வியாழன், 29 செப்டம்பர், 2022

புகழுக்குரிய பெருமானார் (ஸல்)

 


30-09-2022

ரபீஉல் அவ்வல்- 3

 

 بسم الله الرحمن الرحيم 

புகழுக்குரிய பெருமானார் 

 (ஸல்)

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 




ஸலவாத் மூலமாக நபி (ஸல்) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுவது போல்

வேறு யாருடைய பெயரும் உச்சரிக்கப்படுவதில்லை.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا (56الاحزاب)

قَالَ الْبُخَارِيّ : قَالَ أَبُو الْعَالِيَة صَلَاة اللَّه تَعَالَى ثَنَاؤُهُ عَلَيْهِ عِنْد الْمَلَائِكَة , صَلَاة الْمَلَائِكَة الدُّعَاء وَقَالَ اِبْن عَبَّاس : يُصَلُّونَ يُبَرِّكُونَ (بخاري)

மலக்குகளின் சலவாத்

  - أن كعبا دَخل على عائشة فذكروا رسولَ الله صلى الله عليه و سلم فقال كعبٌ مَا مِنْ نَجْمِ فَجْرٍ يَطْلُعُ إِلَّا نَزَلَ سَبْعُونَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ حَتَّى يَحُفُّوا بالْقَبْرِ يَضْرِبُونَ بِأَجْنِحَتِهِمْ وَيُصَلُّونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا أَمْسَوْا عَرَجُوا ، وَهَبَطَ مِثْلُهُمْ فَصَنَعُوا مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا انْشَقَّتِ الْأَرْضُ خَرَجَ فِي سَبْعِينَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ يُوَقِّرُونَهُ "(شعب الايمان)

கஃப் ரழி அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் முதல் மாலை வரை 70,000 ஆயிரம் மலக்குகள் நபி ஸல் அவர்களின் கப்ரை சூழ்ந்து கொண்டு மாலை வரை சலவாத் சொல்கின்றனர். அந்த மலக்குகள் சென்ற பிறகு அடுத்த நேர மலக்குகள் வருகை தந்து நபி ஸல் அவர்களின் கப்ரை சூழ்ந்து கொண்டு காலை வரை சலவாத் சொல்கின்றனர். அழிவு நாள் வரை இவ்வாறு நடைபெறும்.         

சலவாத் சொல்வது சில நேரங்களில் வாஜிப், சில நேரங்களில் சுன்னத்,

சில நேரங்களில் முஸ்தஹப்பு என பலவகை உள்ளது

தொழுகைக்குள்ளே சலவாத் சில இமாம்களிடம் ஃபர்ளாகும்

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير

( قال الشَّافِعِيُّ ) فَرَضَ اللَّهُ عز وجل الصَّلَاةَ على رَسُولِهِ صلى اللَّهُ عليه وسلم فقال { إنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلَّوْا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا } + ( قال الشَّافِعِيُّ ) فلم يَكُنْ فَرْضُ الصَّلَاةِ عليه في مَوْضِعٍ أَوْلَى منه في الصَّلَاةِ  (الام

நபி ஸல் அவர்களின் பெயரைக் கேட்டால் சலவாத் சொல்வது கடமையாகும்

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ (ترمذي) بَاب قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ- كِتَاب الدَّعَوَاتِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

பொருள்- என் பெயரைக் கேட்டும் எவர் சலவாத் கூறவில்லையோ அவர் மாபெரும் கஞ்சன்

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه و سلم صعد المنبر فقال : ( آمين آمين آمين ) قيل : يا رسول الله إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين قال : ( إن جبريل أتاني فقال : من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ومن أدرك أبوية أو أحدهما فلم يبرهما فمات فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ) (صحيح ابن حبان)

சலவாத் சொல்வது மிகவும் முக்கிய சுன்னத்தாக ஆக்கப்பட்ட வெள்ளிக் கிழமை

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام (نسائ) إِكْثَارُ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ-كِتَاب الْجُمْعَةِ

வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறி விட்டு, அன்றைய தினம் என் மீது அதிகம் சலவாத் சொல்லுங்கள். உங்களுடைய சலவாத் என்னுடைய வஃபாத்துக்குப் பின்பும் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கூறியவுடன் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வஃபாத்துக்குப் பின் மண்ணோடு மண்ணாக ஆகி விடுவீர்களே பிறகு எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று தோழர்கள் கேட்டபோது நபிமார்களின் உடலை மண் திண்பதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான் என நபி ஸல் கூறினார்கள்.                                   

பாங்கு சொல்லப்பட்ட பின்பு  ஓதும் துஆவுக்கு முன்பும் சலவாத்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ (مسلم) بَاب اسْتِحْبَابِ الْقَوْلِ مِثْلِ قَوْلِ الْمُؤَذِّنِ لِمَنْ سَمِعَهُ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَسْأَلُ اللَّهَ لَهُ الْوَسِيلَةَ- كِتَاب الصَّلَاةِ

முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் அவர் கூறுவது போன்றே நீங்களும் கூறுங்கள். அதன் பிறகு என் மீது சலவாத் சொல்லுங்கள் அதன் பிறகு எனக்கு வஸீலா என்ற ஷஃபாஅத்தை தரும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள். மறுமையில் மாபெரும் ஷஃபாஅத் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். அது நானாக இருக்க விரும்புகிறேன். எவர் என் மீது சலவாத் கூறுவாரோ அவருக்கு என்னுடைய ஷஃபாஅத் உறுதியாகி விட்டது.               

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ (باب الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ .) كتاب الأذان

தம் மீது சலவாத் கூறுவதால் இந்த உம்மத்துக்கு கிடைக்கும் சிறப்பை அறிந்து அல்லாஹ்வுக்கு நபி ஸல் நன்றி செலுத்திய விதம்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، قَالَ : كَانَ لاَ يُفَارِقُ النَّبِيَّ صَلَّى الله عَلَيه وسَلَّم أَرْبَعَةٌ ، أَوْ خَمْسَةٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى الله عَلَيه وسَلَّم لِمَا يَنُوبُهُ مِنْ حَوَائِجِهِ بِاللَّيْلِ وَالنَّهَارِ ، قَالَ : فَجِئْتُهُ وَقَدْ خَرَجَ فَاتَّبَعْتُهُ ، فَدَخَلَ حَائِطًا مِنْ حِيطَانِ الأَسْوَاقِ يُصَلِّي ، فَسَجَدَ ، فَأَطَالَ ، فَبَكَيْتُ وَ قُلْتُ : أَرَى رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيه وسَلَّم قَدْ قَبَضَ اللَّهُ رُوحَهُ ، فَرَفَعَ رَأْسَهُ فَدَعَانِي ، فَقَالَ لِي : مَا شَأْنُكَ ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، أَطَلْتَ السُّجُودَ ، فَقُلْتُ : قَدْ قَبَضَ اللَّهُ رُوحَ رَسُولِهِ لاَ أَرَاهُ أَبَدًا ، فَقَالَ : سَجَدْتُ شُكْرًا لِرَبِّي فِيمَا أَبْلاَنِي فِي أُمَّتِي ، مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً مِنْ أُمَّتِي كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ.( : إتحاف الخيرة المهرة)

நபி ஸல் அவர்களைச் சுற்றி எப்போதும் நான்கு அல்லது ஐந்து பேர் இருப்போம். ஒருமுறை நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். தொழுகையில் சஜ்தா மிக நீண்டதாக ஆகி விட்டது. நான் அழ ஆரம்பித்து விட்டேன். நபி ஸல் அவர்கள் அல்லாஹ் அழைத்துக் கொண்டானோ என்று எண்ணி அழுதேன். நீண்ட நேரம் கழித்து நபி ஸல் அவர்கள் தலையை உயர்த்தினார்கள். என் அழுகைக்குக் காரணம் கேட்க, நான் அதைக் கூறினேன். அப்போது நபி ஸல் அவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த இவ்வாறு சஜ்தா செய்தேன்.  எவர் என் மீது சலவாத் கூறுவாரோ அவருக்குப்  பத்து நன்மைகள் எழுதப்பட்டு பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என் உம்மத்துக்கு இத்தகைய நன்மைகள் கிடைக்கச் செய்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த சஜ்தா செய்தேன் என்றார்கள்   

முஸ்லிம்களின் ஒரு சபை கூடும்போது சலவாத்

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ ، وَلَمْ يُصَلُّوا فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِلا كَانَ عَلَيْهِمْ تِرَةً يَوْمَ الْقِيَامَةِ ، إِنْ شَاءَ عَفَا عَنْهُمْ ، وَإِنْ شَاءَ أَخَذَهُمْ بِهَا هَذَا حَدِيثٌ حَسَنٌ (شرح السنة)

عن أبي سعيد قال: ما من قوم يقعدون ثم يقومون ولا يصلون على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم يوم القيامة حسرة وإن دخلوا الجنة للثواب (الكتاب : فضل الصلاة على النبي صلى الله عليه وسلم)مؤلف: إسماعيل بن إسحاق القاضي الأزدي:تحقيق الالباني) ( صحيح )

ஒரு சபை ஒன்று கூடி அங்கு சலவாத் சொல்லப்படாமல் அந்த சபை கலைந்தால் அவர்கள் சுவனம் சென்றாலும் வருத்தப்படுவார்கள். சபைகளில் சலவாத் சொன்னவர்களுக்கு அல்லாஹ் தந்த சிறப்பைப் பார்த்து...        

மன்னர்களை புகழும் வழமையை மாற்றி அதற்கு பதிலாக சலவாத் கூறும்படி

சட்டம் இயற்றிய உமரிப்னு அப்துல் அஜீஸ் ரஹ் 

كتب عمر بن عبد العزيز:أما بعد فإن أناسا من الناس قد التمسوا الدنيا بعمل الآخرة وإن الناس من القصاص قد أحدثوا في الصلاة على خلفائهم وأمرائهم عِدْل صلاتهم على النبي صلى الله عليه وسلم فإذا جاءك كتابي هذا فمُرْهم أن تكون صلاتهم على النبيين ودعاؤهم للمسلمين عامة ويدعوا ما سوى ذلك (مصنف ابن أبي شبية

தவாஃபின் போது சலவாத்

قال عمر بن الخطاب: إذا قدمتم فطوفوا بالبيت سبعا وصلوا عند المقام ركعتين ثم أتوا الصفا فقوموا من حيث ترون البيت فكبروا سبع تكبيرات بين كل تكبيرتين حمد لله وثناء عليه وصلاة على النبي صلى الله عليه وسلم ومسألة لنفسك وعلى المروة مثل ذلك (الكتاب : فضل الصلاة على النبي صلى الله عليه وسلم)(صحيح)

துஆ ஓதத் துவங்குவதற்கு முன்பும், துஆ ஓதிய பின்பும் ஹம்து, சலவாத் சொல்வது

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدْ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ (ترمذي) بَاب مَا جَاءَ فِي جَامِعِ الدَّعَوَاتِ-كتاب الدعوات-    عَنْ جَابِرِ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَجْعَلُونِي كَقَدَحِ الرَّاكِبِ، إِنَّ الرَّاكِبَ يَمْلَأُ قَدَحَهُ مَاءً ثُمَّ يَضَعُهُ، ثُمَّ يَأْخُذُ فِي مَعَالِيقِهِ حَتَّى إِذَا فَرَغَ جَاءَ إِلَى الْقَدَحِ، فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ شَرِبَ، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ تَوَضَّأَ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الْوُضُوءِ أَهْرَقَهُ ، وَلَكِنِ اجْعَلُونِي فِي أَوَّلِ الدُّعَاءِ وَفِي آخِرِ الدُّعَاءِ (شعب الايمان)

கருத்து- ஒரு பயணி தான் கொண்டு வந்த தண்ணீரில் தன் தேவைகளையெல்லாம் நிறைவு செய்த பின் மிச்சமிருக்கும் கடைசி தண்ணீரை இது வேண்டாம். தேவையில்லை என்று கீழே ஊற்றுவது போல் துஆவின் கடைசியில் சலவாத் தேவையில்லை என்று நினைத்து விடாதீர்கள்

 

ஹஜ்ரத் ஃபழாலத்திப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக! என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத் தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக! என்று சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னார்’.நபி (ஸல்) அவர்கள் அவரிடம், இப்பொழுது துஆக் கேளும், ஏற்கப்படும் என்று கூறினார்கள்.  

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -  ترمذي

நாயகம் ஸல் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.

عن عبد الله بن أبي بكر قال : كنا بالخيف ومعنا عبد الله ابن أبي عتبة : فحمد الله وأثنى عليه وصلى على النبي صلى الله عليه و سلم ودعا بدعوات ثم قام فصلى بنا (الكتاب : فضل الصلاة على النبي صلى الله عليه وسلم)

ஜனாஸா தொழுகையில் சலவாத்

 عن الشعبي قال:أول تكبيرة من الصلاة على الجنازة ثناء على الله عز وجل والثانية صلاة على النبي صلى الله عليه و سلم والثالثة دعاء للميت والرابعة السلام (فضل الصلاة

ஷாஃபியீ) குனூத்தின் போது நபி ஸல் அவர்களின் மீது சலவாத்

 عن قتادة عن عبد الله بن الحارث: أن أبا حليمة معاذ كان يصلي على النبي صلى الله عليه وسلم في القنوت (الكتاب:فضل الصلاة على النبي صلى الله عليه وسلم

இப்னு உமர் ரழி பிரயாணத்தில் இருந்து எப்போது திரும்பினாலும் முதலில் நபியவர்களின் கப்ருக்கு வந்து சலாம் சொல்வார்கள்

عن عبد الله بن دينار قال : رأيت ابن عمر إذا قدم من سفر دخل المسجد فقال : السلام عليك يا رسول الله السلام على أبي بكر السلام على أبي ويصلي ركعتين (الكتاب:فضل الصلاة على النبي صلى الله عليه وسلم) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ عَبْدٍ يُسَلِّمُ عَلَيَّ عِنْدَ قَبْرِي إِلَّا وَكَّلَ اللهُ بِهَا مَلَكًا يُبَلِّغُنِي، وَكَفَى أَمْرَ آخِرَتِهِ وَدُنْيَاهُ وَكُنْتُ لَهُ شَهِيدًا وَشَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ (شعب الايمان للبيهقي)

இம்மை, மறுமையின் கவலைகளைப் போக்கும் சலவாத்

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا اللَّهَ اذْكُرُوا اللَّهَ جَاءَتْ الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ قَالَ أُبَيٌّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُكْثِرُ الصَّلَاةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِي فَقَالَ مَا شِئْتَ قَالَ قُلْتُ الرُّبُعَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ النِّصْفَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قَالَ قُلْتُ فَالثُّلُثَيْنِ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا قَالَ إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ (ترمذي)كتاب صفة القيامة - الراجفة  النفخة الأولى التى يموت لها الخلائق - الرادفة  النفخة الثانية التى يحيون لها يوم القيامة  وفي مصنف عبد الرزاق والبزار (إذن يكفيك الله هم الدنيا وهم الآخرة )

உபையிப்னு கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், யாரஸூலல்லாஹ், நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓத விரும்புகிறேன். நான் துஆ, திக்ரு செய்யும் நேரத்தில் ஸலவாத்துக்காக எவ்வளவு நேரத்தை நிர்ணயிப்பது?’ என்று கேட்டேன். நீர் விரும்பிய அளவு என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். யாரஸூலல்லாஹ், நான்கிலொரு பகுதி நேரம்?’ என்றேன். நீர் எவ்வளவு விரும்புவீரோ அவ்வளவு அதிகப்படுத்தினால் உமக்கு நல்லதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பாதி நேரம் ஒதுக்கட்டுமா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். மூன்றில் இரு பகுதிகள் ஒதுக்கவா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது என்றார்கள். என் நேரம் முழுவதையும் தங்கள் மீது ஸலவாத் சொல்ல நிர்ணயித்துக் கொள்கிறேன் என்றேன். அப்படிச் செய்தீரென்றால், அல்லாஹுதஆலா உமது சகல கவலைகளையும் தீர்த்துவைப்பான், உமது பாவமும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ : 2754)                      

உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு நாம் சலவாத் சொன்னாலும் நபி ஸல் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَكِيعٌ إِنَّ لِلَّهِ فِي الْأَرْضِ مَلَائِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ (مسند أحمد) مُسْنَدُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه- عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَتَّخِذُوا قَبْرِي عِيدًا وَلَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَحَيْثُمَا كُنْتُمْ فَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي (مسند أحمد) مُسْنَدُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

 

عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلّهِ سَيَّارَةً مِّنَ الْمَلاَئِكَةِ يَطْلُبُونَ حِلَقَ الذِّكْرِ فَإِذَا أَتَوْا عَلَيْهِمْ وَحَفُّوا بِهِمْ ثُمَّ بَعَثُوا رَائِدَهُمْ إِلَي السَّمَاءِ إِلَي رَبِّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَي فَيَقُولُونَ: رَبَّنَا أَتَيْنَا عَلَي عِبَادٍ مِنْ عِبَادِكَ يُعَظِّمُونَ آلاَءَكَ وَيَتْلُونَ كِتَابَكَ وَيُصَلُّونَ عَلَي نَبِيِّكَ مُحَمَّدٍ ﷺ وَيَسْاَلُونَكَ لِآخِرَتِهِمْ وَدُنْيَاهُمْ فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَيَقُولُونَ يَا رَبِّ إِنَّ فِيهِمْ فُلاَناً الْخَطَّاءُ إِنَّمَا اِعْتَنَقَهُمْ اِعْتِنَاقاً فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَهُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَي بِهِمْ جَلِيسُهُمْ.  (بزار

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: திக்ருடைய சபைகளைத் தேடி மலக்குகளின் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும், திக்ருடைய சபைகளுக்கு அவர்கள் வந்துவிட்டால் சபையிலுள்ளோரைச் சூழ்ந்து கொள்கிறார்கள், தங்களின் சார்பாக தங்களில் ஒருவரை அல்லாஹ்விடம் தூது அனுப்புகிறார்கள், எங்கள் இரட்சகனே! உன்னுடைய பாக்கியங்களைப் பெருமைப்படுத்தியும், உன் வேதத்தை ஓதிக்கொண்டும், உன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதியும், தமது இம்மை மறுமையின் நலவுகளை உன்னிடம் வேண்டுகின்ற உனது அடியார்களிடமிருந்து நாங்கள் வந்துள்ளோம் என்பார்கள், அவர்களை எனது அருளைக் கொண்டு மூடுங்கள்என்று அல்லாஹ் கூறுவான். எங்கள் இரட்சகா! அவர்களுடன் ஒரு பாவியும் உள்ளான்!என மலக்குகள் சொல்வர், அவர்கள் அனைவரையும் எனது அருளை கொண்டு மூடுங்கள், காரணம் இச்சபையினருடன் அமர்பவனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) விலக்கப்படமாட்டான் என்று அல்லாஹ் கூறுவான்.

நபி ஸல் அவர்களின் புகழை அல்லாஹ் இன்னும் பல்வேறு வகையிலும் சிறப்பாக்கியுள்ளான்.

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகம் அந்த நூறு மனிதர்கள்.அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும். இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப் படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்து கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட். 

நபி ஸல் அவர்களைப் பற்றி பிற மத தலைவர்களின் கருத்து

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பின் சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோல் மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காக பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மத் அவர்களுக்கும் எனது விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்கி ஒரேவிதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. நெப்போலியன்

முஹம்மத் நபியின் நற்குணங்கள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கை பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். கூடியவிரைவில் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று நம்புகிறேன். பெர்னாட்ஷா

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த சீர்த்திருத்தங்களை பின் பற்றி நடக்க வேண்டும். மகாத்மா காந்தி

மேலைநாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபிய பாலைவனத்தில் நபிகள் நாயகம் அவர்களால் விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சகங்களேயன்றி  புதியது ஒன்றுமில்லை.சரோஜினி நாயுடு

வியாழன், 22 செப்டம்பர், 2022

பரக்கத்தான அதிகாலை நேரம்

 


23-09-2022

 

 بسم الله الرحمن الرحيم 

பரக்கத்தான அதிகாலை நேரம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




அதிகாலை நேரத்தில் நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு எழுப்பி அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர வேண்டும். அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம் பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை மதரஸாக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை கண்டதையும் பார்த்து விட்டு பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK  என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால் மார்க்கக் கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை மாற ஒரே வழி இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு எழுப்புவது தான்.      

அதிகாலை நேரத்தின் மகத்துவம்

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا (78) الاسراء

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْعَصْرِ وَصَلَاةِ الْفَجْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِكُمْ فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ  (بخاري 7429

சுருக்கம்- மனிதர்களின் நன்மைகளைப் பதிவு செய்யும் மலக்குமார்கள் பகலில் ஒரு குழுவினர் இரவில் மற்றொரு குழுவினர் என இரு பிரிவாக உள்ளனர். இந்த இரு குழுவினரும் ஒன்று சேரும் நேரங்களாக ஃபஜ்ரும் அஸரும் உள்ளன. இரவில் நன்மைகளைப் பதிவு செய்த மலக்குகள் அதிகாலை ஃபஜ்ரின் நேரத்தில் இங்கிருந்து புறப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்வை சந்தித்து மனிதர்களின் நன்மைகளைப் பற்றிக் கூறும்போது அல்லாஹ் மலக்குகளிடம் நீங்கள் இங்கு வரும்போது என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்பான். உன் அடியார்கள் உன்னைத் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டு வந்தோம் என மலக்குள் பதில் கூறுவார்கள்.                     

அல்லாஹ் தன் படைப்புகளில் சிறந்தவைகளைக் கொண்டு தான் சத்தியம் செய்வான்

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2)       وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ (المدثر34)-                   وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ (سورة التكوير18)-

அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...

நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.      

 

ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில்  இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள்.                                            

பெண்களின் வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்.                                           

அதிகாலையின் மகத்துவத்தை மனிதர்களை விட மற்ற உயிரினங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ (41)النور

மேற்படி வசனத்தின் அடிப்படையில் பறவைகளும் தஸ்பீஹ் செய்கின்றன என்று அறிய முடிகிறது. அதிலும் குறிப்பாக  அதிகாலை நேரத்தில் தான் அதிகமாக பறவைகள் தஸ்பீஹ் செய்வதை நாம் பார்க்க முடியும்.

அதிகாலை நேரத்தில் மலக்குகளின் அதிகப்படியான வருகையை அறிந்து சேவல் கூறுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ فَإِنَّهُ رَأَى شَيْطَانًا (بخاري) باب خَيْرُ مَالِ الْمُسْلِمِ- كتاب بدء الخلق-قَالَ عِيَاض: كَانَ السَّبَب فِيهِ رَجَاء تَأْمِين الْمَلَائِكَة عَلَى دُعَائِهِ وَاسْتِغْفَارهمْ لَهُ وَشَهَادَتهمْ لَهُ بِالْإِخْلَاصِ  وَيُؤْخَذ مِنْهُ اِسْتِحْبَاب الدُّعَاء عِنْد حُضُور الصَّالِحِينَ تَبَرُّكًا بِهِمْ (فتح الباري)

சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளை வேண்டுங்கள். ஏனெனில் அது அதிகாலையின் மலக்குகளைக் கண்ணால் கண்டு கூவுகிறது. கழுதையின் சப்தம் கேட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்பை வேண்டுங்கள். ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டு கத்துகிறது.                            

நல்லோர்கள் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்கும். ஆகவே  அருளை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் என்பதும், தீயோர்கள் இருக்குமிடத்தில் அல்லாஹ்வின் சாபம் இறங்கும். ஆகவே அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும் என்ற படிப்பினையும் இதில் உண்டு- மிர்காத் ஃபத்ஹுல் பாரீ    அதிகாலை சுஃப்ஹு தொழுது விட்டுத் தொடங்கும் வியாபாரம் பரக்கத்தாக இருக்கும்.

عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابوداود)

அதிகாலை நேரத்தில் என் உம்மத்தினருக்கு பரக்கத் செய்வாயாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். அவர்கள் ஏதேனும் படையை அனுப்புவதாக இருந்தாலும் காலை நேரத்தில் அனுப்புவார்கள். இதனடிப்படையில் ஸஹ்ருல் ஙாமிதீ ரழி என்ற நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த துஆவைக் கொண்டு பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வியாபாரச் சரக்குகளை காலையில் சுப்ஹு முடித்துவிட்டு அனுப்புபவராக இருந்தார். அதனால் அவருடைய வருமானம் பெருகியது.                                            

குறிப்பு- நமக்குச் சொல்லப்பட்டதை நாம் விட்டு விட்டோம். ஆனால் இன்று மற்றவர்கள் அதை கடை பிடிக்கிறார்கள். இன்று பிராமணர்கள் உலக அளவில் முன்னேறி வருகிறார்கள் என்றால் அவர்கள் அதிகாலை நேரத்தோடு எழுகிறார்கள் என்பதும் முக்கிய காரணம். ஆனால் இன்று நம்மில் பலர் எழுவதே 7 அல்லது 8 மணிக்குத் தான்.                                                

சுப்ஹுத் தொழுகையின் முக்கியத்துவம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ (ابوداود)

எவர் அதிகாலையில் எழுந்து தன் மனைவியையும் எழுப்பி தொழச் செய்கிறாரோ மேலும் அவள் எழுந்திருக்கா விட்டால் நீரை முகத்தில் தெளித்து எழுப்புகிறாரோ அவர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக எந்த மனைவி அதிகாலையில் எழுந்து தன் கணவரையும் எழுப்பி தொழச் செய்கிறாரோ மேலும் அவர் எழுந்திருக்கா விட்டால் நீரை முகத்தில் தெளித்து எழுப்புகிறாரோ அத்தகைய மனைவி  மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக.                                                    

உமர் ரழி தன் ஆட்சியில் சுப்ஹுக்கு ஒருவர் வரா விட்டாலும் அதைக் கண்காணிப்பவர்களாக இருந்தார்கள்

عَنْ أَبِى بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِى حَثْمَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِى حَثْمَةَ فِى صَلاَةِ الصُّبْحِ وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ - وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ وَالْمَسْجِدِ النَّبَوِىِّ - فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِى الصُّبْحِ فَقَالَتْ إِنَّهُ بَاتَ يُصَلِّى فَغَلَبَتْهُ عَيْنَاهُ. فَقَالَ عُمَرُ لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ فِى الْجَمَاعَةِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً. (مؤطا

சுலைமான் என்பவர் ஒருநாள் மட்டும் சுப்ஹு தொழுகைக்கு வரவில்லை. அதன்பிறகு கடைவீதியில் அவரது தாயாரைக் கண்டு இன்று ஏன் உங்கள் மகன் சுப்ஹு தொழுகைக்கு வரவில்லை என்று கேட்க, என் மகன் இரவு முழுவதும் தொழுதார். களைப்பில் சுப்ஹு தொழாமல் தூங்கி விட்டார் என்று தாயார் பதில் கூறினார்கள். அதற்கு உமர் ரழி அவர்கள் இரவெல்லாம் வணங்கும் வணக்கத்தை விட சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது என்று கூறினார்கள். 

சுப்ஹு தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்.

عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ سَمِعْتُ جُنْدَبَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلَا يَطْلُبَنَّكُمْ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ فَيُدْرِكَهُ فَيَكُبَّهُ فِي نَارِ جَهَنَّمَ (مسلم 1050

சுப்ஹு தொழுதவுடன் மஸ்ஜிதில் சற்று நேரம் அமர்ந்து வணக்க ரீதியான காரியங்களில் ஈடுபடுவது

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ (ابوداود)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ரு தொழுதவுடன் அதே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்து உபதேசம் செய்வது போன்ற அமல்களில் ஈடுபடுவார்கள்.

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا غَنَائِمَ كَثِيرَةً وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَقَالَ رَجَلٌ مِمَّنْ لَمْ يَخْرُجْ مَا رَأَيْنَا بَعْثًا أَسْرَعَ رَجْعَةً وَلَا أَفْضَلَ غَنِيمَةً مِنْ هَذَا الْبَعْثِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَدُلُّكُمْ عَلَى قَوْمٍ أَفْضَلُ غَنِيمَةً وَأَسْرَعُ رَجْعَةً قَوْمٌ شَهِدُوا صَلَاةَ الصُّبْحِ ثُمَّ جَلَسُوا يَذْكُرُونَ اللَّهَ حَتَّى طَلَعَتْ عَلَيْهِمْ الشَّمْسُ أُولَئِكَ أَسْرَعُ رَجْعَةً وَأَفْضَلُ غَنِيمَةً (ترمذي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை நஜ்துக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் சீக்கிரம் திரும்பியதுடன் நிறைய போர்ச் செல்வங்களையும் கொண்டு வந்தார்கள். மக்கள் அவர்களின் விரைவான வருகையைக் கண்டு ஆச்சரியம் அடைந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விடவும் சிறந்த ஒன்றை அறிவிக்கட்டுமா அதாவது குறைந்த நேரத்தில் நிறைவான பலன்களைப் பெறும் வழியை அறிவிக்கட்டுமா என்று கூறி, யார் ஃபஜ்ரு தொழுகையை முடித்து விட்டு அதே இடத்தில் அமர்ந்து அமல்களில் ஈடுபடுவாரோ அவர் குறைந்த நேரத்தில் நிறைவான பலன்களைப் பெறுபவர் என்றார்கள்.                                          

ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாத போது மக்கள் நேரத்தோடு உறங்கி, அதிகாலை நேரத்தோடு எழுந்தார்கள். அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்று இரவை பகலாக ஆக்கும் மின்சாரம் வந்தது.  அதனால் மக்களின் தூக்க நேரமும் தாமதமானது. பாதி இரவுக்குப் பின்னால் உறங்கி  பாதி பகல் முடிந்த பின் எழுந்திருக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. உதாரணமாக ஒருவர் 10-ம் தேதி இரவு 12 மணிக்குத் தான் உறங்குகிறார் என்றால் உண்மையில் அவர் 11-ம் தேதி ஆரம்பித்த பிறகு தான் அவர் உறங்குகிறார்.          

இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நபிமொழி

عَنْ أَبِي بَرْزَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا (أي قبل العشاء وَالْحَدِيثَ بَعْدَهَا..(بخاري)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழாமல் தூங்குவதையும் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதையும்  தடுத்தார்கள்

لِأَنَّ النَّوْم قَبْلَهَا قَدْ يُؤَدِّي إِلَى إِخْرَاجهَا عَنْ وَقْتهَا مُطْلَقًا أَوْ عَنْ الْوَقْت الْمُخْتَار وَالسَّمَر بَعْدَهَا قَدْ يُؤَدِّي إِلَى النَّوْم عَنْ الصُّبْح أَوْ عَنْ وَقْتهَا الْمُخْتَار أَوْ عَنْ قِيَام اللَّيْل (فتح الباري)

இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதால் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் போகலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு தடுத்தார்கள். ஃபத்ஹுல் பாரீ                               

அன்றைய காலத்தில் கூறப்பட்ட வீண் பேச்சுக்கள் என்ற பட்டியலில் இன்றுள்ள பொழுது போக்கு சாதனங்களும் அடங்கும். இத்தகைய பொழுது போக்கு சாதனங்களால் இன்று மக்களின் தூக்கம் தாமதமாகி விட்டது        

عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ قَال:رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ النَّاسَ عَلَى الْحَدِيثِ بَعْدَ الْعِشَاءِ وَيَقُولُ:أَسَمَرٌ أَوَّلَ اللَّيْلِ وَنَوْمٌ آخِرَهُ ؟(مصنف ابن ابي شيبة)-

உமர் ரழி அவர்கள் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுபவர்களை அடிப்பவர்களாக ஆயிருந்தார்கள். மேலும் இரவில் துவக்கத்தில் தூங்குவதற்கு பதிலாக பேசிக் கொண்டிருந்து விட்டு இரவில் கடைசிப் பகுதியில் தூங்கப் போகிறீர்களா என்றும் கண்டிப்பார்கள்.                   

عَنْ أَبِي وَائِلٍ وَإِبْرَاهِيمَ قَالاَ: جَاءَ رَجُلٌ إِلَى حُذَيْفَةَ فَدَقَّ الْبَابَ فَخَرَجَ إِلَيْهِ حُذَيْفَةُ فَقَالَ:مَا جَاءَ بِكَ ؟فَقَالَ:جِئْت لِلْحَدِيثِ فَسَفَقَ حُذَيْفَةُ الْبَابَ دُونَهُ  ثُمَّ قَالَ:إِنَّ عُمَرَ جَدَبَ لَنَا السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ(مصنف ابن ابي شيبة

ஹுதைபா ரழி அவர்களிடம் இரவில் ஒருவர் வந்து தகவைத் தட்டினார். ஹுதைபா ரழி வெளியே வந்து இந்த நேரத்தில் எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வந்தேன் என்றார். அப்போது ஹுதைபா ரழி அவர்கள் (அவரைக் கண்டிக்கும் விதமாக) உமர் ரழி இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதை முற்றிலும் தடை செய்தார்கள் என்று கூறி விட்டு கதவைச் சாத்திக் கொண்டார்கள்.          

وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِى السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِى مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ مِنَ الْحَوَائِجِ (ترمذي)

மார்க்க விஷயங்களுக்காக சில நேரம் விழித்திருக்கும் தேவை ஏற்பட்டால் தவறில்லை

இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் என நமக்கு கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர் மாற்றமாக இன்று....

இரவு 7 மணிக்கு மேல் தான் முக்கியமான சீரியல்கள் ஒலி பரப்பப்படுகிறது. 11 மணி வரை அவைகளை பார்த்து முடிக்காமல் பெரும்பாலான பெண்களுக்கு தூக்கம் வருவதில்லை. இந்த சீரியல்கள் வருவதற்கு முன்பாவது கொஞ்சம் சீக்கிரம் தூங்கும் பழக்கம் இருந்தது. இவைகள் வந்த பின்பு தூங்குவதற்கு இன்னும் தாமதமாகுவது  மறுக்க முடியாத விஷயம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் பெண்களும், குழந்தைகளும் சீக்கிரம் தூங்கி விடுவார்கள்

عَنْ عَائِشَةَ  رضي الله عنها قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالْعِشَاءِ وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فَلَمْ يَخْرُجْ حَتَّى قَالَ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ فَخَرَجَ فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرَكُمْ (بخاري-

இரவில் சீக்கிரம் தூங்காமல், காலையில் நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் தீமைகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ.(بخاري)

ஷைத்தான் நீங்கள் தூங்கும்போது உங்களின் பிடரியில் முடிச்சுப் போடுகிறான். இரவு நீளமாக உள்ளது. நன்றாக (விடியும் வரை) தூங்கு என (மனிதனை மயக்கி வைக்கிறான்) எப்போது ஒருவர் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை நினைப்பாரோ அப்போது முதல் முடிச்சு அவிழும். எப்போது அவர் உளூச் செய்வாரோ  அப்போது இரண்டாவது முடிச்சு அவிழும். எப்போது அவர் ஃபஜ்ரு தொழுவாரோ அப்போது மூன்றாவது முடிச்சு அவிழும். இம்மூன்றும் நடைபெறா விட்டால் அன்று முழுவதும் ஷைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ளவராகவே இருப்பார்.    

عن عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "النَّوْمُ ثَلَاثَةٌ: فَنَوْمٌ خَرَقٌ، وَنَوْمٌ خَلَقٌ، وَنَوْمٌ حُمْقٌ، فَأَمَّا نَوْمُ خَرَقٍ: فَنَوْمَةُ الضُّحَى يَقْضِي النَّاسُ حَوَائِجَهُمْ وَهُوَ نَائِمٌ، وَأَمَّا نَوْمُ خَلَقٍ: فَنَوْمَةُ الْقَايِلَةِ نِصفِ النَّهَارِ، وَأَمَّا نَوْمَةُ حُمْقٍ: نَوْمَةٌ حِينَ تَحْضُرُ الصلَاةُ ؟(مصنف ابن ابي شيبة)

விளக்கம்-பண்புள்ள தூக்கம் என்றால் மதிய நேரத்தில் தூங்கும் கைலூலா தூக்கம். இது சுன்னத். 2,மடத்தனத் தூக்கம் என்றால் காலை நேரத்தில் தூங்குவது 3, மந்த புத்தியை ஏற்படுத்தும் தூக்கம் தொழுகை நேரத்தில் தூங்குவது

கைலூலா தூக்கம் நல்லது.

عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ , وَبِقَيْلُولَةِ النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ.(ابن خزيمة

القيلولة وهي النوم نصف النهار . (شرح النووي

சஹர் உண்ணுவதை நோன்புக்கு உறுதுணையாக ஆக்கிக் கொள்ளுங்கள். கைலூலா தூக்கத்தை தஹஜ்ஜுத் தொழுகைக்கு உறுதுணையாக ஆக்கிக் கொள்ளுங்கள். விளக்கம்- பகலில் சிறிது தூங்குவது அதிகாலையில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுவதற்கு உறுதுணையாக இருக்கும்.  

عن سويد العدوى قال : كنا نصلى مع عمر بن الخطاب الظهر ثم نروح إلى رحالنا فنقيل( كنز العمال)  

நாங்கள் உமர் ரழி அவர்களுடன் இருந்த போது சில நேரங்களில் லுஹருக்குப் பின்னாலும் கைலூலா தூங்குபவர்களாக இருந்தோம்

عن أنس بن مالك قال: كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثم نَرجع فنَقيلُ ( كنز العمال) نوم القيلولة وهي الفترة بين الظهر والعصر

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஜும்ஆத் தொழுத பின் கைலூலா தூங்குபவர்களாக இருந்தோம்

 

மக்களிடம் பழமை மறைந்து புதியகண்டு பிடிப்புகள் உருவாகும்போது அதனால் நன்மை இருப்பினும் தீமைகளும் உள்ளன. ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளை தாங்களே செய்தார்கள். அதனால் அவரகளின் உடலில் ஆரோக்கியம் இருந்தது. இன்று உட்கார்ந்த இடத்தில் இருந்து பட்டனை தட்டினால் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என்கிற அளவுக்கு நவீன சாதனங்கள் பெருகியது. அதனால் பெண்களின் உடம்பில் ஆரோக்கியம் குறைந்தது. தற்போது பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் சிசேரியன் மூலம் பிறப்பதற்கு இதுவும் காரணம்.         

ஒரு காலத்தில் குதிரையிலும், ஒட்டகத்திலும், மாட்டு வண்டியிலும் மக்கள் பிரயாணம் செய்தார்கள். அப்போது விபத்துகள் இல்லை.  ஒரு மாட்டு வண்டியும், இன்னொரு மாட்டு வண்டியும் மோதி இத்தனை பேர் இறந்தார்கள் என்று சரித்திரம் இல்லை. ஆனால் இன்று கார், பைக், விமானம், பஸ் என நவீன வாகனங்கள் வந்தன. அதனால் மக்களிடம் சிரமங்கள் குறைந்தாலும் விபத்துகள் பெருகி விட்டன.                                     

                                                 

ஒரு காலத்தில் மக்கள் சாப்பிடுவதற்கு தட்டு, டம்ளரை பயன்படுத்தினார்கள். இன்று ஒரு தடவை உபயோகித்த பொருளை மறுமுறை உபயோகிக்காத அளவுக்கு (USE AND THROW) எல்லாமே பிளாஸ்டிக் மயம். அதனால் மக்களின் வேலை இலகுவாக முடிந்தாலும் பூமிக்கு ஆபத்தும் அதனால் வந்தது. ஒரு வாழைப்பழத் தோல் பூமிக்குள் புதைந்தால் ஒரு வாரத்தில் மக்கிப்போய் விடும்.  காகிதப்பை PAPER பூமிக்குள் புதைந்தால் ஒரு மாதத்தில் மக்கிப்போய் விடும்.  பருத்தித் துணி பூமிக்குள் புதைந்தால் 5 மாதங்களிலும், கம்பளி ஆடை பூமிக்குள் புதைந்தால் 12 மாதங்களிலும், மரக்கட்டை பூமிக்குள் புதைந்தால் 10 முதல் 15 ஆண்டுகளிலும், தோல் பொருட்கள் பூமிக்குள் புதைந்தால் 40 முதல் 50 ஆண்டுகளிலும், தகர பாத்திரம் பூமிக்குள் புதைந்தால் 50 முதல் 100 ஆண்டுகளிலும், அலுமினிய பாத்திரம் பூமிக்குள் புதைந்தால் 200 முதல் 500 ஆண்டுகளிலும் மக்கிப்போய் விடும். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்குள் புதைந்தால் அவைகள் மக்கிப்போக 10 லட்சம் வருடங்களாகும்                                                  

இவ்வாறு பழமைகள் மறைந்து புதுமைகள் உருவாகும்போது ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாத போது மக்கள் நேரத்தோடு உறங்கி, அதிகாலை நேரத்தோடு எழுந்தார்கள். அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்று இரவை பகலாக ஆக்கும் மின்சாரம் வந்தது.  அதனால் மக்களின் தூக்க நேரமும் தாமதமானது. ஆரோக்கியமும் குறைந்தது.                                

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...