வியாழன், 29 ஜனவரி, 2026

பராஅத் இரவு

 30-01-2026

شعبان  -  بسم الله الرحمن الرحيم  

  ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

பராஅத் இரவு வந்தால் நாம் செய்ய வேண்டிய அமல்களில் பாவ மன்னிப்புத் தேடுவதும் நோன்பு வைப்பதும் இறந்தவர்களுக்காக துஆச் செய்வதும் முக்கியமானவை

இறந்தவர்களுக்காக துஆச் செய்வது பற்றி..

قال الله تعالي وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإيمَانِ [الحشر:8

நம்மை விட்டும் பிரிந்த சென்ற நம்முடைய மூதாதையர்களுக்காக நாம் செய்யும் நற்கருமங்கள் இரு வகை

1. அவர்கள் வஸிய்யத்  செய்து விட்டுச் சென்றதால் நாம் கட்டாயம் நாம் செய்ய வேண்டியவை 2. அவர்கள் வஸிய்யத்  செய்யாமல் அவர்களுக்காக நாமே விரும்பிச் செய்யும்  நல்லறங்கள்.   மற்றொரு கண்ணோட்டத்தில் மவ்த்தாக்களுக்கு நாம் செய்யும் நற்கருமங்களில் இரு பிரிவுகள் உள்ளன. 1. பகரம் இல்லாமல் நேரடியாக அவற்றை அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியும். ஹஜ், உம்ரா, குர்பானி ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவர்களுக்காக  நாம் ஹஜ், உம்ரா, குர்பானி போன்றவற்றை நிறைவேற்ற முடியும். 

2. அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியாது ஆனால் அதற்குப் பகரமாக ஃபித்யா கொடுக்க முடியும். தொழுகை, நோன்பு ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவருக்காக தொழுகை, நோன்பு ஆகியவை நாம் நிறைவேற்ற முடியாது. ஃபித்யா தரலாம்.

இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு வசிய்யத் செய்யா விட்டாலும் வாரிசுகள் செய்யலாம். 

மவ்த்தானவர்களின் சார்பில் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்

عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَجَّ عَنْ وَالِدَيْهِ بَعْدَ وَفَاتِهِمَا كُتِبَ لَهُ عِتْقٌ مِنَ النَّارِ، وَكَانَ لِلْمَحْجُوجِ عَنْهُمَا أَجْرُ حَجَّةٍ تَامَّةٍ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمَا شَيْئٌ "(بيهقي

இறந்து விட்ட பெற்றோருக்காக ஹஜ் செய்தவருக்கு நரக விடுதலை கிடைக்கும். அந்தப் பெற்றோருக்கும் பரிபூரணமான ஹஜ் நிறைவேறும் 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ (مسلم) باب الْحَجِّ وَالنُّذُورِ عَنِ الْمَيِّتِ

ஜுஹைனா என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து  என்னுடைய தாயார்  ஹஜ்ஜை நேர்ச்சை செய்திருந்தார். அவரால் ஹஜ் செய்ய முடியாமல் வஃபாத்தாகி விட்டார். அவருக்காக ஹஜ்ஜை நான் நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நீ ஹஜ் செய். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அந்தக் கடனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா அவ்வாறே  இது அல்லாஹ்வின் மீது அவருக்குள்ள கடனாகும். நிறைவேற்றுவது மிகவும் தகுதியானதாகும் என்றார்கள். 

வஃபாத்தானவர்கள் சார்பில் குர்பானியை நிறைவேற்றலாம்

 عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود

நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.

இறந்தவர்களுக்காக நன்மைகள் சேர்த்து வைப்பதில் சதக்கத்துல் ஜாரியா மிகவும் சிறந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ(بخاري)

ஒரு மனிதர் இறந்து விட்டால் அவராக நற்கருமங்கள் செய்யும் வாசல் தடைப்பட்டு விடுகிறது. ஆனால் மூன்று வழிகளில் நன்மைகள் அவருக்கு சேரும். 1.அவர் வாழும் போது நிரந்தரமான நன்மையை பெற்றுத் தரும் வகையில் செய்த தர்மம். 2. அவர் வாழும்போது போதித்த பயனுள்ள கல்வி. 3. அவருக்காக துவா செய்யும் நல்ல பிள்ளை.------- நூல் முஸ்லிம்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ الْمَاءُ قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لِأُمِّ سَعْدٍ رواه ابوداود

 சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவருக்கு எப்போதும் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும் தர்மம் எது? என்று கேட்டார்கள் “தண்ணீர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். அப்போது சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி இது உம்மு சஃது அவர்களின் நன்மைக்காக என்று கூறினார்கள்.

عَنْ عَائِشَةَ - رضى الله عنها - . أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ - صلى الله عليه وسلم - إِنَّ أُمِّى افْتُلِتَتْ نَفْسُهَا ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ « نَعَمْ »(بخاري)

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் எந்த வசியத்தும் செய்யாமல் திடீரென்று மரணித்து விட்டார்.அவர் என்னிடம் பேசியிருந்தால் என்னை தர்மம் செய்யச் சொல்லி இருப்பார். எனவே இப்போது நான் அவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தநன்மை அவர்களுக்கு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்“ஆம் கிடைக்கும்” என்றார்கள் மற்றொரு ஹதீஸிலே ஒருவர் உபரியான தர்மம் செய்து தாய் தந்தையருக்கு அதனுடைய நன்மை சேர வேண்டும் என்று முயற்சி செய்தால் அந்த நன்மை அவருக்கு கிடைத்து விடும் அதன் காரணமாக சதகா செய்தவரின் நன்மையில் எந்தக் குறையும் வராது என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي: " إِذَا أَرَدْتَ أَنْ تَتَصَدَّقَ صَدَقَةً فَاجْعَلْهَا عَنْ أَبَوَيْكَ، فَإِنَّهُ يَلْحَقُهُمَا، وَلَا يُنْتَقَصُ مِنْ أَجْرِكَ شَيْئًا "(بيهقي

நீர் எப்போதாவது தர் ம ம் செய்ய நினைத்தால் இறந்து விட்ட உன் பெற்றோருக்காக அதை நீர் செய்தால் அவர்களுக்கும் நன்மை சேரும். உன்னுடைய நன்மையிலும் எவ்வித குறைவும் ஏற்படாது

இறந்து விட்டவர்களுக்கு நன்மைகளைச் சேர்ப்பதில் துஆவும் முக்கியமானது. 

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإيمَانِ [الحشر:8

 எங்கள் இறைவா! எங்களையும் மன்னிப்பாயாக!எங்களுக்கு முன்னால் ஈமானுடன் யாரெல்லாம் எங்களை விட்டும் சென்று விட்டார்களோ அவர்களையும் மன்னிப்பாயாக! என்று பிற்காலத்தின் நல்லவர்கள் துஆச் செய்வார்கள்.- சூரா ஹஷ்ர் வசனம் 8

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ رواه ابن ماجة

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்    ஒரு மனிதனுக்கு சுவனத்தில் படித்தரங்கள் உயர்த்தப்படும். இது எப்படி வந்தது என்று கேட்பார். அதற்கு அவரிடம் இது உனது பிள்ளை உனக்குச் செய்த துஆ என்று கூறப்படும். நூல்- இப்னுமாஜா

உயிரோடு இருப்பவர்களின் துஆவை மவ்த்தாக்கள் மிகவும் எதிர் பார்க்கிறார்கள்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ "(شعب الايمان

வெள்ளத்தில் சிக்கி அபயம் தேடுபவரைப் போல மவ்த்தானவர்கள் தனது தந்தை, தாய், சகோதரர்,  நண்பன் ஆகியோரிடமிருந்து ஏதேனும் நன்மைகள் வந்து சேருவதை எதிர் பார்க்கிறார்கள். அவ்வாறு ஏதேனும் நன்மைகள் வந்து சேர்ந்து விட்டால் அதை இந்த உலகம் மற்றும் அதிலுள்ளவற்றை விட அதிகமாக அதை விரும்புவார்கள். பூமியில் உள்ளவர்களின் துஆக்களை இறந்தவர்களுக்கு அல்லாஹ் மலைகள் அளவுக்கு பெரிதாக்கி வைப்பான்.  உலகில் வாழும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் வழங்குவதை இறந்தவர்களுக்காக நாம் தரும் அன்பளிப்பு அவர்களுக்காக நாம் இஸ்திஃபார் செய்வதாகும் 

قال سفيان  رح  الاموات  احوج  الي الدعاء من الاحياء  الي الطعام والشراب

இமாம் சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள். உயிரோடு இருப்பவர்கள் உணவின் பக்கம் எந்த அளவு தேவையுள்ளவர்களாக இருப்பார்களோ அந்த அளவுக்கு  இறந்தவர்கள் தங்களுக்காக செய்யப்படும் துஆக்களின் பால் தேவையுள்ளவர்களாக இருப்பார்கள்

கப்ருக்குச் சென்று துஆச் செய்வதற்கு ஆதாரம்

عن عائشة رضي الله عنها قالت: فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجتُ أطلبه فإذا هو بالبقيع رافعا رأسه إلى السماء (بيهقي)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ளார்கள்.நான் ஒருநாள் இரவு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைக் காணாமல் தேடிச் சென்றேன். அப்போது பகீஃ கப்ருஸ்தானில் இருந்தார்கள். வானத்தை நோக்கியபடி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். நூல் பைஹகீ 

   عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِىِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلاَّ فِى سِقَاءٍ فَاشْرَبُوا فِى الأَسْقِيَةِ كُلِّهَا وَلاَ تَشْرَبُوا مُسْكِرًا ».

  நான் உங்களை கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் கப்ரு ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது உலகின் மீது பற்றின்மையையும் மறு உலகம் பற்றிய நினைவையும் உருவாக்கக் கூடியதாக உள்ளது 

عن عثمان بن عفان يقول مرَّ رسول الله صلى الله عليه وسلم بجنازة عند قبر وصاحبه يدفن فقال رسول الله صلى الله عليه وسلم:استغفروا لأخيكم وسلوا الله له التثبيت  فإنه الآن يسأل (رواه الحاكم في المستدرك)

 நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ரைக் கடந்து சென்றார்கள். அப்போது அந்த கப்ருக்கு உரியவர் அடக்கம் செய்யப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களின் சகோதரருக்காக தஸ்பீத்தைக் கேளுங்கள். கப்ரில் வைத்தவுடன் மலக்குகளின் கேள்விக்கு முறையாக பதிலை அவர் கூறுவதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். ஏனென்றால் அவர் இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப் படுவார்.-ஹாகிம்

عن قتادة عن أبي الصديق قال كان أنس إذا وُضِعَ الميت في القبر قال اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه (بغية الحارث)

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ரில் மய்யித் வைக்கப்பட்டவுடன் கீழ்காணும் துஆவை ஓதுவார்கள். 

اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه

    யாஅல்லாஹ்! இவருடைய விலாப் புறங்களை நெருக்குவதை விட்டும் பூமியை தூரமாக்கி வைப்பாயாக! இவருக்கு கப்ரை விசாலமாக ஆக்கி வைப்பாயாக!

أن عمرا بن العاص رضي الله عنه لما حضرته الوفاة قال.... فإذا سويتم علي التراب فاجلسوا عند قبري نحو نحر جزور وتَقْطِيْعِها أَسْتَأْنِسُ بكم    (المستدرك علي الصحيحين للحاكم)

 அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மவ்த் நெருங்கிய மகன்களிடம் கூறினார்கள். என் கப்ரு மீது மண்ணைப் போட்டு நீங்கள் மூடிய பின்பு ஒரு ஓட்டகத்தை அறுத்துப் பங்கிடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த அளவு நேரம் என் கப்ரு அருகே அமருங்கள். எனக்காக துஆச் செய்யுங்கள். நான் உங்கள் மூலம் நிம்மதி பெறுவேன்.

குர்ஆன் ஓதி இறந்தவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கும்  நிறைய ஆதாரங்கள் உள்ளன.

عن علي رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم من مَرَّ على المقابر فقرأ فيها إحدى عشرة مرة (قل هو الله أحد) ثم وهب أجره الاموات أعطي من الاجر بعدد الاموات(كنز العمال ,دُرُّ المختار )

 கப்ரைக் கடந்து செல்பவர் அங்கு 11 முறை இக்லாஸ் சூராவை ஓதி மரணித்தவருக்கு சேர்த்து வைத்தால் மரணித்தவர்களின் அளவுக்கு நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நூல் கன்ஜுல் உம்மால் 

عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال:من دخل المقابر فقرأ سورة يس خفف الله عنهم يومئذ وكان له بعدد حروفها حسنات(القرطبي)

 கப்ருஸ்தானில் நுழைந்து யாஸீன் சூரா ஓதினால் அல்லாஹ் கப்ராளிகளின் வேதனையைக் குறைப்பான். யாசீன் சூராவின் ஒவ்வொரு எழுத்துக்கும் நிறைய நன்மைகள் உண்டு. 

قال الامام أحمد بن حنبل: إذا دخلتم المقابر فاقرأوا بفاتحة الكتاب والاخلاص والمعوذتين واجعلوا ثواب ذلك لاهل المقابر فإنه يصل إليهم فالاختيارأن يقول القارئ بعد فراغه: اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان (اعانة الطالبين)

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். கப்ருஸ்தானில் நீங்கள் நுழைந்தால் ஃபாத்திஹா சூராவையும் இக்லாஸ் சூராவையும் ஃபலக், நாஸ் சூராவையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்கு சேர்த்து வையுங்கள். அது நிச்சயம் அவர்களுக்குச் சேரும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையாகிறது இவற்றை ஓதி முடித்த பின்பு 

اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان 

யாஅல்லாஹ் நான் ஓதிய இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வைப்பாயாக என்று கூறுவதாகும்.- நூல் இஆனா

وَفِي شَرْحِ اللُّبَابِ وَيَقْرَأُ مِنْ الْقُرْآنِ مَا تَيَسَّرَ لَهُ مِنْ الْفَاتِحَةِ وَأَوَّلِ الْبَقَرَةِ إلَى الْمُفْلِحُونَ وَآيَةِ الْكُرْسِيِّ وَآمَنَ الرَّسُولُ  وَسُورَةِ يس وَتَبَارَكَ الْمُلْكُ وَسُورَةِ التَّكَاثُرِوَالْإِخْلَاصِ اثْنَيْ عَشَرَ مَرَّةً أَوْ إحْدَى عَشَرَ أَوْ سَبْعًا أَوْ ثَلَاثًا  ثُمَّ يَقُولُ : اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ   (ردالمختار)

ஃபாத்திஹா சூராவையும் பகரா சூராவில் முஃபிலிஹூன் வரை உள்ள ஆரம்ப வசனங்களையும் ஆயத்துல் குர்ஸீ, ஆமனர் ரஸூலு, சூரா யாஸீன், சூரா முல்க், சூரா தகாஸுர் சூரா இக்லாஸ் 12 அல்லது 11 அல்லது 7 அல்லது 3 தடவைகள் ஓத வேண்டும். பிறகு

اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ

என்று ஓதி துஆச் செய்யவும். நூல்- ரத்துல் முக்தார்.  

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ رضي الله عنه قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ حِينَ تُوُفِّيَ قَالَ فَلَمَّا صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُضِعَ فِي قَبْرِهِ وَسُوِّيَ عَلَيْهِ سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَّحْنَا طَوِيلًا ثُمَّ كَبَّرَ فَكَبَّرْنَا فَقِيلَ  يَارَسُولَ اللَّهِ لِمَ سَبَّحْتَ ثُمَّ كَبَّرْتَ قَالَ لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الْعَبْدِ الصَّالِحِ قَبْرُهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ (احمد)  

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் சஃதுப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்த போது நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வெளியேறினோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜனாஸா தொழ வைத்தார்கள்.பிறகு அவரை கப்ரில் வைத்தவுடன் நீண்ட நேரம் தஸ்பீஹ் ஓதினார்கள். நாங்களும் தஸ்பீஹ் ஓதினோம். பிறகு தக்பீர் சொன்னார்கள். நாங்களும் தக்பீர் ஓதினோம். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறு ஏன் செய்தீர்கள் என்று கேட்கப் பட்டபோது இந்த நல்ல மனிதரை கப்ரு நெருக்கியது. நாம் தஸ்பீஹ் செய்ததன் மூலம் அல்லாஹ் அவருக்கு விடுதலை கொடுத்தான் என்றார்கள்.  படிப்பினை- இறந்தவருக்காக தஸ்பீஹ் ஓதுவது கூடும் என்றால் குர்ஆன் ஓதுவதும் கூடும்  என இதிலிருந்து விளங்க முடியும்.

ஈஸால் தவாப் செய்த பிறகு தனியாக துஆ அவசியமா?

 நன்மையை சாட்டுவது இரண்டு வகையாகும்.ஒன்று ஒருவர் ஒரு அமலை தனக்காக செய்து பிறகு அதன் நன்மையை மற்றவருக்கு சேர்த்து வைப்பது இந்த வகைக்கு கட்டாயம் துஆ செய்ய வேண்டும். அதாவது இறந்தவருக்கு சேர்த்து வைக்கும் வகையில் துஆச் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒரு அமலை பிறருக்கு சேர்ப்பதற்காக வேண்டியே செய்வது. இதற்காக தனியாக துஆச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக ஒருவர் குர்ஆனை தனக்காக ஓதியிருப்பார். பிறகு அதை இறந்தவர்களில் யாருக்கேனும் சேர்த்து வைக்க நினைத்தால் யாஅல்லாஹ் இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வை என துஆ செய்வது கட்டாயம். ஆனால் ஓதும்போதே அவருக்காக ஓதியிருந்தால் அதற்காக தனியாக துஆ ஓதுவது கட்டாயமில்லை. ஆனால் துஆ ஓதினால் நல்லது தான்.                           

இறந்து விட்ட பெற்றோரின் நண்பர்களுக்கு உபகாரம் செய்வதும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் கட்டுப்படும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « أَبَرُّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أَبِيهِ ». (مسلم

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمُ الأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ « إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ».(مسلم 

இப்னு உமர் ரழி அவர்கள் மக்கா செல்லும் வழியில் ஒரு கிராமவாசியை சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவரை தனது வாகனத்தின் மீது ஏற்றி  தன்னுடைய தலைப்பாகையை அவருக்கு அணிவித்து கண்ணியப் படுத்தினார்கள். அப்போது நாங்கள் இப்னு உமர் ரழி அவர்களிடம்  இந்த கிராமவாசிகளுக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை. இதை விடக் குறைந்த மரியாதையே போதுமல்லவா என்று கேட்க, அதற்கு இப்னு உமர் ரழி அவர்கள் கூறினார்கள் இவர் எனது தந்தைக்கு மிகவும் பிரியமானவர் என்பதால் இவரை நான் கண்ணியப் படுத்துகிறேன் என்றார்கள் 



பராஅத் இரவில் தவ்பா முக்கியமானது. ஆனால்  அதற்கு முன்பு கீழ்காணும் பாவங்களை விட வேண்டும்

عن معاذ بن جبل رض عن النبي صلى الله عليه وسلم قال:يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن (صحيح ابن حبان) -وزاد البيهقي "ولا إلى قاطع رحم ولا مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر"

   مشاحن: عَنْ أَنَسِ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ (بخاري)

குரோதம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அடுத்தவரின் குறையை துருவி ஆராயாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களான சகோதர ர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدْ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ باءَ بِالْإِثْمِ زَادَ أَحْمَدُ وَخَرَجَ الْمُسَلِّمُ مِنْ الْهِجْرَةِ (ابوداود) 

ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது. மூன்று நாட்கள் கடந்து விட்டால் அவரை வலியச் சென்று சந்தித்து சலாம் சொல்லட்டும். அவர் பதில் ஸலாம் சொன்னால் நன்மையில் இருவரும் சம மாகி விடுவர். அவ்வாறு அவர் பதில் ஸலாம் சொல்லா விட்டால் அவர் மீது மட்டும் தான் பாவம் நிகழும். இவர் பாவத்தை விட்டும் நீங்கி விடுவார்.                  

وفي رواية بن أبي شيبة وإن هو سلم فلم يرد عليه ولم يقبل سلامه رد عليه الملك ورد على ذلك الشيطان (مصنف بن أبي شيبة) 

மற்றொரு அறிவிப்பில் பதில் ஸலாம் சொல்லா விட்டால் ஸலாம் சொன்னவருக்கு மலக்கு  பதில் கூறுகிறார் என்று உள்ளது.  

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَرْتَفِعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ (ابن ماجة)

மூன்று பேரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு ஜான் கூட  மேலே ஏறாது 1. மக்கள் வெறுக்கும் நிலையில் இமாமத் செய்பவர். 2.. கணவன் வெறுக்கும் நிலையில் இரவு முழுவதும் யாருக்கு கழிந்த தோ அத்தகைய பெண்.  3. பகைமை உள்ள இரு  சகோதரர்கள்.

தாம் செய்த பாவங்களுக்காக இந்த இரவில் அதிகம் அழுது  துஆச் செய்ய  வேண்டும்

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا –(القرطبي)

நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.                                             

وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا  إن الله تعالى يقول في سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي) 

 ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.                                                                 

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابوداود 

யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான் 

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள் 


புதன், 21 ஜனவரி, 2026

குடியரசு ஆட்சிக்கு உதாரணம் நம் முன்னோர்கள்

 23-01-2026

شعبان  -  3 بسم الله الرحمن الرحيم  

  குடியரசு ஆட்சிக்கு உதாரணம் நம் முன்னோர்கள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) المائدة

 குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி. அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். குடியரசு தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்பதைப் பற்றிப் பேசும் முன்பு உண்மையான குடியரசு ஆட்சியை அதாவது மக்களுக்காக, மக்களுடைய மக்கள் விரும்பும் ஆட்சியைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள் தான் என்பதற்கான சில சம்பவங்களைப் பேசுவது காலத்தின் கட்டாயமாகும்

உண்மையான மக்களாட்சி என்பது அன்று நம் முன்னோர்கள் ஆட்சி செய்த முறையாகும்

لما رجع عمر رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالت: واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل.  (: سمط النجوم العوالي في أنباء الأوائل والتوالي

  கலீஃபா உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில்) ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, (தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களை விட்டும் பிரிந்து தமது ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்களை யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தார். பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?   நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி. அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள். அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்” என்றார்கள்.

அதற்கு அம்மூதாட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றார் அம்மூதாட்டி. உங்கள் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என கலீஃபா உமர்(ரலி) கேட்டபோது, அம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சிக்குப் பொறுப்பேற்றிருக்கிற ஒருவர் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன?” என்று கேட்டார். இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு  ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில்  உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட” என்றார்கள். அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப் படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார். அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்றுகூறி -ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள். 

  அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள். அதைச் செவியுற்ற அந்த மூதாட்டி, இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம் “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி”  அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது “இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்றார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை  கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு

عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان)

அதிகாரிகளை பல பகுதிகளுக்கும் அனுப்பும்போது “நீங்கள் ஒருபோதும் உயர்தர வாகனங்களைப் பயன் படுத்தக் கூடாது. உயர்தர உணவுகளை உட்கொள்ளக்கூடாது. உயர்தர ஆடைகள் உடுத்தக்கூடாது. மக்கள் உங்களைத் தேடி வரும்போது உங்கள் கதவுகள் ஒருபோதும் தாளிடப் படக்கூடாது. இச்சட்டத்தை நீங்கள் மீறினால் தண்டனை உங்களைத் தேடி வரும் என்று எச்சரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள்.                                                                 

உண்மையான குடியரசு ஆட்சியை நடத்தியவர்கள் சிறந்த முஃமினாகவும் இருந்து விட்டால் அவர் கேட்கும் துஆக்களை அல்லாஹ் உடனே ஒப்புக் கொள்வான்

عن شداد بن أوس عن كعب قال : كان في بني إسرائيل ملك إذا ذكرناه ذكرنا عمر و إذا ذكرنا عمر ذكرناه و كان إلى جنبه نبي يوحي إليه فأوحى الله إلى النبي أن يقول له : اعهد عهدك و اكتب إلي وصيتك فإنك ميت إلى ثلاثة أيام فأخبره النبي بذلك فلما كان اليوم الثالث وقع بين الجدار و السرير ثم جاء إلى ربه فقال : اللهم إن كنت تعلم أني كنت أعدل في الحكم و إذا اختلفت الأمور اتبعت هداك و كنت و كنت فزد في عمري حتى يكبر طفلي و تربو أمتي فأوحى الله إلى النبي أنه قال قال كذا و كذا ـ و قد صدق ـ و قد زدته في عمره خمس عشرة سنة ففي ذلك ما يكبر طفله و تربو أمته فلما طعن عمر قال كعب : لئن سأل عمر ربه ليبقينه الله فأخبر بذلك عمر فقال : اللهم اقبضني إليك غير عاجز و لا ملوم  (تاريخ الخلفاء

  பனீ இஸ்ராயீலில் ஒரு நல்ல அரசர் இருந்தார். அவரை நினைவு கூறும்போதெல்லாம் நாங்கள் உமர் ரழி அவர்களை நினைவு கூறுவோம். உமர் ரழி அவர்களை நினைவு கூறும்போதெல்லாம் அவரை நினைவு கூறுவோம். அவருக்கு நெருக்கமானவராக ஒரு நபி இருந்தார். இந்நிலையில் அவருக்கு மரணம் நெருங்கிய போது அல்லாஹ் அந்த நபியிடம் சொல்லி அதை உணர்த்தும்படி கூறினான். தனக்கு மவத் வருவதை முன்பே அறிந்த அவர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் எவ்வளவு நீதமாக இருந்தேன் என்று நீ அறிவாய். எவ்வளவு சோதனைகள் வந்த போதும் உனது நேர்வழியை நான் பின்பற்றினேன். எனவே என் பிள்ளைகள் பெரிதாகும் வரை, என் நாட்டு மக்களுக்கு இன்னும் நல்ல முன்னேற்றம் வரும் வரை என் ஆயுளை அதிகமாக்கு என துஆச் செய்தார். அவரது துஆவை  அல்லாஹ் ஏற்று அந்த நபியிடம் அவர் கூறுவது உண்மை தான் எனவே அவரது ஆயுளை பதினைந்து வருடங்கள் அதிகமாக்கி விட்டேன் என வஹீ அறிவித்தான். இச்செய்தியை கஃப் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களின் மரணப் போராட்டத்தின் போது நினைவு படுத்தி, அந்த அரசர் கேட்டதைப் போன்று உமர் ரழி அவர்களும் துஆ கேட்டால் அல்லாஹ் ஆயுளை அதிகப்படுத்துவான் என்று கூறினார்கள். இதைக் கேள்விப்பட்ட உமர் ரழி அவர்கள் யாஅல்லாஹ் என்னை உன்னிடமே கைப்பற்றிக் கொள் என்றார்கள்.                                                                

இலஞ்சப் பணத்தில்  சுகமாக வாழும் ஆட்சியாளர்களுக்கு முற்றிலும் மாற்றமாக உமர்  ரழி அவர்களின் ஆட்சி

فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال: وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين لامرأة عمر -رضي الله عنه  فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار".

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமரும் மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்த்தார்கள். உடனே, தன் மனைவியிடம்,  இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே கேட்கிறார்கள்.இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என்று தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” என கோபமாகக் கூறினார்கள். மேலும் அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்” என கூறினார்கள்.

 பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பின்பு,  ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை  முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும்,  இன்னொன்றை  அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். பைஹகீ


சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் போட்டா போட்டி

عن أبى صالح الغفارى : أن عمر بن الخطاب كان يتعاهد عجوزا كبيرة عمياء فى بعض حواشى المدينة من الليل فيستسقى لها ويقوم بأمرها فكان إذا جاءها وجد غيره قد سبقه إليها فأصلح ما أرادت فجاءها غير مرة فلا يسبق إليها فرصده عمر فإذا هو بأبى بكر الصديق الذى يأتيها وهو خليفة فقال عمر أنت لعمرى [كنز العمال] (لعمري) هذه من الصيغ المؤكدة، وليست قسماً، 

 மதீனா எல்லையில் ஒரு மூதாட்டி இருந்தார்.அவருக்கு ஏதேனும் உதவி செய்ய உமர் ரழி வரும்போதெல்லாம் தனக்கு முன்பே வேறொரு நபர் முந்திக் கொள்வதை உமர் ரழி அவர்கள் தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு, கவலையுடன் திரும்புவார்கள். ஒருநாள் அந்த மனிதர் யாரென அறிய முற்படும் போது, அது கலீஃபா அபூபக்கர் ரழி எனத் தெரிய வந்தது. அப்போது உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி அவர்களை நோக்கி எப்பொழுதுமே நீங்கள் நீங்கள் தான். உங்களை முந்த முடியாது என்றார்கள்.                                            

தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழி எடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை அங்கிருந்து நகராமல் இருந்ததும்..

عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة  وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال)

 கருத்து- மக்களின் குறைகளை நேரடியாகத் தெரிந்து கொண்டு களைய, கலீஃபா உமர் (ரலி), இரவில் நகர் வலம் செல்வது வழக்கம். ஒருநாள் இரவு அவ்வாறு நகர் வலம் வந்த போது ஒரு பெண் பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொண்டிருந்தார். அவரிடம் உமர் ரழி அவர்கள் ஏன் குழந்தைகள் அழுகிறார்கள் என்று காரணம் கேட்க, பசியால் அழுகிறார்கள் என்று அப்பெண் பதில் கூறினார். இந்தச் சட்டியில் உள்ளது என்ன என்று உமர் ரழி அவர்கள் கேட்ட போது இதில் வெறும் தண்ணீர் மட்டும் உள்ளது. சமைக்க மாவு எதுவும் இல்லை. ஆனாலும் இதில் ஏதேனும் இருப்பதாக எண்ணி ஆறுதல் அடைவார்கள் அம்மா பசியைப் போக்கத்தான் அடுப்பில் சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்'' என எண்ணியவர்களாக பசி மயக்கத்தில் உறங்கிப் போய் விடுவார்கள். என்று அப்பெண் பதில் கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் அழுதார்கள். பின்பு சதகா தானியங்களின் கிடங்குக்குச் சென்று ஒரு மூட்டையை எடுத்து அதில் அத்தியாவசியப் பொருட்களை வைத்து அதை தன்னுடைய முதுகில் ஏற்றி விடும்படி தனது உதவியாளர் அஸ்லம் ரழி அவர்களிடம் உமர் ரழி அவர்கள் கூற, அதற்கு அந்த உதவியாளர் நான் சுமந்து வருகிறேன் என்றார்கள். ஆனால் உமர் ரழி அவர்கள் அதை மறுத்து நான் தான் இதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவேன் எனவே நானே சுமக்கிறேன் அப்பெண்ணின் வீடு வரை சுமந்து வந்தார்கள். பிறகு தானே அடுப்புப் பற்ற வைத்து அதைச் சமைத்தார்கள். அவர்களின் தாடியின் நடுவே புகையை நான் கண்டேன் என அஸ்லம் ரழி அவர்கள் கூறினார்கள். இவ்வாறாக அந்தக் குழந்தைகளின் பசியைப் போக்கி அக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதைப் பார்த்த பிறகே கலீஃபா உமர்(ரலி). அங்கிருந்து புறப்பட்டார்கள். 

عن أنس بن مالك بينما أمير المؤمنين عمر يعس ذات ليلة إذ مر بأعرابي جالس بفناء خيمة فجلس إليه يحدثه ويسأله ويقول له: ما أقدمك هذه البلاد؟ فبينما هو كذلك إذ سمع أنيناً من الخيمة فقال: من هذا الذي أسمع أنينه؟ فقال: أمر ليس من شأنك، امرأة تمخض، فرجع عمر إلى منزله وقال: يا أم كلثوم شدي عليك ثيابك واتبعيني، قال: ثم انطلق حتى انتهى إلى الرجل فقال له: هل لك أن تأذن لهذه المرأة أن تدخل عليها فتؤنسها، فأذن لها فدخلت فلم يلبث أن قالت يا أمير المؤمنين بشر صاحبك بغلام، فلما سمع قولها أمير المؤمنين وثب من حينه فجلس بين يديه وجعل يعتذر إليه فقال: لا عليك!! إذا أصبحت فائتنا فلما أصبح أتاه ففرض لابنه في الذرية وأعطاه(تاريخ الاسلام

 கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை நகர் வலம் வந்த போது ஒரு கூடாரத்தின் வெளியே கிராமவாசி  கவலையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது கூடாரத்தின் உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அதைக் கேட்ட உமர் ரழி எதற்காக அப்பெண் அழுகிறார் என்று கேட்க, அதைக் கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என் மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்றார். அந்த நபருக்கு தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று தெரியாது. உமர் ரழி அவர்களும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உடனே உமர் ரழி அவர்கள் தன் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் பிரசவம் பார்ப்பதற்குரிய ஆடையை உடுத்திக் கொண்டு என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த கிராமவாசியிடம் உங்கள் மனைவிக்கு இவர் பிரசவம் பார்க்க அனுமதி தருகிறீர்களா என்று கேட்டார்கள். சரி என்று அவர் சந்தோஷத்துடன் கூறினார். உள்ளே சென்ற சற்று நேரத்தில் உமர் ரழி அவர்களின் மனைவி சப்தமாக அமீர் முஃமினீன் அவர்களே உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூற, அது கேட்ட அந்த கிராமவாசி அப்போது தான் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று அறிந்து அவர்களிடம் கடுமையாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார். அப்போது உமர் ரழி அவர்கள் பரவாயில்லை. நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் என்றார்கள்.காலையில் அவர் வந்த போது அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்தனுப்பினார்கள் 

أن الأحنف بن قيس قدم على عمر في وفد من العراق قدموا عليه في يوم صائف شديد الحر وهو متحجز بعباءة يهنأ بعيرا من إبل الصدقة فقال: يا أحنف ضع ثيابك وهلم وأعن أمير المؤمنين على هذا البعير فإنه من إبل الصدقة فيه حق اليتيم والأرملة والمسكين فقال رجل يغفر الله لك يا أمير المؤمنين فهلا تأمر عبدا من عبيد الصدقة فيكفيك هذا؟ فقال عمر: يا ابن فلانة وأي عبد هو أعبد مني ومن الأحنف بن قيس هذا إنه من ولي أمر المسلمين فهو عبد للمسلمين يجب عليه لهم ما يجب على العبد لسيده من النصيحة وأداء الأمانة.

அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் ஈராக்கில் இருந்து மதீனா வந்திருந்த போது உமர் ரழி அவர்கள் சதகாவின் ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அஹ்னஃப் இப்னு கைஸைப் பார்த்து அஹ்னஃபே உன்னுடைய ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு இந்த வேலையில் என்னோடு உதவி செய் என்று கூற அவர்களும் அதற்கு உதவி செய்தார்கள் இருந்தாலும் அந்த அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே நீங்கள் இதற்கெல்லாம் அடிமைகளை வைத்து வேலை வாங்க க் கூடாதா என்று கேட்க, அதற்கு உமர் ரழி அவர்கள் என்னை விட அடிமை வேறு யார் இருக்கிறார் என்று கூறினார்கள் 

நீதமான நடந்து கொள்வதில்  இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இணையாக யாரும் இல்லை

وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟  (دروس التاريخ الاسلامي)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் எகிப்தின் ஆளுனராக இருந்த அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மதத்தவரை அடித்து விட்டார். அடி வாங்கிய அவர் நேராக அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூற சொல்லாமல் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து புகார் கூறினார். உடனே உமர் ரழியல்லாஹு அன்ஹு அந்த மகனையும் அழைத்துக் கொண்டு ஆளுனரையும் உடன் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடி வாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார். பிறகு ஆளுனரைக் காட்டி அவரையும் அடி என்று உமர்  ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய போது ஆளுனரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுனர் அவர்கள் என் மகன் தானே உன்னை அடித்தான் நான் அடிக்கவில்லையே என்று கூற, அவர் சாட்டையைக் கீழே போட்டார். ஆளுனரை அடிக்கவில்லை. பிறகு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆளுனரையும் அவரது மகனையும் நோக்கி இவர்களின் தாய்மார்கள் இவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என்று கூறி எச்சரித்தார்கள்.                      

குடியரசு தினம் கொண்டாடப் படுவதன் நோக்கம்

   1947- ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஒரு நாட்டை ஆளுவதற்கான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் படுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஆகும். எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26ல் நடை முறைக்கு வந்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் தலைவர்களும் மற்ற சகோதர சமயத் தலைவர்களும் இணைந்து உருவாக்கியது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால் அதை அடியோடு மாற்றி விடலாம் என இன்றைய பாசிச அரசு முயல்கிறது.                       

இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் ஷரத்துக்களில் 

நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள்

இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. அவற்றின் மீது கை வைப்பது இந்திய அரசியல் சாசனத்தின் சுவாசத்தையே முற்றாக நிறுத்தி விடுவதாகும். 

25-ம் ஷரத்து- இந்தியர் எவரும் அவர் விரும்பிய மதத்தில் வாழவும், அதைப் பரப்பவும் அவருக்கு உரிமை உண்டு. 

ஷரத்து 26- சமயம் சார்ந்த நிறுவனங்களை, அறநிலையங்களை அமைக்க, நிர்வகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

ஷரத்து 27- மதம் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு ஆகும் செலவுக்கு வரி செலுத்துமாறு கட்டாயப் படுத்தக்கூடாது

ஷரத்து 29-A -  இந்தியக் குடிமக்கள் தாங்கள் பேசும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. 

ஷரத்து- 30- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை, உருவாக்க, நிர்வகிக்க உரிமை உண்டு.

ஷரத்து 32- மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம். 

 மேற்படி  உரிமைகள் அனைத்தையும் அடியோடு மாற்ற நினைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான  பாசிச மத்திய அரசை, நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்


ஓட்டுப் போட்டு ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அமைப்பை குஃப்ர் என்று சிலர் கூறி வருகின்றனர்.  

மக்களாட்சித் தத்துவம் என்பது நபித்தோழர்களின் வழிமுறை தான். இதை குஃப்ரு என்று கூறினால் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலான மக்களை காஃபிர்கள் என்று கூறுவதாக அமைந்து விடும்.

இமாமை தேர்ந்தெடுப்பதும் மக்கள் தேர்வு தான்.  மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது.

عن بن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ثلاثة لا يقبل الله لهم صلاة: إمام قوم وهم له كارهون وامرأة باتت وزوجها عليها غضبان وأخوان متصارمان" (ابن حبان




வியாழன், 15 ஜனவரி, 2026

மிஃராஜ் படிப்பினைகள்

 16-01-2026

رجب  -  26 بسم الله الرحمن الرحيم  

  மிஃராஜ் படிப்பினைகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

மிஃராஜ்  நடைபெறக் காரணம்

அபூதாலிப், கதீஜா ரழி ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்கள் மூலம் மிகவும் கவலையடைந்த  நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக இந்த நிகழ்வை அல்லாஹ் நடத்தினான்.

وبعد وفاة أبي طالب بنحو شهرين أو بثلاثة أيام ـ على اختلاف القولين ـ توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها وكانت وفاتها في شهر رمضان في السنة العاشرة من النبوة، ولها خمس وستون سنة على أشهر الأقوال، ورسول الله صلى الله عليه وسلم إذ ذاك في الخمسين من عمره .]الرحيق المختوم[

முக்கியமான பயணத்திற்கு நபி (ஸல்) அவர்களை தயார் படுத்த நடத்தப்பட்ட ஆன்மீக ஆபரேஷன்

عن أَنَس بْن مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْه  يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاء (بخاري 1636

  நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்.                                               

   படிப்பினை- உலகில் எத்தனையோ ஆபரேஷன் நடைபெறும். மயக்க மருந்து செலுத்திய பின் உணவர்வற்ற நிலை இருக்கும்போது நடைபெறும். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு நடைபெற்ற ஆபரேஷன் முற்றிலும் உணர்வுடன் இருந்த நிலையில் நடைபெற்றது. மலக்குகள் செய்வதை நபி ஸல் அவர்கள் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.                                            

நபி ஸல் அவர்களுக்கு நடந்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில்  தற்காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்

கோமா நிலையில் இருந்து விட்டு பிறகு மீண்டும் நினைவு திரும்பியவர்களைப் பற்றிய ஒரு  பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. பெரும்பாலும் கோமா நிலையில் இருந்தவர்கள் நினைவு திரும்பாமலேயே மரணிப்பது தான் பெரும்பாலும் நடைபெறும். ஆனால் வழமைக்கு மாற்றமாக யாருக்கு நினைவு திரும்பி மீண்டும் வாழ்ந்தார்களோ அவர்களைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப் பட்ட ஆய்வில் சிறந்த ஒரு முஃமினான முதியவரும் அவ்வாறு கோமாவில் இருந்த பிறகு மீண்டும் நினைவு திரும்பி மீண்டும் வாழ்ந்தவராக இருந்தார். அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. நீங்கள் கோமாவில் இருந்த போது உங்களைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளில் ஏதேனும் நினைவில் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு அப்படி எதுவும் நினைவில் இல்லை. ஆனால் கோமாவில் இருக்கும்போது எனக்கு அருகில் இருந்த படி யாரேனும் குர்ஆன் ஓதினால் அது மட்டும் என்னால் உணர முடியும் என்று கூறினார். அந்த அளவுக்கு குர்ஆனோடு தொடர்பு உள்ளவராக  இருந்தார் என்பதை உணர முடிகிறது.                                                

 இதுபோன்றே மற்றொரு முஃமினான முதியவரைப் பற்றிய உண்மைச் சம்பவம். அவருக்கு முக்கியமான ஆபரேஷன் நடைபெறப் போகிறது. அந்த ஆபரேஷன் நடைபெறும் முன்பு  மருத்துவர்களிடம் இந்த ஆபரேஷன் நடைபெற எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். அதற்கு மருத்துவர்கள்  ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஆகலாம் என்று கூற, அவர் அழுக ஆரம்பித்தார். ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது, நான் அதிகமாக குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பேன். எனக்கு ஆறு மணி நேரம் நீங்கள் ஆபரேஷன் நடத்தினால் அவ்வளவு நேரம் என்னால் குர்ஆன் ஓத முடியாதா என்று கவலையுடன் கேட்டார். அவரிடம் மருத்துவர்கள் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் குர்ஆனை ஆசை தீர ஓதிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாங்கள் ஆபரேஷன்  நடத்துகிறோம் என்றார்கள். அவ்வாறே அவர் நீண்ட நேரம் குர்ஆன் ஓதினார். அதற்குப் பிறகு அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு ஆபரேஷன் நடத்தப்பட்டது. ஆபரேஷன்  முடிந்த பிறகு மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் கூறினார்கள். நாங்கள் எத்தனோ ஆபரேஷன்களை நடத்தியுள்ளோம். ஆனால் இப்படி ஒரு ஆபரேஷனை நாங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு நாங்கள் மயக்க மருந்து செலுத்தி விட்டோம். ஆபரேஷன் முடியும் வரை அவர் உணர்வற்ற நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய உதடுகள் மட்டும் குர்ஆனை உச்சரித்துக் கொண்டே  இருந்தது.                 

நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் மொத்தம் மூன்று தடவைகள் ஆன்மீக ஆபரேஷன் நடந்துள்ளது

நபியாக ஆக்கப் படும் முன்பும் நடந்ததாத அபூநயீம் ரஹ் அவர்கள் தம் தலாஇல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

أن جبريل وميكائيل عليهما السلام شقا صدره وغسلاه ثم قال اقرأ باسم ربك  (تفسير  روح المعاني

சிறு வயதில் ஹலீமா ரழி அவர்களிடம் வளரும்போது இந்த நிகழ்வு நடந்தது

عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ (مسلم

கருத்து- அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள். சிறு வயதில் நபி ஸல் அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஜிப்ரயீல் அலை அங்கு வந்து நபி ஸல் அவர்களைப் பிடித்து நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சதைத் துண்டை வெளியே எடுத்தார்கள். பின்பு இது ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கும் ஷைத்தானின் பங்காகும் என்று கூறி அதை நீக்கி விட்டு ஒரு தங்கத் தட்டில் இருதயத்தை வைத்து, ஜம்ஜம் நீரால் கழுவி பின்பு இருதயத்தை இருந்தவாறே வைத்து விட்டார்கள். நபி ஸல் அவர்களின் கண் பார்க்கவே இச்சம்பவம் நடந்தது. வலி எதுவுமே இல்லா விட்டாலும் ஒருவித பயம் நபி ஸல் அவர்களை ஆட்கொண்டது. இச்சம்பவம் நடைபெற ஆரம்பிக்கும்போதே அன்னை ஹலீமா ரழி அவர்களின் குழந்தைகள் ஓடிச் சென்று தன் தாயாரிடம் முஹம்மதை யாரோ கொன்று விட்டார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்தார்கள். அழுது கொண்டே அவர்கள் வந்து பார்த்த போது நபி ஸல் அவர்கள் நல்ல படியாக ஆபரேஷன் முடிந்து பயந்த படி நின்று கொண்டிருந்தார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகு தான் இனி நம்மிடம் இந்தக் குழந்தை இருந்தால் ஏதேனும் இதுபோல் நடைபெறலாம் என்று பயந்து நபி ஸல் அவர்களின் நான்காம் வயதில் தாயிடமே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.        

பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் நபி (ஸல்) அவர்கள் பார்த்த காட்சிகளும் படிப்பினைகளும்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات فرعون) وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه فَقَالَتْ بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ أَوَلَك رَبّ غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه . قَالَ فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك اللَّه عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ " قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن كثير)

 மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச் செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும். இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர். ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக் கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால் நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக் கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன் உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின் உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப் பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும் அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில் அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய குழந்தைகளில் இதுவும் ஒன்று. சுமார் பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக சில தஃப்ஸீர்களில் உள்ளது. 

                                

இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன

فقال لها : ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها الحيات والعقارب وقال لها : اكفري بالله وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ فأتى بابنتها فلما اضطجعت على صدرها وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان ابنتها فتكلمت وهي من الأربعة الذين تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه لا تجزعي فإن الله قد بنى لك بيتاً في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين في طلبه فانتهى إليه الرجلان , وهو يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما رأوا ذلك انصرفوا فقال , حزقيل : اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم يظهر عليّ أحد فأيما هذين الرجلين كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله وأيما هذين الرجلين أظهر عليّ فعجل عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى النار فانصرف الرجلان إلى فرعون فأما أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون بالقصة على رؤوس الملأ فقال له فرعون وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن

சில அறிவிப்புகளில் அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும் அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன் என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை செய்தாலும் நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில் போடப்பட்டது. மேலும் இவர்களைக் கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து அவரைக் கொண்டு வர இருவரை ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு அருகில் நெருங்க முயற்சித்த போது திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும் என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ் இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா.. யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார். இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன் அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம் கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக் காட்சியையும் நான் பார்க்கவில்லை என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக் கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்-          

 தஃப்ஸீர் காஜின்               

படிப்பினை- அல்லாஹ் முஃமினைக் காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்

மாஷிதா அம்மையாரின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்த ஆசியா அம்மையார் இஸ்லாத்தை ஏற்றார்கள்

 وذلك كله بعين امرأة فرعون وسمعت كلام روح ابنها الأكبر ، ثم الأصغر ، فآمنت امرأة فرعون ، وقبض روح امرأة خازن فرعون ، وكشف الغطاء عن ثوابها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأته فازدادت إيمانا ويقينا وتصديقا ، واطلع فرعون على إيمانها ، فخرج إلى الملأ ، فقال لهم : ما تعلمون من آسية بنت مزاحم ؟ فأثنوا عليها ، فقال لهم : وإنها تعبد ربا غيري ، فقالوا له : اقتلها ، فأوتد لها أوتادا ، وشد يديها ورجليها فدعت آسية ربها فقالت : ( رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين (11) ) فكشف لها الغطاء فنظرت إلى بيتها في الجنة ووافق ذلك أن حضرها فرعون وضحكت حين رأت بيتها في الجنة ، فقال فرعون : ألا تعجبون من جنونها ، إنا نعذبها وهي تضحك فقبض روحها  (تفسير مجاهد)

   மாஷிதா அம்மையாருக்கு ஃபிர்அவ்ன் கொடுமைகளை ஆசியா அம்மையார் பார்த்து வேதனைப்பட்டார்கள். மாஷிதா அம்மையாரின் ஒவ்வொரு குழந்தைகளாக ஃபிர்அவ்ன் கொல்லும் நேரத்தில் அவர்களின் ஆன்மா மேலேறிச் செல்லும்போது தனது தாய்க்கு சுபச்செய்தி சொல்லும் காட்சியை ஆசியா அம்மையார் பார்த்தார்கள். இறுதியாக மாஷிதா அவர்களையும்  ஃபிர்அவ்ன் கொன்றபோது அல்லாஹ் வானத்தின் திரைகளை விலக்கி ஆசியா அம்மையாரின் கண்களுக்கு இறந்த மாஷிதா அவர்களின் அந்தஸ்தையும் சிறப்பையும் அறிய வைத்தான். இது அவர்களின் ஈமானை இன்னும் அதிகமாக்கியது. இறுதியில் தன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்ற விபரம் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வந்த போது ஃபிர்அவ்ன் தனது சபையினரைக் கூட்டி, என் மனைவி ஆசியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான்.     

 

   அவர்கள் ஆரம்பத்தில் புகழ்ந்து பேசினார்கள். பின்பு ஃபிர்அவ்ன் கூறினான் அவள் என் அல்லாத வேறு கடவுளை வணங்குகிறாள் என்றவுடன் அனைவரும் அப்படியே அந்தர் பல்டி அடித்து அவளை உடனே கொல்ல வேண்டும் என்று கொக்கரித்தனர். இறுதியில் தன் மனைவியையே கொல்லும்படு ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போடவிருக்கும் நிலையில் அந்த அம்மையார் மேற்படி துஆவைச் செய்தார்கள். அல்லாஹ் அதை அப்படியே ஏற்றான். அவர்கள் கல்லை தூக்கிப் போடுவதற்கு சில நொடிகள் முன்பே உயிர் கைப்பற்றப்பட்டது. கடைசி நேரத்தில் சுவனத்தைப் பார்த்தவர்களாக சிரித்தபடி இருக்க வெறும் உடம்பின் மீது கல்லைப் போட்டார்கள். அங்கு வந்த ஃபிர்அவ்ன் பைத்தியக்காரி இவளை நான் கொல்லுகிறேன். இவளோ சிரிக்கிறாள்  என்றானாம்.   

ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்ன் திருமணம் செய்தது  பற்றிய விபரம்

ஆசியா அம்மையார் இஸ்லாத்திற்கு வரும் முன்பே நல்ல பெண்ணாக இருந்தார்கள். அழகாக இருந்ததால் அவரது பெற்றோரிடம் ஃபிர்அவ்ன் பெண் கேட்ட போது இந்த அம்மையாருக்கோ பெற்றோருக்கோ துளியளவும் விருப்பம் இல்லை. ஃபிர்அவ்னின் அடக்கு முறைக்கு பயந்து திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும் ஃபிர்அவ்ன் அந்த அம்மையாரை நெருங்கும்போதெல்லாம் அவனின் ஆணுறுப்பு சுருங்கி ஆண்மையற்றவனாக ஆகி விடுவான். இறுதி வரை அந்த அம்மையாரை அவனால் நெருங்க முடியவில்லை என சில தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது.                                            

மூதாதையர்களின் நல்வாழ்த்தைப் பெற்ற பிறகே விண்ணுலகப் பயணம் நடந்தேறியது. 

முக்கியமான பயணம்  புறப்படும்போது நல்லோர்களின் ஆசியைப் பெறவேண்டும் என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது 

நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது

 எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்.

காஃபிர்கள் மிஃராஜை  பொய்ப்படுத்தும் விதமாக பைத்துல் முகத்தஸை நேரில் பார்த்த படி வர்ணிக்கச் சொன்ன போது நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் பைத்துல் முகத்தஸைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பார்த்த படியே வர்ணித்தார்கள்.                   

 عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ (بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق

அல்லாஹ் பேசுகிறான். என்னுடைய அடியான் ஃபர்ளுகளைக் கொண்டு மட்டும் என்னை நெருங்கி விட முடியாது. உபரியான வணக்கங்கள் மூலமாக அடியான் என்னை நெருங்கும்போது நான் அவனை நேசிக்க ஆரம்பித்து விடுகிறேன். எப்போது என் அடியானை நான் நேசிக்க ஆரம்பித்து விடுவேனோ அவன் கேட்கும் காதாக நான் ஆகி விடுவேன். அவன் பார்க்கும் கண்ணாக நான் ஆகி விடுவேன். அவன் பிடிக்கும் கரங்களாக, நடக்கும் கால்களாக நான்ஆகி விடுவேன்.விளக்கம்-அடியானின் காரியங்கள் அனைத்தையும் நலவுகளாக மாற்றி விடுவேன்.

அபூபக்கர் ரழி அவர்களுக்கு சித்தீக் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்த மிஃராஜ் பயணம்

قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)

தொழுகை கடமையாக்கப்பட்ட நினைவு நாளில் தொழுகையை தவறாமல் கடைபிடிப்பதாக உறுதி கொள்வோம்

(وفي حدبث ليلة الاسراء) فَلَمْ أَزَلْ أَرْجِع بَيْن رَبِّي وَبَيْن مُوسَى وَيَحُطّ عَنِّي خَمْسًا خَمْسًا حَتَّى قَالَ : يَا مُحَمَّد هُنَّ خَمْس صَلَوَات فِي كُلّ يَوْم وَلَيْلَة بِكُلِّ صَلَاة عَشْر فَتِلْكَ خَمْسُونَ صَلَاة وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلهَا كُتِبَتْ لَهُ حَسَنَة فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ عَشْرًا (تفسير ابن كثير)

 عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ (رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال) عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد (كنز العمال) 

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவருடைய ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்

عَنْ بْنِ عُمَرَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري) باب إِثْمِ مَنْ فَاتَتْهُ الْعَصْرُ- كتاب مواقيت الصلاة


புறம் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபியவர்களுக்கு காட்டப்பட்டது

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)

இருப்பதைப் பேசுவது தான் புறம். இல்லாததைப் பேசினால் இட்டுக்கட்டு.

வட்டி உண்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபிகளாருக்கு காட்டப்பட்டது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ- عَنْ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَحَدٌ أَكْثَرَ مِنْ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ

மிஃராஜ் இரவில் பாலை நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுத்ததும் அதன் படிப்பினைகளும்

ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم)  ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)

பால் தூய்மையான பானம். என்பதால் இஸ்லாத்தை பாலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப் படும்போது சுத்தமான பாலாக இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ, காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில் மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும்.  மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.  

  

பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது 

عن ابْن عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ (بخاري)-كتاب التعبير

மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்

فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم) بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ ( المقحمات ) معناه الذنوب العظام الكبائر التي تهلك أصحابها وتوردهم النار وتقحمهم إياها والتقحم الوقوع في المهالك ومعنى الكلام من مات من هذه الأمة غير مشرك بالله غفر له المقحمات ] 

خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ لَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الْآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ فَقَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ (مسلم) (بخاري) باب فَضْلُ الْبَقَرَةِ- فضائل القرآن         (كفتاه ) حفظتاه من الشر ووقتاه من المكروه قيل أغنتاه عن قيام الليل وذلك لما فيهما من معاني الإيمان والإسلام والالتجاء إلى الله عز و جل والاستعانة به والتوكل عليه وطلب المغفرة والرحمة منه ] 

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِىٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ.(مسلم) باب فَضْلِ الْفَاتِحَةِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ وَالْحَثِّ عَلَى قِرَاءَةِ الآيَتَيْنِ مِنْ آخِرِ الْبَقَرَةِ.-كتاب صلاة المسافربن -   عَنْ حُذَيْفَةَ قَالَ فُضِّلَتْ هَذِهِ الْأُمَّةُ عَلَى سَائِرِ الْأُمَمِ بِثَلَاثٍ جُعِلَتْ لَهَا الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَجُعِلَتْ صُفُوفُهَا عَلَى صُفُوفِ الْمَلَائِكَةِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَا وَأُعْطِيتُ هَذِهِ الْآيَاتِ مِنْ آخِرِ الْبَقَرَةِ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ لَمْ يُعْطَهَا نَبِيٌّ قَبْلِي (مسند أحمد)


வியாழன், 8 ஜனவரி, 2026

அதிகாலையின் மகத்துவம்

07-01-2026

رجب  -  19 بسم الله الرحمن الرحيم  

  அதிகாலையின்  பரக்கத்தும் ஃபஜ்ரு தொழுகையும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

அதிகாலை நேரம் என்பது இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் பாக்கியமாகும். அதிகாலை ஃபஜ்ர் தொழுது விட்டு நம்முடைய காரியங்களைத் துவங்கும்போது அதில் நிறைய பரக்கத்துகளை அல்லாஹ் வைத்துள்ளான். ஆனால் குளிர்காலம் வந்தாலே இந்த  பரக்கத்தான நேரத்தை பயன்படுத்துவதிலும் ஃபஜ்ர் தொழுவதிலும்  நம்மில் பலருக்கு மிகப் பெரும் சிரமம் ஏற்பட்டு விடுகிறது.       

வெப்பத்தை தாங்கி கொள்ளும் சில உடல்கள் குளிரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பனிப்பொழிவாலும், குளிராலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று கூறினாலும் அது ஆச்சரியமல்ல. மற்ற நாடுகளை விட இங்கு  குளிர் குறைவாக உள்ளது. எனவே இந்த தலைப்பின் கீழ் அதிகாலையின் மகத்துவம் பற்றியும், சிரமப்பட்டு செய்யும் நற்காரியங்களுக்கு சிறந்த நற்கூலி உண்டு என்பதைப் பற்றியும் குளிர் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள படிப்பினைக்குரிய விஷயங்களைப் பற்றியும் நரகத்தின் கடுமையான குளிரைப் பற்றியும்  இங்கு காண்போம்.                                                          

வெயில் காலமும் குளிர் காலமும் மழைக் காலமும் மாறி மாறி வருவதில் அல்லாஹ் நமக்கு நிறைய படிப்பினைகளை வைத்துள்ளான்.

لِإِيلَافِ قُرَيْشٍ (1) إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3) الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ (4)

وكانت إحدى الرحلتين إلى اليمن في الشتاء، لأنها بلاد حامية، والرحلة الأخرى في الصيف إلى الشام، لأنها بلاد باردة. وعن ابن عباس أيضا قال: كانوا يشتون بمكة لدفئها، ويصيفون بالطائف لهوائها. وهذه من أجل النعم أن يكون للقوم ناحية حر تدفع عنهم برد الشتاء، وناحية برد تدفع عنهم حر الصيف؛ فذكرهم الله تعالى هذه النعمة. (قرطبي)

   குளிர் காலத்திலும் வெயில் காலத்திலும் குரைஷிகளுக்கு இரண்டு விதமான வெவ்வேறு பயணங்கள் இருந்ததை அல்லாஹ் தனது அருட்கொடையாக விபரித்துக் காட்டியுள்ளான். குளிர் காலம் வந்தால் யமன் நாட்டுக்குப் பயணம் செய்வார்கள். அங்கு தங்களது வியாபாரங்களை அமைத்துக் கொள்வார்கள். காரணம் அது வெப்பமாக பூமி என்பதால் குளிருக்கு பொருத்தமாக இருக்கும். வெயில் காலம் வந்தால் ஷாம் தேசத்திற்குப் பயணம் செய்து அங்கு தங்களது வியாபாரங்களை அமைத்துக் கொள்வார்கள். காரணம் அது குளிரான பூமி என்பதால் வெயிலுக்குப்  பொருத்தமாக இருக்கும்.                            

 மற்றொரு அறிவிப்பில் குளிர் காலம் வந்தால் எங்கும் செல்லாமல் மக்காவில் தங்கி விடுவார்கள். காரணம் அது வெப்பமான பூமியாகும். வெயில் காலம் வந்தால் தாயிஃபுக்குச் செல்வார்கள். காரணம் அது குளிரான பூமியாகும். இன்றைக்கும் ஹஜ் உம்ராவுக்குச் செல்லும்போது மதீனாவில் அதிகமான குளிர் இருப்பதைக் காண்கிறோம். மக்காவில் குளிர் குறைவாக இருப்பதைக் காண்கிறோம். ஆக பருவங்கள் மாறி மாறி வருவதில் பல்வேறு விதமான பயணங்களுக்கும் அதனால் ஏற்படும் பலன்களுக்கும் அது காரணமாக அமைகின்றன.               

பனியும் வெயிலும் மாறி மாறி வருவதன் பலன் பற்றி தஃப்ஸீர் RAAZEE –யிலே கூறப்பட்டுள்ள விளக்கம்.

சில கனிகளுக்கு கோடை காலம் தான் சீசன். சில கனிகளுக்கு குளிர் காலம் தான் சீசன். இது அல்லாஹ்வின் ஏற்பாடு

أما ارتفاع الشمس وانحطاطها فقد جعله الله تعالى سبباً لإقامة الفصول الأربعة ففي الشتاء تغور الحرارة في الشجر والنبات فيتولد منه مواد الثمار ويلطف الهواء ويكثر السحاب والمطر ، ويقوي أبدان الحيوانات بسبب احتقان الحرارة الغريزية في البواطن ، وفي الربيع تتحرك الطبائع وتظهر المواد المتولدة في الشتاء فيطلع النبات وينور الشجر ويهيج الحيوان للسفاد ، وفي الصيف يحتدم الهواء فتنضج الثمار  وتنحل فضول الأبدان ، ويجف وجه الأرض ، ويتهيأ للبناء والعمارات ، وفي الخريف يظهر اليبس والبرد فتنتقل الأبدان قليلاً قليلاً إلى الشتاء ، فإنه إن وقع الانتقال دفعة واحدة هلكت الأبدان وفسدت ،(تفسير الرازي)

கடும் குளிர் கலந்த சூறாவளி காற்றின் மூலம் ஆது சமூகத்தினர் அழிக்கப் பட்டார்கள்

قَالَ تَعَالَى " فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا (حم السجدة16) " قَالَ بَعْضهمْ وَهِيَ الشَّدِيدَة الْهُبُوب وَقِيلَ الْبَارِدَة وَقِيلَ هِيَ الَّتِي لَهَا صَوْت وَالْحَقّ أَنَّهَا مُتَّصِفَة بِجَمِيعِ ذَلِكَ فَإِنَّهَا كَانَتْ رِيحًا شَدِيدَة قَوِيَّة لِتَكُونَ عُقُوبَتهمْ مِنْ جِنْس مَا اِغْتَرُّوا بِهِ مِنْ قُوَاهُمْ وَكَانَتْ بَارِدَة شَدِيدَة الْبَرْد جِدًّا كَقَوْلِهِ تَعَالَى "(وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (سورة الحاقة(6)(تفسير ابن كثير)

நரகம் தன்னுடைய பனியை தானே தாங்கிக் கொள்ளாமல் நரகம் வெளிப்படுத்தும் 

சிறு துளி பனியைத் தான் குளிர்காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)

  படிப்பினை - புஹாரீ இமாம் அவர்கள் “நரகம் ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதன் படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்தக் குளிரை தாங்க முடியாமல் காதுகளையும், முகத்தையும் முற்றிலுமாக மறைத்துக் கொண்டு காலை நேரங்களில் நாம் நடமாடுகிறோம் என்றால் அந்த நரகத்தின் கடும் குளிரை விட்டு நம்மை பாதுகாக்க எதை வைத்து மறைத்துக் கொள்ள முடியும். 

நரகத்தின் பனியில் ஒருநாள் வேதனைப்படுவது நரகத்தின் நெருப்பில் ஆயிரம் வருடம் வேதனைப்படுவதை விட பயங்கரமானது

الزمهرير:البرد القاطع وقال مقاتل بن حيان: هو شيء مثل رؤوس الإبر ينزل من السماء في غاية البرد وقال ابن مسعود : هو لون من العذاب وهو البرد الشديد حتى ان أهل النار إذا ألقوا فيه سألوا الله أن يعذبهم بالنارألف سنة أهون عليهم من عذاب الزمهرير يوما واحدا (قرطبي)

நரகவாதிகளில் சிலர் நரகத்தின் பணியில் போடப்படுவார்கள் எப்போது அவர்கள் அல்லாஹ்விடம் அதற்கு பதிலாக நரகத்தின் வெப்பத்தின் ஆயிரம் வருடம் வேண்டுமானாலும் இருந்து  விடுகிறோம் என்பார்கள் அந்த அளவுக்கு நரகத்தின் பனி மிகவும் கடுமையானது ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஊசிகளை உடம்பில் குத்தினால் எப்படி இருக்குமோ அவ்வாறு இருக்கும் என முஆத் இப்னு ஹய்யான் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறியுள்ளார்கள்

உடலுக்கு சிரமம் தரும் குளிர் சுவனத்தில் இருக்காது

وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا -مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا (الدهر13) -فالمعنى لا يرون فيها شمسا كشمس الدنيا ولا قمرا كقمر الدنيا أي إنهم في ضياء مستديم لا ليل فيه ولا نهار لأن ضوء النهار بالشمس وضوء الليل بالقمر وقال ابن عباس رضي الله عنه :بينما أهل الجنة في الجنة إذ رأوا نورا ظنوه شمسا قد أشرقت بذلك النور الجنة فيقولون:قال ربنا:{لا يَرَوْنَ فِيهَا شَمْساً وَلا زَمْهَرِيراً}فما هذا النور؟ فيقول لهم رضوان: ليست هذه شمس ولا قمر ولكن هذه فاطمة وعلي ضحكا، فأشرقت الجنان من نور ضحكهما(قرطبي)وعن النبي صلى الله عليه وسلم أنه قال: "إن هواء الجنة سجسج: لا حر ولا برد" والسجسج: الظل الممتد كما بين طلوع الفجر وطلوع الشمس (قرطبي)

சுவனத்தில் இரவு, பகல் இல்லை எனும்போது குளிர் இருப்பது சாத்தியமில்லை

{لاَ يَرَوْنَ فِيهَا شَمْساً وَلاَ زَمْهَرِيراً }[ الدهر: 13] وقال عليه السلام:لا صباح عند ربك ولا مساء" والبكرة والعشي لا يوجدان إلا عند وجود الصباح والمساء (قرطبي)-فاالجواب لقوله تعالى: وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا (62مريم) أي لهم ما يشتهون من المطاعم والمشارب بكرة وعشيا أي في قدر هذين الوقتين إذ لا بكرة ثم ولا عشيا(قرطبي)ويحتمل ما قيل إنه تعالى جعل لقدر اليوم علامة يعرفون بها مقادير الغداة والعشي الثاني : أن المراد دوام الرزق كما تقول أنا عند فلان صباحاً ومساء وبكرة وعشياً تريد الدوام ولا تقصد الوقتين (تفسير الرازي)

மேற்படி வசனத்தின் விளக்கம்- உலகத்தில் நாம் பார்க்கும் சூரியனும் சந்திரனும் சுவனத்தில் இருக்காது

காரணம் சுவனவாசிகள் உடலுக்கு தீங்கு தரும் வெப்பமோ குளிரோ இல்லாத இதமான நிரந்தரமான நிழலில் எப்போதும் இருப்பார்கள்

    இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் சுவனவாதிகள் சொர்க்கத்தில் இருக்கும் போது ஒரு வெளிச்சத்தை பார்ப்பார்கள் அதை சூரியன் என்று எண்ணும் அளவுக்கு அந்த வெளிச்சத்தால் சுவனமே மிகவும் பிரகாசிக்கும் போது அவர்கள் அல்லாஹ்விடம் ரப்பே சுவனத்தில் சூரியனும் இருக்காது சந்திரனும் இருக்காது என்று உன்னுடைய வேதத்தில் நீ கூறியிருக்கும் போது எப்படி இந்த வெளிச்சம் என்று கேட்பார்கள் அதற்கு சுவனத்தில் பாதுகாவலரான ரிழ்வான் அலைஹிஸ்ஸலாம் கூறுவார்கள் இது சூரியனுடைய வெளிச்சம் கிடையாது சந்திரன் வெளிச்சமும் கிடையாது மாறாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களுடைய சிரிப்பின் வெளிப்பாடு சுவனமே பிரகாசிக்கிறது என்று கூறுவார்.

அவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உணவு உண்டு என்ற வசனத்தில் ஏற்படும் கேள்விக்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது சூரியனும் சந்திரன் இருந்தால்தானே காலை மாலை என்ற விஷயம் உண்டாகும் சுவனத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கும்போது சுவனவாதிகள் தூங்க மாட்டார்கள் என்றிருக்க, காலை மாலை என்றால் அதற்கு என்ன விளக்கம் என்பதற்கு விரிவுரையாளர்கள் பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள் அதாவது உலக வாழ்க்கையில் காலையில் மாலையிலும் உணவு உண்ணுவதைப் போல சுவனத்தில் இரண்டு நேரங்கள் உணவு பரிமாறப்படும். ஆக இரண்டு நேர உணவு என்பதைத்தான் காலை மாலை என்று கூறப்பட்டுள்ளது இரண்டு நேரங்கள் என்பது தான் முக்கியம் காலை மாலை என்பது அல்ல. மற்றொரு அறிவிப்பில் எந்த நேரமும் அவர்களுக்கு உணவு விரும்பினால் கிடைக்கும் என்பதற்கு தான் காலையிலும் மாலையிலும் என்று கூறப்பட்டுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.                                        

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருப்பு குளிராக மாறிய போது அவர்களை துன்புறுத்தக் கூடியதாக இருக்கவில்லை

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ (69)الانبياء - عَنْ عَلِيّ بْن أَبِي طَالِب " قُلْنَا يَا نَار كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيم " قَالَ لَا تَضُرّ بِهِ-وَقَالَ اِبْن عَبَّاس وَأَبُو الْعَالِيَة لَوْلَا أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ قَالَ" وَسَلَامًا " لَآذَى إِبْرَاهِيم بَرْدُهَا (تفسير ابن كثير)

قال أبو العالية: ولو لم يقل {بَرْداً وَسَلاماً} لكان بردها أشد عليه من حرها-وقال علي وابن عباس: لو لم يتبع بردها سلاما لمات إبراهيم من بردها-قال بعض العلماء: جعل الله فيها بردا يرفع حرها، وحرا يرفع بردها، فصارت سلاما عليه (قرطبي)

குளிரின் சிரமத்திலும் அமல்களைத் தொடர வேண்டும். அதனால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்

  ஃபஜ்ரு  தொழ வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருந்தாலும் கடும் பணியின் காரணமாக அவர்களால் ஜமாஅத்துக்கு வர முடியவில்லை, அப்படி இருந்தும் சிலர் காதுகளுக்கும் தலைக்கும் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டு சிரமப்பட்டு வருகின்றனர் அல்லாஹ் அப்படிப்பட்டவர்களுக்கு மேலான நற்கூலியை தருவான் சிரமப்பட்டு செய்யும் அமல்களுக்குஇத்தகைய நற்கூலி உண்டு 


கடும் குளிரிலும் அதிகாலை எழுந்து  உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة

பாவங்களை அழித்து நன்மைகளை அந்தஸ்துகளை உயர்த்தக்கூடிய நற்செயல்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் அறிவியுங்கள் யா ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சிரமமான நேரத்திலும் உழுவை பரிபூரணமாக செய்வது சிரமமான நேரத்திலும் மஸ்ஜிதை நோக்கி நடையை அதிகப்படுத்துவது ஒரு தொழுகைக்கு பிறகு அடுத்த தொழுகையை எதிர்பார்த்து காத்திருப்பது ஆகியவை அந்த நற்செயல்களாகும் என்று கூறினார்கள்.      

إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)

إسباغ الوضوء على المكاره يعني: في السبرات في البرد يُسبغ الإنسان الوضوء مع أنه يكره إيذاءه بهذا الماء البارد ن لكنه يفعله ابتغاء وجه الله هذا من أسباب دخول الجنة كذلك الإنسان عندما يسافر للحج او للجهاد  هذا مكروهاً عنده ، لكنه كما قال تعالى:{وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ (216البقرة (شرح كتاب الرقاق) قيل: ومنها الجد في طلب الماء مع إعوازه وشراءه بالثمن الغالي(مرعاة شرح مشكاة)

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி மேற்படி ஹதீஸிலும் விரிவுரையிலும் உள்ளது. சிரமத்துடன் செய்யும் அமலுக்கு பெரும் நற்கூலி உண்டு என்பதும் கூறப்பட்டுள்ளது  

சிரமங்களைத் தாண்டியே சுவனம் உண்டு. அந்த சிரமங்கள் என்பது கூட பொதுமக்களைக் கவனித்துத் தான். நல்லடியார்களுக்கு அதுவே சுகமானதாக இருக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ (بخاري)كتاب الرقاق ولأن عمل الخير مكروه للنفوس الأمارة بالسوء فتجد كثيراً من الناس عند عمل الخير يُرغم نفسه ويُكرهها على ذلك ولكن هذا يوصله إلى الجنة ومع هذا إذا تجاوز الإنسان هذه المكاره صارت بالنسبة إليه محابّ وصار لا يأنس إلا بهذه الأعمال كما قال النبي عليه الصلاة والسلام:( جُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ(نسائ) وقال بعض السلف: لو يعلم الملوك وأبناء الملوك ما نحن فيه لجالدونا عليه بالسيوف فالإنسان إذا اعتاد فعل الطاعة مع الإخلاص والمتابعة صارت الطاعة أحب شيء إليه ذَلِكَ (شرح كتاب الرقاق)

நற்காரியங்கள் நிய்யத்தை கவனித்து அதன் நன்மைகள் மாறுபடும் 

وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا (78) الاسراء

நற்காரியங்கள் அனைத்தும் நன்மையில் சமமானவை அல்ல. நிய்யத்தை கவனித்து நன்மைகள் மாறுபடும் மேலும் அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும். சில நற்காரியங்களுக்கு செய்யாமலேயே நன்மைகள் கிடைக்கும். சில நற்காரியங்களை செய்தும் நன்மை கிடைக்காது.                                

நிய்யத் சரியில்லாததால் செய்தும் நன்மை கிடைக்காமல் போவதற்கு உதாரணம்.

(தர்மம் செய்த பிறகு அதைச் சொல்லிக் காட்டுவதால் அதற்கு நன்மை இல்லாமல் போய் விடும்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى... (264) البقرة

நிய்யத் சரியாக இருந்தால் செய்யாமலேயே நன்மைகள் கிடைப்பதற்கு உதாரணம். 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا مَا سَلَكْنَا شِعْبًا وَلَا وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ حَبَسَهُمْ الْعُذْرُ (بخاري

நபி ஸல் அவர்கள் ஒரு போரில் இருந்த போது கூறினார்கள். சில ஜனங்கள் (நம்மோடு வராமல்) மதீனாவில் தங்கி விட்டார்கள். (இருந்தாலும் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள்.) நாம் எந்தெந்த பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்கிறோமோ எந்தெந்த கணவாய்களைக் கடந்து செல்கிறோமோ அங்கெல்லாம் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள். காரணம் சூழ்நிலைகள் அவர்களைத் தடுத்துள்ளது. (ஆனால் அவர்களின் நிய்யத் நம்மோடு வர வேண்டும் என்று  தான் உள்ளது.)                                          

  நாம் சகித்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும்

சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி குர்ஆனை  ஓதுபவருக்கு மிகுந்த நற்கூலி உண்டு.

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ (مسلم) وفِي حَدِيثِ وَكِيعٍ وَالَّذِي يَقْرَأُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ لَهُ أَجْرَانِ (الماهر بالقرآن) هو الحاذق الكامل الحافظ الذي لا يتوقف ولا يشق عليه القراءة لجودة حفظه وإتقانه ( ويتتعتع فيه ) هو الذي يتردد في تلاوته لضعف حفظه فله أجران أجر بالقراءة وأجر بتتعتعه في تلاوته ومشقته ] 

கருத்து- குர்ஆனை சரளமாக ஓதுபவருக்கும் சிறப்பு உண்டு ஆனால் அதை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி ஓதுபவருக்கு இரு மடங்கு நற்கூலி உண்டு


வாகனத்தில் வருபவரை விட நடந்து வருபவருக்கு சிறப்பு

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-كِتَاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ

 மஸ்ஜிதை விட்டும் தூரமான வீடுகளைக் கொண்ட பனூஸலமா குடும்பத்தார்கள் மஸ்ஜிதுக்கு அருகில் மனைகள் காலியாக இருப்பதைக் கேள்விப்பட்டு மஸ்ஜிதுக்கு அருகில் தங்களுடைய வீடுகளை மாற்றியமைத்துக் கொள்ள நாடினார்கள். அப்போது நபி ஸல் அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த து. அவர்களிடம் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் இடம் பெயர நாடுகிறீர்களா என நபி ஸல் அவர்கள் கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.                    

عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-

நற்கூலியால் மக்களில் சிறந்தவர்கள் மஸ்ஜிதை நோக்கிய தூரமான நடை கொண்டவர்களாகும்.

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا أَبْعَدَ مِنْ الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ قَالَ فَقِيلَ لَهُ أَوْ قُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَاءِ قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَايَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-

உபய் இப்னு கஃப் ரழி கூறினார்கள். ஒரு மனிதர் இருந்தார் மஸ்ஜிதை நோக்கி தூரமாக நடந்து வருபவர்களில் அவரை விட யாரையும் நான் கண்டதில்லை. அவரிடம் நான் நீங்கள் ஒரு கழுதையை வாங்கிக் கொள்ளக்கூடாதா என்று கேட்க, அதற்கு அவர் என்னுடைய நடை ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் எழுதப்படுவதை விரும்புகிறேன் என்று கூறினார். அவரைப் பற்றி நபி ஸல் கூறும்போது அவர் அனைத்து நன்மைகளை சேகரித்துக் கொண்டார் என்றார்கள்

சிரமத்துடன் செய்யும் அமலை சஹாபாக்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்

முஆத் ரழி அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிய போது அழுதார்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது நான் மவ்த் வந்து விட்டதை நினைத்து அழவில்லை மாறாக, இனி நான் ஜிஹாத் செய்ய முடியாதே என்றும், கடுமையான குளிர் காலங்களில் இரவில் நின்று வணங்க முடியாதே என்றும், கடுமையான வெயில் காலங்களில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனிமேல் எனக்குக் கிடைக்காதே என்பதற்காகவும் நான் அழுகிறேன் என்றார்கள்.                                                                          

கஞ்சன் செய்யும் தர்மத்திற்கு அதிக நற்கூலியும் இதே அடிப்படையில் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ شَحِيحٌ أَوْ صَحِيحٌ تَأْمُلُ الْعَيْشَ وَتَخْشَى الْفَقْرَ وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا كَانَتْ بِالْحُلْقُومِ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ (مسند احمد)

பனி காலத்தில் பெரும்பாலும் ஃபஜ்ரு தொழுகை பல பேருக்கு தவறி விடுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَضْلُ صَلَاةِ الْجَمِيعِ عَلَى صَلَاةِ الْوَاحِدِ خَمْسٌ وَعِشْرُونَ دَرَجَةً وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الصُّبْحِ يَقُولُ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا(78الاسراء) (بخاري)

அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...

நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.  ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில்  இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள்.  பெண்களின் வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்.                      

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ (ابوداود)

காலையில் சுப்ஹு தொழுது விட்டு நேரத்தோடு வியாபாரத்தை துவக்க வேண்டும் என்ற நபிமொழி

عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابوداود)

அதிகாலை நேரத்தில் நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு எழுப்பி அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர வேண்டும். அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம் பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை மதரஸாக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை கண்டதையும் பார்த்து விட்டு பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK  என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால் மார்க்கக் கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை மாற ஒரேவழி இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு எழுப்புவது தான்.

வியாழன், 1 ஜனவரி, 2026

நற்குணம்

02-01-2026
ரஜப் -12 بسم الله الرحمن الرحيم  
 நற்குணங்கள் 
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ (159) ال عمران
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ (4) القلم
இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي
நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்
عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]
  உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின் அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.               
படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என விரும்பியிருக்கலாம். நிகாஹ் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதும் இதன் மூலம் புரிகிறது

வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினாலும் நற்குணம் இல்லா விட்டால் நரகம் தான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنْ الْأَقِطِ وَلَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي الْجَنَّةِ (مسند أحمد
  மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: அஹ்மத் (9298)
நற்குணத்தின் அடையாளங்களில் சில... 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الْأَذَى (ترمذي
நற்குணம் என்பது மலர்ந்த முகத்துடன் இருப்பது, உபகாரம் செய்வது, யாருக்கும் தீங்கு தராமல் இருப்பது என அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறினார்கள்.
நிறைய நன்மைகளோடு வந்தவர் மற்றவர்களுக்கு நிறைய தீமைகள் செய்வதால் நரகம் செல்வார்
அதாவது தொழுகை இபாதத் நிறைய இருந்தும் நற்குணம் இல்லாத தால் நரகம் செல்வார்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ
பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.
நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர
தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது
عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ
ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம். 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.
ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள். 
ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்
عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه
பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்
قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:
ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.
 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) مسلم.
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم
என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.
நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை
عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري 
   யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்.                                                          
படிப்பினை- இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை
عن ابْن عُمَرَ رَض نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري
ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி அந்த இடத்தில் அமர வேண்டாம்
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي
நற்குணத்தின் அடையாளங்களில் ஒன்று மலர்ந்த முகம்
நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்
عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089
1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.       
كان النبي صلى الله عليه وسلم كالرجل من رجالكم ، إلا أنه كان أكرم الناس ، وألين الناس ضحّاكا بسّاما [ مكارم الأخلاق لابن أبي الدنيا
 மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة
கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).         
நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي
அநாகரீகமாக நடந்து கொண்ட கிராமவாசியிடமும் புன்னகையை வெளிப்படுத்திய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري) باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ-كتاب اللباس 5809
அனஸ் ரழி கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். நூல்: புகாரி 5809
தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக இருக்காமல் 
கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348
முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல்
 யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.
عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ
தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.         
மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்
عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم
மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள். 
பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல் அவர்கள்
قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري
அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.                                 
அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)
நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...