வியாழன், 31 ஜூலை, 2025

பாடப் புத்தகங்களில் மறைக்கப் படும் வரலாறுகள்

   

01-08-2025 بسم الله الرحمن الرحيم  

பாடப் புத்தகங்களில் 

மறைக்கப் படும் வரலாறுகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்குமான பூர்வீகமான தொடர்பு என்ற தலைப்பிலும் இதைப் பேசலாம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6) الحجرات

 எந்த சமூகம் தன்னுடைய முன்னோர்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து விடுமோ அல்லது எந்த சமூகத்தின் வரலாறுகள் மறக்கடிக்கப் பட்டு விடுமோ அந்த சமூகம் தானாக அழிந்து விடும் என்று சொல்வார்கள். 

   பாசிச ஆட்சியாளர்கள்  முஸ்லிம்களை எப்படியேனும் அழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பல விதமான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களை நினைவு கூரும் வகையில் ஊரின் பெயர்கள் வைக்கப்பட்டதோ அதையெல்லாம் மாற்றி வருகிறார்கள். உதாரணமாக மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் என்ற ஊர் ஈஸ்வர்பூர் என்று அங்குள்ள இந்துத்துவ அமைப்பின் வற்புறுத்தல் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் நாடு முழுவதும் நிறைய ஊர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் திரைப்படங்கள் மூலமாகவும் மீடியாக்கள் மூலமாகவும் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகங்கள் மூலமாகவும் முஸ்லிம்கள் கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். N.C.E.R.T. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள C.B.S.E. பள்ளிக் கூடங்களுக்கான 8, 11, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பதாக உள்ளது. இதுபற்றி மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது

  எட்டாம் வகுப்பு பாடநூலில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தை இந்து மத ஆலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட காலங்களாகவும் முகலாய ஆட்சியாளர்களை காட்டுமிராண்டிகளாகவும் வன்முறையாளர்களாகவும் காட்டப்படுகிறது. 11-ம் வகுப்பு பாடநூலில் குஜராத் படுகொலை பற்றிய பாடம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பாடநூலில் முகலாய அரசுகளைப் பற்றிய 29 பக்கங்கள் கொண்ட 9-வது அத்தியாயம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சே பற்றிய விபரமும் நீக்கப்பட்டுள்ளது. 

1998 ல் பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன்  ICHR எனப்படும்  இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் சுமித், K.N. பணிக்கர் ஆகியோர் தயார் செய்திருந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவண ஆய்வுத் திட்டத்தை முடக்கினார்கள். உண்மையான வரலாறுகளை ஆய்வு செய்யும்  நடுநிலையான வரலாற்று  ஆய்வாளர்களை நீக்கி விட்டு பாசிச சிந்தனை கொண்டவர்களை வரலாற்று ஆய்வாளர்களாகவும்  நியமித்தார்கள். அன்று முதல் இன்று வரை பாடப் புத்தகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் இடம் பெற்று வருகிறது. எனவே இதைப் பற்றி முடிந்தவரை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டியது  நமது கடமையாகும்.                                                                                                                            

  நம்முடைய முன்னோர்கள் எப்படியெல்லாம் முன்னுதாரணமாக வாழ்ந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தால் பின்னுள்ள சமுதாயத்தில் எழுச்சி ஏற்படும். அதனால் அல்லாஹ் குர்ஆனில் முன்னோர்களின் வரலாறுகளை நிறைய கூறியுள்ளான்

. اهدنا الصراط المستقيم- صراط الذين انعمت عليهم

 நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் நேர்வழியைக் காட்டு என்று அல்ஹம்து சூராவில் கேட்கிறோம். அப்படியானால் முன்னோர்களின் வரலாற்றை அறிய வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள 114 சூராக்களில் 22 சூராக்கள் கடந்த கால வரலாறுகளுடன் தொடர்புடைய சூராக்களாகும்.  குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி கடந்த கால வரலாறுகளைக் கூறும் வசனங்களாகும். அதனடிப்படையில் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 131 தடவை, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் 47 தடவை, ஃபிர்அவனின் பெயர் 74 தடவை, மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பெயர் 34  தடவையும் கூறப்பட்டுள்ளது. இதுவெல்லாம் வரலாறுகள் அறிவது முக்கியம் என்பதை உணர்த்துகிறது. 

முஸ்லிம்களின் வரலாறுகளை மக்களுக்குத் தெரிய வைப்பதற்காகவே  இப்னு பதூதா என்ற 

வரலாற்று ஆசிரியர் உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்தார்.

வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل -  قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்தது. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்த து. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது.அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலை அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது              நூல் – துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ் பக்கம் 57

வரலாறுகள் மறக்கடிக்கப்பட்ட சமூகம்  விரைவில் அழிந்து விடும். ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிப்பதற்கு வரலாறுகளை மாற்றி எழுதும் சதித் திட்டம் தான் அரங்கேற்றப்பட்டது

 கி.பி.712-இல் இருந்து கி.பி.1492 வரை சுமார் 780 ஆண்டுகள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி நீடித்திருந்தது. எப்படி நம் இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்களோ அதுபோல் ஸ்பெயினில் முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன் பின்பு முஸ்லிம்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வகுத்த திட்டம் ஓரு ஆண்டுத் திட்டமோ,ஐந்தாண்டுத் திட்டமோ அல்ல. மாறாக 120 ஆண்டுத் திட்டம். இறுதியில் 1612-ல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். முதலில் முஸ்லிம்களின் கடைசி பகுதியான கிரனடா விழுந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு பலர் மொராக்கோ போன்ற அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து போய் விட்டனர். அவ்வாறு குடி பெயர்ந்து போனவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு போய் சேர்ந்து விடவில்லை. அதில் சிலர் போகும் வழியிலேயே கொலை செய்யப்பட்டனர். ஸ்பெயினிலேயே தங்கி விட்ட முஸ்லிம்களை வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்கள், ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள் என்றஎல்லாம் வரலாறுகளை மாற்றி எழுதி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மீது பாய்ச்சினார்கள். அப்படியிருந்தும் அந்த முஸ்லிம்கள் நம் தாய் நாட்டிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த மன்னன்  கிறிஸ்தவ மன்னன் பெர்டினன்ட் ஒருஅறிக்கை வெளியிட்டார். எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. பாதுகாப்பு உண்டு என்பதே அந்த அறிவிப்பாகும். இந்த உறுதிமொழியை பல முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால் அந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே ஆங்காங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்று முஸ்லிம்களை அழித்தது. 

மேலும் ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்ட அங்குள்ள அரசு முஸ்லிம்களை அரசுப்பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. மேலும் முஸ்லிம்களின் மொழியான அரபுமொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றிலும்அகற்றப் பட்டது. அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாறு திரிக்கப்பட்டு அவர்கள் கொடுமையாளர்கள் எள்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் இருண்ட காலம் என்று இட்டுக்கட்டப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினரால் சூறையாடப்பட்டன. இதற்கு அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று காரணம் கூறப்பட்டன. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிய பாமர மக்கள் முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என முதல் சட்டம் வந்தது. பின்பு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணம் செல்லாது அறிவிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை இரகசியமாக வீட்டுக்குள் செய்து கொள்வார்கள். காலப்போக்கில் இதை அறிந்த அதிகாரிகள் அந்த திருமணங்களை கண்டு பிடித்து அதை செய்தவர்களை தண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து அண்டை நாடுகளில் குடியேறினர். இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டு கி.பி.1612     (தகவல்: தலித் வாய்ஸ் ஆசிரியர்Dr. ராஜசேகர் எழுதிய நூல்)

(அல்லாஹ்வின் கிருபையால் இன்று ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம்)

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உள்ள தொடர்பு  பூர்வீகமானது 

ஆனால் அதை பாசிச வாதிகள் மறைக்கப் பார்க்கிறார்கள் 

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...  

விளக்கம்- அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த இலங்கையில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கினார்கள் என்றால் இன்று அது இந்தியாவில் இல்லையே பிறகு எப்படி நாம் அதைப் பற்றிப் பெருமையாகப் பேச முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியது வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் இந்தியாவில் தான் உள்ளன. உதாரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள  ராமர் பாலம்  என்பது இன்று வரை ஆதம் பாலம் என்றே இந்திய வரை படங்களில் உள்ளது. சேது சமுத்திரத் திட்டம், சேதுபதி மன்னர்கள் என்றெல்லாம் கூறும்போது அந்த சேது என்பது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஷீத் அலைஹிஸ்ஸலாம் என்பதிலிருந்து மருவி வந்ததாகும். ஹாபீல், காபீல் உடைய அடக்கஸ்தலம்  இராமேஸ்வரத்தில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். 

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

நபி ஆதம் அலை அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم –

 وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل – 

என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.           

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.            

என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.    

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி  பிரபல எழுத்தாளர்...

1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக  உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945  பேர் முஸ்லிம்கள்.

பாடப் புத்தகங்களில் மொகலாய  மன்னர்களைப் பற்றிய பொய்யான செய்திகளை முஸ்லிம்களில் சிலர் கூட நம்புகிறார்கள்

அவுரங்கசீப் ரஹ் அவர்களைப் பற்றி பல பொய்யான வரலாறுகள் பாடப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி செய்து கொடுத்தார் 

படிப்பினை- சிவாஜியின் நேர்ச்சை விஷயத்தில் அவுரங்கசீப் அவர்களுக்கு அறவே உடன்பாடு இல்லா விட்டாலும் தன்னுடைய கொள்கையை மற்றொருவர் மீது திணிக்கவில்லை.

மொகலாய மன்னர்கள் கோவில்களை இடித்து  விட்டு பள்ளிவாசல்களை கட்டியதாக பொய்யான வரலாறு

பாபர், அவுரங்கசீப் போன்றவர்கள் மன்னர்கள் என்ற அடிப்படையில் கோவில்கள் கட்ட அரசு சார்பில் மானியம் வழங்கிய வரலாறுகள் எவ்வளவோ உள்ளன. எந்த கோவிலையும் இடித்த வரலாறு இல்லை. கோயில்களை மஸ்ஜித்களாக ஆக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மொகலாய மன்னர்களுக்கு இருந்திருந்தால் இந்துக்கள் நிறைந்த இந்த நாட்டில் 800 வருடங்கள் அவர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது. ஆனால் அத்தகைய மொகலாய மன்னர்களைப் பற்றி கோவில்களை இடித்தார்கள் என்றஎல்லாம் தவறான வரலாறுகள்  மாணவர்களின் பாட புத்தக்கங்களில் திணிக்கபட்டுள்ளன.                         

  பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார். தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ஒரு இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக்கொண்டு கிடந்தாள். வசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.  இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. 

உலகையே உலுக்கிய குஜராத் கலவரம் பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் நீக்கப் பட்டுள்ளன

ஆஜ்தக் தொலைக்காட்சியும், Tehalkaவும் இணைந்து நடத்திய புலன்விசாரணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும், அகதமபாதில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும், அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது இவ்வளவு கொடூரமான சம்பவத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நீக்கி விட்டார்கள். 

காலப் போக்கில் உண்மயான வரலாறுகள் மறைக்கப்பட்டு பொய்யான வரலாறுகள் பாடப் புத்தகங்களில் அதிகமாக இடம் பெறலாம். எனவே நம்முடைய வருங்கால சந்த திகளுக்கு மட்டுமாவது உண்மையான வரலாறுகளை அடிக்கடி சொல்ல வேண்டும்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6)سورة الحجرات

عن ابن عباس في هذه الآية قال: كان رسول الله صلى الله عليه وسلم بَعَثَ الوليد بن عقبة بن أبي مُعَيْط إلى بني المصطلق ليأخذ منهم الصدقات، وإنهم لما أتاهم الخبر فرحوا وخرجوا يتلقون رسولَ رسولِ الله صلى الله عليه وسلم، وأنه لما حُدِّثَ الوليد أنهم خرجوا يتلقونه، رجع الوليد إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن بني المصطلق قد منعوا الصدقة. فغضب رسول الله صلى الله عليه وسلم من ذلك غضبا شديدا، فبينا هو يحدث نفسه أن يغزوهم إذ أتاه الوفد فقالوا: يا رسول الله، إنا حُدِّثْنا أنَّ رسولك رجع من نصف الطريق، وإنا خشينا أن ما رده كتاب جاء منك لغضب غضبته علينا، وإنا نعوذ بالله من غضبه وغضب رسوله. وإن النبي صلى الله عليه وسلم استغشهم وهمّ بهم، فأنزل الله  عذرهم في الكتاب، فقال: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا } إلى آخر الآية (تفسير ابن كثير) 

பனூ முஸ்தலக் என்ற கூட்டத்தினரிடம் ஜகாத் வசூலிப்பதற்காக வலீத் என்பவரை நபி ஸல் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். வசூலகர் வருகிறார் என்று தெரிந்து தங்களுக்கான ஜகாத்தை அவர்கள் தயாராக வைத்திருந்தார்கள் ஆனால் அவர் அங்கு செல்லவேயில்லை. அவருக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள பகை காரணமாக அங்கு செல்லாமலேயே நபி ஸல் அவர்களிடம் வந்து நான் சென்று கேட்டேன் அவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்று பொய் சொன்னார். அதை நம்பி நபி ஸல் அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி விட்ட பிறகு அவர்களே நேரடியாக வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களில் தூதர் வருவார் என நாங்கள் பொறுமை காத்தோம். அவர் வராததால் நாங்களே கொண்டு வந்தோம் என்று கூறிய பின்பு தான் உண்மை புரிந்தது. இந்த வசனமும் அப்போது இறங்கியது.               

நம்மைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை ஒழிக்க நாம் செய்ய வேண்டியவை 

  பாசிச ஆட்சி இருக்கும் வரை தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஸ்பெயினைப் போன்று இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நேரமும் இந்த பாசிச ஆட்சி நீங்க அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். 1998 ல் பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன்  ICHR எனப்படும்  இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் சுமித், K.N. பணிக்கர் ஆகியோர் தயார் செய்திருந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவண ஆய்வுத் திட்டத்தை முடக்கினார்கள். உண்மையான வரலாறுகளை ஆய்வு செய்யும்  நடுநிலையான வரலாற்று  ஆய்வாளர்களை நீக்கி விட்டு பாசிச சிந்தனை கொண்டவர்களை வரலாற்று ஆய்வாளர்களாக  நியமித்தார்கள். அன்று முதல் இன்று வரை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் இடம் பெற்று வருகிறது. எனவே சட்ட ரீதியாக நமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதுடன் எந்த அளவுக்கு நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார்களோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய நல்ல கருத்துக்களை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம் வீட்டு வைபவங்களில் நமக்கு அருகிலுள்ள பிற சமய சகோதரர்களை அழைக்க வேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைப்பதில் பங்கெடுக்க வேண்டும். இதுவும் நபிகளார் காட்டித் தந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.                                 

  நமது மஹல்லா மஸ்ஜிதில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் பிற சமய சகோதரர்களை, குறிப்பாக மத குருமார்களையும் காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சமய நல்லிணக்க விழாக்கள் நடத்தி அவர்களை கண்ணியப் படுத்துவதுடன் அவர்களின் நாவினால் நம்முடைய இஸ்லாத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் குழந்தைகளுக்கு ஓதிப் பார்க்க வரும் பிற சமய சகோதரர்கள் அமருவதற்கு சிறந்த இட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்தால் ஸ்நாக்ஸ் ஏதேனும் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சென்னையில் ஒரு மஸ்ஜிதில் இவ்வாறு தொடர்ந்து செய்ததன் பலனாக இஸ்லாம் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டு சிலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

நமது வாகனங்களில் மாற்றார்களின் மனதை ஈர்க்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்ல நபிமொழிகளை எழுதி ஒட்ட வேண்டும்.மருத்துவமனைகளுக்கு ஒரு குழுவாகச் சென்று மத பாகுபாடு பார்க்காமல் அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கித் தர வேண்டும். கிறிஸ்தவ மதம் பரவியது இப்படித்தான். 

 

 மாற்றார்களுடன் வியாபாரம் செய்யும்போது நம்பிக்கை, நாணயம், குறைந்த லாபம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இஸ்லாம் இவ்வாறு தான் பரவியது.எல்லாவற்றும் மேலாக அனைத்து விஷயங்களிலும் நம்மிடம் இறையச்சம் மேலோங்க வேண்டும். நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக மாறி விட்டால் வெகு விரைவில் பாசிச ஆட்சியை அல்லாஹ் இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிவது நிச்சயம். 

மஹல்லா தோறும் முஸ்லிம் பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும் 

 முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த  வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தங்களுடைய தொழில் தங்களுடைய குடும்பம் என்ற சுயநலத்துடன் சமுதாய அக்கறையில்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள்.  

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)  الرعد

நம்மைப் பற்றிய தவறான சிந்தனைகளை விஷமிகள் விதைக்கக்கூடாது என்பதற்காக 

முன் கூட்டியே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நபி ஸல்  அவர்களின்  சுன்னத்

عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ بَابِ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا  (بخاري 3101

 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்” எனக் கூறினார்கள்.அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக் கும் பெரிய விஷயமாகப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.


வியாழன், 24 ஜூலை, 2025

மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்

 25-07-2025 بسم الله الرحمن الرحيم  

கியாமத் நெருக்கத்தில்

மஹ்தீ (அலை) அவர்களின் வருகை

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

  கியாமத் நாளின் பல்வேறு அடையாளங்களை நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பும் ஒன்றாகும். இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளங்கள் தோன்றும் போது தான் வருவார்கள் என பல்வேறு ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் இன்று அவரவர் தன்னை மஹ்தீ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த தலைப்பின் மூலம் கியாமத் நாளின் அடையாளங்களைப் பற்றியும் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையைப் பற்றியும்  நபி ஸல் அவர்களுக்குப் பிறகு வேறு இறைத்தூதர் வர மாட்டார்கள் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். 

சிறிய அடையாளங்கள் தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரிய அடையாளங்கள் இன்னும் வரவில்லை

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள் நிகழ ஆரம்பிக்கும். எனவே, மஹ்தி (அலை) அவர்களின் வருகை சிறிய, பெரிய அடையாளங்களை இணைக்கும் ஓர் பாலமாக அமையப் போகும் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். 

தற்போது நடைபெறும் சிறிய அடையாளங்களில் சில....

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள், பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகுதல், விபச்சாரம், மதுப்பழக்கம் பெருகுதல், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு, காலம் சுருங்குதல், கொலைகள் பெருகுதல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்து பெருமை பேசுதல், நெருக்கமான கடை வீதிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், உயிரற்ற பொருட்கள் பேசுதல், தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றல், முந்தைய சமுதாயத்தை பின்பற்றல் என்பனவற்றை நடைபெறும் நிகழ்வுகளாகக் குறிப்பிடலாம்.

وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي (ترمذي 

 எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.

 தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், இன்றும் கூட சிலை வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வதைக் காணலாம்.குழந்தை இல்லாத முஸ்லிம் பெண்களில் சிலர் தமக்கு குழந்தை வேண்டி, கோவில்களில் தொட்டில் கட்டி விடும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். கோவில் விழாக்களில் முழு அளவில் பங்கெடுக்கும் சில முஸ்லிம்களும் உண்டு. பொங்கல் கொண்டாடும் முஸ்லிம்களும் உண்டு. இவை மறுமை நாளின் அடையாளமாகும்.

அறியாமை பெருகும்

عَنْ أَنَسِ  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا (بخاري

عَنْ أَنَسِ رض  قَالَ  لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا  لَا يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَقِلَّ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ وَيَظْهَرَ الزِّنَا وَتَكْثُرَ النِّسَاءُ وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ(بخاري

கல்வி உயர்த்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் - புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.

 அநியாயமாக ஓர் உயிரைப் பறிக்கும் கொலைபாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்தக் காலம். இப்போதோ கொலை செய்வதற்கு என கூலிப் படைகள் உண்டு. கையை வெட்ட ஒரு கூலி, காலை எடுக்க ஒரு கூலி, உயிரைப்பறிக்க ஒரு கூலி என 'பேரம்' பேசி கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.

காலம் சுருங்கும்

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يتقارب الزمان، فتكون السنة كالشهر، ويكون الشهر كالجمعة، وتكون الجمعة كاليوم، ويكون اليوم كالساعة، وتكون الساعة كاحتراق السعفة، أو الخوصة (ابن حبان

காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

عن أَبي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعَمَلُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ (بخاري

 (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7061.

 காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்குப் பயணம் எனில் பலமாதம், பலவாரம், பல மணிநேரம் என செலவழித்து ஒட்டகை-குதிரை என பயணம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாத காலம் பணம் செய்து போய் சேர வேண்டிய காலத்தை, சிலமணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழிபோக்குவரத்து மூலம் காலத்தைச் சுருக்கி விட்டோம். செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்வற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குப் பின் அச்செய்தியை சேர்க்க படாதபாடு பட்ட மனித இனம், இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

குழப்பங்கள் பெருகும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي مَنْ تَشَرَّفَ لَهَا تَسْتَشْرِفْهُ فَمَنْ وَجَدَ مِنْهَا مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ (بخاري

  விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன்-அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7081.

மோசமான ஆட்சியாளர்கள் வருவார்கள்.

عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ اصْبِرُوا فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري

 ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்: சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல்-புஹாரி - 7068.

பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்

عَنْ أَنَسِ قَالَ : خَرَجْنَا مَعَهُ إِلَى الْحَرَمِ  فَحَضَرَتِ الصَّلاَةُ ، فَقَالَ : أَلاَ تَنْزِلُوا نُصَلِّي ؟ فَقُلْتُ : لَوْ تَقَدَمْتَ إِلَى هَذَا الْمَسْجِدِ ، فَقَالَ  أَيُّ مَسْجِدٍ ؟ قِيلَ : مَسْجِدُ بَنِي فُلاَنٍ ، فَفَزِعَ ، وَقَالَ : سَمِعْتُهُ يَقُولُ صلى الله عليه وسلم : يَأْتِي عَلَى أُمَّتِي زَمَانٌ يَتَبَاهَوْنَ بِالْمَسَاجِدِ ، وَلاَ يَعْمُرُونَهَا إِلاَّ قَلِيلاً.(مسند الجامع

     மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிப்பாளர் அனஸ் (ரலி) நூல் - நஸயீ.

 பள்ளிவாசல் தொழுவதற்காக அமைக்கபடுகின்ற ஒன்று. இறைவனை சிந்திக்க, இறைவனை வணங்க, அவனை நினைவு கூர பள்ளிவாசல் அவசியம் ஆகும். ஆனால் இன்று பள்ளிவாசல்களோ ஆடம்பர அடையாளங்களாக மாறி நிற்கின்றன.100 பேர் மட்டும் வாழும் பகுதிகளில் 10,000 பேர் நின்று தொழும் அளவுக்கு பள்ளிவாசல் அமைவதைக் காணலாம். சில ஊர்களில் பள்ளிவாசலை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் கொட்டிச் சீரழிப்பதைக் காணலாம். 'எங்களூர் பள்ளிவாசலே பெரும் பள்ளி' என்று பெருமை கொள்ள பள்ளிவாசல் கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுவும் 'மறுமை நாளின் சிறிய அடையாளங்களில் உள்ளதாகும் உள்ளது'

இது வரை நிகழாத சிறிய அடையாளங்கள்

  யூதர்களுடன் மாபெரும் யுத்தம், கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, அல்ஜஹ்ஜாஹ் எனும் பெயருடைய மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் கலீபா ஒருவரின் ஆட்சி, செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பெண்களின் எண்ணிக்கை பெருகுதல் பைத்துல் முகத்தஸ் வெற்றி ஆகியவை.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَحْسِرَ الْفُرَاتُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ يَقْتَتِلُ النَّاسُ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ وَيَقُولُ كُلُّ رَجُلٍ مِنْهُمْ لَعَلِّى أَكُونُ أَنَا الَّذِى أَنْجُو ».(مسلم)

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ. (بخاري

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடைபெறப் போகும் 

மாபெரும் யுத்தம் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157

கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.                                             

படிப்பினை- ஆரம்பத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் வெற்றியைத் தரவேண்டும் என்பது நியதி அல்ல


    மேற்படி யுத்தம் நடைபெறும் நேரம் மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்பட்டு விட்ட நேரமாகவும் இருக்கலாம். மஹ்தீ (அலை) அவர்கள் வெளிப்பட்டுவிட்டால் பெரிய அடையாளங்கள் நிகழப் போகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். “மஹ்தி” எனும் சொல்லின் பொருள் “வழிகாட்டப்பட்டவர் அல்லது வழிப்படுத்துபவர்” என்பதாகும். இது அவர்களின் பெயரல்ல. மாறாக, அவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். ரசூல் (ஸல்) அவர்கள், நான்கு கலிபாக்களையும் “மஹ்திய்யீன்” என ஓர் ஹதீஸில் கூறியிருக்கின்றார்கள். எனவே “மஹ்தி” என்பது வழிகாட்டப்பட்டவர் என்பதைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகும்.

عَنْ عَلِيٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ لَمْ يَبْقَ مِنْ الدَّهْرِ إِلَّا يَوْمٌ لَبَعَثَ اللَّهُ رَجُلًا مِنْ أَهْلِ بَيْتِي يَمْلَؤُهَا عَدْلًا كَمَا مُلِئَتْ جَوْرًا  (ابوداود

“இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான், அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராகும், போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் அவர் நிலை நிறுத்துவார்கள்” என கண்மணி நாயகம் (ஸல்) கூறிய ஹதீஸ்கள் திர்மீதி மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. எனவே மஹ்தி (அலை) என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படப் போகும் அவரின் உண்மையான பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஒரேயொரு நாள் எஞ்சியிருந்தாலும், அவருக்காக அந்த நாள் நீட்டப்படும் என்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் உணர்த்தப் படுகின்றது. அவரின் வருகை நிகழாமல் உலக அழிவு ஏற்படாது என்பது ஊர்ஜிதமாகின்றது. பெரிய பத்து அடையாளங்களும் அவரின் வருகை நிகழாமல் நிகழாது என்பதும் தெளிவாகின்றது.

சிறிய அடையாளங்கள் அனைத்தும் நிகழ்ந்த பிறகு அதன் கடைசியாக இமாம் மஹ்தீ அலை வருவார்கள்

இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள்

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كُنَّا عِنْدَ أُمِّ سَلَمَةَ فَتَذَاكَرْنَا الْمَهْدِيَّ فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمَهْدِيُّ مِنْ وَلَدِ فَاطِمَةَ  (ابن  ماجة)

عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ (مسلم) كتاب الفتن- 

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي(ترمذي

"என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்"

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنَ جَزْءٍ الزَّبِيدِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ نَاسٌ مِنْ الْمَشْرِقِ فَيُوَطِّئُونَ لِلْمَهْدِيِّ يَعْنِي سُلْطَانَهُ (ابن ماجة

மக்களுக்கு வாரி வாரி வழங்குபவர்களாக இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் இருப்பார்கள். சுமக்க முடியாத அளவுக்கு அவர்கள் வழங்கிய பொருட்களை ஒருவர் கொண்டு செல்வார். 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَشِينَا أَنْ يَكُونَ بَعْدَ نَبِيِّنَا حَدَثٌ فَسَأَلْنَا نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ فِي أُمَّتِي الْمَهْدِيَّ يَخْرُجُ يَعِيشُ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ تِسْعًا زَيْدٌ الشَّاكُّ قَالَ قُلْنَا وَمَا ذَاكَ قَالَ سِنِينَ قَالَ فَيَجِيءُ إِلَيْهِ رَجُلٌ فَيَقُولُ يَا مَهْدِيُّ أَعْطِنِي أَعْطِنِي قَالَ فَيَحْثِي لَهُ فِي ثَوْبِهِ مَا اسْتَطَاعَ أَنْ يَحْمِلَهُ (ترمذي

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَكُونُ فِي أُمَّتِي الْمَهْدِيُّ إِنْ قُصِرَ فَسَبْعٌ وَإِلَّا فَتِسْعٌ فَتَنْعَمُ فِيهِ أُمَّتِي نِعْمَةً لَمْ يَنْعَمُوا مِثْلَهَا قَطُّ تُؤْتَى أُكُلَهَا وَلَا تَدَّخِرُ مِنْهُمْ شَيْئًا وَالْمَالُ يَوْمَئِذٍ كُدُوسٌ فَيَقُومُ الرَّجُلُ فَيَقُولُ يَا مَهْدِيُّ أَعْطِنِي فَيَقُولُ خُذْ (ابن ماجة

இமாம் மஹ்தீ அலை அவர்கள் வந்து விட்டால் தவழ்ந்து வந்தேனும் அவர்களிடம் பைஅத் செய்யுங்கள்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمَّا رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ فَقَالَ إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلَا يُعْطَوْنَهُ فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ فَيُعْطَوْنَ مَا سَأَلُوا فَلَا يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَئُوهَا جَوْرًا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ (ابن ماجة

இமாம் மஹ்தீ அலை அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு அம்சம்

عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ (بخاري)  وهي وإن لم يكن فيها التصريح بلفظ المهدي إلا أنها تدل على صفات رجل صالح يأم المسلمين في ذلك الوقت. وقد جاءت الأحاديث في السنن والمسانيد وغيرها مفسرة لهذه الأحاديث التي في الصحيحين، ودالة على أن ذلك الرجل الصالح يسمى: محمد بن عبد الله ، ويقال له: المهدي ، (شرح ابي داود

عن جابر رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ فَيَقُولُ أَمِيرُهُمْ : تَعالَ صَلِّ لَنَا فَيَقُولُ لاَ إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أَمِيرٌ تَكْرِمَةَ الله لِهذِهِ الأُمَّةِ (فتح الكبير

கடைசி காலத்தில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கும்போது அது தொழுகை நேரமாக இருக்கும். அப்போது இமாம் மஹ்தீ அலை அவர்களும் இருப்பார்கள். அவர்கள் ஈஸா நபியைத் தொழ வைக்கச் சொல்லும்போது உங்களின் அமீரே உங்களுக்குத் தொழ வைக்கட்டும் என்று கூறுவார்கள். இதைப் பற்றி நபி ஸல் கூறும்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் பின்னால் நின்று தொழுக உங்களில் ஒருவர் இமாமாக நின்று தொழ வைப்பது எவ்வளவு பெரிய சிறப்பு என்று பெருமையுடன் கூறினார்கள். இதில் அப்போது தொழ வைப்பவர் யார் என்பது தெளிவாக இல்லா விட்டாலும் அவர்கள் இமாம் மஹ்தீ அலை அவர்கள் என சூசகமாக ஹதீஸ்கள் சுட்டிக் காட்டுகிறது.- அபூதாவூத் விளக்கவுரை                          

முஸ்லிம்கள் மீது அளவுக்கதிகமான அநீதங்கள் கட்டவிழ்த்து விடப்படும்போது மஹ்தீ அலை வருவார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ [ مصنف عبد الرزاق ]

முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்படும் அநியாயத்தின் காரணமாக முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் தான் அல்லாஹ் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்புவான். எந்த அளவுக்கு இந்த பூமி அநியாயத்தால் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தை அவர் நிலை நாட்டுவார். விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்களும் அவரைப் பொருந்திக் கொள்வார்கள். வானம் தன் பங்கை இந்த பூமியின் பொழியாமல் இருக்காது. பூமி தன் விளைச்சலை விளைவிக்காமல் இருக்காது. விவசாயம் பரக்கத்தாக இருக்கும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் இறந்த விட்ட தமது உறவினர்களை எண்ணி அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இவருடைய ஆட்சியின் நலவை அனுபவித்திருப்பார்களே என்று ஏங்குவார்கள். இவ்வாறு இமாம் மஹ்தீ அலை அவர்கள் ஏழு வருடங்களோ அல்லது எட்டு வருடங்களோ அல்லது ஒன்பது வருடங்களோ ஆட்சி செய்வார்கள்.                                                     

படிப்பினை- எப்படி இருந்தாலும் இமாம் மஹ்தீ அலை அவர்கள் வந்த பின்பு ஒன்பது, பத்து வருடங்களுக்குள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வந்து விடுவார்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்கு இன்னும் பல காலங்கள் உள்ளது என்பது உறுதியான விஷயமாகும்.

வியாழன், 17 ஜூலை, 2025

துஆ கேட்பதின் ஒழுங்கு முறைகள்

 18-07-2025

MUHARRAM- 22


بسم الله الرحمن الرحيم  

துஆ கேட்பதின் ஒழுங்கு முறைகள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


துஆ என்பது (இறைவனிடம் மட்டுமே செய்ய வேண்டிய) ஒரு வணக்கம். அதைச் செய்ய மறுத்து பெருமையடிப்பவர்களுக்கு நரகம்.

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ{وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (60غافر) } (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ-كتاب الدعوات

துஆவின் முக்கியத்துவம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنْ الدُّعَاءِ-عَنْ  انس رضي الله عنه  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ-عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ (ترمذي)

மனிதர்களிடம் கேட்டால் கோபப்படுவார்கள். அல்லாஹ்விடம்  கேட்கா விட்டால் அவன் கோபப்படுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர்கள் மீது அல்லாஹ் கோப ப் படுகிறான்

துஆ கேட்கும் முறை... 

அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்ற மன உறுதியோடு துஆ செய்ய வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ (ترمذي

அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்ற மன உறுதியோடு துஆ செய்யுங்கள். பொடு போக்கான சிந்தனையுடன் துஆக் கேட்பவரின் துஆவை அல்லாஹ் ஏற்க மாட்டான்

செய்யும் துஆ ஏற்கப்படுவதில் அவசரம் கூடாது

முஸ்லிம்களுககு சோதனையான இக்காலத்தில் நம்மில் பலர் அந்த சோதனைகள் நீங்குவதற்காக துஆச்  செய்கிறோம் ஆனால் அந்த துஆக்களில் பலன் உடனே கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் பலரின் மனதில் உள்ளது. ஒரு முஃமின் ஹலாலை உண்பவராக இருந்து அவர் செய்யும் துஆ ஆகுமாக்கப்பட்ட துஆவாக, உறவைத் துண்டிக்காத துஆவாக, நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவருடைய துஆவை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.                 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ قَالَ يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ (مسلم) كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ

மூஸா அலை, ஹாரூன் அலை இருவரின் துஆ ஏற்கப்பட்ட பிறகும் என்று 40 வருடங்கள் கடந்தே ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டான்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا..(يونس)قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة

துஆ ஏற்றுக் கொள்ளப்படுவது மூன்று வகை. 

சில நேரங்களில் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதை நாம் அறியாதவர்களாக இருப்போம்

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (احمد)

ஒரு முஃமினின் துஆ மூன்று வகையில் ஏதேனும் ஒரு வகையில் ஏற்கப்படும். 1.அவர் கேட்டதை அல்லாஹ் உடனே தந்து விடுவான். 2. அவர் கேட்டதை இப்போது அதற்குப் பகரமாக மறுமையில் மிகவும் சிறப்பாக தருவான். 3. அவர் கேட்டதைத் தராமல் அதற்குப் பகரமாக அவருக்கு ஏற்படவிருந்த சோதனையை விட்டும் அவரைப் பாதுகாப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அப்படியானால் நாங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கேட்கலாமா என தோழர்கள் கேட்க, நபி ஸல் அவர்கள் அல்லாஹ் கொடுப்பதில் மிகப் பெரியவன் என்றார்கள்.        

عن جَابِرِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:يَدْعُو اللهُ بِالْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُوقِفَهُ بَيْنَ يَدَيْهِ فَيَقُولُ: عَبْدِي إِنِّي أَمَرْتُكَ أَنْ تَدْعُوَنِي؟وَوَعَدْتُكَ أَنْ أَسْتَجِيبَ لَكَ، فَهَلْ كُنْتَ تَدْعُونِي؟ فَيَقُولُ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: أَمَا إِنَّكَ لَمْ تَدْعُنِي بِدَعْوَةٍ إِلَّا اسْتَجَبْتُ لَكَ أَلَيْسَ دَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَهُ عَنْكَ فَفَرَّجْتُهُ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي يَوْمَ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَ عَنْكَ فَلَمْ تَرَ فَرَجًا ؟قَالَ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُ لَكَ بِهَا فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا وَدَعَوْتَنِي فِي حَاجَةٍ أَقْضِيهَا لَكَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فَقَضَيْتُهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: فَإِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي حَاجَةٍ أَقْضِيهَا فَلَمْ تَرَ قَضَاءَهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُهَا لَكَ فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:فَلَا يَدَعُ اللهُ دَعْوَةً دَعَا بِهَا عَبْدُهُ الْمُؤْمِنُ إِلَّا بَيَّنَ لَهُ إِمَّا أَنْ يَكُونَ عَجَّلَ لَهُ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يَكُونَ ادَّخَرَ لَهُ فِي الْآخِرَةِ " قَالَ: " فَيَقُولُ الْمُؤْمِنُ فِي ذَلِكَ الْمَقَامِ: يَا لَيْتَهُ لَمْ يَكُنْ عُجِّلَ لَهُ شَيْءٌ مِنْ دُعَائِه (حاكم) (الترغيب) كتاب الذكر والدعاء

அல்லாஹ் ஒரு முஃமினை மறுமை நாளில் அழைத்து தனக்கு முன்னால் நிற்க வைத்துஎன் அடியானே என்னிடம் துஆச் செய்யும்படி ஏவியிருந்தேனே இன்னும் உனது துஆவுக்கு பதில் தருவதாகவும் கூறியிருந்தேனே துஆச் செய்தாயா என்று கேட்கும்போது ஆம் ரப்பே என்று அந்த அடியான் கூறுவான்.அதற்குஅல்லாஹ் நிச்சயமாக உன் துஆக்கள் அனைத்துக்கும் நான் பதிலளித்தேன். என்று கூறி விட்டு அடியானே இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமத்தை நான் நீக்கினேன் அல்லவா என்று கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே அந்த துஆவின் பலனை உடனே பெற்றேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமம் உனக்கு நீங்கியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நீக்கப்படாத அந்த சிரமத்திற்காக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது உன் தேவையை நிறைவேற்றச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த தேவை உனக்கு நிறைவேறியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நிறைவறாத அந்த தேவைக்கு பதிலாக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். இந்த அடியானைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அந்த அடியான் கேட்ட எல்லா துஆக்களும் இவ்வாறாக ஏற்கப்பட்டிருக்கும். சில துஆக்களுக்கு உடனே உலகத்திலும் சில துஆக்கள் ஏற்கப்பட்டதற்கு பகரமாக மறுமை நாளிலும் அது தரப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும். இறுதியாக அந்த அடியான் கூறுவான். நான் கேட்டும் உலகில் தரப்படாத துஆக்களுக்கு பதிலாக அல்லாஹ் இவ்வளவு இன்பங்கள் வைத்திருப்பது தெரியாமல் போய் விட்டதே நான் கேட்ட எந்த துஆவுக்கும் பதில் உலகில் தரப்படாமல் மறுமையில் தரப்பட்டிருக்க வேண்டுமே என்பான்.                                      

கருத்து- துஆவில் தான் கேட்ட கோரிக்கைகளுக்குப் பகரமாக அல்லாஹ் மறுமையில் வைத்துள்ள இன்பங்களைக் கண்டு தான் கேட்ட அனைத்து துஆக்களுக்கும் பிரதிபலன் உலகில் தரப்படாமல் மறுமையிலேயே கிடைத்திருக்க வேண்டுமே எனக் கருதுவான்

அல்லாஹ்விடம் அனைத்துத் தேவைகளையும் கேட்கலாம்

عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ الْمِلْحَ وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ (ترمذي)

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களில் தஹஜ்ஜத் நேரமும் ஒன்றாகும்

عَنِ ابْنِ مَسْعُودٍ،  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ: إِذَا كَانَ ثُلُثُ اللَّيْلِ الْبَاقِى يَهْبِطُ اللَّهُ، عَزَّ وَجَلَّ، إِلَى السَّمَاءِ الدُّنْيَا، ثُمَّ تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، ثُمَّ يَبْسُطُ يَدَهُ، فَيَقُولُ: هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى سُؤْلَهُ، فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ. (شعب الايمان)

அல்லாஹ்விடம் பிடிவாதமாக கேட்பது கூடும்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُلْ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ ارْحَمْنِي إِنْ شِئْتَ ارْزُقْنِي إِنْ شِئْتَ وَلْيَعْزِمْ مَسْأَلَتَهُ إِنَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ لَا مُكْرِهُ لَهُ (بخاري) باب لِيَعْزِمِ الْمَسْأَلَةَ ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ-كتاب الدعوات-وفي رواية لمسلم"لِيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمْ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لَا يَتَعَاظَمُهُ شَيْءٌ أَعْطَاهُ (مسلم) وَمَعْنَى قَوْله لِيُعَظِّم الرَّغْبَة أَيْ يُبَالِغ فِي ذَلِكَ بِتَكْرَارِ الدُّعَاء وَالْإِلْحَاح فِيهِ وَيَحْتَمِل أَنْ يُرَاد بِهِ الْأَمْر بِطَلَبِ الشَّيْء الْعَظِيم الْكَثِير وَيُؤَيِّدهُ مَا فِي آخِر هَذِهِ الرِّوَايَة " فَإِنَّ اللَّه لَا يَتَعَاظَمهُ شَيْء (فتح الباري)

உங்களில் எவரும் அல்லாஹ்வே  நீ விரும்பினால் என்னை மன்னித்து விடு என்று கேட்க வேண்டாம். நீ விரும்பினால் எனக்கு உணவு அளிப்பாயாக என்று கேட்க வேண்டாம். மாறாக அல்லாஹ்விடம் பிடிவாதமாக கேட்கட்டும். அல்லாஹ்விடம் அடம்பிடித்துக் கேட்பது தவறல்ல. மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ்விடம் கேட்கும் போது மிகப் பெரிய விஷயத்தை கேட்டாலும் தவறில்லை. (எல்லா மக்களுக்கும் ஹிதாயத்தை  தந்து விடு யாஅல்லாஹ் என்று கேட்பதைப் போல..) அல்லாஹ்வுக்கு எதுவும் பெரிதல்ல.

மனிதர்கள் அனைவரும் ஒரே மைதானத்தில் கூடி நின்று மனதில் உள்ளதையெல்லாம் கேட்டு, அல்லாஹ்வும் அவைகள் அனைத்தையும் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற அல்லாஹ்வின் கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும்

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

அல்லாஹ் பேசுவதாக நபி ஸல் கூறினார்கள் என்னுடைய அடியார்களே உங்களில் முதல் நபர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் இறையச்சத்தில் ஒரே மாதிரியான உள்ளம் கொண்டவர்களாக ஆகி விட்டாலும் அதாவது அனைவரும் இறையச்சம் டையவர்களாக ஆகி விட்டாலும் அதனால் என்னுடைய ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் ஏற்படப் போவதில்லை. உங்களில் முதல் நபர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் ஒரே மாதிரியான பாவியான உள்ளம் கொண்டவர்களாக ஆகி விட்டாலும் அதனால் என்னுடைய ஆட்சி அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டு விடுவதில்லை. அதேபோல்  உங்களில் முதல் நபர் முதல் கடைசி மனிதர் வரை ஒரே மைதானத்தில் ஒன்று கூடி நின்று என்னிடம் நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு நீங்கள் கேட்டதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் என்னுடைய கஜானா குறையாது. அப்படியே குறைந்தாலும் என்னுடைய கஜானாவை ஒட்டு மொத்த கடல் நீருடன் ஒப்பிட்டால் அந்த நீரில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அந்த ஊசியில் ஒட்டும் நீரின் அளவு மட்டுமே குறையும்.             

துஆ ஓதத் துவங்குவதற்கு முன்பும், துஆ ஓதிய பின்பும் ஹம்து, சலவாத் சொல்வது

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدْ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ (ترمذي) بَاب مَا جَاءَ فِي جَامِعِ الدَّعَوَاتِ-كتاب الدعوات-    

நபி ஸல் அவர்களின் சபையில் நாங்கள் அமர்ந்திருக்கும்போது ஒருவர் வந்து தொழுதார். பிறகு துஆக் கேட்டார் எடுத்தவுடன் எதுவும் ஓதாமல் யாஅல்லாஹ் என்னை மன்னித்து விடு என் மீது இரக்கம் காட்டு என்று துஆச் செய்ய ஆரம்பித்தார். அவரிடம் நபி ஸல் அவர்கள் தொழுகையாளியே நீங்கள் இனி தொழுதால் தொழுகை முடிந்து அமர்ந்தவுடன்  அல்லாஹ்வை உரிய முறையில் புகழ்ந்து விட்டு,  பிறகு என் மீது சலவாத் சொல்லி பிறகு துஆச் செய்யுங்கள் என்றார்கள். அதேபோல் மற்றொரு நபர் வந்து மேற்கூறப்பட்ட முறைப்படி துஆச் செய்தார் அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள் இவ்வாறு துஆச் செய்யுங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.  

عَنْ جَابِرِ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَجْعَلُونِي كَقَدَحِ الرَّاكِبِ، إِنَّ الرَّاكِبَ يَمْلَأُ قَدَحَهُ مَاءً ثُمَّ يَضَعُهُ، ثُمَّ يَأْخُذُ فِي مَعَالِيقِهِ حَتَّى إِذَا فَرَغَ جَاءَ إِلَى الْقَدَحِ، فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ شَرِبَ، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ تَوَضَّأَ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الْوُضُوءِ أَهْرَقَهُ ، وَلَكِنِ اجْعَلُونِي فِي أَوَّلِ الدُّعَاءِ وَفِي آخِرِ الدُّعَاءِ (شعب الايمان)

கருத்து- ஒரு பயணி தான் கொண்டு வந்த தண்ணீரில் தன் தேவைகளையெல்லாம் நிறைவு செய்த பின் மிச்சமிருக்கும் கடைசி தண்ணீரை இது வேண்டாம். தேவையில்லை என்று கீழே ஊற்றுவது போல் துஆவின் கடைசியில் சலவாத் தேவையில்லை என்று நினைத்து விடாதீர்கள்

கைகளை ஏந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது அதாவது உள்ளங்கை வானத்தை நோக்கிய விதமாக..

عَنْ مَالِكِ بْنِ يَسَارٍ  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَأَلْتُمْ اللَّهَ فَاسْأَلُوهُ بِبُطُونِ أَكُفِّكُمْ وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا (ابوداود)

துஆ ஓதி முடித்தவுடன் கைகளை முகத்தில் தடவுவதும், அதன் தாத்பரியமும்

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي رَفْعِ الْأَيْدِي عِنْدَ الدُّعَاءِ- كِتَاب الدَّعَوَاتِ -قال ابن الملك وذلك (أي مسح الوجه بعد الدعاء) على سبيل التفاؤل فكأن كفيه قد ملئتا من البركات السماوية والأنوار الإلهية وقيل وكأن المناسبة أنه تعالى لما كان لا يردهما صفرا فكأن الرحمة أصابتهما فناسب إفاضة ذلك على الوجه الذي هو أشرف الأعضاء وأحقها بالتكريم (تحفة الاحوذي)مرقاة المفاتيح شرح مشكاة)

மிர்காத் எனும் நூலில் கூறப்பட்டுள்ளதாவது துஆக் கேட்டவுடன் அல்லாஹ் அவரது கைகளில் தனது அருளைக் கொட்டுவது போலவும் அதை அவர் அப்படியே அள்ளியெடுத்து தன் முகத்தில் தடவிக் கொள்வது போலவும் இது அமைந்துள்ளது. இது ஒன்றும் தவறல்ல. ஏனெனில் நபி ஸல் மற்றொரு ஹதீஸிஸ் கூறும்போது                                     

عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا (ابوداود)

நிச்சயமாக அல்லாஹ்  கண்ணியமானவன். தன்னிடம் கையேந்தி விட்ட அடியானின் கையை வெறுங்கையுடன் திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப் படுகிறான் என்று கூறினார்கள். அப்படியானால் கைகளில் அருள் நிரப்பப் படுகிறது என்று ஹதீஸிலேயே வந்துள்ளதால் அந்தக் கைகளை எடுத்து முகத்தில் தடவுவதில் தவறில்லை. 

வஞ்சிக்கப்பட்டவனின் துஆ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (بخاري)بَاب الِاتِّقَاءِ وَالْحَذَرِ مِنْ دَعْوَةِ الْمَظْلُومِ- المظالم -عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لَا شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ (ابن ماجة-كتاب الدعاء)

தந்தையின் துஆ உடனே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் எந்த தந்தையும் மகனை சபித்து துஆ செய்யக் கூடாது

عن جابر رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ 

لَا تُوَافِقُوا مِنْ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ (مسلم) بَاب حَدِيثِ جَابِرٍ الطَّوِيلِ-كتاب الزهد

எங்கோ இருக்கும் முகம் தெரியாத முஃமினுக்காக துஆ செய்வதும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ حِينَ يَسْتَنْصِرُ، وَدَعْوَةُ الْحَاجِّ حِينَ يَصْدُرُ ، وَدَعْوَةُ الْمُجَاهِدِ حِينَ يَقْفِلُ، وَدَعْوَةُ الْمَرِيضِ حِينَ يَبْرَأَ ، وَدَعْوَةُ الْأَخِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ - ثُمَّ قَالَ: - وَأَسْرَعُ هَذِهِ الدَّعَوَاتِ إِجَابَةً، دَعْوَةُ الْأَخِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ (شعب الايمان) عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنها قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ (مسلم) بَاب فَضْلِ الدُّعَاءِ لِلْمُسْلِمِينَ بِظَهْرِ الْغَيْبِ-كتاب الذكر

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் உங்களுடைய துஆவில் எங்களை மறக்காதீர்கள் என்று கூறியது

عَنْ عُمَرَ رضي الله عنهما أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعُمْرَةِ فَأَذِنَ لَهُ وَقَالَ لَهُ يَا أُخَيَّ أَشْرِكْنَا فِي شَيْءٍ مِنْ دُعَائِكَ وَلَا تَنْسَنَا(ابن ماجة

அல்லாஹ்விடம் அனைத்துத் தேவைகளையும் கேட்கலாம்

عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ الْمِلْحَ وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ (ترمذي)

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களில் தஹஜ்ஜத் நேரமும் ஒன்றாகும்

عَنِ ابْنِ مَسْعُودٍ،  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ: إِذَا كَانَ ثُلُثُ اللَّيْلِ الْبَاقِى يَهْبِطُ اللَّهُ، عَزَّ وَجَلَّ، إِلَى السَّمَاءِ الدُّنْيَا، ثُمَّ تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، ثُمَّ يَبْسُطُ يَدَهُ، فَيَقُولُ: هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى سُؤْلَهُ، فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ. (شعب الايمان)

மழைத் தொழுகை நேரங்களில் மற்ற நேரங்களில் மற்ற நேரங்களில் துஆக் கேட்கும் போது கைகளை உயரமாக தூக்குவது மக்ரூஹ்

وعن أنس رضي الله عنه قال : ( كان النبي صلى الله عليه وآله وسلم لا يرفع يديه في شيء من دعائه إلا في الاستسقاء فإنه كان يرفع يديه حتى يرى بياض إبطيه )  - متفق عليه . ولمسلم : ( أن النبي صلى الله عليه وآله وسلم استسقى فأشار بظهر كفه إلى السماء ) 

روى شعبة وعبثر وخالد عن حصين ، عن عمارة بن روبية : ( أنه رأى بشر بن مروان رافعًا يديه على المنبر ، فسبَّه وقال : لقد رأيت رسول الله لا يزيد على هذا يعنى أن يشير بالسبّابة ) . وروى سعيد عن قتادة قال : رأى ابن عمر قومًا رفعوا أيديهم ، فقال : من يتناول هؤلاء فوالله لو كانوا على رأس أطول جبل ما ازدادوا من الله قربًا . وكرهه جبير بن مطعم ، ورأى شريح رجلاً رافعًا يديه يدعو ، فقال : من تتناول بها ، لا أمّ لك . وقال مسروق لقوم رفعوا أيديهم : قد رفعوها قطعها الله . وكره ابن المسيب رفع الأيدى والصّوت فى الدعاء ، وكان قتادة يشير بأصبعيه ولا يرفع يديه ، ورأى سعيد بن جبير رجلاً يدعو رافعًا يديه فقال : ليس فى ديننا تكفير . واعتلوا بحديث عمارة بن روبية المتقدّم . 

அநீதமான அரசனின் தீமைக்கு எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்

عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ وَلاَ إله  غَيْرُكَ رواه الطبراني  (الترغيب والترهيب  عن ابن عباس رضي الله عنه قال : إذا أتيت سلطانا مهيبا تخاف أن يسطو عليك فقل : الله أكبر ، الله أعز من خلقه جميعا ، الله أعز مما أخاف وأحذر ، أعوذ بالله الذي لا إله إلا هو الممسك السماوات السبع أن يقعن على الارض إلا بإذنه ، من شر عبدك فلان وجنوده وأتباعه وأشياعه من الجن والانس ، اللهم كن لي جارا من شرهم ، جل ثناؤك وعز جارك وتبارك اسمك ولا إله غيرك - ثلاث مرات. [ مصنف ابن أبي شيبة ] (الترغيب والترهيب

عن عامر قال : كنت جالسا مع زياد بن أبي سفيان فأتى برجل يحمل ، ما نشك في قتله ، قال : فرأيته حرك شفتيه بشئ ما ندري ما هو ، فخلى سبيله فأقبل إليه بعض القوم فقال : لقد جئ بك وما نشك في قتلك ، فرأيتك حركت شفتيك بشئ ما ندري ما هو ، فخلى سبيلك ، قال : قلت اللهم رب إبراهيم ورب إسحاق ورب يعقوب ورب جبريل وميكائيل وإسرافيل ومنزل التوراة والانجيل والزبور والقرآن العظيم [ مصنف ابن أبي شيبة ]

ஆட்சியாளர் ஜியாதிடம் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் கொல்லப்படுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தார். சற்று நேரத்தில் அவரை ஜியாத் விடுவித்து விட்டார் அவரிடம் சிலர் உங்களுக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள். ஆனால் உமது நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தீர்கள் பிறகு விடுவிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஓதினீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் இன்ன துஆவை ஓதினேன் என்று மேற்படி துஆவை ஓதிக்காட்டினார்கள்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِيهَا كُلِّهَا (ابن ماجة

عن الحسن بن حسن أن عبد الله بن جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت لها ما قال لك قلت قال إذا نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج فقلتها فقال لقد دعوتك وأنا أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك أو أعز منك  (سنن الكبرى )

ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும் முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம் உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத் தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன். அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று நீர் என் கண்ணுக்கு முன்னால் உம் குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.              

ஹலால் ஹராமுடைய பேணுதல் இருந்தால் நிச்சயம் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا " فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ " (تفسير ابن كثير

வெள்ளி, 11 ஜூலை, 2025

அஹ்லே பைத்துகளின் சிறப்பும் கர்பலா சம்பவமும்

11-07-2025 بسم الله الرحمن الرحيم  
அஹ்லுல் பைத்துகளின் சிறப்பும்
கர்பலா சம்பவமும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்
அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி
قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣
;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமின்களே ! உங்களுக்கு மத்தியில்  நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை எடுத்துச் சொன்னதற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்  [  ஷூரா =23 ]
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي (ترمذي
நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது சலவாத் சொல்லாமல் தொழுகை பரிபூரணம் அடைவதில்லை
عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد (بخاري
நபியின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்து காப்பாற்றும் என தஹாவி இமாமின் கூற்று,
ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).
وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة بضعة مني فمن أغضبها أغضبني "
وعن البراء قال : رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول : " اللهم إني أحبه فأحبه " متفق عليه
அஹ்லுல் பைத் என்றால் யார்
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719
நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “ இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ  னது அந்தஸ்தான இட்த்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719
இந்நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறதுமருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால அந்த இடத்தில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். 
அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வலஜமாஆவின் கருத்தாகும்.
நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விஷயமாக நபித்தோழர்கள் கருதினார்கள்
؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-
عَنْ كَثِيرِ بن عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَّ الْخَنْدَقَ مِنْ أَحْمَرَ الْبَسْخَتَيْنِ طَرَفِ بني حَارِثَةَ عَامَ حِزْبِ الأَحْزَابِ، حَتَّى بَلَغَ الْمَذَابِحَ، فَقَطَعَ لِكُلِّ عَشَرَةٍ أَرْبَعِينَ ذِرَاعًا، فَاحْتَجَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ فِي سَلْمَانَ الْفَارِسِيِّ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ رَجُلا قَوِيًّا، فَقَالَ الْمُهَاجِرُونَ: سَلْمَانُ مِنَّا، وَقَالَتِ الأَنْصَارُ: سَلْمَانُ مِنَّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ" .(طبراني
சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர்.  அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியக நின்றார்.  மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா)
ஸய்யித் வம்சம் என்று யாருக்குக் கூறப்படும்
السيد عند المسلمون من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]
ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக்  கூறப்படும் .
அன்னை ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே அஹ்லே பைத்துகள் ஆவர்கள் ,என்று ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ்] அவர்கள் தாங்களின் ஹத்யா ஷரீஃபின் =302 ,ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
கர்பலா சம்பவமும் அதன் படிப்பினைகளும்
நபி ஸல் அவர்களின் காலத்தில் தீய சக்தி தோற்கடிக்கப்பட்டு அடங்கி மறைந்திருந்தாலும் அவர்களின் காலத்திற்குப் பின்  மீண்டும் விஸ்வரூபம் எடுத்து முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்க முயற்சி எடுக்கப்பட்டன. ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் முயற்சியால் அது தோற்கடிக்கப்பட்டது அடுத்து உமர் ரழி அவர்களின் ஆட்சியில் உலகின் பல பாகங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தாலும் எதிரிகளின் சூழ்ச்சி சற்று விஸ்வரூபம் எடுத்ததால் உமர் ரழி அவர்கள் கொல்லப்பட்டாலும் எதிரிகள் நினைத்தது போல் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்து விடவில்லை. பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான ரழி அவர்களின் காலத்தில் எதிரிகள் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்க மேலும் முயன்றனர் இந்நிலையில் யமன் நாட்டில் இருந்து இப்னுஸபா எனும் யூதன் முஸ்லிம் வேடம் தரித்து மதீனா வந்தான் குழப்பம் ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவன் அலீ ரழி அவர்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக் கொண்ட அவன் உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு அஹ்லே பைத் உடையவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் வாதாடினான். இவன் எல்லா இடங்களுக்கும் சென்று தனக்கு ஆதரவாளர்களை திரட்டினான். குறிப்பாக ஈரானிய மக்கள் இவனுடைய பிரச்சாரத்தை மிகவும் நம்பினர் இதனால் உஸ்மான் ரழி அவர்களுடைய ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களிடையே சண்டை சச்சரவுகள் பெருகி, அதன் விளைவாக உஸ்மான் ரழி கொல்லப்பட்டார்கள். பின்பு அலீ ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தன. அலீ ரழி அவர்கள் ஆட்சி செய்த முதல் 5 வருடங்களில் முஸ்லிம்களிடையே நடைபெற்ற ஜமல், சிஃப்பீன், நஹர்வான் ஆகிய சண்டைகளில் மட்டும் சுமார் 84 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்  இறுதியாக அலீ ரழி அவர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முஆவியா ரழி அவர்கள் 20 வருடங்கள் ஆட்சி செய்தார்கள் அவர்களுடைய ஆட்சியில் முதல் 10 வருடங்களில் பிரச்சினைகள் இருந்தாலும் முஆவியா ரழி அவர்களின் கடும் முயற்சியால் அவைகள் முறியடிக்கப்பட்டு அமைதி நிலவியது. ஸபஇய்யான்கள் எனப்படும் இப்னுஸபாவின் ஆதரவாளர்கள் சற்று அடங்கிப் போயிருந்தனர் ஆனால் முஆவியா ரழி அவர்களின் கடைசி காலத்தில் அவரது மகன் யஜீதை ஆட்சிக்கு வாரிசாக நியமிக்க முடிவு செய்யப்பட்டதோ அப்போதிருந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது. காரணம் இந்த முடிவு ஜனநாயக முறையில் எடுக்கப்படவில்லை எனினும் இந்த முடிவை எடுத்தவர்களை முற்றிலும் குறை கூறி விட முடியாது. ஏனெனில் இந்த முடிவை எடுத்தவர்களில் முஙீரத் இப்னு ஷுஃபா ரழி போன்ற பெரும் சஹாபாக்களும் அடங்குவர் நபி ஸல் அவர்களிடம் மரத்திற்குக் கீழே பைஅத் செய்தவர்களில் இவரும் ஒருவர்
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18الفتح)
இவர்கள் அவசரமாக யஜீதை கலீஃபாவாக முடிவு செய்யக் காரணம் முஆவியா ரழி அவர்களின் மரணத்திற்குப் பின் கலீஃபா யார் என்று உடனே முடிவு செய்யா விட்டால் முன்பு நிகழ்ந்தது போல முஸ்லிம்களிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு விடும்  என்று பயந்ததால் இந்த முடிவை எடுத்தனர். 
யஜீதை பல சஹாபாக்கள் எதிர்க்க காரணம்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழி, இப்னு உமர் ரழி, இப்னு அப்பாஸ் ரழி, அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்கர் ரழி போன்றோர் யஜீத் கலீஃபாவாக நியமிக்கப்பட்டதை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நியமனம் இஸ்லாமிய உணர்வுக்கு எதிரானது என்றும் கூறினர். யஜீதை கலீஃபாவாக ஏற்கும்படி கோரப்பட்ட போது அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்கர் ரழி அவர்கள் கூறிய விமர்சனம் முக்கியமானது அதாவது நபி ஸல் அவர்களுடைய, நேர்வழி நடந்த கலீஃபாக்களின் வழிமுறையை பின்பற்றாமல் ரோம, பாரசீக மன்னர்களின் வழிமுறையை பின்பற்றுகிறீர்களா என்று கேட்டார்கள். 
இனி அன்றைய சூழ்நிலையில் ஹுஸைன் இப்னு அலீ ரழி அவர்கள் எடுத்த முடிவைப் பற்றி காண்போம்.
யஜீத் கலீஃபாவாக நியமிக்கப்பட்டது நபிவழிக்கும், ஜனநாயக மரபுக்கும் முற்றிலும் மாற்றமானது என்றும், வாரிசு அரசியலுக்கு இது வழி வகுத்து விடும் என்றும் ஹுஸைன் ரழி கருதினார்கள்   அதனால் தன் பலம் கொண்ட மட்டும் அதை எதிர்ப்பது என்று முடிவு செய்தார்கள் கூஃபாவில் இருந்து அவர்களுக்கு வந்த செய்திகள் கடிதங்கள் அனைத்தும் அன்னாரின் முடிவை ஆதரிப்பதாகவே இருந்தன. கூஃபா அன்றைய காலத்தில் முஸ்லிம்களின் முக்கிய நகரம் என்பதால் அங்குள்ளவர்களின் ஆதரவு கிடைத்தால் அரசியலமைப்பில் ஏற்டவிருக்கும் மாற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என்று இமாம் ஹுஸைன் ரழி கருதினார்கள். இந்நிலையில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு ஜுபைர் ரழி அவர்களும் இதே கருத்துடையவர்களாக இருந்தாலும் கூஃபா மக்களின் பேச்சை நம்பி அங்கு செல்ல வேண்டாம் என இமாம் ஹுஸைன் ரழி அவர்களை தடுத்தார்கள் ஏனெனில் இதற்கு முன்பும் ஹழ்ரத் அலீ ரழி அவர்களையும், அவர்களுடைய மகனார் ஹஸன் ரழி அவர்களையும் கூஃபா மக்கள் வஞ்சித்துள்ளார்கள் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள் ஆகவே அவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று இமாம் அவர்களை எச்சரித்தார்கள் இருப்பினும் இமாம் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அனைவரின் எச்சரிக்கைகளையும், வேண்டுகோளையும் புறந்தள்ளி  விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து கூஃபா செல்ல தீர்மானித்தார்கள். எனினும் இமாம் அவர்கள் முதலில் தம் உறவினர் முஸ்லிம் இப்னு அகீலை கூஃபாவுக்கு முதலில் அனுப்பி வைத்தார்கள் அதாவது கூஃபாவிலிருந்து யஜீதுக்கு எதிராகவும் தமக்கு ஆதரவாகவும் வந்த கடிதங்கள் உண்மையா என்று அறிந்து வருவதற்காக அவரை அனுப்பி வைத்தார்கள் அங்கு சென்ற அவரும் கூஃபா மக்கள் உண்மையிலேயே இமாம் அவர்கள் மீது மிகவும் பற்றுள்ளவர்களாக இருப்பதாத தகவல் சொல்லியனுப்பினார். இமாம் அவர்கள் கூஃபா செல்ல தயாரானார்கள் அப்போதும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு ஜுபைர் ரழி அவர்களும் இமாம் அவர்களை கூஃபாவுக்கு செல்ல வேண்டாம் என தடுத்தார்கள். அப்படியே அங்கு செல்வதாக தீர்மானித்தாலும் பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் மக்காவில் விட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார்கள் 
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் கூஃபாவுக்கு புறப்பட்டார்கள். போகும் வழியில் தான் மிக வேதனையாக செய்தி வந்தது அதாவது யஜீதுடைய ஆட்கள் முஸ்லிம் இப்னு அகீலை கொலை செய்து விட்டார்கள் என்றும் இக்கொலை பற்றி அறிந்தும் கூஃபா மக்கள் அக்கறையில்லாமல் இருந்து விட்டார்கள் என்றும் கூஃபா மக்களைப் பற்றி எந்த அளவுக்கு அவர் நம்பிக்கையுடன் கடிதம் எழுதினாரோ அதற்கு நேர் மாற்றமாக அவர்கள் யஜீதுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள் என்ற செய்தி இமாம் அவர்களுக்கு கிடைத்தது. இவற்றையெல்லாம் அறிந்த இமாம் அவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள் கூஃபாவை நோக்கிச் செல்வதா அல்லது மக்காவுக்கு திரும்பி விடுவதா என்று யோசித்தார்கள் பொதுவாக தம் இனத்தவரில் யாரேனும் கொல்லப்பட்டு விட்டால் அதற்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு அரபியர்களுக்கு சர்வ சாதாரணமானது இந்த உணர்வை இமாம் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இப்னு அகீல் உடைய உறவினர்களும் அங்கு இருந்தனர் கொலையாளிகளை பழி வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தனர். இவர்களை அப்படியே விட்டு விட்டு மக்காவுக்கு திரும்புவது இமாம் அவர்களுக்கு கண்ணியமற்ற செயலாகும். எனவே அவர்களுடன் சேர்ந்து இமாம் அவர்களும் கூஃபா நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இந்நிலையில் இமாம் அவர்களின் உறவினர் அப்துல்லாஹிப்னு ஜஃபர் தய்யார் அவர்களின் இரு மகன்களும் அங்கு வந்து தங்களின் தந்தை அல்லாஹ்விற்காக நீங்கள் கூஃபா போக வேண்டாம் என்று சொன்னதாக அறிவித்தனர் அதையும் பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் அவ்விருவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் பிரயாணத்தை தொடர்ந்து கர்பலா மைதானம் சென்றடைந்தார்கள். கூஃபாவின் கவர்னர் இப்னு ஜியாத் ஆயிரம் படை வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். ஆட்சியாளரான யஜீத் ஏவிய படி,  இப்னு ஜியாத்...  இமாம் அவர்களுக்கு ஒரு கெடு விதித்தார். அதாவது நீங்கள் கூஃபாவை நோக்கியும் முன்னேறக்கூடாது. மக்காவுக்கும் போகக் கூடாது வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என இப்னு ஜியாத் அறிவித்தார். இந்நிலையில் இமாம் அவர்களுக்கு சாத்தியமான வழி ஒன்று தான். அதாவது தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைவது தான். ஆனால் இமாம் அவர்கள் கர்பலாவிலேயே தங்கியிருந்து அங்கு இப்னு ஜியாத் உடன் வந்திருந்த கூஃபா மக்களின் ஆதரவைப் பெற முயற்சித்தனர். தனக்கு ஆதரவுக் கடிதம் அனுப்பியவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து அவர்கள் வாக்களித்த படி தமக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரினார்கள். ஆனால் கொடுமைக்கு ஆளாகி விடுவோம் என பயந்த கூஃபா மக்கள் அப்படி எந்த கடிதத்தையும் நாங்கள் எழுதவேயில்லை பகிரங்கமாக மறுத்தனர். இதற்கிடையில் உமருப்னு ஜைத் என்பவருடைய தலைமையில் 4000 பேர் கொண்ட படை டமாஸ்கஸிலிருந்து வந்து சேர்ந்தது இவர் சற்று இமாம் அவர்களின் மீது அனுதாபம் கொண்டவர். அவர் வந்தவுடன் அங்கே இமாம் அவர்களுடன் தனிமையில் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது இமாம் அவர்களும் நிலைமையை உணர்ந்து  மூன்று கோரிக்கையை முன் வைத்தார்கள். அதில் ஒரு கோரிக்கை தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்று யஜீதுடன் பேச அனுமதியுங்கள் என்பதாகும். அதன்படி உமருப்னு ஜைத் கூறினார் சரி.. நீங்கள் கூறியபடி உங்களை யஜீதிடம் அனுப்பி வைப்பதற்கு இப்னு ஜியாதிடம் நான் பேசுகிறேன் என்று கூறி சமாதானத்திற்கு முயன்ற போது  இப்னு ஜியாத் அருகில் ஷமிருப்னு துல்-ஜவ்ஷன் என்பவன் இருந்தான். அவன் இப்னு ஸபா உடைய கைக்கூலி. (இப்னு ஸபா பற்றி ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.) அந்த ஷமிருப்னு துல்-ஜவ்ஷன் சமாதானம் நடைபெற விடாமல் தடுத்தான். இப்னு ஜியாதிடம் சாதுர்யமாக பேசி இமாம் அவர்களை முடக்கும்படி கூறினான். எவ்வித நிபந்தனையும் இன்றி  அவரை சரணடையும்படி  உத்தரவிடுங்கள். அல்லது போருக்கு தயாராகும்படி உத்தரவிடுங்கள் என்று இப்னு ஜியாதை தூண்டிய போது அவனுடைய பேச்சில் அவர் மயங்கினார். உமருப்னு ஜைத் உடைய சமாதானப்பேச்சு முறியடிக்கப்பட்டு ஸபஇய்யீன்களின் திட்டம் அங்கே நிறைவேறியது. எவ்வித நிபந்தனையும் இன்றி  அவரை சரணடைவது இமாம் அவர்களுக்கு இடப்பட்ட நியாயமற்ற கோரிக்கை. அவ்வாறு சரணடைவதுஅவர்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல. ஆகவே போதிய ஆயுத பலமில்லாமலும், எண்ணிக்கை குறைவாக இருந்தும் எதிரிகளோடு மோத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இவ்விதமாக ஜமல், மற்றும் சிஃப்ஃபீன் யுத்தங்களுக்கு முன் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுக்களை எவ்வாறு ஸபஇய்யீன்கள் (இப்னு ஸபா வின் ஆதரவாளர்கள்) முறியடித்தார்களோ அவ்வாறே கர்பலாவிலும் முறியடித்தார்கள். இமாம் அவர்களும் உடன் இருந்த 72 பேரும் ஈவு இரக்கமில்லாமல் கொல்லபட்டார்கள். அவர்களில் யாரும் பின்வாங்காமல் போரிட்டு ஷஹீதானார்கள் வெள்ளிக்கிழமை காலையில் இது நடந்தது அதற்கு முந்திய தினம் வியாழக்கிழமை அன்று லுஹர், அசரை இமாம் அவர்கள் தொழ வைத்த போது யஜீதுடைய படையினர் அனைவரும் இமாம் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள்
ஹுஸைன் ரழி அவர்களின் ஷஹாத த் பற்றி  நபிகளாருக்கு முன்பே தெரியும்
عن ام الفضل بنت الحارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت : يا رسول الله إني رأيت حلما منكرا الليلة . قال : " وما هو ؟ " قالت : إنه شديد قال : " وما هو ؟ " قالت : رأيت كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري . فقال رسول الله صلى الله عليه وسلم : " رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك " . فولدت فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم . فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه وسلم تهريقان الدموع قالت : فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال : " أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني بتربة من تربته حمراء " (مشكاة 


முஸ்லிம்களிடம் ஏற்டபடவிருந்த ஒற்றுமையை எவ்வாறு இப்னு ஸபாவின் ஆதரவாளர்கள் முறியடித்தார்களோ
அதே போன்று இன்றும் மேற்கத்தியர்களின் சதியால் முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக் கொள்ளும் நிலை
குறிப்பாக நபி ஸல் அவர்களின் காலத்திலிருந்து கடந்த நூற்றாண்டு வரை நீடித்த உலகளாவிய முஸ்லிம் தலைமை மேற்குலகின் சதியால் வீழ்த்தப்பட்ட வரலாறு
முஸ்லிம்களின் ஒரே தலைமையாக விளங்கிய கிலாஃபா இஸ்லாமிய ஆட்சி துருக்கி இஸ்தான்புல் நகரில் துரோகி முஸ்தஃபா கமால் என்ற மேற்குலகின் அடிவருடியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28- ல்  கி.பி. 1942 மார்ச் 3-ல்  வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்
கிலாஃபத்தை வீழ்த்த பிரிட்டன் முழு வீச்சில்  செயல்பட்டதை அன்றைய தினம் உலகமே அறியும். முஸ்லிம்களை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதால் சிந்தனை ரீதியாக வீழ்த்த நினைத்தனர். இஸ்லாமிய ஆட்சியினுள் தங்களுடைய மிஷினரிகளை அனுப்பி மேற்கத்திய பாணியில் நடைபெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், ஆகியவற்றை  அமைத்தனர். புத்தகங்கள், ஊடகங்கள் மூலமாக மேற்கத்திய சிந்தனைகள் விதைக்கப்பட்டன. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் அதிகமாக கவனத்தைச் செலுத்தியதால் அதிகமாக பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மேற்கத்திய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். இவ்வாறாக கிலாஃபத்தை வீழ்த்தும் மேற்கத்தியர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்த து. துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிலாஃபத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கிலாஃபத் ஆட்சியில் முக்கிய இராணுவ தளபதிகளில் ஒருவனாக இருந்த முஸ்தஃபா கமால் என்பவன் பதவி வெறியால் உள்ளுக்குள் இருந்து கொண்டே இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனை ஒரு கருவியாக மேற்குலகம் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறாக முஸ்லிம்களின் வசமிருந்த நிலப்பகுதிகளை கைப்பற்றியதோடு அங்கு முஸ்லிம்களிலேயே மேற்கத்திய சிந்தனை கொண்டவர்களை பதவியில் அமர்த்தினர்.  இதனால் முஸ்லிம்களின் நிலப்பகுதிகள் பிளவுபட்டது. அங்கு முஸ்லிம்கள் என்ற போர்வையில் மேற்கத்திய அடிவருடிகள் ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் விவகாரங்களை மேற்குலகம் தான் தீர்மாணிக்க வேண்டும் என்ற இழிநிலை உருவானது.  இறுதியாக ஹிஜ்ரி 1342 ரஜப் 28- ல்  கி.பி. 1942 மார்ச் 3-ல்  வீழ்த்தப்பட்டது. 
கிலாஃபா வீழ்த்தப்பட்ட பின் 1924 ஜூன் 24-ல் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு பின்வருமாறு பேசினார்
இனி நாம் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உண்டாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதை ப் போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடம் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம். அது ஒருபோதும் மீண்டு எழுந்த வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை நாம் வீழ்த்தி விட்டோம்.  
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يُوشِكُ الأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا ». فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ « بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِى قُلُوبِكُمُ الْوَهَنَ ». فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهَنُ قَالَ « حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ ».(ابوداود
விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வர் என நபி ஸல் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் நீக்கி, உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்க  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். அபூதாவூத்

வியாழன், 26 ஜூன், 2025

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

 27-06-2025


بسم الله الرحمن الرحيم  

ஹிஜ்ரீ வருடமும் 

ஹிஜ்ரத்  தரும் படிப்பினைகளும்  



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


வருடங்களுக்கு ஹிஜ்ரீ என்ற பெயர் வந்த காரணம் ஹிஜ்ரத் சம்பவத்தை இறுதி வரை மக்கள் மறக்கக் கூடாது என்றுதான் 

இஸ்லாம் பற்றி அறவே அறியாதவர்கள் பின்வருமாறு கேள்வி கேட்பார்கள். கி.பி 2025 என்பதால் கிறிஸ்தவ மதம் தானே முந்தியது. 

ஹிஜ்ரி  1446 என்பதால் உங்கள் மதம் பிந்தியது தானே என்று கேட்பார்கள் அவர்களுக்கான பதில்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய மாதங்கள் இருந்தன. மேலும் இதே பெயர்கள் தான் இருந்தன. 

வருடங்களுக்கான பெயர்கள் மட்டும் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து மாற்றப்பட்டன

قال الله تعالي إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ سورة التوبة:36 عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- كتاب بدء الخلق

قال الزُّهريُّ والشعبيُّ: أرَّخ بنو إسماعيل من نار إبراهيم عليه السلام إلى بنيان البيت حين بناه إبراهيم وإسماعيل عليهما السلام ثم أرَّخ بنو إسماعيل من بنيان البيت حتى تفرَّقت وكان كلما خرج قوم من تهامة أرَّخوا مخرجهم ومن بقي بتهامة من بني إسماعيل يؤرخون من خروج سعدٍ ونهدٍ وجهينة بن زيد من تهامة حتى مات كعب بن لؤي فأرَّخوا من موت كعب بن لؤي إلى الفيل فكان التاريخ من الفيل حتى أرَّخ عمر بن الخطاب رضي الله عنه من الهجرة وذلك سنة سبع عشرة أو ثمان عشر.تاريخ الطبري)


நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதை வைத்து அவர்களின் சந்ததிகள் வருடங்களைக் கணக்கிட்டனர். அதன் பின்பு கஃபா கட்டப்பட்ட வருடத்தில் இருந்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகள் அவரவர் எங்கே குடியேறினார்களோ அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு அந்தப் பரம்பரையில் கஃப் என்பவர் முக்கிய நபராக கருதப்பட்டதால் அவர் மரணமடைந்த வருடத்தை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு யானைச் சம்பவம் பிரபலமாக இருந்த தால் அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். அதுவும் காலப்போக்கில் மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது கடைசியாக உமர் ரழி அவர்களின் காலத்தில் ஹிஜ்ரத்தை வைத்து ஹிஜ்ரீ கணக்கு உருவானது. 

ஹிஜ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னனி

ولم يكن التاريخ السنوي معمولا به في أول الإسلام حتى كانت خلافة عمر رض ففي السنة الثالثة أو الرابعة من خلافته كتب إليه أبو موسى الأشعري :إنه يأتينا منك كتب ليس لها تاريخ.فجمع عمر الصحابة فاستشارهم فيقال إن بعضهم قال:أرخوا كما تؤرخ الفرس بملوكها كلما هلك ملك أرخوا بولاية من بعده"فكره الصاحبة ذلك،فقال بعضهم:أرخوا بتاريخ الروم"فكرهوا ذلك أيضا،فقال بعضهم:أرخوا من مولد النبي وقال آخرون:من مبعثه" وقال آخرون:من مهاجره"فقال عمر الهجرة فرقت بين الحق والباطل فأرخوا بها فأرخوا من الهجرة"واتفقوا على ذلك (تاريخ الرسل والملوك) (تاريخ الطبري)   

عن محمد بن سيرين قال:قام رجل إلى عمر بن الخطاب فقال: أَرِّخُوْا فقال عمر :ما أرخوا ؟ قال:شيء تفعله الأعاجم يكتبون في شهر كذا من سنة كذا فقال عمر بن الخطاب:حسنٌ فأرخوا فقالوا: من أي السنين نبدأ ؟ قالوا: مِنْ مبعثه وقالوا: مِنْ وفاته؛ ثم أجمعوا على الهجرة ثم قالوا: فأي الشهور نبدأ ؟ فقالوا: رمضان ثم قالوا المحرم فهو منصرف الناس من حجهم؛ وهو شهرٌ حرام فأجمعوا على المحرم  (تاريخ الرسل والملوك)

காலப்போக்கில் வருடங்களை மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது உமர் ரழி அவர்களின் ஆட்சிக்கலத்தில் அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் உமர் ரழி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்போது தாங்கள் அனுப்பும் கடிதங்களில் வெறும் மாதங்களை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் எந்த வருடம் என்று குறிப்பிடுவதில்லை என்று அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் எழுதினார்கள். அதன் பின்பு  உமர் ரழி அவர்கள் ஒரு மஷ்வராவுக்கு ஏற்பாடு செய்தார்கள். வருடங்களுக்குப் பெயர் சூட்டுவது பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். பாரசீகர்கள் எவ்வாறு ஒரு அரசர் இறந்து அடுத்த அரசர் பதவிக்கு வரும்போது அவரது பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவார்கள். அதுபோன்று கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவது போல கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். நபி ஸல் அவர்களின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் அதாவது நபி ஸல் அவர்கள் பிறந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்று சிலர் கூறினர். வேறு சிலர் நபி ஸல் நபியாக அனுப்பப்பட்டதை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் என்று கூறியபோது அப்போது நாமெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று கூறி அதையும் பலர் வெறுத்தனர். கடைசியாக ஹிஜ்ரத் நடந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டபோது அதற்கு உமர் ரழி அவர்கள் ஆதரவு தெரிவித்து அந்த ஹிஜ்ரத் தான் சத்தியத்துக்கும் அசத்தியத்தும் இடையில் வேறு படுத்திக் காட்டியது எனவே அதையே வருடங்களுக்குப் பெயராக வைக்கலாம் என்று கூற, மற்றவர்களும் ஆதரித்தார்கள். எந்த மாதத்தை முதல் மாதமாக வைப்பது என்ற ஆலோசனையின் போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். ரமழான் என்று சிலரும் முஹர்ரம் என்று வேறு சிலரும் கூறினார்கள். இறுதியில் முஹர்ரம் தான் முதல் மாதம் என முடிவானது. ஹஜ்ஜை முடித்து விட்டு ஹாஜிகள் திரும்பி தங்களின் தொழிலைத் துவங்கும் மாதத்தை முதல்மாதமாக வைத்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அதுவே முடிவானது. ஹாஜிகளின் வருகையை கவனித்து வருடத்தின் முதல் மாதத்தை முடிவு செய்யும் அளவுக்கு ஹாஜிகளின் வருகை அன்றிலிருந்தே கண்ணியமாக கருதப்பட்டு வந்தது.                                                                     

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ (أحمد

ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பியவரைக் கண்டால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் முஸாஃபஹா செய்யுங்கள். உங்களுக்காக அவரை துஆச் செய்யச் சொல்லுங்கள். ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

முஸ்லிம்கள் தம் எதிரிகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது

عن خَبَّابً  رض:أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً وَهْوَ فِى ظِلِّ الْكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ4 الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُوضَعُ الْمِنْشَارُ5 عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ (بخاري)

நபி ஸல் அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது ஹப்பாப் ரழி அவர்கள் வந்து நாம் இணை வைப்பாளர்கள் மூலமாக கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். தாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முனபு வாழ்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதற்காக இரும்புக் கத்தரிக்கோலால் அவரது எலும்புகளுக்கும் சதைகளுக்குமிடையே குத்தி வேதனை செய்யப்பட்டார். அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். மற்றொருவரின் நடு மண்டை ரம்பத்தால் பிளக்கப்பட்டு அவரது உடல் இரண்டு துண்டாக ஆனது. அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். நீங்களும் பொறுமை கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ் இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவான் என்றார்கள்.                         

தன் சொத்து, சுகங்களை துறந்து அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ (42)النحل

أَنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ كَانَ إِذَا أَعْطَى الرَّجُل مِنْ الْمُهَاجِرِينَ عَطَاءَهُ يَقُول خُذْ بَارَكَ اللَّه لَك فِيهِ هَذَا مَا وَعَدَك اللَّه فِي الدُّنْيَا وَمَا اِدَّخَرَ لَك فِي الْآخِرَة أَفْضَل ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَة " لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَة وَلَأَجْر الْآخِرَة أَكْبَر لَوْ كَانُوا يَعْلَمُونَ(ابن كثير)

உமர் ரழி அவர்கள் கனீமத் பொருட்களைப் பங்கிடும்போது முஹாஜிர்களுக்கு அதிகம் தருவார்கள். மேலும் இது அல்லாஹ் உங்களுக்குத் தந்த கண்ணியம் என்று கூறுவார்கள்

{وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي رضي الله عنهبات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي)

நபி ஸல் அவர்களின் படுக்கையில் அலீ ரழி அவர்கள் தூங்கிய போது அவர்களுக்குப் பாதுகாப்பாக தலை மாட்டில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கால் மாட்டில் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பாதுகாப்புக்கு இருந்தார்கள். உங்களுக்கு நிகராக யார் இருக்க முடியும். உங்களைப் பற்றி மலக்குகள் அனைவரும் பாராட்டிப் பேசுகிறார்கள் என்றும் அவ்விருவர் கூறினார்கள். அன்று தான் அலீ ரழி மிக நிம்மதியாக உறங்கினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நபியவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த எதிரிகளின் கண்களில் படாமல் வெளியேறுவதற்கு அல்லாஹ் எதிரிகளின் பார் வையை மறைத்து உதவி புரிந்தான். நபியவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக வீட்டிலிருந்து வெளியேறினார்கள். எதிரிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை.                               

وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏  

 எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையால் அல்லாஹ்வின் உதவி கி்டைத்தது.

தௌர் குகையின் வாயிலை அடைக்கும் வண்ணம் சிலந்தி பூச்சியைக் கொண்டு வலை ஒன்று பின்னி முடிக்குமாறு செய்தான் இறைவன்.

اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌  فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌  وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا  وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ

ஹிஎதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற ஆழமான நம்பிக்கை

إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا[التوبة:40] عَنْ أَنَس أَنَّ أَبَا بَكْرحَدَّثَهُ قَالَ:قُلْت لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الْغَار لَوْ أَنَّ أَحَدهمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا تَحْت قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْر مَا ظَنّك بِاثْنَيْنِ اللَّه ثَالِثهمَا(بخاري)فأعمى الله أبصار المشركين حتى لم يحن لأحد منهم التفاتة إلى ذلك الغار

கொல்ல வந்த எதிரிகளின் கண்களை விட்டும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மறைத்தான்

இதே நம்பிக்கை தான் அந்த குகைவாசிகளையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றியது

குகைக்குள் நுழைந்தவுடன் எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் அந்தக் குகையையும் குகைவாசிகளையும் அல்லாஹ் மாயமாக்கி விட்டான். 



இறைத் தூதரை கொல்ல வந்த சுராகா என்பவர் இறைத்தூதரின் பாதுகாவலராக மாறிய சம்பவம். 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبِ رَحْلا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا، فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرْهُ لِي فَقَالَ لَهُ عَازِبٌ: لا حَتَّى تُخْبِرَنِي كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجْتُمَا وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمَا فَقَالَ: ارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ جَشْعَمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ لَهُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ:"لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا" فَلَمَّا أَنْ دَنَا كَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قِيدُ رُمْحٍ أَوْ ثُلُثَهُ فَقُلْتُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ وَبَكَيْتُ، فَقَالَ: مَا يُبْكِيكَ ؟ فَقُلْتُ:وَاللَّهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنَاهُ، فَسَاخَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا فَوَثَبَ عَنْهَا، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنَجِّينِيَ مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغَنَمِي بِمَكَانِ كَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا حَاجَةَ لَنَا فِي إِبِلِكَ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَاجِعًا إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ".(تفسير ابن كثير)

மற்றொரு அறிவிப்பில் சுராகா அவர்களே கூறியதாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

  சுருக்கம்- எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து கொடுத்து இருநூறு சிவந்த ஒட்டகங்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அவர் சொல்வதை நீங்களே படியுங்கள். “நான் அவர்கள் இருவரையும் தேடுவதற்கு முன் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன். அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் நான் எனது கூர்மையான ஈட்டியை எடுத்துக் கொண்டு, வேகமாக பாய்ந்து செல்லும் குதிரையின் மீதேறி தேடி போகும் போது, நபியவர்களையும், அபூபக்கர் அவர்களை நான் கண்டு விட்டேன். நபியவர்கள் ஒட்கத்தின் மீதிருந்த வண்ணம் குர்ஆனை ஓதிக் கொண்டே போனார்கள். ஆனால் அபூபக்கர் அவர்களோ, யாராவது பின்னால் தேடி வருகிறார்களா என்று திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனார்கள். நான் வேகமாக அவர்களின் பக்கத்தில் போன போது, எனது குதிரையின் இரண்டு முன் காலின் மூட்டு வரை பூமி உள்ளே இழுத்துக் கொண்டது. நான் குதிரையிலிருந்து இடரி கீழே விழுந்தேன்.  மீண்டும் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன் அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் இருநூறு ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்டு, அவர்களை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தேன். மீண்டும் பூமி குதிரையை இழுத்து பிடித்துக் கொண்டது.நான் இடரி கீழே விழுந்தேன். அப்போது “முஹம்மது அல்லாஹ்வின் தூதராக தான் இருப்பார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நபியவர்களிடம் எனக்காக பிரார்த்திக்கும் படி வேண்டினேன், நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் எனக்காக கொண்டு சென்ற உணவிலோ, வேறு எதையும் அவர்கள் என்னிடம் இருந்து எடுக்கவில்லை, நான் உங்களுக்கு  என்ன உதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன், யாரையும் இந்த பக்கம் வரவிடாமல் திருப்புவீராக, என்றார்கள். எனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் படி நான் நபியவர்களிடம் வேண்டினேன். சரி என்றார்கள். நான் எழுத்து வடிவத்தில் கேட்டேன். அப்போது “ஆமிர் இப்னு புஹைரா” மூலம் தோலில் பாதுகாப்பு உறுதி எழுதி கொடுத்தார்கள்.

அதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தின் உத்தரவு வரலாம். அது இரவு நேரத்திலே கூட வரலாம். அத்தகைய உத்தரவு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு உடனே வருவேன் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அதேபோல ஒருநாள் அல்லாஹ்வின் உத்தரவு வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு சென்ற போது வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. ஏன் கதவை மூடவில்லையா என்று கேட்க, அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் என்றைக்கு என்னிடம் எந்த நேரமும் ஹிஜ்ரத் பற்றிய உத்தரவு வரலாம் என்று கூறினீர்களோ அன்று முதல் நான் கதவை மூடுவதே இல்லை என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு பதில் அளித்தார்கள். இந்த நிலையில் மதினாவுக்குச் சென்ற பின் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்துவதற்காக பள்ளிவாசலைச் சுற்றி இருந்த சில வீட்டு வாசல்களை மூட வேண்டிய சூழ்நிலை வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு எந்த வாசல் வழியாக வருவாரோ அந்த வாசலை மட்டும் மூட வேண்டாம் என்றார்கள். அதற்கு காரணம் சொல்லும் போது அவர் எனக்காக கதவை திறந்து வைத்திருந்தார் இப்போது அவருடைய கதவு திறந்தே இருக்கட்டும் என்று பதில் கூறினார்கள்.

ஹிஜ்ரத்தின் போது நபியவர்களின் அழகிய திட்டமிடல்…

நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள். தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள். மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், “அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தேர்வு செய்கிறார்கள். இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அபூபக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.

அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தேர்வு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள். குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள். நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தேர்வு செய்கிறார்கள். இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.

உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். 

எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.

ஸவ்ர் குகையும், எதிரிகளும்…

மிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு  சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் அவர்களே! எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

மதீனமா நகரும், மக்களும்…

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.

ஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே ! இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்டார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.

ஹிஜ்ரத்திற்கு முன்பே மதீனாவில் இஸ்லாத்தைப் பரப்பிய முஸ்அப் இப்னு உமைர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தூதுத் துவப் பணியை ஆரம்பித்த காலத்திலேயே முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களை அழைப்புப்பணியை மேற் கொள்ள மதீனாவுக்கு அனுப்பி வைத் திருந்தார்கள். மதீனாவிற்கு முதலில் சென்ற முஹாஜிர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான். மக்காவில் தூதுத்துவப் பணிகள் எவ்வாறு நடைபெற்றனவோ அதே நேரத்தில் முஸ் அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் மூலம் மதீனாவிலும் அழைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. முஸ்அப்(ரலி) அவர்களை மதீனாவிற்கு அனுப்பும் போதே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் சிலரை இஸ்லாத்திற்கு அழைத்து வர வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த அடிப்படையில் முதல் முதலாக மதீனாவில் இருந்து வந்த போது 12 நபர்களை முஸ்அப்(ரலி) அழைத்து அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தை ஏற்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து பலரும் முஸ்அப் (ரலி) மூலம் இஸ்லாத்தைத் தழுவினர்.

அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) மக்காவிற்கு வந்த போது 70 நபர்களைத் தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து இஸ்லாமியச் செய்திகளைப் பெற்று உடனடியாக இஸ்லாத் தைத் தழுவினர். அடுத்த ஆண்டு வரும்போது இன்னும் சிலருடன் வாருங்கள் என நபி(ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) யாரும் இல்லாமல் தனி நபராக மக்காவிற்கு வந்தார். அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் மட்டும் தனியாக வந்துள்ளீர்கள்? உங்களுடன் யாரும் வரவில்லையா?' எனக் கேட்க, முஸ்அப்(ரலி) 'மதீனாவில் எல்லா வீடுகளிலும் இஸ்லாத்தைச் சொல்லி விட்டேன் அங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதனால் எல்லாரையும் இங்கு அழைத்து வர முடியவில்லை. ஆகவே நீங்கள் மதீனா வந்து விடுங்கள்' எனக் கூறினார்.

இந்த நிகழ்வையும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடுமையான நெருக்கடி காலத்தையும் கொஞ்சம் இணைத்துப் பாருங்கள்.

இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற உடனே நபிகளை வரவேற்பதற்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் மதீனத்து மக்கள் முழு மகிழ்ச்சியுடனும் மனதுடனும் காத்துக் கொண்டிருந்தனர். அதற்கான முதல் காரணம் முஸ்அப் (ரலி) அவர்கள் தான்.

இன்னும் சொல்லப்போனால் மதீனா சென்றவுடனே நபி(ஸல்) அவர்கள் ஊர் மக்களை, குலங்களை ஒன்றிணைந்து பிற சமூகத் தலைவர்களிடம் ஒப்பந்தங்களைப் போட்டு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புடன் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட்டு மதீனாவில் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்க முடிந்தது என்றால் அதற்கு மூலமாகச் செயல்பட்டவர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான்.

நாமும் ஹிஜ்ரத் செய்வோம்

 ﻭﻋﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﻬﺠﺮﺓ ﺣﺘﻰ ﻳﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﻭﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺪاﺭﻣﻲ

ஹிஜ்ரத்தின் அசல் அர்த்தமே வெறுப்பதும் விலகுவதுமாகும் அந்த வகையி்ல் நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தையும் நினைவில் கொல்வோம்.

பாவங்களை விட்டும் விலகுவதும் ஹிஜ்ரத்தாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو - رضى الله عنهما - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ  -بخاري

சுயபரிசோதனை

ஒவ்வொரு ஆண்டின்முடிவிலும் துவக்கத்திலும் கடந்த ஆண்டில் நாம் என்ன பணியாற்றியுள்ளோம்  இனி வரும் ஆண்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சுய பரிசோதனையையும்  திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.

பாடப் புத்தகங்களில் மறைக்கப் படும் வரலாறுகள்

    01-08-2025 بسم الله الرحمن الرحيم   பாடப் புத்தகங்களில்  மறைக்கப் படும் வரலாறுகள் https://chennaijamaathululama.blogspot.com என்ற...