29-05-2026
துல்ஹஜ்- 11 بسم الله الرحمن الرحيم
என்றும் நம் நினைவில்
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவு கூராமல் தொழுகை முழுமையடைவதில்லை
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் உங்கள் மீது எவ்வாறு ஸலாம் சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் மீது எவ்வாறு ஸலவாத் சொல்வது என்று கேட்டார்கள் அப்போது நபி ஸல் அவர்கள் மேற்காணும் தரூத் ஸலவாத்தைக் கற்றுத் தந்தார்கள்.
படிப்பினை- தொழுகையில் நபி ஸல் அவர்களை நாம் எவ்வாறு நினைவு கூருவோமோ அவ்வாறே நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நாம் நினைவு கூருகிறோம்.
நபி (ஸல்) அவர்களும் அடிக்கடி நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவு கூருவார்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود
தன் பேரப் பிள்ளைகளுக்கு நபி (ஸல்) மேற்காணும் வார்த்தைகளைக் கொண்டு நபி (ஸல்) ஓதிப் பார்ப்பார்கள். அப்போது பின்வருமாறு நினைவு கூருவார்கள். நபி இப்றாஹீம் தன் பிள்ளைகளான இஸ்ஹாக் (அலை), இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு இவ்வாறு தான் ஓதிப் பார்ப்பார்கள் என்றும் கூறுவார்கள்
அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு 80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ (بُخاري) قدومவெட்டும் கருவி
நடமாட்டமும் இல்லாத, தண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் இறை உத்தரவுப்படி தன் குடும்பத்தை விட்டுச் சென்ற தியாகம்
قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه أَوَّلَ مَا اتَّخَذَ النِّسَاءُ الْمِنْطَقَ مِنْ قِبَلِ أُمِّ إِسْمَاعِيلَ اتَّخَذَتْ مِنْطَقًا لَتُعَفِّيَ أَثَرَهَا عَلَى سَارَةَ ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهِيَ تُرْضِعُهُ حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى الْمَسْجِدِ وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ وَلَيْسَ بِهَا مَاءٌ فَوَضَعَهُمَا هُنَالِكَ وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ وَسِقَاءً فِيهِ مَاءٌ ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ فَقَالَتْ يَا إِبْرَاهِيمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلَا شَيْءٌ فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا وَجَعَلَ لَا يَلْتَفِتُ إِلَيْهَا فَقَالَتْ لَهُ أَاللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَتْ إِذَنْ لَا يُضَيِّعُنَا ثُمَّ رَجَعَتْ فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى إِذَا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حَيْثُ لَا يَرَوْنَهُ اسْتَقْبَلَ بِوَجْهِهِ الْبَيْتَ ثُمَّ دَعَا بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَرَفَعَ يَدَيْهِ فَقَالَ رَبِّ {إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ....(بخاري)كتاب أحاديث الأنبياء
பெண்களில் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது ஹாஜர் (அலை) அவர்கள் தான். தன்னால் சாரா அம்மையார் அவர்களின் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவ்வாறு அணிந்தார்கள் (அதாவது சாரா (அலை) அவர்கள் தான் முதல் மனைவி. இந்த அன்னையுடன் இப்றாஹீம் அலை பயணம் ஒரு ஊரைக் கடந்த போது அவ்வூர் அரசன் சாரா அன்னையை தவறுக்காக நெருங்க மூன்று தடவை முயன்று அவமானப்பட்டான். கடைசியில் அவன் சாரா அன்னையை பத்திரமாக அனுப்பி வைத்ததுடன், தனது பணிப் பெண்ணாகிய ஹாஜர் அன்னையை பரிசாக கொடுத்தான்.
ஹாஜர் அன்னையை மணந்த பின்பே நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. இதனால் சாரா அன்னைக்கு ஹாஜர் அன்னை மீது ஏற்பட்ட இயல்பான வருத்தம் நீங்குவதற்காக, தன்னை தாழ்த்திக் கொள்வதற்காக இடுப்புக் கச்சை அணிந்தார்கள் புகாரீ3358) எனினும் அந்த மனஸ்தாபம் நீடிக்கக் கூடாது என்பதற்காகவும், ஹாஜர் அன்னை மூலம் மக்கா பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ் அந்த்த அன்னையையும், அவரின் மகனையும் ஃபலஸ்தீனில் இருந்து மக்காவில் கொண்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டான். அந்நேரம் மக்காவில் எவரும் இல்லை. ஒரு தோல் பையில் தண்ணீரும், மற்றொரு பையில் நீரும் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.
இந்நிலையில் அவ்விருவரையும் விட்டு விட்டு திரும்பிய தன் கணவரிடம் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க, நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. கணவனுக்குப் பின்னாலேயே ஓடிச் சென்று ஹாஜர் அன்னை இவ்வாறு பல முறை கேட்டும் நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. இறுதியில் அல்லாஹ் உங்களை இவ்வாறு விட்டு விடச் சொல்லி உத்தரவிட்டானா... என்று கேட்க, ஆம் என்று மட்டுமே நபியவர்கள் பதிலளித்தார்கள். உடனை அந்த அன்னை அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விட்டு விட மாட்டான் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தன் குழந்தையிடம் திரும்பினார்கள். அதன்பின் நபி இப்றாஹீம் (அலை) மக்காவில் எல்லைக்குச் சென்று தம் குடும்பத்தினருக்காகவும், மக்காவிற்காகவும் துஆ செய்தார்கள் – புகாரீ 3364
இறைக் கட்டளையை விட குடும்பப் பாசம் பெரிதல்ல என்று தந்தையும், உயிர் பெரிதல்ல என்று மகனும் உணர்த்திய விதம்
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103الصافات) أَيْ صَرَعَهُ عَلَى وَجْهه لِيَذْبَحهُ مِنْ قَفَاهُ وَلَا يُشَاهِد وَجْهه عِنْد ذَبْحه لِيَكُونَ أَهْوَن عَلَيْهِ –
عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا قال... تَلَّهُ لِلْجَبِينِ وَعَلَى إِسْمَاعِيل عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام قَمِيص أَبْيَض فَقَالَ لَهُ يَا أَبَتِ إِنَّهُ لَيْسَ لِي ثَوْب تُكَفِّنُنِي فِيهِ غَيْره فَاخْلَعْهُ حَتَّى تُكَفِّنَنِي فِيهِ فَعَالَجَهُ لِيَخْلَعَهُ فَنُودِيَ مِنْ خَلْفه " أَنْ يَا إِبْرَاهِيم قَدْ صَدَّقْت الرُّؤْيَا " فَالْتَفَتَ إِبْرَاهِيم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام فَإِذَا بِكَبْشٍ أَبْيَض أَقْرَن أَعْيَن قَالَ اِبْن عَبَّاس لَقَدْ رَأَيْتنَا نَتَتَبَّع ذَلِكَ الضَّرْب مِنْ الْكِبَاش (تفسير ابن كثير)
மேற்காணும் ஆயத்தின் பொருள் மகனை முகம் குப்புற படுக்க வைத்தார்கள் என்பதாகும். ஏனெனில் முகம் பார்க்கும்படியாக இருந்தால் ஏதேனும் பாசம் ஏற்பட்டு இறைக்கட்டளையை நிறைவேற்ற முடியாமல் ஆகி விடுமோ என்று அஞ்சினார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:"لَمَّا أُمِرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ بِالْمَنَاسِكِ عَرَضَ لَهُ الشَّيْطَانُ، عَنِ الْمَسْعَى، فَسَابَقَهُ فَسَبَقَهُ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ، ثُمَّ ذَهَبَ بِهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ إِلَى جَمْرَةِ الْعَقَبَةِ فَعَرَضَ لَهُ الشَّيْطَانُ، فَرَمَاهُ بِسِبْعِ حَصَيَاتٍ حَتَّى ذَهَبَ، ثُمَّ عَرَضَ لَهُ عِنْدَ الْجَمْرَةِ الْوُسْطَى، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ (تفسير ابن ابي حاتم)
தஃப்ஸீர் இப்னு அபீ ஹாதம் போன்ற சில தஃப்ஸீர்களில் சுருக்கமாகவும் வேறு அறிவிப்புகளில் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற தன் மகனாரை அழைத்துச் சென்ற போது ஷைத்தான் குறுக்கிட்டான். முதலில் மகனாரிடம் உம் தந்தை உம்மை அறுப்பதற்காக அழைத்துச் செல்கிறார் என்று கூறிய போது, உடனே மகனார் அவர்கள் “எதற்காக என்னை என் தந்தை அறுக்கிறார்? என்று கேட்க, ஏதோ அல்லாஹ்வின் உத்தரவாம். என்ன இருந்தாலும் யாராவது மகனை பலியிட முன் வருவார்களா? என்று கூறி கெடுக்க முயற்சித்த போது மகனார் அவர்கள் “நான் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவதாக இருந்தால் எனக்கு முழு சம்மதம் என்று கூற, ஷைத்தானுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
அடுத்து ஹாஜரா அன்னையிடமும் சென்று அவ்வாறே கூறினான். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு மீண்டும் மகனாரிடம் வந்தான். தற்போது முதலாவது ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அந்த பள்ளத்தாக்கையே அடைக்கும் விதமாக பெரிய உருவத்துடன் வந்து நின்றான். உடன் இருந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனை கல்லால் எறியுங்கள் என்றார்கள். அவ்வாறே நபியவர்கள் ஏழு கற்களால் அவனை எறிய அவன் சென்று விட்டான். திரும்பவும் வந்தான் இன்று இரண்டாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே பெரிய உருவத்துடன் வந்து நிற்க, அப்போதும் வானவர் நபியிடம் மீண்டும் அவனை எறியுங்கள் என்றவுடன் நபியவர்கள் ஏழு கற்களால் மீண்டும் அவனை எறிய அவன் சென்று விட்டு, திரும்பவும் இன்று மூன்றாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே நிற்க, அப்போதும் வானவர் எறியும்படி கூற, மீண்டும் கற்களால் அவனை எறிந்தார்கள். அவன் சென்று விட்டான்.அதன் பின்பே மகனாரை அந்த மலைக்கு அழைத்துச் சென்றார்கள்
விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் நபி இப்ராஹீம் (அலை)
وكان ابراهيم عليه السلام لا يأكل بغير ضيف (مؤطا)-
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தனது நேசராக ஆக்கியதன் பிண்ணனியாக கூறப்படும் சம்பவம்
عن ابن عباس أصاب الناس سنة جهدوا فيها فحشروا إلى باب إبراهيم عليه السلام يطلبون الطعام(وكان له صديق بمصر يعطي الميرة) فبعث غلمانه بالإبل إلى خليله بمصر يسأله الميرة فقال خليله لو كان إبراهيم يريده لنفسه احتملنا ذلك له ولكنه يريد للأضياف وقد دخل علينا ما دخل على الناس من الشدة فرجع رسل إبراهيم فمروا ببطحاء فقالوا لو أنا احتملنا من هذه البطحاء ليرى الناس أنا قد جئنا بميرة إنا لنستحي أن نمرّ بهم وإبلنا فارغة فملؤا تلك الغرائر رملا ثم إنهم أتوا إبراهيم وسارة نائمة فأعلموه ذلك فاهتم إبراهيم لمكان الناس فغلبته عيناه فنام واستيقظت سارة فقامت إلى تلك الغرائر ففتحتها فإذا هي أجود حوّاري تكون فأمرت الخازين فخبزوا وأطعموا الناس واستيقظ إبراهيم فوجد ريح الطعام فقال ياسارة من أين هذا الطعام؟ فقالت من عند خليلك المصري فقال هذا من عند خليلي الله فيومئذٍ اتخذه الله خليلاً (غرائب القران
ஒரு முறை இப்றாஹீம் (அலை) அவர்களின் ஊரில் பஞ்சம் நிலவிய போது ஊர் மக்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் வந்து விட்டார்கள் ஆனால் அந்நேரத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டிலும் பஞ்சமே நிலவியது எனினும் வீடு தேடி வந்த மக்களை பசியோடு திருப்பி அனுப்பக் கூடாது என்றெண்ணி தமக்கு நெருக்கமான சில இளைஞர்களை பட்டணத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமான நண்பரிடம் அனுப்பி வைக்கிறார்கள் நான் சொன்னதாக கூறி தானிய மூட்டைகளை வாங்கி வாருங்கள் என்று கூற அந்த இளைஞர்கள் காலியான தானியப் பைகளை தம்முடன் எடுத்துக் கொண்டு ஒட்டகங்களில் புறப்படுகிறார்கள் விரைவாகச் சென்று அந்த நபரை சந்தித்த போது அந்த நண்பர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் இப்றாஹீம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் போதுமான தானியங்களை என்னால் தர முடியும் என்று கூறி விடுகிறார் ஏமாற்றத்துடன் அந்த இளைஞர்கள் திரும்புகிறார்கள். வரும் வழியில் ஊர் எல்லையை நெருங்கும்போது அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் நாம் காலியான தானியப் பைகளுடன் ஊருக்குள் நுழைய வேண்டாம். அவ்வாறு நுழைந்தால் காத்திருக்கும் மக்கள் மிகவும் விரக்தி அடைந்து விடுவார்கள் ஆகவே இந்த மூட்டைகளுக்குள் மணலை நாம் நிரப்பி கொண்டு செல்வோம் அந்த மக்களுக்கு அது தானிய மூட்டைகளைப் போல் தெரியும். நாம் வீட்டுக்குள் கொண்டு சென்றவுடன் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி விடுவோம் அல்லாஹ் ஏதேனும் அற்புதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி அவ்வாறே செய்தார்கள் மணல் மூட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த போது நபியவர்களின் மனைவி சாரா அம்மையார் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மட்டும் விஷயத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்கள் நபியவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் இந்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்ற கவலை மிகுதியால் அவர்களை அறியாமல் தூக்கம் ஆட்கொண்டு விட்டது அவர்கள் தூங்கிய சற்று நேரத்தில் மனைவி சாரா அம்மையார் விழித்து அந்த மூட்டைகளை பார்க்கிறார்கள் பட்டணத்து நண்பர் தான் தானியம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றெண்ணி அதைப் பிரித்த போது அல்லாஹ்வின் அருளால் அதில் உண்மையான தானியமே இருந்தது. உடனே சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் சமையல் வாசனையைக் கண்டு நபியவர்கள் விழித்து என்ன சாரா இந்த உணவு தானியம் எப்படி வந்தது என்று கேட்க, உங்களுடைய பட்டணத்து நண்பர் தான் கொடுத்தனுப்பினார் உங்களுக்கே தெரியாதா என்று மனைவி கூறிய போது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இல்லை அந்த நண்பர் கொடுத்தனுப்பவில்லை என்னுடைய உண்மை நேசனாகிய அல்லாஹ் இதை அனுப்பினான் என்றார்கள் அப்போது தான் அல்லாஹ் அவர்களை தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான்.
قَالَ السُّدِّيّ لَمَّا بَعَثَ اللَّه الْمَلَائِكَة لِقَوْمِ لُوط أَقْبَلَتْ تَمْشِي فِي صُوَر رِجَال شُبَّان حَتَّى نَزَلُوا عَلَى إِبْرَاهِيم فَتَضَيَّفُوهُ فَلَمَّا رَآهُمْ أَجَلَّهُمْ " فَرَاغَ إِلَى أَهْله فَجَاءَ بِعِجْلٍ سَمِين" فَذَبَحَهُ ثُمَّ شَوَاهُ فِي الرَّضْف وَأَتَاهُمْ بِهِ فَقَعَدَ مَعَهُمْ وَقَامَتْ سَارَة تَخْدُمهُمْ فَلَمَّا قَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ" قَالُوا يَا إِبْرَاهِيم إِنَّا لَا نَأْكُل طَعَامًا إِلَّا بِثَمَنٍ قَالَ فَإِنَّ لِهَذَا ثَمَنًا قَالُوا وَمَا ثَمَنه ؟ قَالَ تَذْكُرُونَ اِسْم اللَّه عَلَى أَوَّلِهِ وَتَحْمَدُونَهُ عَلَى آخِره فَنَظَرَ جِبْرِيلُ إِلَى مِيكَائِيلَ فَقَالَ حَقَّ لِهَذَا أَنْ يَتَّخِذَهُ رَبُّهُ خَلِيلًا"(فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ)(تفسيرابن كثير)
மலக்குகள் விருந்தாளிகளைப் போன்று வருகை தந்த போது அவர்களை மலக்குகள் என்று அறியாத நிலையிலும் அவர்களை இப்றாஹீம் அலை மிகவும் கண்ணியப்படுத்தினார்கள் அவர்களுக்காக மாட்டை அறுத்து அதை பொறித்து முன்னால் கொண்டு வந்து வைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடச் சொன்ன போது அந்த மலக்குகள் இப்றாஹீம் அலை அவர்களை பரிசோதிப்பதற்காக நாங்கள் இந்த உணவை சாப்பிட வேண்டுமானால் இதற்குரிய விலையை கொடுக்காமல் சாப்பிட மாட்டோம் என்று கூறிய போது உடனே இப்றாஹீம் அலை அப்படியானால் இதற்கு ஒரு விலை இருக்கிறது என்று கூற, மலக்குகள் ஆச்சரியத்துடன் என்ன விலை என்று கேட்க, உடனே இப்றாஹீம் அலை அவர்கள் இதை சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வேண்டும் அதுதான் இதன் விலை என்று கூற அப்போது ஜிப்ரயீல் அலை அவர்களும், மீகாயீல் அலை அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட நிலையில் ஜிப்ரயீல் அலை
இவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டது சரி தான் என்றார்கள்
விருந்தோம்பல் எப்படி அமைய வேண்டும் என்ற விஷயத்தில் இப்றாஹீம் (அலை) பேணிய நான்கு ஒழுக்கங்கள்
هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27)فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28) (الذاريات)هذه الآيات انتظمت آداب الضيافة فإنه جاء بطعامه من حيث لا يشعرون بسرعة ولم يَمتن عليهم أولا فقال : نأتيكم بطعام؟ بل جاء به بسرعة وخفاء وأتى بأفضل ما وجد من ماله وهو عدل سمين مشوى فقربه إليهم لم يضعه وقال : اقتربوا بل وضعه بين أيديهم ولم يأمرهم أمرا يشق على سامعه بصيغة الجزم بل قال{أَلاَ تَأْكُلُونَ}على سبيل العرض والتلطف كما يقول القائل اليوم:إن رأيت أن تتفضل وتحسن وتتصدق فافعل (تفسير ابن كثير
விருந்தோம்பலில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கடைபிடித்த அந்த உபசரிப்பு இன்று குறைந்து கொண்டே வருகிறது. எத்தனையோ விஷயங்களில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் தொற்றிக் கொண்டது போல் விருந்தோம்பல் விஷயத்திலும் பஃபே சிஷ்டம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடமும் பரவி விட்டது. தட்டை ஏந்திக் கொண்டு கியூ வரிசையில் காத்திருக்க வேண்டும். உபசரிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். மறு உணவு தேவை என்றாலும் நாமே தேடிப் போய் எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். இது விருந்தோம்பல் என்பதாக அறவே கூற முடியாது நபி இப்றாஹீம் அலை எத்தகைய ஒழுக்கத்தை கடை பிடித்தார்கள் 1,வந்த விருந்தாளிகளிடம் சாப்படுகிறீர்களா என்று கேட்காமலே விருந்து தயார் செய்தார்கள். 2, உணவுகளில் சிறந்த உணவை தயார் செய்தார்கள் 3, விருந்தாளிகளை அந்த அறைக்கு வாருங்கள் அங்கு தான் உணவு வைக்கப்பட்டுள்ளது என்றோ, அல்லது அங்கு போய் கைகளை கழுவி விட்டு வாருங்கள் என்றோ சங்கடப்படுத்தாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து உணவை வைத்தார்கள் 4, விருந்தாளிகளிடம் சாப்பிடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் சாப்பிடக் கூடாதா என்று கணிவுடன் கூறினார்கள் இந்த ஒழுக்கங்களில் பெரும்பகுதி பஃபே சிஷ்டத்தில் இருப்பதில்லை.
ஏழைகளை விட்டு விட்டு செல்வந்தர்களை மட்டும் விருந்துக்கு அழைப்பவர்களைப் பற்றி...
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ (بخاري) كتاب النكاح
விருந்துகளில் மிக மோசமான விருந்தாகிறது எந்த விருந்துக்கு
பணக்கார ர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப் படுவார்களோ அத்தகைய விருந்தாகும்.
இன்றைய காலகட்டத்தல் ஆடம்பரமாக இருப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுப்பதை பார்க்க முடிகிறது முல்லா நஸ்ருதீன் ஒரு விருந்துக்குப் போனார். எளிமையான தோற்றத்தில் சென்ற அவரை உள்ளே விடாமல் விருந்து வீட்டினர் தடுத்து விட்டனர். திரும்பி வந்த முல்லா நஸ்ருதீன் ஆடம்பரமான ஆடைகளையும், கம்பீரமான தலைப்பாகையையும் அணிந்து அங்கே வந்தார். வாருங்கள் வாருங்கள் என வரவேற்பு பலமாக இருந்தது. விருந்தில் அமர்ந்தவுடன் முல்லா நஸ்ருதீன் தன்னுடைய தலைப்பாகையைக் கழற்றி உணவுக்கு முன்னால் வைத்து நீ சாப்பிடு என்றார். அனைவரும் அவரை வியப்பாக பார்த்தனர். அப்போது அவர் “இந்த விருந்து எனக்கு கிடைத்த விருந்தல்ல. என் தலைப்பாகைக்கு கிடைத்த விருந்து” என்றாராம்
عن صهيب رضي الله تعالى عنه: أن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال: (خيركم من أطعم الطعام ورد السلام رواه الحاكم
விருந்தாளிகளுக்காக நஃபிலான நோன்பை விடுவது
عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُم ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ الْآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ سَلْمَانُ (بخاري) باب صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ –كتاب الأدب
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களையும் அபூதர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது அவரின் மனைவி அழுக்கடைந்த ஆடை அணிந்து இருக்கக் கண்டார். சல்மான் (ரலி) அவர்கள் "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவரது மனைவி, ( أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا ) "உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்த தேவையுமில்லை" (அதாவது அவர் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை) என்று விடையளித்தார்.
சற்று நேரத்தில் அபூதர்தா (ரலி) வந்து சல்மானுக்கு உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்" என்று கூறியதும் அபூதர்தா உண்டார். (அதாவது விருந்தாளிக்காக நஃபிலான நோன்பை விட்டார்கள்.) இரவு வந்ததும் அபூதர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் உறங்குவீராக! என்று கூறியதும் அபூதர்தா உறங்கினார்கள். பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபூதர்தா எழுந்திருக்கப் போனார். அப்போதும் சல்மான் 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள் 'இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.
பிறகு அபூதர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ( إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ )
"நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!" என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( صَدَقَ سَلْمَانُ ) "சல்மான் உண்மையையே கூறினார்" என்றார்கள். நூல் புகாரீ-1968
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியபோது சல்மான் (ரலி) அவர்கள் சொன்னது சரி தான் என்று ஆமோதித்தார்கள். ஆம்! இல்லற வாழ்க்கையில் ஈடுபடவும் வேண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவும் வேண்டும் இவ்வாறு தான் இஸ்லாம் போதிக்கிறது.