வெள்ளி, 29 டிசம்பர், 2023

சிரமத்துடன் செய்யும் அமல்களுக்கு சிறந்த நற்கூலி உண்டு

 

وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا (78) الاسراء

நற்காரியங்கள் அனைத்தும் நன்மையில் சமமானவை அல்ல. நிய்யத்தை கவனித்து நன்மைகள் மாறுபடும் மேலும் அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும். சில நற்காரியங்களுக்கு செய்யாமலேயே நன்மைகள் கிடைக்கும். சில நற்காரியங்களை செய்தும் நன்மை கிடைக்காது.

நிய்யத் சரியில்லாததால் செய்தும் நன்மை கிடைக்காமல் போவதற்கு உதாரணம்.

(தர்மம் செய்த பிறகு அதைச் சொல்லிக் காட்டுவதால் அதற்கு நன்மை இல்லாமல் போய் விடும்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى... (264) البقرة

நிய்யத் சரியாக இருந்தால் செய்யாமலேயே நன்மைகள் கிடைப்பதற்கு உதாரணம்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا مَا سَلَكْنَا شِعْبًا وَلَا وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ حَبَسَهُمْ الْعُذْرُ (بخاري

நபி ஸல் அவர்கள் ஒரு போரில் இருந்த போது கூறினார்கள். சில ஜனங்கள் (நம்மோடு வராமல்) மதீனாவில் தங்கி விட்டார்கள். (இருந்தாலும் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள்.) நாம் எந்தெந்த பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்கிறோமோ எந்தெந்த கணவாய்களைக் கடந்து செல்கிறோமோ அங்கெல்லாம் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள். காரணம் சூழ்நிலைகள் அவர்களைத் தடுத்துள்ளது. (ஆனால் அவர்களின் நிய்யத் நம்மோடு வர வேண்டும் என்று  தான் உள்ளது.)

  நாம் சகித்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும்

சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி குர்ஆனை  ஓதுபவருக்கு மிகுந்த நற்கூலி உண்டு.

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ (مسلم) وفِي حَدِيثِ وَكِيعٍ وَالَّذِي يَقْرَأُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ لَهُ أَجْرَانِ (الماهر بالقرآن) هو الحاذق الكامل الحافظ الذي لا يتوقف ولا يشق عليه القراءة لجودة حفظه وإتقانه ( ويتتعتع فيه ) هو الذي يتردد في تلاوته لضعف حفظه فله أجران أجر بالقراءة وأجر بتتعتعه في تلاوته ومشقته ]

கருத்து- குர்ஆனை மனப்பாடமாக அல்லது ஓதுபவருக்கும் சிறப்பு உண்டு ஆனால் அதை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி ஓதுபவருக்கு இரு மடங்கு நற்கூலி உண்டு

          வாகனத்தில் வருபவரை விட நடந்து வருபவருக்கு சிறப்பு

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-كِتَاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ

 மஸ்ஜிதை விட்டும் தூரமான வீடுகளைக் கொண்ட பனூஸலமா குடும்பத்தார்கள் மஸ்ஜிதுக்கு அருகில் மனைகள் காலியாக இருப்பதைக் கேள்விப்பட்டு மஸ்ஜிதுக்கு அருகில் தங்களுடைய வீடுகளை மாற்றியமைத்துக் கொள்ள நாடினார்கள். அப்போது நபி ஸல் அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த து. அவர்களிடம் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் இடம் பெயர நாடுகிறீர்களா என நபி ஸல் அவர்கள் கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் பனூ ஸலமா குடும்பத்தாரே உங்களுடைய எட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் எழுதப்படும் அதை இழக்காதீர்கள் என்றார்கள்

                   

عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-

நற்கூலியால் மக்களில் சிறந்தவர்கள் மஸ்ஜிதை நோக்கிய தூரமான நடை கொண்டவர்களாகும்.

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا أَبْعَدَ مِنْ الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ قَالَ فَقِيلَ لَهُ أَوْ قُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَاءِ قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَايَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-

உபய் இப்னு கஃப் ரழி கூறினார்கள். ஒரு மனிதர் இருந்தார் மஸ்ஜிதை நோக்கி தூரமாக நடந்து வருபவர்களில் அவரை விட யாரையும் நான் கண்டதில்லை. அவரிடம் நான் நீங்கள் ஒரு கழுதையை வாங்கிக் கொள்ளக்கூடாதா என்று கேட்க, அதற்கு அவர் என்னுடைய நடை ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் எழுதப்படுவதை விரும்புகிறேன் என்று கூறினார். அவரைப் பற்றி நபி ஸல் கூறும்போது அவர் அனைத்து நன்மைகளை சேகரித்துக் கொண்டார் என்றார்கள்

சிரமத்துடன் செய்யும் அமலை சஹாபாக்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்

முஆத் ரழி அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிய போது அழுதார்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது நான் மவ்த் வந்து விட்டதை நினைத்து அழவில்லை மாறாக, இனி நான் ஜிஹாத் செய்ய முடியாதே என்றும், கடுமையான குளிர் காலங்களில் இரவில் நின்று வணங்க முடியாதே என்றும், கடுமையான வெயில் காலங்களில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனிமேல் எனக்குக் கிடைக்காதே என்பதற்காகவும் நான் அழுகிறேன் என்றார்கள்.

கஞ்சன் செய்யும் தர்மத்திற்கு அதிக நற்கூலியும் இதே அடிப்படையில் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ شَحِيحٌ أَوْ صَحِيحٌ تَأْمُلُ الْعَيْشَ وَتَخْشَى الْفَقْرَ وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا كَانَتْ بِالْحُلْقُومِ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ (مسند احمد)

யாருக்கும் தெரியாமல் தர்மம் செய்ய எண்ணி மூன்று இரவுகள் அலைந்தவரின் முயற்சி வீணாகவில்லை

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ .(بخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவுஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.                                         

பனி காலத்தில் பெரும்பாலும் ஃபஜ்ரு தொழுகை பல பேருக்கு தவறி விடுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَضْلُ صَلَاةِ الْجَمِيعِ عَلَى صَلَاةِ الْوَاحِدِ خَمْسٌ وَعِشْرُونَ دَرَجَةً وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الصُّبْحِ يَقُولُ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا(78الاسراء) (بخاري)

அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...

நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.  ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில்  இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள்.  பெண்களின் வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்                                                

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ (ابوداود)

காலையில் சுப்ஹு தொழுது விட்டு நேரத்தோடு வியாபாரத்தை துவக்க வேண்டும் என்ற நபிமொழி

عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابوداود)

அதிகாலை நேரத்தில் நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு எழுப்பி அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர வேண்டும். அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம் பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை மதரஸாக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை கண்டதையும் பார்த்து விட்டு பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK  என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால் மார்க்கக் கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை மாற ஒரேவழி இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு எழுப்புவது தான்.

கடும் குளிரிலும் அதிகாலை எழுந்து  உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة

إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)

إسباغ الوضوء على المكاره يعني: في السبرات في البرد يُسبغ الإنسان الوضوء مع أنه يكره إيذاءه بهذا الماء البارد ن لكنه يفعله ابتغاء وجه الله هذا من أسباب دخول الجنة كذلك الإنسان عندما يسافر للحج او للجهاد  هذا مكروهاً عنده ، لكنه كما قال تعالى:{وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ (216البقرة (شرح كتاب الرقاق) قيل: ومنها الجد في طلب الماء مع إعوازه وشراءه بالثمن الغالي(مرعاة شرح مشكاة)

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது 

கடும் பனியும் கூட அல்லாஹ்வின் சோதனை தான்

நரகம் தன்னுடைய பனியை தானே தாங்கிக் கொள்ளாமல் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி பனியைத் தான் குளிர்காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)

 நரகம் அல்லாஹ்விடம் என்னுடைய ஒரு பகுதி மற்றொரு பகுதியை ஆக்கிரமிக்கிறது (அந்த அளவுக்கு எனக்குள் இருக்கும் வெப்பமான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் எனக்குள் இருக்கும் பனி நிறைந்த பகுதிகளில் பனியின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது)  என்று அல்லாஹ்விடம் முறையிடும். அப்போது அல்லாஹ் நரகத்திற்கு (உன்னில் ஒரு பகுதியை இலேசாக வெளியே விட்டுக் கொள் என்று) வெயில் காலத்திலும் பனி காலத்திலும்  அனுமதி கொடுப்பான். அதனடிப்படையில் வெயில் காலத்தில் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பத்தையே நீங்கள் வெயில் நேரத்தில் அனுபவிக்கிறீர்கள். அதுபோல் பனி காலத்தில் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி பனியையே நீங்கள் குளிர் நேரத்தில் அனுபவிக்கிறீர்கள்.                                      

விளக்கம்- எவ்வாறு மனித உடம்புக்குள் சில நேரங்களில் அதிகப்படியான GAS  சேர்ந்து விடும்போது அதை சற்று வெளிப்படுத்தினால் தான் உடலுக்கு நிம்மதி என்பதைப் மேற்படி ஹதீஸை நாம் எடுத்துக் கொள்ளலாம்.    

 படிப்பினை- புஹாரீ இமாம் அவர்கள் நரகம் ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதன் படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்தக் குளிரை தாங்க முடியாமல் காதுகளையும், முகத்தையும் முற்றிலுமாக மறைத்துக் கொண்டு காலை நேரங்களில் நாம் நடமாடுகிறோம் என்றால் அந்த நரகத்தின் கடும் குளிரை விட்டு நம்மை பாதுகாக்க எதை வைத்து மறைத்துக் கொள்ள முடியும்.

நரகத்தின் பனியில் ஒருநாள் வேதனைப்படுவது நரகத்தின் நெருப்பில் ஆயிரம் வருடம் வேதனைப்படுவதை விட பயங்கரமானது

لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا (13)الدهر

சுவனத்தில் பனியையும் வெப்பத்தையும் காண முடியாது என்ற வசனத்தின் விளக்கமாக பின்வரும் தஃப்ஸீர் கூறப்பட்டுள்ளது

الزمهرير:البرد القاطع وقال مقاتل بن حيان: هو شيء مثل رؤوس الإبر ينزل من السماء في غاية البرد وقال ابن مسعود : هو لون من العذاب وهو البرد الشديد حتى ان أهل النار إذا ألقوا فيه سألوا الله أن يعذبهم بالنارألف سنة أهون عليهم من عذاب الزمهرير يوما واحدا (قرطبي)

உடம்பெல்லாம் ஊசியால் உடம்பில் குத்தினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு நரகத்தின் பனியின் தாக்கம் இருக்கும்.

கடும் குளிர் கலந்த சூறாவளி காற்றின் மூலம் ஆது சமூகத்தினர் அழிக்கப் பட்டார்கள்

قَالَ تَعَالَى " فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا (حم السجدة16) " قَالَ بَعْضهمْ وَهِيَ الشَّدِيدَة الْهُبُوب وَقِيلَ الْبَارِدَة وَقِيلَ هِيَ الَّتِي لَهَا صَوْت وَالْحَقّ أَنَّهَا مُتَّصِفَة بِجَمِيعِ ذَلِكَ فَإِنَّهَا كَانَتْ رِيحًا شَدِيدَة قَوِيَّة لِتَكُونَ عُقُوبَتهمْ مِنْ جِنْس مَا اِغْتَرُّوا بِهِ مِنْ قُوَاهُمْ وَكَانَتْ بَارِدَة شَدِيدَة الْبَرْد جِدًّا كَقَوْلِهِ تَعَالَى "(وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (سورة الحاقة(6)(تفسير ابن كثير)

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதைப் பற்றி....

ஒவ்வொரு புத்தாண்டு துவங்கும் போதும் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. உதாரணமாக 2001-ல் ஒருவர் பிறந்திருக்கிறார் அவருக்கு 2061-ல் மவ்த்தை அல்லாஹ் அவருடைய விதியில் எழுதியிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவருடைய வாழ்க்கை அறுபது வருட காலம். இப்போது சிந்தியுங்கள்.  2024 ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறக்கும்போது  அவரது ஆயுள்  ஐம்பதாக குறையும். 2020 ஜனவரி 1-ல் அவருடைய ஆயுள் நாற்பதாக குறையும் இவ்வாறாக...ஆயுள் குறைந்து கொண்டே வருவதை பிறந்த நாள், புத்தாண்டு என்ற பெயரில் கேக் வெட்டி. ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார் என்றால் அவர் புத்திசாலியாக இருக்க முடியுமா?

 

வாழ்க்கை என்பது மவ்த்தை நோக்கிய ஒரு பயணம் இந்தப் பயணத்தில் பலரும் தன் வாகனத்தில் ஏற நம்மை அழைப்பார்கள். ஷைத்தான்,  நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.

ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில் ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது

عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ، فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ، وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر بإذن الله فأنت الراكب وأنا الراجل.( تفسير الرازي

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற  ஒருவர் இப்றாஹீமே எங்கு செல்கிறீர்?  எனக்கேட்க, நான் கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா?  என்றார். அதற்கு  இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன. அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால் நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன்.  நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின் படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான் வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில் செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார்.                                                     

புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ், மது போதை போன்ற கேளிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மேற்படி அறிவுரை சென்றடைய வேண்டும். போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் நமது இளைஞர்கள் தான் முண்ணனியில் உள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

புத்தாண்டு கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்

ஆண்டு ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு ஏன் இந்த கொண்டாட்டம்? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் புத்தாண்டு பிறந்து விட்டதுஎன்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்? அதிகமான சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா?  புத்தாண்டு பிறந்து விட்டால் அனைவரின் நாவுகளிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம். இதை சொல்வதினால் என்ன பயன்? இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது இளைய சமுதாயத்தில் சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே ஏற்படப் போவதில்லை. குடிகாரர்களின் உல்லாச தினமாக இந்த நாள் இருப்பதைத் தவிர வேறெதுவுமில்லை

சீசனில் மட்டும் தொழுவதற்கு வருபவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர். ரமழான் 27-ம் நாள், ஜும்ஆ, ஈத் ஆகிய நாட்களைத் தொடர்ந்து ஜனவரி-1ம் தேதி ஃபஜ்ரில் சில புதிய முகங்களை மஸ்ஜிதில் காண முடியும். அன்று அவர்கள் பக்தியோடு துஆவும் செய்வர். இவர்கள் சந்தர்ப்பவாதிகள்

சந்தர்ப்பவாதிகளின் துஆக்களை அல்லாஹ் ஏற்பது சுலபமல்ல

ஆழ்கடல் இருளில் சிக்கிய இரு நபர்கள் துஆ செய்தனர். அவர்களில் ஒருவரின் துஆவை மட்டும் அல்லாஹ் ஏற்று அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஏனெனில் அவர் எப்போதும் துஆ செய்பவர். அந்த சிரமத்திலும் துஆ செய்தார். எனவே அவரது துஆ ஏற்கப்பட்டது.  அவர் தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம். இன்னொருவனும் துஆ செய்தான். அவன் தான் ஃபிர்அவ்ன் அவன் சந்தர்ப்பவாதி. இதற்கு முன்பு தன்னையே கடவுள் என்று வாதிட்டவன். கடைசியில் ஆபத்து வந்தவுடன் மூன்று தடவை ஈமானுடைய வாசகங்களைக் கூறி மன்னிப்புக் கேட்டான். ஆனால்...

 


வியாழன், 21 டிசம்பர், 2023

பேரிடர் காலங்களில் உதவுவதும் உதவி பெறுவதும்

 மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற வரை உதவ வேண்டும் என்பதையும் மேலும் இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் தரும் நிவாரணத் தொகைகளைப் பெறுவது பற்றி பலரின் மனதில் உள்ள சந்தேகங்களை நீக்குவதையும் உள்ளடக்கி இந்த தலைப்பு தொகுக்கப் பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டதைப் போன்றே தென் மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல மக்கள் ஒவ்வொரு மஹல்லாவிலும் பரவலாக வசிக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்த படியே பல்வேறு உதவிகளைச் செய்யலாம்.

சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது நபிமார்களின் நல்ல குணமாகும்

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (25) قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26) قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (27) القصص

பஞ்சமான காலங்களில் உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும்

يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49)يوسف

  விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை  சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப்படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு  தந்தையைச் சந்திப்பதற்கும் கூட அவர்கள் வர முடியவில்லை.                            

சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும் 

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

 யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.          

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                                                          

عَن أَنَس بن مالك : أن رسول الله صلى الله عليه وسلم قال : من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة ، أو ذخرها له يوم القيامة. (مسند البزار

யார் பாதிக்கப் பட்டவருக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு 73 மஃபிரத்துகளை வழங்குகிறான். அவற்றில் ஒரு மஃபிரத் மட்டுமே அவருடைய இம்மையின் ஈடேற்றத்திற்குப் போதுமாகும். மூதமுள்ள 72 மஃபிரத் அவருடைய மறுமையின் நலனுக்காக சேமித்து வைக்கப்படும். 

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடு பட்டிருப்பான்.                                                      

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன. 

عَنِ الْبَرَاءِ ...قَالَ.. مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْمٍ جُلُوسٍ فِي الطَّرِيقِ قَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَاهْدُوا السَّبِيلَ وَرُدُّوا السَّلَامَ وَأَغِيثُوا الْمَظْلُوم – احمد

 عن أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رضي الله عنه  قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ بِالْمَعْرُوفِ قَالَ فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ (بخاري

பேரிடர் காலங்களில் அரசாங்கம் தரும் நிதி உதவிகளைப் பெறுவது பற்றி....

பேரிடர் காலங்களில் அரசாங்கம் தரும் நிதி உதவிகளைப் பெறுவது பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உண்டு. அது கூடாது என்று ஃபத்வா கொடுப்பவர்களும் உண்டு. சிலர் அதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் அப்படியே செலவு செய்யாமல் வைத்திருப்பவர்களும் உண்டு. அது பற்றிய விளக்கம்...

தேர்தலுக்கு முன்பு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் போன்று 

இந்த நிவாரணத்தைப் பணத்தை கருத முடியாது

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் பஞ்சமான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்த தை இங்கு உதாரணமாக  கூறலாம்.

 இந்தப் பணத்தை பயன்படுத்துவது கூடாது என்று கூறுவதாக இருந்தால் எத்தனையோ விஷயங்களில் அரசாங்கம் தரும் சலுகைகளையும் கூடாது என்று சொல்ல வேண்டியது வரும். உதாரணமாக முதியோர் ஓய்வூதியம், இரயிலில் முதியோர்களுக்கு சலுகை, அரசு பஸ்ஸில் பெண்களின் இலவசப் பயணம், அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் இன்னும் இதுபோன்றவைகளை கூடாது என்று சொல்ல வேண்டியது வரும். 

وَلَا يَجُوزُ قَبُولُ هَدِيَّةِ أُمَرَاءِ الْجَوْرِ لِأَنَّ الْغَالِبَ في مَالِهِمْ الْحُرْمَةُ إلَّا إذَا عَلِمَ أَنَّ أَكْثَرَ مَالِهِ حَلَالٌ بِأَنْ كان صَاحِبَ تِجَارَةٍ أو زَرْعٍ فَلَا بَأْسَ بِهِ لِأَنَّ أَمْوَالَ الناس لَا تَخْلُو عن قَلِيلٍ حَرَامٍ فَالْمُعْتَبَرُ الْغَالِبُ وَكَذَا أَكْلُ طَعَامِهِمْ كَذَا في الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ

அநியாயக்கார அரசர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்பது கூடாது. காரணம் அவர்களின் பணங்கள் பெரும்பாலும் முறையற்ற சம்பாத்தியமாகும் ஆனால் அநியாயக்கார அரசன் என்றாலும் அரசாங்கத்தின் வருவாயில் மற்ற முறையான வருவாயும் அதிகம் இருந்தால் அப்போது அந்த அரசர்கள் தரும் வாங்குவது தவறில்லை. காரணம் மக்களின் பணம் சிறிதளவு ஹராமை விட்டும் நீங்காமல் இருக்காது. - நூல் ஃபாதாவா ஹிந்திய்யா            


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் காலத்தில் மோசமான ஆட்சியாளர் ஒருவர் இருந்தார். அவர் மக்களியமிருந்து அநியாயமாக பணம் வசூலிப்பவராக இருந்தார். ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் யார் தவறு செய்தாலும் தனது பயானில் அதைக் கண்டிப்பார்கள். சம்பந்தப்ப்பட்ட அந்த ஆட்சியாளர் ஒருமுறை அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சபைக்கு வந்து பண முடிப்பைக் கொடுக்க முன் வந்தார். அதை ஏற்க அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர் மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கொடுக்க முயற்சித்த போது அதை வாங்கிய அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கையில் அதை வாங்கி இரு கைகளாலும் நசுக்கினார்கள். தீனார்களால் நிரம்பியிருந்த அந்தப் பண முடிப்பிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அதைக் கண்டதும் அவர் மயங்கி விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்தவுடன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் அவரை நோக்கி மக்களின் இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்து அதை என்னிடமே தர முயற்சி செய்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்குப் பிறகு அவர் அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். 


தமிழக அரசாக இருந்தாலும் சரியே அல்லது இந்திய அரசாங்கமாக இருந்தாலும் சரியே டாஸ்மாக் போன்ற முறையற்ற வருவாய்களும் இருந்தாலும் கூட அது அல்லாத எத்தனையோ முறையான வருவாய்களும் அரசுக்கு உள்ளதால் அதை முற்றிலும் ஹராம் என்று கூறி விட முடியாது.   

   أَهْدَى إلَى رَجُلٍ شيئا أو أَضَافَهُ إنْ كان غَالِبُ مَالِهِ من الْحَلَالِ فَلَا بَأْسَ إلَّا أَنْ يَعْلَمَ بِأَنَّهُ حَرَامٌ فَإِنْ كان الْغَالِبُ هو الْحَرَامَ يَنْبَغِي أَنْ لَا يَقْبَلَ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلَ الطَّعَامَ إلَّا أَنْ يُخْبِرَهُ بِأَنَّهُ حَلَال

قال الْفَقِيهُ أبو اللَّيْثِ رَحِمَهُ اللَّهُ تَعَالَى اخْتَلَفَ الناس في أَخْذِ الْجَائِزَةِ من السُّلْطَانِ قال بَعْضُهُمْ يَجُوزُ ما لم يَعْلَمْ أَنَّهُ يُعْطِيهِ من حَرَامٍ قال مُحَمَّدٌ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَبِهِ نَأْخُذُ ما لم نَعْرِفْ شيئا حَرَامًا بِعَيْنِهِ وهو قَوْلُ أبي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَأَصْحَابِهِ كَذَا في الظَّهِيرِيَّةِ 

 ( الفتاوى الهندية في مذهب الإمام الأعظم أبي حنيفة النعمان)

ஃபகீஹ் அபுல் லைஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள். ஆட்சியாளர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்கும் விஷயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் கூறும்போது தெளிவாக ஹராம் என்று உறுதியாக தெரியும் வரை அது அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறியுள்ளனர். இமாம் முஹம்மது ரஹ் அவர்களும் அதையே கூறியுள்ளனர். இதுதான் இமாம் அபூஹனீஃபா ரஹ் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களின் கூற்றாகவும் உள்ளது.             

فَفِي الْبَزَّازِيَّةِ قُبَيْلَ كِتَابِ الزَّكَاةِ : مَا يَأْخُذُهُ مِنْ الْمَالِ ظُلْمًا وَيَخْلِطُهُ بِمَالِهِ وَبِمَالِ مَظْلُومٍ آخَرَ يَصِيرُ مِلْكًا لَهُ وَيَنْقَطِعُ حَقُّ الْأَوَّلِ فَلَا يَكُونُ أَخْذُهُ عِنْدَنَا حَرَامًا مَحْضًا (رد المختار

எத்தனையோ முஸ்லிம்களின் மனதில் அரசு தரும் நிவாரண உதவிகளைப் பெறுவதில் நெருடல் உள்ளது.

அரசின் வருவாய் பெரும்பாலும் டாஸ்மாக் மூலம் தானே வருகிறது என்று கருதுகின்றனர். அது பற்றிய தெளிவு

ஹிதாயா ஃபிக்ஹ் கிதாபில் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக நிறைய சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் சில...

وَإِذَا بَاعَ الْمُسْلِمُ خَمْرًا وَأَخَذَ ثَمَنَهَا وَعَلَيْهِ دَيْنٌ فَإِنَّهُ يُكْرَهُ لِصَاحِبِ الدَّيْنِ أَنْ يَأْخُذَ مِنْهُ ، وَإِنْ كَانَ الْبَائِعُ نَصْرَانِيًّا فَلَا بَأْسَ بِهِ ) وَالْفَرْقُ أَنَّ الْبَيْعَ فِي الْوَجْهِ الْأَوَّلِ قَدْ بَطَلَ ؛ لِأَنَّ الْخَمْرَ لَيْسَ بِمَالٍ مُتَقَوِّمٍ فِي حَقِّ الْمُسْلِمِ فَبَقِيَ الثَّمَنُ عَلَى مِلْكِ الْمُشْتَرِي فَلَا يَحِلُّ أَخْذُهُ مِنْ الْبَائِعِ .وَفِي الْوَجْهِ الثَّانِي صَحَّ الْبَيْعُ ؛ لِأَنَّهُ مَالٌ مُتَقَوِّمٌ فِي حَقِّ الذِّمِّيِّ فَمَلَكَهُ الْبَائِعُ فَيَحِلُّ الْأَخْذُ مِنْهُ . (هداية)  فصل في البيع


 ஒரு முஸ்லிம் மதுவை விற்று அதை வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்குக் கடன் கொடுத்த ஒருவர் அவரிடம் தன் கடனைத் திரும்பப் பெறுகிறார் என்றால் என்ன தான் அது தனக்கு வந்து சேர வேண்டிய கடன் தான் என்றாலும் அது மது விற்ற பணம் என்பதால் அதை வாங்குவது மக்ரூஹ் ஆகும். ஆனால் அதே நேரத்தில் கடன் வாங்கிய அந்த நபர் முஸ்லிம் அல்லாதவராக இருந்து அவருக்கு இவர் கடன் தந்திருந்தால் இவர் கொடுத்த கடனைத் திருப்பி வாங்குவது மக்ரூஹ் அல்ல. தாராளமாக அது கூடும். காரணம் முந்திய மஸ்அலாவில் முஸ்லிம் என்பதால் அவரைப் பொறுத்த வரை மது கூடாது என்ற நிலை உள்ளது. ஒரு முஸ்லிம் தனக்கு ஹராமான முறையில் வருவாய் ஈட்டியிருப்பதால் அவரிடமிருந்து வாங்குவது மக்ரூஹ். ஆனால் இரண்டாவது மஸ்அலாவில் அந்த மாற்று மதத்தவரைப் பொறுத்த வரை மது விற்பனை கூடும் என்ற நிலை உள்ளது. தன்னைப் பொறுத்த வரை முறையானதாக உள்ள வகையில் வருவாய் ஈட்டியிருப்பதால் அவரிடமிருந்து வாங்குவது மக்ரூஹ் அல்ல. 

படிப்பினை- இதுபோன்று தான் என்ன தான் அரசாங்கம் மது விற்பனை மூலம் நிறைய சம்பாதித்தாலும் அது அவர்களைப் பொறுத்த வரை தவறான வியாபாரம் அல்ல. எனவே அதன் மூலம் வருகின்ற வருவாயைத் தானே நமக்குத் தருகிறார்கள் என்ற நெருடல் தேவையற்றதாகும்.                                            

மாற்று மத ஆட்சியாளர்கள் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்ட நபி ஸல் அவர்கள்

وَقَالَ أَبُو حُمَيْدٍ أَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً بَيْضَاءَ وَكَسَاهُ بُرْدًا (بخاري

அய்லாவின் அரசர் நபி ஸல் அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேரிக் கழுதையை அன்பளிப்புச் செய்தார். நபி ஸல் அவர்கள் அவருக்கு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார்கள்

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه و سلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة و أطعمني منها قطعة (حاكم

இந்தியாவில் இருந்து சென்ற சேரமான் பெருமான் என்ற மன்னர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து ஒரு பை நிறைய இஞ்சியைக் கொண்டு வந்து அன்பளிப்பாக தந்தார். அதை தன் தோழர்களுக்கு நபி ஸல் பங்கிட்டார்கள்.


நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.


மாற்று மத அரசன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தந்த அன்பளிப்பு தான் ஹாஜரா அலை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنْ الْمُلُوكِ أَوْ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ فَقِيلَ دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ قَالَ أُخْتِي ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ لَا تُكَذِّبِي حَدِيثِي فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي وَاللَّهِ إِنْ عَلَى الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ الْأَعْرَجُ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ تُصَلِّي وَتَقُولُ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ فَقَالَ وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً (بخاري

சாரா அம்மையார் பற்றிய சம்பவம் விரிவாக புகாரி ஷரீஃபில் ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும், சாரா அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனது வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம், "இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்; அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினான். அவர்களிடம் சாராவைப் பற்றி, "இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் சகோதரி” என்று பதிலளித்தார்கள். பிறகு சாராவிடம் சென்று, "சாராவே! பூமியின் மேல் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையுடையவர் எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நீ என் சகோதரி என்று நான் அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ என்னைப் பொய்யனாக்கி விடாதே!” என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அவர்கள் அவனிடம் சென்ற போது, அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் தண்டிக்கப்பட்டான். "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப் பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து "நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சாரா அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முடியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப் பெண்ணாக அளித்தான்” என்று கூறினார்கள்.நூல்: புகாரி (3358)

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...