24-04-2026
துல் கஃதா - 6 بسم الله الرحمن الرحيم
ஹஜ்ஜின் நினைவிடங்களும் படிப்பினைகளும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்படவிருக்கும் ஹாஜிகள் செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் பற்றியும் உளத்தூய்மை என்னும் இக்லாஸுடன் அந்த ஹஜ் அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்கா மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் நாம் எதையெல்லாம் காண்கிறோமோ அந்த நினைவுச் சின்னங்களின் வரலாற்றுப் பிண்ணனிகளையும் நாம் அறிய வேண்டும். இது இந்த வருடம் ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு மட்டுமன்றி ஏற்கெனவே ஹஜ் உம்ரா செய்தவர்கள் தமது பழைய நினைவுகளை மீண்டும் மனக்கண்ணில் கொண்டு வந்து மீண்டும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் புறப்பட வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப் படுத்தும். இந்த வருட ஹாஜிகளுக்கு நாம் எப்போது அந்த இடங்களை சந்திப்போம் என்ற ஆர்வத்தையும் இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு அடுத்த வருடமேனும் எப்படியும் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இது அதிகப்படுத்தும்.
ஹஜ்ஜுக்கான முன் தயாரிப்புகளில் இறையச்சம் மிக முக்கியமானது. சிறு சிறு பாவங்கள் செய்பவர்கள் கூட ஹஜ்ஜுக்கு ப் புறப்படுவதற்கு பல நாட்கள் முன்பே அந்தப் பாவங்களை விட்டும் நீங்கி அதிகம் தவ்பா செய்ய வேண்டும்
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197)القرة
ஹஜ்ஜுக்கான முன் தயாரிப்புகளில் நடை பயிற்சியும் முக்கியமானது. இப்போதிருந்தே நடை பயிற்சி செய்ய வேண்டும்
உடம்பில் ஆரோக்கியம் இருக்கும்போதே ஹஜ் செய்வது நல்லது. வயதானவர்கள் மட்டுமன்றி அதிகம் நடந்து பழகாதவர்கள் தவாஃப், ஸயீ உட்பட பல வணக்கங்களை திருப்தியாக நிறைவேற்ற முடிவதில்லை. சில ஹாஜிகள் முஸ்தலிஃபா வரை நடக்க முடியாமல் முஸ்தலிஃபாவுக்கு வர முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது. முக்கியமான ஜியாரத்திற்குரிய இடங்களைப் பார்க்கச் செல்லும்போது பலர் வாகனங்களிலேயே அமர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தூரம் பயணம் செய்து, பணம் செலவழித்து சென்றும் கூட அல்லாஹ்வின் நினைவுச் சின்னங்களை அருகில் சென்று பார்க்க முடியாமல் தூரத்தில் இருந்த படி பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். சில வயதானவர்கள் இளைஞர்களை விடவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் ஊரில் இருக்கும்போது நடந்து பழகியவர்களாக இருக்கலாம்.
ஹஜ்ஜில் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பிறருக்காக விட்டுக் கொடுத்துப் போகும் தன்மையும் அனுசரித்துப் போகும் தன்மையும் மிக அவசியம்.
காரணம் வயதானவர்களால் வேகமாக நடக்கவும் முடியாது.அடிக்கடி சிறுநீர் உபாதைகள் ஏற்படும். இதனால் அவர்களுடன் குரூப்பாக செல்பவர்களில் பலருக்கும் சிரமம் ஏற்படும். இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டியிருக்கும். அவர்களை அனுசரித்து அவர்களும் தங்களுடைய கடமைகள் நிறேவேற்ற நாம் காரணமாக இருந்தோம் என்றால் அவர்களுடைய ஹஜ்ஜின் நன்மையில் நாமும் பங்கெடுத்தவர்களாக ஆகுவோம். உதாரணமாக ஒரு ஹாஜி தன்னோடு ஹஜ்ஜுக்கு வந்த உடல் ஊனமுற்ற ஹாஜி ஒருவருக்குப் பொறுப்பாக ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கூடவே இருந்து தானும் ஹஜ்ஜை நிறைவேற்றி அந்த ஊனமுற்றவரையும் ஹஜ் செய்ய வைத்து விட்டால் இவருக்கு இரண்டு ஹஜ்ஜின் நன்மை கிடைக்கிறது.
ஹஜ் என்பது நீண்ட காலங்களுக்கு முன்பே இருந்த பூர்வீகமான வணக்கம்.
عن أَنَس أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« كَانَ مَوْضِعُ الْبَيْتِ فِى زَمَنِ آدَمَ شِبْرًا أَوْ أَكْثَرَ عَلَمًا فَكَانَتِ الْمَلاَئِكَةُ تَحُجُّهُ قَبْلَ آدَمَ ثُمَّ حَجَّ آدَمُ فَاسْتَقْبَلَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : يَا آدَمُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ : حَجَجْتُ الْبَيْتَ فَقَالُوا : قَدْ حَجَّتْهُ الْمَلاَئِكَةُ قَبْلَكَ(سنن الكبرى للبيهقي
கருத்து- நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் கஃபா சிறிய மண் மேடாக இருந்த போது அவர்கள் ஹஜ் செய்தார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹஜ் செய்வதற்கு முன்பே மலக்குகள் ஹஜ் செய்தார்கள்.
عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِىِّ أَوْ غَيْرِهِ قَالَ : حَجَّ آدَمُ عَلَيْهِ السَّلاَمُ فَلَقِيَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : بُرَّ نُسُكُكَ آدَمُ لَقَدْ حَجَجْنَا قَبْلَكَ بِأَلْفَىْ عَامٍ.
கருத்து- ஆதம் (அலை) அவர்களிடம் மலக்குகள் நாங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஹஜ் செய்துள்ளோம் என்றார்கள்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்பை ஏற்றவர்களுக்கு மட்டுமே ஹஜ்ஜின் பாக்கியம்
கியாமத் நாள் வரை ஹஜ் என்ற அமல் நடைபெறுவதற்காக கஃபாவை புதுப்பித்துக் கட்டிய இப்றாஹீம் (அலை) அவர்கள் அதன் பின்பு மக்காவுக்காக துஆவும் செய்தார்கள். அனைத்து விதமான கனி வர்க்கங்களும் அங்கு கிடைக்க வேண்டும் என்று துஆச் செய்தார்கள். அந்த துஆவிற்கு இணங்க பாலஸ்தீனத்தில் இருந்து தாயிஃப் நகரம் அடியோடு பெயர்த்துக் கொண்டு வரப்பட்டது. தாயிஃபில் இருந்து அனைத்து விதமான பழங்களும் மக்காவுக்குக் கிடைக்கின்றன.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ (126)البقرة
وَقَدْ أَجَابَ اللَّه دُعَاءَهُ فَجَعَلَهُ حَرَمًا ....وَقَدْ فَعَلَ بِنَقْلِ الطَّائِف مِنْ الشَّام إلَيْهِ (تفسير الجلالين
இன்றைக்கு உலகெங்கிலும் விளையும் கனிவர்கங்கள் எந்த பற்றாக்குறையுமில்லாமல் ஹாஜிகளுக்கு கிடைக்கின்றது எல்லா நாடுகளில் தயாராகும் பொருட்களும் கிடைக்கின்றது. மேற்படி வசனத்திற்கு விளக்கமாக தப்ஸீர் ஜலாலைனில் ஒரு நிகழ்வு காணக்கிடைக்கின்றது. இப்ராஹீம் நபியின் துஆவை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான். பாலஸ்தீனி்ல் உள்ள நல்ல கனிவர்கங்கள் விழையக்கூடிய குழுமையான ஓர் ஊரை அடியோடு பெயர்த்து வந்து மக்காவிற்கு அருகில் வைக்கும்படி உத்திரவிட்டான் அவ்வாறே ஜிப்ரயீல் ( அலை) அந்த ஊரை எடுத்து வந்து மக்காவிற்கு அருகில் உள்ள தாயிஃபில் வைத்து விட்டார்கள். இன்னும் சில அறிவிப்புகளில் அந்த ஊரை வைத்துக்கொண்டே ஜிப்ரயீல் ( அலை) அவர்கள் தவாப் செய்ததால் அந்த ஊருக்கு தாயிப் என்பதாக பெயர் இன்றும் அவ்வூர் அழகிய குழுமையான ஊராக காட்சியளிக்கின்றது இது இப்ராஹீம் நபியின் துஆவின் பலனாகும்.
கஃபா ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரம்.
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْمَسْجِدُ الْأَقْصَى قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً (مسلم) وجه الحديث أن هذين المسجدين بنيا قديما ثم خربا ثم بنيا (مرقاة
முதன்முதலில் கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி (ஸல்) கூறினார்கள். இரண்டாவதாக கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி (ஸல்) கூறினார்கள். இரண்டுக்கும் எத்தனை வருட இடைவெளி என்று கேட்கப்பட்டபோது 40 வருடங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
விளக்கம்- மஸ்ஜிதுல் ஹராம் இப்றாஹீம் அலை அவர்களால் கட்டப்பட்டது. பைத்துல் முகத்தஸ் நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. இந்த இரண்டு நபிமார்களுக்கு மத்தியில் நீண்ட கால இடைவெளி உள்ளது. அப்படியானால் நாற்பது வருட இடைவெளி என்பது இந்த இரண்டு மஸ்ஜித்களும் மலக்குகளால் முதன் முதலில் கட்டப்பட்ட போது நாற்பது வருட இடைவெளி என்று பொருளாகும்.
ஆதம் (அலை) எத்தனை ஹஜ் செய்தார்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. எனினும் ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் இருந்து நடந்தே வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
روي أن آدم عليه السلام حج أربعين سنة من الهند ماشياً (تفسير الالوسي - روح المعاني )
عن أبي هريرة قال : حج آدم عليه السلام فقضى المناسك ، فلما حج قال : يا رب إن لكل عامل أجراً قال الله تعالى : أما أنت يا آدم فقد غفرت لك ، وأما ذريتك فمن جاء منهم هذا البيت فباء بذنبه غفرت له (الدر المنثور
நபி ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஹஜ்ஜை நிறைவேற்றிய போது அல்லாஹ்விடம் ரப்பே ஒவ்வொரு நற்செயலுக்கும் கூலி உண்டு. இதற்கு என்ன நற்கூலி என்று கேட்க, அதற்கு அல்லாஹ் நான் உம்மை முற்றிலுமாக மன்னித்து விட்டேன். அது மட்டுமல்ல உம் சந்த தியில் யாரெல்லாம் இங்கு வருவார்களோ அவர்களையும் மன்னித்து விட்டேன் என்று கூறினான். மற்றொரு அறிவிப்பில் நான் உம்மை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறியதும் சந்த திகளுக்கும் அந்த மன்னிப்பை ஆதம் அலைஹிஸ்ஸலாம் வேண்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள்.
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ قَالَ : مَا مِنْ نَبِىٍّ إِلاَّ وَقَدْ حَجَّ الْبَيْتَ إِلاَّ مَا كَانَ مِنْ هُودٍ وَصَالِحٍ وَلَقَدْ حَجَّهُ نُوحٌ فَلَمَّا كَانَ مِنَ الأَرْضِ مَا كَانَ مِنَ الْغَرَقِ أَصَابَ الْبَيْتَ مَا أَصَابَ الأَرْضَ وَكَانَ الْبَيْتُ رَبْوَةً حَمْرَاءَ فَبَعَثَ اللَّهُ هُودًا عَلَيْهِ السَّلاَمُ فَتَشَاغَلَ بِأَمْرِ قَوْمِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ إِلَيْهِ فَلَمْ يَحُجَّهُ حَتَّى مَاتَ فَلَمَّا بَوَّأَهُ اللَّهُ لإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ حَجَّهُ ثُمَّ لَمْ يَبْقَ نَبِىٌّ بَعْدَهُ إِلاَّ حَجَّهُ.
எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள். நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம், சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரைத் தவிர. நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபாவும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனாலும் அதற்கு முன்பே நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டார்கள். வெள்ளப்பிரளயத்திற்குப் பின் கஃபா சிவப்பு மண் மேடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. அதன்பின் நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பினான் அவர்களுடைய சமூக மக்களிடம் பிரச்சினைகளை சமாளிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்த காரணத்தால் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை. அதன்பின் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கஃபாவின் இடத்தைக் காட்டித் தந்தான். அவர்கள் அதைப் புதுப்பொலிவுடன் கட்டினார்கள். அதன் பின் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹஜ் செய்தார்கள். அதன் பின்பு வந்த எந்த நபியும் ஹஜ் செய்யாமல் இருந்ததில்லை.
கடைசி காலத்தில் ஈஸா (அலை) அவர்களும் ஹஜ் செய்வார்கள்.
عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا (مسلم) صحيح ابن حبان باب ذكر الإخبار بأن عيسى ابن مريم يحج البيت العتيق بعد قتله الدجال
ஹஜ்ஜின் நினைவிடங்கள்
மக்கா மதீனாவில் ஹாஜிகள் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களும் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதை அறிந்து கொண்டு ஹாஜிகளை அந்த இடங்களை சந்திக்கும்போது அது உணர்வுப் பூர்வமானதாக அமையும்.
மூன்று பொருட்களை மனிதன் எத்தனை முறை பயன்படுத்தினாலும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள். முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது. மேலும் ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.2.தண்ணீர். ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான். மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும். அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞர் கூறுகிறார். இப்பூமியின் மையத்தில் புள்ளி வைக்க வேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.
அறியாமைக் காலத்தில் குரைஷிகளிடமும் ஹலால் பேணுதல் இருந்ததன் அடையாளம் ஹதீம்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ " سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ؟ قَالَ: إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ: فَعَلَ ذَلِكَ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ" (بخاري
சுருக்கம்- ஹதீமைப் பற்றி அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது அதுவும் கஃபா தான் என்று கூறினார்கள் ஏன் அதை கஃபாவில் இணைக்கவில்லை என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட போது அதற்கு நபி (ஸல்) உன்னுடைய சமூகத்தினர் அதாவது குறைஷிகள் கஃபாவைக் கட்டியபோது பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள். ஏன் அதன் வாசல் இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்க, அனைவரும் எளிதாக அதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் விரும்பும் முக்கியமானவர்கள் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காகவும் குறைஷிகள் அவ்வாறு கட்டினார்கள். குறைஷிகள் இஸ்லாத்திற்கு புதிய நபர்களாக இருந்திருக்கா விட்டால் அதாவது நான் புதிதாக எதை எதையோ செய்கிறேன் என்று எண்ணைப் பற்றி அவர்கள் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள் என்றிருந்தால் நான் ஹதீமை கஃபாவுடன் இணைத்துக் கட்டியிருப்பேன். வாசலை தரைக்கு நெருக்கமாகவும் ஆக்கியிருப்பேன் என்று கூறினார்கள்
عَنْ أَبِي وَهْبٍ الْمَخْزُومِيِّ أَنَّهُ قَالَ لِقُرَيْشٍ : لَا تُدْخِلُوا فِيهِ مِنْ كَسْبِكُمْ إلَّا طَيِّبًا وَلَا تُدْخِلُوا فِيهِ مَهْرَ بَغِيٍّ وَلَا بَيْعَ رِبًا وَلَا مَظْلَمَةٌ أَحَدٍ مِنْ النَّاسِ
குறைஷிகளுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற விளக்கம் ஃபத்ஹுல் பாரி நூலில் பின்வருமாறு உள்ளது அபூ வஹ்ப் என்பவர் எழுந்து குறைஷிகளிடம் பேசினார் மக்களே நிச்சயமாக கஃபா ஆலயத்தின் கட்டிடப் பணியில் முறையான சம்பாத்தியத்தைத் தவிர பயன்படுத்த வேண்டாம். வட்டிப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம். யாரிடமிருந்தும் அநியாயமாகப் பெறப்பட்ட பணத்தையும் பயன்படுத்த வேண்டாம்.
أن أبا وهب بن عايذ بن عمران بن مخزوم قال لقريش لا تدخلوا من كسبكم إلا طيبا ولا تدخلوا فيه مهر بغي ولا بيع ربا ولا مظلمة أحد من الناس وعند موسى بن عقبة أن الوليد بن المغيرة قال لا تجعلوا فيها مالا أخذ غصبا ولا قطعت فيه رحم ولا انتهكت فيه حرمة وفي رواية لا تدخلوا في بيت ربكم إلا طيب أموالكم وتجنبوا الخبيث فإن الله طيب لا يقبل إلا طيبا فلعلهما جميعا قالا ذلك (شرح الزرقاني
படிப்பினை- அறியாமைக் காலத்திலும் குறைஷிகளிடம் இத்தகைய பேணுதல் இருந்துள்ளது என்றால் இன்று நம்முடைய நிலை ஹலால் ஹராமைப் பேணுகின்ற விஷயத்தில் எவ்வாறு உள்ளது என்று சிந்திக்க வேண்டும்.
கஃபா கட்டப்பட்ட வரலாறு
கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள். 3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள். இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். ”குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்களிடமிருந்து அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது என்று சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு அப்பணியை செய்து முடித்தனர். ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர்.
قال مجاهد : خلق الله موضع هذا البيت قبل أن يخلق شيئا من الأرض بألفي سنة وأن قواعده لفي الأرض السابعة السفلى (قرطبي
5. யஜீத் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹிப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆளுநராக இருந்த போது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பிய படி கஃபாவை சீரமைத்தார்கள். 6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார். அப்துல்லாஹிப்னு ஜுபைர் ரழிஅவர்களை கொலை செய்ததும் ஹஜ்ஜாஜ் தான். அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார். இப்னு ஜுபைர் ரழி அவர்கள் கட்டியதை ஹஜ்ஜாஜ் இடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அதை மாற்ற ஆலோசனை நடந்த போது கஃபா மன்னர்களின் விளையாட்டு மைதானமாக ஆகி விடக்கூடாது எனக்கூறி இமாம் மாலிக் (ரஹ்) அதை தடுத்து விட்டார்கள்
فَدَلَّ هَذَا عَلَى صَوَاب مَا فَعَلَهُ ابْن الزُّبَيْر فَلَوْ تُرِكَ لَكَانَ جَيِّدًا وَلَكِنْ بَعْد مَا رَجَعَ الْأَمْر إِلَى هَذَا الْحَال فَقَدْ كَرِهَ بَعْض الْعُلَمَاء أَنْ يُغَيَّر عَنْ حَاله كَمَا ذُكِرَ عَنْ أَمِير الْمُؤْمِنِينَ هَارُون الرَّشِيد أَوْ أَبِيهِ الْمَهْدِيّ أَنَّهُ سَأَلَ الْإِمَام مَالِكًا عَنْ هَدْم الْكَعْبَة وَرَدّهَا إِلَى مَا فَعَلَهُ ابْنُ الزُّبَيْر فَقَالَ لَهُ مَالِك يَا أَمِير الْمُؤْمِنِينَ لَا تَجْعَل كَعْبَة اللَّه مَلْعَبَة لِلْمُلُوكِ لَا يَشَاء أَحَد أَنْ يَهْدِمهَا إِلَّا هَدَمَهَا فَتَرَكَ ذَلِكَ الرَّشِيد (تفسير ابن كثير
அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மகாமே இப்றாஹீம் வரலாறு
عَنْ أَنَسٍ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلَاثٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ{وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ}فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ (بخاري
ஹழ்ரத் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மூன்று தருணங்களில் என் கருத்துக்குத் தோதுவாக ஆயத்தை இறக்கினான். 1.அல்லாஹ்வின் தூதரே மகாமே இப்றாஹீம் அருகே தொழ வேண்டும் என்று கூறினேன் அல்லாஹ் நான் கூறிய அதை வார்த்தையை ஆயத்தாக இறக்கினான். அல்லாஹ்வின் தூதரே உங்கள் வீட்டுக்கு நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் மனைவியரை ஹிஜாப் அணியச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று கூறினேன் அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான். 3. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீது மனைவிமார்கள் ஆட்சேபனை தெரிவித்தார்கள். (அதாவது செலவுக்குக் கொடுக்கும் விஷயத்தில் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.) அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இவர்களை தலாக் சொன்னாலும் அல்லாஹ் இவர்களுக்கு பதிலாக சிறந்த மனைவிமார்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தருவான் என்றேன். அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான்.
ஸஃபா மர்வா இடையே ஓடுவதன் தாத்பரியம்
ஸஃபா மர்வா இடையே ஸயீ செய்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஹாஜரா அம்மையார் அவர்களின் நினைவாக நாம் ஓடுகிறோம். அந்த அன்னையின் உள்ளத்தில் எத்தகைய பயபக்தி இருந்ததோ எப்படியேனும் அல்லாஹ் நமக்கு நமக்கு உதவி செய்தான் என்று எப்படி உறுதியாக நம்பினார்களோ அதே போன்று நாமும் அல்லாஹ்வின் அருளை நாடி ஓட வேண்டும் என்பது இதன் கருத்தாக இருக்கிறது.
இப்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம். சஃபா, மர்வா இடையே ஆண்கள் மட்டும் ஓட வேண்டும் என்றும் பெண்கள் நடந்து சென்றால் போதும் என்று சட்டம் உள்ளது ஆனால் உண்மையில் அன்றைக்கு ஓடியது ஒரு பெண்தானே அதன்படி இன்றைக்கும் பெண்கள் தானே ஓத வேண்டும் என்ற கேள்வி வருமானால் அதற்கு ஒரு பதில் கூறப் படுகிறது அதாவது ஒட்டு மொத்த பெண்களுக்கும் சேர்த்து அன்றைக்கு அன்னை ஹாஜரா அம்மையார் அவர்கள் ஓடி விட்டார்கள். எனவே இன்று பெண்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.
நினைவுச் சின்னங்கள் எதுவும் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது
பழைய தூண்கள் அப்படியே இருக்க அதற்கு மேலே தான் தற்போதைய தூண்கள் கட்டப்பட்டுள்ளன. நபி ஸல் அவர்களின் மிம்பரைக்கூட நல்லெண்ணத்தில் அடிப்படையில் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற நினைத்த போது அல்லாஹ் அதை விரும்பாததால் பல்வேறு எச்சரிக்கைகளை ஏற்படுத்தி எச்சரித்து அம்முயற்சியை தடுத்தான்
عن أبن الزناد أن النبي صلى الله عليه وسلم كان يجلس على المجلس ويضع رجليه على الدرجة الثانية فلما ولى أبو بكر رضي الله عنه قام على الدرجة الثانية ووضع رجليه على الدرجة السفلى فلما ولى عمر رضي الله عنه قام على الدرجة السفلى ووضع رجليه على الأرض إذا قعد فلما ولى عثمان رضي الله عنه فعل ذلك ست سنين من خلافته ثم علا إلى موضع النبيّ صلى الله عليه وسلم قالوا فلما أستخلف معاوية زاد في المنبر فجعل له ست درجات وكان عثمان أوّل من كسا المنبر قبطية قالوا فلما قدم معاوية عام حج حرك المنبر وأراد أن يخرجه إلى الشام فكسفت الشمس يومئذ حتى رؤيت النجوم فاعتذر معاوية رضي الله عنه إلى الناس وقال أردت أنظر إلى ما تحته وخشيت عليه من الأرضة وفي رواية له إن معاوية كتب إلى مروان بذلك فقلعه فأصابتهم ريح مظلمة بدت فيها النجوم نهارا فقال مروان إنما كتب إلى أن أرفعه من الأرض فدعا النجاجرة فعمل هذه الدرجات ورفعوه عليها وهي يعني الدرجات التي زادها ست درجات ولم يزد فيه أحد قبله ولا بعده- الكتاب:خلاصة الوفا بأخبار دار المصطفى
சுருக்கம்- நபி ஸல் அவர்கள் மிம்பரில் மூன்றாம் படியில் அமர்ந்து 2-வது படியில் கால் வைப்பார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மரியாதை காரணமாக இரண்டாவது படியில் அமர்ந்து முதலாவது படியில் கால் வைத்தார்கள். உமர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் முதலாவது படியில் அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். உஸ்மான் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் வேறு வழியில்லாமல் உமர் ரழி அவர்களைப்போல் முதலாவது படியில் அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். இவ்வாறு ஆறு மாதங்கள் செய்தார்கள். அதற்குப் பிறகு மஷ்வரா அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அமர்ந்த படிக்கட்டின்மீதே அமர்ந்தார்கள். முஆவியா ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மிம்பரில் ஆறு படிக்கட்டுகளை அமைத்தார்கள். அதற்குப் பிறகு அதை விட யாரும் அதை அதிகப் படுத்தவில்லை. முஆவியா ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஆட்சி மையம் ஷாம் பகுதியாக இருந்த தால் நபி ஸல் அவர்களின் மிம்பரை அப்படியே இடம் பெயர்த்து ஷாமுக்குக் கொண்டு செல்ல எண்ணி அதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் அந்த முயற்சியில் ஈடுபட்டபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது மற்றொரு அறிவிப்பில் பட்டப் பகல் நேரத்திலேயே கடும் இருள் ஏற்பட்டு நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்தன. உடனே அந்த முயற்சி கை விடப்பட்டது. அப்போது தான் ஆறு படிக்கட்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதாவது நபி ஸல் அமர்ந்த படிக்கட்டு மேலே இருக்கும். அதில் யாரும் அமர வேண்டாம் என்ற மரியாதைக்காக அவ்வாறு செய்யப்பட்டது.
ஹஜ்ஜில் இக்லாஸ் உளத்தூய்மை மிகவும் முக்கியமானது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:قَالَ اللهُ عَزَّ وَجَلَّ:فَمَنْ عَمِلَ فِيَّ عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي فَأَنَا مِنْهُ بَرِيءٌ هُوَ لِلَّذِي أَشْرَكَ-(رواه البيهقي شعب الايمان)
யார் ஒரு அமலைச் செய்து அதில் அல்லாஹ்வுடன் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்வாரோ அவரை விட்டும் நான் நீங்கி விட்டேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ:وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ:الرِّيَاءُ إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمِ:اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً أَوْ خَيْرًا(بيهقي شعب الايمان-
நான் சிறிய ஷிர்கை உங்களிடம் மிகவும் அஞ்சுகிறேன் என நபி ஸல் கூறிய போது சிறிய ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டதற்கு முகஸ்துதி என நபி ஸல் கூறி விட்டு யார் முகஸ்துதிக்காக அமல் செய்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் நீங்கள் யாருக்காக இந்த நற்காரியம் செய்தீர்களோ அவர்களிடம் சென்று நற்கூலியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَرَجَ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ بِمُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه عِنْدَ قَبْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي،فَقَالَ: مَا يُبْكِيكَ يَا مُعَاذُ ؟ قَالَ: يُبْكِينِي مَا سَمِعْتُ مِنْ صَاحِبِ هَذَا الْقَبْرِ . قَالَ: مَا هُوَ ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " إِنَّ يَسِيرًا مِنَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى أَوْلِيَاءَ اللهِ فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ، وَإِنَّ اللهَ يُحِبُّ الْأَبْرَارَالْأَخْفِيَاءَ الْأَتْقِيَاءَ الَّذِينَ إِنْ غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الدُّجَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ (رواه البيهقي شعب الايمان)
முஆத் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள் எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்ட போது இந்த கப்ரு உடையவர் கூறிய “சிறிதளவு முகஸ்துதியும் கூட ஒரு வகையில் ஷிர்க்” என்ற வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது என்றார்கள். முடிவுரை- எனவே ஹாஜிகளின் உள்ளத்தில் சிறிதளவும் பெருமை இருப்பது கூடாது. பகைமையும் இருப்பது கூடாது. சிறிதளவு பகைமை இருந்தாலும் அதை நீக்கி விட்டுத்தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும்.