புதன், 30 நவம்பர், 2022

இறையச்சத்தின் இம்மை மறுமை பலன்கள்

 


02-12-2022

 

بسم الله الرحمن الرحيم 

இறையச்சத்தின் இம்மை மறுமை பலன்கள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 

  


முன்னுரை & முடிவுரை- உலகில் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சண்டை. சச்சரவுகள் குற்றங்கள், அனைத்தும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறையச்சம் ஏற்படுவதினால்  மட்டுமே முடியும். காவல் துறையோ இராணுவமோ,  ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது போலீஸோ, இராணுவத்தினரோ, ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியுமென்றிருந்தால் மனிதர்கள் அனைவரும் குற்றம் செய்யாதவர்களாக இருந்திருப்பார்கள். மாறாக காவல் துறையும், இராணுவமும் பெருகப் பெருக சண்டை சச்சரவுகளும், தீய எண்ணங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் உள்ளங்களில் இறையச்சம் இல்லாமல் போனது தான். ஆகவே மனிதன் எல்லா நிலைகளிலும் குற்றங்களை விட்டும நீங்குவதற்கு இறையச்சமே முக்கியக் காரணமாகும். உதாரணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களும், பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள் அதனைப் பாதுகாப்பதற்கும் அங்கு எவரும் இல்லை இந்நிலையில் அல்லாஹ்வுடைய பயம் மட்டும் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் அப்பொருட்களிலிருந்து சிறிதளவையும் நீங்கள் எடுக்க மாட்டீர்கள் ஏனெனில் பிறர் பொருளை அனுமதியின்றி எடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் தண்டனை கிடைக்கும் என்ற பயம் உங்களை தடுத்து விடும்.

 

وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே தக்வா என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். எப்படிக் கடந்து சென்றீர்கள்? சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு, உமர் (ரலி) அவர்கள் உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன் என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள் இவ்வாறு தான் இறையச்சமும் என்று பதிலளித்தார்கள்..

 வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன் என்றார். அதற்கு ஆட்டிடையன் ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது இதைக் கேட்ட பெரியவர் எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு என்றார். உடனே அந்த ஆட்டிடையன், பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.

அல்லாஹ்வை பயப்படுவதற்கும், மற்றவர்களைக் கண்டு பயப்படுவதற்கும் வித்தியாசம்

உலகில் நாம் ஒருவரைக் கண்டு பயந்தால் அவரை விட்டும் விலகி விடுவோம், அரசனை பயந்தால், அதிகாரியை பயந்தால், அவர்களை விட்டும் தூரமாகி விடுவோம் ஆனால் அல்லாஹ்வை பயப்படும் அளவுக்கு அவனை நாம் நெருங்குவோம்.

ஒரு பாவத்தை செய்ய நினைத்து பிறகு அல்லாஹ்வின் பயத்தால் அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்கும் நன்மை உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلاَمَ اللَّهِ )- كتاب التوحيد

அல்லாஹ் கூறுகிறான். என்னுடைய அடியான் ஒரு பாவத்தைச் செய்ய நினைத்தால் அதைச் செய்யும் வரை அதன் தீமையை எழுத வேண்டாம். அதைச் செய்து விட்டால் ஒரே ஒரு தீமையை மட்டும் எழுதுங்கள். அதே நேரத்தில் என்னை பயந்து அப்பாவத்தை அவன் செய்யாமல் விட்டு விட்டால் அதற்காகவும் ஒரு நன்மையை எழுதுங்கள். அதுபோல் என்னுடைய அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்து அதைச் செய்யா விட்டாலும் அதைச் செய்ய நினைத்ததற்காக ஒரு நன்மையை எழுதுங்கள்.அதைச் செய்து விட்டால் அதற்கு பத்து முதல் 700 மடங்கு வரை நன்மையை எழுதுங்கள்.                                                                    

குகையில் மூன்று நபர்கள் மாட்டிக் கொண்டு துஆ செய்த சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அதில் ஒருவர் தன் முறைப் பெண்ணை தவறாக நெருங்க முற்பட்டு அதற்கான வாய்ப்புகள் இருந்தும் இறையச்சத்தால் அதை விட்டும் தவிர்த்துக் கொண்டார்

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41النازغات)

இறையச்சத்திற்கு அல்லாஹ் தந்த பரிசு

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا فِيمَنْ سَلَفَ أَوْ قَالَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا أَعْطَاهُ اللَّهُ مَالًا وَوَلَدًا قَالَ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ لِبَنِيهِ أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ قَالُوا خَيْرَ أَبٍ قَالَ فَإِنَّهُ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ قَالَ فَفَسَّرَهَا قَتَادَةُ لَمْ يَدَّخِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا وَإِنْ يَقْدِرْ اللَّهُ عَلَيْهِ يُعَذِّبْهُ فَإِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي حَتَّى إِذَا صِرْتُ فَحْمًا فَاسْحَقُونِي أَوْ قَالَ فَاسْهَكُونِي ثُمَّ إِذَا كَانَ رِيحٌ عَاصِفٌ فَأَذْرُونِي فِيهَا قَالَ نَبِيُّ اللَّهِ فَأَخَذَ مَوَاثِيقَهُمْ عَلَى ذَلِكَ قَالَ فَفَعَلُوا ذَلِكَ وَرَبِّي فَلَمَّا مَاتَ أَحْرَقُوهُ ثُمَّ سَحَقُوهُ أَوْ سَهَكُوهُ ثُمَّ ذَرُّوهُ فِي يَوْمٍ عَاصِفٍ قَالَ فَقَالَ اللَّهُ لَهُ كُنْ فَإِذَا هُوَ رَجُلٌ قَائِمٌ قَالَ اللَّهُ أَيْ عَبْدِي مَا حَمَلَكَ عَلَى أَنْ فَعَلْتَ مَا فَعَلْتَ فَقَالَ يَا رَبِّ مَخَافَتَكَ أَوْ فَرَقًا مِنْكَ قَالَ فَمَا تَلَافَاهُ أَنْ رَحِمَهُ وَقَالَ مَرَّةً أُخْرَى فَمَا تَلَافَاهُ غَيْرُهَا أَنْ رَحِمَهُ (أحمد

சுருக்கம்- முற்காலத்தில் ஒரு மனிதர் தன் கடைசி நேரத்தில் தன் பிள்ளைகளை அழைத்து நான் செய்த பாவங்களுக்காக அல்லாஹ் என்னைக் கடுமையான தண்டிக்கலாம் என்று அஞ்சுகிறேன் என்றார். எனவே நான் இறந்த பின்பு என்னை எரித்து அது கரிக்கட்டையாக ஆன பின்பு அதை சாம்பலாக ஆக்கி அதைக் காற்றில் பறக்க விட்டு விடுங்கள் என வஸிய்யத் செய்தார். அவ்வாறே அவர் இறந்த பின்பு அவரது பிள்ளைகள் செய்தனர். அவரை அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது. அவரிடம் அல்லாஹ் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்க, உன்னுடைய பயத்தின் காரணமாகவே இவ்வாறு செய்யும்படி நான் என் பிள்ளைகளுக்கு வஸிய்யத் செய்தேன். அவர் அவ்வாறு சொல்லி வாயை மூடும்முன்பே அல்லாஹ் அவரை மன்னித்தான்.               

இறையச்சத்தால் அழுத கண்களுக்கு அல்லாஹ்  தரும் பரிசு

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (بخاري) باب الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ-كتاب الرقاق, باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ – كتاب المحاربين

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ- كِتَاب الزُّهْدِ

கறந்த பால் மீண்டும் மடியில் புகுவது எவ்வாறு சாத்தியம் இல்லையோ அவ்வாறே இறையச்சத்தால் அழுத கண்கள் நரகம் செல்லாது.

عن عبد الله بن شقيق العقيلي قال : سمعت كعبا يقول : لان أبكي من خشية الله تعالى حتى تسيل دموعي على وجنتي أحب إلي من أن أتصدق بوزني ذهبا والذي نفس كعب بيده ما من عبد مسلم يبكي من خشية الله حتى تقطر قطرة من دموعه على الارض فتمسه الناس أبدا حتى يعود قطر السماء الذي وقع إلى الارض من حيث جاء ولن يعود أبدا.(مصنف ابن ابي شيبة)

இறையச்சத்தால் என் நான் அழுது என் கண்ணம் வரை கண்ணீரால் நனைவது என்னுடைய எடை அளவுக்கு தங்கம் தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

இறை நேசர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள்

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (الانفال2)

உமர் ரழி அவர்களின் வாழ்விலும்,சில இறைநேசர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்திய தக்வா பற்றிய வசனம்

أَنَّ فُضَيْل بْن عِيَاضٍ كَانَ يَقْطَعُ الطَّرِيقَ  وَأَنَّهُ عَشِقَ جَارِيَةً وَارْتَقَى جِدَارًا لَهَا فَسَمِعَ تَالِيًا يَتْلُو "أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ(57-16  فَتَابَ (رد المختار

ஃபத்வா &  தக்வா ஒரு விளக்கம்

 தக்வாவுக்கு பேணுதல் என்று ஒரு விளக்கம் உள்ளது சில பெரும் பாவங்களைப் பற்றி குர்ஆன் கூறும்போது அதைச் செய்யாதீர்கள் என்று கூறாமல் அதை நெருங்காதீர்கள் என்று கூறுகிறது  எனவே குறிப்பிட்ட பாவத்தைச் செய்யக் கூடாது என்பது ஃபத்வா ... அதன் பக்கம் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுவது தக்வா.. ஃபிக்ஹ் ஆய்வாளர்கள் கூறுவார்கள்  அந்நியப் பெண் ஒருத்தி உளூச்  செய்து விட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய வேண்டாம். வேறு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அந்த மீதித் தண்ணீரை உபயோகிக்கும்போது இது இன்ன பெண் உபயோகித்த தண்ணீர் என்ற நினைவு வரும் அதுவும் சில நேரங்களில் தவறான சிந்தனையை மனதில் உண்டாக்கி விடும் என்று கூறுவார்கள் இதுதான் தக்வா.. பேணுதல் என்பதாகும் ஷரீஅத்தில் இத்தகைய பேணுதல் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க க்கூடாது. அந்நியப் பெண்ணிண் குரலை காது கொடுத்து கேட்கக்கூடாது. அவள் நறுமணம் பூசியிருந்தால் நம்முடைய மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.ஆகிய அனைத்தும் இந்த அடிப்படையில் கூறப்பட்டதாகும்.                                                                         

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ وَمَنْ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنْ الْإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ وَالْمَعَاصِي حِمَى اللَّهِ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ (بخاري) باب الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ-كتاب البيوع- وَقَالَ ابْنُ عُمَرَ رضي الله عنه لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ (بخاري) باب الإِيمَانِ - عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ترمذي)ضعيف بَاب الْوَرَعِ وَالتَّقْوَى- كِتَاب الزُّهْدِ –

விளக்கம்- எதைச் செய்வதால் அது கூடும். பரவாயில்லை என்று உறுதியற்ற நிலையில் கூறப்படுமோ அதையும் விடுவது தக்வா

இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்

மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும்  ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.

தக்வாவை அதிகப்படுத்தக்கூடிய விஷயங்கள்- 

மவ்த்தை அடிக்கடி நினைப்பது தக்வாவை அதிகப்படுத்தும்

عَنْ الْبَرَاءِ رضي الله عنه  قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا (ابن ماجة) بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ- كِتَاب الزُّهْدِ ( على شفير القبر ) أي طرفه . ( الثرى ) أي التراب

இறைநேசர்களில் சிலர் ஜனாஸாவில் கலந்து கொண்டால் ஜனாஸாவை குளிப்பாட்டும்போது த குளிப்பாட்டுவதாகவும், அந்த ஜனாஸாவுக்கு கஃபனிடும்போது தனக்கே கஃபனிடுதைப்போலவும், அந்த ஜனாஸாவுக்கு தொழ வைக்கும்போது தனக்கே தொழ வைப்பதைப் போலவும், அந்த ஜனாஸாவை அடக்கும்போது தன்னையே அடக்கம் செய்வதைப் போலவும் கருதுவார்களாம்

எப்போதும் வயிறு நிரம்பி இருப்பது தக்வாவை அதிகப்படுத்தாது

عَنْ أَبِي أُمَامَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا قُلْتُ لَا يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا وَقَالَ ثَلَاثًا أَوْ نَحْوَ هَذَا فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ وَإِذَا شَبِعْتُ شَكَرْتُكَ وَحَمِدْتُكَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي الْكَفَافِ وَالصَّبْرِ عَلَيْهِ- كِتَاب الزُّهْدِ

மண்ணறைகளை கடந்து செல்லும்போது தக்வாவின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு பேசிய வார்த்தைகள். தக்வா தான் கப்ரிலும் நமக்குத் துணை

(دخل علي رضي الله عنه المقبرة فقال: يا أهل القبور ما الخبر عندكم: إن الخبر عندنا أن أموالكم قد قسمت وأن بيوتكم قد سكنت وإن زوجاتكم قد زوجت، ثم بكى ثم قال: والله لو استطاعوا أن يجيبوا لقالوا: إنا وجدنا أن خير الزاد التقوى).

 

ஏழு தலைமுறைக்கு முன்னால் தக்வாவுடன் வாழ்ந்த ஒரு நல்ல மனிதரின் சொத்துக்களைப்  பாதுகாக்க அல்லாஹ் ஒரு நபியையும் ஒரு வலியையும் ஏற்படுத்தினான்

وتأملوا عباد الله كيف أن الله سبحانه سخر نبيا هو موسى عليه السلام ووليا هو الخضر عليه السلام لإقامة جدار في قرية بخيلة فاعترض موسى عليه السلام قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْراً ))الكهف77 
ثم يخبر الخضر عليه السلام سبب فعله بالغيب الذي أطلعه الله عليه في هذا الأمر فيقول:
((وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحاً )) الكهف:82.
.

وقال ابن عباس : حفظا بصلاح أبيهما ، وقيل كان بينهما وبين الأب الصالح سبع آباء ،(تفسير الخازن

 

والتقوى وصية السلف الصالح رضوان الله عليهم ومن وصايا الرسول - صلى الله عليه وسلم - لمعاذ بن جبل:( اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن.)رواه الترمذي

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى (البقرة197) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ (ابن ماجة) بَاب الْورع والتقوي- كِتَاب الزُّهْدِ

 

புதன், 23 நவம்பர், 2022

உலக காரியங்களில் நிதானமும் ஆலோசனை கேட்பதும் அவசியம்

 


25-11-2022

 

 

بسم الله الرحمن الرحيم 

உலக காரியங்களில் நிதானமும் ஆலோசனை கேட்பதும் அவசியம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 




 

சில காரியங்களில் அவசரப்படுவது அவசியம். சில காரியங்களில் நிதானம் அவசியம்.

துன்யாவுடைய காரியங்களில் நிதானம் அவசியம். ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு திருமணம் நடத்த வேண்டுமானால் அதற்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பார்க்க வேண்டுமானால் நிதானம் மிக அவசியம்.

எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து அக்காரியத்தில் இறங்க வேண்டும்

عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذِ الأَمْرَ بِالتَّدْبِيرِ ، فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا ، فَأَمْضِهِ ، وَإِنْ خِفْتَ غَيًّا ، فَأَمْسِكْ "(شرح السنة- مشكاة- باب الحذر والتأني- باب السلام

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் எந்த ஒரு உலக காரியத்தையும் திட்டமிட்டு, யோசித்துச் செய்யுங்கள். அதன் பின் விளைவு நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள். அதன் பின் விளைவு கெட்டதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள். 

துன்யாவின் காரியங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமும், நடுநிலையும் மிகச் சிறந்தது

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ

மறுமையின் நன்மையான காரியத்தைச் செய்வதற்கு யோசிக்கக்கூடாது.

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة

அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள். 

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் சிலர் வருகை தந்து மஸ்ஜிதுக்காக அன்பளிப்புக் கேட்டபோது யோசிக்காமல் உடனே இடது கை அருகில் இருந்த ஒரு பண முடிப்பை எடுத்து அப்படியே தந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் இடது கையால் எடுத்துக் கொடுத்ததில் கவலையும் இருந்தது. அதற்கு இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் விளக்கம் கூறினார்கள். என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாறுவதற்குள் என்னுடைய மனம் மாறி விட்டால் என்ன செய்வது அதனால் தான் இடது கையால் தந்தேன் என்றார்கள்.                                       

 

وقال الطيبي : معناه أن الأمور الدنيوية لا يعلم أنها محمودة العواقب حتى يتعجل فيها أو مذمومة حتى يتأخر عنها بخلاف الأمور الأخروية لقوله سبحانه (فاستبقوا الخيرات) (فيض القدير) (إلا في عمل الآخرة) فإنه غير محمود بل الحزم بذل الجهد فيه لتكثير القربات ورفع الدرجات ذكره القاضي

துன்யாவின் காரியங்களில் யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

عن الزهري عن رجل من بَلِىٍّ قال  أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنَاجى أبي دُوني قال فقلتُ لأبي ما قال لك قال إذا أردتَ أمرا فعليك بالتؤدة حتى يُريَك الله منه المخرج أو حتى يجعل الله لك مخرجا رواه البخاري في الأدب المفرد

என் தந்தையுடன் நபி ஸல் அவர்கள் ரகசியம் பேசினார்கள். நான் என் தந்தையிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் அதில் அல்லாஹ் உனக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்தும் வரை நிதானத்தை கடை பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியதாக என் தந்தை கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)

அழகிய மவுனமும் உலக காரியங்களில் நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பங்குகளில் ஒன்றாகும்.

விளக்கம்- நுபுவ்வத் என்பது பல பாகங்களாகப் பிரிவது கிடையாது. இருப்பினும் மேற்காணும் தன்மைகள் நபிமார்களின் தன்மைகளைப் போன்றதாகும். நூல் மிர்காத் நபிமார்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள். 

நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ (ترمذي)  عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-بَاب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ

துன்யாவின் ஒரு காரியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல்,அவசரப்பட்டுச் செய்தால் அக்காரியம் கெட்டு விடும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم : إِذَا تَأَنَّيْتَ. وَفِى رِوَايَةِ الْمُعَاذِىِّ وَالشُّعَيْبِىِّ وَالْهَرَوِىِّ :« إِذَا تَبَيَّنْتَ أَصَبْتَ أَوْ كِدْتَ تُصِيبُ وَإِذَا اسْتَعْجَلْتَ أَخْطَأْتَ أَوْ كِدْتَ تُخْطِئُ ».(سنن الكبري)

நன்கு யோசித்து அதைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்காக இஸ்திகாரா தொழுவது சுன்னத். ஏதேனும் முக்கியமான (உலக) காரியத்தை தொடங்கும் முன்போ அல்லது அதை தொடங்குவதில் குழப்பம் ஏற்படும்போதோ நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இஸ்திகாரா தொழுகை இரண்டு ரக்அத் தொழுது பின்வரும் துஆவை ஓதினால்

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ. (بخاري) باب الدُّعَاءِ عِنْدَ الاِسْتِخَارَةِ .- الدعوات

பொருள்- யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தின் பொருட்டால் நான் தொடங்கும் இக்காரியத்தில் நலம் உண்டாகுவதை உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய ஆற்றலின் பொருட்டால் இக்காரியத்தை நான் துணிவுடன் செய்வதையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருளையும் நான் வேண்டுகிறேன். என்னிடம் எவ்வித ஆற்றலும் இல்லை. நீ தான் ஆற்றல் உடையவன். (எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவு பற்றி) நான் எதையும் அறியாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நீ மறைவானவைகளை அறியும் ஞானமுள்ளவன். ஆகவே (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்)இக்காரியம்  என் இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் நன்மையாக அமையும் என்று நீ அறிந்தால் இதை செய்வதற்குரிய ஆற்றலை எனக்கு தருவாயாக ! இதை எனக்கு எளிதாக்குவாயாக! இதில் எனக்கு பரக்கத்தையும் தருவாயாக ! அதற்கு மாறாக  (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்) இக்காரியம்  என்னுடைய இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் தீமையாக அமையும் என்று நீ அறிந்தால் இக்காரியத்தையும் விட்டும் என்னையும் திருப்புவாயாக ! என்னை விட்டு இக்காரியமும் திரும்பிச் செல்ல வைப்பாயாக ! இதை விட நன்மை எங்கே, எதில் இருக்குமோ அதை எனக்கு ஏற்படுத்துவாயாக ! அதை எனக்கு பிடித்தமானதாகவும் ஆக்கி வைப்பாயாக !  நூல்- புஹாரீ-5382

இஸ்திகாரா தொழுத பின் வேறு எந்த சகுணமும் பார்க்காமல்

அல்லாஹ் மீது முழு நம்பிக்கையுடன் காரியத்தை துவங்குவது

عن ابْن عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْأُمَّةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلَاءِ أُمَّتِي قَالَ لَا وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قَالَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَهَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ لَا حِسَابَ عَلَيْهِمْ وَلَا عَذَابَ قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لَا يَكْتَوُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ (بخاري) باب مَنْ لَمْ يَرْقِ-كتاب الطب

 எனக்குப் பல சமுதாயத்தவர் (மிஃராஜின் போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, ஒரு நபி பத்துக்கும் குறைவான) ஒரு சிறுகுழுவினரோடு இருந்தார். அவ்வளவு தான் அவருடைய உம்மத். பிறகு இரண்டே இரண்டு பேர் மட்டுமே உம்மத்தாக இருக்கும் மற்றொரு இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர் கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.மேலும்,மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள் என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர் என்று எனக்குச் சொல்லப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.

 எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது பற்றி மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம் என்று கூறினர். வேறு சிலர்,இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம் என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக் கொண்டிருந்தனர்.

  அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து, எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டனர். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்கள் யாரெனில், யாருக்கும் (ஷிர்க்கான முறையில்) மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்திலும் (ஷிர்க்கான முறையில்)மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம்முடைய காரிங்களில் முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறினார்கள்.

 அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களுள் நீரும் ஒருவர்தாம் என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார் என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வேண்டும் முயற்சியும் வேண்டும். பறவை பறந்து  செல்கிறது அல்லாஹ் உணவளிக்கிறான்

عن عُمَرَ رضي الله عنه يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا (ابن ماجة)  بَاب التَّوَكُّلِ وَالْيَقِينِ- كِتَاب الزُّهْدِ

எங்கும் செல்ல முடியாத இயலாதவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடம் தேடி உணவு வரலாம். தவக்குல் இருந்தால்.... பாறைக்குள் இருக்கும் தேரைக்கும், வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் அல்லாஹ் உணவளிப்பது போல

முக்கியமான விஷயங்களில் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைகளையோ அல்லது நமக்கு மிக நெருக்கமான நல்லடியாரின் ஆலோசனையைக் கேட்டு நிதானமாக முடிவெடுப்பது.

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (ال عمران159) وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (سورة الشوري 38)عن أَبي الْهَيْثَمِ رضي الله عنه... فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ لَكَ خَادِمٌ قَالَ لَا قَالَ فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٌ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْ مِنْهُمَا فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا (ترمذي) بَاب مَا جَاءَ فِي مَعِيشَةِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الزُّهْدِ

 அபுல் ஹைதம் ரழி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் உனக்கு அடிமைகள் உள்ளார்களா என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறியவுடன் நபி ஸல் அவர்கள் நம்மிடம் அடிமைகள் யாரேனும் வந்தால் நீங்கள் வாருங்கள். நான் உமக்கு அடிமைகளைத் தருகிறேன் என்று கூற, அவ்வாறே நபி ஸல் அவர்களிடம் இரண்டு அடிமைகள் கொண்டு வரப்பட்டபோது அபுல் ஹைதம் ரழி அங்கு வந்தார்கள். அவரிடம் நபி ஸல் அவர்கள் இந்த இரு அடிமைகளில் யாரேனும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். என்று கூற, அதற்கு அபுல் ஹைதம் ரழி அவர்கள் நீங்களே எனக்குத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக ஆலோசனை கேட்பவர் நஷ்டங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர் என்று கூறி விட்டு இந்த இரு அடிமைகளில் இதோ இவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவர் தொழுவதை நான் பார்த்தேன். இவரிடம் நல்ல விதமாகவும் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.                 

ஆலோசித்து முடிவெடுப்பது தவக்குலுக்கு மாற்றமாகாது. தவக்குல் மட்டும் போதும் ஆலோசனை எதற்கு என்றும் கருதக்கூடாது

المسألة الثانية : دلت الآية على أنه ليس التوكل أن يهمل الانسان نفسه ، كما يقوله بعض الجهال ، وإلا لكان الأمر بالمشاورة منافياً للأمر بالتوكل ، بل التوكل هو أن يراعي الانسان الأسباب الظاهرة ، ولكن لا يعول بقلبه عليها ، بل يعول على عصمة الحق .

மனைவியிடம் ஆலோசனை கேட்கலாம். எனினும் எல்லா முடிவுகளையும் மனைவியிடமே ஒப்படைத்து விடுவது தான் தவறு.

ولما فرغ رسول الله صلى الله عليه وسلم من قضية الكتاب قال : ( قوموا فانحروا ) ، فوالله ما قام منهم أحد حتى قال ثلاث مرات، فلما لم يقم منهم أحد قام فدخل على أم سلمة، فذكر لها ما لقي من الناس، فقالت : يا رسول الله، أتحب ذلك ؟ اُخْرج، ثم لا تكلم أحداً كلمة حتى تنحر بدنك، وتدعو حالقك فيحلقك، فقام فخرج فلم يكلم أحداً منهم حتى فعل ذلك، نحر بُدْنَه، ودعا حالقه فحلقه، فلما رأي الناس ذلك قاموا فنحروا، وجعل بعضهم يحلق بعضاً،(الرحيق المختوم

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்கா பயணம் ரத்தாகி விட நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம் அனைவரும் எழுந்து முடியை நீக்குங்கள் என்றார்கள். மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியும் யாரும் எழுந்திருக்கவில்லை. காஃபிர்களின் ஒருதலைப் பட்சமான உடன்படிக்கையை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்ற ஆதங்கம் சஹாபாக்களுக்கு இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மனைவி உம்முசல்மா (ரழி) அவர்களிடம் சென்று ஆலோசித்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் உங்களுடைய ஒட்டகத்தை அறுத்து விடுங்கள். முடியையும் நீக்கி விடுங்கள். அதற்குப் பிறகு அனைவரும் வேறு வழியின்றி முடியை நீக்கி விடுவார்கள் என்று கூற,அவ்வாறே நபி(ஸல்) செய்தார்கள். அவர்கள் செய்வதைப் பார்த்து நபித்தோழர்களும் தங்களின் முடிகளை நீக்கினார்கள்.                                                              

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي) بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ سَبِّ الرِّيَاحِ- كِتَاب الْفِتَنِ

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் இருந்து உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுமோ அதுவரை இந்த பூமியின் மேற் பரப்பு பூமியின் கீழ் பரப்பை விட நல்லதாகும். அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்கும். ஆனால் உங்களில் தலைவர்கள் கெட்டவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சர்களாகவும் உங்களின் காரியங்கள் முற்றிலுமாக பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் ஆகிவிடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு பூமியின் மேற்பரப்பை விட நல்லது. அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்காது. ஆபத்துகள் நிறைந்திருக்கும்.                  

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு  கால் என்பது போல் எந்த ஒரு காரியத்திலும் ரெண்டுங்கெட்டான் நிலை இருக்கக்கூடாது. ஆலோசனைக்குப்பின் அல்லது இஸ்திகாரா தொழுகைக்குப்பின் ஒரு காரியத்தை செய்ய முடிவெடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து துணிவுடன் இறங்க வேண்டும்

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)المعنى أنه إذا حصل الرأي المتأكد بالمشورة فلا يجب أن يقع الاعتماد عليه بل يجب أن يكون الاعتماد على إعانة الله وتسديده وعصمته ، والمقصود أن لا يكون للعبد اعتماد على شيء إلا على الله في جميع الأمور

துன்யாவின் எத்தனையோ காரியங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக்கூடாது என கற்றுத் தரப்பட்டுள்ளது உதாரணம்..... பாதி நிழலிலும், பாதி வெயிலிலும் உட்காரக் கூடாது

عن أَبي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ (ابوداود) بَاب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ- كِتَاب الْأَدَبِ

உங்களில் ஒருவர் வெயிலில் அமர்ந்திருக்கும்போது வெயில் அந்த இடத்தை விட்டும் நீங்கி நிழல் வந்து விட்டால் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அவர் அமர வேண்டாம். அந்த இடத்தை விட்டும் எழுந்து விடட்டும்.

செருப்பணிந்தால் இரண்டு காலிலும் அணிவது அல்லது இரண்டையும் கழட்டி விடுவது. ஒரு காலில் மட்டும் அணியக்கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا (بخاري) باب لاَ يَمْشِى فِى نَعْلٍ وَاحِدٍ- اللباس

பாதி மொட்டை பாதி முடி – இதுவும் கூடாது

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ (بخاري) باب الْقَزَعِ- كتاب اللباس- القزع : هو أن يحلق رأس الصبى فيترك بعض شعره

சிறு சிறு தோல்விகளை எண்ணி சோர்ந்து விடக் கூடாது

عَنْ أَنَسٍ قَالَ كَانَتْ الْعَضْبَاءُ لَا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَابَقَهَا فَسَبَقَهَا الْأَعْرَابِيُّ فَكَأَنَّ ذَلِكَ شَقَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ لَا يَرْفَعَ شَيْئًا مِنْ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ ( ابوداود

நபி (ஸல்)அவர்களுக்குச் சொந்தமாக அழ்பா என்ற ஒட்டகம் இருந்தது. பந்தயம் என்றால் அதுதான் ஜெயிக்கும். ஆனால் வழமைக்கு மாற்றமாக அன்று ஒரு கிராமவாசி ஒட்டகத்தைக் கொண்டு வந்தார். அது ஜெயித்து விட்டது. சஹாபாக்கள் அனைவருக்கும் மிகவும் கவலை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்கும் ஒன்று என்றாவது ஒருமுறை தோற்பது அல்லாஹ்வின் நியதி என்றார்கள்.               

 

 

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...