வியாழன், 25 ஜனவரி, 2024

குடியரசு தினம்

குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி. அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். குடியரசு தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்பதைப் பற்றிப் பேசும் முன்பு உண்மையான குடியரசு ஆட்சியை அதாவது மக்களுக்காக, மக்களுடைய மக்கள் விரும்பும் ஆட்சியைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள் தான் என்பதற்கான சில சம்பவ்வங்களைப் பேசுவது காலத்தின் கட்டாயமாகும்
 உண்மையான மக்களாட்சி என்பது அன்று நம் முன்னோர்கள் ஆட்சி செய்த முறையாகும் 
لما رجع عمر رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالت: واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل. (: سمط النجوم العوالي في أنباء الأوائل والتوالي 
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில்) ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, (தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களில் இருந்து பிரிந்து தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என அறிய ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.பேச்சின் ஊடாக உமர்(ரலி)அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?   நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி. அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள். அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்” என்றார்கள். அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி. உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என்று கலீஃபா உமர் (ரலி) கேட்ட போது, அம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன உமர்?” என்று கேட்டார். இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு  ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில்  உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட” என்றார்கள். அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார். அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள். அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள். அதை செவியுற்ற அந்த மூதாட்டி, இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம் “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி”  அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது “இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்றார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு
عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان) அதிகாரிகளை பல பகுதிகளுக்கும் அனுப்பும்போது “நீங்கள் ஒருபோதும் உயர்தர வாகனங்களைப் பயன் படுத்தக் கூடாது. உயர்தர உணவுகளை உட்கொள்ளக்கூடாது. உயர்தர ஆடைகள் உடுத்தக்கூடாது. மக்கள் உங்களைத் தேடி வரும்போது உங்கள் கதவுகள் ஒருபோதும் தாளிடப் படக்கூடாது. இச்சட்டத்தை நீங்கள் மீறினால் தண்டனை உங்களைத் தேடி வரும் என்று எச்சரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள்
 فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال: وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين لامرأة عمر -رضي الله عنه فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار". 
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமரும் மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்த்தார்கள். உடனே, தன் மனைவியிடம்,  இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே கேட்கிறார்கள்.இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என்று தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” என கோபமாகக் கூறினார்கள். மேலும் அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்” என கூறினார்கள். பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பின்பு,  ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை  முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும்,  இன்னொன்றை  அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். பைஹகீ 
சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் போட்டா போட்டி 
عن أبى صالح الغفارى : أن عمر بن الخطاب كان يتعاهد عجوزا كبيرة عمياء فى بعض حواشى المدينة من الليل فيستسقى لها ويقوم بأمرها فكان إذا جاءها وجد غيره قد سبقه إليها فأصلح ما أرادت فجاءها غير مرة فلا يسبق إليها فرصده عمر فإذا هو بأبى بكر الصديق الذى يأتيها وهو خليفة فقال عمر أنت لعمرى [كنز العمال] (لعمري) هذه من الصيغ المؤكدة، وليست قسماً، 
மதீனா எல்லையில் ஒரு மூதாட்டி இருந்தார்.அவருக்கு ஏதேனும் உதவி செய்ய உமர் ரழி வரும்போதெல்லாம் தனக்கு முன்பே வேறொரு நபர் முந்திக் கொள்வதை உமர் ரழி அவர்கள் தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு, கவலையுடன் திரும்புவார்கள். ஒருநாள் அந்த மனிதர் யாரென அறிய முற்படும் போது, அது கலீஃபா அபூபக்கர் ரழி எனத் தெரிய வந்தது. அப்போது உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி அவர்களை நோக்கி எப்பொழுதுமே நீங்கள் நீங்கள் தான். உங்களை முந்த முடியாது என்றார்கள். 
 தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழி எடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை அங்கிருந்து நகராமல் இருந்ததும்..
 عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال) 
 கருத்து- மக்களின் குறைகளை நேரடியாகத் தெரிந்து கொண்டு களைய, கலீஃபா உமர் (ரலி), இரவில் நகர் வலம் செல்வது வழக்கம். ஒருநாள் இரவு அவ்வாறு நகர் வலம் வந்த போது ஒரு பெண் பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொண்டிருந்தார். அவரிடம் உமர் ரழி அவர்கள் ஏன் குழந்தைகள் அழுகிறார்கள் என்று காரணம் கேட்க, பசியால் அழுகிறார்கள் என்று அப்பெண் பதில் கூறினார். இந்தச் சட்டியில் உள்ளது என்ன என்று உமர் ரழி அவர்கள் கேட்ட போது இதில் வெறும் தண்ணீர் மட்டும் உள்ளது. சமைக்க மாவு எதுவும் இல்லை. ஆனாலும் இதில் ஏதேனும் இருப்பதாக எண்ணி ஆறுதல் அடைவார்கள் அம்மா பசியைப் போக்கத்தான் அடுப்பில் சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்'' என எண்ணியவர்களாக பசி மயக்கத்தில் உறங்கிப் போய் விடுவார்கள். என்று அப்பெண் பதில் கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் அழுதார்கள். பின்பு சதகா தானியங்களின் கிடங்குக்குச் சென்று ஒரு மூட்டையை எடுத்து அதில் அத்தியாவசியப் பொருட்களை வைத்து அதை தன்னுடைய முதுகில் ஏற்றி விடும்படி தனது உதவியாளர் அஸ்லம் ரழி அவர்களிடம் உமர் ரழி அவர்கள் கூற, அதற்கு அந்த உதவியாளர் நான் சுமந்து வருகிறேன் என்றார்கள். ஆனால் உமர் ரழி அவர்கள் அதை மறுத்து நான் தான் இதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவேன் எனவே நானே சுமக்கிறேன் அப்பெண்ணின் வீடு வரை சுமந்து வந்தார்கள். பிறகு தானே அடுப்புப் பற்ற வைத்து அதைச் சமைத்தார்கள். அவர்களின் தாடியின் நடுவே புகையை நான் கண்டேன் என அஸ்லம் ரழி அவர்கள் கூறினார்கள். இவ்வாறாக அந்தக் குழந்தைகளின் பசியைப் போக்கி அக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதைப் பார்த்த பிறகே கலீஃபா உமர்(ரலி). அங்கிருந்து புறப்பட்டார்கள். 
 உதவிக்கு ஆளில்லாமல் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்த போது உமர் ரழி உடனே தன் மனைவியை அழைத்து வந்த சம்பவமும், அச்சமயத்திலும் தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளாத எளிமையும் 
عن أنس بن مالك بينما أمير المؤمنين عمر يعس ذات ليلة إذ مر بأعرابي جالس بفناء خيمة فجلس إليه يحدثه ويسأله ويقول له: ما أقدمك هذه البلاد؟ فبينما هو كذلك إذ سمع أنيناً من الخيمة فقال: من هذا الذي أسمع أنينه؟ فقال: أمر ليس من شأنك، امرأة تمخض، فرجع عمر إلى منزله وقال: يا أم كلثوم شدي عليك ثيابك واتبعيني، قال: ثم انطلق حتى انتهى إلى الرجل فقال له: هل لك أن تأذن لهذه المرأة أن تدخل عليها فتؤنسها، فأذن لها فدخلت فلم يلبث أن قالت يا أمير المؤمنين بشر صاحبك بغلام، فلما سمع قولها أمير المؤمنين وثب من حينه فجلس بين يديه وجعل يعتذر إليه فقال: لا عليك!! إذا أصبحت فائتنا فلما أصبح أتاه ففرض لابنه في الذرية وأعطاه(تاريخ الاسلام கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை நகர் வலம் வந்த போது ஒரு கூடாரத்தின் வெளியே கிராமவாசி கவலையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது கூடாரத்தின் உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அதைக் கேட்ட உமர் ரழி எதற்காக அப்பெண் அழுகிறார் என்று கேட்க, அதைக் கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என் மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்றார். அந்த நபருக்கு தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று தெரியாது. உமர் ரழி அவர்களும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உடனே உமர் ரழி அவர்கள் தன் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் பிரசவம் பார்ப்பதற்குரிய ஆடையை உடுத்திக் கொண்டு என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த கிராமவாசியிடம் உங்கள் மனைவிக்கு இவர் பிரசவம் பார்க்க அனுமதி தருகிறீர்களா என்று கேட்டார்கள். சரி என்று அவர் சந்தோஷத்துடன் கூறினார். உள்ளே சென்ற சற்று நேரத்தில் உமர் ரழி அவர்களின் மனைவி சப்தமாக அமீர் முஃமினீன் அவர்களே உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூற, அது கேட்ட அந்த கிராமவாசி அப்போது தான் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று அறிந்து அவர்களிடம் கடுமையாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார். அப்போது உமர் ரழி அவர்கள் பரவாயில்லை. நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் என்றார்கள் அடுத்த நாள் காலையில் அவர் வந்த போது அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்தனுப்பினார்கள். 
 أن الأحنف بن قيس قدم على عمر في وفد من العراق قدموا عليه في يوم صائف شديد الحر وهو متحجز بعباءة يهنأ بعيرا من إبل الصدقة فقال: يا أحنف ضع ثيابك وهلم وأعن أمير المؤمنين على هذا البعير فإنه من إبل الصدقة فيه حق اليتيم والأرملة والمسكين فقال رجل يغفر الله لك يا أمير المؤمنين فهلا تأمر عبدا من عبيد الصدقة فيكفيك هذا؟ فقال عمر: يا ابن فلانة وأي عبد هو أعبد مني ومن الأحنف بن قيس هذا إنه من ولي أمر المسلمين فهو عبد للمسلمين يجب عليه لهم ما يجب على العبد لسيده من النصيحة وأداء الأمانة. அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் ஈராக்கில் இருந்து மதீனா வந்திருந்த போது உமர் ரழி அவர்கள் சதகாவின் ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அஹ்னஃப் இப்னு கைஸைப் பார்த்து அஹ்னஃபே உன்னுடைய ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு இந்த வேலையில் என்னோடு உதவி செய் என்று கூற அவர்களும் அதற்கு உதவி செய்தார்கள் இருந்தாலும் அந்த அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே நீங்கள் இதற்கெல்லாம் அடிமைகளை வைத்து வேலை வாங்க க் கூடாதா என்று கேட்க, அதற்கு உமர் ரழி அவர்கள் என்னை விட அடிமை வேறு யார் இருக்கிறார் என்று கூறினார்கள் 
 குடியரசு தினம் கொண்டாடப் படுவதன் நோக்கம் 
 1947- ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஒரு நாட்டை ஆளுவதற்கான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் படுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஆகும். எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26ல் நடை முறைக்கு வந்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் தலைவர்களும் மற்ற சகோதர சமயத் தலைவர்களும் இணைந்து உருவாக்கியது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால் அதை அடியோடு மாற்றி விடலாம் என இன்றைய பாசிச அரசு முயல்கிறது. 
 இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் 
இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. அவற்றின் மீது கை வைப்பது இந்திய அரசியல் சாசனத்தின் சுவாசத்தையே முற்றாக நிறுத்தி விடுவதாகும். 25-ம் ஷரத்து- இந்தியர் எவரும் அவர் விரும்பிய மதத்தில் வாழவும், அதைப் பரப்பவும் அவருக்கு உரிமை உண்டு. ஷரத்து 26- சமயம் சார்ந்த நிறுவனங்களை, அறநிலையங்களை அமைக்க, நிர்வகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஷரத்து 27- மதம் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு ஆகும் செலவுக்கு வரி செலுத்துமாறு கட்டாயப் படுத்தக்கூடாது ஷரத்து 29-A - இந்தியக் குடிமக்கள் தாங்கள் பேசும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. ஷரத்து- 30- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை, உருவாக்க, நிர்வகிக்க உரிமை உண்டு. ஷரத்து 32- மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம். மேற்படி உரிமைகள் அனைத்தையும் அடியோடு மாற்ற நினைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச மத்திய அரசை, நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்
 ஓட்டளித்து ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அமைப்பை குஃப்ர் என்று சிலர் கூறி வருகின்றனர். 
 மக்களாட்சித் தத்துவம் என்பது நபித்தோழர்களின் வழிமுறை தான். இதை குஃப்ரு என்று கூறினால் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலான மக்களை காஃபிர்கள் என்று கூறுவதாக அமைந்து விடும். 
இமாமை தேர்ந்தெடுப்பதும் மக்கள் தேர்வு தான். மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது. 
عن بن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ثلاثة لا يقبل الله لهم صلاة: إمام قوم وهم له كارهون وامرأة باتت وزوجها عليها غضبان وأخوان متصارمان" (ابن حبان 
எனினும் கலீஃபாக்கள் தேர்வுக்கும் இன்றைய ஆட்சி முறை தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. மேற்கூறப்பட்டது போல குடியாட்சிக்கு மறைமுக ஆதாரங்கள் சில இருந்தாலும் இன்றைய ஜனநாயக முறை என்பது அதாவது ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறை நபியவர்கள் காலத்தில் இல்லை. எனினும் அது கூடும். கலீஃபாவத் தேர்ந்தெடுக்கும் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக இன்று உலகில் பரவலாக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறைக்கு மக்கள் பெரும்பாலான முஸ்லிம்களும் மாறியதற்கு காரணம் சில நிர்பந்தங்கள் தான். அதாவது இஸ்லாமிய ஆட்சியாளர்   மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர். இந்த முறை சிறப்பாக செயல்பட ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொறுப்புணர்வும் அவசியம். அது குறைந்து போனதால் தான் இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர். 19-ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக  முஸ்லிம் உலகத்திலும் தோதல் அரசியல் வெளிப்படத் தொடங்கியது. இப்போது  துருக்கி இரான் எகிப்து ஜோடான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷயா செனகல் நைஜீயா போன்ற நாடுகளில் தேர்தல் பானி ஜனநாயக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஐரோப்பா வடஅமரிக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தேர்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறார்கள். மக்களாட்சி தவறானதல்ல.ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக மாறி விடுவது தான் அநியாயம்.

வியாழன், 18 ஜனவரி, 2024

இந்தியாவில் இஸ்லாமும் இறைநேசர்களும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريح الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய நறுமணங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதன் விளக்கம்

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...

நீண்ட காலம் இந்தியாவில் இருந்த ஹஜருல்அஸ்வத் பிறகு நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவை புதுப்பித்துக் கட்டும்போது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தஃப்ஸீர் இப்னு கஸீரில் உள்ளது

عن ابن عباس رضي الله عنهما قال قال علي رضي الله عنه :أطيب ريح في الأرض الهند أهبط بها آدم عليه الصلاة و السلام فعُلِّق شجرُها من ريح الجنة (حاكم

عن علي رضي الله عنهما قال: خير واديين في الناس وادي بكة وواد بالهند الذي هبط به آدم ومنه يؤتى بالطيب الذي تطيبون به (كنز العمال

இரண்டு இடங்கள் சிறந்ததாகும். 1.மக்காவின் பள்ளத்தாக்கு 2.இந்தியாவில் ஆதம் அலை இறங்கிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து தான் நீங்கள் தடவிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஆதம் (அலை) இறங்கிய இடம் பற்றி வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடும் செய்தி

இந்த உலகின் முதல் மனிதரும், முதல் முஸ்லிமுமான நபி ஆதம் அலை இந்த பூமியில் அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கையின் ஸரந்தீப் எனும் மலையில் தான் இறக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل - قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்தது. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்தது. அந்த மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது. அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது. நூல் துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ்

இந்தோனோஷியாவுக்கு அடுத்து உலகில் அதிகமான மஸ்ஜித்கள் இந்தியாவில் தான் உள்ளன

உலக நாடுகளில் முதலிடத்தில் இந்தோனோஷியாவில் சுமார் 7,40,000 ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் ஆறு இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. மூன்றாவதாக பாகிஸ்தானில் சுமார் மூன்று இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. நான்காவதாக பங்களாதேஷில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. ஐந்தாவதாக எகிப்தில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. இப்படியாக பட்டியல் உள்ளது. சவூதியில் 94,000 மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.

நபி ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு வந்திருக்கக் கூடும்

குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم - وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل –

என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம்

நபி ஸல் அவர்கள் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்களூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه و سلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة و أطعمني منها قطعة (حاكم

அபூ ஸஈதுல் குத்ரீ(ரழி) அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து ஒரு மன்னர் (சேரமான் பெருமான்) நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது இஞ்சி நிறைந்த ஒரு பையை அன்பளிப்பாகத் தந்தார். அதை அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தந்தார்கள். அதில் ஒரு பங்கை எனக்கும் தந்தார்கள். நூல்- ஹாகிம்


என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பான خير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு அடுத்த காலத்தில் இந்தியாவில் இஸ்லாம்

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியே வணிகர்களாக தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை, நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற இஸ்லாமியக் கொள்கையால்

ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய இந்தியர்கள்

தென்னிந்தியாவில் மலபார் பிரதேசத்தில் இஸ்லாம் மிக வேகமாக பரவியது. காரணம் மலபார் ஹிந்துக்களிடையே வெகு காலமாக ஜாதி பாகுபாடு இருந்தது. அங்கு நாயர் வகுப்பினர் உயர் ஜாதி. புலயர் தாழ்ந்த ஜாதியினர். நாயர்கள் புலயர்களை அசூசையாக எண்ணுவார்கள். இதனால் நாயர் மீது புலயனின் நிழல் விழக்கூடாது என ராஜா உத்தரவிட்டிருந்தார். இதற்கு மாறு செய்யும் புலயர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில் இஸ்லாம் தென்னிந்தியாவில் வந்தவுடன் தாழ்ந்த ஜாதி புலயர்களை அரவணைத்துக் கொண்டது. இஸ்லாத்தைத் தழுவியவுடன் அவர்களை யாரும் தாழ்வாக நடத்தவில்லை.

சுவாமி விவேகானந்தர் தனது நூலில் குறிப்பிடும்போது நம்முடைய இந்து மக்களில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றதற்குக் காரணம் முஸ்லிம்களின் நன்னடத்தை தான் என்று குறிப்பிடுவார். சுவாமி விவேகானந்தர் நபி ஸல் அவர்களைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் பசுவதை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பினர் வந்து நாம் தெய்வமாக வணங்கும் பசுக்களை அநியாயமாக கொள்கிறார்களே என்று கூறினர். அதற்கு சுவாமி விவேகானந்தர் ஆங்காங்கே மனிதர்களை அநியாயமாக கொல்கிறார்களே அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லையே என்று கூறிய போது மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட நிறையப் பேர் இருக்கிறார்கள்.ஆனால் பசுவைப் பற்றிக் கவலைப் பட யாரும் இல்லை. எனவே தான் நாங்கள் அந்த முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று அந்த அமைப்பினர் கூறினர். அதற்கு சுவாமி விவேகானந்தர் நான் மனிதனுக்குப் பிறந்தேன் எனவே மனிதனைப் பற்றிக் கவலைப்படுகிறேன். நீங்கள் எதிலிருந்து பிறந்தீர்கள் என்று புரியவில்லை என்றாராம்.

கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்து வழியாக இஸ்லாத்தின் வருகை

தென்னிந்தியாவில் இருந்து சில அனாதைச் சிறுவர்களும் சில விதவைப் பெண்களும் ஒரு பாய் மரக் கப்பலில் அரபு தேசத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பல் சிந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதி வழியாகத்தான் அரபு தேசத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது சிந்துவைச் சேர்ந்த சில கொள்ளையர்கள் அதனைத் தாக்கி முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டார்கள். அரபு தேசத்தை நோக்கி வந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்த விபரம் அப்போதைய அரபு தேசத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபுக்கு தெரிந்தவுடன் அவர்களை விடுவிக்கும்படி சிந்து ராஜாவுக்கு கடிதம் எழுதினார். கடல் கொள்ளையர்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று ராஜா பதில் எழுதி விட்டார். இந்த பதிலுக்குப் பின் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் நிர்பந்தமாக சிந்துவை நோக்கி படையை அனுப்ப நேர்ந்தது முதல் இரண்டு படையெடுப்பிலும் முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். மூன்றாம் படையெடுப்பில் முஸ்லிம் ராணுவத்திற்கு பதினேழு வயது நிறைந்த முஹம்மது இப்னு காசிம் தளபதியாக இருந்தார். அவரின் வீரத்தாலும், யுக்தியாலும் முஸ்லிம் ராணுவத்திற்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். முஸ்லிம்கள் சிந்து முழுவதையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சிந்து மக்கள் அவர்களின் அரசர்கள் மூலமாக பல்வேறு அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த விதம் அவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்தது. முஸ்லிம்களின் இந்த அனுகுமுறையைக் கண்டு இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மதவிஷயத்தில் யாரையும் நாங்கள் கட்டாயம் செய்யவில்லை விரும்பியவர் மட்டும் இஸ்லாமை ஏற்கலாம் என முஹம்மது இப்னு காசிம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இதற்குப் பின்பு இஸ்லாம் இன்னும் வேகமாக வட மாநிலங்களில் பரவியது. இதில் அதிகம் பயனடைந்தவர்கள் ஜாட் வகுப்பைச் சார்ந்தவர்கள் தான். இவ்வாறு சிந்து பஞ்சாப் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாம் பரவியது.

இந்த முஹம்மது இப்னு காசிம் ரஹ் அவர்கள் தாயிஃப் நகரத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்படத் தக்கது. இதே தாயிஃபில் நபி ஸல் அவர்கள் கல்லடி பட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் மலக்குமார்கள் நபி ஸல் அவர்களிடம் நீங்கள் ஒரு துஆ செய்தால் போதும் அல்லாஹ்வின் அனுமதியுடன் இந்த ஊரை இரு மலைகளுக்கிடையில் வைத்து நசுக்கி விடுகிறோம் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் இப்போது இவர்கள் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் இவர்களுக்குப் பின்னால் வரும் சமூகம் இஸ்லாத்தை ஏற்கும் என்றார்கள். அந்த தாயிஃப் நகரத்தைச் சார்ந்த முஹம்மது இப்னு காசிம் அவர்கள் தான் இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள்.

தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ அஜ்மீர் காஜா முஈனுதீன் சிஷ்தீ ரஹ் அவர்களும் முக்கியக் காரணம்

அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரஹ் அவர்கள் ஒவ்வொரு பிரயாணத்திலும் அதிகமான நபர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து விடுவார்கள். ஒருமுறை அவர்களுடைய ஒரு பிரயாணத்தில் வழமையை விட அதிகமான நபர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து விட்டார்கள். அதைப் பற்றி தன் தாயாரிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்ட தாயார் மகனே இந்தப் பெருமை உனக்குச் சொந்தமல்ல. மாறாக இந்தப் பெருமை எனக்கே சொந்தம் என்றார்கள். அதுகேட்ட காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரஹ் அவர்கள் அன்னையே என்ன கூறுகிறீர்கள் என்று கேட்ட போது அன்னை கூறினார்கள் நீ குழந்தையாக இருந்த போது ஒவ்வொரு முறை உனக்குப் பாலூட்டும்போது அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து, என்னுடைய மகனை சிறந்த மார்க்க அழைப்பாளராக ஆக்கு என்று துஆச் செய்து விட்டுத் தான் உனக்குப் பாலூட்டுவேன். அந்த துஆவின் பிரதிபலனைத் தான் நீ தற்போது பார்க்கிறாய் என்று கூறினார்கள்.

படிப்பினை- இறைநேசர்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருப்பதாக கூறும் ஒவ்வொருவரும் இவற்றைச் சிந்திக்க வேண்டும். அந்த இறைநேசர்களை வார்த்தைக்கு வார்த்தை நினைவு கூறும் நாம் அவர்களைப் போன்று நமது பிள்ளைகளை வளர்த்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். செல்போனில் சினிமாப் பாடல்களைக் காட்டித்தான் பல தாய்மார்கள் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுகிறார்கள். இறைநேசர்களை நேசிக்கிறோம் என்ற போலியான வாதம் மட்டுமே நம்மிடம் உள்ளது.

தென்னிந்தியாவில் ஏர்வாடி இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் மூலம் இஸ்லாம் பரவிய வரலாறு

இவர்கள் மதீனாவில் நபிகளாரின் பரம்பரையில் ஹிஜ்ரி 528 கி.பி 1136 ல் பிறந்தார்கள். 25 வயதில் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் பாட்டனார் நபி ஸல் அவர்கள் கனவில் தோன்றி இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்ப புறப்பட வேண்டும் என்ற கட்டளையின் படி சுமார் 3000 பேர்களுடன் இந்தியாவை நோக்கி புறப்பட்டார்கள். அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கி அங்கிருந்த படி தன் தோழர்களை பல பாகங்களுக்கும் அனுப்பி இஸ்லாத்தைப் பரப்பினார்கள். பிறகு அங்கிருந்து ஒரு குழுவாக குஜராத் மற்றும் பல மாநிலங்களுக்கும் சென்று அங்கும் இஸ்லாத்தை பரப்பினார்கள். மேற்காணும் இடங்களில் அவர்கள் பிரச்சாரம் செய்தபோது அவர்களுக்கு அந்தந்த அரசர்கள் மூலமாக ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம். பிறகு அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு புறப்பட்டார்கள். மலபார் பிரதேசத்தின் வழியாக வந்து அங்கும் இஸ்லாத்தை பரப்பி பின்பு ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி,கண்ணனூர் வழியாக காயல் பட்டணத்தை வந்தடைந்தார்கள்.

அந்நேரத்தில் நெல்லை பகுதியை ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியன் அங்குவந்து தங்கியுள்ள மக்கள் யாரென்று அறிந்து கொள்ள தூது அனுப்பினான். அதற்கு அவர்கள் தாம் யாரையும் நிர்பந்தப் படுத்தி மத மாற்றம் செய்ய இங்கு வரவில்லை என்றும் இஸ்லாமிய வழிமுறைகளை இந்த மண்ணில் அகிம்சை அடிப்படையில் எடுத்துக் கூறவே வந்துள்ளதாக பதில் கூற, அவன் எந்த இடையூறும் செய்யவில்லை. இதன் பின்பு மதுரை நகரில் தீன் பணி செய்ய தன் தொண்டர்களுடன் சென்று மதுரை மண்ணின் அரசன் திருப்பாண்டியனிடம் அனுமதி கேட்க, அவன் இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து இவர்களுடன் போர் புரியவும் தயாராகி விட்டான். நிர்பந்தமாக நடந்த இப்போரில் திருப்பாண்டியனின் படை தோல்வியைத் தழுவியது. குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று அவன் தஞ்சம் புகுந்தான். இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் மதுரைக்கு முழுப் பொறுப்பு ஏற்றதுடன், தனது 13 கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். பாண்டிய மன்னர்கள் பலரிடம் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் வந்த காரியம் ஓரளவு நிறைவேறிய திருப்தியில் குடும்பத்தை விட்டு வந்த தோழர்களை திரும்பவும் அரபகத்துக்கு சிறிது சிறிதாக இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த வேளையில் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் தனது ஒற்றர்கள் மூலம் இந்த நிலையை புரிந்து கொண்டு மீண்டும் தன் படையுடன் தமிழகம் வந்தான். அப்போது இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்களின் படையில் பலர் மக்காவுக்கு திரும்பி விட்டதால் அவன் இலகுவாக மதுரையை வெற்றிகொண்டு, பின்பு இப்றாஹீம் ஷஹீத் ரஹ் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர் கொண்டான். மீதமிருந்த சிறு படையுடன் ஷஹீத் ரஹ் அவர்கள் உச்ச கட்டப் போரில் இறங்கிய போது அவர்களுடைய குதிரையின் கால்களை அவன் வெட்டினான். உடனே பதிலுக்கு ஷஹீத் அவர்கள் அவனின் தோல் புஜங்களை வாளால் வெட்டினார்கள். இத்தாக்குதலால் மயங்கி விழுந்த அவன் சிறிது நேரத்தில் தெளிவு பெற்றான். இருப்பினும் அவன் மயக்கத்தில் இருப்பது போல் நடித்து சற்றும் எதிர் பாராத விதமாக ஷஹீத் ரஹ் அவர்களின் மார்பில் தாக்கினான். இத்திடீர் தாக்குதலால் இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களின் உடல் ஏர்வாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் தங்கியிருந்தபோது அரபகத்து மண்ணின் ஒரு பகுதியின் பெயரான ஏர்பாத் என்ற பெயரை ஷஹீத் அவர்கள் தான் சூட்டினார்கள். அதுதான் ஏர்வாடி என்றானது.

(தகவல் முஅஸ்கருர் ரஹ்மான் கல்லூரி ஆண்டு மலர்)


இந்தியாவில் நாகூர் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் மூலம் இஸ்லாம் பரவிய வரலாறு

உத்தரப்பிரதேசத்தில் மாணிக்கபூர் எனும் ஊரில் ஹிஜ்ரி 910 ம் ஆண்டு அஷ்ஷைகு அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் 9 வது பரம்பரையில் பிறந்தவர்கள் தான் நாகூர் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள். 18 வயதில் டில்லி அருகே உள்ள குவாலியர் எனும் நகரத்திற்குச் சென்று மகான் முஹம்மது கெளது ரஹ் அவர்களிடம் தீனைக் கற்றார்கள். அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது கெளது ரஹ் அவர்கள் தனது 400 மாணவர்களையும் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்து இன்றுமுதல் இவர்கள் அனைவரும் உம்முடைய மாணவர்களாக ஆகி விட்டார்கள் என்று கூறி துஆ செய்து அனுப்பினார்கள்.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதற்காகவே கிபி 1336 ல் ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் விஜயநகரம் உருவாக்கப்பட்டது.கிபி 1500 ல் அந்நகரம் இந்துக்களின் புனித நகரமாக கருதப்பட்டது. அத்தகைய புனித நகரத்திற்கு ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் முக்கியமான திருவிழா நேரத்தில் தனது 400மாணவர்களுடன் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக வந்தபோது அத்தகவல் உடனே மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னர் அங்கு வந்த போது ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் முகத்தோற்றம் மன்னரை பல்லக்கில் இருந்து இறங்கச் செய்து விட்டது இருப்பினும் தன் தளபதியை ஏவி வந்த விஷயத்தை கேட்கச் சொன்ன போது அத்தளபதி ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் நீங்கள் யார் திடீரென்று மன்னரின் எல்லையில் வந்து நுழைவதின் நோக்கம் என்ன என்று கேட்க, ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் மன்னரிடம் நாங்கள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக வந்துள்ள்ளோம். ஆனால் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்ய மாட்டோம் என்று பணிவுடன் கூறினார்கள். அது கேட்ட மன்னர் நீங்கள் மதப்பிரச்சாரம் செய்வதற்கு இதுவல்ல இடம் இங்கிருந்து உடனே திரும்புங்கள். அல்லது திருப்பப் படுவீர்கள் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நாங்கள் உங்களின் திருவிழாவில் எந்த குழப்பமும் ஏற்படுத்த மாட்டோம். எங்களை இந்த ஊருக்குள் இருக்க அனுமதித்தால் போதும் என்று கூறினார்கள் அதற்கு மன்னர் மரியாதையாக இங்கிருந்து வெளியேறுங்கள். என்று மிரட்டிய போது ஷைகு அவர்கள் கடும் கோபத்தோடு மன்னரை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு அதே கோபப்பார்வையோடு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த விருபாட்சா கோவிலைப் பார்த்தார்கள். அவ்வளவு தான் அதன் உச்சிக் கோபுரம் சரிந்து விழுந்தது. ஏதோ மந்திரம் செய்து விட்டார் என எல்லோரும் பயந்தனர் மன்னரின் வாய் அடங்கியது. இருப்பினும் ஷைகு அவர்களைக் கொல்ல பலமுறை அவர் முயன்றார். முடியவில்லை இறுதியில் மன்னரின் உத்தரவின் பேரிலேயே அங்கு ஒரு மஸ்ஜித் உருவாகும் நிலை ஏற்பட்டது.

ஷியாக்களைத் திருத்திய ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள்.

ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் பீஜப்பூர் சென்றிருந்த போது அங்கு ஷியா கொள்கை உள்ள இஸ்மாயில் ஆதில் ஷா என்பவர் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தார் ,ஷைகு அவர்கள் தோழர்களுடன் அங்குள்ள ஒரு மஸ்ஜிதில் தொழச் சென்ற போது அங்குள்ள இமாம் சுன்னத் வல் ஜமாஅத் என்றாலும் மன்னரின் அடக்கு முறைக்கு பயந்து இதுநாள் வரை, ஷியா முறையில் தொழுகை நடத்தி வந்தார். ஷைகு அவர்களைக் கண்டதும் மனசாட்சி இடம் தராமல் வருவது வரட்டும் என்றெண்ணி சுன்னத் வல் ஜமாஅத் முறைப்படி தொழ வைக்க உடனே அங்கு வந்திருந்த மன்னர் வெகுண்டெழுந்தார். அரசுக்கு கட்டுப்படுவதாக இருந்தால் இங்கு இரு! இல்லையென்றால் பதவியை விட்டு விலகு என்று கண்டித்தார். அதைக் கண்ட இமாம் திகைத்து விட்டார். உடனே ஷைகு அவர்கள் எழுந்து மிஹ்ராபில் நின்று அல்லாஹ்வின் இடத்திலே அரசு நுழைய இடம் கிடையாது என்று கூறி தனது சொற்பொழிவை தொடங்கி ஷியாக்களின் தவறான கொள்கையை மக்களுக்கு சுட்டிக் காட்டிய போது மந்திரிகள் உட்பட மக்கள் அனைவரும் திருந்தினார்கள் ஆனால் மன்னர் திருந்தவில்லை. ஆத்திரத்தப்பட்ட மன்னர் தன் வாளை எடுத்து ஷைகு அவர்கள் நின்றிருந்த மிஹ்ராபை நோக்கி வீச அது ஷைகு அவர்களின் .தோளுக்கு மேலே பறந்து சுவற்றில் பட்டு வீசப்பட்ட பந்து திரும்புவது போல திரும்பி மன்னரின் நெஞ்சில் பாய்ந்தது அங்கேயே அவர் இறந்தார் அன்று மஃரிபுக்கு முன்பே அவரை அடக்கப்பட்டது.



மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...