَنِ- كِتَاب الْمَنَاقِبِ( باسطة أجنحتها عليها) أي على بقعة الشام وأهلها بالمحافظة عن الكفر وقال المناوي بَاسِطَةٌ أَجْنِحَتَهَا أي تحفها وتحولها بإنزال البركة ودفع المهالك والمؤذيات
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தியத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு சாரார் ஷாமில் இருப்பார்கள்
عن مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ )كتاب التوحيد
உலகம் முழிவதையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை இரண்டு முஸ்லிம்களுக்கு வழங்கியது போன்று இரண்டு காஃபிர்களுக்கும் அல்லாஹ் வழங்கினான்
قَالَ مُجَاهِد : وَمَلَكَ الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة : مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ سُلَيْمَان بْن دَاوُد وَذُو الْقَرْنَيْنِ وَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه أَعْلَم
முஸ்லிம்களின் மாபெரும் எதிரிகளாக இருந்தவர்களுக்கு நீண்ட கால ஆட்சியை அல்லாஹ் தந்தது சோதிப்பதற்குத் தான்
أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آَتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ..(البقرة258) هَذَاالَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ وَهُوَ مَلِك بَابِل نُمْرُود بْن كَنْعَان بْن كوش بْن سَام بْن نُوح وَيُقَال : نُمْرُود بْن فالخ بْن عَابِر بْن شالخ بْن أرفخشذ بْن سَام بْن نُوح وَمَا حَمَلَهُ عَلَى هَذَا الطُّغْيَان وَالْكُفْر الْغَلِيظ وَالْمُعَانَدَة الشَّدِيدَة إِلَّا تَجَبُّره وَطُول مُدَّته فِي الْمُلْك وَذَلِكَ أَنَّهُ يُقَال إِنَّهُ مَكَثَ أَرْبَعمِائَةِ سَنَة فِي مُلْكه وَلِهَذَا قَال" أَنْ أَتَاهُ اللَّهُ الْمُلْكَ"(تفسير ابن كثير)
அநியாயக்காரனுக்கு அல்லாஹ் நிறைய அவகாசம் தருவான். கடைசியில் தண்டிக்க ஆரம்பித்தால்
அந்த தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்