வியாழன், 25 ஜூன், 2026

அஹ்லே பைத்

 19-06-2026

முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم  

ஆஷூரா நோன்புகளின் சிறப்பும்

அஹ்லெ பைத்துகளின் சிறப்பும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஆஷூரா நாளாக இருப்பதால் அன்றைய தினம் ஆஷூரா நாளில்  நடைபெற்ற அற்புத சம்பவங்களைப் பற்றிப் பேசப்படும். அதற்கு முன்பு இந்த ஜும்ஆவில் முஹர்ரம் மாதம் முழுவதுமே நஃபில் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்பதைப் பற்றியும் குறிப்பாக ஆஷூரா நோன்புகளின் சிறப்பைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பைப் பற்றியும் குறிப்பாக ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பைப் பற்றியும் அவர்களின் பெயரால் ஷியாக்கள் செய்யும் அனாச்சாரங்களைப் பற்றியும் காண்போம்.

ரமழானுக்கு அடுத்து நோன்பு வைப்பதற்குரிய ஏற்றமான  மாதங்களில் முஹர்ரம் மாதம்  சிறப்பான மாதமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (رواه  مسلم    -باب فَضْلِ صَوْمِ الْمُحَرَّمِ  - عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ لَهُ مَا سَمِعْتُ أَحَدًا يَسْأَلُ عَنْ هَذَا إِلَّا رَجُلًا سَمِعْتُهُ يَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا قَاعِدٌ عِنْدَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ إِنْ كُنْتَ صَائِمًا بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَصُمْ الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرُ اللَّهِ فِيهِ يَوْمٌ تَابَ فِيهِ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ آخَرِينَ (ترمذي - بَاب مَا جَاءَ فِي صَوْمِ الْمُحَرَّمِ

 ஒரு மனிதர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ரமழானுக்குப் பிறகு நான் உபரியான நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம்  எது என்று கேட்ட போது, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் இதே கேள்வியை நபி ஸல் அவர்களிடம் ஒரே ஒரு மனிதர் மட்டும் தான் கேட்டார். அப்போது நான் அருகில் இருந்தேன். அவர் கேட்ட கேள்விக்கு நபி ஸல் அவர்கள் ரமழானுக்குப் பிறகு நீ உபரியான நோன்பு வைப்பதாக இருந்தால் முஹர்ரம் மாத த்தில் நோன்பு வைப்பீராக ஏனெனில் அது அல்லாஹ்வின் மாதமாகும். அந்த மாத த்தில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் அல்லாஹ்  ஒரு சமூகத்தாருக்கு மன்னிப்பு வழங்கினான். மற்றும் சில சமுதாயத்திற்கும் மன்னிப்பு வழங்கினான்.- திர்மிதீ  

ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாதத்தில் அதிகமாக நபி (ஸல்) நோன்பு வைத்துள்ளார்கள் என்ற ஹதீஸுக்கும் ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கும் இடையே உள்ள முரண்பாடும் அதற்கான விளக்கமும்

அதேபோல ஃபர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்தில்  முஅக்கதாவான  முன்பின் சுன்னத்துகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் ஃபர்ளான தொழுகைக்கு அடுத்து இரவுத் தொழுகை சிறந்தது  என்று கூறியதற்கான விளக்கம் 

فإن قيل كيف كان رسول الله صلى الله عليه و سلم يخص شعبان بصيام التطوع فيه مع أنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم فالجواب أن جماعة أجابوا عن ذلك بأجوبة .......والأظهر كما قال بعض الشافعية والحنابلة وغيرهم أن أفضل الصيام بعد شهر رمضان شعبان لمحافظته صلى الله عليه و سلم على صومه أو صوم أكثره فيكون قوله أفضل الصيام بعد رمضان المحرم محمولا على التطوع المطلق (عون المعبود وكذا أفضل الصلاة بعد المكتوبة قيام الليل إنما أريد به تفضيل قيام الليل على التطوع المطلق دون السنن والرواتب التي قبل الفرض وبعده (عون المعبود

சுருக்கம்- பொதுவாகவே நபி (ஸல்)  அவர்கள் வழமையாக செய்தார்கள் என்பதை வைத்து ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாத நோன்புகள் சுன்னத் என்று விளங்குவோம். அதே நேரத்தில்  ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கு விளக்கமாகிறது பொதுவாக நஃபில் நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத த்தின் நோன்புகள்  என்பதாகும்.  அதேபோல நபி (ஸல்)  அவர்கள் வழமையாக தொழுதார்கள் என்பதை வைத்து ஃபர்ளுக்கு அடுத்து முஅக்கதாவான முன்பின் சுன்னத்துகள்  உள்ளன அதே நேரத்தில்  சுன்னத் முஅக்கதா அல்லாத  நஃபிலான தொழுகைகளில்  சிறந்த தொழுகை  இரவுத் தொழுகை என்று விளங்க வேண்டும்.      

மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு 

இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்   

أقول سئلت لم خص المحرم بقولهم شهر الله دون سائر الشهور مع أن فيها ما يساويه في الفضل أو يزيد عليه كرمضان ووجدت ما يجاب به أن هذا الاسم إسلامي دون سائر الشهور فإن أسماءها كلها على ما كانت عليه في الجاهلية وكان اسم المحرم في الجاهلية صفر الأول والذي بعده صفر الثاني فلما جاء الإسلام سماه الله المحرم فأضيف إلى الله بهذا الاعتبار [ شرح السيوطي على مسلم ]

அந்தஸ்தில் எல்லா மாதங்களும் சமம் என்றிருக்க முஹர்ரம் மாதம் மட்டும் அல்லாஹ்வின் மாதம் என்று கூறியதற்கான காரணம் அல்லாஹ் பெயர் சூட்டிய மாதம் என்றும் விளக்கம் கூறலாம். அதாவது ஆரம்ப காலத்தில் இருந்தே மற்ற மாதங்கள் அதற்குரிய பெயரில் அழைக்கப் பட்டு வந்தாலும் அரபிகள் முஹர்ரம் மாதத்தை மட்டும் தம் சுய விருப்பப்படி பெயரை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார்கள்.இஸ்லாம் வந்த பிறகு அல்லாஹ்வே இம்மாதத்திற்கு முஹர்ரம்  என பெயர் சூட்டியதால் அல்லாஹ்வுடன் இணைத்து இம்மாதத்தின் பெயர் அழைக்கப்படுகிறது. மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு

இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்

قال القرطبي إنما كان صوم المحرم أفضل الصيام من أجل أنه أول السنة المستأنفة فكان استفتاحها بالصوم الذي هو أفضل الأعمال [ شرح السيوطي على مسلم ]

நோன்பு என்பது எனக்குரியது. அதற்கு நானே நன்மை தருகிறேன் என்ற அடிப்படையில் நோன்பு அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வணக்கம்.  நஃபிலான நோன்புகளில் சிறந்த நோன்புகளான முஹர்ரம் மாத நோன்புகள் மேலும் சுன்னத்தான ஆஷூரா (இரு) நோன்புகள் என அல்லாஹ்வுக்கு பிடித்தமான வணக்கங்களை அதிகம் உள்ளடக்கியதாக  இந்த மாதம் துவங்குவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.    

ஆஷூரா நோன்புகளின் சிறப்புகள்

பல்வேறு நபிமார்களும் ஈடேற்றம் அடைந்த இந்த நாளில் அதற்கு நன்றிக் கடனாக நோன்பு சுன்னத்தாக்கப்பட்டுள்ளது

பனீ இஸ்ராயீல் சந்ததியினருக்கு பெருநாளாக விளங்கிய ஆஷூரா தினம்

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ الْيَهُودُ وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوهُ أَنْتُمْ (مسلم) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – كتاب الصوم 

அறியாமைக் காலத்தில் குறைஷிகளாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஆஷூரா தினம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَا يَصُومُهُ بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – 

அறியாமைக் காலத்திலும் குறைஷிகள் ஆஷூரா தினத்தை கண்ணியப்படுத்தி நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபி ஸல் அவர்களும் நோன்பு வைத்தார்கள். மதீனாவுக்கு வந்த பிறகும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு எப்போது ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான வசனம் இறங்கியதோ அதற்குப் பிறகு ரமழான் கடமையான நோன்பாக மாறியது. ஆஷூரா நோன்பு சுன்னத்தான நோன்பாக மாறியது    

كتاب الصوم-   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى(جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ -كتاب الحج

மேற்படி ஹதீஸில் கஃபாவின் திரை மாற்றப்படும் நாளாக ஆஷூரா நாள் இருந்தது என்பதன் விளக்கம்

فَإِنَّهُ يُفِيد أَنَّ الْجَاهِلِيَّة كَانُوا يُعَظِّمُونَ الْكَعْبَة قَدِيمًا بِالسُّتُورِ وَيَقُومُونَ بِهَا ,وَيُسْتَفَاد مِنْ الْحَدِيث أَيْضًا مَعْرِفَة الْوَقْت الَّذِي كَانَتْ الْكَعْبَة تُكْسَى فِيهِ مِنْ كُلّ سَنَة وَهُوَ يَوْم عَاشُورَاء وَكَذَا ذَكَرَ الْوَاقِدِيُّ بِإِسْنَادِهِ عَنْ أَبِي جَعْفَر الْبَاقِر أَنَّ الْأَمْر اِسْتَمَرَّ عَلَى ذَلِكَ فِي زَمَانهمْ، وَقَدْ تَغَيَّرَ ذَلِكَ بَعْدُ فَصَارَتْ تُكْسَى فِي يَوْم النَّحْر(فتح الباري)  

ரமளான் நோன்பு கடமையாக்கப் பட்ட பின் அதற்கு அடுத்த அந்தஸ்தில் ஆஷூரா நோன்பு..

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ"(بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ .-كتاب الصوم

ஆஷூரா நோன்பு -முடிந்த வரை முஹர்ரம் 9, 10 ல் நோன்பு வைக்க வேண்டும். முடியா விட்டால் பிறை 10, 11-ல் வைக்கலாம் 

عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) كِتَاب الصِّيَامِ -عَنْ اِبْن عَبَّاس رض مَرْفُوعًا صُومُوا يَوْم عَاشُورَاء وَخَالِفُوا الْيَهُود، صُومُوا يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ (فتح الباري

ஆஷூரா தினத்தில் செய்யக் கூடாதவைகள்:ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல. 

عَنْ عَبْدِ اللَّهِ  رضى الله عنه  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري)  باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز- 

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان – وهكذا رواه البخاري في كتاب الجنائز -الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند المصيبة

அபூ மூஸா ரழி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இலேசாக மயக்கமுற்றிருந்தார்கள். அவர்களின் தலை அவரது மனைவியின் மடியில் இருந்த து. அப்போது  அவர்களின் குடும்பத்தில் ஒருவர் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்த போது அதை தடுக்க அந்த நேரத்தில் சக்தி இருந்திருக்கவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவர்கள் தம் குடும்பத்தாரிடம் இறைத்தூதர் ஸல் அவர்கள் யாரை விட்டும் முற்றிலும் நீங்கி விட்டார்களோ அப்படிப்பட்டவர்களை விட்டும் நானும் நீங்கி விட்டேன்.  இறைத்தூதர் ஸல் அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களை விட்டும் துக்கம் காரணமாகமொட்டையடித்துக் கொள்பவர்களை விட்டும் துக்கம் காரணமாக சட்டையைக் கிழித்துக் கொள்பவர்களை விட்டும் ஒதுங்கியிருந்தார்கள். 

ஷியாக்களின் அனாச்சாரங்கள் நடைபெறும் இடத்திற்கு போகவும் கூடாது

قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ (مسلم) بَاب بَيَانِ كَوْنِ النَّهْيِ عَنْ الْمُنْكَرِ مِنْ الْإِيمَانِ- كِتَاب الْإِيمَانِ

இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது கூட நமது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது

وعن ابن عباس قال : ماتت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فبكت النساء فجعل عمر يضربهن بسوطه فأخره رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " مهلا يا عمر " ثم قال : " إياكن ونعيق الشيطان " ثم قال : " إنه مهما كان من العين ومن القلب فمن الله عز وجل ومن الرحمة وما كان من اليد ومن اللسان فمن الشيطان " . رواه أحمد 

 நபி ஸல் அவர்களின் மகளார் ஜைனப் ரழி இறந்த போது சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். அப்போது உமர் ரழி அவர்கள் அப்பெண்களை சாட்டையால் அடிக்கவும் துணிந்தார்கள். அப்போது நபி ஸல் உமர் ரழி அவர்களைத் தடுத்து அந்தப் பெண்களுக்கு பின்வருமாறு புத்தி மதி கூறினார்கள். ஷைத்தானைப் போன்று ஒப்பாரி வைப்பதை விட்டும் உங்களை நான் தடுக்கிறேன். "உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மத்

عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ.. (بخاري)كتاب الجنائز

  மூத்தா போரில் ஷஹீதாக்கப்பட்ட  மூன்று தளபதிகளான நபித்தோழர்களின் ஷஹாத த் செய்தி கிடைத்தபோது  நபி ஸல் அவர்கள் சோகமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது நபிகளாரிடம் ஒருவர் வந்து ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்துப் பெண்கள் சப்தமிட்டு அழுது கொண்டிருக்கிற செய்தியைச் சொன்ன போது அவ்வாறு அழக்கூடாது என அவர்களைத் தடுக்கும்படி சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, இரண்டாவது முறையும் அந்தப் பெண்களை அவ்வாறு செய்வதை விட்டும் தடுங்கள் என்று கூறினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, அப்போது நபி ஸல் அவர்கள் கோபமாக அந்தப் பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறினார்கள். 

 ஹுஸைன் ரழி அவர்களின் பெயரால் அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற அனாச்சாரங்கள் அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி அதற்காக துக்கம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் கணவனும் மனைவியும் முஹர்ரம் 1 முதல் 10 வரை ஒன்று சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் இந்த பத்து நாட்களில் துக்கம் காரணமாக அசைவ உணவுகளை அறவே உண்ணக் கூடாது என்றும் கருதுகின்றனர். அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹராம் என்று கருதி தடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். ஒருவருக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவதற்கு பிடிக்காது. ஆனால் அதை அவர் கொள்கையாக வைத்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87) المائدة

நாமாக நம் உடலை வதைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு மற்றொரு சம்பவம்

عن جَابِرٍ رض..فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ (مسلم) بَاب الدَّلِيلِ عَلَى أَنَّ قَاتِلَ نَفْسَهُ لَا يَكْفُرُ - كِتَاب الْإِيمَانِ

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது துஃபைல் என்பவரும் ஹிஜ்ரத் சென்றார். அவருடன் அவரது சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் சென்றார்.(அவர்கள் மதீனாவிற்கு சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்து வரவில்லை அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். பின்பு ஒரு நாள் துஃபைல் அவரை கனவில் கண்டார். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய இரு கைகளும் போர்த்து மூடப்பட்டிருப்பதைக் கண்ட துஃபைல் அவர்கள் அந்த மனிதரிடம் உம் இறைவன் உம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார். அதற்கு அவர் நான் ஹிஜ்ரத் செய்ததால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான் என்றார். மீண்டும் துஃபைல் அவர்கள் “ உமது கைகள் மட்டும் போர்த்து மூடப்பட்டுள்ளதே ஏன்? என்று கேட்க, அதற்கு அவர்  “நீ வீணாக்கிய கையை நாம் சீராக்க மாட்டோம்” என என்னிடம் கூறப்பட்டது.”  என்றார். இந்தக் கனவை துஃபைல் அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறியபோது “யாஅல்லாஹ் அவரது இரு கைகளையும் மன்னிப்பாயாக” என்று நபி ஸல் துஆ செய்தார்கள்  - முஸ்லிம் – 184

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர

عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ  رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم  يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز

மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும்  ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப் பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப் பட்ட உமர் ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை. ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்

والظاهر أنه من سخف الشيعة وقد وقع ما هو أعظم من قتل الحسين رضي الله عنه ولم يقع شيء مما ذكروه فإنه قد قتل أبوه علي بن أبي طالب رضي الله عنه وهو أفضل منه بالإجماع ولم يقع شيء من ذلك وعثمان بن عفان رضي الله عنه قتل محصورا مظلوما ولم يكن شيء من ذلك وعمر بن الخطاب رضي الله عنه قتل في المحراب في صلاة الصبح وكأن المسلمين لم تطرقهم مصيبة قبل ذلك ولم يكن شيء من ذلك وهذا رسول الله صلى الله عليه وسلم وهو سيد البشر في الدنيا والآخرة يوم مات لم يكن شيء مما ذكروه ويوم مات إبراهيم بن النبي صلى الله عليه وسلم خسفت الشمس فقال الناس خسفت لموت إبراهيم فصلى بهم رسول الله صلى الله عليه وسلم صلاة الكسوف وخطبهم وبين لهم أن الشمس والقمر لا ينخسفان لموت أحد ولا لحياته. (من مكتبة الشاملة)

எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை

وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183 

ஹுஸைன் ரழி அவர்கள் எப்போது கொள்ளப்படுவார்கள் என்பது நபி ஸல் அவர்களுக்கு முன்பே தெரியும். அப்படியிருந்தும் அதை துக்கமான நாளாக கடை பிடிக்கும் படி கூறியதில்லை

عن أم  الفضل بنت الحارث أنها دخلتُ على رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني رأيت حلما منكرا الليلة قال:وما هو؟ قالت: إنه شديد قال وما هو ؟قالت : رأيت كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري. فقال رسول الله صلى الله عليه وسلم: رأيتُ خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك".فولدتْ فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلتُ يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه وسلم تهريقان الدموع قالت: فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال :أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني بتربة من تربته حمراء (دلائل النبوة للبهقي) مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

 உம்முல் ஃபழ்ல் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்  வருகை தந்து அல்லாஹ்வின் தூதரே நான் இன்று நான் விரும்பத் தகாத கனவை கண்டேன் என்று கூற, அது என்ன கனவு என நபி ஸல் கேட்டார்கள். அப்போது நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய உடம்பின் ஒரு சதைத் துண்டு  வெட்டப்பட்டு அது என் மடியில் கிடப்பதாக  கண்டேன் என்று கூறினேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீர் நல்ல கனவைத் தான் கண்டிருக்கிறீர். அதற்கான விளக்கம் என்னவென்றால் என்னுடைய சதைத் துண்டான என் மகள் ஃபாத்திமா இன்ஷா அல்லாஹ் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அக் குழந்தை உமது மடியில் இருக்கும் என நபி ஸல் விளக்கம் கூறினார்கள்.

அவ்வாறே ஃபாத்திமா ரழி  அவர்கள் ஹுஸைனைப் பெற்றெடுத்தார்கள். நபி ஸல் கூறியது போலவே அக்குழந்தை அதிகமாக என்னுடைய மடியில் இருக்கும். ஒருமுறை ஹுஸைனை (ரழி) நான் சுமந்து சென்று நபி  (ஸல்) அவர்களின் மடியில் வைத்தேன். பேரப் பிள்ளையை மடியில் வாங்கி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள் சற்று நேரத்தில் அழ ஆரம்பித்தார்கள். நான் அதற்கான காரணம் கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள். சற்று முன்பு  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து சோகமான செய்தியைக் கூறி விட்டுச் சென்றார்கள். அதாவது என்னுடைய இந்தப் பேரப் பிள்ளையை பிற்காலத்தில் என்னுடைய உம்மத்தைச் சார்ந்த சிலர் கொலை செய்வார்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அழுது கொண்டே கூறினார்கள். அப்போது நான் இந்தக் குழந்தையையா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ஆம் என்று கூறியதுடன்  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் அதற்கான முன்னறிவிப்பாக இரத்தக் கறை படிந்த சிவப்பு நிற மண்ணையும் காட்டி விட்டுச் சென்றார்கள் என்றும் கூறினார்கள்.                                                

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ بِنِصْفِ النَّهَارِ وَهُوَ قَائِمٌ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا قَالَ هَذَا دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمِ فَأَحْصَيْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدُوهُ قُتِلَ فِي ذَلِكَ الْيَوْمِ (مسند أحمد) باب مسند عبد الله بن العباس  مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

முஹர்ரம் மாத த்தில் அஹ்லே பைத்துகளின் சிறப்பை அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.

அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣

;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமின்களே ! உங்களுக்கு மத்தியில்  நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை எடுத்துச் சொன்னதற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்  [  ஷூரா =23 ]

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي (ترمذي

நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது சலவாத் சொல்லாமல் தொழுகை பரிபூரணம் அடைவதில்லை

عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد (بخاري

நபியின் குடும்பத்தை நேசிப்பது, அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிஃபாக்கிலிருந்து காப்பாற்றும் என தஹாவி இமாம் கூற்று,

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).

وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة بضعة مني فمن أغضبها أغضبني "

وعن البراء قال : رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول : " اللهم إني أحبه فأحبه " متفق عليه

அஹ்லுல் பைத் என்றால் யார்?

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719

நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “ இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ  னது அந்தஸ்தான இடத்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719இந்நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறதுமருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால் அந்த இடத்தில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். 

அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஆவின் கருத்தாகும்.

நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விஷயமாக நபித்தோழர்கள் கருதினார்கள்

؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-

இப்னு அப்பாஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் வஃபாத்தான செய்தி சொல்லப்பட்ட போது உடனே (மிகப்பெரும் சோதனைகளைக் கண்டால் சஜ்தா செய்வது போன்று) சஜ்தா செய்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் இந்த செய்திக்காக எதற்கு சஜ்தா செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். அல்லாஹ்வின் (பெரும் சோதனையான) அத்தாட்சியைக் கண்டால் சஜ்தா செய்யுங்கள் என நபி ஸல் கூறியுள்ளார்கள். நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரின் மரணத்தை  விட சோகமான செய்தி என்ன இருக்கப் போகிறது என்று பதில் கூறினார்கள்.                                             

பாரசீகரான சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்கள் அஹ்லே பைத்துகளில் ஒருவராக ஆக்கப்பட்டதன் விளக்கம்

عَنْ كَثِيرِ بن عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَّ الْخَنْدَقَ مِنْ أَحْمَرَ الْبَسْخَتَيْنِ طَرَفِ بني حَارِثَةَ عَامَ حِزْبِ الأَحْزَابِ، حَتَّى بَلَغَ الْمَذَابِحَ، فَقَطَعَ لِكُلِّ عَشَرَةٍ أَرْبَعِينَ ذِرَاعًا، فَاحْتَجَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ فِي سَلْمَانَ الْفَارِسِيِّ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ رَجُلا قَوِيًّا، فَقَالَ الْمُهَاجِرُونَ: سَلْمَانُ مِنَّا، وَقَالَتِ الأَنْصَارُ: سَلْمَانُ مِنَّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ" .(طبراني

சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர்.  அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியாக நின்றார்.  மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான் எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா)

ஸய்யித் வம்சம் என்று யாருக்குக் கூறப்படும்

السيد عند المسلمين من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]

ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக்  கூறப்படும் .

நபிகளாரின் குடும்பத்தினரான அஹ்லே பைத்துகள் பெரும் வசதி வாயப்புடன் இருந்திருக்கவில்லை 

عن جابر رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم أقام أيامًا لم يَطْعَمْ طعاما، حتى شَقّ ذلك عليه، فطاف في منازل أزواجه فلم يجد عند واحدة منهن شيئًا، فأتى فاطمة فقال: "يا بُنَيَّة، هَلْ عِنْدَكِ شَيْء آكُلُهُ، فَإِنَّي جَائِع؟" فقالت: لا والله بأبي أنتَ وأمّي. فلما خَرَج من عندها بعثت إليها جارة لها برغيفين وقطعة لحم، فأخذته منها فوضعته في جَفْنَةٍ لها، وقالت: والله لأوثرن بهذا رسول الله [صلى الله عليه وسلم]  على نفسي ومن عندي. وكانوا جميعًا محتاجين إلى شبعة طعام، فبعثت حَسَنا أو حُسَينا إلى رسول الله [صلى الله عليه وسلم]  فرجع إليها فقالت له: بأبي وأمي  قد أتى الله بشيء فخَبَّأتُه لك. قال: "هَلُمِّي يا بُنيَّة" قالت: فأتيته بالجفنة. فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزًا ولحمًا، فلما نظرَتْ إليها بُهِتتْ وعرفَتْ أنها بركة من الله، فحمدَت الله وصلَّت على نَبِيِّهِ، وقدّمَتْه إلى رسولِ الله صلى الله عليه وسلم. فلما رآه حمد الله وقال: "مِنْ أيْنَ لَكِ هَذَا يَا بُنَية؟" فقالت  يا أبت، 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فحمد الله وقال: "الحَمْدُ للهِ الَّذي جَعَلَكِ -يا بُنَيّة-شَبيهَةِ بسيدةِ  نِساء بَنيِ إسْرَائيلَ، فَإنَّها كَانَتْ إذَا رَزَقَهَا اللهُ شَيْئًا فَسُئِلَتْ عَنْهُ قَالَتْ: { هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عَلِي  ثم أكل رسولُ الله صلى الله عليه وسلم وأكل علي، وفاطمة، وحسن، وحسين، وجميع أزواج النبيّ صلى الله عليه وسلم وأهل بيته جميعًا حتى شبعوا. قالت: وبقيت الجفنة كما هي، فأوسعت ببقيتها  على جميع الجيران، وجعل الله فيها بركة وخيرا كثيرا  .(تفسير ابن كثير) الجفنةதட்டு

விளக்கம்- நபி ஸல் அவர்கள் எப்போதும்  தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க மாட்டார்கள். அடுத்த நேரம் அல்லாஹ் எப்படியும் தருவான் என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். அவ்வாறு  ஒருமுறை  நபி ஸல் அவர்களின் குடும்பத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எந்த மனைவிமார்களின் வீட்டிலும் எதுவும் இல்லை.  கடைசியாக பாத்திமா ரழி அவர்களின் வீட்டுக்கும் நபி ஸல் அவர்கள் சென்றார்கள். அங்கும் எதுவும் இல்லை. பசியுடன் நபி ஸல் அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். சற்று நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்  இரண்டு ரொட்டித் துண்டுகளையும்  சிறிதளவு இறைச்சியையும் கொடுத்தனுப்ப, உடனே பாத்திமா ரழி அவர்கள் நிச்சயமாக நாம் பசியோடு இருந்தாலும் கூட, இதை நபி ஸல் அவர்களுக்காக எடுத்து வைப்பேன் என்று எண்ணி அதை தனியாக எடுத்து வைத்து விட்டு நபி ஸல் அவர்களை அழைத்து வருவதற்காக ஹஸன், ஹுஸைன் ரழி இருவரையும் அனுப்ப, நபி ஸல் அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். அப்போது பாத்திமா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்  உங்களுக்காக  ஒரு உணவை எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதை எடுத்து வா என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை எடுக்கச் சென்ற பாத்திமா ரழி அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அதை வைக்கும்போது இருந்த தை விட மிக அதிகமாகவே இருந்தது. இதை முஃஜிஸா என்று கூறலாம். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இது எப்படி உமக்குக் கிடைத்த து என்று மகளிடம் கேட்க,  அன்னை மர்யம் அலை அவர்கள் பதில் கூறியதைப் போன்று பாத்திமா ரழி அவர்கள் 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ }

இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த து என பதிலளித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அன்னை மர்யம் அலை பதில் கூறியது போன்று உன்னை பதில் கூற வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறி விட்டு, தனக்காக எடுத்து வைத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச்சொன்னார்கள். காரணம் அப்போது அத்தனை பேரும் பசியோடு தான் இருந்தனர் அனைவரும் வந்த பிறகு  முதலில் நபி ஸல் அவர்களும்  பின்பு அலீ ரழி அவர்களும் பின்பு வரிசையாக அனைவரும் உண்டனர். அத்தனை பேரும் உண்ட பிறகும் உணவு  தட்டு நிறைய முன்பு இருந்தது  போன்றே மிச்சம் இருந்தது.  பிறகு அனைத்து அண்டை வீட்டாருக்கும் அது கொடுத்து அனுப்பப் பட்டது.  

عن زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه ..قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ قَالَ كُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ (مسلم) بَاب مِنْ فَضَائِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - كِتَاب فَضَائِلِ الصَّحَابَةِ 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ الْمَدِينَةِ فَانْصَرَفَ فَانْصَرَفْتُ فَقَالَ أَيْنَ لُكَعُ ثَلَاثًا ادْعُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَامَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا فَقَالَ الْحَسَنُ بِيَدِهِ هَكَذَا فَالْتَزَمَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ (بخاري) باب السِّخَابِ لِلصِّبْيَانِ-كتاب اللباس  (السخاب : قلادة ليس فيها من اللؤلؤ والجوهر شىء)

ஆஷூரா

 26-06-2026

MUHARRAM-  10


بسم الله الرحمن الرحيم  

        ஆஷூரா நாளில் நடந்த சம்பவங்களும் 

அதன் படிப்பினைகளும்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


     ஆஷூரா தினத்தில் பல நபிமார்கள் விஷயத்தில் படிப்பினைக்குரிய பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சில நபிமார்கள் விஷயத்தில் அந்த நபிமார்களுக்கு எதிராக  அநியாயம் செய்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் பாடம் புகட்டிய தினமாக அந்த தினம் அமைந்துள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விஷயத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் இந்த நாளில் நடைபெற்றுள்ளன. 1. கைத்தடி பாம்பாக மாறி சூனியக்காரர்களின் சூழ்ச்சியை முறியடித்த சம்பவம். 2. கடல் பிளந்த சம்பவம். மேலும் மற்ற நபிமார்கள் விஷயத்திலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா ஆஷூரா நாளில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைகளுக்காக ஆஷூரா நாளில் தான் பாவ மன்னிப்பு கேட்டார்கள். யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தினர் மீது ஏற்படவிருந்த வேதனை கடைசி நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதும் ஆஷூரா நாளில் தான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் ஆஷூரா நாளில் தான் கரை சேர்ந்தது.  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் யூதர்களிடமிருந்து காப்பாற்றி விண்ணுக்கு உயர்த்தியதும் ஆஷூரா நாளில் தான். அந்த வகையில் சில நபிமார்களுக்கு இது பாவமன்னிப்பு தினமாகவும் வேறு சில நபிமார்களுக்கு எதிராக  அநியாயம் செய்தவர்கள் அழிக்கப்பட்ட தினமாகவும் அநியாக்காரர்களுக்கு அல்லாஹ் பாடம் புகட்டிய தினமாகவும் இந்த தினம் உள்ளது.

  எனவே அப்படிப்பட்ட ஒவ்வொரு வரலாற்றுச் சம்பவங்களையும் அதன் படிப்பினைகளையும் நாம் காண்போம்.            

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம்

فَتَلَقَّى آَدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ.. (37البقرة ) وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي) قِيلَ إِنَّ هَذِهِ الْكَلِمَات: مفسرة بقوله تعالي قَالَا رَبّنَا ظَلَمْنَا أَنْفُسنَا وَإِنْ لَمْ تَغْفِر لَنَا وَتَرْحَمنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ (الاعراف23" وسئل بعض السلف عما ينبغي أن يقوله المذنب فقال: يقول ما قاله أبواه :{ ربنا ظلمنا أنفسنا } الآية وقال موسى عليه السلام{رب إني ظلمت نفسي فاغفر لي} وقال يونس عليه السلام :{ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين (تفسير قرطبي)                                                

பாவ மன்னிப்புக் கேட்பதற்கு சிறந்த வாசகம் எது என முன்னோர்களில் ஒருவரிடம் கேட்ட போது ஆதம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம்,யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் கேட்ட தவ்பாவின் வாசகங்களை தேர்ந்தெடுத்து தவ்பா கேட்க அறிவுறுத்தினார்கள்

பாவ மன்னிப்பு சம்பந்தமாக இன்னும் இரு நபிமார்களின் விஷயத்தில் நடைபெற்ற சம்பவங்கள்

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு  தவ்பா செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள்

قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة يوسف)قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال : سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்துக்கு வேதனை அருகில் வந்த பின் 

அவர்கள் திருந்தி தவ்பா கேட்டு வேதனை விளக்கிக் கொள்ளப்பட்ட தினம்

 عَنْ عَلِيٍّ، قَالَ:"تِيبَ عَلَى قَوْمِ يُونُسَ يَوْمَ عَاشُورَاءَ(تفسير ابن ابي حاتم)روي عن ابن مسعود وغيره: أنّ قوم يونس كانوا بأرض نِيْنَوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام ،يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له :إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً ،فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء،وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم ، فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم ، فلمارأوا ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح  وأظهرواالإيمان والتوبة  وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام  فرحمهم الله تعالى  واستجاب دعاءهم  وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة ،وقيل :خرجوا إلى شيخ من بقية علمائهم فقالوا :قد نزل بنا العذاب فما ترى ؟فقال لهم : قولوا يا حيّ حين لا حيّ ، ويا حيّ محيي الموتى ، ويا حيّ لا إله إلا أنت. فقالوها ، فكشف عنهم. (تفسير السراج المنير)

யூனுஸ் அலை அவர்கள் இராக்கில் உள்ள நீனவா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்காத போது அல்லாஹ்வின் கட்டளைப்படி உங்களுக்கு மூன்றே நாளில் வேதனை வரும் என்று கூறினார்கள். இதன் பின்பு அவர்களின் உள்ளத்தில் பயம் வந்து விட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் யூனுஸ் அலை சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். நாம் அந்த நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அந்த நாளில் அவர் நம்மோடு இருந்தால் நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவர் நம்மோடு இல்லாமல் வெளியேறி விட்டால் அவர் சொல்வதை நம்புவோம் என்று முடிவு செய்தனர். யூனுஸ் அலை அந்த நாளுக்கு முந்தைய இரவில் வெளியேறி னார்கள். அடுத்த நாள் காலையில் வானில் கருமேகம் போன்று வேதனை ஒரு மைல் தூரத்தில் இறங்கி வந்து கொண்டே இருந்தது. எல்லாம் இருட்டாகி விட்டது. அப்போது அம்மக்கள் திருந்தி தவ்பா செய்தவர்களாக யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடினார்கள். பின்பு மைதானத்தில் அவர்களும் அவர்களின் குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கந்தலான ஆடைகளுடன் ஒன்று கூடி அழுதார்கள். அல்லாஹ் கடைசி நேரத்தில் அவர்களின் மீது வர வேண்டிய வேதனையை விலக்கிக் கொண்டான். இது ஆஷூரா நாளில் நடைபெற்றது. 

         فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (98) يونس

படிப்பினை - கடைசி நேரத்தில் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டது இவர்கள் விஷயத்தில் மட்டும் தான். மற்ற மனிதர்கள் விஷயத்தில் கடைசி நேர தவ்பா ஏற்கப்படாது. 

தவ்பாவைப் பற்றி இன்னும் சில செய்திகள்

தவ்பாவுக்கு இரண்டு விதமான எல்லைகள் உண்டு என்று சொல்லப்படும் 1. தனி மனிதனைக் கவனித்து அதாவது உயிர் பிரியும் கடைசி நேரம் வந்து விட்டால் தவ்பா ஏற்கப்பட்டாது. இது ஒவ்வொரு தனி மனிதனைப் பொறுத்ததாகும். 

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَاباً أَلِيماً (النساء18قال الله في قصة فرعون)حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ-آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ(الانفال

2. ஒட்டு மொத்த மக்களைக் கவனித்து தவ்பாவின் எல்லை.  இது தான் சூரியன் மேற்கில் உதயமாகுவதாகும். 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ». (ابن ماجة

 ‘சூரியன் மேற்கில் உதிக்கும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அவ்வாறு அது உதித்து மக்கள் அதனைக் கண்டால் அவர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் அப்போது ஈமான் கொள்ளல் எந்த ஆண்மாவுக்கும் (அது ஏற்கனவே ஈமான் கொண்டு இல்லாவிட்டால்) பயன் கொடுக்க மாட்டாது. அல்லது தன் ஈமானில் அது எந்த நன்மையை சம்பாதிக்கவும் மாட்டாது.’

சூரியன் மேற்கில் உதயமாகி விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்படும் என்பதால் அதற்கு அடுத்து தாப்பதுல் அர்ழ் என்ற அதிசய மிருகம் வந்து ஒவ்வொருவரின் நெற்றியிலும் இவர் முஃமின் இவர் காஃபிர் என அடையாளமிடும்.

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل

 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة) معانى بعض الكلمات : تجلو : تنوِّر -    الحواء : البيوت المجتمعة من الناس على ماء  -  تخطم : تسم

 ‘தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும்.  எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர். அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும்  பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே  எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு. 

தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்

عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا.  (ابن ماجة 

ஆஷூரா நாளில் நடைபெற்ற இன்னும் சில சம்பவங்கள்

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி  ராட்சத பாம்பாக மாறி, சூனியக்காரர்கள் உருவாக்கிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கியதும், அந்த சூனியக்காரர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாள் 

قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى(57)فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى (59) فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى (60....قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى- قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَتَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (طه) عَنِ ابْنِ عَبَّاسٍرضأَنَّ يَوْم الزِّينَة الْيَوْم الَّذِي أَظْهَرَ اللَّه فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْن وَالسَّحَرَة يَوْم عَاشُورَاء(تفسير ابن كثير

மேற்காணும் சம்பவத்தில் படிப்பினைகள்

இஸ்லாத்தை அழிக்க எந்த அளவுக்கு எதிரிகள் முயற்சி  செய்வார்களோ  அந்த அளவுக்கு அல்லாஹ் இஸ்லாத்தை வளரச் செய்வான். மூஸா அலை அவர்களையும், அவர்களின் சத்தியக் கொள்கையையும் ஒழித்துக் கட்ட அத்தனை சூனியக்காரர்களையும் ஃபிர்அவ்ன் அழைத்தான். ஆனால் அனைவரும் முஃமின்களாக மாறினர். 

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (الصف8)

சூரத்துல் புரூஜ் கூறும் சம்பவமும் இதே போன்றது தான்

  ஒரு அரசனிடம் சூனியக்காரனாக மாற வேண்டியதிருந்த இளைஞரின் பாதையை அல்லாஹ் மாற்றி நேர்வழியில் செலுத்திய சம்பவம் சுருக்கமாக-  இறுதியில் அந்த இளைஞரைக் கொல்வதற்கு அரசன் பல தடவை முயன்றும் தோற்றுப்போய் விட, கடைசியாக அந்த இளைஞரே அரசனிடம் நான் சொல்லும் விதத்தில் செயல்பட்டால் தான் என்னைக் கொல்ல முடியும் என்று கூறி ஊர் மக்களையெல்லாம் திரட்டச் சொல்லுவார் ஊர் ஒன்று கூடியிருக்க, தன்னையே கடவுள் என்று பிதற்றிய அந்த அரசன் தனக்குப் பிடிக்காத அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அம்பை எறியும் போது தான் அந்த இளைஞர் கொல்லப்படுவார் அதைக் கண்டு அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் முஸ்லிமாகி விடுவர். அந்த அரசன் தன் மனதில் உயிருடன் இருந்த ஒரேயொரு முஸ்லிமையும் நாம் கொன்று விட்டோம் இனி முஸ்லிமே இந்த ஊருக்குள் இருக்க மாட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளும் நேரத்திற்குள் அங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உருவாகி விடுவார்கள்  இச்சம்பவத்தை விரிவாக முஸ்லிம் ஷரீஃபில் 5735 காணலாம் சூரத்துல் புரூஜ் உடைய ஆரம்ப வசனங்கள் 4 முதல் 9 வரை இச்சம்பவத்தின் சுருக்கமாகும்.

எப்போதெல்லாம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எதிரிகள் அழிக்க நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் இஸ்லாம் இஸ்லாத்தின் மிக வேகமான வளர்ச்சியைத் தான் காண முடிந்தது 

இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.  எங்கு  இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் அளவுக்கு அதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பதுதான் வரலாறு.. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டது. அதற்குப்பிறகுதான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தன. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளி வாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. 2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸ்ஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது.அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது மேலும், பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாக அங்கு காணலாம்

ஃபிரான்ஸ் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சி

பல வருடங்களுக்கு முன் ஃபிரான்ஸ்  தலைநகர்  பாரிஸில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo)  என்ற கேலிப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நபி ஸல் அவர்களின் உருவப்படம் அடங்கிய கேலிச் சித்திரம் இடம்பெற்றது. இதனையடுத்து நடந்த   ஆர்ப்பாட்டத்தில்  வன்முறை ஏற்பட்டு சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதோடு, நகரின் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  மேலும் பத்திரிகை ஆசிரியர் ஊடகவியலாளர்கள் ஐவர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என  ஃபிரான்ஸ் மக்கள் கருதும் அளவுக்கு நாடகம் அரங்கேறியது. ஆனால் இந்த வன்முறையை மறைமுகமாக  நிகழ்த்தியது யூதர்கள் தான் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து, அது மூடி மறைக்கப்பட்டுள்ளது  எனினும் இந்த சம்பவத்தால்  ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தலைகீழாக மாறியது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று அப்போது ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், போகோ ஹராம் என்று பல தீவிரவாதக் குழுக்களை இஸ்லாமிய எதிரிகள் ஏற்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாக மாறியது நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் அன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் சென்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தன.

சில வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில்  மஸ்ஜிதுக்குள் நுழைந்த ஒரு தீவிரவாதி கண்மூடித்தனமாக சுட்டதில் ஐம்பது பேர் உயிரிழந்தனர். உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்குப் பின்பு அங்கு இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது சுமார் 350 பேர் அந்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்து  சில தினங்களுக்குப் பின் நியூஸிலாந்து பாராளுமன்றம் துவங்கும் போது ஒரு ஆலிமை வரவழைத்து குர்ஆனின் சில ஆயத்துகளை ஓதி, அதனை ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்த சம்பவங்களைப் பார்க்கும்போது கூடிய விரைவில் நியூசிலாந்தில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது

ஆஷூரா நாளில் நடைபெற்ற  சம்பவங்கள் தொடர்ச்சி...

நபி மூஸா அலை அவர்களும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு 

ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்ட நாள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري)

ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட விதம் பற்றி விரிவாக...

إِنَّ بَنِي إِسْرَائِيل لَمَّا خَرَجُوا مِنْ مِصْر فِي صُحْبَة مُوسَى عَلَيْهِ السَّلَاموَهُمْ فِيمَا قِيلَ سِتّمِائَةِ أَلْف مُقَاتِل سِوَى الذُّرِّيَّة وَقَدْ كَانُوا اِسْتَعَارُوا مِنْ الْقِبْط حُلِيًّا كَثِيرًا فَخَرَجُوا بِهِ مَعَهُمْ فَاشْتَدَّ حَنَق فِرْعَوْن عَلَيْهِمْ فَأَرْسَلَ فِي الْمَدَائِن حَاشِرِينَ يَجْمَعُونَ لَهُ جُنُوده مِنْ أَقَالِيمه فَرَكِبَ وَرَاءَهُمْ فِي أُبَّهَة عَظِيمَة وَجُيُوش هَائِلَة لِمَا يُرِيدهُ اللَّه بِهِمْ وَلَمْ يَتَخَلَّف عَنْهُ أَحَد مِمَّنْ لَهُ دَوْلَة وَسُلْطَان فِي سَائِر مَمْلَكَته فَلَحِقُوهُمْ وَقْت شُرُوق الشَّمْس"فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَاب مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ" أَنَّهُمْ لَمَّا اِنْتَهَوْا إِلَى سَاحِل الْبَحْر وَفِرْعَوْن وَرَاءَهُمْ وَلَمْ يَبْقَ إِلَّا أَنْ يُقَاتِل الْجَمْعَانِ وَأَلَحَّ أَصْحَاب مُوسَى عَلَيْهِ السَّلَام عَلَيْهِ فِي السُّؤَال كَيْف الْمَخْلَص مِمَّا نَحْنُ فِيهِ؟ فَيَقُول إِنِّي أُمِرْت أَنْ أَسْلُك هَهُنَا" كَلَّا إِنَّ مَعِيَ رَبِّيسَيَهْدِينِي" فَعِنْدَ مَا ضَاقَ الْأَمْر اِتَّسَعَ فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يَضْرِب الْبَحْر بِعَصَاهُ فَضَرَبَهُ فَانْفَلَقَ الْبَحْر فَكَانَ كُلّ فِرْق كَالطَّوْدِ الْعَظِيم أَيْ كَالْجَبَلِ الْعَظِيم وَصَارَ اِثْنَيْ عَشَر طَرِيقًا لِكُلِّ سِبْط وَاحِد وَأَمَرَ اللَّه الرِّيح فَنَشَّفَتْ أَرْضه " فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْر يَبَسًا لَا تَخَاف دَرْكًا وَلَا تَخْشَى" وَتَخَرَّقَ الْمَاء بَيْن الطُّرُق كَهَيْئَةِ الشَّبَابِيك لِيَرَى كُلّ قَوْم الْآخَرِينَ لِئَلَّا يَظُنُّوا أَنَّهُمْ هَلَكُوا وَجَاوَزَتْ بَنُو إِسْرَائِيل الْبَحْر فَلَمَّا خَرَجَ آخِرهمْ مِنْهُ اِنْتَهَى فِرْعَوْن وَجُنُوده إِلَى حَافَّته مِنْ النَّاحِيَة الْأُخْرَى وَهُوَ فِي مِائَة أَلْف أَدْهَم فَلَمَّا رَأَى ذَلِكَ هَالَهُ وَأَحْجَمَ وَهَابَ وَهَمَّ بِالرُّجُوعِ وَهَيْهَاتَ نَفَذَ الْقَدَر وَاسْتُجِيبَتْ الدَّعْوَة وَجَاءَ جِبْرِيل عَلَيْهِ السَّلَام عَلَى فَرَس وَدِيق حَائِل فَمَرَّ إِلَى جَانِب حِصَان فِرْعَوْن فَحَمْحَمَ إِلَيْهَا وَاقْتَحَمَ جِبْرِيل الْبَحْر فَاقْتَحَمَ الْحِصَان وَرَاءَهُ وَلَمْ يَبْقَ فِرْعَوْن يَمْلِك مِنْ نَفْسه شَيْئًا فَتَجَلَّدَ لِأُمَرَائِهِ وَقَالَ لَهُمْ لَيْسَ بَنُو إِسْرَائِيل بِأَحَقّ بِالْبَحْرِ مِنَّا فَاقْتَحَمُوا كُلّهمْ عَنْ آخِرهمْ وَمِيكَائِيل فِي سَاقَتهمْ لَا يَتْرُك مِنْهُمْ أَحَدًا إِلَّا أَلْحَقَهُ بِهِمْ فَلَمَّا اسْتَوْسَقُوا فِيهِ وَتَكَامَلُوا وَهَمَّ أَوَّلهمْ بِالْخُرُوجِ مِنْهُ أَمَرَ اللَّه الْقَدِير الْبَحْرَ أَنْ يَرْتَطِم عَلَيْهِمْ فَارْتَطَمَ عَلَيْهِمْ فَلَمْ يَنْجُ مِنْهُمْ أَحَد وَجَعَلَتْ الْأَمْوَاج تَرْفَعهُمْ وَتَخْفِضهُمْ وَتَرَاكَمَتْ الْأَمْوَاج فَوْق فِرْعَوْن وَغَشِيَتْهُ سَكَرَات الْمَوْت فَقَالَ وَهُوَ كَذَلِكَآمَنْت أَنَّهُ لَا إِلَه إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيل وَأَنَا مِنْالْمُسْلِمِينَ" فَآمَنَ حَيْثُ لَا يَنْفَعهُ الْإِيمَان (تفسير ابن كثير)

  சுருக்கம்- ஃபிர்அவ்னிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பனீ இஸ்ராயீல் சமூகத்தை மீட்பதற்காக அல்லாஹ் நபி மூஸா அலை அவர்களை அனுப்பினான். நபி மூஸா அலை அவர்களோடு எகிப்தை விட்டும் வெளியேறிய பனீ இஸ்ராயீல் சமூகத்தினர் குழந்தைகள் அல்லாமல் சுமார் ஆறு இலட்சம் பேர். இவர்கள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நிறைய நகைகளை இரவலாக வாங்கியிருந்தார்கள். அந்த நகைகளுடன் தான் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். எனவே அவர்களை விரட்டிப் பிடிக்க ஃபிர்அவ்னின் படைகள் துரத்திக் கொண்டு வந்தனர். இஷ்ராக் நேரத்தில் பனூ இஸ்ராயீல் சமூக மக்கள் கடற்கரையை அடைந்தனர். கடல் குறுக்கே வந்தவுடன் இனிமேல் நாங்கள் எப்படி ஃபிர்அவ்னிடமிருந்து தப்பிக்க முடியும் என மூஸா அலை அவர்களிடம் கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தன்னிடம் உள்ள கைத்தடியை கடல் நீரில் அடித்தார்கள். கடல் பிளந்து கடலுக்குள் 12 பாதைகள் உருவாயின. இரு புறமும் மலை போன்று கடல் நீர் விலகி அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க அப்படியே நின்றது. கீழே இறங்கி நடந்து செல்லும் 12 பாதைகளிலும் சகதிகள் ஒட்டாத அளவுக்கு உடனடியாக அதைக் காய வைத்து வேகமாக நடப்பதற்குத் தோதுவாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்.  ஒவ்வொரு பாதையிலும் பயணம் செய்பவர்கள் மறு பாதையில் பயணம் செய்பவர்களை அவர்கள் நிம்மதியாக கடற்கரையை அடைகிறார்களா என்று பார்க்கும் அளவுக்கு ஒரு பாதைக்கும் மற்றொரு பாதைக்குமிடையே ஜன்னல்களையும் அல்லாஹ் உருவாக்கினான்.                                 

 அவர்கள் இறங்கி நடந்து மற்றொரு கடற்கரையை அடைந்து அவர்களில் கடைசி நபரும் கரையை அடையும் நேரம் ஃபிர்அவ்னும் அவனது பட்டாளமும் அங்கு வந்தனர். அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அங்கிருந்து திரும்பிச் செல்ல நினைத்தாலும் அவனை அழிக்கும்படி மூஸா அலை கேட்ட துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஃபிர்அவ்ன் விதியை நோக்கி இழுக்கப்பட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண் குதிரையில் வருகை தந்தார்கள். ஃபிர்அவ்ன் பயணம் செய்த து ஆண் குதிரை. எனவே ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண் குதிரையை முன்னே ஓட்டிச் செல்ல அதைத் தொடர்ந்து ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரையும் அதை விரட்டிச் சென்றது. ஃபிர்அவ்னால் அந்தக் குதிரையை கட்டுப் படுத்த முடியவில்லை. பிளந்து கிடந்த பாதை வழியாக ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரை சென்றதைக் கண்டவுடன் அவனது பட்டாளத்தினர் பயணம் செய்த அத்தனை குதிரைகளும் அவற்றில் பயணம் செய்தவர்கள் அந்தப் பாதையில் உள்ளே புகுந்தனர். ஜிப்ரயீல் அலை தனது பெண் குதிரையை படையின் முன்னே செலுத்தியது போன்று மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படையின் பின்னால் இருந்து அவர்களில் யாரும் தப்பி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இறுதியாக படை நடுப் பகுதியை அடைந்தவுடன் பிளந்த கடல் மூடிக் கொண்டது. ஃபிர்அவ்ன் கடைசி நேரத்தில் தவ்பா செய்தான். ஆனால் அவனது தவ்பா ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  

ஃபிர்அவ்னின் உடல் இன்று வரை பாதுகாப்பாக இருப்பது உலக மக்களுக்கு மாபெரும் படிப்பினை

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (يونس92)

உனது உடலை நாம் பாதுகாப்போம் என்ற இறை வசனத்திற்கேற்ப ஃபிர்அவ்னின் உடல் கி.பி. 1889 இல் கண்டு பிடிக்கப்பட்டு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு 1907 முதல் அரச சடலங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975 –ல் இது பரிசோதிக்கப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற அரச சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது ஃபிர்அவ்னின் சடலம் மட்டும் உருக்குலையாமல் கண்டெடுக்கப்பட்டது குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துவதாகும்

950 வருடங்கள் பிரச்சாரம் செய்தும் திருந்தாத மனிதர்கள் வெள்ளப் பிரளயம் மூலமாக அழிக்கப்பட்டு முடித்த தினம்

وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِى مَعْزِلٍ ياَبُنَىَّ ارْكَبَ مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ الْكَافِرِينَ قَالَ سَآوِىإِلَى جَبَلٍ يَعْصِمُنِى مِنَ الْمَآءِ قَالَ لاَ عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ وَقِيلَ ياَأَرْضُ ابْلَعِى مَآءَكِ وَياَسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ الْمَآءُ وَقُضِىَ الاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (سورة هود) عن عبد العزيز بن عبد الغفور عن أبيه قال رسول الله صلى الله عليه وسلمفي أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه،وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله -عن ابن جريج قال: كانت السفينة أعلاها للطير، ووسطها للناس وفي أسفلها السباع وكان طولها في السماء ثلاثين ذراعًا، ودفعت من عَين وردة يوم الجمعة لعشر ليالٍ مضين من رجب، وأرست على الجوديّ يوم عاشوراء،(زاد المسير)

ரஜப் ஆரம்பத்தில் கப்பல் பயணத்தை துவங்கியது.அன்றைய தினம்  நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். ஆறு மாதங்கள் ஓடிய பின் ஜூதி மலை மீது தரை தட்டியது. அப்போதும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். படிப்பினை- துவங்கும் காரியம் அல்லது பயணம் சிறப்பாக அமைவதற்காக நோன்பு வைக்கும் வழமை அன்றே இருந்துள்ளது.இன்றும் முஸ்லிம்களிடம் நிகாஹ் போன்ற வைபவங்கள் நடைபெறும்முன் இந்த வழமை உள்ளது

கப்பலின் மேற்பகுதியில் பறவைகளும் நடுப்பகுதியில் மனிதர்களும் கீழ் பகுதியில் விலங்குகளும் இருந்த நிலையில் கப்பல் புறப்பட்ட பின் பறவைகள் விலங்குகள் உட்பட அனைவரும் நோன்பை கடைபிடித்தனர். 

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த தினத்தில்...

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (النساء158) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء .(بحر العلوم)

வியாழன், 11 ஜூன், 2026

ஹிஜ்ரத்

 12-06-2026

துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم  

       ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும் 

இஸ்லாமியப் புத்தாண்டு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ஹிஜ்ரீ என்ற பெயர் வந்த காரணம் ஹிஜ்ரத் சம்பவத்தை இறுதி வரை மக்கள் மறக்கக் கூடாது என்றுதான் 

இஸ்லாம் பற்றி அறவே அறியாதவர்கள் பின்வருமாறு கேள்வி கேட்பார்கள். கி.பி 2025 என்பதால் கிறிஸ்தவ மதம் தானே முந்தியது. 

ஹிஜ்ரி  1446 என்பதால் உங்கள் மதம் பிந்தியது தானே என்று கேட்பார்கள் அவர்களுக்கான பதில்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய மாதங்கள் இருந்தன. மேலும் இதே பெயர்கள் தான் இருந்தன. 

வருடங்களுக்கான பெயர்கள் மட்டும் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து மாற்றப்பட்டன

قال الله تعالي إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ سورة التوبة:36 عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- كتاب بدء الخلق

قال الزُّهريُّ والشعبيُّ: أرَّخ بنو إسماعيل من نار إبراهيم عليه السلام إلى بنيان البيت حين بناه إبراهيم وإسماعيل عليهما السلام ثم أرَّخ بنو إسماعيل من بنيان البيت حتى تفرَّقت وكان كلما خرج قوم من تهامة أرَّخوا مخرجهم ومن بقي بتهامة من بني إسماعيل يؤرخون من خروج سعدٍ ونهدٍ وجهينة بن زيد من تهامة حتى مات كعب بن لؤي فأرَّخوا من موت كعب بن لؤي إلى الفيل فكان التاريخ من الفيل حتى أرَّخ عمر بن الخطاب رضي الله عنه من الهجرة وذلك سنة سبع عشرة أو ثمان عشر.تاريخ الطبري)

   நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதை வைத்து அவர்களின் சந்ததிகள் வருடங்களைக் கணக்கிட்டனர். அதன் பின்பு கஃபா கட்டப்பட்ட வருடத்தில் இருந்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகள் அவரவர் எங்கே குடியேறினார்களோ அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு அந்தப் பரம்பரையில் கஃப் என்பவர் முக்கிய நபராக கருதப்பட்டதால் அவர் மரணமடைந்த வருடத்தை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு யானைச் சம்பவம் பிரபலமாக இருந்த தால் அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். அதுவும் காலப்போக்கில் மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது கடைசியாக உமர் ரழி அவர்களின் காலத்தில் ஹிஜ்ரத்தை வைத்து ஹிஜ்ரீ கணக்கு உருவானது. 

ஹிஜ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னனி

ولم يكن التاريخ السنوي معمولا به في أول الإسلام حتى كانت خلافة عمر رض ففي السنة الثالثة أو الرابعة من خلافته كتب إليه أبو موسى الأشعري :إنه يأتينا منك كتب ليس لها تاريخ.فجمع عمر الصحابة فاستشارهم فيقال إن بعضهم قال:أرخوا كما تؤرخ الفرس بملوكها كلما هلك ملك أرخوا بولاية من بعده"فكره الصاحبة ذلك،فقال بعضهم:أرخوا بتاريخ الروم"فكرهوا ذلك أيضا،فقال بعضهم:أرخوا من مولد النبي وقال آخرون:من مبعثه" وقال آخرون:من مهاجره"فقال عمر الهجرة فرقت بين الحق والباطل فأرخوا بها فأرخوا من الهجرة"واتفقوا على ذلك (تاريخ الرسل والملوك) (تاريخ الطبري)   

عن محمد بن سيرين قال:قام رجل إلى عمر بن الخطاب فقال: أَرِّخُوْا فقال عمر :ما أرخوا ؟ قال:شيء تفعله الأعاجم يكتبون في شهر كذا من سنة كذا فقال عمر بن الخطاب:حسنٌ فأرخوا فقالوا: من أي السنين نبدأ ؟ قالوا: مِنْ مبعثه وقالوا: مِنْ وفاته؛ ثم أجمعوا على الهجرة ثم قالوا: فأي الشهور نبدأ ؟ فقالوا: رمضان ثم قالوا المحرم فهو منصرف الناس من حجهم؛ وهو شهرٌ حرام فأجمعوا على المحرم  (تاريخ الرسل والملوك)

காலப்போக்கில் வருடங்களை மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது உமர் ரழி அவர்களின் ஆட்சிக்கலத்தில் அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் உமர் ரழி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்போது தாங்கள் அனுப்பும் கடிதங்களில் வெறும் மாதங்களை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் எந்த வருடம் என்று குறிப்பிடுவதில்லை என்று அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் எழுதினார்கள். அதன் பின்பு  உமர் ரழி அவர்கள் ஒரு மஷ்வராவுக்கு ஏற்பாடு செய்தார்கள். வருடங்களுக்குப் பெயர் சூட்டுவது பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். பாரசீகர்கள் எவ்வாறு ஒரு அரசர் இறந்து அடுத்த அரசர் பதவிக்கு வரும்போது அவரது பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவார்கள். அதுபோன்று கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவது போல கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். நபி ஸல் அவர்களின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் அதாவது நபி ஸல் அவர்கள் பிறந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்று சிலர் கூறினர். வேறு சிலர் நபி ஸல் நபியாக அனுப்பப்பட்டதை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் என்று கூறியபோது அப்போது நாமெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று கூறி அதையும் பலர் வெறுத்தனர். கடைசியாக ஹிஜ்ரத் நடந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டபோது அதற்கு உமர் ரழி அவர்கள் ஆதரவு தெரிவித்து அந்த ஹிஜ்ரத் தான் சத்தியத்துக்கும் அசத்தியத்தும் இடையில் வேறு படுத்திக் காட்டியது எனவே அதையே வருடங்களுக்குப் பெயராக வைக்கலாம் என்று கூற, மற்றவர்களும் ஆதரித்தார்கள்.                                                        

எந்த மாதத்தை முதல் மாதமாக வைப்பது என்ற ஆலோசனையின் போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். ரமழான் என்று சிலரும் முஹர்ரம் என்று வேறு சிலரும் கூறினார்கள். இறுதியில் முஹர்ரம் தான் முதல் மாதம் என முடிவானது. ஹஜ்ஜை முடித்து விட்டு ஹாஜிகள் திரும்பி தங்களின் தொழிலைத் துவங்கும் மாதத்தை முதல்மாதமாக வைத்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அதுவே முடிவானது.                                

ஹாஜிகளின் வருகையை கவனித்து வருடத்தின் முதல் மாதத்தை முடிவு செய்யும் அளவுக்கு 

ஹாஜிகளின் வருகை அன்றிலிருந்தே கண்ணியமாக கருதப்பட்டு வந்தது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ (أحمد

ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பியவரைக் கண்டால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் முஸாஃபஹா செய்யுங்கள். உங்களுக்காக அவரை துஆச் செய்யச் சொல்லுங்கள். ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

முஸ்லிம்கள் தம் எதிரிகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது

عن خَبَّابً  رض:أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً وَهْوَ فِى ظِلِّ الْكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ4 الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُوضَعُ الْمِنْشَارُ5 عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ (بخاري)

நபி ஸல் அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது ஹப்பாப் ரழி அவர்கள் வந்து நாம் இணை வைப்பாளர்கள் மூலமாக கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். தாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முனபு வாழ்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதற்காக இரும்புக் கத்தரிக்கோலால் அவரது எலும்புகளுக்கும் சதைகளுக்குமிடையே குத்தி வேதனை செய்யப்பட்டார். அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். மற்றொருவரின் நடு மண்டை ரம்பத்தால் பிளக்கப்பட்டு அவரது உடல் இரண்டு துண்டாக ஆனது. அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். நீங்களும் பொறுமை கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ் இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவான் என்றார்கள். 

முஸ்லிம்கள்  மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது. அதேபோல் உலகம் முழுக்க முஸ்லிம்களுக்கு தொல்லைகள் துன்பங்கள் அதிகமாகும்போது தான் இமாம் மஹ்தீ (அலை) வருவார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ [ مصنف عبد الرزاق ]

முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்படும் அநியாயத்தின் காரணமாக முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் தான் அல்லாஹ் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்புவான். எந்த அளவுக்கு இந்த பூமி அநியாயத்தால் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தை அவர் நிலை நாட்டுவார். விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்களும் அவரைப் பொருந்திக் கொள்வார்கள். வானம் தன் பங்கை இந்த பூமியின் பொழியாமல் இருக்காது. பூமி தன் விளைச்சலை விளைவிக்காமல் இருக்காது. விவசாயம் பரக்கத்தாக இருக்கும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் இறந்த விட்ட தமது உறவினர்களை எண்ணி அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இவருடைய ஆட்சியின் நலவை அனுபவித்திருப்பார்களே என்று ஏங்குவார்கள். இவ்வாறு இமாம் மஹ்தீ அலை அவர்கள் ஏழு வருடங்களோ அல்லது எட்டு வருடங்களோ அல்லது ஒன்பது வருடங்களோ ஆட்சி செய்வார்கள்.

தன் சொத்து, சுகங்களை துறந்து அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ (42)النحل

أَنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ كَانَ إِذَا أَعْطَى الرَّجُل مِنْ الْمُهَاجِرِينَ عَطَاءَهُ يَقُول خُذْ بَارَكَ اللَّه لَك فِيهِ هَذَا مَا وَعَدَك اللَّه فِي الدُّنْيَا وَمَا اِدَّخَرَ لَك فِي الْآخِرَة أَفْضَل ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَة " لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَة وَلَأَجْر الْآخِرَة أَكْبَر لَوْ كَانُوا يَعْلَمُونَ(ابن كثير)

உமர் ரழி அவர்கள் கனீமத் பொருட்களைப் பங்கிடும்போது முஹாஜிர்களுக்கு அதிகம் தருவார்கள். மேலும் இது அல்லாஹ் உங்களுக்குத் தந்த கண்ணியம் என்று கூறுவார்கள்

{وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي رضي الله عنهبات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي)

நபி ஸல் அவர்களின் படுக்கையில் அலீ ரழி அவர்கள் தூங்கிய போது அவர்களுக்குப் பாதுகாப்பாக தலை மாட்டில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கால் மாட்டில் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பாதுகாப்புக்கு இருந்தார்கள். உங்களுக்கு நிகராக யார் இருக்க முடியும். உங்களைப் பற்றி மலக்குகள் அனைவரும் பாராட்டிப் பேசுகிறார்கள் என்றும் அவ்விருவர் கூறினார்கள். அன்று தான் அலீ ரழி அவர்கள் மிக நிம்மதியாக உறங்கினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது,  

  

மிகுந்த சிரமம், சித்ரவதைகளை தாங்கிய படி ஹிஜ்ரத் செய்தவர்களில் சிலரை அல்லாஹ் பாராட்டுவது பற்றி...

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً...وقال أكثرُ المفسِّرين: نزلت في صُهَيب بن سِنان مَوْلى عبد اللَّهِ بنِ جُدْعانَ الرُّومِيِّ وفي عمَّارِ بن ياسِرٍ وفي سُمَيَّة أُمَّه وفي ياسِرٍ أَبيه وفي بلالٍ مَوْلَى أبي بَكرٍ, وفي خَبَّاب بن الأَرَتّ وفي عابس مَوْلَى حُوَيْطِب أخذَهُم المشرِكُون فَعَذَّبوهم ؛ فقال لهم صُهَيبٌ : إِنِّي شيخٌ كَبيرٌ لا يَضُرُّكُمْ أَمِنْكُمْ كُنْتُ أم مِن عَدوِّكم فهل لكم أَنْ تَأْخُذُوا مَالِي وتذَرُوني؟ ففعلوا  وكان شرط عليهم راحلةً ونَفَقَةً , فأقام بمكةَ ما شاء اللَّهُ ثم خرج إلى المدينَةِ فتَلَقَّاهُ أَبُو بكرٍ وعُمرُ في رجال فقال له أَبُو بَكْرٍ : رَبَحَ بَيْعُكَ يا أَبَا يَحيى فقال: وبيعُكَ فلا تخسر ما ذاك ؟ فقال: أنزل اللَّهُ فيك كذا وقرأ عليه الآية.وأما خباب بن الأرت وأبو ذر فقد فرا وأتيا المدينة وأما سُمَيَّة فرُبِطَتْ بين بعيرين ثم قُتِلَتْ وقُتل ياسر،وأما الباقون فأَعْطَوْا بسبب العذاب بعض ما أراد المشركون فتركوا (تفسيرالرازي)

எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற ஆழமான நம்பிக்கை

إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا[التوبة:40] عَنْ أَنَس أَنَّ أَبَا بَكْرحَدَّثَهُ قَالَ:قُلْت لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الْغَار لَوْ أَنَّ أَحَدهمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا تَحْت قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْر مَا ظَنّك بِاثْنَيْنِ اللَّه ثَالِثهمَا(بخاري)فأعمى الله أبصار المشركين حتى لم يحن لأحد منهم التفاتة إلى ذلك الغار

கொல்ல வந்த எதிரிகளின் கண்களை விட்டும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மறைத்தான்

இதே நம்பிக்கை தான் அந்த குகைவாசிகளையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றியது. குகைக்குள் நுழைந்தவுடன் எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் அந்தக் குகையையும் குகைவாசிகளையும் அல்லாஹ் மாயமாக்கி விட்டான். 

இறைத் தூதரை கொல்ல வந்த சுராகா என்பவர் இறைத்தூதரின் பாதுகாவலராக மாறிய சம்பவம். 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبِ رَحْلا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا، فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرْهُ لِي فَقَالَ لَهُ عَازِبٌ: لا حَتَّى تُخْبِرَنِي كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجْتُمَا وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمَا فَقَالَ: ارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ جَشْعَمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ لَهُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ:"لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا" فَلَمَّا أَنْ دَنَا كَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قِيدُ رُمْحٍ أَوْ ثُلُثَهُ فَقُلْتُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ وَبَكَيْتُ، فَقَالَ: مَا يُبْكِيكَ ؟ فَقُلْتُ:وَاللَّهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنَاهُ، فَسَاخَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا فَوَثَبَ عَنْهَا، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنَجِّينِيَ مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغَنَمِي بِمَكَانِ كَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا حَاجَةَ لَنَا فِي إِبِلِكَ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَاجِعًا إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ".(تفسير ابن كثير)

அதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தின் உத்தரவு வரலாம். அது இரவு நேரத்திலே கூட வரலாம். அத்தகைய உத்தரவு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு உடனே வருவேன் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அதேபோல ஒருநாள் அல்லாஹ்வின் உத்தரவு வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு சென்ற போது வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. ஏன் கதவை மூடவில்லையா என்று கேட்க, அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் என்றைக்கு என்னிடம் எந்த நேரமும் ஹிஜ்ரத் பற்றிய உத்தரவு வரலாம் என்று கூறினீர்களோ அன்று முதல் நான் கதவை மூடுவதே இல்லை என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு பதில் அளித்தார்கள். இந்த நிலையில் மதினாவுக்குச் சென்ற பின் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்துவதற்காக பள்ளிவாசலைச் சுற்றி இருந்த சில வீட்டு வாசல்களை மூட வேண்டிய சூழ்நிலை வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு எந்த வாசல் வழியாக வருவாரோ அந்த வாசலை மட்டும் மூட வேண்டாம் என்றார்கள். அதற்கு காரணம் சொல்லும் போது அவர் எனக்காக கதவை திறந்து வைத்திருந்தார் இப்போது அவருடைய கதவு திறந்தே இருக்கட்டும் என்று பதில் கூறினார்கள்.

ஹிஜ்ரத்தின் போது நபியவர்களின் அழகிய திட்டமிடல்…

நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள். தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள். மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், “அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தேர்வு செய்கிறார்கள். இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அபூபக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.

அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தேர்வு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள். குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள். நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தேர்வு செய்கிறார்கள். இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.

உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். 

எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.

ஸவ்ர் குகையும், எதிரிகளும்…

மிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு  சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் அவர்களே! எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

மதீனமா நகரும், மக்களும்…

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.

ஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே ! இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்டார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.

ஹிஜ்ரத்திற்கு முன்பே மதீனாவில் இஸ்லாத்தைப் பரப்பிய முஸ்அப் இப்னு உமைர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தூதுத் துவப் பணியை ஆரம்பித்த காலத்திலேயே முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களை அழைப்புப்பணியை மேற் கொள்ள மதீனாவுக்கு அனுப்பி வைத் திருந்தார்கள். மதீனாவிற்கு முதலில் சென்ற முஹாஜிர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான். மக்காவில் தூதுத்துவப் பணிகள் எவ்வாறு நடைபெற்றனவோ அதே நேரத்தில் முஸ் அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் மூலம் மதீனாவிலும் அழைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. முஸ்அப்(ரலி) அவர்களை மதீனாவிற்கு அனுப்பும் போதே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் சிலரை இஸ்லாத்திற்கு அழைத்து வர வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த அடிப்படையில் முதல் முதலாக மதீனாவில் இருந்து வந்த போது 12 நபர்களை முஸ்அப்(ரலி) அழைத்து அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தை ஏற்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து பலரும் முஸ்அப் (ரலி) மூலம் இஸ்லாத்தைத் தழுவினர்.

அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) மக்காவிற்கு வந்த போது 70 நபர்களைத் தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து இஸ்லாமியச் செய்திகளைப் பெற்று உடனடியாக இஸ்லாத் தைத் தழுவினர். அடுத்த ஆண்டு வரும்போது இன்னும் சிலருடன் வாருங்கள் என நபி(ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) யாரும் இல்லாமல் தனி நபராக மக்காவிற்கு வந்தார். அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் மட்டும் தனியாக வந்துள்ளீர்கள்? உங்களுடன் யாரும் வரவில்லையா?' எனக் கேட்க, முஸ்அப்(ரலி) 'மதீனாவில் எல்லா வீடுகளிலும் இஸ்லாத்தைச் சொல்லி விட்டேன் அங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதனால் எல்லாரையும் இங்கு அழைத்து வர முடியவில்லை. ஆகவே நீங்கள் மதீனா வந்து விடுங்கள்' எனக் கூறினார்.

இந்த நிகழ்வையும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடுமையான நெருக்கடி காலத்தையும் கொஞ்சம் இணைத்துப் பாருங்கள்.

இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற உடனே நபிகளை வரவேற்பதற்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் மதீனத்து மக்கள் முழு மகிழ்ச்சியுடனும் மனதுடனும் காத்துக் கொண்டிருந்தனர். அதற்கான முதல் காரணம் முஸ்அப் (ரலி) அவர்கள் தான்.

இன்னும் சொல்லப்போனால் மதீனா சென்றவுடனே நபி(ஸல்) அவர்கள் ஊர் மக்களை, குலங்களை ஒன்றிணைந்து பிற சமூகத் தலைவர்களிடம் ஒப்பந்தங்களைப் போட்டு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புடன் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட்டு மதீனாவில் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்க முடிந்தது என்றால் அதற்கு மூலமாகச் செயல்பட்டவர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான்.

நாமும் ஹிஜ்ரத் செய்வோம்

 ﻭﻋﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﻬﺠﺮﺓ ﺣﺘﻰ ﻳﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﻭﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺪاﺭﻣﻲ

ஹிஜ்ரத்தின் அசல் அர்த்தமே வெறுப்பதும் விலகுவதுமாகும் அந்த வகையி்ல் நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தையும் நினைவில் கொல்வோம்.

பாவங்களை விட்டும் விலகுவதும் ஹிஜ்ரத்தாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو - رضى الله عنهما - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ  -بخاري

சுயபரிசோதனை

ஒவ்வொரு ஆண்டின்முடிவிலும் துவக்கத்திலும் கடந்த ஆண்டில் நாம் என்ன பணியாற்றியுள்ளோம்  இனி வரும் ஆண்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சுய பரிசோதனையையும்  திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரத்தின் வகைகள் பற்றி தஃப்ஸீருல் குர்துபியில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (سورة النساء100)

قال ابن العربي:قسم العلماء رضي الله عنهم الذهاب في الأرض قسمين: هربا وطلبا فالأول ينقسم إلى ستة أقسام: الأول: الهجرة وهي الخروج مندار الحرب إلى دار الإسلام وكانت فرضا في أيام النبي صلى الله عليه وسلموهذه الهجرة باقية مفروضة إلى يوم القيامة والتي انقطعت بالفتح هي القصد إلى النبي صلى الله عليه وسلم حيث كان فإن بقي في دار الحرب عصى ويختلف في حاله. الثاني:الخروج من أرض البدعة قال ابن القاسم:سمعت مالكا يقول لا يحل لأحد أن يقيم بأرض يُسب فيها السلف.قال ابن العربي:وهذا صحيح فإن المنكر إذا لم تقدر أن تغيره فزِلَّ عنه قال الله تعالىوَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْإلى قوله{الظَّالِمِينَ}(68الانعام) الثالث:الخروج من أرض غلب عليها الحرام: فإن طلب الحلال فرض على كل مسلم.الرابع: الفرار من الأذية في البدن وذلك فضل من الله أرخص فيه فإذا خشي على نفسه فقد أذن الله في الخروج عنه والفرار بنفسه ليخلصها من ذلك المحذور وأول من فعله إبراهيم عليه السلام فإنه لما خاف من قومه قال{إِنِّي مُهَاجِرٌ إِلَى رَبِّي} وقال{إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ}وقال مخبرا عن موسى{فَخَرَجَ مِنْهَا خَائِفاً يَتَرَقَّبُ} الخامس:خوف المرض في البلاد الوخمة والخروج منها إلى الأرض النزهةوقد أذن صلى الله عليه وسلم للرعاة حين استوخموا1 المدينة أن يخرجوا إلى المسرح فيكونوا فيه حتى يصحوا وقد استثنى من ذلك الخروج من الطاعون فمنع الله سبحانه منه بالحديث الصحيح عن نبيه صلى الله عليهوسلمالسادس: الفرار خوف الأذية في المال؛ فإن حرمة مال المسلم كحرمة دمه، والأهل مثله وأوكد.

وأما قسم الطلب فينقسم قسمين:طلب دين وطلب دنيا.فأما طلب الدين فيتعدد بتعدد أنواعه إلى تسعة أقسام:الأول:سفر العبرةقال الله تعالى {أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} وهو كثير. ويقال: إن ذا القرنين إنما طاف الأرض ليرى عجائبها. وقيل: لينفذ الحق فيها. الثاني: سفر الحج والأول وإن كانندبا فهذا فرض. الثالث: سفر الجهاد وله أحكامه الرابع: سفر المعاش فقد يتعذر على الرجل معاشه مع الإقامة فيخرج في طلبه لا يزيد عليه. من صيد أو احتطاب2 أو احتشاش؛ فهو فرض عليه. الخامس: سفر التجارةوالكسب الزائد على القوت وذلك جائز بفضل اللهسبحانه وتعالىقال الله تعالى{لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ}يعني التجارة وهي نعمة من الله بها في سفر الحج، فكيف إذا انفردتالسادس: في طلب العلم وهو مشهور. السابع: قَصْدُ البقاع قال صلى الله عليه وسلم:لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد"الثامن: الثغور3 للرباط بها وتكثير سوادها للذب عنها. التاسع: زيارة الإخوان في الله تعالى: قال رسول الله صلى الله عليه وسلم: "زار رجل أخا له في قرية فأرصد الله له ملكا على مدرجته فقال أين تريد فقال أريد أخا لي في هذه القرية قال: هل لك من نعمة تربها عليه قال لا غير أني أحببته في الله عز وجل قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه (مسلم)(تفسير القرطبي

பொருள் - ஒரு ஊரை விட்டும் மற்றொரு ஊருக்கு இடம் பெயருதல் இரண்டு வகைப்படும் – ஒன்று ஒரு ஊரை வெறுத்து அவ்வூரை விட்டும் வெளியேறுதல் – இன்னொன்று அவசியமான, பயனுள்ள எதையேனும் தேடி ஊரை விட்டும் புறப்படுதல்இவ்விரண்டில் முந்தியது ஹிஜ்ரத் எனப்படும் இதில் ஆறு வகையான ஹிஜ்ரத் உண்டு. 1,எதிரிகளின் ஊரை விட்டும் வெளியேறி முஸ்லிம்களின் ஊருக்குப் புறப்படுதல். இது கியாமத் வரை நீடிக்கும். இனி ஹிஜ்ரத் கிடையாது என நபி ஸல் கூறியது நபி ஸல் அவர்கள் இருக்கும் ஊருக்கு அனைவரும் ஹிஜ்ரத் செய்தாக வேண்டும் என்ற கடமை மட்டுமே நபி ஸல் அவர்களுடன் முடிந்தது. ஆனால் பொதுவான ஹிஜ்ரத் முடியவில்லை. தஃப்ஸீர் குர்துபீ 

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمُ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ قِبَلِ خُرَاسَانَ فَأْتُوهَا ؛ فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللهِ الْمَهْدِيَّ (أحمد

2. தடுக்க முடியாத அளவுக்கு அனாச்சாரங்கள், பித்அத் வாதிகள் நிறைந்த ஊரை விட்டும் ஹிஜ்ரத் செய்வது. இமாம் இப்னுல் காசிம் அவர்கள் கூறும்போது முன்னோர்களை பழித்துப் பேசுபவர்கள் நிறைந்த ஊரை விட்டும் சென்று விட வேண்டும் அங்கு தங்கியிருக்கக்கூடாது என்றார்கள் 3.ஒரு ஊரில் ஹராம் பெருகி விட்ட நிலையில், அந்த ஊரில் இருந்தால் ஹராமை விட்டும் தப்பிக்க முடியாது என்ற நிலையில் அந்த ஊரை விட்டும் ஹிஜ்ரத் செய்வது ஏனெனில் ஹலாலைத் தேடுவது ஃபர்ளாகும். 4,உடல் ரீதியான கொடுமைகள் ஒருவருக்கு இழைக்கப்படும் போது அந்த ஊரை விட்டும் வெளியேறுவது. ஏனெனில் பல நபிமார்கள் இத்தகைய சூழ்நிலையில் வேறு வழியின்றி வெளியேறினார்கள் உ.ம். இப்றாஹீம் அலை, மூஸா அலை, நமது நபி ஸல் அவர்கள்5.ஒரு ஊரில் ஒருவர் குடியேறிய பின்பு அந்த ஊரின் தட்ப வெப்ப நிலைகள் அவருக்கு ஒத்து வராமல் நோய்கள் ஏற்பட்டால் அதற்காக வெளியேறுவது. நபி ஸல் அவர்கள் அவ்வாறு ஒரு கூட்டத்தினருக்கு அனுமதி தந்தார்கள் ஆனால் இது தொற்று நோய்க்கு பொருந்தாது. ஏனெனில் அதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது 6,ஒரு ஊரில் இருப்பதால் தன் குடும்பத்துக்கோ, அல்லது தம் சொத்துக்களுக்கோ எதிரிகளால் பெரும் பாதிப்பு வரும்  என்றிருந்தால் அதற்காக ஹிஜ்ரத் செய்வது

ஊரை விட்டும் வெளியேறுவதில் இரண்டாம் வகை -அவசியமானதைத் தேடி புறப்படுதல்

இதில் இரண்டு வகை உள்ளது ஒன்று மார்க்க விஷயமாக – மற்றொன்று ஆகுமான உலக விஷயமாக.

மார்க்க விஷயமாக புறப்படுதல் என்பதில் ஒன்பது வகை உள்ளது 

1,படிப்பினைக்கான பயணம். ஆதாரம் குர்ஆன்வசனம். துர்கர்னைன் மன்னர் உலகம் முழுவதையும் சுற்றியது இதற்குத் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

2,ஹஜ்ஜுக்காக புறப்படுவது முதல் தடவை கடமையாகும். அடுத்த தடவை நஃபில். 3,போருக்காக புறப்படுதல்

4,உள்ளூரில் தேவையான அளவுக்குக் கூட சம்பாத்தியம் கிடைக்காத நிலையில் பிழைப்புக்காக வெளியூருக்கு புறப்படுதல்.இது ஃபர்ளாகும்.. 

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه  قَالَ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم) بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا

ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள்1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்- முஸ்லிம்- 5498                                                                        


 5,தேவையான அளவுக்கு உள்ளூரில் கிடைத்தாலும் தன் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக புறப்படுவது இது அனுமதிக்கப்பட்டதாகும். 6.கல்வியைத் தேடி புறப்படுவது 7.புனிதமான மூன்று மஸ்ஜித்களை நோக்கி புறப்படுதல் 8.அணை உடையும் என்ற அபாயம், கடும் புயல் எச்சரிக்கை ஆகியவற்றால் உயிர், உடைமை பாதிக்கும் என்றிருப்பின் அதற்காக வெளியேறுவது 9.மார்க்க ரீதியான நண்பர்களை சந்திக்கப் புறப்படுவது                                 

மற்றொன்று ஆகுமான உலக விஷயமாக...

மேற்காணும் பயணங்கள் அல்லாத மற்ற ஆகுமான பயணங்கள் இந்த வகையில் சேரும்





வியாழன், 4 ஜூன், 2026

மாணவர்களுக்கு அறிவுரைகள்

 05-06-2026

DULHAJ- 18 بسم الله الرحمن الرحيم  

விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பம்- 

மாணவர்களுக்கு சில அறிவுரைகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் முடிந்து ஸ்கூல் துவங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு  சில அறிவுரைகள் கூறுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

 1. பள்ளிப் படிப்பும் அவசியம். எனினும் அதை விட அவசியம் மதரஸா படிப்பு. அதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். 


2. அதுபோல் என்ன தான் ஸ்கூலில் அதிகமான home work  தந்திருந்தாலும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதை மறந்து விடக்கூடாது.


 3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களுக்கு பெரும்பாலும் ஜும்ஆ கிடைப்பதில்லை. சம்பந்தப் பட்ட பெற்றோர் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி குறைந்த பட்சம் ஸ்கூலில் ஜும்ஆ தொழ ஏற்பாடு செய்ய வேண்டும். 4. ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மக்தப் மதரஸாவுடன் இணைந்து சிறந்த ஆசிரியர் மூலமாக ஸ்கூல் டியூஷன் ஏற்பாடு செய்தால் டியூஷனை காரணம் காட்டி பிள்ளைகள் தொழுகையை விடுவதையும் மதரஸாவுக்கு வராமல் இருப்பதையும் சீர் செய்ய முடியும். 


5.வசதியுள்ளவர்கள் நிறைந்த மஹல்லாக்களில் மஸ்ஜிதுடன் இணைந்தே ஸ்கூல் ஆரம்பித்தால் முஸ்லிம் பிள்ளைகளை தீனுடையஅடிப்படையில் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும்.                               

இதில் ஒவ்வொரு தலைப்பாக நாம் பார்ப்போம் 




1. மதரஸா  கல்வியின் அவசியம்.

ஒரு முஸ்லிம் இளம் தம்பதியர் தம் குழந்தையை பற்றி பெறுமை பொங்க பேசினார்கள். “டி வி யில் பாட்டுப் போட்டால் இவன் அற்புதமாக ஆடுவான் என்றார்கள். அவர்களாக 

டிவியை ஆன் செய்ய இரண்டரை வயதுப் பையன் இசைக்கு ஏதுவாக நடனமாடினான். எல்லோரும் மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கைகொட்டி மகிழ்ந்தனர். நம்முடைய வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் இதைத்தான் சொல்லிக் கொடுக்க முடிகிறது. பள்ளிக் கூடங்களிலும் நண்பர்களுடன் சேர்ந்து இதைத் தான் கற்றுக் கொள்கின்றனர். மதரஸாக்கள் தான் குழந்தகளுக்கு அல்லாஹ்வை ரஸூலை கலிமாவை தீனை சொல்லிக் கொடுக்கின்றன. 

மார்க்கக் கல்வியை  ஒதுக்குவது  பல்வேறு சோதனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகி விடும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي) وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون العلم لطلب المال والجاه لا للدين(تحفة الاحوذي 

 கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன் சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக் கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப் பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள் ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது மது அதிகரித்து விடுமோ  15. எப்போது இந்த உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும் எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள் கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.                                                              

இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள வார்த்தைக்கு மற்றொரு பொருளும் உண்டு. அதாவது மார்க்கக் கல்வ அல்லாத மற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுமோ அப்போது இந்த அழிவுகள் உண்டாகும் என்றும் பொருள் உண்டு.                   

பூகம்பமும், சுனாமியும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்து ஆண்டுகளில் தான் தாக்கமும், உயிர் பலியும் அதிகரித்துள்ளது. -  தினமலர் - மேற்படி தவறுகள் நிகழ்ந்தால் பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை. விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள்.              



மார்க்க விஷயங்களின் மீது அலட்சியம்  குர்ஆன் நம்மிடமிருந்து உயர்த்தப் படுவதற்குக் காரணமாகி விடும்

عن شداد بن معقل قال قال عبد الله إن هذا القرآن الذي بين أظهركم يوشك أن ينزع منك قال قلت كيف ينزع منا وقد أثبته الله في قلوبنا وأثبتناه في مصاحفنا قال يسرى عليه في ليلة واحدة فينزع ما في القلوب ويذهب ما في المصاحف ويصبح الناس منه فقراء ثم قرأ ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك  (مصنف ابن ابي شبية)

நிச்சயமாக இந்தக் குர்ஆன் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. அது உங்களிடமிருந்து உயர்த்தப் படக் கூடும். என்று  இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூற, ஷத்தாத் ரஹ் அவர்கள் இது எவாறு சாத்தியம் அல்லாஹ் நம்முடைய உள்ளங்களிலும்  நம்முடைய பிரதிகளிலும் அதைப் பதிய வைத்திருக்கும்போது இது எப்படி சாத்தியம் என்று கேட்க, அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள். ஒரே இரவில் அல்லாஹ் தஆலா  உள்ளங்களில் இருந்தும் பிரதிகளில் இருந்தும் குர்ஆனை அல்லாஹ் நீக்கி விடுவான். ஒட்டு மொத்த மக்களும்  குர்ஆனை விட்டும் ஏழைகளாக ஆகி விடுவார்கள். என்று கூறிய பின்பு பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். நாம் நாடினால் நாம் இறக்கிய வசனங்களை நாமே முற்றிலும் நீக்கி விடுவோம். விளக்கம்- ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை அத்தனை பிரதிகளிலும் இருந்தும் நீக்கி விடுவான். மறுநாள் காலையில் வெறும் பேப்பர் மட்டும் தான் மிஞ்சம். அதேபோல் யாரெல்லாம் குர்ஆனை அல்லது சூராக்களை மனனம் செய்து வைத்திருந்ந்தார்களோ அவை அத்தனையும் மறந்து விடும்.

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا  (ابن ماجة)

 நபி (ஸல்) கூறியதாக  ஹுதைஃபா ரழி அறிவித்துள்ளார்கள். பழைய துணியில் எவ்வாறு கலர் மங்கி விடுமோ அவ்வாறு   இஸ்லாம் மங்கி விடும். அப்போது யாருக்கும் நோன்பு என்றால் என்ன?  தொழுகை என்றால் என்ன?  ஹஜ்ஜுக் கடமைகள் என்றால் என்ன? ஜகாத் என்றால் என்ன? என்பதே தெரியாது. அப்போது ஒரே ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை  உயர்த்தி விடுவான். அப்போதுள்ள முதியவர்கள் மற்றும்  மூதாட்டிகள் மட்டும் பின்வருமாறு ஞாபகப் படுத்துவார்கள். எங்களுடைய பெற்றோர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அதைச் சொல்கிறோம் (மற்றபடி அதைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது).                                                         

குர்ஆன் மதரஸாக்களின் மீதான அலட்சியம் காரணமாக கடைசி காலத்தில் ஆலிம்கள் அறவே  இல்லாத சூழ்நிலை ஏற்படும். தொழவைப்பவர் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும்

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود

தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை  ஏற்படுவது கியாமத்தின் அடையாளமாகும்

விளக்கம்- மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது.  ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும். நூல் மிர்ஆத்  


குர்ஆன் மதரஸாக்களின் மீது அலட்சியம்  நம்மைக் கொடுமைப்படுத்தும்  ஆட்சி  அமையக் காரணமாகி விடும்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்.

நமது குழந்தைகளுக்கு அல்லாஹ் ரஸூலை சொல்லிக் கொடுக்கிற மதரஸாக்களை சமுதாயம் மதிக்க வேண்டும்

   குர்ஆன் மதரஸா உஸ்தாதுகளுக்கு தகுந்த கண்ணியத்தை தரவேண்டும். 

   பிள்ளைகளை தினந்தோறும் தவறாமல் அனுப்ப வேண்டும்

   பிள்ளைகளை சுத்தமாகவும் சுத்தமான உடையுடனும் அனுப்ப வேண்டும்

    இன்று என்ன ஓதினாய் என்று விசாரிக்க வேண்டும்,

    வீட்டில் கொஞ்ச நேரம் மதரஸா  பாடம் படிக்க வற்புறுத்த வேண்டும். 

    திருக்குர்ஆன், ஒழுக்க பண்புகள்,துஆக்கள், மார்க்க சட்டங்கள் என மதரஸாக்களில் கற்றுத்தரப்படும் அனைத்தும் – ஒரு எக்ஸாம் வரை மட்டுமல்ல- வாழ்வு முழுமைக்கு தேவையானவை என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும், தொடர்ந்து பழக்கப் படுத்துவதும் பெற்றோர்களின் கடமையாகும் 

நம் பிள்ளைகளில் சிலரையேனும் அரபு மதரஸாக்களுக்கு அனுப்பி

ஆலிம், ஹாஃபிழ்களாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

( إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة فيقول العلماء: بفضل علمنا تعبدوا وجاهدوا فيقول الله عز وجل: أنتم عندى كبعض ملائكتى اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة )(احياء)   

   மறுமை நாளில் அல்லாஹ் வணக்கசாலிகளிடமும் போர் செய்த போராளிகளிடமும் நீங்கள் சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்போது உலமாக்கள் நாங்கள் கற்றுக் கொடுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் வணக்கம் புரிந்தார்கள். போர் செய்தார்கள்.ஆனால் அவர்களை அனுப்பி விட்டு எங்களை நிறுத்தி விட்டாயே என ஏக்கத்துடன் கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் கூறுவானாம். நீங்கள் என்னிடம் சில பிரத்தியேகமான மலக்குமார்களைப் போன்றவர்கள். எனவே நீங்கள் தனியாக செல்லக் கூடாது. நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறுவான். அவர்கள் சிபாரிசு செய்வார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான். பிறகு அவர்கள் சுவனம் செல்வார்கள்.





2. தொழுகையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு  உணர வைக்க வேண்டும்

தொழுகைக்கு ஒரு போதும் விடுமுறை இல்லை. 

தஜ்ஜால் இருக்கும் நேரத்தில் ஆறு மாதங்கள் பகலாக இருக்கும் நிலையில் அந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக இரண்டு தொழுகை தொழுதால் மட்டும் போதுமா என்று கேட்கும்போது நபி ஸல் அவர்கள்  இல்லை.  நேரத்தைக் கணக்கிட்டு தினமும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். தொழுகைக்கு விதி விலக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.

عن النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ  لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم

விளக்கம்- தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள் பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம் நாள்  ஒரு மாதம் போன்றும்,  மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம் நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள் கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு மாதம் பகலாகவே இருக்கும்போது  இரண்டு தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது.  மாறாக சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர்  தொழுது கொண்டிருப்போம்.  நன்கு இருட்டு இருக்கும். லுஹர்  தொழுது கொண்டிருப்போம்.  

போர்க்களத்தில் எதிரிகளின் நிறைந்த, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொழுகை விதி விலக்கு இல்லை

وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً.. (102) النساء   -   أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْ مَعَهُ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ (بخاري)

இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்புகள் வழியாக வந்துள்ளது. நபி ஸல் அவர்களுடன் தாத்துர் ரிகாஉ போரில் பங்கெடுத்த சஹாபி கூறினார்கள். அப்போரில் நபி ஸல் அவர்கள் போர்க்களத்தொழுகை தொழுதார்கள். (ஆயுதங்களை கீழே வைத்து விடாமல் அவற்றை சுமந்தபடியே தொழ வேண்டும்.)நபி ஸல் அவர்களுடன் இருப்பவர்கள் முதல் ஒரு ரக்அத்தை இமாமுடன் தொழும் வரை மீதிப் பேர் எதிரிகளை நோக்கி நிற்பர். நபி ஸல் அவர்கள் ஒரு ரக்அத்தை முதல் அணிக்குத் தொழ வைத்து விட்டு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து சற்று நேரம் நிற்பார்கள். அதற்குள் இந்த முதல் அணியினர் தங்களுக்கு மீதமுள்ள ஒரு ரக்அத்தை  தனியாக சீக்கிரம் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு எதிரிகளை நோக்கி நின்று கொள்வார்கள். உடனே இரண்டாம் அணியினர் வந்து நபி ஸல் அவர்களுடன் இரண்டாம் ரக்அத்தில் இணைவார்கள். அவர்களுடன் நபி ஸல் அவர்கள் தன்னுடைய இரண்டாவது ரக்அத்தை தொழ வைத்து ஸலாம் கொடுத்தவுடன் அந்த அணியினர் தங்களுக்கு விடுபட்ட ஒரு ரக்அத்தை தனியாக எழுந்து தொழுது ஸலாம் கொடுப்பார்கள்.  

படிப்பினை- போர்க் காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.  ஜமாஅத்தின் முக்கியத்துவத்தையும்  உணர்த்துகின்றன. தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியதை வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விட்டு விடப்படும் அமல் தொழுகை தான். லாக்டவுனில் மஸ்ஜித்கள் மூடப்பட்டபோது பலர் தொழவே இல்லை

உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இஸ்லாத்தில் தொழுகை முக்கியம்.

عَنِ ابْنِ عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ  وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ  إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ(رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال) 

மறுமை நாளில் முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவர் தொழுகையில் பேணுதலாக இருக்கவும்

عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد(كنز العمال) 

தொழுகையை விட சிறந்த வேறு வணக்கம் இருந்திருக்கும் என்றால் அல்லாஹ் மலக்குகளுக்கு அவற்றைச் செய்யும்படி உத்தரவிட்டிருப்பான்.ஆனால் மலக்குகள் ருகூவு சுஜூது போன்ற தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களை மட்டுமே அல்லாஹ்வுக்கு செலுத்தி வருகின்றனர்.                                          

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ فِيَّ والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் நான் பூமியில் உள்ளவர்களை அவர்களின் பாவத்தின் காரணமாக தண்டிக்க நாடும்போது எனது வீட்டை (மஸ்ஜிதை எப்பொழுதும்) வணக்கத்தால் நிலை நிறுத்துபவர்களையும், அல்லாஹ்வுக்காக ஒருவரொருவர் நேசிப்பவர்களையும் சஹரில் எழுந்து பாவமன்னிப்புத் தேடுபவர்களையும் பார்த்து என் வேதனையை மக்களை விட்டும் திருப்பி விடுகிறேன். 

நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் காலத்தில் முஸ்லிம்கள் தொழுகையைவிட தொழிலை பெரிதாக  கருதவில்லை

قَالَ عَمْرو بْن دِينَار الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة " رِجَال لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه"(النور)ثُمَّ قَالَ هُمْ هَؤُلَاءِوَقَالَ مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء وَمِيزَانه فِي يَده خَفَضَهُ وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (ت: ابن كثير)

அம்ர் ரஹ் கூறினார்கள். நான் ஸாலிம் ரஹ் அவர்களுடன் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது கடைவீதியைக் கடந்து செல்வோம். மஸ்ஜிதில் தொழுகைக்காக மக்களெல்லாம் நின்றிருப்பார்கள். ஆனால் கடை வீதிகளில் அப்படி அப்படியே பொருட்களை துணியால் மூடிய நிலையில் மட்டும் வைத்து விட்டு அனைவரும் தொழுகைக்குச் சென்றிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் ஸாலிம் ரஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.          

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவரது ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري)

தொழுவதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே அல்லாஹ் ஆக்கி விடுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள்- அடியானே என்னை வணங்குவதற்கு நீ நேரம் ஒதுக்கு. உன் மனதில் எல்லாவற்றிலும் மனநிறைவை உண்டாக்கி, உன் வறுமையை நீக்குவேன். அவ்வாறில்லாமல் எனக்கு நேரமில்லை என்று நீ தட்டிக் கழித்தால் உனக்கு நேரமே பற்றாத அளவுக்கு உன் கை நிறைய வேலைகளை நான் திணித்து விடுவேன். உனக்கு மன நிறைவையும் நான் ஏற்படுத்த மாட்டேன்.   

உடுத்த உடை இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது

ومن لم يجد ثوبا صلى عريانا قاعدا يومئ بالركوع والسجود فإن صلى قائما أجزاه والأول أفضل (مختصر القدوري

உளூச் செய்த தண்ணீர் இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது

وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا (6) المائدة




3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும்

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ  أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ (مسلم

ஜும்ஆவை விடுவதை தவிர்த்துக் கொள்ளட்டும் அவ்வாறு தவிர்த்துக் கொள்ளா விட்டால் அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான்.  அவர்கள் (திருந்தாத உள்ளம் கொண்டவர்களாக) பொடு போக்கானவர்களாக மாறி விடுவார்கள்.     

عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ وَكَانَ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ (ابن ماجة

ஜும்ஆவை தகுந்த காரணமின்றி  போடுபோக்காக எவர்  விட்டு விட்டாரோ  அவரது உள்ளம் சீல் வைக்கப்படும்.


குறிப்பு- முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆவுக்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் இருக்கும். ஆனால் மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்ட  ஜமாஅத் ஸ்கூல் நிர்வாகத்திடம்  பேசி  கால் மணி நேரமேனும் அனுமதி தரச் சொல்ல வேண்டும். பெரிய மாணவர்கள் மூலமாகவே பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை  நிர்பந்தமான சூழ்நிலையில் இமாம் அல்லாத மூன்று பேர் இருந்தாலே ஜும்ஆ நிறைவேறும்

ومن شرائطها : الجماعة وأقلهم عند أبي حنيفة  ثلاثة سوى الإمام  (محتصر القدوري

ஹனஃபி மத்ஹபில் ஜும்ஆ நடத்துவதற்கு குறைந்த பட்ச எண்ணிக்கை இமாம் அல்லாத மூனறு நபர்கள் இருந்தால் போதும்

அஹ்லே பைத்

 19-06-2026 முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم   ஆஷூரா நோன்புகளின் சிறப்பும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பும் https://chennaijamaathulula...