வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பொது வாழ்வில் பேணுதல் மிக அவசியம்

 


26-08-2022

 

بسم الله الرحمن الرحيم 

பொது வாழ்வில் பேணுதல் மிக அவசியம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




இறையச்சம் என்பது மஸ்ஜிதில் மட்டுமா என்ற கடந்த வாரத் தலைப்பின் தொடர்ச்சியாகவும் இதை ஆக்கிக் கொள்ளலாம்

மற்ற மக்களால் கவனிக்கப்படுகின்ற வகையில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், சமுதாயத் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி பேணுதலோடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி..     

  

{ اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن } [رواه الترمذي وأحمد]

நபிமார்களிடம் சிறு சறுகுதல் ஏற்பட்டாலும் அல்லாஹ் பெரிய தண்டனையைத் தந்தது மற்ற மக்களுக்காக...

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ (139) إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ (140) فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ (141) فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ (142) فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ (143) لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ (144) فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ (145) وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ (146) الصافات

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35) فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ (36) البقرة

பொது வாழ்வில் பேணுதலைக் கடைபிடிப்பவர்களுக்கு சிறந்த உதாரணம் நபி ஸல் அவர்கள்

عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود

நபி ஸல் அவர்கள் ஒரு ஜனாஸா அடக்கி முடித்து விட்டுத் திரும்பிய போது அவர்களை ஒரு பெண் விருந்துக்கு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது அங்கே பரிமாறப்பட்ட இறைச்சி உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறாமல் வாங்கப்பட்ட ஆட்டின் இறைச்சி என்பதை உணருவதாக கூறி, அந்தப் பெண்ணை அழைத்து விபரம் கேட்டார்கள். அப்போது அந்தப் பெண் உங்களுக்கு விருந்து கொடுப்பதற்காக ஆடு வாங்க முயற்சித்தேன். கிடைக்கவில்லை. இறுதியில் அண்டை வீட்டார் தற்போது தான் ஒரு ஆடு வாங்கியிருப்பதை அறிந்து பணம் கொடுத்து அனுப்பினேன். கணவர் வீட்டில் இல்லை. மனைவியிடம் நீங்கள் எப்படியேனும் உங்கள் கணவரிடம் சொல்லி சம்மதம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பணம் தந்து இந்த ஆட்டை வாங்கி வந்தேன் என்றார். நபி(ஸல்) அவர்கள் அதை சாப்பிட விரும்பவில்லை. இதை காஃபிரான கைதிகளுக்கு உணவாக கொடுத்து விடுங்கள் என்றார்கள்.   

பொதுவாழ்வில் பேணுதலைக் கடைபிடித்த முன்னோர்களின் வரலாறுகள்

وفي تهذيب الكمال عن الإمام الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.

இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்று பேணுதலாக ஒருவரை நான் கண்டதில்லை. மற்றொரு இமாம் கூறினார்கள். அவர்கள் வஃபாத்தான நேரத்தில் கட்டுப் படுத்த முடியாத கூட்டம் காரணமாக ஆறு முறை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. வகீஃ ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் அமானிதத்தைப் பாதுகாப்பதில் மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார்கள். சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் யாரைப் பற்றியும் புறம் பேசியதை நான் கண்டதில்லை. 

وعن قيس بن الربيع، قال: كان أبو حنيفة ورعًا، فقيهًا، كثير البر والصلة لكل من لجأ إليه، كثير الأفضال على إخوانه، وكان يبعث البضائع إلى بغداد فيشترى بها الأمتعة، ويجلب إلى الكوفة، ويجمع الأرباح من سنة إلى سنة، فيشترى بها حوائج الأشياخ المحدثين وأثوابهم وكسوتهم، وما يحتجون إليه، ثم يعطيهم باقى الدنانير من الأرباح، ويقول: أنفقوها فى حوائجكم، ولا تحمدوا إلا الله تعالى، فإنه والله ما يجريه الله لكم على يدى، فما فى رزق الله حول لغيره. (تهذيب الأسماء واللغات للعلامة أبى زكريا محيي الدين بن شرف النووي)

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் தன்னை நாடி வருபவர்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். குறிப்பாக தன் சொந்த பந்தங்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். ஒருமுறை பக்தாதுக்கு தன் சரக்குகளை அனுப்பிய இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் அதில் பெரும்பகுதியை ஹதீஸ் கலையில் ஈடுபட்டிருக்கும் வறியவர்களுக்கு நிறைய வாரி வழங்கினார்கள். பின்பு அவர்களிடம் நீங்கள் என்னிடம் இதைப் பெற்றுக் கொண்ட பின் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழக்கூடாது. எல்லாம் அவன் தந்தது. என்னிடம் எதுவும் இல்லை என்றும் கூறுவார்கள்.            

இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு

قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم ولا احب ان اجلس في ظل فناء داره

மேற்படி ஹதீஸின் பொருள் - ஒரு நான் இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது. அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதில் கூறினார்கள்.                                                 

மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி விடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்)  அதே வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்.         

كان حفص بن عبد الرحمن شريك أبي حنيفة وكان أبو حنيفة يجهز عليه فبعث إليه في رفقة بمتاع وأعلمه أن في ثوب كذا وكذا عيبا فإذا بعته فبين فباع حفص المتاع ونسي أن يبين ولم يعلم ممن باعه فلما علم أبو حنيفة تصدق بثمن المتاع كله (تهذيب الكمال

இமாமுல் அஃழம் அவர்கள் அவர்களுடைய வியாபார நண்பரான் ஹஃஸ் இப்னு அப்துர் ரஹ்மான் ரஹ் அவர்களிடம்  வியாபார விஷயமாக தன் சரக்குகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். விற்பனைப் பொருட்களில் ஒன்றில் குறை இருந்தது. அந்தக் குறையைச் சொல்லி அப்பொருளை விற்கும்படி சொல்லி அனுப்பினார்கள். ஆனால் அந்த நண்பர் அப்பொருளை விற்கும்போது குறையை சொல்ல மறந்து விட்டார். இமாமுல் அஃழம் அவர்களிம் அதற்கான பணம் வந்த போது யாருக்கு அந்தப் பொருள் விற்கப்பட்டது என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது இமாமுல் அஃழம் அவர்கள் அந்தப் பணத்தை தாம் பயன்படுத்தாமல் அப்படியே தர்மம் செய்து விட்டார்கள்.

பொது வாழ்வில் மக்களால் பின்பற்றப்படும் நபர் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது

قال عبد السلام المباركفوري إن الإمام البخاري ركب البحر مرة في أيام طلبه وكان معه ألف دينار ، فجاءه رجل من أصحاب السفينة، وأظهر له حبه ومودته وأصبح يقاربه ويجالسه فلما رأى الإمام حبه وولاءه مال اليه وبلغ الأمر أنه بعد المجالسات أخبره عن الدنانير الموجودة عنده .وذات يوم قام صاحبه من النوم فأصبح يبكي ويعول ويمزق ثيابه ويلطم وجهه ورأسه ، فلما رأى الناس حالته تلك أخذتهم الدهشة والحيرة وأخذو يسألونه عن السبب ، وألحوا عليه في السؤال ، فقال لهم : عندي صرة فيها ألف دينار وقد ضاعت!.فأصبح الناس يفتشون ركاب السفينة واحدا واحدا ،وحينئذ أخرج البخاري صرة دنانيره خفية وألقاها في البحر ، ووصل المفتشون إليه وفتشوه أيضا حتى انتهوا من جميع ركاب السفينة ، ولم يجدوا شيئا فرجعوا إليه ولاموه ووبخوه توبيخا شديدا (سيرة البخاري

 .இமாம் புஹாரீ அவர்கள் ஒரு நேரத்தில் கடல் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களுடன் ஒருவன் மிகவும் அன்பாக நடந்து கொள்வது போல் நடித்தான். அவன் ஒரு திருடன். அவனை நம்பிய இமாம் அவர்கள் அவனுடன் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். தன்னிடம் ஒரு பை இருப்பதையும் அதில் ஆயிரம் தீனார்கள் இருப்பதையும் அவனிடம் தெரிவித்து விட்டார்கள். இதைத் தான் அவன் எதிர் பார்த்தான். அன்றைய இரவு முடிந்து காலை நேரம் ஆனதும் அவன் தன் ஒப்பாரி வைத்தவனாக தன்னிடம் இன்ன அடையாளத்துடன் கூடிய ஒரு இருந்ததாகவும் அதில் ஆயிரம் தீனார்கள் இருந்ததாகவும் அதை இப்போது காணவில்லை என்பதாகவும் நடித்தான். இவன் சொன்னதன் பேரில் அனைவருடைய உடைமைகளையும் சோதிக்கப்பட்டது. இமாம் அவர்கள் இவனுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார்கள். யாருக்கும் தெரியாமல் அந்தப் பையை கடலில் வீசி விட்டார்கள். அனைவரிடமும் தேடிப் பார்த்தவர்கள் இமாம் அவர்களிடமும் தேடினர். பை கிடைக்கவில்லை. திருடன் ஏமாற்றம் அடைந்தான். அது மட்டுமன்றி அவன் ஒரு பொய்யன் என்பதும் அங்கு நிரூபிக்கப்பட்டு விட்டது. பின்னால் இமாம் அவர்களிடம் இதைப்பற்றிக் கேட்கப்பட்ட போது அதற்கு அவர்கள் ஆயிரம் தீனார்களை எப்போதும் சம்பாதித்துக் கொள்ளலாம். இழந்த மானம் மரியாதையை மீண்டும் சம்பாதிக்க முடியாது. பல மக்களால் நான் பின்பற்றப் படும் சூழ்நிலையில் என்னிடம் இதுபோன்ற குறையைக் கண்டால் மக்கள் நான் சொல்வதை நம்ப மாட்டார்கள் என்றார்கள்.

மக்களால் பின்பற்றப்படும் நபர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஹதாயா நூலில்...

قال ومن دعى إلي وليمه أو طعام فوجد ثمة لعبا أو غناء فلا بأس بأن يقعد ويأكل قال أبو حنيفة رحمه الله ابتليت بهذا مرة فصبرت وهذا لأن أجابة الدعوة سنة قال عليه الصلاة والسلام من لم يجب الدعوة فقد عصى أبا القاسم فلايتركها لما اقترنت به من البدعة من غيره كصلاة الجنازة واجبة الإقامة وإن حضرتها نياحة فإن قدر على المنع منعهم وإن لم يقدر يصبر وهذا إذا لم يكن مقتدى به فإن كان مقتدى ولم يقدر على منعهم يخرج ولا يقعد لأن في ذلك شين الدين وفتح باب المعصية على المسلمين والمحكى عن أبي حنيفة رحمه الله في الكتاب كان قبل أن يصير مقتدى به ولو كان ذلك على المائدة لا ينبغي أن يقعد وإن لم يكن مقتدى لقوله تعالى { فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين } وهذا كله بعد الحضور ولو علم قبل الحضور لا يحضر لأنه لم يلزمه حق الدعوة (هداية

 சுருக்கம்- அனாச்சாரம் நடப்பதை நாம் அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு விருந்துக்கு நாம் சென்றால் மன வெறுப்புடன் அதில் கலந்து கொண்டு உடனே திரும்புவது தவறில்லை. ஆனால் மக்களால் பின்பற்றப்படும் நபர் இதுபோன்ற விருந்துகளில் எந்த சூழ்நிலையிலும் கலந்து கொள்ளக்கூடாது

பொது வாழ்வில் பொறுமையும் நிதானமும் மிக அவசியம்

قال نسطور لما بعث صاحبيه ليدعوان الملك إلى دين عيسى وأمرهما بالرفق فخالفا وأغلظا عليه فحبسهما وآذاهما فقال لهما نسطور : مثلكما كالمرأة التي لم تلد قط فولدت بعد ما كبرت فأحبت أن تعجل شبابه لتنتفع به فحملت على معدته ما لا يطيق فقتلته.(فيض القدير

 நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருக்கமான  ஒருவர் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்க தன் சார்பில் இருவர ஒரு ஊருக்கு அனுப்பி வைத்த போது அவ்விருவரிடமும் நீங்கள் மென்மையான முறையில் தான் மக்களை அழைக்க வேண்டும் என்றார் ஆனால் அவ்விருவரும் அந்த ஊருக்குச் சென்றவுடன் சற்று கடுமையாக நடந்து கொண்டனர். மக்களை நிர்பந்தப் படுத்தினர். அதனால் அவ்விருவரும் அரசனால் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது  அவ்விருவரிடமும் கூறினார்

உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒரு பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. பிறகு அவள் தன் முதிய வயதில் தான் கர்ப்பம் அடைந்தாள். ஆனால் அந்தக் குழந்தை சீக்கிரமாக வளர வாலிபனாக வேண்டும் என ஆசைப்பட்டாள். அந்தக் குழந்தை அவள் நினைத்த போன்று சீக்கிரமாக வளராத காரணத்தால் அவளே அக்குழந்தையைக் கொன்று விட்டாள்.  

وَقَدْ قِيلَ إِنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ سَأَلَ أُبَيّ بْن كَعْب عَنْ التَّقْوَى فَقَالَ لَهُ أَمَا سَلَكْت طَرِيقًا ذَا شَوْك ؟ قَالَ بَلَى قَالَ فَمَا عَمِلْت قَالَ شَمَّرْت وَاجْتَهَدْت قَالَ فَذَلِكَ التَّقْوَى .(تفسير ابن كثير

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே தக்வா என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். எப்படிக் கடந்து சென்றீர்கள்? சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன் என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள் இவ்வாறு தான் இறையச்சமும் என்று பதிலளித்தார்கள்..

 

 

 

 

                                                           

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா?

 


19-08-2022

MUHARRAM- 20

 

بسم الله الرحمن الرحيم

இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 





الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191)ال عمران  وقال النبي صلى الله عليه وسلم : « من أطاع الله عزَّ وجلَّ فقد ذكره ومن عصاه فقد نسيه تفسير التستري

இன்றைய காலத்தில் பல முஸ்லிம்கள் தொழுகையை வெறும் சடங்காக மட்டும் உள்ளச்சமின்றி நிறைவேற்றுகின்றனர். இதனால் தொழுகை மட்டும் தான் அவர்களிடம் இருக்கிறதே தவிர பள்ளியை விட்டு வெளியேறியவுடன்  பொய், பொறாமை, வஞ்சகம், ஆளுக்குத் தகுந்த மாதிரி நடித்தல், மற்றவர்களைத் தாழ்வாக கருதுதல், கொடுக்கல் வாங்கலில் மோசடிபோன்ற பல்வேறு தவறுகள் தொழுபவர்களிடமும் குடி கொண்டுள்ளது. தொழுதால் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என எண்ணுகின்றனர். சிறுபாவங்கள் மட்டும்தான் மன்னிக்கப்படுமே மேற்படி பெரும்பாவங்கள் மன்னிக்கப்படாது

 தொழுதால் மட்டும் சுவனம் கிடைத்து விடுமா ? நெற்றியில் சஜ்தா அடையாளம் உள்ள சிலரும் நரகத்தில் இருப்பர்

عن ابي هريرة رض عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (في حديثه الطويل) إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ  وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ قَدْ امْتَحَشُوا6 فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ (بخاري)بَاب فَضْلِ السُّجُود

மறுமையில் நபிகளாரின் ஷஃபாஅத்தின் மூலம் பலர் சுவனம் சென்றாலும் அல்லாஹ் நாடிய சிலர் நரகத்தில் இருப்பர். அவர்களில் தொழுகையாளிகளும் அடங்குவர். அவர்களையும் வெளியேற்றும்படி அல்லாஹ் உத்தரவு பிறப்பித்த பின் மலக்குகள் அந்த மனிதர்களை வெளியேற்றுவார்கள். அவர்களின் நெற்றியில் உள்ள சஜ்தா அடையாளத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்வார்கள். அல்லாஹ் அந்த அடையாளத்தை மட்டும் நரக நெருப்புக்கு ஹராமாக்கியிருப்பான். மற்ற பகுதிகளையெல்லாம் நரக நெருப்பு தீண்டி கரிக்கட்டைகளைப் போல் இருக்கும் அவர்களை வேளியேற்றி அவர்களின் மீது சுவனத்தின் ஜீவநதி ஊற்றப்படும்.உடனே அவர்கள் சேற்று மண்ணில் விளையும் செடி போன்று புதிய மனிதர்களாக மாறுவார்கள். அவர்களை சுவனத்தில் நுழைக்கப்படும்

 

 

நம்முடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் இறையச்சம் நீடிக்க வேண்டும்

ஹுஸைன் அஹ்மது மதனீரஹ் கூறினார்கள்.இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும்என அதிகமாக உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப் பாதுகாப்பதற்கு.... இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு விடும்  

 

கடன் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில் இறையச்சம் வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أُشْهِدُهُمْ فَقَالَ كَفَى بِاللَّهِ شَهِيدًا قَالَ فَأْتِنِي بِالْكَفِيلِ قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلًا قَالَ صَدَقْتَ فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى فَخَرَجَ فِي الْبَحْرِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ الْتَمَسَ مَرْكَبًا7 يَرْكَبُهَا يَقْدَمُ عَلَيْهِ لِلْأَجَلِ الَّذِي أَجَّلَهُ فَلَمْ يَجِدْ مَرْكَبًا فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا8 فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ ثُمَّ زَجَّجَ9 مَوْضِعَهَا ثُمَّ أَتَى بِهَا إِلَى الْبَحْرِ فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنِّي كُنْتُ تَسَلَّفْتُ فُلَانًا أَلْفَ دِينَارٍ فَسَأَلَنِي كَفِيلَا فَقُلْتُ كَفَى بِاللَّهِ كَفِيلًا فَرَضِيَ بِكَ وَسَأَلَنِي شَهِيدًا فَقُلْتُ كَفَى بِاللَّهِ شَهِيدًا فَرَضِيَ بِكَ وَأَنِّي جَهَدْتُ أَنْ أَجِدَ مَرْكَبًا أَبْعَثُ إِلَيْهِ الَّذِي لَهُ فَلَمْ أَقْدِرْ وَإِنِّي أَسْتَوْدِعُكَهَا فَرَمَى بِهَا فِي الْبَحْرِ حَتَّى وَلَجَتْ فِيهِ ثُمَّ انْصَرَفَ وَهُوَ فِي ذَلِكَ يَلْتَمِسُ مَرْكَبًا10 يَخْرُجُ إِلَى بَلَدِهِ فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ فَإِذَا بِالْخَشَبَةِ الَّتِي فِيهَا الْمَالُ11 فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ ثُمَّ قَدِمَ الَّذِي كَانَ أَسْلَفَهُ فَأَتَى بِالْأَلْفِ دِينَارٍ فَقَالَ وَاللَّهِ مَا زِلْتُ جَاهِدًا فِي طَلَبِ مَرْكَبٍ لِآتِيَكَ بِمَالِكَ فَمَا وَجَدْتُ مَرْكَبًا قَبْلَ الَّذِي أَتَيْتُ فِيهِ قَالَ هَلْ كُنْتَ بَعَثْتَ إِلَيَّ بِشَيْءٍ قَالَ أُخْبِرُكَ أَنِّي لَمْ أَجِدْ مَرْكَبًا قَبْلَ الَّذِي جِئْتُ فِيهِ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالْأَلْفِ الدِّينَارِ رَاشِدًا (بخاري) 2291

'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.அப்போது,பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார். நூல் புகாரீ                                  

படிப்பினை- கொடுத்த வாக்கை எப்படியேனும் காப்பாற்ற நினைப்பவருக்கு அல்லாஹ்வும் உதவி செய்வான்

 

ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுவதை தவிர்த்து இறையச்சத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ وَهَؤُلَاءِ بِوَجْهٍ (ابوداود)  عَنْ عَمَّارٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ (ابوداود) 

மறுமை நாளில் மனிதர்களில் மிகக் கெட்டவர்கள் இரட்டை நாவு கொண்டவர்கள்.இவர்களுக்கு நெருப்பாலான நாவு தரப்பட்டு தண்டிக்கப்படும்.

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார். இதைக் கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம் ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது- நூல் மனாஜிலுல் ஆகிரா

 

பிறரின் நிலத்தை அநியாயமாக அபகரிக்காமல் இருப்பதில் இறையச்சம்

عن زيد بن أسلم رض قال :كان للعباس بن عبد المطلب رض دار الي جنب مسجد المدينة فقال له عمر رض بِعنِيها 7 : فأراد عمر رض ان يزيدها في المسجد، فأبي العباس رض ان يبيعها إياه فقال عمر رض فهَبْها لي فأبي فقال فوَسّعْها انت في المسجد، فأبي فقال عمر رض لابد لك من احداهن فأبي عليه فقال خذ بيني وبينك رجلا، فأخذ أبيَّ بن كعب رض فاختصما اليه فقال أبيّ رض لعمر رض :ما أري أن يُخرجه من داره حتي ترضيه .فقال له عمر رض: أرأيت قضائك هذا في كتاب الله وجدته أم سنة من رسول الله صلي الله عليه وسلم؟ فقال أبيّ: بل سنة من رسول الله صلي الله عليه وسلم فقال عمر رض وما ذاك؟ فقال اني سمعت رسول الله صلي الله عليه وسلم يقول:إن سليمان بن داود عليهما الصلاة والسلام-لما بني بيت المقدس جعل كلما بني حائطا أصبح مُنهدما، فأوحي الله اليه أن لاتبني في حق رجل حتي ترضيه)) فتركه عمر رض فوسَّعها 8 ) (العباس رض بعد ذلك في المسجد (حياة الصحابة)

அப்பாஸ் ரழி அவர்களுக்குச் சொந்தமான வீடு மஸ்ஜிதுக்கு அருகில் இருந்தது. மஸ்ஜிதை விரிவு படுத்துவதற்காக அந்த இடம் தேவைப்பட்டது. அப்போது கலீபா உமர் ரழி அவர்கள் இந்த வீட்டை எனக்கு விற்று விடுங்கள். என்றார்கள். ஆனால் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். அப்படியானால் அன்பளிப்பாகத் தந்து விடுங்கள் என்று கூறிய போது அதற்கும் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள்.  சரி நீங்களே மஸ்ஜிதுடைய விரிவாக்கத்திற்குத் தகுந்த மாதிரி உங்கள் வீட்டை ஆக்கிக் கொடுங்கள் என்ற போது அதற்கும் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். கடைசியில் உமர் ரழி அவர்கள் நான் சொல்லும் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாக வேண்டும் என்று கூறியபோது அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். அப்போது உமர் ரழி சரி..நமக்கு மத்தியில் ஒரு நடுவரை ஆக்கிக்கொள்வோம்என்றபோது அதற்கு அப்பாஸ்ரழி சம்மதித்தார்கள்.அவ்வாறே ஆக்கப்பட்டது. இருவரின் வாதத்தையும் கேட்ட உபய் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களிடம் நீங்கள் ஒருவரின் முழு சம்மதம் இல்லாமல் அவரின் நிலத்தை மஸ்ஜிதுக்காக எவ்வாறு எடுக்க முடியும் என்று தீர்ப்புக்கூற, உடனே உமர் ரழி அவர்கள் இதை நீங்களாக கூறுகிறீர்களா அல்லது குர்ஆன் ஹதீஸில் இருந்து கூறுகிறீர்களா என்று கேட்க, அதற்கு உபய் ரழி அவர்கள் நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டேன். சுலைமான் அலை பைத்துல் முகத்தஸைக் கட்டிய போது அதன் ஒரு பக்கச்சுவர் கட்டக் கட்ட இடிந்து கொண்டே இருந்தது. அப்போது அல்லாஹ் நபி சுலைமான் அலை அவர்களிடம் இன்னொருவருக்கு உரிமையுள்ள இடத்தில் அவரின் சம்மதம் இல்லாமல் நீங்கள் மஸ்ஜிதை கட்டக்கூடாது என்று வஹீ அறிவித்தான். பின்பு அவரிடம் சம்மதம் வாங்கினார்கள். அதன்பின்பே சுவர் நீடித்தது.                                                         

இந்த ஹதீஸைக் கூறியவுடன் உமர் ரழி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப் பின்பு அப்பாஸ் ரழி அவர்களே மஸ்ஜிதுக்காக தன் வீட்டை விட்டுக் கொடுத்தார்கள்.                    

குறிப்பு- எத்தனையோ சகோதரர்களுக்கு மத்தியில், அண்டை வீட்டாருக்கு மத்தியில் இந்த நிலத் தகராறு இருக்கிறது. அதனால் வருடக் கணக்கில் பகையுடன் இருக்கிறார். ஒருவரிடமிருந்து ஒரு ஜான் நிலத்தை அபகரித்துக் கொண்டாலே மறுமையில் ஏழு நிலங்களை அவர் கழுத்தில் கட்டி தொங்க விடப்படும்

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (بخاري

தொழுகையை உள்ளச்சம் இல்லாமல் நிறைவேற்றுவது தான் பாவங்களை விட்டும் விலகாமல் இருப்பதற்குக் காரணம்

"إِنَّ الصَّلَاة تَنْهَى عَنْ الْفَحْشَاء وَالْمُنْكَر(العنكبوت45 ) أي الصلاة مع الحشوع - واستدل به الغزالي  على أن الخشوع شرط للصلاة قال لأن صلاة الغافل لا تمنع من الفحشاء والمنكر(فيض القدير) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ فُلاَنًا يُصَلِّي بِاللَّيْلِ  فَإِذَا أَصْبَحَ سَرَقَ قَالَ:إِنَّهُ سَيَنْهَاهُ مَا تَقُولُ (أحمد) أي مثل هذه الصلاة لا محالة تنهاه فيتوب عن السرقة قريباً (مرقاة)

உணவு உண்ணும் போது அதன் ஒழுக்கங்களைப் பேணுவதால் அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய செயலாக மாறும்

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنْ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا (مسلم) باب اسْتِحْبَابِ حَمْدِ اللَّهِ تَعَالَى بَعْدَ الأَكْلِ وَالشُّرْبِ.- كتاب الذكر والدعاء والتوبة

வாகனத்தில் செல்வதும் வணக்கமாக மாறும்.அதை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தவனுக்கு நன்றி செலுத்தினால்...

عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ قَالَ شَهِدْتُ عَلِيًّا رَضِي الله عنه وَأُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ قَالَ بِسْمِ اللَّهِ فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا قَالَ الْحَمْدُ لِلَّهِ ثُمَّ قَالَ"سُبْحَانَ الَّذِي سَخَّرَلَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ(الزخرف14  ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ "سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ" ثُمَّ ضَحِكَ فَقِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ ثُمَّ ضَحِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ قَالَ إِنَّ رَبَّكَ يَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ اغْفِرْ لِي ذُنُوبِي يَعْلَمُ أَنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي (ابوداود) بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا رَكِبَ- كِتَاب الْجِهَادِ

முஸ்லிமின் வியாபாரமும் கூட பரக்கத்தைப் பெற்றுத்தரும் வணக்கமாக மாறும். நேர்மை இருந்தால்.

عَنْ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ  عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا كَسَبَ الرَّجُلُ كَسْبًا أَطْيَبَ مِنْ عَمَلِ يَدِهِ وَمَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ وَوَلَدِهِ وَخَادِمِهِ فَهُوَ صَدَقَةٌ (ابن ماجة) بَاب الْحَثِّ عَلَى الْمَكَاسِبِ- كِتَاب التِّجَارَاتِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري) كتاب البيوع

 

 

 

முடிவுரை- உலகில் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சண்டை. சச்சரவுகள் குற்றங்கள், அனைத்தும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறையச்சம் ஏற்படுவதினால்  மட்டுமே முடியும். காவல் துறையோ இராணுவமோ,  ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது போலீஸோ, இராணுவத்தினரோ, ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியுமென்றிருந்தால் மனிதர்கள் அனைவரும் குற்றம் செய்யாதவர்களாக இருந்திருப்பார்கள். மாறாக காவல் துறையும், இராணுவமும் பெருகப் பெருக சண்டை சச்சரவுகளும், தீய எண்ணங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் உள்ளங்களில் இறையச்சம் இல்லாமல் போனது தான். ஆகவே மனிதன் எல்லா நிலைகளிலும் குற்றங்களை விட்டும நீங்குவதற்கு இறையச்சமே முக்கியக் காரணமாகும். உதாரணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களும், பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள் அதனைப் பாதுகாப்பதற்கும் அங்கு எவரும் இல்லை இந்நிலையில் அல்லாஹ்வுடைய பயம் மட்டும் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் அப்பொருட்களிலிருந்து சிறிதளவையும் நீங்கள் எடுக்க மாட்டீர்கள் ஏனெனில் பிறர் பொருளை அனுமதியின்றி எடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் தண்டனை கிடைக்கும் என்ற பயம் உங்களை தடுத்து விடும்

 

சிறிய சோதனை ஏற்பட்டாலும்  தன்னிடம் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டதாக வருந்தும் அளவுக்கு இறையச்சம்

قال ابن عبد البر في بهجة المجالسوقد وفد على عمر بن الخطاب بفتح، فقال: متى لقيتم عدوكم؟ قالوا: أول النهار. قال: فمتى انهزموا؟ قالوا: آخر النهار. فقال: إناّ لله! وأقام الشرك للإيمان من أول النهار إلى آخره!! والله إن كان هذا إلاّ عن ذنب بعدي، أو أحدثته بعدكم، (بهجة المجالس)

ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன்  அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் இன்னா லில்லாஹ்.. சொல்லி அழ ஆரம்பித்தார்கள். (மற்றொரு அறிவிப்பில் அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.) அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன்  அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது. அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.                                                

 

ஃபத்வா &  தக்வா ஒரு விளக்கம்

தக்வாவுக்கு பேணுதல் என்று ஒரு விளக்கம் உள்ளது சில பெரும் பாவங்களைப் பற்றி குர்ஆன் கூறும்போது அதைச் செய்யாதீர்கள் என்று கூறாமல் அதை நெருங்காதீர்கள் என்று கூறுகிறது  எனவே குறிப்பிட்ட பாவத்தைச் செய்யக் கூடாது என்பது ஃபத்வா ... அதன் பக்கம் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுவது தக்வா.. ஃபிக்ஹ் ஆய்வாளர்கள் கூறுவார்கள் – அந்நியப் பெண் ஒருத்தி உளூச்  செய்து விட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய வேண்டாம். வேறு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அந்த மீதித் தண்ணீரை உபயோகிக்கும்போது இது இன்ன பெண் உபயோகித்த தண்ணீர் என்ற நினைவு வரும் அதுவும் சில நேரங்களில் தவறான சிந்தனையை மனதில் உண்டாக்கி விடும் என்று கூறுவார்கள் இதுதான் தக்வா.. பேணுதல் என்பதாகும் ஷரீஅத்தில் இத்தகைய பேணுதல் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க க்கூடாது. அந்நியப் பெண்ணிண் குரலை காது கொடுத்து கேட்கக்கூடாது. அவள் நறுமணம் பூசியிருந்தால் நம்முடைய மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். ஆகிய அனைத்தும் இந்த அடிப்படையில் கூறப்பட்டதாகும்      

                      

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ وَمَنْ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنْ الْإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ وَالْمَعَاصِي حِمَى اللَّهِ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ (بخاري) باب الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ-كتاب البيوع- وَقَالَ ابْنُ عُمَرَ رضي الله عنه لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ (بخاري) باب الإِيمَانِ - عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ترمذي)ضعيف بَاب الْوَرَعِ وَالتَّقْوَى- كِتَاب الزُّهْدِ –

விளக்கம்- எதைச் செய்வதால் அது கூடும். பரவாயில்லை என்று உறுதியற்ற நிலையில் கூறப்படுமோ அதையும் விடுவது தக்வா

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...