புதன், 18 மார்ச், 2026

இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026

RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم  

       ஜும்ஆ பயான்- இஸ்திகாமத்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 ரமழான் முடிந்தவுடன் மஸ்ஜித்களை மறந்து விடுபவர்களை எச்சரிக்கும் விதமாக இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)المؤمن

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة -   

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்வது தான் அல்லாஹ்வுக்குப் பிடிக்கும்

عَنْ عَائِشَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري

قاربوا أي اطلبوا قربة الله وطاعته بقدر ما تطيقونه وقال السيد أي حافظوا القصد في الأمور بلا غلو ولا تقصير وقيل تقربوا الى الله بكثرة القربات وقال الكرماني وقيل أي لا تبلغوا النهاية باستيعاب الأوقات كلها بل اغتنموا أوقات نشاطكم (شرح ابن ماجة

وقوله سددوا أي اطلبوا بأعمالكم السداد أي الصواب بين الإفراط و التفريط وكأنه تأكيد لقاربو (شرح ابن ماجة

கருத்து- வணக்க வழிபாடுகளில் நடுநிலையை கடை பிடியுங்கள். அதாவது சக்திக்கு முடிந்த வரை அமல் செய்யுங்கள். மேலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள். உங்களுடைய அமல் மட்டுமே உங்களை சுவனத்தில் நுழைத்து விடாது. மேலும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்

அமல்கள் மட்டுமே நம்மை சுவனத்தில் நுழைத்து விடாது என்பதிலிருந்து படிப்பினையான சம்பவம் 

عن جابر بن عبد الله رضي الله عنهما قال : خرج علينا النبي صلى الله عليه و سلم فقال : خرج من عندي خليلي جبريل آنفا فقال : يا محمد و الذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه و طوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا و البحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية و أخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل و شجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء و أخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز و جل عند وقت الأجل أن يقبضه ساجدا و أن لا يجعل للأرض و لا لشيء يفسده عليه سبيلا حتى بعثه و هو ساجد قال : ففعل فنحن نمر عليه إذا هبطنا و إذا عرجنا فنجده له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز و جل فيقول له الرب : ادخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : يا رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الله عز و جل للملائكة قايسوا عبدي بنعمتي عليه و بعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة و بقيت نعمة الجسد فضلا عليه فيقول : أدخلوا عبدي النار قال : فيجر إلى النار فينادي : ربي برحمتك أدخلني الجنة فيقول : ردوه فيوقف بين يديه فيقول : يا عبدي من خلقك و لم تك شيئا ؟ فيقول : أنت يا رب فيقول : كان ذلك من قبلك أو برحمتي ؟ فيقول : بل برحمتك فيقول : من قواك لعبادة خمس مائة عام ؟ فيقول : أنت يا رب فيقول : من أنزلك في جبل وسط اللجة و أخرج لك الماء العذب من الماء المالح و أخرج لك كل ليلة رمانة و إنما تخرج مرة في السنة و سألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك ؟ فيقول : أنت يا رب فقال الله عز و جل : فذلك برحمتي و برحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام : إنما الأشياء برحمة الله تعالى يا محمد (حاكم)   قال الحاكم  رحمه الله هذا حديث صحيح الإسناد

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். என்னிடம் என்னுடைய தோழர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சென்றார்கள் அப்போது கூறினார்கள் உங்களை சத்தியத்தின் மீது அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வுடைய அடியார்களின் ஒரு அடியார் முற்காலத்தில் நடுக்கடலில் உள்ள ஒரு 30 அடி உயரம் உள்ள மலை உச்சியில் 500 வருடங்கள் அவர் வாழ்ந்தார். அந்த மலையின் உயரமும் 30 அடி. அதன் அகலமும் 30 அடி.                                                     

 எப்படி பார்த்தாலும் அவர் கரையை அடைவதாக இருந்தால் எந்த திசையை நோக்கினாலும் ஆயிரம் மைல்கள் தூரம் பயணம் செய்தால் தான் அவர் கரையை அடைய முடியும். அப்படிப்பட்ட நடு தீவிலே அவர் வாழ்ந்தார். அல்லாஹ் அவ்வளவு உப்பு நீருக்கு மத்தியிலே அந்த மலை உச்சியில் ஒரு விரல் அளவுக்கு சுவையான நீர் ஊற்றை  வரவழைத்துக் கொண்டிருந்தான். சுய தேவைகளை அவர் மலையின் கீழ் பகுதிக்கு வந்து பூர்த்தி செய்து கொள்வார். மேலும் வருடமெல்லாம் எல்லா சீசனிலும் பழம் தருகின்ற பரக்கத்தான மாதுளை மரத்தை அல்லாஹ் அந்த மலை உச்சியில் வளரச் செய்தான். அவர் அந்த மாதுளையை உண்டு அந்த தண்ணீரை குடிப்பார். உளூச் செய்வதாக இருந்தால் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொள்வார். இவ்வாறாக 500 வருடங்கள் வணக்கத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை கழித்தார். ஒரு நாள் அவருடைய மரண நேரம் நெருங்கிய பொழுது அதை அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்த போது அவர் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ஸஜ்தா செய்த நிலையிலே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் மேலும் என்னுடைய உடல் மண்ணுக்கு இரையாக க் கூடாது. என்னுடைய உடல் கெட்டுவிடக்கூடாது என்று அல்லாஹ்விடம் வேண்டினார். அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். சஜ்தா செய்த நிலையிலே அவருடைய உயிர் பிரிந்தது.  ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும் போது                            

 ஒவ்வொரு முறையும் நாங்கள் பூமிக்கு இறங்கும்போதும் பூமியிலிருந்து விண்ணை நோக்கி செல்லும் போதும் அந்த உடலை நாங்கள் கடந்து செல்வோம். அது அப்படியே பாதுகாப்பாக இருக்கும். அந்த நல்லடியாரைப் பற்றி கியாமத்து நாள் விசாரணையின் போது நடைபெறப் போகும் ஒரு செய்தியை எங்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்திலிருந்து நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த நல்லடியாரை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது மலக்குகளிடம் அல்லாஹ் சொல்லுவான். என்னுடைய இந்த அடியாரை என்னுடைய அருளால் நீங்கள் சுவனத்தில் நுழைவியுங்கள் என்று கூறுவான் அதற்கு அந்த நல்லடியார் ரப்பே என்னுடைய நற்செயலால் நான் சுவனம் நுழைகிறேனே என்று கூறுவார்.                                    

(அதாவது நாம் 500 வருடம் நற்செயல்கள் செய்திருக்கிறோமே என்று அதை பெரிதாக கருதுவார்) அதை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் என்னுடைய அருளால் அவரை சுவனத்தின் நுழையுங்கள் என்று கூறுவான். இவ்வாறாக மூன்று தடவைகளும் அவர் அதையே கூறும்போது

இறுதியாக அல்லாஹ் சொல்வான். என்னுடைய அடியார் என்னுடைய அருளைத் தவிர்த்து அவருடைய அமலால் சொர்க்கம் செல்ல நினைக்கிறார். எனவே அவருடைய அமல் சொர்க்கம் செல்வதற்குப் போதுமானதா என்று கணக்கிடுங்கள் என்று கூறுவான். அப்போது மலக்குகள் கணக்கிடுவார்கள். கணக்கிட்டுப் பார்த்து யா அல்லாஹ் அவருடைய 500 வருட அமல் உலகில் அவருக்கு நீ வழங்கிய கண் பார்வைக்கு மட்டுமே போதுமானதாக ஆகிவிட்டது அவருக்கு நீ வழங்கிய மற்ற அருட்கொடைகளுக்கு கூட அவருடைய அமல்கள் போதாது.  

அவருக்கு நீ உடலைத் தந்தாயே இன்னும் பல நிஃமத்துகளைத் தந்தாயே அதற்கெல்லாம் அவருடைய அமல் போதாது என்று சொன்னவுடன் அப்படியானால் அவரை நரகத்திலே நுழைத்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அப்பொழுதுதான் அந்த அடியார் தவறை உணர்ந்து ரப்பே உன்னுடைய அருளாலேயே நான் சுவனம் அடைகிறேன் என்று மன்னிப்புக் கேட்பார்.                       

அப்போது அல்லாஹ் அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள் என்பான். அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார் அவரிடம் அல்லாஹ் என் அடியானே நீ ஒரு நேரத்தில் இல்லாமல் இருந்தாய் உன்னை படைத்தது யார் என்று கேட்க ரப்பே நீதான் என்று அவர் கூறுவார். அப்போது அல்லாஹ் அது என்னுடைய அருளால் தானே என்று கேட்பான் ஆம் உன்னுடைய அருளால் தான் என்று அந்த அடியார் கூறுவார் 500 வருடங்கள் வணங்குவதற்கு உனக்கு ஆரோக்கியத்தை தந்தது யார் என்று அல்லாஹ் கேட்பான் நீ தான் என்று அந்த அடியார் கூறுவார் மேலும் அல்லாஹ் கேட்பான் இந்த மலை உச்சியிலே அலைகளுக்கு நடுவே என்று அலையும் உம்மைத்  தாக்காமல் உன்னை தங்க வைத்து உனக்காக உப்புத் தண்ணீருக்கு மத்தியிலே சுவையான நீரைக் கொடுத்தது மட்டுமன்றி சீசனில் மட்டுமே விளையக்கூடிய மாதுளையை வருடமெல்லாம் தந்தது மட்டுமன்றி நீ கேட்டவாறு சஜ்தாவுடைய நிலையிலே உன்னுடைய உயிரைக் கைப்பற்றியது யார்  என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ரப்பே நீ தான் எல்லாம் என்று கூறுவார். இப்படியெல்லாம் அவருக்குப் புரிய வைத்து பிறகு அல்லாஹ் என்னுடைய அருளால் அவரை சுவனத்தில் நுழைய வையுங்கள் என்று கூறுவான் அவ்வாறு அவர் சுவனத்திலே நுழைய வைக்கப்படுவார் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும்போது அனைத்து நிஃமத்துகளும் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு தானே தவிர அடியார்களின் அமலைக் கொண்டு கிடையாது என்று கூறினார்கள்.                                 

மேற்படி சம்பவத்தில் படிப்பினைகள்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் போது நான் உட்பட உலகத்தில் யாரும் அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் சுவனம் அடைய முடியாது என்று கூறினார்கள்

படிப்பினை – 1   நீ கொடுத்ததற்கு நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் என்ற நாகூர் அனிபாவின் பாடலைப் போல நாம் காலமெல்லாம் பல்லாயிரம் வருடங்கள் வணங்கினாலும் அல்லாஹ் கொடுத்த நன்கொடைகளுக்கு நன்றியாக .ஆக முடியாது

படிப்பினை – 2  கண்கள் என்பது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது இந்த கண்களால் 6 ஆயிரம் நிறங்களை நாம் பகுத்துப் பார்க்க முடியும் ஆடு மாடுகளால் குறிப்பிட்ட நிறங்களை மட்டும் தான் பார்க்க முடியும்.


படிப்பினை – 3   இறந்ததற்குப் பிறகும் அழிந்து விடாமல் உடல்கள் பாதுகாக்கப்படுவது நபிமார்கள் விஷயத்தில் உறுதியான விஷயமாகும் அல்லாஹ் மற்ற நல்லடியார்களை அவன் நாடினால் அவ்வாறு பாதுகாப்பான் என்கிற படிப்பினையும் இதில் உண்டு


கடல் என்று சொன்னாலே அவ்வப்போது மாபெரும் அலைகள் தோன்றுவது இயல்பு

எத்தனையோ அலைகள் நூறடி உயரத்திற்கு மேலே கூட  உயரும்.  அவ்வாறு இருக்க முப்பதடி உயரமே இருந்த இந்த தீவில் 500 வருடங்கள் எந்த அலைகளும் அவரை தாக்கி விடாமல் அல்லாஹ்  பாதுகாத்திருக்கிறான்


தொடர்படியான அமல் நல்ல மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந்நிலையில் அவரை மவ்த்தாக்குவான்

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي -   كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

மிஃராஜில் சுவனத்தில் பிலால் ரழி அவர்களின் காலடித்தடத்தை நபி ஸல் அவர்கள் காதில் கேட்டதற்கு காரணம் உளூ என்ற நற்செயலை அவர்கள் தொடர்ந்து செய்தது தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ (بخاري

நபி ஸல் அவர்கள் பிலால் ரழி அவர்களிடம் இஸ்லாத்திற்கு வந்த பிறகு நீங்கள் செய்த உயர்ந்த அமலை எனக்குக் கூறும். ஏனெனில் என்னுடைய மிஃராஜ் பயணத்தில் எனக்கு முன்பாக உமது காலடி சப் த த்தை க் கேட்டேன் என்று கூறினார்கள். அதற்கு பிலால் ரழி அவர்கள் நான் அப்படி ஒன்றும் உயர்ந்த அமலை செய்து விடவில்லை. எனினும் நான் எப்போதெல்லாம் உளூச் செய்வேனோ அது இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் உளூச் செய்யும் போதெல்லாம் அல்லாஹ் எனக்கு நாடிய தொழுகையை நான் தொழுவேன் என்றார்கள் 

மற்ற மாதங்களிலும் அமல்களை தொடர்ந்து செய்வதற்கான பயிற்சியாகத் தான் ரமழானின் அமல்கள் கடமையாக்கப்பட்டுள்ளது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة) ذَكَرَ كَعْب رضي الله عنه أَنَّهُ مَنْ صَامَ رَمَضَان وَهُوَ يُحَدِّث نَفْسه إِذَا أَفْطَرَ رَمَضَان أَنْ لَا يَعْصِي اللَّه دَخَلَ الْجَنَّة بِغَيْرِ مَسْأَلَة وَلَا حِسَاب (تفسير ابن كثير)

ரமழான் முடிந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டேன் என்ற நல்ல மன உறுதியுடன் யார் ரமழானில் நோன்பு வைப்பாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்.

ஷைத்தான்கள் சிறை பிடிக்கப்படும் மாதமான ரமழானில் அமல்கள் செய்வது வாகன நெரிசல் இல்லாத நேரங்களில் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது போல... இவ்வாறு வண்டி ஓட்டுபவனை டிரைவர் என்று கூற முடியாது.  வாகன நெரிசல் உள்ள நேரங்களிலும் வண்டி ஓட்டுபவன் தான் உண்மையான டிரைவர். அதுபோல் ஷைத்தான்கள் அவிழ்த்து விடப்படும் மற்ற மாதங்களிலும் அமல்கள் செய்பவர் தான் உண்மையான வணக்க சாலி ஆவார்.

முனாஃபிக்கின் அடையாளம் எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

 நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும் மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது என்றார்கள்.                                        

விளக்கம்- அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.  

எந்த ஒரு அமலிலும் இஸ்திகாமத் வேண்டும்

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)فصلت

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்தால் தான் பலனைத் தரும்

عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ (بخاري)

பல்வேறு விஷயங்களில் சஹாபாக்களின் இஸ்திகாமத்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَيَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ (ابن 

ஸஃதுப்னு அபீ வக்காஸ் ரழி  இந்த அறிவுரைக்குப் பின்னால் வாழ்நாள் முழுக்க ஹராமை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் கூஃபாவில் இருந்த காலத்தில் அவர்களுடைய ஆடு  வெறு ஒருவருடைய தோட்டத்தில்  சென்று மேயந்து விட்டது என்பதற்காக அந்த ஆட்டில் இருந்து இனிமேல் பால் கூட நான் கறக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு இஸ்திகாமத்துடன் இருந்தார்கள்.

சின்னச் சின்ன  விஷயங்களிலும் இமாம்களின் இஸ்திகாமத்

இமாம் அபூஹனீஃபா ரஹ் வாழ்நாள் முழுக்க யாரைப்பற்றியும்புறம் பேசியது கிடையாது

இமாம் ஷாஃபிஈ ரஹ் வாழ்நாள் முழுக்க ஒரு   பொய் கூடபேசியதே கிடையாது

இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் பேசினால் கல்வியைத்தவிர வேறு எதுவும்  பேசியதில்லை

இன்றைக்கு எந்த விஷயத்திலும் நம்மிடம் இஸ்திகாமத் இருப்பதில்லை. சில இளைஞர்கள்  ஷரீஅத் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின்  பெற்றோர் அல்லது அவர்களின் ஊர் நடைமுறை என்பது போன்று விஷயங்கள் குறுக்கே வரும்போது அவர்களின் இஸ்திகாமத் தளர்ந்து விடுகிறது.

வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்போது மட்டும் தொழும் சந்தர்ப்பவாதிகளைப் பற்றி....

சில முஸ்லிம்கள் இப்படியும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தேவை நிறைவறவிருந்தால் மட்டும் தொழுவார்கள் அந்த தேவை நிறைவேறி விட்டால் அல்லது அந்த துன்பம் நீங்கி விட்டால் தொழுகையை மறந்து விடுவார்கள்

ஆழ்கடல் இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர். அதில் ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால் அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர்தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)

நபி யூனுஸ் தன் உம்மத்தினருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறியும் கேட்காததால் அல்லாஹ்விடம் அவர்களின் மீது வேதனையை இறக்க துஆ செய்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டு இந்த நாளில் வேதனை வரும் என்று அறிவித்தான் அதை அப்படியே அந்த மக்களிடம் நபி யூனுஸ் அலை கூறினார்கள் அப்பொழுது அந்த மக்களுக்கு பயம் வந்தது அவர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி பெரியவர்கள், சிறியவர்கள், கால்நடைகள் என எல்லோரும் ஒன்று கூடி துஆ செய்ததால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த வேதனையை அல்லாஹ் ரத்து செய்தான் இதற்கிடையே வேதனை வரும் என்று அறிவித்த நபி யூனுஸ் அலை ஊரை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள் அல்லாஹ் அறிவித்தும் கூட இப்படி வேதனை வராமல் ஆகி விட்டதே என்ற அதிருப்தியுடன் அவர்கள் வெளியேறியதாலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி வெளியேறியதால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான்.

இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும் செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் தான் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன் காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ- آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91يونس)عَنِ ابْنِ عَبَّاسٍ رض إِنَّ جِبْرِيلَ كَانَ يَدُسُّ فِي فَمِ فِرْعَوْنَ الطِّينَ مَخَافَةَ أَنْ يَقُولَ : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.(مسند أحمد, تفسير ابن كثير)

கடைசி நேரத்தில் துன்பத்தின் போது ஃபிர்அவ்ன் கேட்கும் பிரார்த்தனை ஒருவேளை ஏற்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவன் பிரார்த்தனையை முழுமையாக்க விடாமல் அவனுடைய வாயில் ஜிப்ரயீல் அலை மண்ணைப் போட்டு திணித்தார்கள்


ரமழான் முடிந்தவுடன் ஐவேளை தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்

உதாரணம் 1ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப்பற்றி என்ன நினைப்போம்

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل

قَالَ عَبْد اللَّه بْن كَثِير السُّدِّيّ : هَذِهِ اِمْرَأَة خَرْقَاء كَانَتْ بِمَكَّة كُلَّمَا غَزَلَتْ شَيْئًا نَقَضَتْهُ بَعْد انْبِرَامِهِ  (تفسير ابن كثير

மக்காவில் முட்டாள் தனமான இப்படியொரு பெண் இருந்தாள். அழகாக நூல் நூற்று அதை ஒரு கோர்வையாக கஷ்டப்பட்டு ஆக்கிய பின் கடைசியில் அனைத்தையும் கலைத்துப் போட்டு விடுவாள். அதுபோல ரமழானில கஷ்டப்படு அமல் செய்து இறுதியில் அனைத்தையும் வீணாக்கி விடுகிறோம்


உதாரணம் 2  ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

உதாரணம்- 3-   ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம்- 4-  ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி. அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும்  ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.  

தொழுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.


வியாழன், 5 மார்ச், 2026

இஃதிகாஃப்

 06-03-2026

RAMZAN- 16 بسم الله الرحمن الرحيم  

      இஃதிகாஃபின் சிறப்புகளும்  சட்டங்களும்

ஜும்ஆ பயான் 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ரமழான் கடைசி பத்து நாட்களின் சிறப்பு

عن عَائِشَة رض كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ(مسلم) باب الاِجْتِهَادِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ – كتاب الاعتكاف 

மற்ற நாட்களை விட ரமழான் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் அதிகம் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்

عَنْ عَائِشَةَ رَضِ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَه(بُخاري) باب الْعَمَلِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-كتاب فضل ليلة القدر- قِيلَ لأَبِي بَكْرٍ مَا رَفْعُ الْمِئْزَرِ؟ قَالَ:اعْتِزَالُ النِّسَاءِ (مصنف ابن ابي شيبة) 

இஃதிகாஃப் என்பதன் பொருள்

وَالِاعْتِكَافُ فِي اللُّغَةِ مُشْتَقٌّ مِنْ الْعُكُوفِ وَهُوَ الْمُلَازَمَةُ وَالْحَبْسُ وَالْمَنْعُ وَمَحَاسِنُ الِاعْتِكَافِ ظَاهِرَةٌ فَإِنَّ فِيهِ تَسْلِيمَ الْمُعْتَكِفِ كُلِّيَّتَهُ إلَى طَاعَةِ اللَّهِ لِطَلَبِ الزُّلْفَى وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (جوهرة النيرة)

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனைதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு. இஸ்லாத்தில் ‘இஃதிகாஃப்’ என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு பெயராகும். அவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளையும் பேசாமலும் பள்ளியில் தங்கியிருந்து தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும்.

இஃதிகாஃபின் நன்மைகள்

عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. (شعب الايمان-لبيهقى-3680)

ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு  ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-

عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم, والبيهقى-3965)

இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருப்பவருக்கு, அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, ஹாகிம், பைஹகீ-

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)

ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)

இஃதிகாஃப் மூன்று வகை 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்]  2, சுன்னத் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3,  நஃபில்

الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف-

வாஜிபான இஃதிகாஃப் என்பது நேர்ச்சை இஃதிகாஃபைக் குறிக்கும் செய்யும் உமர் ரழி அவர்கள் நபி ஸல்அவர்களிடம் நான் மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்தேன் அதை இப்போது நிறைவேற்றவா என கேட்க, ஆம் நிறைவேற்றுங்கள் என்றார்கள்

الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ- 

சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப். இதுதான் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்]   

நபி (ஸல்) அவர்கள் கடைசி காலம் வரை ரமளான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்துவந்தனர்.

-الثالث  فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)

மஸ்ஜிதில் நுழையும் போது இஃதிகாஃப் நிய்யத்தில் நுழைவது. சிறிது நேரமாக இருந்தாலும் சரி. இதற்கு காலம் நிர்ணயம் இல்லை. எப்போது அவர் வருவாரோ அத்தோடு அது நிய்யத் முடிந்து விடும்.

கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாக ஆகாது 

قَالَ الزُّهْرِيُّ  يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة

ஆச்சரியமாக இருக்கிறது. நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்பு  ஒரு வருடம் கூட விடாத இந்த சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃபை மக்கள் எவ்வாறு விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது இந்த இஃதிகாஃப் நோன்பு என்ற வணக்கத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இரண்டு வணக்கமாக நிறைவேறுகிறது. உள்ளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பதும் உலக சிந்தனைகளில் இருந்து தூரமாக இருப்பதும் இதில் இருக்கிறது 

இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்

وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ  (الجوهرة)

இஃதிகாஃப் ஆரம்பித்த பின் நிர்பந்தத்தால் விடுபட்டால் அதை இன்னொரு நாளில் களா செய்ய வேண்டுமா ?

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري) بَاب مَنْ أَرَادَ أَنْ يَعْتَكِفَ ثُمَّ بَدَا لَهُ أَنْ..

 ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை  அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப்  பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது  நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன  என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை  ஆயிஷா , ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற , இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன.  பின்பு நபி ஸல் அவர்கள் நான்  இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் புஹாரீ – 2041, 

  

இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி ஸல் அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில்  நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல.. 

அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன ?

கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் ( ஃபத்ஹுல் பாரீ)                                                           

இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும்

ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள் 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ..قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ1 فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ2 تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)(باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى الطِّينِ)كتاب الأذان

ஒரே ஒரு லைலத்துல் கத்ரு இரவை பத்து நாட்களிலும் தேட வேண்டுமா என்று சங்கடப்பட்டு 27-ம் இரவில் மட்டும் அமல் செய்தால் அந்த இரவு கிடைத்து விடும் என்று எண்ணுபவர்களுக்கு மேற்படி ஹதீஸ் பகதிலடியாக  அமைந்துள்ளது. நபி ஸல் அவர்களை மூன்று பத்து நாட்களிலும் அந்த இரவை அல்லாஹ் தேட வைத்துள்ளான்

இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்- 

عن ابن عباس والحسن رض قالا  لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي)

ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود) بَاب الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ-الصَّوْمِ- 

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை நலம் விசாரிக்க வெளியே செல்ல மாட்டார். ஜனாஸாவில் கலந்து கொள்ள வெளியே வர மாட்டார். மனைவியைத் தொடக் கூடாது. மனைவியைதக் கட்டித் தழுவக் கூடாது. அவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். நோன்பு இல்லாமல் இந்த இஃதிகாஃப் கூடாது- ஆயிஷா ரழி 

المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة  قاله ابن خويز منداد عن مالك (قرطبي)

குர்துபி யில் உள்ள வாசகம்.  இஃதிகாஃப் இருப்பவர் பெரும்பாவம் செய்து விட்டால் அவரின் இஃதிகாஃப் முறிந்து விடும். காரணம் பெரும்பாவம் என்பது இஃதிகாஃபின் நோக்கத்திற்கு நேர் மாற்றமான செயலாகும் எவ்வாறு காற்றுப் பிரிந்தால் சுத்தம் இல்லாமல் ஆகி விடுமோ அதுபோல. -  இமாம் மாலிக் ரஹ்

வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும் இது பற்றி எல்லா சட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.                                               

பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்

أَنْ لاَ يَعُودَ مَرِيضًا : عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ4 يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ  أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)

நபி ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது  நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிப்பார்கள் நின்று கொண்டு நலம் விசாரிக்க மாட்டார்கள்

மலம்,ஜலம் கழிக்கச் செல்பவர் யாரிடமும் தேவையின்றி பேசிக் கொண்டிருக்காமல் உடனே திரும்பி விடுவது நல்லது

وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ  مِنْ الطَّهُورِ (الهداية)

கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது

நபி[ஸல்] ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது அதுவரை இறங்கிய குர்ஆனை முழுவதும் வானவர் ஓதிக்காட்டுவார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ (ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ

இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு

மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது

عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)

மஸ்ஜிதில் நான்கு செயல்களை நபி ஸல் தடுத்தார்கள்.1.விற்பது வாங்குவது 2.(அல்லாஹ்வை நினைவு படுத்தாத) கவிகள் படிப்பது 3.காணாமல் போன பொருளை சப்தமிட்டுத் தேடுவது4. தொழுகைக்கு முன்னால் மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பது

இஃதிகாஃப் இருப்பவர் யாரிடமும் பேசக் கூடாது என்று கருதுவதும் தவறாகும், முந்திய உம்மத்தினருக்கு அந்த அனுமதி இருந்தது

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم) 26فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.(اضواء البيان) 

عَنْ حَارِثَةَ قَالَ:كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلاَنِ فَسَلَّمَ أَحَدُهُمَا وَلَمْ يُسَلِّمِ الآخَرُ فَقُلْنَا أَوْ قَالَ مَا بَالُ صَاحِبِكَ لَمْ يُسَلِّمْ قَالَ : إِنَّهُ نَذَرَ صَوْمًا لاَ يُكَلِّمُ الْيَوْمَ إِنْسِيًّا. قَالَ عَبْدُ اللَّهِ بِئْسَمَا قُلْتَ إِنَّمَا كَانَتْ تِلْكَ امْرَأَةً قَالَتْ ذَلِكَ لِيَكُونَ لَهَا عُذْرا وَكَانُوا يُنْكِرُونَ أَنْ يَكُونَ وَلَدٌ مِنْ غَيْرِ زَوْجٍ إِلاَّ زِنًا - فَسَلِّمْ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ خَيْرٌ لَكَ(تفسير ابن كثير

ஹாரிஸா ரழி கூறினார்கள் நான் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அமர்ந்திருந்தேன் அப்போது இரு நபர்கள் வந்தார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் ஸலாம் கூற, மற்றவர் ஸலாம் கூறவில்லை. அப்போது நாங்கள் அதுபற்றி எங்களுக்கு சலாம் சொன்ன நபரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறினார் அந்த நபர் நோன்பு வைத்துள்ளார் அதனால் யாரிடமும் பேச மாட்டார் என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. மர்யம் அலைஹிஸ்ஸலாம் என்ற பெண்ணுக்கு மட்டும் அந்த அனுமதி இருந்த து. கணவன் இல்லாமல் குழந்தை பெற்றதால் அந்த சமூகம் அதைப் பழித்துப் பேசியதால் அல்லாஹ் அவ்வாறு உத்தரவிட்டான். இது நமக்குக் கிடையாது எனவே நீங்கள் பேசுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையைத் தடுங்கள் நன்மை கிட்டும்.                                                               

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ فَرَآهَا لَا تَكَلَّمُ فَقَالَ مَا لَهَا لَا تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً5 قَالَ لَهَا تَكَلَّمِي فَإِنَّ هَذَا لَا يَحِلُّ هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ فَتَكَلَّمَتْ (بخاري) باب أَيَّامِ الْجَاهِلِيَّةِ – كتاب مناقب الأنصار عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ وَلَا يَسْتَظِلَّ6 وَلَا يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ (بخاري)باب النَّذْرِ فِيمَا لاَ يَمْلِكُ وَفِى مَعْصِيَةٍ- كتاب الَأيمان والنذور

ஜைனப் என்ற பெண்ணிடம் அபூபக்கர் ரழி வருகை தந்தார்கள் அவர் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கண்டு இவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டது. உடனே அபூபக்கர் ரழி அவர்கள் அதைக் கண்டித்து இது அறியாமைக் காலத்தின் செயல் என்றார்கள் அதன் பிறகு அவர் பேசினார்

இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியின் வாசலில் நின்று நபி ஸல் மனைவியிடம் பேசிய சம்பவம்

عن صَفِيَّةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بُخاري)2038 باب هَلْ يَخْرُجُ الْمُعْتَكِفُ لِحَوَائِجِهِ إِلَى بَابِ الْمَسْجِدِ- كتاب الاعتكاف-شرح : (ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ )أَيْ تَرُدُّ إِلَى بَيْتِهَا(فَقَامَ مَعَهَا يَقْلِبُهَا )أَيْ يَرُدُّهَا إِلَى مَنْزِلِهَا (عَلَى رِسْلِكُمَا )أَيْ عَلَى هِينَتِكُمَا فِي الْمَشْي فَلَيْسَ هُنَا شَيْءٌ تَكْرَهَانِهِ (فتح الباري) وَالْمُحَصَّلُ مِنْ هَذِهِ الرِّوَايَات أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْسُبْهُمَا إِلَى أَنَّهُمَا يَظُنَّانِ بِهِ سُوءًا لِمَا تَقَرَّرَ عِنْده مِنْ صِدْقِ إِيمَانِهِمَا وَلَكِنْ خَشِيَ عَلَيْهِمَا أَنْ يُوَسْوِسَ لَهُمَا الشَّيْطَان ذَلِكَ لِأَنَّهُمَا غَيْرُ مَعْصُومَيْنِ فَقَدْ يُفْضِي بِهِمَا ذَلِكَ إِلَى الْهَلَاكِ فَبَادَرَ إِلَى إِعْلَامهمَا (فتح الباري)

  கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருந்த நேரத்தில் அவர்களுடைய மனைவி அங்கு வந்தார்கள் இரவு நேரமாக இருந்ததால் மனைவியை அனுப்புவதற்காக தெருமுனை வரை சென்றார்கள். அப்போது இரண்டு நபித் தோழர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அழைத்து இவர் என்னுடைய மனைவிதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த இருவரும் அல்லாஹ்வின் தூதரே தங்களை குறித்து எந்த சந்தேகமும் நாங்கள் கொள்ளவில்லை என்று கூறினார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமின் மகனுடைய உடம்பில் ஷைத்தான் ரத்தம் ஓடும் இடமெல்லாம் ஓடுகிறான் என்றார்கள். அதாவது இப்போது உங்கள் மனதில் சந்தேகம் இல்லா விட்டாலும் பின்னால் உங்களின் மனதில் சந்தேகத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். எனவே நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.


படிப்பினை- நம் மீது தவறு இல்லா விட்டாலும் பிறர் தவறாக எண்ணும்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற பாடமும்  இதில் உண்டு இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட சந்தேகப்படும்படி நடந்து கொள்பவர்கள்தான் அதிகம். ஏனெனில்அவர்களின் தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் மற்றவர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வதை காணலாம் சந்தேகக்கோடு அது வந்தாலே கேடு என்று சொல்வார்கள். எனவே இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். சில சமயங்களில் நாம் என்னதான் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும் கூட ஷைத்தான் நம்மைப்பற்றி மற்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு உண்டு. எனவே அந்த சந்தேகம் ஏற்படும் முன்பே அதை நீக்குவது கட்டாயமாகும்.                            


பொருள்-1,எந்த இரவைத் தேடுகிறீர்களோ அந்த இரவு இனிமேல் தான் வரவிருக்கிறது, 2, மூக்கின் நுனி 3, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது 4,நிற்க மாட்டார்கள் 5,மவுனமாகவே இருந்து ஹஜ் செய்வதாக, 6,நிழலில் ஒதுங்க மாட்டேன் 7,சிறைக்கைதிகள்


வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தராவீஹ் தொழுகையின் முக்கியத்துவம்

 20-02-2026

ஜும்ஆ பயான்


RAMZAN -2

بسم الله الرحمن الرحيم  

தராவீஹ் தொழுகையின் சிறப்பு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில் ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் என்று அறிவித்தால் மக்கள் அங்கேயும் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் அல்லாஹ் ரமழானில் ஆஃபர் அறிவிக்கிறான். ஒன்று எழுபது மடங்கு நன்மை என அறிவிக்கிறான். ஆனாலும் ஒரு சாரார் மட்டுமே அந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் ஏதோ ரமழானில் ஆரம்பத்தில் முதலாவது தராவீஹ் அதற்கு அடுத்து 27-ம் தராவீஹ் என இந்த இரண்டு இரவுகளில் மட்டுமே தொழுதால் ரமழானின் பெருமையை அடைந்து விட்டதாக தப்புக் கணக்குப் போடுகின்றனர். இதை உணர்த்துவது நமது கடமையாகும்.                      

பொதுவாகவே இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு

عن الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا(بخاري). بَاب قِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَ- كتاب التهجد

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم)   

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ غُلَامًا شَابًّا وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنْ النَّارِ قَالَ فَلَقِيَنَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَمْ تُرَعْ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ بَعْدُ لَا يَنَامُ مِنْ اللَّيْلِ إِلَّا قَلِيلًا(بخاري)بَاب فَضْلِ قِيَامِ اللَّيْلِ-كتاب التهجد(وفي الحديث إيماء إلى أن قيام الليل ينجي من النار)

விளக்கம்- ஸாலிம் ரஹ் அவர்களின் தந்தையான இப்னு உமர் ரழி கூறினார்கள். நபி ஸல் அவர்கள் காலத்தில் யாரேனும் கனவு கண்டால் அதை நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். எனக்கும் ஒரு ஆசை இருந்தது. நானும் இதுவரை இரவில் எழுந்து வணங்கும் பழக்கம் இல்லாத இளைஞர் அப்துல்லாஹ் ரழி அவர்கள் இனி அதை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கனவு காட்டப்பட்டுள்ளது.  கனவில் அவரை இரு மலக்குகள் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், மூன்றாவதாக ஒரு மலக்கு நீ பயப்படாதே என்று கூறி அவர்களிடமிருந்து இவரை காப்பாற்றுவதாகவும் கனவு காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயம் நபி ஸல் அவர்களுக்குத் தெரிந்த போது அப்துல்லாஹ் இரவில் வணங்குபவராக இருந்தால் நல்லது அவர்களும் கூறியுள்ளார்கள்.  

சஹாபாப் பெருமக்களின் தராவீஹ் தொழுகை எப்படி இருந்தது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِى يَقُولُ:كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ فِى رَمَضَانَ فَنَسْتَعْجِلُ الْخَادِمُ بِالطَّعَامِ مَخَافَةَ الْفَجْرِ (سنن الكبري

அப்துல்லாஹ் இப்னு அபீபக்ர் ரழி அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய தந்தை சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் நாங்கள் எங்களுடைய காலத்தில் ரமழானில் நின்று வணங்கி விட்டுத் திரும்புவோம். அப்போது ஃப்ஜ்ர் நேரம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீக்கிரமாக உணவு சமைத்துத் தரும்படி பணியாளரிடம் நாங்கள் ஏவுவோம்.

ஒரு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லும் இந்தக் காலமும், நீண்ட நேரம் நின்று தொழுத அந்தக்காலமும்

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً - قَالَ - وَكَانُوا يَقْرَءُونَ بِالْمِئِينِ  وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عُصِيِّهِمْ فِى عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِىَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ (سنن الكبري للبيهقي) 

ஸாயிப் இப்னு யஜீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் உமர் ரழி அவர்களின் காலத்தில் ரமழானில் இருபது ரக்அத்துகள் தொழுவோம். அப்போது தொழ வைப்பவர்கள் (ஒரு தொழுகையில்) நூறு ஆயத்துகள் வரை ஓதுவார்கள். உமர் ரழி அவர்களின் காலத்திலும் இது தொடர்ந்தது. எந்த அளவுக்கென்றால் எங்களில் சிலர் நிற்க முடியாமல் கைத்தடி மீது சாய்ந்தவர்களாக நின்று தொழுவார்கள்.                

120-வது வயதிலும் தராவீஹ் தொழுகை நடத்தியவர்

عَنِ الْوَلِيدِ بْنِ عَلِيٍّ  عَنْ أَبِيهِ  قَالَ : كَانَ سُوَيْد بْنُ غَفَلَةَ يَؤُمُّنَا فَيَقُومُ بِنَا فِي شَهْرِ رَمَضَانَ وَهُوَ ابْنُ عِشْرِينَ وَمِئَةِ سَنَةٍ. (مصنف ابن ابي شيبة) 

குர்ஆனை விரைவாக ஓதுபவர், மெதுவாக ஓதுபவர், நடுத்தரமாக ஓதுபவர் என மூன்று சாரார் அப்போதே இருந்துள்ளனர்

عَنْ أَبِى عُثْمَانَ النَّهْدِىِّ قَالَ :دَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِرَضِىَ اللَّهُ عَنْهُ بِثَلاَثَةِ قُرَّاءٍ فَاسْتَقْرَأَهُمْ  فَأَمَرَ أَسْرَعَهُمْ قِرَاءَةً أَنْ يَقْرَأَ لِلنَّاسِ ثَلاَثِينَ آيَةً  وَأَمَرَ أَوْسَطَهُمْ أَنْ يَقْرَأَ خَمْسًا وَعِشْرِينَ آيَةً  وَأَمَرَ أَبْطَأَهُمْ أَنْ يَقْرَأَ عِشْرِينَ آيَةً وَكَذَلِكَ رَوَاهُ الثَّوْرِىُّ (سنن الكبري)  

 உமர் ரழி அவர்கள் மூன்று காரிகளை அழைத்து தொழ வைக்கக் கூறுவார்கள். அவர்களில் சற்று விரைவாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். அவர்களில் இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் 25 ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் இருபது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள்.   விளக்கம்- சஹாபாக்களில் யாரும் நம்முடைய சில ஹாஃபிழ்களைப் போன்று விரைவாக ஓதும் வழமை யாரிடமும் இருந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் முப்பது ஆயத்துகள் ஓதி விரைவாகத் தொழு வைப்பவர் என்றால் நாம் சாதாரண காலத்தில் தொழ வைக்கும்போது எந்த வேகத்தில் ஓதுகிறோமோ அந்த விரைவாகும்.       

عَنِ الْحَسَنِ قَالَ:مَنْ أَمَّ النَّاسَ فِي رَمَضَانَ فَلْيَأْخُذْ بِهِمَ الْيُسْرَ  فَإِنْ كَانَ بَطِيءَ الْقِرَاءَةِ فَلْيَخْتِمَ الْقُرْآنَ خَتْمَةً  وَإِنْ كَانَ قِرَاءَةً بَيْنَ ذَلِكَ فَخَتْمَة وَنِصْف  فَإِنْ كَانَ سَرِيعَ الْقِرَاءَةِ فَمَرَّتَيْنِ- كَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يَأْمُرُ الَّذِينَ يَقْرَؤُونَ فِي رَمَضَانَ  يَقْرَؤُونَ فِي كُلِّ رَكْعَةٍ بِعَشْرِ آيَاتٍ عَشْرِ آيَاتٍ (مصنف ابن ابي شيبة)

ஹஸன் ரஹ் கூறினார்கள் ரமழானில் மக்களுக்கு தராவீஹ் தொழவைப்பவர் மக்களை சிரமப்படுத்தாமல் இலகுவான நிலையைக் கடை பிடிக்கட்டும். யார் மெதுவாக ஓதுவாரோ அவர் ஒரு குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் ஒன்றரை குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் இரண்டு குர்ஆன் முடிக்கட்டும்.                                                   

நோன்புக்கு முந்தைய நாளிலேயே தராவீஹ் தொழுகையின் சிறப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசியது

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ رضي الله عنه عَنْ سَلْمَانَ قَالَ:خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ شَهْرٌمُبَارَكٌ شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍجَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْركَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ.. (ابن خزيمة) 

நோன்பு துவங்குவதற்கு ஓரிரு தினங்கள் இருக்கும்போது ஷஃபான் மாத இறுதியில் நபி ஸல்  எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். மக்களே மகத்தான மாதம்  இப்போது  நிழலிட்டுள்ளது. வரவுள்ளது. அது பரக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு அதில் உள்ளது. அதில் நோன்பு வைப்பதை அல்லாஹ் ஃபர்ளாகவும் இரவில் நின்று வணங்குவத சுன்னத்தாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அந்த மாதத்தில் ஒரு உபரியான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் ஒரு ஃபர்ளை நிரைவேற்றுபவரைப் போலவும் அந்த மாதத்தில் ஒரு ஃபர்ளான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் 70 ஃபர்ளை நிறைவேற்றுபவரைப் போலவும் ஆகி விடுவார்.                                                                                                    

தராவீஹ் தொழுகையை தொடங்கியவர்கள் நபி ஸல் அவர்கள்.

 என்றாலும் தொடர்ந்து தொழுதால் உம்மத் மீது கடமையாகி விடும் என்ற அச்சத்தால் அதை வழமையாக்கவில்லை 

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى ذَاتَ لَيْلَةٍ فِي الْمَسْجِدِ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ ثُمَّ صَلَّى مِنْ الْقَابِلَةِ فَكَثُرَ النَّاسُ ثُمَّ اجْتَمَعُوا مِنْ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوْ الرَّابِعَةِ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحَ قَالَ قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ وَلَمْ يَمْنَعْنِي مِنْ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ وَذَلِكَ فِي رَمَضَانَ.(بخاري) كتاب التهجد

இன்னும் பல சுன்னத்துகளை நபி (ஸல்) செய்ய விரும்பினாலும் உம்மத் மீது ஃபர்ளாகி விடுமோ என்ற பயத்தில் விட்டுள்ளார்கள்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ وَمَا سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَةَ الضُّحَى قَطُّ وَإِنِّي لَأُسَبِّحُهَا(بخاري) كتاب التهجد

தன் உம்மத்தின் மீது கடமையாகி விடுவதை அஞ்சி நபி[ஸல்] வழமையாக்காத செயலை உமர்  [ரளி] வழமையாக்கினார்கள்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ (بخاري) بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَانَ- كِتَاب صَلَاةِ التَّرَاوِيحِ

விளக்கம் -அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரீ ரழி கூறினார்கள் நான் உமர் ரழி அவர்களுடன் ரமழான் இரவில் மஸ்ஜிதுக்குச் சென்றேன்.அப்போது மக்கள் பல பிரிவுகளாக நின்று தராவீஹ் ஜமாஅத் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு நான் இவர்களையெல்லாம் ஒரேயொரு ஹாஃபிழுக்குப் பின்னால் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டார்கள். அதன்படி மிகச் சிறந்த காரீயாக விளங்கிய உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் மக்களை ஒன்று திரட்டினார்கள். பின்பு மற்றொரு இரவில் நான் மஸ்ஜிதுக்குச் சென்றேன். உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் தராவீஹ் தொழுகையை மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட உமர் ரழி அவர்கள் பித்அத்துகளில் இது நல்ல பித்அத் என்றார்கள்.                                    

குர்ஆனை ஒன்று திரட்டியதும் கூட நல்ல பித்அத் என்ற பட்டியலில் சேரும்

عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنْ الْقُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ قَالَ أَبُو بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لَا يَتَكَلَّمُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ وَلَا نَتَّهِمُكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعْ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلَانِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقُمْتُ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَالْعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ  (بخاري

விளக்கம்- யமாமா போருக்குப் பின்பு குர்ஆனை மனனம் செய்த அறிஞர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள். இதனால் குர்ஆனை நம்மை விட்டும் சென்றுவிடுமோ என்ற கவலை ஹழ்ரத் உமர்(ரழி) அவர்களுக்கு ஏற்பட்டது. இக்கவலையை அப்போது கலீஃபாவாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் தெரிவித்து குர்ஆனை ஒன்று திரட்டும்படி கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்யாத செயலை நாம் எவ்வாறு செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனை ஒன்று திரட்டும் இந்தப் பணி நன்மையாகவே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிறகு அபூபக்கர்(ரழி) அவர்கள் ஜைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களிடம் குர்ஆனை நீங்கள் ஒரே பிரதியாக ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இறைத் தூதர் (ஸல்) செய்யாத ஒரு செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்க, உமர்(ரழி) அவர்கள் கூறிய பதிலை அப்படியே இவர்களிடம் அபூபக்கர் (ரழி)  கூறினார்கள்

ஜைத்இப்னு ஸாபித்(ரழி)அவர்கள் கூறுகிறார்கள். எதற்காக அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோரின் அல்லாஹ் விரிவாக்கினானோஅதற்காக எனது மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் கூறியது போல் குர்ஆனை ஒன்று திரட்ட நான் முன் வந்தேன். மக்களின் கரங்களில் அவர்கள் குர்ஆனை எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், பேரீத்த மட்டைகள், ஓடுகள் ஆகியவற்றிலிருந்து நான் திருக்குர்ஆனை ஒன்று திரட்டத் துவங்கினேன். யாரெல்லாம் குர்ஆனை மனனம் செய்திருந்தார்களோ அவர்களிடமிருந்து  ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். ஜைதுப்னு ஸாபித்(ரழி) அவர்கள் பொதுஅழைப்பாக யார் குர்ஆனை மனனம் செய்துள்ளீர்களோ குர்ஆனை யார் எழுதி வைத்துள்ளீர்களோ அவர்களெல்லாம் என்னிடம் வாருங்கள் என அழைத்தார்கள். தேடிச் சென்றும் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். ஒருவர் சொன்னதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் பலரிடம் அதை உறுதிப் படுத்துவார்கள். இவ்வாறு பல கோணங்களிலும் ஆராய்ந்த பின் தான் குர்ஆன் வசனங்களை தம் தொகுப்பில் பதிவு செய்வார்கள். திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் விடுபட்டுப் போகாத அளவுக்கு கடும் முயற்சி செய்தார்கள். இதைப் பற்றி ஜைத் இப்னு ஸாபித் (ரழி) கூறும்போது ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றியமைக்கச் சொல்லியிருந்தாலும் அது எனக்கு இலகுவாக இருக்கலாம் அதை விட குர்ஆனை ஒன்று திரட்டும் பணி எனக்கு மிக சிரமமாக இருந்தது எனக் கூறினார்கள். இவ்வாறான கடும் சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை அவர்கள் திரட்டினார்கள். 

 இதன் பிறகு நூல் வடிவிலான குர்ஆன் பிரதி அபூபக்கர் (ரழி)அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன்பின் உமர் (ரழி) அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது.அதன்பின் உமர் (ரழி) அவர்களின் மகளும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா(ரழி) அவர்களிடம் குர்ஆன் பிரதி பாதுகாப்பாக இருந்தது

உமர் ரழி அவர்கள் தொடங்கி வைத்த தராவீஹ் தொழுகை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர் 

உமர் (ரழி) அவர்களின் கருத்துக்குத் தோதுவாக குர்ஆன் வசனங்கள் இறங்கியுள்ளன. 

قال الله تعالي وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى..(125التوبة)عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ اللَّهَ فِي ثَلَاثٍ أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلَاثٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ قَالَ وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ نِسَائِهِ فَدَخَلْتُ عَلَيْهِنَّ قُلْتُ إِنْ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا مِنْكُنَّ حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ قَالَتْ يَا عُمَرُ أَمَا فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ فَأَنْزَلَ اللَّهُ {عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ} الْآيَةَ (بخاري) باب قَوْلِه ( وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) كتاب التفسير

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ : وَافَقْتُ رَبِّي فِي ثَلاثٍ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، هَذَا مَقَامُ إِبْرَاهِيمَ لَوِ اتَّخَذْنَاهُ مُصَلًّى ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى : وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ، وَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، لَوْ حَجَبْتَ نِسَاءَكَ فَإِنَّهُ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَأَنْزَلَ اللهُ آيَةَ الْحِجَابِ: {وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ[الأحزاب:53} وَقُلْتُ فِي أُسَارَى بَدْرٍ: اضْرِبْ أَعْنَاقَهُمْ  فَاسْتَشَارَ أَصْحَابَهُ ، فَأَشَارُوا عَلَيْهِ بِأَخْذِ الْفِدَاءِ ، فَأَنْزَلَ اللهُ:{ كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الأَرْضِ[الأنفال:67}(طبراني)

மகாமே இப்றாஹீம் அருகில் இருந்தபடி உமர் ரழி அவர்கள் மகாமே இப்றாஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கிக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான்.   2. நபி ஸல் அவர்களிடம் உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களை சந்திக்க நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் வீட்டில் திரையை ஏற்படுத்தி உங்கள் மனைவியரை மற்றவர்கள் பார்க்காத வகையில் செய்தால் நன்றாக இருக்குமே என்றார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக ஹிஜாபுடைய வசனத்தை இறக்கினான்.  3.பத்ரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் அவர்களைக் கொன்று விடும்படி உமர் ரழி அவர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடமும் ஆலோசனை செய்ததன் அட்ப்படையில் ஃபித்யா வாங்கிக் கொண்டு விட்டு விடலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அல்லாஹ் தஆலா உமர் ரழி அவர்களின் கருத்துக்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான். 

கலீபாக்கள் நடைமுறைப்படுத்தி, அப்போதைய சஹாபாக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட 20 ரக்அத் தராவீஹ் தொழுகை

 (الاحاديث المختارة للضياء)-عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ قَالَ :كَانَ النَّاسُ يَقُومُونَ فِى زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى رَمَضَانَ بِثَلاَثٍ وَعِشْرِينَ رَكْعَةً (سنن الكبري للبيهقي, مؤطا مالك, مصنف ابن ابي شيبة, مصنف عبد الرزاق, جامع الاصول)

عن أبي بن كعب أن عُمَرَ رضي الله عنه أمر أُبَيّا أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن( يقرؤا )فلو قرأتَ القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا(شيء)لم يكنْ ؟فقال قد علمتُ ولكنه أحسن فصلى بهم عشرين ركعة (إسناده حسن)   عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ دَعَا الْقُرَّاءَ فِى رَمَضَانَ فَأَمَرَ مِنْهُمْ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً وَكَانَ عَلِىٌّ رَضِىَ اللَّهُ عَنْهُ يُوتِرُ بِهِمْ (سنن الكبري للبيهقي) 


அலீ ரழி அவர்கள் கலீஃபாவாக இருக்கும்போது ஹாஃபிழ்களை அழைத்து இருபது ரக்அத் தொழ வைக்க ஏவுவார்கள். கடைசியில் வித்ரை அலீ ரழி அவர்கள் தொழ வைப்பார்கள்

وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ عَلَى مَا رُوِىَ عَنْ عُمَرَ وَعَلِىٍّ وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم عِشْرِينَ رَكْعَةً. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ.وَقَالَ الشَّافِعِىُّ وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً (سنن الترمذي)

தராவீஹ் தொழுகை என்று பெயர் வந்ததற்கான அடிப்படைக் காரணங்களில் சில....

عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّى أَرْبَعَ رَكَعَاتٍ فِى اللَّيْلِ  ثُمَّ يَتَرَوَّحُ  فَأَطَالَ حَتَّى رَحِمْتُهُ فَقُلْتُ : بِأَبِى أَنْتَ وَأُمِّى يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا؟ 

وَقَوْلُهُ :ثُمَّ يَتَرَوَّحُ. فَهُوَ أَصْلٌ فِى تَرَوُّحِ الإِمَامِ فِى صَلاَةِ التَّرَاوِيحِ وَاللَّهُ أَعْلَمُ (سنن الكبري للبيهقي)  عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ:كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ يُرَوِّحُنَا فِى رَمَضَانَ يَعْنِى بَيْنَ التَّرْوِيحَتَيْنِ قَدْرَ مَا يَذْهَبُ الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ إِلَى سَلْعٍ (سنن الكبري للبيهقي)سلعகணவாய் 

தராவீஹ் என்றால் ஓய்வு என்று பொருள். ஒவ்வொரு நான்கு ரக்அத்துகளுக்கு மத்தியில் ஓய்வு எடுக்கச் சொல்லி உமர் ரழி கூறுவார்கள். மஸ்ஜிதில் இருந்து மலைக் கணவாய் வரை சென்று திரும்பும் அளவுக்கு ஓய்வு...

ஹிதாயா ஃபிக்ஹ் நூலில் இந்த ஓய்வு தர்வீஹா பற்றி வந்துள்ள விளக்கங்கள்

التَّرَاوِيحُ سُنَّةٌ وَالِاجْتِمَاعُ مُسْتَحَبٌّ .وَقَوْلُهُ : ( لِأَنَّهُ وَاظَبَ عَلَيْهَا الْخُلَفَاءُ الرَّاشِدُونَ ) إنَّمَا يَدُلُّ عَلَى سُنِّيَّتِهَا لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ مِنْ بَعْدِي } 

وَأَهْلُ كُلِّ بَلْدَةٍ بِالْخِيَارِ يُسَبِّحُونَ أَوْ يُهَلِّلُونَ أَوْ يَنْتَظِرُونَ سُكُوتًا ، وَإِنَّمَا يُسْتَحَبُّ الِانْتِظَارُ بَيْنَ كُلِّ تَرْوِيحَتَيْنِ ؛ لِأَنَّ التَّرَاوِيحَ مَأْخُوذٌ مِنْ الرَّاحَةِ فَيُفْعَلُ مَا قُلْنَا تَحْقِيقًا لِلْمُسَمَّى ( وَاسْتَحْسَنَ الْبَعْضُ الِاسْتِرَاحَةَ عَلَى خَمْسِ تَسْلِيمَاتٍ وَهُوَ نِصْفُ التَّرَاوِيحِ وَلَيْسَ بِصَحِيحٍ ) أَيْ مُسْتَحَبٍّ .

ஒவ்வொரு ஊர் வாசிகளும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தர்வீஹாவின் போது தஸ்பீஹ் அல்லது தஹ்லீல் ஓதிக் கொள்ளலாம். அல்லது மவுனமாக இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு மத்தியில் ஓய்வு எடுப்பது முஸ்தஹப். ஏனெனில் ஓய்வு என்ற வார்த்தையில் இருந்துதான் தராவீஹ் என்ற வார்த்தே உருவாகியுள்ளது. சிலர் பத்து ரக்அத் முடிந்து ஓய்வு எடுக்கலாம் என்கின்றனர். அது சரியல்ல.

ரமளான் மாதத்தில் குர்ஆனை அதிகம் ஓதுவது, குறிப்பாக தராவீஹ் தொழுகையில் குர்ஆனை ஓதி முடிப்பது பற்றி....

شهر رمضان له خصوصية بالقرآن كما قال تعالي "شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ(البقرة 185 وقوله "إنا أنزلناه في ليلة القدر}{إنا أنزلناه في ليلة مباركة}كان بعض السلف يختم في قيام رمضان في كل ثلاث ليال وبعضهم في كل سبع منهم قتادة رض وبعضهم في كل عشرة منهم أبو رجاء العطاردي كان السلف يتلون القرآن في شهر رمضان في الصلاة وغيرها-كان الأسود يقرأ في كل ليلتين في رمضان- وكان قتادة يختم في كل سبع دائما وفي رمضان في كل ثلاث وفي العشرالأواخركل ليلة –كان للشافعي رح في رمضان ستون ختمة يقرؤها في غير الصلاة وعن أبي حنيفة نحوه وكان قتادة يدرس القرآن في شهر رمضان وكان الزهري إذا دخل رمضان قال : فإنما هو تلاوة القرآن و إطعام الطعام:كان مالك إذا دخل رمضان يَفِرُّ من قراءة الحديث و مجالسة أهل العلم وأقبل على تلاوة القرآن من المصحف (فضائل الاشهر)    

நமது முன்னோர்கள் ரமழானில் மூன்று நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள் இன்னும் சிலர் ரமழானில் ஏழு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்களில் கதாதா ரஹ் அவர்களும் ஒருவர். இன்னும் சிலர் ரமழானில் பத்து நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதுவெல்லாம் தொழுகையில் ஓதுவதைப் பற்றி....

 நமது முன்னோர்கள் ரமழானில் தொழுகையில் மட்டுமல்லாமல் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதுவார்கள். இமாம் ஷாஃபிஈ ரஹ் ரமழானில் தொழுகைக்கு வெளியில் இரண்டு நாளைக்கு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் குர்ஆன் வகுப்புகளை மட்டுமே நடத்துவார்கள். அதேபோல் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் ஹதீஸ் நடத்துவது, கல்வியைக் கற்றுத் தரும் மஜ்லிஸ் ஆகியவற்றை விட்டும் புறக்கணித்து குர்ஆன் ஓதுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நூல் ஃபழாஇலுல் அஷ்ஹுர்                                                                          

  

     ஷைகுல் ஹிந்த் மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்களும் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்களும் மால்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரமழான் துவங்குவதற்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. அப்போது மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் அழுதார்கள். அதற்கான காரணத்தை ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கேட்ட போது எப்போதும் ரமழானில் ஒரு ஹாஃபிழுக்குப் பின்னால் நின்று குர்ஆன் முழுவதையும் கேட்பேன். ஆனால் இந்த வருடம் நாம் சிறையில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்றார்கள். அப்போது ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் இந்த வருடமும் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூற, அது எப்படி சாத்தியம் என்று மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, நிச்சயமாக அது சாத்தியமாகும் என ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறினார்கள் அடுத்த ஓரிரு தினங்களில் ரமழான் துவங்கும் முன் முதல்நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து முதல் தராவீஹில் ஓதினார்கள். இரண்டாம் நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து இரண்டாம் நாள் தராவீஹில் ஓதினார்கள். இப்படியாக ரமழான் முழுவதும் தொழ வைத்தார்கள். இறைநேசர்களுக்கு அல்லாஹ் எல்லாவற்றையும் சுலபமாக்கி வைத்தான்.            

நூல்- உலமாயே ஹிந்த்

வியாழன், 12 பிப்ரவரி, 2026

நோன்பின் சட்டங்கள்

13-02-2026

ஷஃபான் 24


بسم الله الرحمن الرحيم  

  நோன்பின் சட்டங்கள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ (بخاري)معناه أي لا سبيل إلى استدراك كمال فضيلة الأداء بالقضاء،قال عبد الله بن مسعود "من أفطر يوما في رمضان متعمدا من غير علة ثم قضى طول الدهر لم يقبل منه(فتح الباري)

ரமளானில் ஒரு நோன்பை விட்டால் என்ன பரிகாரம் என்று கேட்க இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் பதில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ فِي غَيْرِ رُخْصَةٍ رَخَّصَهَا اللَّهُ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ.زَادَ فِي خَبَرِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ : وَإِنْ صَامَهُ.(ابن خزيمة) عن سعيد بن جبير رضي الله عنه أن رجلا سأل ابن عباس فقال : إني أفطرتُ يوما من رمضان  فهل تجد لي مخرجا ؟ فقال له ابن عباس : إن قدرت على يوم من رمضان فارغا فصمه مكانه  قال : وهل أجد يوما من رمضان فارغا ؟ فقال ابن عباس : « هل أجد لك في الفتيا غير هذا ؟  (فضل شهر رمضان لابن شاهين)

இப்னுஅப்பாஸ் ரழி கூறியது -ஏதாவது ரமழானில் நோன்பு கடமையில்லாத நாள் ஒன்று வருமானால் அதில் அந்த நோன்பைக் களாச்செய் என்று கூறினார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியம். ரமாழானில் ஒவ்வொரு நாளும் நோன்பு கடமை தானே. அதில் எங்கே இடைவெளி இருக்கிறது. அல்லாஹ் ஏதேனும் ஒருநாள் இடைவெளி விட்டு நோன்பு வைக்கச் சொல்லியிருந்தால் இடைவெளி இருந்திருக்கும்.அந்த இடைவெளியே இல்லையே என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் நீ ரமழானில் தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமே சாத்தியமில்லை என்பதைத் தான் நான் இவ்வாறு கூறினேன் என்றார்கள்.           

நபி ஸல் காலத்தில் மிகவும் சிறிய வயதுடைய பிள்ளைகளும்  நோன்பு வைத்தனர்

وَقَالَ عُمَرَ  رضى الله عنه  لِنَشْوَانٍ فِى رَمَضَانَ وَيْلَكَ ، وَصِبْيَانُنَا صِيَامٌ . فَضَرَبَهُ  (بخاري) باب صَوْمِ الصِّبْيَانِ-كتاب الصيام 1960

( لنشوان ) لرجل سكران أتي به عمر رضي الله عنه فوبخه بأن الصبيان صائمون وهو يفطر في رمضان ويشرب الخمر وأقام عليه الحد ثمانين جلدة ونفاه إلى الشام . - عيني - ]

விளக்கம் - ரமழானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் உமர் ரழி அவர்கள் உனக்கு கேடு உண்டாகட்டும் நம்முடைய சிறுவர்கள் கூட நோன்பு வைத்திருக்கும்போது நீ இவ்வாறு செய்திருக்கிறாயே என்று கூறி அவருக்கு 80 கசையடி கொடுத்தார்கள். வேறு சில நூல்களில் சிரியாவுக்கு நாடு கடத்தினார்கள் என்றும் உள்ளது

சிறுவர்களை நோன்பு வைக்கத் தூண்டுவது அதற்காக அன்பளிப்புகள் வழங்குவது, 

நீ நோன்பு வைத்தால் இஃப்தார் நேரம் உனக்கு இன்ன பதார்த்தம் வாங்கித் தருவேன் என்று கூறுவது சஹாபாக்களின் வழிமுறை

عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَليَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ(بخاري

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் தயார் செய்து சிறுவர்கள் பசியால் உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரை அவன் பசியை மறந்திருப்பதற்காக அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம். (விளையாட்டுப் பொருட்களை விரும்பும் பிள்ளைகள் என்பதின் மூலம் சுமார் ஐந்து அல்லது ஆறு வயது பிள்ளைகளுக்கும் கூட நோன்புக்கான பயிற்சி தருவார்கள் என்று அறிய முடிகிறது.) 

நோன்பு சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட 

வரும்போது நோன்பாளியாக வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)الاعراف  - قال المفسرون: فصامها موسى، عليه السلام، فلما تم الميقات استاك بلحاء شجرة، فأمره الله تعالى أن يكمل بعشر (2) أربعين.

وفي رواية فَلَمَّا أَتَى رَبّه وَأَرَادَ أَنْ يُكَلِّمهُ وَقَدْ صَامَهُنَّ لَيْلهنَّ وَنَهَارهنَّ وَكَرِهَ أَنْ يُكَلِّم رَبّه وَرِيح فِيهِ رِيح فَم الصَّائِم فَتَنَاوَلَ مُوسَى مِنْ نَبَات الْأَرْض شَيْئًا فَمَضَغَهُ فَقَالَ لَهُ رَبّه حِين أَتَاهُ لِمَ أَفْطَرْت وَهُوَ أَعْلَم بِاَلَّذِي كَانَ قَالَ يَا رَبّ إِنِّي كَرِهْت أَنْ أُكَلِّمك إِلَّا وَفَمِي طَيِّب الرِّيح قَالَ أَوَمَا عَلِمْت يَا مُوسَى أَنَّ رِيح فَم الصَّائِم أَطْيَب عِنْدِي مِنْ رِيح الْمِسْك اِرْجِعْ فَصُمْ عَشْرًا ثُمَّ اِئْتِنِي فَفَعَلَ مُوسَى عَلَيْهِ السَّلَام مَا أُمِرَ بِهِ  (تفسير ابن كثير

தன்னிடம் உரையாட வரும் முன்பு முப்பது நாட்கள் தொடர் நோன்பு  அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைக்கச் சொல்லி அல்லாஹ் உத்தரவிட்டான். அவ்வாறே ஸவ்முல் விஸால் வைத்த பிறகு மூஸா அலை அல்லாஹ் வாக்களித்த இடத்திற்கு வந்த போது வாய் வாடையோடு அல்லாஹ்விடம் உரையாடுவதை வெறுத்தவர்களாக மிஸ்வாக் செய்தார்கள். அல்லாஹ் அதைக் கண்டித்தான். நோன்பாளியின் வாய் வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட என்னிடம் மேலானது என உமக்குத் தெரியாதா என்று கூறி மீண்டும் பத்து நோன்பு வைத்து நாற்பதாக பூர்த்தி செய்ய உத்தரவிட்டான். அவ்வாறே செய்தார்கள்.                                              

குறிப்பு- ஸவ்முல் விஸால் அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைப்பது நபிமார்களுக்கு மட்டுமே சாத்தியம். அல்லாஹ் அதற்கான ஆற்றலை அவர்களுக்கு மட்டும் வழங்குவான்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى (بخاري

நபி ஸல் அவர்கள் நோன்பே திறக்காமல் நோன்பு வைத்த போது சஹாபாக்கள் அவ்வாறு வைக்க ஆரம்பித்தனர். அப்போது நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். அப்போது சஹாபாக்கள் நீங்கள் வைக்கிறீர்களே என்ற போது நான் உங்களைப் போன்றவர் அல்ல. ரப்பின் புறத்திலிருந்து உணவளிக்கப்படும் நிலையில்,  நீர் புகட்டப்படும் நிலையில் நான் நீடித்திருப்பேன். (அதாவது  ரப்பின் புறத்திலிருந்து உடலை மிகவும் பலவீனப்படுத்தும் அளவுக்கு பசியோ தாகமோ இல்லாத நிலைக்கு உட்படுத்தப்படுவேன்.) நீங்கள் அதற்கு சக்தி பெற மாட்டீர்கள்.  

           நோன்பின் சட்டங்கள்

நோன்பாளி எந்த வீண் பேச்சுகளிலும், சண்டை சச்சரவுரகளிலும் ஈடுபடக் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ(بخاري

நோன்பாளி பொய்யான பேச்சுக்களையும், பொய்யான செயல்பாடுகளையும் தவிர்த்துக் கொள்ளா விட்டால் அந்த நோன்பு பயனற்றதாக ஆகி விடும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ (بخاري)

நோன்பு திறக்கும் முன்பு வீண்பேச்சுக்கள் பேசாமல் துஆவில் ஈடுபடுவது சிறந்த செயல்

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (ابن ماجة)

சஹர் நேரத்தில் உணவு உண்ணும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை வீணாக்காமல் இஸ்திஃபாரில் ஈடுபடுவது

قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ....(15) الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا...وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ(ال عمران)   قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97)قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(98 يوسف)وَقَدْ قِيلَ:إِنَّ يَعْقُوب عَلَيْهِ السَّلَام لَمَّا قَالَ لِبَنِيهِ"سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي" أَنَّهُ أَخَّرَهُمْ إِلَى وَقْت السَّحَر-عَنْ مُحَارِب قَالَ كَانَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ يَأْتِي الْمَسْجِد فَيَسْمَع إِنْسَانًا يَقُول:اللَّهُمَّ دَعَوْتنِي فَأَجَبْت وَأَمَرْتنِي فَأَطَعْت وَهَذَا السَّحَر فَاغْفِرْ لِي قَالَ فَاسْتَمَعَ الصَّوْت فَإِذَا هُوَ مِنْ دَارعَبْد اللَّه بْن مَسْعُود فَسَأَلَ عَبْد اللَّه عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّ يَعْقُوب أَخَّرَ بَنِيهِ إِلَى السَّحَر بِقَوْلِهِ"سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي (تفسير ابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.(بخاري)

ஒருமுறை உமர் ரழி அவர்கள் அதிகாலை சஹர் நேரத்தில் மஸ்ஜிதுக்கு வந்த போது மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து அழுகை சப்தம் வந்த து. ஒருவர் அழுத படி யாஅல்லாஹ் உன் உத்தரவுக்கு இயன்ற வரை நான் கட்டுப்பட்டேன் யாஅல்லாஹ் இது சஹர் நேரம் ஆகவே என் பாவத்தை மன்னிப்பாயாக என்று அழுது துஆ செய்தார். கடைசியில் அது இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் வீடு என்பதையும் அழுது துஆ செய்தவர் அவர் தான் என்பதையும் கண்டறிந்த உமர் ரழி அவர்கள்  இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது நபி யஃகூப் அலை அவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் வந்து யூஸுஃபுக்கு எதிராக அவர்கள் செய்த துரோகத்திற்காக தங்கள் சார்பில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி வேண்டியபோது நபி யஃகூப் அலை அவர்கள் உடனே கேட்காமல் நான் இனிமேல் கேட்பேன் என்று கூறி சஹரில் எழுந்து தன் பிள்ளைகளுக்காக பாவ மன்னிப்புக் கேட்டார்கள். அதனால் தான் நானும் சஹரில் எழுந்து துஆ செய்கிறேன் என இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினாரகள்.                                              

சஹருக்கு எழுந்து சாப்பிடுவதின் சிறப்பு

இரவில் தாமதமாக தூங்குபவர்களில் சிலர், சஹருக்கு எழுந்து சாப்பிட சங்கடப்பட்டு நள்ளிரவிலேயே சாப்பிடுவதைப் பற்றி...

عن أَنَسَ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً (مسلم)عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ (مسلم)

சஹர் சாப்பிடுவதை ஃபஜ்ருடைய நேரம் துவங்குவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு வரை பிற்படுத்துவது நல்லது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ تَكُونُ سُرْعَتِي أَنْ أُدْرِكَ السُّجُودَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ(بخاري

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً (مسلم)

சஹர் நேரத்தில் ஜுனுபாளியாக இருப்பவர் அத்துடனே சஹர் சாப்பிட்டால்  கூடுமா ?

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ الْفَجْرِ قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ وَغَيْرُهُ سَوَاءٌ (ابن ماجة)

நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் விரைவாக நோன்பு திறப்பது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ(بخاري)عَنْ ابْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَصَامَ حَتَّى أَمْسَى قَالَ لِرَجُلٍ انْزِلْ فَاجْدَحْ لِي قَالَ لَوْ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ قَالَ انْزِلْ فَاجْدَحْ لِي إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ (بخاري) عن أبى رجاء قال : ( كنتُ أَشْهدُ ابنَ عباس عند الفطر فى رمضان ، فكان يوضع له طعامه ، ثم يأمر مراقبًا يراقب الشمس  فإذا قال:قد وجبت قال :كلوا ثم قال :كنا نفطر قبل الصلاة (شرح صحيح البخاري لابن بطال)   

நோன்பு திறக்கும் நேரம் வரும் முன்பே நோன்பு திறப்பதும் கூடாது

عن أَبي أُمَامَةَ الْبَاهِلِى قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ :بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِى رَجُلاَنِ فَأَخَذَا بِضَبْعَىَّ فَأَتَيَا بِى جَبَلاً وَعْرًا فَقَالاَ لِىَ: اصْعَدْ فَقُلْتُ:إِنِّى لاَ أُطِيقُهُ فَقَالاَ:إِنَّا سَنُسَهِّلُهُ لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِى سَوَاءِ الْجَبَلِ إِذَا أَنَا بَأَصْوَاتٍ شَدِيدَةٍ فَقُلْتُ:مَا هَذِهِ الأَصْوَاتُ قَالُوا هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ،ثُمَّ انْطُلِقَ بِى فَإِذَا أَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ مُشَقَّقَةٌ أَشْدَاقُهُمْ تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا قُلْتُ مَنْ هَؤُلاَءِ قَالَ: هَؤُلاَءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ (نسائ) باب التَّغْلِيظِ عَلَى مَنْ أَفْطَرَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ) كَتَبَ عمرُ إلى أمراء الأجناد:لا تكونوا مسبوقين بفِطْرِكُم (شرح للبخاري   நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதின் நன்மை

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا (ابن ماجة) -وفي رواية لابن خزيمة "قَالُوا : لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ فَقَالَ: يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، َوْ شَرْبَةِ مَاءٍ،أَوْ مَذْقَةِ لَبَنٍ، - عن انس رضي الله عنه قال أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ (ابوداود)

பேரீத்தம் பழம் அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்க ஆரம்பிப்பது நல்லது

عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ زَادَ ابْنُ عُيَيْنَةَ فَإِنَّهُ بَرَكَةٌ فَمَنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ(ترمذي)عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٌ فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ (ترمذي) وَرُوِيَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ فِي الشِّتَاءِ عَلَى تَمَرَاتٍ وَفِي الصَّيْفِ عَلَى الْمَاءِ(ترمذي)

மறதியாக சாப்பிட்டாலோ, நீர் பருகினாலோ நோன்பு முறியாது. ஆனால் ஞாபகம் வந்தவுடன் அப்போதே நிறுத்த வேண்டும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري-كتاب الصوم

وفي رواية للترمذي فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ- وقال الطيبي إنما للحصر أي ما أطعمه أحد ولا سقاه إلا الله (فتح الباري

நோயாளி நோன்பை விட அனுமதி உண்டு. நோய் நீங்கியவுடன் வேறு மாதத்தில் அதை களா செய்வார்

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ (184البقرة)

ஆரோக்கியமாக இருப்பவரும் நோன்புக்குப்  பகரமாக ஃபித்யா கொடுப்பதற்கு முன்பு அனுமதி இருந்தது. பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு தள்ளாத வயதை அடைந்தவரும், தீராத வியாதி உள்ளவரும் மட்டுமே ஃபித்யா கொடுக்கலாம் என்ற சட்டம் வந்தது

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (184البقرة) عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا (بخاري)وَأَمَّا الشَّيْخُ الْكَبِيرُ إِذَا لَمْ يُطِقْ الصِّيَامَ فَقَدْ أَطْعَمَ أَنَسٌ بَعْدَ مَا كَبِرَ عَامًا أَوْ عَامَيْنِ كُلَّ يَوْمٍ مِسْكِينًا خُبْزًا وَلَحْمًا (بخاري)وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ

பிரயாணத்தில் இருப்பவர் முடிந்தால் நோன்பு வைக்கவும், முடியா விட்டால் வேறு நாளில் களா செய்யவும் அனுமதி உண்டு

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ سَأَلَ حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ (ابن ماجة)عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ- عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ (رواهما ابن ماجة)إن كان مسافرا لا يستضر بالصوم فصومه أفضل وإن أفطر وقضى جاز(قدوري

குறிப்பு-பிரயாணம் என்பது அக்காலத்தில் கடும் சிரமமானதாக இருந்துள்ளது என்பது மேற்கானும் ஹதீஸில் தெரிய வருகிறது

கர்ப்பிணியும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளும் தற்காலிகமாக நோன்பை விட்டு, பிறகு களா செய்ய அனுமதி உண்டு

وَقَالَ الْحَسَنُ وَإِبْرَاهِيمُ فِي الْمُرْضِعِ أَوْ الْحَامِلِ إِذَا خَافَتَا عَلَى أَنْفُسِهِمَا أَوْ وَلَدِهِمَا تُفْطِرَانِ ثُمَّ تَقْضِيَانِ (بخاري) ولا فدية عليهم (قدوري)

குறிப்பு- குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தான் அந்த நேரத்தில் நோன்பை விடவும்  இஸ்லாம் அனுமதி தருகிறது.

விடுபட்ட ரமழான் நோன்பை களா செய்வது தொடர்பாக...

وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنه لَا بَأْسَ أَنْ يُفَرَّقَ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ}(بخاري) وقضاء رمضان إن شاء فَرَّقه وإن شاء تابعه فإن أخره حتى دخل رمضان آخر صام رمضان الثاني وقضى الأول بعده ولا فدية عليه(وعند الشافعية له قضاء وفدية)- ومن مات وعليه قضاء رمضان فأوصى به أطعم عنه وَلِيُّه لكل يوم مسكينا نصف صاع من بُرّ أو صاعا من تمر أو صاعا من شعير (مختصرالقدوري) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ  كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ قَالَ يَحْيَى الشُّغْلُ  بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بُخَارِيّ) أَيْ يَمْنَعنِي أَيّ الشَّغْل

நோன்பு பற்றிய சில சட்டங்கள்

وإِن نام فاحتلم أو نظر إلى امرأة فأنزل أو اِدَّهن أو اِحتجم أواكتحل أو قَبَّل لم يفطره فإن أنزل بقبلة أو لمس فعليه القضاء ومن احتقن أواستعط أو قطر في أذنيه أو داوى جائفة أو آمة بدواء فوصل إلى جوفه أو دماغه أفطر-وإن ذرعه القيء لم يفطر وإن استقاء عامدا ملء فيه فعليه القضاء-ومن ذاق شيئا بفمه لم يفطر ويكره له ذلك ويكره للمرأة أن تمضغ لصبيها الطعام إذا كان لها منه بُدّ (نور الايضاح)

தூக்கத்தில் இந்திரியம் ஏற்பட்டு விட்டால், அல்லது ஹிஜாமா செய்தால், அல்லது சுர்மா போட்டால் அல்லது மனைவியை முத்தமிட்டால் நோன்பு முறியாது. ஆனால் முத்தமிடுவதன் காரணமாக இந்திரியம் வெளியானால் களா மட்டும் செய்ய வேண்டும்.

மூக்கிற்குள் சொட்டு மருந்து ஊற்றி அது தொண்டைக்குள் சென்று விட்டால் அல்லது காதுகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி அது உள்ளே சென்று விட்டால் அல்லது ஆழமான காயத்திற்கு மருந்து போட்டு அது உள்ளே சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும். தானாக வாந்தி  வந்தால் நோன்பு முறியும். வேண்டுமென்றே வாந்தி எடுத்து  அது வாய் நிரம்ப இருந்தால் நோன்பு முறியும். களா உண்டு. வாயின் முன்பகுதியில் மட்டும் வைத்து ஒரு உணவுப் பொருளை ருசித்துப் பார்த்து பிறகு துப்பி விட்டால்  நோன்பு முறியாது. ஆனாலும் அது மக்ரூஹ் ஆகும்.                                                  

நோன்பை முறிக்காத வேறு சில செயல்கள்

சிகிச்சை அடிப்படையில் ஊசி போடுவதால் நோன்பு முறியாது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாலோ, நகம் வெட்டுவதாலோ நோன்பு முறியாது சிகிச்சைக்காக குளுக்கோஸ் ஏற்றினால் நோன்பு முறியாது. தெம்புக்காக ஏற்றினால் நோன்பு முறியும். இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. ஆனால் பற்களின் ஈறுகளில்  இரத்தம் வந்து அதன் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறியும். ஊதுபத்தி, சாம்பிராணி புகையை நோன்பாளி வேண்டுமென்றே வாயில் நுழைய வைத்தால் நோன்பு முறியும். அவருடைய விருப்பமின்றி நுழைந்தால் நோன்பு முறியாது. பல் துலக்குவதால் நோன்பு முறியாது. ஷாஃபியீ மத்ஹபில் மதியத்திற்குப் பிறகு பல் துலக்குவது மக்ரூஹ். நோன்பாளி முடி வெட்டுவதால் நோன்பு முறியாது.                                                

வேண்டுமென்றே நோன்பை முறித்தால்...

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا فَقَالَ فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ (بخاري)

கருத்து - ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் நாசமாகி விட்டேன் என்றார். அவரிடம் விசாரித்த போது நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் நான் என் மனைவியிடம் உறவு கொண்டு என் நோன்பை முறித்து விட்டேன் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதன் பரிகாரமாக ஒரு அடிமையை உரிமை விடு என்றார்கள். அவர் எனக்கு அதற்கு சக்தியில்லை என்றார்.  அடுத்து நபி ஸல் அவர்கள் இரண்டு மாதம் தொடர் நோன்பு வை என்றார்கள். எனக்கு அதற்கும் சக்தியில்லை என்றார். அடுத்த நபி ஸல் அவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவு கொடு என்றார்கள். அதற்கும் எனக்கு சக்தியில்லை என்றார். நபி ஸல் அவர்கள் அமைதியாக இருந்து விட, சற்று நேரம் கழித்து ஒரு கூடை நிறைய பேரீத்தம்பழம் வந்தது. நபி ஸல் அவர்கள் அவரை அழைத்து இதை வாங்கி மதீனாவில் மிகவும் ஏழை யார் இருக்கிறாரோ அவரிடம் தந்து விடு என்றார்கள். அதற்கு அவர்  மதீனாவில் என்னை விட ஏழை யாருமில்லை என்றார். நபி ஸல் சிரித்து விட்டார்கள். நீ உன் குடும்பத்திற்கு இதை உணவாக்கி விடு என்றார்கள். (எந்த பரிகாரமும் இல்லாமல் அவரை விடுவித்தது நபி ஸல் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியாகும். இன்றைக்கு இதை யாரும் பின்பற்ற முடியாது 

ரமழான் முழுவதும் தராவீஹ் தொழுவதன் நன்மை

صلاة التراويح: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (بخاري)

வியாழன், 5 பிப்ரவரி, 2026

ரமழானை எதிர் பார்ப்பதும்

 06-02-2026

شعبان   17 


بسم الله الرحمن الرحيم  

ரமழானை எதிர் பார்க்குதல்

ரமழானின் நேரங்களை திட்டமிடுதல்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


  ஒவ்வொரு வணக்கங்களிலும் அதைச் செய்வதற்காக எதிர் பார்த்துக் காத்திருப்பதிலும் அல்லாஹ் நன்மையை வைத்துள்ளான். குறிப்பாக சங்கையான ரமழானை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் நன்மை உண்டு. ரமழானை எதிர் பார்த்து நாம் காத்திருந்து ரமழான் வந்தவுடன் நாம் ஆர்வத்துடன் அமல்களில் ஈடுபடும்போது சுவனத்தில் நமக்கான ஜோடிகளான ஹூருல் ஈன்களையும் அல்லாஹ் காத்திருக்கச் செய்கிறான். நம்மை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் துஆச் செய்கிறார்கள்.                                                    

عَنْ أَبِي مَسْعُودٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهَذَا حَدِيثُ أَبِي الْخَطَّابِ - ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَاتَ يَوْمٍ وَقَدْ أَهَلَّ رَمَضَانُ ، فَقَالَ : لَوْ يَعْلَمُ الْعِبَادُ مَا رَمَضَانُ لَتَمَنَّتْ أُمَّتِي أَنْ يَكُونَ السَّنَةَ كُلَّهَا ، فَقَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ : يَا نَبِيَّ اللهِ ، حَدِّثْنَا ، فَقَالَ : إِنَّ الْجَنَّةَ لَتَزَيَّنُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى الْحَوْلِ ، فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ مِنْ تَحْتِ الْعَرْشِ ، فَصَفَقَتْ وَرَقَ الْجَنَّةِ ، فَتَنْظُرُ الْحُورُ الْعِينُ إِلَى ذَلِكَ ، فَيَقُلْنَ : يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ فِي هَذَا الشَّهْرِ أَزْوَاجًا تُقِرُّ أَعْيُنَنَا بِهِمْ ، وَتُقِرُّ أَعْيُنَهُمْ بِنَا ، قَالَ : فَمَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا مِنْ رَمَضَانَ إِلاَّ زُوِّجَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ فِي خَيْمَةٍ مِنْ دُرَّةٍ مِمَّا نَعَتَ اللَّهُ : {حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ} [الرحمن] عَلَى كُلِّ امْرَأَةٍ سَبْعُونَ حُلَّةً ، لَيْسَ مِنْهَا حُلَّةٌ عَلَى لَوْنِ الأُخْرَى ، (ابن خزيمة

  ரமழான் எத்தகைய மாதம் என்பதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமழானாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள் என்று நபி ஸல் கூறியவுடன் குஜாஆ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் நபியே (ரமழான் எத்தகைய மாதம் என்பதைக்) கூறுங்கள் என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக சுவனமாகிறது ரமழானுக்காக வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து அலங்கரிக்கப்படுகிறது. ரமழானின் முதல் நாள் துவங்கும்போது அர்ஷுக்குக் கீழ் இருந்து ஓர் இதமான காற்றும் வீசும். அதனால் சுவனத்தில் இலைகள் அசையும். அதைக் கண்ட ஹூருல் ஈன்கள் ரப்பே இந்த மாதத்தில் அமல் செய்பவர்களில் நின்றும் எங்களுக்குப் பொருத்தமான ஜோடியை எங்களுக்கு ஆக்கி வைப்பாயாக. அவர்களைக் கொண்டு எங்களுக்கும் கண்குளிர்ச்சி ஏற்பட வேண்டும். எங்களைக் கொண்டு அவர்களுக்கும் கண்குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்று துஆச் செய்வார்கள்.         

சுருக்கம்- ரமழானில் நோன்பு வைத்தவர்களுக்கு சுவனத்தில் உள்ள ஹூருல்ஊன் களுடன் திருமணம் செய்து வைக்கப்படும். அந்த ஹூருல் ஈன் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றால் ஒவ்வொரு ஹூருல்ஊன் பெண்ணின் உடம்பில் அணிந்துள்ள (கவுன் மாதிரியான) ஆடையில் 70  அடுக்குகள் இருக்கும்.  ஒவ்வொரு அடுக்குகளும் வெவ்வேறு கலர்களில் இருக்கும்.                

எதிர்பார்ப்புகள் பலவிதம். சில எதிர்பார்ப்புகளுக்கும் நன்மை உண்டு

தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் மிகுந்த நன்மை உள்ளது

عَنْ أَنَسِ رض أَنَّ هَذِهِ الْآيَةَ{ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ } نَزَلَتْ فِي انْتِظَارِ الصَّلَاةِ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ(العشاء (ترمذي) سورة السجدة

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ عَنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا ثُمَّ قَالَ أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمْ الْغَدَاةَ أَنِّي قُمْتُ مِنْ اللَّيْلِ فَتَوَضَّأْتُ وَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ ..... فَقَالَ يَا مُحَمَّدُ قُلْتُ لَبَّيْكَ رَبِّ قَالَ فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى قُلْتُ فِي الْكَفَّارَاتِ قَالَ مَا هُنَّ قُلْتُ مَشْيُ الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَالْجُلُوسُ فِي الْمَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ قَالَ ثُمَّ فِيمَ قُلْتُ إِطْعَامُ الطَّعَامِ وَلِينُ الْكَلَامِ وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ قَالَ سَلْ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا  (ترمذي

   ஒருநாள் நபி ஸல் அவர்களுக்கு  சுப்ஹு தொழுகை சற்று   தாமதமாகி விட்டது. சூரியனை நாங்கள் பார்க்கும் அளவுக்கு நேரம் கடந்த பின் வேகமாக வெளியேறினார்கள். இகாமத் சொலப்பட்டது. நபி ஸல் சுருக்கமாகத் தொழ வைத்தார்கள். சலாம் கொடுத்தவுடன் உங்கள்  வரிசையில் அப்படியே அமருங்கள் என்று கூறி எங்கள் பக்கம் திரும்பி நான் ஏன் இன்று தாமதமாகி விட்டேன் தெரியுமா நேற்றிரவு நான் இரவில் எழுந்து உளூச் செய்து அல்லாஹ் நாடிய வரை தொழுதேன். அப்போது என்னையும் மீறி சிறு தூக்கம் ஏற்பட்டது. சற்று உறங்கினேன். அப்போது அல்லாஹ்வை என்னுடைய கனவில் அழகிய தோற்றத்தில் பார்த்தேன். அப்போது அல்லாஹ் என்னிடம் மனிதர்களின் எந்த அமல்களை எடுத்துச் செல்வதற்கு மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும் நற்காரியங்களில் என்று கூறினேன். அவைகள் என்னென்ன என்று அல்லாஹ் கேட்க, அதற்கு நான் ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்வது. ஒரு தொழுகை முடிந்த பின்பு அடுத்த தொழுகைக்காக மஸ்ஜிதில் காத்திருப்பது.  (குளிர் போன்ற) சிரமமான நேரத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது என்று கூற, மீண்டும் அல்லாஹ் என்னிடம் வேறு எவற்றில் மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் “உணவளிப்பது, மிருதுவாகப் பேசுவது, மனிதர்கள் உறங்கும் போது இரவில் எழுந்து தொழுவது” என்று நான் கூறினேன். பின்பு அல்லாஹ் தன்னிடம் ஏதேனும் கேட்கும்படி கூற, நான் இந்த துஆவைக் கேட்டேன். யாஅல்லாஹ் நல்லதைச் செய்வதற்கும், தீமையை விடுவதற்கும், ஏழைகளை நேசிப்பதற்கும் தவ்ஃபீகை உன்னிடம் கேட்கிறேன். என்னை மன்னிப்பதையும் என் மீது இரக்கம் காட்டுவதையும் உன்னிடம் கேட்கிறேன். குழப்பங்களின் மூலம் இந்த உம்மத்தை நீ சோதிக்க நாடினால் அத்தகைய குழப்பங்களில் சிக்குவதற்கு முன்பே என்னை உன்னிடம் அழைத்துக் கொள். யாஅல்லாஹ் உன்னை நேசிப்பதையும், உன்னை நேசிப்பவர்களை நான் நேசிப்பதையும், உன்னை நேசிப்பதை நெருக்கமாக்கி வைக்கும் நற்செயலையும் உன்னிடம் கேட்கிறேன்.                                        

 படிப்பினை- பின்பு நபிஸல் அவர்கள் நான் கண்ட கனவு உண்மை.இந்த துஆவை ஓதுங்கள். இதன் கருத்தையும் அறியுங்கள் என்றார்கள். மக்களுக்கு மார்க்கத்தைப் புரிய வைப்பதற்காக எப்படி நபிகளாரிடம் ஜிப்ரயீல் அலை கேள்வி கேட்டுப் புரிய வைத்தார்களோ அதுபோல அல்லாஹ் இங்கே நபி ஸல் அவர்களிடமே கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துப் புரிய வைத்துள்ளான்.             

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَم    ْ يَقُمْ أَوْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ (مسند أحمد)

தொழுகை முடிந்தும் அந்த இடத்திலேயே காத்திருப்பவருக்காக மலக்குகள் துஆ செய்கின்றனர். அவர் எழாமல் இருக்கும் வரை அல்லது உளூ முறியாமல் இருக்கும் வரை இச்சிறப்பு உண்டு.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ، فَرَجَعَ مَنْ رَجَعَ ، وَعَقَّبَ مَنْ عَقَّبَ ، فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُثَوِّبَ النَّاسُ بِصَلاةِ الْعِشَاءِ ، فَقَالَ : أَبْشِرُوا أَبْشِرُوا ، هَذَا رَبُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِيَ بِكُمُ الْمَلائِكَةَ ، يَقُولُ : انْظُرُوا إِلَى عِبَادِي قَضَوْا فَرِيضَةً ، وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى.( : مسند البزار

 ஒருநாள் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்பவர்கள் சென்று விட்டனர். மஸ்ஜிதில் தங்கியவர்கள் தங்கினர். அப்போது இஷாவுக்கு இகாமத் சொல்லப்படும் முன்பு அங்கு நபி ஸல் அங்கு வருகை தந்து நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள். இதோ அல்லாஹ் தஆலா வானத்தின் ஒரு வாசலை உங்களுக்காகத் திறந்துள்ளான். மலக்குகளிடம் உங்களைப் பற்றிப் பெருமையாக எனது அடியார்களைப் பாருங்கள் ஒரு ஃபர்ளை முடித்து விட்டு அடுத்த ஃபர்ளுக்காக மஸ்ஜிதில் காத்திருக்கிறார்கள் என்று கூறி நம்மைப் பெருமைப் படுத்துகிறான்.          

إنه إذا كان يوم القيامة يحشر قوم وجوههم كالكوكب الدري فتقول لهم الملائكة ما كانت أعمالكم فيقولون كنا إذا سمعنا الأذان قمنا إلى الطهارة لا يشغلنا غيرها ثم تحشر طائفة وجوههم كالأقمار فيقولون بعد السؤال كنا نتوضأ قبل الوقت ثم تحشر طائفة وجوههم كالشمس فيقولون كنا نسمع الأذان في المسجد (احياء علوم الدين

  மறுமை நாளில் சிலரின் முகங்கள் நட்சத்திரங்களைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் நாங்கள் பாங்கு சப்தம் கேட்டவுடன் வேறு வேலைகளில் ஈடுபடாமல் உடன் எழுந்து உளூச் செய்வோம். என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சந்திரனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகை வரும் முன்பே உளூச் செய்து தயாராக இருப்போம். பாங்கு சப்தம் கேட்டதும் உடனே மஸ்ஜிதுக்கு விரைவோம் என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சூரியனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் முன்பே உளூச் செய்து தயாராகி பாங்கு சொல்லும் போது மஸ்ஜிதுக்குள் இருப்போம் என்று கூறுவர்.  

ரமழானை எதிர்பார்ப்பதிலும் மிகுந்த நன்மை உண்டு

كان الصحابة -رضي الله عنهم- يحرصون أشدّ الحرص على الاستعداد لشهر رمضان استعداداً حقيقيّاً؛ فيتوجّهون إلى الله بالدعاء ستّة أشهرٍ أن يُبلّغهم الله رمضان، ثمّ يدعونه ستّة أشهرٍ أخرى أن يتقبّل منهم صيامهم، وطاعاتهم، وعباداتهم، فبذلك يكون العام لديهم كأنّه كلّه شهر رمضان،[٦]

ஸஹாபாக்கள் ரமழானை எதிர்பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே ரமழானை எதிர்பார்ப்பார்கள். பின்பு ரமழான் வந்த பின்பு அது முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த ரமழானில் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக துஆ செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு வருடம் முழுவதும் ரமழானாகவே ஆகி விடும். 

ரமழான் வரை  நமக்கு அல்லாஹ் ஆயுளை நீளமாக்கிட துஆ செய்ய வேண்டும்

இன்னும் பல ரமழான்களை சந்திக்கும் வரை ஆயுளை நீளமாக்கிட துஆச் செய்ய வேண்டும்

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார். தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப் பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள். 







ரமழானுக்காக முன்பே தயாராகுதல், 

ரமழானில் அமல் செய்வதற்கான நேரங்களை இப்போதே திட்டமிடுதல்

முக்கியமான ஒரு விழாவை நாம் நடத்தப்போகிறோம் என்றால் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பே விழாவின் பொறுப்புதாரிகள் ஒன்று கூறி இத்தனை மணிக்கு விழா ஆரம்பம். இன்னார் இன்னார் இவ்வளவு நேரம் பேசுவார் இத்தனை மணிக்கு விழா முடியும் என்றெல்லாம் திட்டமிடுகிறோம். இவ்வாறு திட்டமிடப்படும் விழாக்களில் சற்று முன் பின் ஏற்பட்டாலும் விழாவை நல்ல முறையில் நடத்துவதற்கு இந்த திட்டமிடுதல் முக்கியப் பங்காற்றுகிறது.   

நேரங்களை, காலங்களை திட்டமிடுதல் அல்லாஹ்வின் வழிமுறை

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ (3)يونس عن سعيد بن جبير رضي الله عنهما . إنما خلقها في ستة أيام وهو يقدر على أن يخلقها في لحظة ، تعليماً لخلقه الرفق والتثبت (تفسير الرازي

அல்லாஹ் ஆகு என்றால் உடனே அனைத்தும் ஆகி விடும். எனினும் திட்டமிட்டு, நேரங்களை பங்கு வைத்து செயலாற்றுவதை நமக்குக் கற்றுத் தருவதற்காக அல்லாஹ் வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ..... (مسلم)

அல்லாஹ் பூமியை சனிக்கிழமையில் படைத்தான்.அதில் மலைகளை அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமையில் படைத்தான் பூமியில் மரங்களை அல்லாஹ் திங்கள்கிழமையில் படைத்தான். மக்ரூஹானவைகளை செவ்வாய்க்கிழமையில் படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்தான். பூமியில் பிற உயிரினங்களை வியாழக்கிழமை யில் படைத்தான்

மனிதனை அதாவது ஆதம் அலை அவர்களை வெள்ளிக்கிழமை அசருக்குப் பின்பு அல்லாஹ் படைத்தான்.    

வருகிற ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு வினாடிகளும் நமக்குப் பொன்னானவை என விளங்கி ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அமல்களில் ஈடுபட்டால் ரமழானின் பலன்களை நிறைய அடையலாம். உதாரணமாக ரமழான் என்பது துஆக்கள் அதிகம் ஏற்கப்படும் மாதம் என்பதால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் தஹஜ்ஜுதுக்குப் பிறகும் பத்து நிமிடமேனும் துஆ செய்ய வேண்டும் என்று நேரம் நிர்ணயித்தால் ரமழான் முழுக்க முப்பது மணி நேரம் துஆ செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இது மாதிரி ஒவ்வொரு அமலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். 

நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.

                      

ரமழானில் வேலைப் பழுவை அதிகமாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இப்போதே சில அலுவல்களை முன் கூட்டியே முடிப்பது  முடியுமானால் முடிப்பது நல்லது. 

மழைக்காலம் வருவதற்கு முன்பே தேவையான இரையை சேமித்து வைத்துக் கொள்ளும் எறும்பு.

 எறும்புகள் வெயில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்டநாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன. தானியங்கள் முளைவிட்டு வளரும்போது அவற்றின் அடிவேர்களை அறுத்து விடுகின்றன.  அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்துசெல்லும் எறும்பு தன் கூட்டில் இருந்து 200 மீட்டர் (655 அடி)பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன்வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது ஆச்சரியம். 

ரமழானுக்காக உடல் ரீதியாக நம்மைத் தயார் படுத்திக் கொள்ளுதல்

உடல் ரீதியாக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வதற்காக ரமழான் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே வேறு நோன்புகள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. ரமழானை கண்ணியப் படுத்துவதற்காகவும் இவ்வாறு நபி ஸல் கூறியிருக்கலாம். 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُومُوا (ابوداود)

கருத்து ஷஃபான் நடுப்பகுதி முடிந்து விட்டால் நோன்பு வைக்க வேண்டாம் 

عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا بقي نصف شعبان ، فلا تصوموا " (شرح السنة)

ஷஃபானின் ஒரு பாதி முடிந்து மற்றொரு பாதி மீதம் இருக்கும்போது நோன்பு வைக்காதீர்கள்.

ரமழானில் பெரும்பாலான நேரங்களை துணிக்கடைகளில் செலவு செய்பவர்கள் கவனிக்க.. 

சிலர் புனிதமான ரமழானில் அதிகம் அமல் செய்வதற்கு பதிலாக அதிக நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். கணவனுக்கு ஒருநாள் மனைவிக்கு மற்றொரு நாள் பிள்ளைகளுக்கு மூன்றாவது நாள் என பெரும்பாலான நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். அதிலும் குறிப்பாக கடைசி பத்து நாட்களில் தராவீஹின் நேரத்திலும் கூட துணிக்கடைகளில் கூட்டத்தைப் பார்க்க முடியும். இது துர்பாக்கியமான செயல். ரமழான் என்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத செயலாகும். எனவே ரமழான் வரும் முன்பே துணிமணிகள் எடுத்து விடுவது நல்லோர்களின் செயலாகும்.     

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (بخاري

அறியாமைக் காலத்திலேயே வணக்கத்தின் நாட்களில் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை விட்டு விடுவது அரபிகளின் பழக்கமாக இருந்தது

كان ناس من العرب لا يتّجرون في أيام الحج فإذا دخل العشر كفّوا عن الشراء والبيع فلم يقم لهم سوق وكانوا يسمون من يخرج إلى الحجّ ومعه تجارة : الداج  (الكشف والبيان) قال ابن عباس رضي الله عنه : كان ناس من العرب يحترزون من التجارة في أيام الحج وإذا دخل العشر بالغوا في ترك البيع والشراء بالكلية ، وكانوا يسمون التاجر في الحج : الداج ويقولون : هؤلاء الداج ، وليسوا بالحاج ،  ، فأنزل الله تعالى هذه الآية واباح التجارة في الحج .(لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُواْ فَضْلاً مِّن رَّبِّكُمْ) البقرة (198)   (تفسير الرازي   

الداج : هم الذين مع الحجاج من الأجراء والمكارين والأعوان والخدم ، وظاهر أنهم كانوا لا يحجون مع الناس .

அரபு மக்கள் ஹஜ்ஜுடைய காலங்கள் வந்து விட்டால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை முற்றிலும் நிறுத்தி விடுவார்கள். மேலும் அவ்வாறு ஹஜ்ஜுடைய காலங்களில் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களை தாஜ் என்ற அடைமொழியுடன் அதாவது ஹஜ்ஜுக்கு வராமல் சம்பளத்திற்கு வேலை செய்ய வந்திருப்பவர்கள் என்ற பெயருடன் அழைப்பார்கள். இது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கி, அவசியத்திற்கு மட்டும் வியாபாரம் செய்தால் தவறில்லை என்று உணர்த்தினான்.                                                      

( وَيُكْرَهُ أَنْ يَنْتَفِلَ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ )

 لِأَنَّ الْكَرَاهَةَ كَانَتْ لِحَقِّ الْفَرْضِ لِيَصِيرَ الْوَقْتُ كَالْمَشْغُولِ بِهِ لَا لِمَعْنًى فِي الْوَقْتِ (هداية

 ஹிதாயா நூலில் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் அதன் விளக்கம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நேரம் தொழுகைக்குத் தகுதியுள்ள நேரம் தான். உச்சம், உதயம், அஸ்தம் போன்று தொழுவது அறவே தடுக்கப் பட்ட நேரம் அல்ல. இருந்தாலும் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்று கூறப்பட்டதற்குக் காரணம் அந்த நேரம் முழுவதும் ஃபஜ்ருக்கு மட்டுமே உரித்தானது அந்த நேரங்களில் வேறு நஃபில் தொழுகைகளில் ஈடுபட்டாலும் கூட அது ஃபர்ளின் கண்ணியத்திற்கு இடையூறாக அமைந்து விடும் என்பதால் மக்ரூஹ் என்று கூறப்பட்டுள்ளது.                                   

ஒரு முக்கியப் பிரமுகர் வருகிறார் என்றால் அதற்காக பல ஏற்பாடுகள் நடைபெறும். அவரின் வாகனம் செல்வதற்கு சிறிதளவு இடம் போதும் என்றிருந்தாலும் நிறைய இடங்கள் காலி செய்து வைக்கப்படும் இதுவெல்லாம் அவருடைய கண்ணியத்தைக் கருதியே செய்யப்படும். அதுபோல் தான் மேலே உள்ள ஹிதாயாவின் சட்டம். அதுபோல் ரமழானில் ரமழான் சம்பந்தப்பட்ட அமல்களுக்காக அதிக நேரங்கள் கொடுத்து நம் அவசிய வேலைகளுக்காக சிறிதளவு நேரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது 

பொருளாதார ரீதியாக தயார் படுத்திக் கொள்ளுதல் 

சிலருக்கு ரமழானில் நிறைய தர்மம் செய்யலாம் என்ற ஆர்வம் இருக்கலாம். ஆனால் அவருடைய வருமானம் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அவர் இப்போதிருந்தே மிச்சப்படுத்தினால் இயன்றவரை தர்மம் செய்ய அவரால் இயலும்.வசதியற்றவர் தன்னால் இயன்றவரை சிறிது தர்மம் செய்தாலும் அல்லாஹ்விடம் நிறைய நன்மைகளைப் பெற்றுத்தரும் 

عن بن عباس كان يقول : كان رسول الله صلى الله عليه و سلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال فرسول الله صلى الله عليه و سلم حين يلقاه جبريل أجود من الريح المرسلة (نسائ

நபி ஸல் அவர்கள் பொதுவாகவே அதிகம் தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். குறிப்பாக ஜிப்ரயீல் அலை அவர்களை அதிகம் சந்திக்கும் மாதமான ரமழான் வந்து விட்டால் இன்னும் அதிகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அதுவரை இறங்கிய குர்ஆனை ஓதிக் காட்டுபவர்களாக இருந்தார்கள். அத்தகைய ரமழானில் நபி ஸல் அவர்கள் புயல் காற்றை விட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.  

நிறைய சொத்துக்களுக்கு ஜகாத் தர வேண்டியவர்கள் ஜகாத்துடைய கணக்குகளை 

ரமழான் வரும் முன்பே சரி பார்த்துக் கொண்டால் ரமழானில் அந்த வேலை மிச்சமாகும்  



இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026 RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم          ஜும்ஆ பயான்- இஸ்திகாமத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவர...