புதன், 15 ஜூலை, 2026

சஃபரில் நடந்த சுப காரியங்கள்

 17-08-2026


Safar  2

بسم الله الرحمن الرحيم

,(சஃபரில் நடந்த சுப காரியங்கள்) 

அலீ (ரழி)  ,  பாத்திமா (ரழி) ஆகியோரின்

மண வாழ்க்கையும் படிப்பினைகளும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

சஃபர் மாதம் என்றாலே அதை பீடை மாதமாக  கருதும் வழமை இன்றும் மக்களிடம் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட  சஃபர் மாத த்தில் தான்  ஹழ்ரத் அலீ (ரழி)  ஃபாத்திமா (ரழி) ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதைப் பற்றிப் பார்ப்போம்

وأما فاطمة فتزوجها ابن عمها على بن أبى طالب في صفر سنة اثنتين، فولدت له الحسن والحسين، ويقال ومحسن، وولدت له أم كلثوم وزينب. الكتاب :  (السيرة النبوية لابن كثير)

ஹிஜ்ரீ இரண்டாம் வருடம் சஃபர் மாதத்தில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) , முஹ்ஸின் ரழி ஆகிய ஆண்மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர். அவ்விரு பெண்மக்களுக்கும் தன்னுடைய சகோதரிகளான ஜைனப் (ரழி) உம்மு குல்ஸூம் (ரழி) ஆகியோரின் பெயரையே வைத்தார்கள் 

படிப்பினை- தன் குடும்பத்தில் முக்கியமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைப்பது தவறல்ல.

وقد تزوج عمر بن الخطاب في أيام ولايته بأم كلثوم بنت على بن أبى طالب من فاطمة وأكرمها إكراما زائدا، أصدقها أربعين ألف درهم لاجل نسبها من رسول الله صلى الله عليه وسلم، فولدت له زيدا بن عمر بن الخطاب. (السيرة النبوية لابن كثير)

அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களை பிற்காலத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்தார்கள். நபி ஸல் அவர்களின் வாரிசு என்பதால் நல்ல முறையில் அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டார்கள். உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களுக்கு மஹராக 40 ஆயிரம் திர்ஹங்களை வழங்கினார்கள். அவ்விருவர் மூலம் ஜைத் என்ற குழந்தை பிறந்தது. 

وقد كان عبدالله بن جعفر تزوج بأختها زينب بنت على وماتت عنده أيضا،  . (السيرة النبوية لابن كثير)

மற்றொரு மகளான ஜைனப் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் திருமணம் செய்தார்கள் 

அன்னை ஃபாத்திமா ரழி அவர்களின் மண வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்

ஃபாத்திமாவை ரழி பலர் பெண் கேட்ட போதும்  அலீ ரழி அவர்களையே மருமகனாக தேர்வு செய்தார்கள்

عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ خُطِبَتْ فَاطِمَةُ بِنْتُ النَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَتْ لِى مَوْلاَةٌ لِى : هَلْ عَلِمْتَ أَنَّ فَاطِمَةَ تُخْطَبُ؟ قُلْتُ : لاَ أَوْ نَعَمْ قَالَتْ: فَاخْطُبْهَا إِلَيْهِ قَالَ قُلْتُ: وَهَلْ عِنْدِى شَىْءٌ أَخْطُبُهَا عَلَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا زَالَتْ تُرَجِّينِى حَتَّى دَخَلْتُ عَلَيْهِ وَكُنَّا نُجِلُّهُ وَنُعَظِّمُهُ فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ أُلْجِمْتُ حَتَّى مَا اسْتَطَعْتُ الْكَلاَمَ فَقَالَ هَلْ لَكَ مِنْ حَاجَةٍ. فَسَكَتُّ فَقَالَهَا ثَلاَثَ مَرَّاتٍ قَالَ :لَعَلَّكَ جِئْتَ تُخْطُبُ فَاطِمَةَ  قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ تَسْتَحِلُّهَا بِهِ قَالَ قُلْتُ: لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ  فَمَا فَعَلَتِ الدِّرْعُ الَّتِى كُنْتُ سَلَّحْتُكَهَا قَالَ عَلِىٌّ:وَاللَّهِ إِنَّهَا لَدِرْعٌ حُطَمِيَّةٌ مَا ثَمَنُهَا إِلاَّ أَرْبَعُمِائَةِ دِرْهَمٍ قَالَ  اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا وَابْعَثْ بِهَا إِلَيْهَا فَاسْتَحِلَّهَا بِهِ (سنن الكبري للبيهقي)

ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் கூறினார்கள். அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலர் பெண் கேட்டார்கள். எனக்கும் அந்தச் செய்தி வந்த போது என்னுடைய பணியாளர் என்னிடம் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலரும் பெண் கேட்கிறார்கள். நீங்களும் கேளுங்கள் என்றார். ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்யும் அளவுக்கு என்னிடம் என்ன தகுதி உள்ளது என்று தயங்கினேன். இருந்தாலும் மனதில் ஆசை இருந்தது. நாங்கள் நபி ஸல் அவர்களை மிகவும் கண்ணியப் படுத்துவோம். எனவே அவர்கள் முன்னிலையில் என் மனதில் உள்ளதை சொல்ல முனைந்த போது எனக்கு வார்த்தை வரவில்லை. நபி ஸல் அவர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள். நான் மவுனமாக இருந்தேன். மூன்று முறை நபி ஸல் அவர்கள் கேட்டும் கூட என்னால் பதில் கூற முடியவில்லை. பிறகு நபி ஸல் அவர்களே என்னிடம் ஃபாத்திமாவை பெண் கேட்க வந்தீர்கள் அல்லவா என்றார்கள். ஆம் என்றேன். உம்மிடம் என்ன மஹர் உள்ளது என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை என்று நான் கூற, நான் உமக்கு அன்பளிப்பாக கொடுத்த உருக்குச் சட்டையை என்ன செய்தீர் என்று கேட்க, அது இருக்கிறது. ஆனால் அது வெறும் நானூறு திர்ஹம் மதிப்புக்குக் கூட வராதே என்று நான் கூறினேன். பரவாயில்லை. அதைக் கொண்டு வாரும் என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை நான் கொண்டு வந்தேன். அதை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கொடுத்தனுப்பச் சொன்ன நபி ஸல் அவர்கள் இந்த மஹருக்குப் பகரமாக நான் ஃபாத்திமாவை உமக்கு திருமணம் செய்து வைத்தேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.       


பெரிய தந்தை அல்லது சிறிய தந்தையின் மகனையோ அல்லது மகளையோ மணமுடிக்கக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். அதேபோல் பெரிய தாயார் அல்லது சிறிய தாயாரின் மகனை அல்லது மகளை  மணமுடிக்கக்கூடாது  என்றும் சிலர் கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ஏனெனில் ஃபாத்திமா ரழி அவர்கள் திருமணம் செய்தது தன் தந்தையின் தகப்பனாருடைய அதாவது பாட்டனாருடைய சகோதரர் மகனாகும். பாட்டனாரின் சகோதரர் மகனை திருமணம் செய்வது எவ்வாறு கூடுமோ அவ்வாறே தந்தையின் சகோதரர் மகனையும் திருமணம் செய்வது கூடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، أَنَّهُ قَالَ : يَا رسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ عَمِّكَ بِنْتِ حَمْزَةَ ، فَإِنَّهَا أَجْمَلُ فَتَاةٍ فِي قُرَيْشٍ ؟ قَالَ : أَمَا عَلِمْتَ أَنَّ حَمْزَةَ أَخِي مِنَ الرَّضَاعَةِ ، وَإِنَّ اللَّهَ حَرَّمَ مِنَ الرَّضَاعَةِ مَا حَرَّمَ مِنَ النَّسَبِ (مشكاة) وفي رواة لمسلم أَلَا تَخْطُبُ بِنْتَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ إِنَّ حَمْزَةَ أَخِي مِنْ الرَّضَاعَةِ (كِتَاب الرِّضَاعِ)  قال الله تعالي  حُرِّمَتْ عَلَيْكُمْ......   وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ (النساء:24

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் உங்களுடைய சிறிய தந்தை ஹம்ஜா ரழி அவர்களின் மகளை மணமுடித்திருக்கலாமே என்று வினவப்பட்ட போது நானும் ஹம்ஜா ரழி அவர்களும் ஒரே தாயிடம் பால் அருந்தியதால் அவரது மகள் என் சகோதரி என்று தான் கூறினார்களே தவிர தன் சிறிய தந்தையின் மகள் என்பதை திருமண உறவுக்கான தடையாக நபி ஸல் அவர்கள் கூறவில்லை.  

ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் வலீமா விருந்து கொடுப்பதற்காக உதவி செய்த நபித்தோழர்கள்

عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : لَمَّا خَطَبَ عَلِيٌّ فَاطِمَةَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّهُ لاَ بُدَّ لِلْعُرْسِ مِنْ وَلِيمَةٍ قَالَ : فَقَالَ سَعْدٌ : عَلَيَّ كَبْشٌ ، وَقَالَ فُلاَنٌ : عَلَيَّ كَذَا وَكَذَا مِنْ ذُرَةٍ.(مسند أحمد) ( حديث بريدة الأسلمي رضي الله عنه )

ஹழ்ரத் அலீ ரழி அவர்களுக்கும் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் என்றால் வலீமா விருந்து அவசியமாயிற்றே என்று கூறினார்கள். வலீமா விருந்துக்கு அலீ ரழி அவர்கள் ஏற்பாடு செய்த போது ஹழ்ரத் ஸஃது ரழி அவர்கள் நான் ஆட்டுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்கள். வேறு சில நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.                              

படிப்பினை- ஒரு சுன்னத்தை நிறைவேற்ற மற்றவர்கள் உறுதுணையாக இருப்பது நல்ல நடைமுறை.

திருமணம் முடிந்த பின் கணவன், மனைவி உடலுறவு கொள்ளும் முன்பு வலீமா கொடுக்கலாமா?

قَالَ صَاحِبُ عَوْنِ الْمَعْبُودِ :قَدْ اِخْتَلَفَ السَّلَف فِي وَقْتهَا هَلْ هُوَ عِنْد الْعَقْد أَوْ عَقِبه أَوْ عِنْد الدُّخُول أَوْ عَقِبه أَوْ يُوَسَّع مِنْ اِبْتِدَاء الْعَقْد إِلَى اِنْتِهَاء الدُّخُول عَلَى أَقْوَال . قَالَ النَّوَوِيّ : اِخْتَلَفُوا ، فَحَكَى الْقَاضِي عِيَاض أَنَّ الْأَصَحّ عِنْد الْمَالِكِيَّة اِسْتِحْبَابهَا بَعْد الدُّخُول ، وَعَنْ جَمَاعَة مِنْهُمْ عِنْد الْعَقْد ، وَعَنْ اِبْن جُنْدُب عِنْد الْعَقْد وَبَعْد الدُّخُول . قَالَ السُّبْكِيُّ : وَالْمَنْقُول مِنْ فِعْل النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا بَعْد الدُّخُول اِنْتَهَى . وَفِي حَدِيث أَنَس عِنْد الْبُخَارِيّ وَغَيْره التَّصْرِيح بِأَنَّهَا بَعْد الدُّخُول لِقَوْلِهِ " أَصْبَحَ عَرُوسًا بِزَيْنَب فَدَعَا الْقَوْم "  (عون المعبود

قال الإمام ابن حجر الهيتمي في تحفة المحتاج في شرح المنهاج: الوليمة سنة بعد عقد النكاح الصحيح للزوج... (فتاوى الشبكة الإسلامية) 

عن أَنَس  رَضِىَ اللَّهُ عَنْهُ  : بَنَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِامْرَأَةٍ فَأَرْسَلَنِى فَدَعَوْتُ رِجَالاً إِلَى الطَّعَامِ. (سنن الكبرى للبيهقي  باب وَقْتِ الْوَلِيمَةِ

இது விஷயத்தில் இமாம்களிடம் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில இமாம்கள் திருமண ஒப்பந்தம் நடந்து விட்டாலே வலீமா கொடுக்கலாம் என்று கூறுவர். இதற்கு ஆதாரமாக துஹ்ஃபதுல் முஹ்தாஜ் நூலில் இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் சுட்டிக் காட்டிய கருத்தை முன் வைத்துள்ளனர் அதாவது இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறும்போது முறையான நிகாஹ் நடந்து விட்டாலே அதற்குப் பின்  வலீமா கொடுப்பது கூடும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.                          

 ஆனால் பெரும்பாலான இமாம்கள் கூறுவது உடலுறவுக்குப் பின்பு கொடுப்பது தான் வலீமா என்பதாகும். காரணம் நபி ஸல் அவர்கள்  தனது மனைவிமார்களில் ஒருவரிடம் புதிதாக இணைந்த பிறகு அனஸ்  ரழி அவர்களை அழைத்து  விருந்துக்கு சில நபர்களை அழைத்து வரச் சொன்னார்கள்.                                                                  

ஹழ்ரத் அலீ (ரழி), ஃபாத்திமா (ரழி) வாழ்வில் நடந்த படிப்பினைக்குரிய சம்பவங்கள்.

خرج علي بن أبي طالب رضي الله عنه يبيع إزار فاطمة رضي الله عنها ليأكلوا بثمنه فباعه بستة دراهم فرآه سائل فأعطاه إياها فجاءه جبريل في صورة أعرابي ومعه ناقة فقال يا أبا الحسن اشتر هذه الناقة فقال ما معي ثمنها قال إلى أجل فاشتراها بمائة ثم عرض له ميكائيل في طريقه فقال أتبيع هذه الناقة قال نعم واشتريتها بمائة قال ولك من الربح ستون فباعها له فعرض له جبريل قال بعته الناقة قال نعم قال ادفع إليّ ديني فدفع له مائة ورجع بستين فقالت له فاطمة من أين لك هذا قال تاجرت مع الله بستة فأعطاني ستين ثم جاء إلى النبي صلى الله عليه وسلم واخبره بذلك فقال البائع جبريل والمشتري ميكائيل والناقة لفاطمة تركبها يوم القيامة.  (السيرة الحلبية- الحاوي للفتاوي للسيوطي

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சிரமமான சூழ்நிலை காரணமாக ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடமிருந்த ஒரு ஆடையைக் கொடுத்து அதை விற்று அதைக் கொண்டு உணவு வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார்கள். அந்த துணி ஆறு திர்ஹம் விலை போனது. திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை வந்து யாசகம் கேட்டவுடன் தன்னுடைய நிலையைப் பற்றி யோசிக்காமல் அதை தர்ம ம் செய்து விட்டார்கள். வெறும் கையுடன் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமவாசியின் தோற்றத்தில் ஒருவர் வந்தார். அவரிடம் ஒரு ஒட்டகம் இருந்த து. அதை வாங்கிக் கொள்ளும்படி ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை வற்புறுத்தினார். ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, பரவாயில்லை. பணம் வரும்போது தந்தால் போதும் என்றார் அவர்.                                                        

  நூறு திர்ஹத்திற்கு அந்த ஒட்டகத்தை தவனை வியாபார அடிப்படையில் வாங்கிக் கொண்டு இன்னும் சற்று தூரம் சென்ற போது மற்றொரு மனிதர் வந்தார். இந்த ஒட்டகம் எனக்கு வேண்டும் என்றார். நானே இதற்கு இன்னும் பணம் தரவில்லை என்று ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் கூற, பரவாயில்லை. நான் தருகிறேன் என்று கூறினார். ஒட்டகத்தின் விலை 100 திர்ஹங்கள் என்று கூறியவுடன் அந்த நபர் நான் உங்களுக்கு 160 திர்ஹங்கள் தருகிறேன். நீங்கள் யாரிடம் ஒட்டகத்தை வாங்கினீர்களோ அவருக்கு 100 திர்ஹங்கள் தந்து விட்டு நீங்கள் இலாபமாக 60 திர்ஹங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி திர்ஹங்களை ஒப்படைத்தார். அந்த திர்ஹங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒட்டகத்தை முதலில் விற்றவர் வந்தார். அவரிடம் 100 திர்ஹங்களை ஒப்படைத்து மீதம் 60 திர்ஹங்களுடன் அலீ (ரழி) அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.                      

  ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஆறு திர்ஹங்கள் மட்டுமே மதிப்புடைய துணிக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என்று ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்க, நான் அல்லாஹ்வுடன் ஆறு திர்ஹங்களுக்கு ஒரு வியாபாரம் செய்தேன். அல்லாஹ் எனக்கு அதை பத்து மடங்காக திருப்பித் தந்தான் என்றார்கள். இருவரும் சேர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.                                                                            

இந்த விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அலீ ரழி அவர்கள் கூறியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முதலில் உம்மிடம் ஒட்டகத்தை விற்பது போன்ற தோற்றத்தில் வந்தவர்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். பின்பு உம்மிடம் அதை வாங்குவது போல் வந்தவர்கள் ஹழ்ரத் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.                                                        

படிப்பினை- இன்பம் துன்பம் எல்லா நிலையிலும் இணைந்து வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கையாகும்.

கணவன், மனைவி இடையே எப்போதாவது மனஸ்தாபம் சகஜம். 

அதை ஊதிப் பெரிதாக்காமல் சமரசம் ஏற்படுத்தும் பெற்றோர்கள் தான் சிறந்தவர்கள்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسْ يَا أَبَا تُرَابٍ  (بخاري

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை மற்றவர்கள் அபுத்துராப் மண்ணின் தந்தையே என்று அழைத்தால் அது ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முதன் முதலில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை அவ்வாறு அழைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஒருநாள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர்கள் மஸ்ஜிதுக்குச் சென்று வெறும் தரையில் சுவற்றை நோக்கி படுத்துக் கொண்டார்கள். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து அலீ (ரழி) அவர்களை எழுப்ப, அலீ (ரழி) அவர்களின் முதுகு முழுவதும் மண்ணாக இருப்பதைக் கண்டு யா அபத்துராப்  மண்ணின் தந்தையே என்று அழைத்தார்கள். பின்பு அலீ (ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விட்டார்கள். யா அபத்துராப் எழுந்து அமருங்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். நூல் புகாரீ                                                        

சஃபர் மாதத்தில் நடைபெற்ற மற்ற மகிழ்ச்சியான விஷயங்கள்

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் முதன்முதலாக அவர்கள் போருக்கு புறப்பட்டது சஃபர் மாதத்தில் தான்

غزة الأبواء أو ودان :في صفر سنة 2 هـ، الموافق أغسطس سنة 623م، خرج رسول الله صلى الله عليه وسلم فيها بنفسه في سبعين رجلاً من المهاجرين خاصة يعترض عيراً لقريش، حتى بلغ ودان، فلم يلق كيداً، واستخلف فيها على المدينة سعد بن عبادة رضى الله عنه وهذه أول غزوة غزاها رسول الله صلى الله عليه وسلم،  (الرحيق المختوم)

வரலாற்றுச் சிறப்பு மிக்க கைபர் வெற்றியும் சஃபர் மாதத்தில் நிகழ்ந்தது. ஏழு பேர் சேர்ந்து தூக்க முடியாத கோட்டைக் கதவை அலீ ரழி அவர்கள் தனி நபராக தூக்கி அதை கேடயமாக பயன்படுத்தி நீண்ட நேரம் போரிட்டதும் இந்த கைபரில் தான். பல வருடங்களுக்கு முன்னால் மக்காவிலிருந்து அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்கள் குறிப்பாக நபியவர்களின் சிறிய தந்தை ஆகியோர் மதீனா திரும்பிய போது நபியவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்ததும் இந்த கைபர் வெற்றியின் போது தான்

عَنْ الشّعْبِيّ : أَنّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللّهُ عَنْهُ قَدِمَ عَلَى رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ يَوْمَ فَتْحِ خَيْبَرَ ، فَقَبّلَ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ بَيْنَ عَيْنَيْهِ وَالْتَزَمَهُ وَقَالَ مَا أَدْرِي بِأَيّهِمَا أَنَا أُسَرّ : بِفَتْحِ خَيْبَرَ ، أَمْ بِقُدُومِ جَعْفَرٍ ؟ (السيرة النبوية لابن كثير)

அந்தக் காலத்தில் அரபிகள் ஷவ்வால் மாதத்தையே பீடையாக கருதி அம்மாதத்தில் எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள் அதனால் தான் ஆயிஷா ரழி அவர்கள் அந்த மூட நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பெரும்பாலும் தாம் நடத்தி வைக்கும் திருமணங்களை ஷவ்வால் மாதத்திலேயே ஏற்பாடு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى شَوَّالٍ وَبَنَى بِى فِى شَوَّالٍ فَأَىُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّى. قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِى شَوَّالٍ(مسلم)  باب اسْتِحْبَابِ التَّزَوُّجِ وَالتَّزْوِيجِ فِى شَوَّالٍ وَاسْتِحْبَابِ الدُّخُولِ فِيهِ.- كتاب النكاح


கிஸ்ரா மன்னர்களின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியதும், 

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் பதவியை ஏற்றதும் இம்மாதத்தில் தான்.

عن ابن الدقيل قال لما نزل سعد نهر شير طلب السفن ليعبر بالناس فلم يقدر على شيء وجدهم قد ضموا السفن فأقاموا أياما من صفر وفجئهم المدفر أي رؤيا أن خيول المسلمين اقتحمتها فعبرت وقد أقبلت دجلة من المد بأمر عظيم فعزم لتأويل رؤياه على العبور فجمع الناس وقال إني قد عزمت على قطع هذا البحر إليهم فأجابوه فأذن للناس في الإقتحام وقال قولوا نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم اقتحموا دجلة وركبوا اللجة وأنها لترمي بالزبد وأنها لمسودة وأن الناس ليتحدثون في عومهم وقد اقترنوا كما كانوا يتحدثون في مسيرهم على الأرض فعجب أهل فارس بأمر لم يكن في حسابهم فأجهضوهم واعجلوهم عن جمهور أموالهم ودخلها المسلمون في صفر سنة عشر واستولوا على كل ما بقي في بيوت كسرى (الخصائص الكبرى)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பின்பு கிஸ்ரா ஆட்சிக்கு எதிரான போரின் போது ஸஃது ரழியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் தலைமையில் திஜ்லா நதியைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களுக்கு கப்பல் கிடைக்கவில்லை. அதன் கரையில் சில நாட்கள் தங்கும் நிலை நீடித்த து. அப்போது முஸ்லிம்களில் பலருக்கு ஒரு கனவு தோன்றியது. முஸ்லிம் படைகள் அந்த திஜ்லா நதியை வெறும் காலால் கடந்து செல்வது போலவும் திஜ்லா நதி அதற்கு வழி விடுவது போலவும் கனவு கண்டார்கள்.  அடுத்த நாள் முஸ்லிம்களை ஒன்று கூட்டி இந்த கனவை நனவாக ஆக்கி விட எண்ணி நஸ்தஈனு பில்லாஹி....... என்ற வாசகங்களை ஓதி அல்லாஹ்விடம் துஆக் கேட்டவர்களாக அந்த நதியைக் கடந்தார்கள். தண்ணீருக்குள் ஒரு சுரங்கம் போன்று பாதைகள் உருவானது. அதற்குள் நுழைந்து நடந்தார்கள். தரையில் நடப்பது போன்று ஒருவருக்கொருவர் பேசியபடி நடந்து சென்றார்கள். பாரசீகர்கள் இவர்களின் விரைவான வருகையைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்கள். இறுதியாக பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. இது நடெபெற்றுது சஃபர் மாதம்.

குர்ஆனை கற்க வயது தடை இல்லை

 10-07-2026

முஹர்ரம் - 24


بسم الله الرحمن الرحيم  

      குர்ஆனை கற்பதற்கு வயது தடையல்ல



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ஒவ்வொரு மஸ்ஜிதிலும் சிறுவர் சிறுமிகளுக்கான மக்தப் நடைபெறுவது போன்று பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குறிப்பாக மஸ்ஜிதின் நிர்வாகிகள் மாணவர்களாக மக்தப் மதரஸாவில் இணைய வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும்.

 ஆண்களைப் பொறுத்த வரை குர்ஆனுடைய விஷயத்தில் நான்கு வகையான உள்ளனர். 1. குர்ஆனை அறவே ஓத  தெரியாதவர்கள் 2.சிறுவயதில் குர்ஆனைக் கற்று பிறகு பல்வேறு அலுவல் காரணமாக அதனுடனான தொடர்பை துண்டித்தவர்கள் 3. குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள். இப்போதும் ஓதிக் கொண்டிருப்பவர்கள் ஆனால் தப்பும் தவறுமாக ஓதுபவர்கள். 4.குர்ஆனை தவறில்லாமல் ஓதுவார்கள். ஆனால் வருடத்திற்கு சில சூராக்களையேனும் மனப்பாடம் செய்யலாமே என்ற சிந்தனை அவர்களிடம் இருக்காது. ஆக, இப்படிப்பட்ட நான்கு  சாராரைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு குர்ஆனுடைய தொடர்பை விட்டும் நம் சமூகம் விலகியதால் எப்பேற்பட்ட இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

குர்ஆனுடைய தொடர்பை துண்டித்தது தான் பல்வேறு சோதனைகளுக்கும் காரணம் 

ஒரு காலம் இருந்தது. குர்ஆனுடன் இந்த சமூகத்தின்  தொடர்புகள் அதிகம் இருந்தன. மஃரிப் நேரம் குர்ஆன் ஓதும் சப்தம் அதிகமாக முஸ்லிம்களின் வீடுகளில் இருக்கும். ஆனால் காலம் மாறி விட்டது. சீரியல்களின் சப்தம் தான் இன்று நிறைந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அதிகம் போராடிய போது அதை சமாளிக்க முடியாத ஆங்கிலேயர்கள் இவர்களின் வீரியத்திற்கு என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து குர்ஆனின் போதனை தான் காரணம் என்பதை உணர்ந்து முஸ்லிம்களை நாம் குர்ஆனை விட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அதை செயல் படுத்தினார்கள் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகத்தினார்கள். அதன் பலன் இன்று அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.         

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124)طه

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இரண்டு காரணங்களால் இந்திய முஸ்லிம்களுக்கு சோதனைகள் வருகிறது 1. குர்ஆனுடன் தொடர்பை குறைத்தது 2. ஒற்றுமையின்மை

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது.அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதற்குப் பின் 120 வருடங்களில்  அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டார்கள். அதன் துவக்கமாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது சுமார் 15 வயதுள்ள இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் குர்ஆனில் இருபத்தைந்து ஜுஸ்வு மனப்பாடம் செய்து விட்டேன். எனினும் ஆங்கிலேயர்களுடன் போர் புரிய நினைக்கிறேன் ஆனால் எனது தாயார் சம்மதிக்கவில்லை நீ முழு குரஆனையும் முடித்து விட்டு போருக்குப் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்று அவன் கூற இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்குத் தோல்வி தான் மிஞ்சும் எதுவரை முஸ்லிம்கள் அவர்தகளின் வேத த்துடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதுவரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என முடிவு செய்தார்கள். அதற்குப் பின்பு இருபது வருடங்கள் கழித்து ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்கு வெற்றி கிடைக்கும் முஸ்லிம்கள் அவர்களின் வேதத்துடன் தொடர்பை குறைத்துக் கொண்டது நல்ல சந்தர்ப்பம் என்று முடிவு செய்து போருக்கு வந்தார்கள். வென்றார்கள். அவர்கள் நினைத்தது போன்று ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு துடைத்தெறிந்தார்கள்.                                                         

1.குர்ஆன் ஓத தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்வது மிக அவசியமானதாகும்

ஒரு காலம் வரும். நாம் குர்ஆனை கற்க நினைத்தாலும் குர்ஆன் இருக்காது. அல்லாஹ் அதை உயர்த்தி விடுவான்

2.கடைசி காலத்தில் குர்ஆனுக்கு கண்ணியம் இல்லாதபோது குர்ஆனை அல்லாஹ் உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும். 

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும் குர்ஆன் பிரதிகளில் இருந்தும் நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ ، (دارمي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். 

குர்ஆனைக் கற்பதற்கு வயதில்லை. முதிய வயதிலும் கற்கலாம்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ الر فَقَالَ كَبُرَتْ سِنِّي وَاشْتَدَّ قَلْبِي وَغَلُظَ لِسَانِي قَالَ فَاقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ حاميم فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقَالَ اقْرَأْ ثَلَاثًا مِنْ الْمُسَبِّحَاتِ فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا زُلْزِلَتْ الْأَرْضُ حَتَّى فَرَغَ مِنْهَا فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَزِيدُ عَلَيْهَا أَبَدًا ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ الرُّوَيْجِلُ مَرَّتَيْنِ (ابوداود)

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் சூராக்களைக் கற்றுக் கொடுங்கள் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் அலிஃப் லாம் மீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களைக் கற்றுத் தர நாடிய போது அவர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு வயதாகி விட்டது. என் உள்ளம் மனப்பாடம் செய்வதை விட்டும் கடினமாகி விட்டது. எனக்கு நாவு உச்சரிப்புகளை விட்டும் சிரமமாகி விட்டது என்றார்.  அவரிடம் நபி ஸல் அவர்கள் ஹாமீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களை ஓதும்படி கூறிய போது முன்பு கூறிய அதே பதிலை மீண்டும் கூறினார். அவரிடம் நபி ஸல் அவரேகள் ஸப்பஹ என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களை ஓதும்படி கூறியபோது முன்பு கூறிய அதே பதிலை மீண்டும் கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதரே எனக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறிய சூராவை ஓதிக் காட்டுங்கள் என்று கூறிய போது நபி ஸல் ஜில்ஜால் சூராவை கற்றுத் தந்தார்கள்.அவர் திரும்பிச் செல்லும்போது இதை விட நான் அதிகப் படுத்த மாட்டேன் என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவர் வெற்றி பெற்று விட்டார் என இரண்டு முறை கூறினார்கள்.                          

வயதான காலத்திலும் குர்ஆனை மட்டுமன்றி பல்வேறு மார்க்க விஷயங்களை  கற்பதில் சஹாபாக்கள் ஆர்வமுடன் இருந்தனர்

عَنْ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا قَبِيصَةُ مَا جَاءَ بِكَ قُلْتُ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَأَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مَا يَنْفَعُنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ قَالَ يَا قَبِيصَةُ مَا مَرَرْتَ بِحَجَرٍ وَلَا شَجَرٍ وَلَا مَدَرٍ إِلَّا اسْتَغْفَرَ لَكَ يَا قَبِيصَةُ إِذَا صَلَّيْتَ الْفَجْرَ فَقُلْ ثَلَاثًا سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ تُعَافَى مِنْ الْعَمَى وَالْجُذَامِ وَالْفَلِجِ يَا قَبِيصَةُ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَانْشُرْ عَلَيَّ رَحْمَتَكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ رواه احمد    فلجபக்க வாதம்     جذامகுஷ்டம்

முதியவரான கபீஸா ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் அப்போது நபி ஸல் அவர்கள் கபீஸா அவர்களே  உங்களை இங்கு வரவழைத்தது எது என நபி ஸல் அவர்கள் கேட்டாரகள். அதற்கு நான் என்னுடைய எலும்புகள் தேய்ந்து விட்டன. வயதாகி விட்டது. எனவே உங்களிடம் வந்து ஏதேனும் பயனுள்ள விஷயத்தைக் கற்றுக் கொள்ள வந்தேன் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் (இதற்குத் தான் வந்துள்ளீர்கள் என்றால்) நீங்கள் நடந்து வரும் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் மடுவும் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் என்று கூறி விட்டு, நீங்கள் ஃபஜ்ருத் தொழுது விட்டு சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ என்ற தஸ்பீஹை மூன்று முறை தினமும் ஓதி வந்தால் குஷ்டம், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள் என்று கூறி விட்டு மற்றொரு துஆவையும் அவருக்குக் கற்றுத் தந்தார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்

 தமிழ் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவர்  பேசியது. ஒரு ஆலிமா பட்டமளிப்பு விழாவில் ஒரு பெண்ணுக்கான ஆலிமா ஸனது அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது. அதை வாங்கும்போது அவர் தேம்பித் தேம்பி அழுதார். அவரிடம் காரணம் கேட்ட போது என் மகள் ஆலிமா பட்டம் பெறுகிறார். ஆனால் எனக்கு குர்ஆன் கூட அறவே ஓதத் தெரியாதே அதை நினைத்து அழுகிறேன் என்றார். அடுத்த வருடம் அவருடைய இரண்டாவது மகளுக்கான ஆலிமா ஸனது அவரிடம் வழங்கப்பட்டது. அப்போதும் அவர் அவ்வாறே அழுதார்.   அவரிடம் காரணம் கேட்ட போது என் மூத்த மகள் ஆலிமா பட்டம் பெறும்போது எனக்கு குர்ஆன் அறவே ஓத த் தெரியாது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் நான் குர்ஆன் ஓதக் கற்றுக் கொண்டேன். அதை நினைத்து சந்தோஷத்தால் அழுகிறேன் என்றார். ஆர்வம் இருக்கும் அளவுக்கு சீக்கிரமாக குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும்.அல்ஹம்து லில்லாஹ் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பெரியவர்களுக்காக 40 நாட்களில் குர்ஆனைக் கற்றுக் கொள்ளும் திட்டம் துவங்கப்பட்டு  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப பெரியவர்களுக்கு என்ன தான் ஆர்வம் இருந்தாலும் ஒரு சில அரபு எழுத்துக்களின் உச்சரிப்புகள் வயதான காலத்தில் கற்பது சிரமம்என்றாலும் ஓரளவுக்கு குர்ஆனை பிழையின்றி ஓதும் வாய்ப்பு இதனால் கிடைக்கிறது. இதை பரவலாக்க வேண்டும். 

குர்ஆனுடைய மொழியான அரபு மொழி மற்ற மொழிகளை விட எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر

அரபியில் SMALL  லட்டர் BIG  லட்டர் இடையே வடிவங்கள் மாறுவதில்லை. 29 அரபி எழுத்துக்களைக் கற்று அவை எவ்வாறு இணைகிறது என்று மட்டும் தெரிந்தால் போதும். அது மட்டுமல்ல அந்த 29 எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஒரே வடிவம் கொண்டவை. புள்ளிகள் மட்டுமே மாறும். உதாரணமாக

ب ت ث                     - س ش -                       ج  ح خ -                    د ذ  -                   ر ز                      -  ع غ   -     ض ص-           ط ظ

எழுத்துக்கள் வெவ்வாறாக இருந்தாலும் வடிவங்கள் ஒன்று ஆனால் ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. A என்ற எழுத்து SMALL ஆக எழுதும்போது வடிவமே மாறுகிறது. எழுத்துக்கள் ஒன்று. வடிவங்கள் வெவ்வேறு. காரணம் ஆங்கிலத்தில் SMALL  லட்டர்  BIG  லட்டர் என இரு வகை உண்டு. இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள். இரண்டும் சேர்த்து 54 எழுத்துக்கள்.  அதன் வடிவங்களும் மாறும்.  54 எழுத்துக்களையும் கற்க வேண்டும். ஆனால் அரபி அப்படியல்ல. ஐந்து அல்லது வடிவங்களை மட்டுமே அறிந்து புள்ளிகளையும், ஹரகத்துகளையும் அறிந்தால் போதும்.

மனப்பாடம் செய்வதற்கும் குர்ஆன் எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر أي سهلناه للحفظ   وأعنا عليه من أراد حفظه فهل من طالب لحفظه فيعان عليه (قرطبي

குர்ஆனை மனனம் செய்யப் படுவது போன்று  வேறு எந்த வேதமும் மனனம் செய்யப்படவில்லை.

திருக்குறளை மனனம் செய்தவர்களை எண்ணி விடலாம். ஆனால் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை எண்ணுவது எளிதல்ல. 

தவ்ராத் வேதத்தை முழுமையாக மனனம் செய்தவர்கள் நான்கு பேர் மட்டும் தான்

وقال سعيد بن جبير: ليس من كتب الله كتاب يقرأ كله ظاهرا إلا القران؛ وقال غيره: ولم يكن هذا لبني إسرائيل، ولم يكونوا يقرؤون التوراة إلا نظرا، غير موسى وهارون ويوشع بن نون وعزير صلوات الله عليهم، (تفسير القرطبي)

குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள் எத்தனை சிரமமான பாடங்களையும் படித்து விடுவார்கள். அவர்களிடம் மனதில் உள்ள குர்ஆன் கடினமான பாடங்களையும் அவர்களுக்கு இலகுவாக்கி விடும். எனவே தான் வட மாநிலங்களில் மேற்படிப்புக்கான சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்யும்போது ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தருவதுடன் அவர்களுக்கான கட்டணங்களிலும் சலுகை வழங்குகிறார்கள். காரணம் முழுக் குர்ஆனையும் மனப்பாடம் செய்த இவர் கல்லூரியின் பாடங்களையும் நன்றாகப் படித்து நமது கல்லூரிக்கு நற்பெயர் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை தான் இந்த முன்னுரிமைக்குக் காரணம். இதற்கு உதாரணமாக கர்நாடகாவில் உள்ள ஷாஹின் கல்லூரியைக் கூறலாம். இங்கு ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.                   

தவ்ராத்தை யூதர்களின் உள்ளங்களில் இருந்து  அல்லாஹ் முழுமையாக மறக்கடித்து உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளத்தில் மட்டும் அற்புதமாக அதை பதிய வைத்ததால் தான் அவரை கடவுள் என்று யூதர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்

وفي تفسير القرطبي في قوله تعالي "وقالت اليهود عزير ابن الله"أن سبب ذلك القول أن اليهود قتلوا الانبياء بعد موسى عليه السلام فرفع الله عنهم التوراة ومحاها من قلوبهم، فخرج عزير يسيح في الارض، فأتاه جبريل فقال: (أين تذهب) ؟ قال: أطلب العلم، فعلمه التوراة كلها فجاء عزير بالتوراة إلى بني إسرائيل فعلمهم.وقيل: بل حفظها الله عزيرا كرامة منه له، فقال لبني إسرائيل: إن الله قد حفظني التوراة، فجعلوا يدرسونها من عنده.وكانت التوراة مدفونة، كان دفنها علماؤهم حين أصابهم من الفتن والجلاء والمرض ما أصاب وقتل بختنصر إياهم.ثم إن التوراة المدفونة وجدت فإذا هي متساوية لما كان عزير يدرس فضلوا عند ذلك وقالوا: إن هذا لم يتهيأ لعزير إلا وهو ابن الله (تفسير القرطبي

பனீ இஸ்ராயீல் சமூகம் பல நபிமார்களைக் கொன்றதால் அல்லாஹ் அவர்கள் அனைவரின் உள்ளங்களில் இருந்தும் தவ்ராத் வேதத்தை எடுத்து விட்டான். அப்போது உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தஸ்பீஹ் செய்தவர்களாகபுறப்படுவதைக் கண்டு எங்கே செல்கிறீர்கள் என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்க, நான் கல்வியைத் தேடிப் புறப்படுகிறேன். என்று கூறியவுடன் அவர்களுக்கு மட்டும் தவ்ராத்தை வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கற்றுத் தந்தார்கள்.பின்பு தன் சமூகத்திடம் வந்த உஜைர் அலைஹிஸ்ஸலாம் அதை பிறருக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். தவ்ராத்தின் ஏடுகள் பாதுகாப்பிற்காக சில நல்லவர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு புதைக்கப்பட்ட ஏடுகளின் வரிகளும் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தன. யாருக்கும் தெரியாத தவ்ராத்தை உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் இதை மாபெரும் அற்புதம் என மக்கள் கருதியதால் ஒரு கட்டத்தில் மக்கள் இந்த அற்புதம் இறைவனின் மகனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என தவறாக விளங்கி உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

குர்ஆனை மனனம் செய்யப்பட்டது போன்று வேறு எந்த வேதங்களும் மனனம் செய்யப்பட்டதில்லை

எனவே நபி ஸல் அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை குர்ஆனின் ஒரு புள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது. கவனக் குறைவால் அவ்வாறு நிகழ்ந்தால் அதைத் திருத்த உலகம் முழுவதும் நிறைய ஹாஃபிழ்கள் இருக்கிறார்கள்.

قال الامام الرازي في تفسير هذه الاية" فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا(77الكهف) رأيتُ في كتب الحكايات أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاؤوا إلى رسول الله صلى الله عليه وسلم بحمل من الذهب وقالوا: يا رسول الله نشتري بهذا الذهب أن تجعل الباء تاءاً حتى تصير القراءة هكذا: فأتوا أن يضيفوهما أي أتوا لأن يضيفوهما أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول الله صلى الله عليه وسلم وقال:إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام الله  وذلك يوجب القدح في الإلهية . » فعلمنا أن تغيير النقطة الواحدة من القرآن يوجب بطلان الربوبية والعبودية  (تفسير الرازي) 

  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் பற்றி குர்ஆன் கூறும் சம்பவத்தில் அன்தாகியா என்ற ஊருக்குச் சென்றார்கள். வெளியூர்வாசிகளை விருந்தாளிகளாக ஏற்க வேண்டும் என்பது அக்காலத்தில் கடமை போன்றே இருந்த து. ஆனால் அவ்வூர் வாசிகள் இவர்களை விருந்தாளிகளாக ஏற்கவில்லை. இதை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இச்சம்பவம் நடந்து நீண்ட காலங்களுக்குப்பின் அவ்வூர்வாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்கத்தால் பெரும் குவியலைக் கொண்டு அல்லாஹிவின் தூதரே இதை ஏற்றுக் கொண்டு அந்த வசனத்தில் உள்ள பா என்ற எழுத்தின் புள்ளியை மட்டும் மேலே மாற்றியமைத்து தா வாக  ஆக்கி விடுங்கள். அதாவது உணவு தர மறுத்தார்கள் என்பதற்கு பதிலாக உணவு தர முன் வந்தார்கள் என மாற்றியமைத்தால் எங்களின் ஊருக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் நீங்கி விடும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை மறுத்து இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்தியதாக ஆகி விடும். அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்துவது அல்லாஹ்வை பொய்ப் படுத்தியதாக ஆகி விடும் என்றார்கள்.                                   

2. குர்ஆனை  ஓதி பிறகு மறந்தவர்களின் கவனத்திற்கு.....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்.

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

குர்ஆனை  ஓதி பிறகு மறப்பது பெரும்பாவமாகும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தினரின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்த த்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும். 

காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் ரடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என்று அழுத நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.                

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

குர்ஆனைக் கற்று பிறகு அதை மறப்பது முஸீபத்தாகும்

عن الضحاك قال ما تعلم رجل القرآن ثم نسيه إلا بذنب ثم قرأ الضحاك وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ثم قال الضحاك وأي مصيبة أعظم من نسيان القرآن 

குர்ஆனைக் கற்று மறந்தவர்கள் நாளுக்கு நாள்  பெருகினால் அதன் விளைவு என்னவாகும்

கடைசி தொழ வைக்க இமாம்களும் கிடைக்க மாட்டார்கள். இருக்கிற தொழுகையாளிகளுக்கும் தொழ வைக்கத் தெரியாது

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.                                         

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை. படிப்பினை- மேற்காணும் அறிவிப்புகள் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொள்வதுடன் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிய முடிகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கல்விகளை போதிக்கும் இடங்கள் தான் மக்தப் மதரஸாக்கள். இந்த மக்தப் மதரஸாக்கள் சிறுவர் சிறுமிக்கு மட்டும் தான் என்பது இல்லை. அனைத்து வயதினரும் இங்கு வந்து குர்ஆனையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.                                          

3. குர்ஆனை முறையாக ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்

இன்றைய தொழுகையாளிகளில் பத்து சதவீதம் பேருக்குக் கூட குர்ஆனை ஒழுங்காக ஓதத் தெரியாது

قال الله تعالي وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5)المزمل   ترتيل القراءة : التأني فيها والتمهل وتبيين الحروف

படிப்பினை- குர்ஆனை தர்தீலாக ஓதும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். தர்தீல் என்பது நிறுத்தி நிறுத்தி எழுத்துக்கள் நன்கு புரியும்படி ஓதுவதாகும். உலகில் இவ்வாறு ஓதியவர்களைத் தான் மறுமையிலும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறுவான்.

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை வமறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை தர்தீலாக, பிழையின்றி, அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். அவர் அவ்வாறு ஓத ஓத அவருடைய அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي) 

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து உயரும். 

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

மஸ்ஜிதுக்கு வந்து குர்ஆனைக் கற்று தினமும் சுமார் ஒரு பக்கம் அளவுக்கு குர்ஆனை ஓதிச் சென்றால் அவர் லட்சாதிபதி. 

 பல பக்கங்களை ஓதினால் அவர் கோடீஸ்வரர்   

عن عَبْد اللَّهِ بْن مَسْعُودٍ رضي الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ (ترمذي

பெரும் பாவங்கள்

03-07-2026

முஹர்ரம் - 17 بسم الله الرحمن الرحيم  

      சிறு பாவங்களும் பெரும் பாவங்களும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا (31) النساء

பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதை விட்டும் மன்னிப்புக் கேட்டு திருந்த வேண்டும். சில பாவங்கள் நாம் செய்யும் நற்செயல்கள் மூலமாகவே மன்னிக்கப்படும். அத்தகைய நற்செயல்களில் சிலவற்றைப் பற்றி காண்போம். பெரும்பாவங்களைப் பொறுத்த வரை நாம் அழுது முறைப்படி தவ்பா செய்தால் மன்னிக்கப்படும். ஆனால் மூன்று விதமான நற்செயல்கள் மூலம் நாம் மன்னிப்புக் கேட்கா விட்டாலும் இந்த உலகிலேயே நமது பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும். இதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸில் உள்ளது 1. இஸ்லாம். ஒருவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றால் அவருடைய பழைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் படும். 2. ஹிஜ்ரத் மூலம் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.3.ஹஜ்ஜே மக்பூல் பெரும்பாவங்களுக்கான மன்னிப்பாக அமையும்.  

மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத் மூலமாக பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.

மேற்கூறப்பட்ட ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் விரிவாக காண்போம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்

عَنِ ابْنِ شَمَاسَةَ الْمَهْرِىِّ قَالَ حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِى سِيَاقَةِ الْمَوْتِ. فَبَكَى طَوِيلاً وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ. فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّى قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلاَثٍ لَقَدْ رَأَيْتُنِى وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم مِنِّى وَلاَ أَحَبَّ إِلَىَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الإِسْلاَمَ فِى قَلْبِى أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلأُبَايِعْكَ. فَبَسَطَ يَمِينَهُ - قَالَ - فَقَبَضْتُ يَدِى. قَالَ «مَا لَكَ يَا عَمْرُو ».قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ  قَالَ « تَشْتَرِطُ بِمَاذَا ». قُلْتُ أَنْ يُغْفَرَ لِى. قَالَ « أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ ». وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَلاَ أَجَلَّ فِى عَيْنِى مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلأَ عَيْنَىَّ مِنْهُ إِجْلاَلاً لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لأَنِّى لَمْ أَكُنْ أَمْلأُ عَيْنَىَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِى مَا حَالِى فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلاَ تَصْحَبْنِى نَائِحَةٌ وَلاَ نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِى فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِى قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّى (مسلم)

சுருக்கம்- இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள் கூறவில்லையா என [ஆறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்; அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன். [முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.                                                    

 [இரண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன். [ நூல்;முஸ்லிம் 

முஸ்லிமான பின் உடனே மவ்த் ஏற்பட்டதால் ஒரு அமல் கூட செய்யாமல் சுவனம் நுழைந்த பாக்கியசாலி சஹாபீ

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنّ عَمْرَو بْنَ أُقَيْشٍ كَانَ لَهُ رِبًا فِي الْجَاهِلِيَّةِ فَكَرِهَ أَنْ يُسْلِمَ حَتَّى يَأْخُذَهُ فَجَاءَ يَوْمُ أُحُدٍ فَقَالَ أَيْنَ بَنُو عَمِّي قَالُوا بِأُحُدٍ قَالَ أَيْنَ فُلَانٌ قَالُوا بِأُحُدٍ قَالَ فَأَيْنَ فُلَانٌ قَالُوا بِأُحُدٍ فَلَبِسَ لَأْمَتَهُ وَرَكِبَ فَرَسَهُ ثُمَّ تَوَجَّهَ قِبَلَهُمْ فَلَمَّا رَآهُ الْمُسْلِمُونَ قَالُوا إِلَيْكَ عَنَّا يَا عَمْرُو قَالَ إِنِّي قَدْ آمَنْتُ فَقَاتَلَ حَتَّى جُرِحَ فَحُمِلَ إِلَى أَهْلِهِ جَرِيحًا فَجَاءَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ لِأُخْتِهِ سَلِيهِ حَمِيَّةً لِقَوْمِكَ أَوْ غَضَبًا لَهُمْ أَمْ غَضَبًا لِلَّهِ فَقَالَ بَلْ غَضَبًا لِلَّهِ وَلِرَسُولِهِ فَمَاتَ فَدَخَلَ الْجَنَّةَ وَمَا صَلَّى لِلَّهِ صَلَاةً  (ابوداود) بَاب فِيمَنْ يُسْلِمُ وَيُقْتَلُ مَكَانَهُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ- كتاب الجهاد

உஹதுப் போரின் போது நடந்த இவரின் வரலாற்று நிகழ்வு சுருக்கம்: இவர் இஸ்லாத்தின் மீது ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பைக் கொண்டிருந்தார். உஹதுப் போர் நெருங்கும் வேளையில், இவருக்குள் இஸ்லாத்தின் உண்மை நிலை புரிய வந்தது. உடனே தனது வாளை எடுத்துக்கொண்டு போர்க்களத்திற்கு விரைந்தார். அங்கு அவரைப் பார்த்த முஸ்லிம்கள் அவரை காஃபிர் என்று கருதி அவரைக் கொல்வதற்கு முனைந்த போது நான் முஸ்லிமாகி விட்டேன் என்று கூறினார். அதன் பிறகு முஸ்லிம்களுடன் இணைந்து போரிட்டார். கடுமையாக காயமுற்றார். குற்றுயிராக அவரை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஷஹீதானார். அவரது சகோதரியிடம் ஸஃதுப்னு முஆத் ரழி அவர்கள் விளக்கம் கேட்டார்கள். இவர் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் போரிட்டாரா அல்லது தனிப்பட்ட  மக்கா வாசிகளுடன் தனிப்பட்ட பகையா என்று கேட்ட போது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் போரிட்டார் என அவரது சகோதரி கூறினார். ஆகவே அந்த சஹாபி "அவர் ஒரு தொழுகை கூட நிறைவேற்றவில்லை, ஆனால் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.                                                  

والناس بالنسبة للبدايات والنهايات ينقسمون إلى أقسام أربعة: منهم من ولد على خير ونشأ على خير ومات على خير، فالبداية حسنة والنهاية حسنة، ومنهم من ولد ونشأ على شر ومات على شر، والثالث البداية حسنة ونشأ على حال حسنة ثم أدركه الخذلان في آخر أمره فارتد ومات كافراً، فالبداية حسنة والنهاية سيئة، وعكسه مثل هذا الذي معنا في هذه القصة، وهو الذي عاش كافراً على شر ثم أسلم في نهاية أمره ومات على خير، فبدايته على شر ونهايته على خير. ويدل على ذلك حديث ابن مسعود : (والذي نفسي بيده! إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها، وإنما الأعمال بالخواتيم). (شرح ابي داود)

ஹிஜ்ரத் பெரும்பாவங்களுக்கான மன்னிப்பாக அமையும் என்பதற்கு தோதுவான சம்பவம் 

ففي  صحيح  مسلم   في  حديث  طويل .....   وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا  (مسلم)

عن جَابِرٍ رض..فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ (مسلم) بَاب الدَّلِيلِ عَلَى أَنَّ قَاتِلَ نَفْسَهُ لَا يَكْفُرُ - كِتَاب الْإِيمَانِ

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது துஃபைல் என்பவரும் ஹிஜ்ரத் சென்றார். அவருடன் அவரது சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் சென்றார்.(அவர்கள் மதீனாவிற்கு சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்து வரவில்லை அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். பின்பு ஒரு நாள் துஃபைல் அவரை கனவில் கண்டார். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய இரு கைகளும் போர்த்து மூடப்பட்டிருப்பதைக் கண்ட துஃபைல் அவர்கள் அந்த மனிதரிடம் உம் இறைவன் உம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார். அதற்கு அவர் நான் ஹிஜ்ரத் செய்ததால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான் என்றார். மீண்டும் துஃபைல் அவர்கள் “ உமது கைகள் மட்டும் போர்த்து மூடப்பட்டுள்ளதே ஏன்? என்று கேட்க, அதற்கு அவர்  “நீ வீணாக்கிய கையை நாம் சீராக்க மாட்டோம்” என என்னிடம் கூறப்பட்டது.”  என்றார். இந்தக் கனவை துஃபைல் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது “யாஅல்லாஹ் அவரது இரு கைகளையும் மன்னிப்பாயாக” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்கள்.  - முஸ்லிம் 

மக்பூலான  ஹஜ்ஜும் பெரும்பாவங்களுக்கான  மன்னிப்பாக அமையும். எனவே பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்பும் ஹாஜி அடுத்து தமது வாழ்க்கையை சீராக ஆக்கிக் கொள்ள வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ (بخاري

ஹஜ்ஜுக்கு பின் இறையச்ச ,ஈமானிய வாழ்க்கை தொடர பின்வரும் 10 விஷயங்களை கடைபிடித்தால் அவர் நிச்சயமாக சுவனவாசி ஆவார்

1. பின்வரும் துஆவை அதிகம் செய்ய வேண்டும். 

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً  ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏3:8. “

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்           

.2. கடமையான ஃபர்ளான தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது. முன் பின் சுன்னத்துகளையும் முடிந்த வரை நிறைவேற்றுவது. 

3. ஃபஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தவறாமல் நிறைவேற்றுவது. 

4. தினமும் அரை மணி நேரம் குர் ஆன் ஓதுவது. 

. 5. தினமும் காலை மாலை திக்ரு செய்வது. 

. 6. தினமும் காலை மாலை இஸ்திஃபார் செய்வது. 

. 7. தினமும் காலை மாலை ஸலவாத் ஓதவேண்டும். 

. 8. மாதம் ஒரு முறையாவது நஃபிலான நோன்பு வைப்பது. நாட்கள் செல்லச் செல்ல அது அதிகமாக வேண்டும். 

. 9. தஹஜ்ஜத் தொழுகை தொழுவது   

. 10. தினமும் காலையில் முடிந்த அளவுக்கு  சதகா செய்வது 

. 11. ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபடுவது. 

. 12. ஈமானை , இறையச்சத்தை அதிகரிக்க கூடிய பயான் நசீஹத்தில் முடிந்த வரை கலந்து கொள்வது . 


மேற்கூறியவை குறைந்த பட்ச அளவுகள் தான். ஆரம்பத்தில் இதைச் செய்து பழகினால் நாளுக்கு நாள் அமல்கள் அதிகரிக்கும். 

பெரும் பாவங்கள் எது என்பதற்கு விளக்கமாக அகாயிதுன் நஸஃபீ என்ற நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

وقد اختلفت الروايات في الكبيرة  فروي عن ابن عمر  رضي الله عنه  انها  تسعة  الشرك  بالله وقتل النفس بغير حق وقذف المحصنة والزنا والفرار  عن الزحف والسحر واكل مال اليتيم وعقوق الوالدين المسلمين والالحاد في الحرم وزاد ابو هريرة رضي الله عنه أكل الربوا وزاد على رضي الله عنه السرقة وشرب الخمر -  وقيل "كل ما كان مفسد ته مثل مفسدة شئ ما ذكر  او  اكثر منه –

قيل كل ما تو عّد عليه الشارع بخصوص - وقيل كل معصبية اصر علي العبد فهي كبير و كلها استغفر عنها فهي صغيرة 

பெரும்பாவங்கள் விஷயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்

பெரும்பாவங்கள் ஒன்பதாகும். 1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. இதே நிலையில் ஒருவர் மரணித்தால் அவருக்கு மன்னிப்பு கிடையாது 

 2. ஒரு உயிரை அநியாயமாக கொள்வது 3. பத்தினிப் பெண்ணை அவதூறு சொல்வது 4. விபச்சாரம் செய்வது 5. போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுவது 6. சூனியம் செய்வது 7. அனாதையின் சொத்துக்களை அநியாயமாக உண்பது 8. பெற்றோரை துண்டித்து வாழ்வது 9. ஹரம் ஷரீஃபில்  வரம்பு மீறுவது

   அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வட்டியையும் பெரும் பாவத்தில் சேர்த்துள்ளார்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருட்டையும் மது அருந்துவதையும் பெரும் பாவத்தில் சேர்த்துள்ளார்கள். இன்னும் சில அறிவிப்புகளில் எந்தப் பாவங்களால் ஏற்படும் தாக்கங்கள் மேற்கூறப்பட்ட பெரும் பாவங்களுடைய தாக்கங்களைப் போல இருக்குமோ அல்லது அதை அவற்றை விட அதிகமாக இருக்குமோ அதுவெல்லாம் பெரும் பாவங்களில் பட்டியலில் கட்டுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 

இன்னும் சில அறிவிப்புகளில் அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைக் கடுமையாக எச்சரித்து உள்ளார்களோ அதுவெல்லாம் பெரும் பாவம் என்றும் கூறப்பட்டுள்ளது. (இவ்வாறாக பல்வேறு அறிவிப்புகளின் மூலம் கூறப்பட்டுள்ள பெரும்பாவங்களின் எண்ணிக்கையை கவனித்தால் அது  70 க்கு சமீபமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளன

இன்னும் சில அறிவிப்புகளில் சிறு பாவமாக இருந்தாலும் ஒரு அடியான் அதை தொடர்ந்தும் துணிச்சலாகவும் செய்தால் அவனை பொறுத்த வரையிலே அது பெரும் பாவம் என்றும் அதே நேரத்திலே சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரும் பாவம் செய்தாலும் உடனடியாக அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தினால் அது அல்லாஹ்வின் பார்வையில் சிறிய பாவமாகவே கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

சிறு பாவங்கள் நமது நற்செயல்கள் மூலமாக மன்னிக்கப்படலாம். ஆனாலும் அதற்காகவும் தவ்பா செய்வது நல்லது

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مِنْ امْرَأَةٍ كُلَّ شَيْءٍ إِلَّا أَنِّي لَمْ أُجَامِعْهَا قَالَ فَأَنْزَلَ اللَّهُ{ أَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ }  (نسائ)

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன் ஆனால் உடலுறவு கொள்ள வில்லை எனக்கு பரிகாரம் உண்டா என்று கேட்டபோது அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான் நிச்சயமாக நற்செயல்கள் தீமைகளை அழித்துவிடும்

சிறந்த முஃமின்கள் சிறிய பாவம் செய்தாலும் பெரிய அளவில் கவலைப் படுவார்கள்

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا (65) الفرقان

عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ عَنْ نَفْسِهِ قَالَ إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ (بخاري) 6308

சிறந்த முஃமின் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் தனது தலைக்கு மேலே பெரிய மலை இருப்பது போலவும் அதற்குக் கீழே அமர்ந்திருப்பது போலவும் அது தன் மீது விழுந்து விடுவது போலவும் கவலைப்படுவார். ஆனால் பாவியான மனிதன் பெரும்பாவத்தைச் செய்தாலும் தன் மூக்கைக் கடந்து செல்லும் ஈயை எப்படி ஒருவர் பொருட்படுத்த மாட்டாரோ  அதுபோல் அவரது பாவத்தைப் பொருட்படுத்த மாட்டார்.           

                       

والحكمة في التمثيل بالجبل إن غيره من المهلكات قد يحصل النسبب إلى النجاة منه بخلاف الجبل إذا سقط على الشخص لا ينجو منه عادة (مرعاة

மலையை உதாரணமாகக் கூறிய காரணம். மற்ற ஆபத்துகளில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்திலிருந்து தப்புவது கடினம்.

فعلامة المؤمن أن توجعه المعصية حتى يسهر ليله فيما حل بقلبه من وجع الذنب ...فالمؤمن الكامل إذا أذنب يحل به أكثر من المصاب لحجبه عن ربه ومن أشفق من ذنوبه فكان على غاية الحذر منها لا يرجو لغفرها سوى ربه فهو يقبل على الله وهو الذي أراده الله من عباده ليتوب عليهم ويجزل ثوابهم  ولهذا قال بعض العارفين : ذنب يوصل العباد إلى الله تعالى خير من عبادة تصرفه عنه وخطيئة تفقره إلى الله خير من طاعة تغنيه عن الله. (فيض القدير

சிறந்த முஃமின் ஒரு சிறு பாவம் செய்தாலும்  அந்தக் கவலையால் அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. அதற்காக மிகவும் வருந்துவார். அதுவே அவரது அந்தஸ்து உயர காரணமாக ஆகி விடும். இதனால்தான் சில ஆரிஃபீன்கள் “ஒரு அடியானிடம் ஏற்படும் பாவம் கூட சில நேரங்களில் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு அடியானிடம் ஏற்படும் நல்ல அமல் (அதை பிறரிடம் சொல்லிக் காட்டுவது போன்ற காரணங்களால்) அல்லாஹ்வை விட்டும் அவனைத் திருப்பி விடுகிறது. என்பார்கள்.           

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

நிச்சயமாக சில பாவங்கள் வேறு சில பாவங்களைப் பயிரிடும் என்ற இமாம் இப்னுல் கையிம் ரஹ் அவர்களின் கூற்று

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.  

 

(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                               


குரோதம் கொள்வதும் பெரும்பாவங்களில் கட்டுப்படும்

 عَنْ أَنَسِ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ (بخاري)

குரோதம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அடுத்தவரின் குறையை துருவி ஆராயாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களான சகோதர ர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدْ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ باءَ بِالْإِثْمِ زَادَ أَحْمَدُ وَخَرَجَ الْمُسَلِّمُ مِنْ الْهِجْرَةِ (ابوداود) 

ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது. மூன்று நாட்கள் கடந்து விட்டால் அவரை வலியச் சென்று சந்தித்து சலாம் சொல்லட்டும். அவர் பதில் ஸலாம் சொன்னால் நன்மையில் இருவரும் சம மாகி விடுவர். அவ்வாறு அவர் பதில் ஸலாம் சொல்லா விட்டால் அவர் மீது மட்டும் தான் பாவம் நிகழும். இவர் பாவத்தை விட்டும் நீங்கி விடுவார்.                  

وفي رواية بن أبي شيبة وإن هو سلم فلم يرد عليه ولم يقبل سلامه رد عليه الملك ورد على ذلك الشيطان (مصنف بن أبي شيبة) 

மற்றொரு அறிவிப்பில் பதில் ஸலாம் சொல்லா விட்டால் ஸலாம் சொன்னவருக்கு மலக்கு  பதில் கூறுகிறார் என்று உள்ளது.  

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَرْتَفِعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ (ابن ماجة)

மூன்று பேரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு ஜான் கூட  மேலே ஏறாது 1. மக்கள் வெறுக்கும் நிலையில் இமாமத் செய்பவர். 2.. கணவன் வெறுக்கும் நிலையில் இரவு முழுவதும் யாருக்கு கழிந்த தோ அத்தகைய பெண்.  3. பகைமை உள்ள இரு  சகோதரர்கள்.

வியாழன், 25 ஜூன், 2026

அஹ்லே பைத்

 19-06-2026

முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم  

ஆஷூரா நோன்புகளின் சிறப்பும்

அஹ்லெ பைத்துகளின் சிறப்பும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஆஷூரா நாளாக இருப்பதால் அன்றைய தினம் ஆஷூரா நாளில்  நடைபெற்ற அற்புத சம்பவங்களைப் பற்றிப் பேசப்படும். அதற்கு முன்பு இந்த ஜும்ஆவில் முஹர்ரம் மாதம் முழுவதுமே நஃபில் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்பதைப் பற்றியும் குறிப்பாக ஆஷூரா நோன்புகளின் சிறப்பைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பைப் பற்றியும் குறிப்பாக ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பைப் பற்றியும் அவர்களின் பெயரால் ஷியாக்கள் செய்யும் அனாச்சாரங்களைப் பற்றியும் காண்போம்.

ரமழானுக்கு அடுத்து நோன்பு வைப்பதற்குரிய ஏற்றமான  மாதங்களில் முஹர்ரம் மாதம்  சிறப்பான மாதமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (رواه  مسلم    -باب فَضْلِ صَوْمِ الْمُحَرَّمِ  - عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ لَهُ مَا سَمِعْتُ أَحَدًا يَسْأَلُ عَنْ هَذَا إِلَّا رَجُلًا سَمِعْتُهُ يَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا قَاعِدٌ عِنْدَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ إِنْ كُنْتَ صَائِمًا بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَصُمْ الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرُ اللَّهِ فِيهِ يَوْمٌ تَابَ فِيهِ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ آخَرِينَ (ترمذي - بَاب مَا جَاءَ فِي صَوْمِ الْمُحَرَّمِ

 ஒரு மனிதர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ரமழானுக்குப் பிறகு நான் உபரியான நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம்  எது என்று கேட்ட போது, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் இதே கேள்வியை நபி ஸல் அவர்களிடம் ஒரே ஒரு மனிதர் மட்டும் தான் கேட்டார். அப்போது நான் அருகில் இருந்தேன். அவர் கேட்ட கேள்விக்கு நபி ஸல் அவர்கள் ரமழானுக்குப் பிறகு நீ உபரியான நோன்பு வைப்பதாக இருந்தால் முஹர்ரம் மாத த்தில் நோன்பு வைப்பீராக ஏனெனில் அது அல்லாஹ்வின் மாதமாகும். அந்த மாத த்தில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் அல்லாஹ்  ஒரு சமூகத்தாருக்கு மன்னிப்பு வழங்கினான். மற்றும் சில சமுதாயத்திற்கும் மன்னிப்பு வழங்கினான்.- திர்மிதீ  

ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாதத்தில் அதிகமாக நபி (ஸல்) நோன்பு வைத்துள்ளார்கள் என்ற ஹதீஸுக்கும் ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கும் இடையே உள்ள முரண்பாடும் அதற்கான விளக்கமும்

அதேபோல ஃபர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்தில்  முஅக்கதாவான  முன்பின் சுன்னத்துகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் ஃபர்ளான தொழுகைக்கு அடுத்து இரவுத் தொழுகை சிறந்தது  என்று கூறியதற்கான விளக்கம் 

فإن قيل كيف كان رسول الله صلى الله عليه و سلم يخص شعبان بصيام التطوع فيه مع أنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم فالجواب أن جماعة أجابوا عن ذلك بأجوبة .......والأظهر كما قال بعض الشافعية والحنابلة وغيرهم أن أفضل الصيام بعد شهر رمضان شعبان لمحافظته صلى الله عليه و سلم على صومه أو صوم أكثره فيكون قوله أفضل الصيام بعد رمضان المحرم محمولا على التطوع المطلق (عون المعبود وكذا أفضل الصلاة بعد المكتوبة قيام الليل إنما أريد به تفضيل قيام الليل على التطوع المطلق دون السنن والرواتب التي قبل الفرض وبعده (عون المعبود

சுருக்கம்- பொதுவாகவே நபி (ஸல்)  அவர்கள் வழமையாக செய்தார்கள் என்பதை வைத்து ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாத நோன்புகள் சுன்னத் என்று விளங்குவோம். அதே நேரத்தில்  ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கு விளக்கமாகிறது பொதுவாக நஃபில் நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத த்தின் நோன்புகள்  என்பதாகும்.  அதேபோல நபி (ஸல்)  அவர்கள் வழமையாக தொழுதார்கள் என்பதை வைத்து ஃபர்ளுக்கு அடுத்து முஅக்கதாவான முன்பின் சுன்னத்துகள்  உள்ளன அதே நேரத்தில்  சுன்னத் முஅக்கதா அல்லாத  நஃபிலான தொழுகைகளில்  சிறந்த தொழுகை  இரவுத் தொழுகை என்று விளங்க வேண்டும்.      

மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு 

இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்   

أقول سئلت لم خص المحرم بقولهم شهر الله دون سائر الشهور مع أن فيها ما يساويه في الفضل أو يزيد عليه كرمضان ووجدت ما يجاب به أن هذا الاسم إسلامي دون سائر الشهور فإن أسماءها كلها على ما كانت عليه في الجاهلية وكان اسم المحرم في الجاهلية صفر الأول والذي بعده صفر الثاني فلما جاء الإسلام سماه الله المحرم فأضيف إلى الله بهذا الاعتبار [ شرح السيوطي على مسلم ]

அந்தஸ்தில் எல்லா மாதங்களும் சமம் என்றிருக்க முஹர்ரம் மாதம் மட்டும் அல்லாஹ்வின் மாதம் என்று கூறியதற்கான காரணம் அல்லாஹ் பெயர் சூட்டிய மாதம் என்றும் விளக்கம் கூறலாம். அதாவது ஆரம்ப காலத்தில் இருந்தே மற்ற மாதங்கள் அதற்குரிய பெயரில் அழைக்கப் பட்டு வந்தாலும் அரபிகள் முஹர்ரம் மாதத்தை மட்டும் தம் சுய விருப்பப்படி பெயரை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார்கள்.இஸ்லாம் வந்த பிறகு அல்லாஹ்வே இம்மாதத்திற்கு முஹர்ரம்  என பெயர் சூட்டியதால் அல்லாஹ்வுடன் இணைத்து இம்மாதத்தின் பெயர் அழைக்கப்படுகிறது. மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு

இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்

قال القرطبي إنما كان صوم المحرم أفضل الصيام من أجل أنه أول السنة المستأنفة فكان استفتاحها بالصوم الذي هو أفضل الأعمال [ شرح السيوطي على مسلم ]

நோன்பு என்பது எனக்குரியது. அதற்கு நானே நன்மை தருகிறேன் என்ற அடிப்படையில் நோன்பு அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வணக்கம்.  நஃபிலான நோன்புகளில் சிறந்த நோன்புகளான முஹர்ரம் மாத நோன்புகள் மேலும் சுன்னத்தான ஆஷூரா (இரு) நோன்புகள் என அல்லாஹ்வுக்கு பிடித்தமான வணக்கங்களை அதிகம் உள்ளடக்கியதாக  இந்த மாதம் துவங்குவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.    

ஆஷூரா நோன்புகளின் சிறப்புகள்

பல்வேறு நபிமார்களும் ஈடேற்றம் அடைந்த இந்த நாளில் அதற்கு நன்றிக் கடனாக நோன்பு சுன்னத்தாக்கப்பட்டுள்ளது

பனீ இஸ்ராயீல் சந்ததியினருக்கு பெருநாளாக விளங்கிய ஆஷூரா தினம்

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ الْيَهُودُ وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوهُ أَنْتُمْ (مسلم) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – كتاب الصوم 

அறியாமைக் காலத்தில் குறைஷிகளாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஆஷூரா தினம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَا يَصُومُهُ بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – 

அறியாமைக் காலத்திலும் குறைஷிகள் ஆஷூரா தினத்தை கண்ணியப்படுத்தி நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபி ஸல் அவர்களும் நோன்பு வைத்தார்கள். மதீனாவுக்கு வந்த பிறகும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு எப்போது ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான வசனம் இறங்கியதோ அதற்குப் பிறகு ரமழான் கடமையான நோன்பாக மாறியது. ஆஷூரா நோன்பு சுன்னத்தான நோன்பாக மாறியது    

كتاب الصوم-   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى(جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ -كتاب الحج

மேற்படி ஹதீஸில் கஃபாவின் திரை மாற்றப்படும் நாளாக ஆஷூரா நாள் இருந்தது என்பதன் விளக்கம்

فَإِنَّهُ يُفِيد أَنَّ الْجَاهِلِيَّة كَانُوا يُعَظِّمُونَ الْكَعْبَة قَدِيمًا بِالسُّتُورِ وَيَقُومُونَ بِهَا ,وَيُسْتَفَاد مِنْ الْحَدِيث أَيْضًا مَعْرِفَة الْوَقْت الَّذِي كَانَتْ الْكَعْبَة تُكْسَى فِيهِ مِنْ كُلّ سَنَة وَهُوَ يَوْم عَاشُورَاء وَكَذَا ذَكَرَ الْوَاقِدِيُّ بِإِسْنَادِهِ عَنْ أَبِي جَعْفَر الْبَاقِر أَنَّ الْأَمْر اِسْتَمَرَّ عَلَى ذَلِكَ فِي زَمَانهمْ، وَقَدْ تَغَيَّرَ ذَلِكَ بَعْدُ فَصَارَتْ تُكْسَى فِي يَوْم النَّحْر(فتح الباري)  

ரமளான் நோன்பு கடமையாக்கப் பட்ட பின் அதற்கு அடுத்த அந்தஸ்தில் ஆஷூரா நோன்பு..

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ"(بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ .-كتاب الصوم

ஆஷூரா நோன்பு -முடிந்த வரை முஹர்ரம் 9, 10 ல் நோன்பு வைக்க வேண்டும். முடியா விட்டால் பிறை 10, 11-ல் வைக்கலாம் 

عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) كِتَاب الصِّيَامِ -عَنْ اِبْن عَبَّاس رض مَرْفُوعًا صُومُوا يَوْم عَاشُورَاء وَخَالِفُوا الْيَهُود، صُومُوا يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ (فتح الباري

ஆஷூரா தினத்தில் செய்யக் கூடாதவைகள்:ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல. 

عَنْ عَبْدِ اللَّهِ  رضى الله عنه  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري)  باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز- 

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان – وهكذا رواه البخاري في كتاب الجنائز -الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند المصيبة

அபூ மூஸா ரழி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இலேசாக மயக்கமுற்றிருந்தார்கள். அவர்களின் தலை அவரது மனைவியின் மடியில் இருந்த து. அப்போது  அவர்களின் குடும்பத்தில் ஒருவர் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்த போது அதை தடுக்க அந்த நேரத்தில் சக்தி இருந்திருக்கவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவர்கள் தம் குடும்பத்தாரிடம் இறைத்தூதர் ஸல் அவர்கள் யாரை விட்டும் முற்றிலும் நீங்கி விட்டார்களோ அப்படிப்பட்டவர்களை விட்டும் நானும் நீங்கி விட்டேன்.  இறைத்தூதர் ஸல் அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களை விட்டும் துக்கம் காரணமாகமொட்டையடித்துக் கொள்பவர்களை விட்டும் துக்கம் காரணமாக சட்டையைக் கிழித்துக் கொள்பவர்களை விட்டும் ஒதுங்கியிருந்தார்கள். 

ஷியாக்களின் அனாச்சாரங்கள் நடைபெறும் இடத்திற்கு போகவும் கூடாது

قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ (مسلم) بَاب بَيَانِ كَوْنِ النَّهْيِ عَنْ الْمُنْكَرِ مِنْ الْإِيمَانِ- كِتَاب الْإِيمَانِ

இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது கூட நமது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது

وعن ابن عباس قال : ماتت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فبكت النساء فجعل عمر يضربهن بسوطه فأخره رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " مهلا يا عمر " ثم قال : " إياكن ونعيق الشيطان " ثم قال : " إنه مهما كان من العين ومن القلب فمن الله عز وجل ومن الرحمة وما كان من اليد ومن اللسان فمن الشيطان " . رواه أحمد 

 நபி ஸல் அவர்களின் மகளார் ஜைனப் ரழி இறந்த போது சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். அப்போது உமர் ரழி அவர்கள் அப்பெண்களை சாட்டையால் அடிக்கவும் துணிந்தார்கள். அப்போது நபி ஸல் உமர் ரழி அவர்களைத் தடுத்து அந்தப் பெண்களுக்கு பின்வருமாறு புத்தி மதி கூறினார்கள். ஷைத்தானைப் போன்று ஒப்பாரி வைப்பதை விட்டும் உங்களை நான் தடுக்கிறேன். "உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மத்

عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ.. (بخاري)كتاب الجنائز

  மூத்தா போரில் ஷஹீதாக்கப்பட்ட  மூன்று தளபதிகளான நபித்தோழர்களின் ஷஹாத த் செய்தி கிடைத்தபோது  நபி ஸல் அவர்கள் சோகமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது நபிகளாரிடம் ஒருவர் வந்து ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்துப் பெண்கள் சப்தமிட்டு அழுது கொண்டிருக்கிற செய்தியைச் சொன்ன போது அவ்வாறு அழக்கூடாது என அவர்களைத் தடுக்கும்படி சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, இரண்டாவது முறையும் அந்தப் பெண்களை அவ்வாறு செய்வதை விட்டும் தடுங்கள் என்று கூறினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, அப்போது நபி ஸல் அவர்கள் கோபமாக அந்தப் பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறினார்கள். 

 ஹுஸைன் ரழி அவர்களின் பெயரால் அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற அனாச்சாரங்கள் அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி அதற்காக துக்கம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் கணவனும் மனைவியும் முஹர்ரம் 1 முதல் 10 வரை ஒன்று சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் இந்த பத்து நாட்களில் துக்கம் காரணமாக அசைவ உணவுகளை அறவே உண்ணக் கூடாது என்றும் கருதுகின்றனர். அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹராம் என்று கருதி தடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். ஒருவருக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவதற்கு பிடிக்காது. ஆனால் அதை அவர் கொள்கையாக வைத்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87) المائدة

நாமாக நம் உடலை வதைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு மற்றொரு சம்பவம்

عن جَابِرٍ رض..فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ (مسلم) بَاب الدَّلِيلِ عَلَى أَنَّ قَاتِلَ نَفْسَهُ لَا يَكْفُرُ - كِتَاب الْإِيمَانِ

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது துஃபைல் என்பவரும் ஹிஜ்ரத் சென்றார். அவருடன் அவரது சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் சென்றார்.(அவர்கள் மதீனாவிற்கு சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்து வரவில்லை அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். பின்பு ஒரு நாள் துஃபைல் அவரை கனவில் கண்டார். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய இரு கைகளும் போர்த்து மூடப்பட்டிருப்பதைக் கண்ட துஃபைல் அவர்கள் அந்த மனிதரிடம் உம் இறைவன் உம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார். அதற்கு அவர் நான் ஹிஜ்ரத் செய்ததால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான் என்றார். மீண்டும் துஃபைல் அவர்கள் “ உமது கைகள் மட்டும் போர்த்து மூடப்பட்டுள்ளதே ஏன்? என்று கேட்க, அதற்கு அவர்  “நீ வீணாக்கிய கையை நாம் சீராக்க மாட்டோம்” என என்னிடம் கூறப்பட்டது.”  என்றார். இந்தக் கனவை துஃபைல் அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறியபோது “யாஅல்லாஹ் அவரது இரு கைகளையும் மன்னிப்பாயாக” என்று நபி ஸல் துஆ செய்தார்கள்  - முஸ்லிம் – 184

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர

عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ  رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم  يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز

மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும்  ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப் பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப் பட்ட உமர் ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை. ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்

والظاهر أنه من سخف الشيعة وقد وقع ما هو أعظم من قتل الحسين رضي الله عنه ولم يقع شيء مما ذكروه فإنه قد قتل أبوه علي بن أبي طالب رضي الله عنه وهو أفضل منه بالإجماع ولم يقع شيء من ذلك وعثمان بن عفان رضي الله عنه قتل محصورا مظلوما ولم يكن شيء من ذلك وعمر بن الخطاب رضي الله عنه قتل في المحراب في صلاة الصبح وكأن المسلمين لم تطرقهم مصيبة قبل ذلك ولم يكن شيء من ذلك وهذا رسول الله صلى الله عليه وسلم وهو سيد البشر في الدنيا والآخرة يوم مات لم يكن شيء مما ذكروه ويوم مات إبراهيم بن النبي صلى الله عليه وسلم خسفت الشمس فقال الناس خسفت لموت إبراهيم فصلى بهم رسول الله صلى الله عليه وسلم صلاة الكسوف وخطبهم وبين لهم أن الشمس والقمر لا ينخسفان لموت أحد ولا لحياته. (من مكتبة الشاملة)

எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை

وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183 

ஹுஸைன் ரழி அவர்கள் எப்போது கொள்ளப்படுவார்கள் என்பது நபி ஸல் அவர்களுக்கு முன்பே தெரியும். அப்படியிருந்தும் அதை துக்கமான நாளாக கடை பிடிக்கும் படி கூறியதில்லை

عن أم  الفضل بنت الحارث أنها دخلتُ على رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني رأيت حلما منكرا الليلة قال:وما هو؟ قالت: إنه شديد قال وما هو ؟قالت : رأيت كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري. فقال رسول الله صلى الله عليه وسلم: رأيتُ خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك".فولدتْ فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلتُ يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه وسلم تهريقان الدموع قالت: فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال :أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني بتربة من تربته حمراء (دلائل النبوة للبهقي) مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

 உம்முல் ஃபழ்ல் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்  வருகை தந்து அல்லாஹ்வின் தூதரே நான் இன்று நான் விரும்பத் தகாத கனவை கண்டேன் என்று கூற, அது என்ன கனவு என நபி ஸல் கேட்டார்கள். அப்போது நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய உடம்பின் ஒரு சதைத் துண்டு  வெட்டப்பட்டு அது என் மடியில் கிடப்பதாக  கண்டேன் என்று கூறினேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீர் நல்ல கனவைத் தான் கண்டிருக்கிறீர். அதற்கான விளக்கம் என்னவென்றால் என்னுடைய சதைத் துண்டான என் மகள் ஃபாத்திமா இன்ஷா அல்லாஹ் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அக் குழந்தை உமது மடியில் இருக்கும் என நபி ஸல் விளக்கம் கூறினார்கள்.

அவ்வாறே ஃபாத்திமா ரழி  அவர்கள் ஹுஸைனைப் பெற்றெடுத்தார்கள். நபி ஸல் கூறியது போலவே அக்குழந்தை அதிகமாக என்னுடைய மடியில் இருக்கும். ஒருமுறை ஹுஸைனை (ரழி) நான் சுமந்து சென்று நபி  (ஸல்) அவர்களின் மடியில் வைத்தேன். பேரப் பிள்ளையை மடியில் வாங்கி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள் சற்று நேரத்தில் அழ ஆரம்பித்தார்கள். நான் அதற்கான காரணம் கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள். சற்று முன்பு  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து சோகமான செய்தியைக் கூறி விட்டுச் சென்றார்கள். அதாவது என்னுடைய இந்தப் பேரப் பிள்ளையை பிற்காலத்தில் என்னுடைய உம்மத்தைச் சார்ந்த சிலர் கொலை செய்வார்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அழுது கொண்டே கூறினார்கள். அப்போது நான் இந்தக் குழந்தையையா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ஆம் என்று கூறியதுடன்  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் அதற்கான முன்னறிவிப்பாக இரத்தக் கறை படிந்த சிவப்பு நிற மண்ணையும் காட்டி விட்டுச் சென்றார்கள் என்றும் கூறினார்கள்.                                                

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ بِنِصْفِ النَّهَارِ وَهُوَ قَائِمٌ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا قَالَ هَذَا دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمِ فَأَحْصَيْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدُوهُ قُتِلَ فِي ذَلِكَ الْيَوْمِ (مسند أحمد) باب مسند عبد الله بن العباس  مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

முஹர்ரம் மாத த்தில் அஹ்லே பைத்துகளின் சிறப்பை அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.

அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣

;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமின்களே ! உங்களுக்கு மத்தியில்  நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை எடுத்துச் சொன்னதற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்  [  ஷூரா =23 ]

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي (ترمذي

நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது சலவாத் சொல்லாமல் தொழுகை பரிபூரணம் அடைவதில்லை

عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد (بخاري

நபியின் குடும்பத்தை நேசிப்பது, அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிஃபாக்கிலிருந்து காப்பாற்றும் என தஹாவி இமாம் கூற்று,

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).

وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة بضعة مني فمن أغضبها أغضبني "

وعن البراء قال : رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول : " اللهم إني أحبه فأحبه " متفق عليه

அஹ்லுல் பைத் என்றால் யார்?

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719

நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “ இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ  னது அந்தஸ்தான இடத்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719இந்நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறதுமருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால் அந்த இடத்தில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். 

அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஆவின் கருத்தாகும்.

நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விஷயமாக நபித்தோழர்கள் கருதினார்கள்

؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-

இப்னு அப்பாஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் வஃபாத்தான செய்தி சொல்லப்பட்ட போது உடனே (மிகப்பெரும் சோதனைகளைக் கண்டால் சஜ்தா செய்வது போன்று) சஜ்தா செய்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் இந்த செய்திக்காக எதற்கு சஜ்தா செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். அல்லாஹ்வின் (பெரும் சோதனையான) அத்தாட்சியைக் கண்டால் சஜ்தா செய்யுங்கள் என நபி ஸல் கூறியுள்ளார்கள். நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரின் மரணத்தை  விட சோகமான செய்தி என்ன இருக்கப் போகிறது என்று பதில் கூறினார்கள்.                                             

பாரசீகரான சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்கள் அஹ்லே பைத்துகளில் ஒருவராக ஆக்கப்பட்டதன் விளக்கம்

عَنْ كَثِيرِ بن عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَّ الْخَنْدَقَ مِنْ أَحْمَرَ الْبَسْخَتَيْنِ طَرَفِ بني حَارِثَةَ عَامَ حِزْبِ الأَحْزَابِ، حَتَّى بَلَغَ الْمَذَابِحَ، فَقَطَعَ لِكُلِّ عَشَرَةٍ أَرْبَعِينَ ذِرَاعًا، فَاحْتَجَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ فِي سَلْمَانَ الْفَارِسِيِّ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ رَجُلا قَوِيًّا، فَقَالَ الْمُهَاجِرُونَ: سَلْمَانُ مِنَّا، وَقَالَتِ الأَنْصَارُ: سَلْمَانُ مِنَّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ" .(طبراني

சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர்.  அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியாக நின்றார்.  மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான் எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா)

ஸய்யித் வம்சம் என்று யாருக்குக் கூறப்படும்

السيد عند المسلمين من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]

ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக்  கூறப்படும் .

நபிகளாரின் குடும்பத்தினரான அஹ்லே பைத்துகள் பெரும் வசதி வாயப்புடன் இருந்திருக்கவில்லை 

عن جابر رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم أقام أيامًا لم يَطْعَمْ طعاما، حتى شَقّ ذلك عليه، فطاف في منازل أزواجه فلم يجد عند واحدة منهن شيئًا، فأتى فاطمة فقال: "يا بُنَيَّة، هَلْ عِنْدَكِ شَيْء آكُلُهُ، فَإِنَّي جَائِع؟" فقالت: لا والله بأبي أنتَ وأمّي. فلما خَرَج من عندها بعثت إليها جارة لها برغيفين وقطعة لحم، فأخذته منها فوضعته في جَفْنَةٍ لها، وقالت: والله لأوثرن بهذا رسول الله [صلى الله عليه وسلم]  على نفسي ومن عندي. وكانوا جميعًا محتاجين إلى شبعة طعام، فبعثت حَسَنا أو حُسَينا إلى رسول الله [صلى الله عليه وسلم]  فرجع إليها فقالت له: بأبي وأمي  قد أتى الله بشيء فخَبَّأتُه لك. قال: "هَلُمِّي يا بُنيَّة" قالت: فأتيته بالجفنة. فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزًا ولحمًا، فلما نظرَتْ إليها بُهِتتْ وعرفَتْ أنها بركة من الله، فحمدَت الله وصلَّت على نَبِيِّهِ، وقدّمَتْه إلى رسولِ الله صلى الله عليه وسلم. فلما رآه حمد الله وقال: "مِنْ أيْنَ لَكِ هَذَا يَا بُنَية؟" فقالت  يا أبت، 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فحمد الله وقال: "الحَمْدُ للهِ الَّذي جَعَلَكِ -يا بُنَيّة-شَبيهَةِ بسيدةِ  نِساء بَنيِ إسْرَائيلَ، فَإنَّها كَانَتْ إذَا رَزَقَهَا اللهُ شَيْئًا فَسُئِلَتْ عَنْهُ قَالَتْ: { هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عَلِي  ثم أكل رسولُ الله صلى الله عليه وسلم وأكل علي، وفاطمة، وحسن، وحسين، وجميع أزواج النبيّ صلى الله عليه وسلم وأهل بيته جميعًا حتى شبعوا. قالت: وبقيت الجفنة كما هي، فأوسعت ببقيتها  على جميع الجيران، وجعل الله فيها بركة وخيرا كثيرا  .(تفسير ابن كثير) الجفنةதட்டு

விளக்கம்- நபி ஸல் அவர்கள் எப்போதும்  தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க மாட்டார்கள். அடுத்த நேரம் அல்லாஹ் எப்படியும் தருவான் என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். அவ்வாறு  ஒருமுறை  நபி ஸல் அவர்களின் குடும்பத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எந்த மனைவிமார்களின் வீட்டிலும் எதுவும் இல்லை.  கடைசியாக பாத்திமா ரழி அவர்களின் வீட்டுக்கும் நபி ஸல் அவர்கள் சென்றார்கள். அங்கும் எதுவும் இல்லை. பசியுடன் நபி ஸல் அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். சற்று நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்  இரண்டு ரொட்டித் துண்டுகளையும்  சிறிதளவு இறைச்சியையும் கொடுத்தனுப்ப, உடனே பாத்திமா ரழி அவர்கள் நிச்சயமாக நாம் பசியோடு இருந்தாலும் கூட, இதை நபி ஸல் அவர்களுக்காக எடுத்து வைப்பேன் என்று எண்ணி அதை தனியாக எடுத்து வைத்து விட்டு நபி ஸல் அவர்களை அழைத்து வருவதற்காக ஹஸன், ஹுஸைன் ரழி இருவரையும் அனுப்ப, நபி ஸல் அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். அப்போது பாத்திமா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்  உங்களுக்காக  ஒரு உணவை எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதை எடுத்து வா என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை எடுக்கச் சென்ற பாத்திமா ரழி அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அதை வைக்கும்போது இருந்த தை விட மிக அதிகமாகவே இருந்தது. இதை முஃஜிஸா என்று கூறலாம். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இது எப்படி உமக்குக் கிடைத்த து என்று மகளிடம் கேட்க,  அன்னை மர்யம் அலை அவர்கள் பதில் கூறியதைப் போன்று பாத்திமா ரழி அவர்கள் 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ }

இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த து என பதிலளித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அன்னை மர்யம் அலை பதில் கூறியது போன்று உன்னை பதில் கூற வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறி விட்டு, தனக்காக எடுத்து வைத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச்சொன்னார்கள். காரணம் அப்போது அத்தனை பேரும் பசியோடு தான் இருந்தனர் அனைவரும் வந்த பிறகு  முதலில் நபி ஸல் அவர்களும்  பின்பு அலீ ரழி அவர்களும் பின்பு வரிசையாக அனைவரும் உண்டனர். அத்தனை பேரும் உண்ட பிறகும் உணவு  தட்டு நிறைய முன்பு இருந்தது  போன்றே மிச்சம் இருந்தது.  பிறகு அனைத்து அண்டை வீட்டாருக்கும் அது கொடுத்து அனுப்பப் பட்டது.  

عن زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه ..قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ قَالَ كُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ (مسلم) بَاب مِنْ فَضَائِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - كِتَاب فَضَائِلِ الصَّحَابَةِ 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ الْمَدِينَةِ فَانْصَرَفَ فَانْصَرَفْتُ فَقَالَ أَيْنَ لُكَعُ ثَلَاثًا ادْعُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَامَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا فَقَالَ الْحَسَنُ بِيَدِهِ هَكَذَا فَالْتَزَمَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ (بخاري) باب السِّخَابِ لِلصِّبْيَانِ-كتاب اللباس  (السخاب : قلادة ليس فيها من اللؤلؤ والجوهر شىء)

சஃபரில் நடந்த சுப காரியங்கள்

 17-08-2026 Safar  2 بسم الله الرحمن الرحيم ,(சஃபரில் நடந்த சுப காரியங்கள்)  அலீ (ரழி)  ,  பாத்திமா (ரழி) ஆகியோரின் மண வாழ்க்கையும் படிப்...