05-06-2026
DULHAJ- 18 بسم الله الرحمن الرحيم
விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பம்-
மாணவர்களுக்கு சில அறிவுரைகள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் முடிந்து ஸ்கூல் துவங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சில அறிவுரைகள் கூறுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
1. பள்ளிப் படிப்பும் அவசியம். எனினும் அதை விட அவசியம் மதரஸா படிப்பு. அதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
2. அதுபோல் என்ன தான் ஸ்கூலில் அதிகமான home work தந்திருந்தாலும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதை மறந்து விடக்கூடாது.
3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களுக்கு பெரும்பாலும் ஜும்ஆ கிடைப்பதில்லை. சம்பந்தப் பட்ட பெற்றோர் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி குறைந்த பட்சம் ஸ்கூலில் ஜும்ஆ தொழ ஏற்பாடு செய்ய வேண்டும். 4. ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மக்தப் மதரஸாவுடன் இணைந்து சிறந்த ஆசிரியர் மூலமாக ஸ்கூல் டியூஷன் ஏற்பாடு செய்தால் டியூஷனை காரணம் காட்டி பிள்ளைகள் தொழுகையை விடுவதையும் மதரஸாவுக்கு வராமல் இருப்பதையும் சீர் செய்ய முடியும்.
5.வசதியுள்ளவர்கள் நிறைந்த மஹல்லாக்களில் மஸ்ஜிதுடன் இணைந்தே ஸ்கூல் ஆரம்பித்தால் முஸ்லிம் பிள்ளைகளை தீனுடையஅடிப்படையில் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும்.
இதில் ஒவ்வொரு தலைப்பாக நாம் பார்ப்போம்
1. மதரஸா கல்வியின் அவசியம்.
ஒரு முஸ்லிம் இளம் தம்பதியர் தம் குழந்தையை பற்றி பெறுமை பொங்க பேசினார்கள். “டி வி யில் பாட்டுப் போட்டால் இவன் அற்புதமாக ஆடுவான் என்றார்கள். அவர்களாக
டிவியை ஆன் செய்ய இரண்டரை வயதுப் பையன் இசைக்கு ஏதுவாக நடனமாடினான். எல்லோரும் மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கைகொட்டி மகிழ்ந்தனர். நம்முடைய வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் இதைத்தான் சொல்லிக் கொடுக்க முடிகிறது. பள்ளிக் கூடங்களிலும் நண்பர்களுடன் சேர்ந்து இதைத் தான் கற்றுக் கொள்கின்றனர். மதரஸாக்கள் தான் குழந்தகளுக்கு அல்லாஹ்வை ரஸூலை கலிமாவை தீனை சொல்லிக் கொடுக்கின்றன.
மார்க்கக் கல்வியை ஒதுக்குவது பல்வேறு சோதனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகி விடும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي) وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون العلم لطلب المال والجاه لا للدين(تحفة الاحوذي
கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன் சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக் கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப் பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள் ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது மது அதிகரித்து விடுமோ 15. எப்போது இந்த உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும் எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள் கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள வார்த்தைக்கு மற்றொரு பொருளும் உண்டு. அதாவது மார்க்கக் கல்வ அல்லாத மற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுமோ அப்போது இந்த அழிவுகள் உண்டாகும் என்றும் பொருள் உண்டு.
பூகம்பமும், சுனாமியும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்து ஆண்டுகளில் தான் தாக்கமும், உயிர் பலியும் அதிகரித்துள்ளது. - தினமலர் - மேற்படி தவறுகள் நிகழ்ந்தால் பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை. விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள்.
மார்க்க விஷயங்களின் மீது அலட்சியம் குர்ஆன் நம்மிடமிருந்து உயர்த்தப் படுவதற்குக் காரணமாகி விடும்
عن شداد بن معقل قال قال عبد الله إن هذا القرآن الذي بين أظهركم يوشك أن ينزع منك قال قلت كيف ينزع منا وقد أثبته الله في قلوبنا وأثبتناه في مصاحفنا قال يسرى عليه في ليلة واحدة فينزع ما في القلوب ويذهب ما في المصاحف ويصبح الناس منه فقراء ثم قرأ ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك (مصنف ابن ابي شبية)
நிச்சயமாக இந்தக் குர்ஆன் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. அது உங்களிடமிருந்து உயர்த்தப் படக் கூடும். என்று இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூற, ஷத்தாத் ரஹ் அவர்கள் இது எவாறு சாத்தியம் அல்லாஹ் நம்முடைய உள்ளங்களிலும் நம்முடைய பிரதிகளிலும் அதைப் பதிய வைத்திருக்கும்போது இது எப்படி சாத்தியம் என்று கேட்க, அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள். ஒரே இரவில் அல்லாஹ் தஆலா உள்ளங்களில் இருந்தும் பிரதிகளில் இருந்தும் குர்ஆனை அல்லாஹ் நீக்கி விடுவான். ஒட்டு மொத்த மக்களும் குர்ஆனை விட்டும் ஏழைகளாக ஆகி விடுவார்கள். என்று கூறிய பின்பு பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். நாம் நாடினால் நாம் இறக்கிய வசனங்களை நாமே முற்றிலும் நீக்கி விடுவோம். விளக்கம்- ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை அத்தனை பிரதிகளிலும் இருந்தும் நீக்கி விடுவான். மறுநாள் காலையில் வெறும் பேப்பர் மட்டும் தான் மிஞ்சம். அதேபோல் யாரெல்லாம் குர்ஆனை அல்லது சூராக்களை மனனம் செய்து வைத்திருந்ந்தார்களோ அவை அத்தனையும் மறந்து விடும்.
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا (ابن ماجة)
நபி (ஸல்) கூறியதாக ஹுதைஃபா ரழி அறிவித்துள்ளார்கள். பழைய துணியில் எவ்வாறு கலர் மங்கி விடுமோ அவ்வாறு இஸ்லாம் மங்கி விடும். அப்போது யாருக்கும் நோன்பு என்றால் என்ன? தொழுகை என்றால் என்ன? ஹஜ்ஜுக் கடமைகள் என்றால் என்ன? ஜகாத் என்றால் என்ன? என்பதே தெரியாது. அப்போது ஒரே ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை உயர்த்தி விடுவான். அப்போதுள்ள முதியவர்கள் மற்றும் மூதாட்டிகள் மட்டும் பின்வருமாறு ஞாபகப் படுத்துவார்கள். எங்களுடைய பெற்றோர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அதைச் சொல்கிறோம் (மற்றபடி அதைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது).
குர்ஆன் மதரஸாக்களின் மீதான அலட்சியம் காரணமாக கடைசி காலத்தில் ஆலிம்கள் அறவே இல்லாத சூழ்நிலை ஏற்படும். தொழவைப்பவர் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும்
عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود
தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது கியாமத்தின் அடையாளமாகும்
விளக்கம்- மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது. ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும். நூல் மிர்ஆத்
குர்ஆன் மதரஸாக்களின் மீது அலட்சியம் நம்மைக் கொடுமைப்படுத்தும் ஆட்சி அமையக் காரணமாகி விடும்
ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.
குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ
என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்.
நமது குழந்தைகளுக்கு அல்லாஹ் ரஸூலை சொல்லிக் கொடுக்கிற மதரஸாக்களை சமுதாயம் மதிக்க வேண்டும்
குர்ஆன் மதரஸா உஸ்தாதுகளுக்கு தகுந்த கண்ணியத்தை தரவேண்டும்.
பிள்ளைகளை தினந்தோறும் தவறாமல் அனுப்ப வேண்டும்
பிள்ளைகளை சுத்தமாகவும் சுத்தமான உடையுடனும் அனுப்ப வேண்டும்
இன்று என்ன ஓதினாய் என்று விசாரிக்க வேண்டும்,
வீட்டில் கொஞ்ச நேரம் மதரஸா பாடம் படிக்க வற்புறுத்த வேண்டும்.
திருக்குர்ஆன், ஒழுக்க பண்புகள்,துஆக்கள், மார்க்க சட்டங்கள் என மதரஸாக்களில் கற்றுத்தரப்படும் அனைத்தும் – ஒரு எக்ஸாம் வரை மட்டுமல்ல- வாழ்வு முழுமைக்கு தேவையானவை என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும், தொடர்ந்து பழக்கப் படுத்துவதும் பெற்றோர்களின் கடமையாகும்
நம் பிள்ளைகளில் சிலரையேனும் அரபு மதரஸாக்களுக்கு அனுப்பி
ஆலிம், ஹாஃபிழ்களாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்
( إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة فيقول العلماء: بفضل علمنا تعبدوا وجاهدوا فيقول الله عز وجل: أنتم عندى كبعض ملائكتى اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة )(احياء)
மறுமை நாளில் அல்லாஹ் வணக்கசாலிகளிடமும் போர் செய்த போராளிகளிடமும் நீங்கள் சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்போது உலமாக்கள் நாங்கள் கற்றுக் கொடுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் வணக்கம் புரிந்தார்கள். போர் செய்தார்கள்.ஆனால் அவர்களை அனுப்பி விட்டு எங்களை நிறுத்தி விட்டாயே என ஏக்கத்துடன் கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் கூறுவானாம். நீங்கள் என்னிடம் சில பிரத்தியேகமான மலக்குமார்களைப் போன்றவர்கள். எனவே நீங்கள் தனியாக செல்லக் கூடாது. நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறுவான். அவர்கள் சிபாரிசு செய்வார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான். பிறகு அவர்கள் சுவனம் செல்வார்கள்.
2. தொழுகையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர வைக்க வேண்டும்
தொழுகைக்கு ஒரு போதும் விடுமுறை இல்லை.
தஜ்ஜால் இருக்கும் நேரத்தில் ஆறு மாதங்கள் பகலாக இருக்கும் நிலையில் அந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக இரண்டு தொழுகை தொழுதால் மட்டும் போதுமா என்று கேட்கும்போது நபி ஸல் அவர்கள் இல்லை. நேரத்தைக் கணக்கிட்டு தினமும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். தொழுகைக்கு விதி விலக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.
عن النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم
விளக்கம்- தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள் பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம் நாள் ஒரு மாதம் போன்றும், மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம் நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள் கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு மாதம் பகலாகவே இருக்கும்போது இரண்டு தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது. மாறாக சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர் தொழுது கொண்டிருப்போம். நன்கு இருட்டு இருக்கும். லுஹர் தொழுது கொண்டிருப்போம்.
போர்க்களத்தில் எதிரிகளின் நிறைந்த, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொழுகை விதி விலக்கு இல்லை
وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً.. (102) النساء - أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْ مَعَهُ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ (بخاري)
இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்புகள் வழியாக வந்துள்ளது. நபி ஸல் அவர்களுடன் தாத்துர் ரிகாஉ போரில் பங்கெடுத்த சஹாபி கூறினார்கள். அப்போரில் நபி ஸல் அவர்கள் போர்க்களத்தொழுகை தொழுதார்கள். (ஆயுதங்களை கீழே வைத்து விடாமல் அவற்றை சுமந்தபடியே தொழ வேண்டும்.)நபி ஸல் அவர்களுடன் இருப்பவர்கள் முதல் ஒரு ரக்அத்தை இமாமுடன் தொழும் வரை மீதிப் பேர் எதிரிகளை நோக்கி நிற்பர். நபி ஸல் அவர்கள் ஒரு ரக்அத்தை முதல் அணிக்குத் தொழ வைத்து விட்டு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து சற்று நேரம் நிற்பார்கள். அதற்குள் இந்த முதல் அணியினர் தங்களுக்கு மீதமுள்ள ஒரு ரக்அத்தை தனியாக சீக்கிரம் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு எதிரிகளை நோக்கி நின்று கொள்வார்கள். உடனே இரண்டாம் அணியினர் வந்து நபி ஸல் அவர்களுடன் இரண்டாம் ரக்அத்தில் இணைவார்கள். அவர்களுடன் நபி ஸல் அவர்கள் தன்னுடைய இரண்டாவது ரக்அத்தை தொழ வைத்து ஸலாம் கொடுத்தவுடன் அந்த அணியினர் தங்களுக்கு விடுபட்ட ஒரு ரக்அத்தை தனியாக எழுந்து தொழுது ஸலாம் கொடுப்பார்கள்.
படிப்பினை- போர்க் காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. ஜமாஅத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியதை வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விட்டு விடப்படும் அமல் தொழுகை தான். லாக்டவுனில் மஸ்ஜித்கள் மூடப்பட்டபோது பலர் தொழவே இல்லை
உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இஸ்லாத்தில் தொழுகை முக்கியம்.
عَنِ ابْنِ عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ(رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال)
மறுமை நாளில் முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவர் தொழுகையில் பேணுதலாக இருக்கவும்
عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد(كنز العمال)
தொழுகையை விட சிறந்த வேறு வணக்கம் இருந்திருக்கும் என்றால் அல்லாஹ் மலக்குகளுக்கு அவற்றைச் செய்யும்படி உத்தரவிட்டிருப்பான்.ஆனால் மலக்குகள் ருகூவு சுஜூது போன்ற தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களை மட்டுமே அல்லாஹ்வுக்கு செலுத்தி வருகின்றனர்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ فِيَّ والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் நான் பூமியில் உள்ளவர்களை அவர்களின் பாவத்தின் காரணமாக தண்டிக்க நாடும்போது எனது வீட்டை (மஸ்ஜிதை எப்பொழுதும்) வணக்கத்தால் நிலை நிறுத்துபவர்களையும், அல்லாஹ்வுக்காக ஒருவரொருவர் நேசிப்பவர்களையும் சஹரில் எழுந்து பாவமன்னிப்புத் தேடுபவர்களையும் பார்த்து என் வேதனையை மக்களை விட்டும் திருப்பி விடுகிறேன்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் காலத்தில் முஸ்லிம்கள் தொழுகையைவிட தொழிலை பெரிதாக கருதவில்லை
قَالَ عَمْرو بْن دِينَار الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة " رِجَال لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه"(النور)ثُمَّ قَالَ هُمْ هَؤُلَاءِوَقَالَ مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء وَمِيزَانه فِي يَده خَفَضَهُ وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (ت: ابن كثير)
அம்ர் ரஹ் கூறினார்கள். நான் ஸாலிம் ரஹ் அவர்களுடன் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது கடைவீதியைக் கடந்து செல்வோம். மஸ்ஜிதில் தொழுகைக்காக மக்களெல்லாம் நின்றிருப்பார்கள். ஆனால் கடை வீதிகளில் அப்படி அப்படியே பொருட்களை துணியால் மூடிய நிலையில் மட்டும் வைத்து விட்டு அனைவரும் தொழுகைக்குச் சென்றிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் ஸாலிம் ரஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவரது ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري)
தொழுவதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே அல்லாஹ் ஆக்கி விடுவான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள்- அடியானே என்னை வணங்குவதற்கு நீ நேரம் ஒதுக்கு. உன் மனதில் எல்லாவற்றிலும் மனநிறைவை உண்டாக்கி, உன் வறுமையை நீக்குவேன். அவ்வாறில்லாமல் எனக்கு நேரமில்லை என்று நீ தட்டிக் கழித்தால் உனக்கு நேரமே பற்றாத அளவுக்கு உன் கை நிறைய வேலைகளை நான் திணித்து விடுவேன். உனக்கு மன நிறைவையும் நான் ஏற்படுத்த மாட்டேன்.
உடுத்த உடை இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது
ومن لم يجد ثوبا صلى عريانا قاعدا يومئ بالركوع والسجود فإن صلى قائما أجزاه والأول أفضل (مختصر القدوري
உளூச் செய்த தண்ணீர் இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது
وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا (6) المائدة
3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும்
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ (مسلم
ஜும்ஆவை விடுவதை தவிர்த்துக் கொள்ளட்டும் அவ்வாறு தவிர்த்துக் கொள்ளா விட்டால் அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான். அவர்கள் (திருந்தாத உள்ளம் கொண்டவர்களாக) பொடு போக்கானவர்களாக மாறி விடுவார்கள்.
عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ وَكَانَ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ (ابن ماجة
ஜும்ஆவை தகுந்த காரணமின்றி போடுபோக்காக எவர் விட்டு விட்டாரோ அவரது உள்ளம் சீல் வைக்கப்படும்.
குறிப்பு- முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆவுக்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் இருக்கும். ஆனால் மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்ட ஜமாஅத் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி கால் மணி நேரமேனும் அனுமதி தரச் சொல்ல வேண்டும். பெரிய மாணவர்கள் மூலமாகவே பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை நிர்பந்தமான சூழ்நிலையில் இமாம் அல்லாத மூன்று பேர் இருந்தாலே ஜும்ஆ நிறைவேறும்
ومن شرائطها : الجماعة وأقلهم عند أبي حنيفة ثلاثة سوى الإمام (محتصر القدوري
ஹனஃபி மத்ஹபில் ஜும்ஆ நடத்துவதற்கு குறைந்த பட்ச எண்ணிக்கை இமாம் அல்லாத மூனறு நபர்கள் இருந்தால் போதும்