வியாழன், 27 அக்டோபர், 2022

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு அனைத்தும் வசப்படும்

 


28-10-2022

ரபீஉல் ஆகிர் 1

 

بسم الله الرحمن الرحيم 

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

அனைத்தும் வசப்படும்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 





அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் உலகில் யாரைக் கண்டும் எதைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இன்று அத்தகைய அச்சம் குறைந்து விட்டதால் நாம் யார் யாரையோ அஞ்சி வாழுகின்ற நிலை உள்ளது.

 

சூரா புரூஜ் உடைய ஆரம்ப வசனங்களின் விளக்கமாக முஸ்லிம் ஷரீஃபில் 5735வது ஹதீஸில் கூறப்படும் ஒரு இளைஞனின் சம்பவத்தில் அந்த இளைஞன் சூனியக்காரனாக மாற வேண்டியதிருந்த நிலையில் அல்லாஹ்வின் அருளால் ஒரு இறைநேசப் பெரியாரின் தொடர்பு கிடைத்ததால் அந்த இளைஞருக்கு நேர்வழி கிட்டும். எது சரியான வழி என்பதைக் கண்டறிவதற்காக ஒருநாள் அந்த இளைஞர் ஒரு காரியம் செய்தார். ஒரு சிங்கத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது இவர் தன் மனதில் நான் செல்லும் பாதை சரியானதாக இருப்பின் நான் வீசும் ஒரே ஒரு கல்லின் மூலமாக இந்த சிங்கம் சாக வேண்டும் என்று அந்தக் கல்லை வீசுவார். அந்த சிங்கம் செத்து விடும்.    

عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ السِّحْرَ فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا ....   فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتْ النَّاسَ فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمْ الرَّاهِبُ أَفْضَلُ فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا... (مسلم)

தன்னை தாக்க வந்த சிங்கத்திடம் ஒரு நபித்தோழர் நான் நபி ஸல் அவர்களுக்கு பணிவிடை செய்பவன்  என்று கூற, அந்த சிங்கம் அடங்கியதோடு, வனப்பகுதியின் எல்லை வரை அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது

عَنِ ابْنِ الْمُنْكَدِرِ  أَنَّ سَفِينَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطَأَ الْجَيْشَ بِأَرْضِ الرُّومِ  أَوْ أُسِرَ فِي أَرْضِ الرُّومِ  فَانْطَلَقَ هَارِبًا يَلْتَمِسُ الْجَيْشَ فَإِذَا هُوَ بِالأَسَدِ فَقَالَ لَهُ : أَبَا الْحَارِثِ ، إِنِّي مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَمْرِي كَيْتَ وَكَيْتَ فَأَقْبَلَ الأَسَدُ لَهُ بَصْبَصَةٌ حَتَّى قَامَ إِلَى جَنْبِهِ كُلَّمَا سَمِعَ صَوْتًا  أَهْوَى إِلَيْهِ  ثُمَّ أَقْبَلَ يَمْشِي إِلَى جَنْبِهِ  فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى بَلَغَ الْجَيْشَ ، ثُمَّ رَجَعَ الأَسَدُ "(مشكاة-شرح السنة)صحيح

நபித் தோழர்களில் ஒருவர் போருக்குச் சென்று திரும்பும்போதோ அல்லது எதிரிகளிடமிரிந்து தப்பிய போதோ பாதை மாறி வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஒரு சிங்கம் எதிரில் வர, நபி ஸல் அவர்களுடன் தமது நெருக்கத்தையும், தாம் வழி மாறி வந்து விட்டதையும் கூற அந்த சிங்கம் அவரது வலது புறத்தில் வந்து அவருடன் சேர்ந்து நடந்த  து. வழியில் ஏதேனும் வேறு மிருகத்தைக் கண்டால்  இந்த சிங்கம் கர்ஜிக்கும். உடனே அந்த மிருகம் ஓடி விடும். இவ்வாறு காட்டுப் பகுதியை கடந்து படையினர் தங்கியிருக்கும் இடம் வரை கூடவே வந்து அவரை வழியனுப்பி விட்டுச் சென்றது.                   

நபி ஸல் அவர்களிடம் இரவில் நீண்ட நேரம் பேசி விட்டு வந்த நபித்தோழர்கள் இருவரின் கைகளில் இருந்த குச்சி இருள் நீக்கும் டார்ச் லைட் ஆக மாறிய  சம்பவம். இருவித அறிவிப்புகள்

عن أَنَس رض أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  فِى لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ- عَنْ أَنَسٍ كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِىِّ  صلى الله عليه وسلم  (بخاري)465 كتاب الصلاة

قضة1: عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَرَجُلًا آخَرَ مِنْ الْأَنْصَارِ تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنْ اللَّيْلِ سَاعَةٌ وَلَيْلَةٌ شَدِيدَةُ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بَلَغَ إِلَى أَهْلِهِ (مسند أحمد) مُسْنَدُ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ (مشكاة-باب الكرامات

இரு சஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பும்போது கடும் இருட்டாக இருந்தது அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த குச்சி பிரகாசித்தது. அதன் வெளிச்சத்தில் நடந்தனர். பிறகு அவ்விருவரும் அவரவர் வீட்டுக்குச் செல்ல பிரிந்த போது இருவரின் கையிலும் இருந்த குச்சிகள் தனியே பிரகாசித்தன. அந்த வெளிச்சத்தில் வீடு போய் சேர்ந்தனர்.                                          

உஹது மலையில் நபி ஸல் அவர்களும், கீழ்கானும் தோழர்களும் நின்றிருக்க உஹது மலை குலுங்கியபோது நபி ஸல் மலையை காலால் அழுத்தி  உன் மீது நபி, சித்தீக், இரு ஷஹீதுகள் இருக்க குலுங்குகிறாயா என்று கூற உடனே அமைதியானது

عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ وَقَالَ اسْكُنْ أُحُدُ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ (بخاري) باب مَنَاقِبُ عُثْمَانَ بْنِ عَفَّانَ - فضائل الصحابة

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியும் அவர்களின் துஆவால் தப்பியது

عن يحيى بن عثمان بقية بن الوليد قال :(كنا في البحر فهبت الرياح وهاجت الأمواج فبكى الناس وصاحوا فقيل لمعيوف - أو ابن معيوف - هذا ابراهيم بن أدهم لو سألته أن يدعو الله عز و جل ؟ وإذا هو نائم في ناحية السفينة ملفوف رأسه في كساء فدنا منه فقال:

يا أباإسحاق أما ترى ما الناس فيه ؟ فقال :اللهم قد أريتنا قدرتك فأرنا رحمتك  فهدأت السفينة          (مجابوا الدعوة)

சில மக்கள் கடலில் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியது. மக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். அப்போது ஒருவர் கூறினார். இதோ இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் இருக்கிறார்கள். அவரிடம் நாம் துஆச் செய்யச் சொல்ல லாமே என்று கூற, இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் துஆச் செய்யச் சொன்ன போது அவர்கள் துஆச் செய்தார்கள். புயல் நீங்கியது.                 

இறைநேசரின் துஆவால் முடியே வளராத வழுக்கைத் தலை கொண்ட 12 வயது சிறுவனின் தலையில் முடி வளர்ந்த அதிசயம்

عن محمد بن الحسين حدثني العباس بن الفضل بن الأزرق : حدثني مجاشع الديري قال : ( ولدت امرأة من جيران حبيب غلاما جميلا أقرع الرأس قال : فجاء به أبوه إلى حبيب بعدما كبر الغلام وأتت عليه إثنتا عشرة سنة فقال : يا أبا محمد ألا ترى إلى ابني هذا وإلى جماله وقد بقي أقرع الرأس كما ترى ؟ فادْعُ الله له فجعل حبيب يبكي ويدعو للغلام ويمسح بالدموع رأسه قال : فو الله ما قام بين يديه حتى اسود رأسه من أصول الشعر فلم يزل بعد ذلك الشعر ينبت حتى صار كأحسن الناس شعرا (مجابوا الدعوة)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் திட்டினான். அவனை ஸஃது ரழி தடுத்தும் கேட்கவில்லை. உனக்கு எதிராக துஆ செய்வேன் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில்  அவனுக்கு எதிராக ஸஃது ரழி அவர்கள் துஆ செய்ய, அவனை ஒட்டகம் மிதித்துக் கொன்றது.  இனிமேல் யாருக்கும் எதிராக நான் துஆ செய்ய மாட்டேன் என ஸஃது ரழி கூறினார்கள்.

عن سعد رضي الله عنه أن : رجلا نال من علي رضي الله عنه (وفي رواية فنهاه سعد فلم ينته فقال سعد : أدعو عليك فلم ينته) فدعا عليه سعد بن مالك فجاءته ناقة أو جمل فقتله فأعتق سعد نسمة و حلف أن لا يدعو على أحد (مستدرك الحاكم) (مجابوا الدعوة)

கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீஸ் ராணியின் சிம்மாசனத்தைக் கொண்டு வந்த  இறைநேசர்

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ (38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ...... النمل40 قَالَ اِبْن عَبَّاس رضي الله عنه وَهُوَ آصَف كَاتِب سُلَيْمَان عَنْ يَزِيد بْن رُومَان أَنَّهُ آصَف بْن بَرْخِيَاء وَكَانَ صِدِّيقًا يَعْلَم الِاسْم الْأَعْظَم (تفسير ابن كثير)

படிப்பினை- யமனுக்கும், பைத்துல் முகத்தஸுக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் உள்ளது. அவ்வளவு தூரத்தில் உள்ள சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வர இறை நேசரால் முடிந்தது என்றால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலும் செய்ய முடியாத சாதனையை அல்லாஹ்வின் அளப்பரிய கருணையால் மெஞ்ஞானம் செய்து காட்டும்

சுலைமான் அலை அவர்களிடம் சிம்மாசனம் வந்த பிறகு அதற்கு நன்றி செலுத்திய விதம்

فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ...... النمل40

 

தம்மை வழி கெடுக்க முயன்ற ஷைத்தானின் சதியிலிருந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தப்பித்த சம்பவம்

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10  فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم  اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

படிப்பினை- மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்பட்டதை இன்றைக்கு யாரும் ஹலாலாக்க முடியாது என்றிருக்கும்போது சிலர்

ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

குகைக்குள் மாட்டிக் கொண்டு மூன்று இளைஞர்கள் துஆ  செய்த போது நிகழ்ந்த அற்புதம்

عَنْ ابْنِ عُمَرَ رَضِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ1 فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ2 لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ3 فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ4 حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ رواه البخاري كتاب البيوع

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம்

عن مشرف بن أبان : حدثني صالح بن سليمان أ وغيره قال : ( احتاج إبراهيم بن أدهم إلى دينار وكان على شاطىء البحر فدعا الله عز و جل فتشرعت السمك في فم كل واحدة منهن دينار واحد فأخذ دينارا واحدا )

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் கடற்கரையில் இருந்த போது ஒரு தீனார் அவசியமாக தேவைப்பட்டது. உடனே அல்லாஹ்விடம் துஆச் செய்ய, சற்று நேரத்தில் பல மீன்கள் நீருக்குள் இருந்து எட்டிப் பார்த்தன. ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு தீனார் இருந்த து. இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் அத்தனைக்கும் ஆசைப்படாமல் ஒரே ஒரு மீனின் வாயில் இருந்த ஒரு தீனாரை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.      

عن عصام بن زيد - رجل من مزينة - قال : ( كان رجل من الخوارج يغشى مجلس الحسن فيؤذيهم فقيل للحسن : يا أبا سعيد ألا تكلم الأمير حتى يصرفه عنا ؟ قال : فسكت عنهم  قال : فأقبل ذات يوم و الحسن جالس مع أصحابه فلما رآه قال : ( اللهم قد علمت أذاه لنا فاكفناه بماشئت )   قال : فخر الرجل والله من قامته فما حل إلى أهله إلا ميتا على سرير فكان الحسن إذا ذكره بكى

ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மஜ்லிஸுக்கு வந்து ஒருவர் எப்போதும் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். ஹஸன் பஸரீ ரஹ் அவர்களைத் திட்டுவார் அப்போது ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மற்றவர் இந்த அளவுக்கு உங்களை திட்டுகிறார். அவரைப் பற்றி நீங்கள் அரசரிடம் புகார் கூறக் கூடாதா என்று கேட்க இமாம் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். மற்றொரு முறை அந்த மனிதர் சபைக்கு வந்து மிகவும் நோவினைப் படுத்திய போது இமாம் அவர்கள் அவரை விட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய உடனே அந்த மனிதர் கீழே விழுந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்து விட்டார். நல்லோர்களின் சாபம் உடனே பலிக்கும்.          

عن الحكم بن هشام الثقفي قال : ( أخبرت أن رجلا أخذ أسيرا فألقي في جب ووضع على رأس الجب صخرة فكتب فيها : ( سبحان الملك الحق القدوس سبحان الله وبحمده ) فأخرج من الجب من غير أن يكون أخرجه إنسان

ஒரு இறைநேசர் தகுந்த காரணமின்றி கைதியாகப் பிடிக்கப்பட்டார். அவரை அடைத்து வைத்திருந்த அறை வாசலில் அவர் வெளியே வர முடியாத அளவுக்கு பெரிய பாறாங்கல்லும் வைக்கப் பட்டிருந்தது. அவர் மேற்படி திக்ரை அந்தக் கல்லின் மீது எழுதினார். அவரால் இலகுவாக அங்கிருந்து வெளியேற முடிந்தது.        

இறையச்சம் குறைந்து விடும்போது எதுவும் நமக்கு வசப்படாது

அல்லாஹ் எதிரிகளைத் தான் நம் மீது சாட்டுவான்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَرض قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ  لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ  رواه ابن ماجة4009   والاوجاع التي لم تكن مضت முன்பு இருந்திராத புதிய நோய்கள்

சுருக்கம்- எந்த சமுதாயத்தில் ஆபாசம் அதிகரித்து அது பகிரங்மாக ஆகி விடுமோ அந்த சமுதாயத்தில் இதற்கு முன்பு கேள்விப்படாத புதுப்புது நோய்களை அல்லாஹ் உருவாக்காமல் இருப்பதில்லை. எந்த சமுதாயத்தில் எடை, நிறுவையில் மோசடி பெருகி விடுமோ அந்த சமுதாயம் பொருளாதார நெருக்கடியிலும் ஆட்சியாளர்களின் அடக்கு முறையிலும் சிக்காமல் இருப்பதில்லை. எந்த சமுதாயத்தில் ஜகாத் கொடுப்பது நிறுத்தப்பட்டு விடுமோ அந்த சமுதாயத்தில் மழை நிறுத்தப்படாமல் இருப்பதில்லை. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை எந்த சமுதாயம் மீறுமோ அவர்கள் மீது எதிரிகளை அல்லாஹ் சாட்டாமல் இருப்பதில்லை. அந்த எதிரிகள் இவர்களின் உரிமைகளை, உடைமைகளைப் பறிப்பார்கள். எந்த சமுதாயத்தின் தலைவர்கள் மார்க்கத் தீர்ப்புகளை விட்டு விட்டு சுயமாக தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்து விடுவார்களோ அல்லாஹ் அவர்களுக்கு மத்தியிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி, ஒற்றுமையில்லாத சூழிநிலையை உருவாக்காமல் இருப்பதில்லை.                                        

துஆ ஏற்கப்படாதது ஏன் என்று வினவியவருக்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் கூறிய அற்புத பதில்

حُكي إنّ إبراهيم بن أدهم قيل له ما بالنا ندعوا الله فلا يستجيب لنا؟ قال لأنّكم عرفتم الله فلم تطيعوه وعرفتم الرسول فلم تتبعوا سنّته  وعرفتم القرآن فلم تعملوا بما فيه وأكلتم نعمة الله فلم تؤدّوا شكرها وعرفتم الجنّة فلم تطلبوها وعرفتم النّار فلم تهربوا منها وعرفتم الشيطان فلم تحاربوه ووافقتموه وعرفتم الموت فلم تستعدّوا له ودفنتم الأموات فلم تعتبروا بهم وتركتم عيوبكم واشتغلتم بعيوب الناس (قرطبي

அல்லாஹ்வை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அவனை அஞ்சுவதில்லை. அல்லாஹ்வுடைய தூதரை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றுவதில்லை. குர்ஆனை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதன்படி அமல் செய்வதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் அதற்காக நன்றி செலுத்துவதில்லை. சுவனத்தை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் முயற்சி செய்வதில்லை. நரகத்தை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வதில்லை. ஷைத்தானை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அவனிடமிருந்து தப்பிக்க நினைப்பதில்லை. அவனோடு ஐக்கியமாகி விடுகிறீர்கள். மரணத்தை அறிந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதற்காக தயாராகுவதில்லை.  இறந்தவர்களை நீங்கள் அடக்கம் செய்கீறீர்கள். ஆனால் அதிலிருந்து படிப்பினை பெறுவதில்லை. உங்களுடைய குறைகளைப் பற்றி சிந்திக்காமல் அடுத்தவர்களின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள். இவைகளால் தான் துஆ ஏற்கப்படுவதில்லை.   

 

     

வியாழன், 20 அக்டோபர், 2022

இயன்றவரை உபகாரம் செய்வோம் இடையூறு செய்வதைத் தவிர்ப்போம்

 









இயன்றவரை   உபகாரம் செய்வோம் இடையூறு செய்வதைத் தவிர்ப்போம்


ஜும்ஆ பயான் தர்தீப்

1. யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பதும் ஒருவகை தர்மம் என்ற ஹதீஸ்


2. நிறைய அமல் செய்தும் கூட அண்டை  வீட்டாரை நோவினை செய்த பெண் நரகவாதி என்ற ஹதீஸ்


3. நடைபாதையில்  இடையூறு செய்வதை எச்சரிக்கும் ஹதீஸ்


4. நடைபாதையில் இடையூறுகளை  அகற்றுவது  மாபெரும் நன்மை


5. நடைபாதையில் இடையூறுகளை அகற்றுபவரின் சேவை நபிகளாருக்கு  எடுத்துக் காட்டப்படும்


6. நன்மையான காரியமாக இருந்தாலும் பிறருக்கு இடையூறு செய்து அதை நிறைவேற்றினால் ஏற்கப்படாது. ஆயிஷா நாயகியின் பணிப் பெண் சம்பவம்


7. பிடரிகளைத்  தாண்டிச் சென்று முன்னால் அமருபவருக்கு ஜும்ஆவின் நன்மை கிடையாது


8. அமர்ந்திருப்பவரை எழுப்பி அந்த இடத்தில் அமரக் கூடாது

இப்னு உமர் ரழி உடைய சம்பவம்


9. பிறருக்குத் தொந்தரவு செய்தவன் மறுமையில் தன்னுடைய எல்லா நன்மைகளையும் இழப்பான்   (நீண்ட ஹதீஸ்



10. பட்டாசுகளால் பிறருக்கு ஏற்படும் தொந்தரவுகள்


முடிந்த வரை பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, நோவினை தரக்கூடாது என்ற தலைப்பிலும்

 பேசலாம்

நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை நல்லது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை கெட்டது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக இறந்து விட்ட ஒரு மனிதனை எரிப்பது நல்லதா அல்லது புதைப்பது நல்லதா என்று வரும்போது இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களைப் போன்று புதைப்பது தான் சுற்றுச் சூழலை பாதிக்காது.  எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர். அதுபோன்று பட்டாசு விஷயத்திலும் நடுநிலை சிந்தனை கொண்ட பலர் இதை எதிர்க்கின்றனர்.

 

நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர

தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது

عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ

ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                              

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.

தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்.

ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                                   

ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்

عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه

பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                                                   

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்

قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:

ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.

 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) رواه مسلم.

 

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم

என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.

நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை

عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري

யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்      

படிப்பினை- ஆனால் இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை

عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا  نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري

ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி

அந்த இடத்தில் அமர வேண்டாம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي

இப்னு உமர் ரழி அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்த போது அவர்களுக்காக ஒருவர் எழுந்து தம்முடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தார். அந்த இடத்தில் இப்னு உமர் ரழி அமர மறுத்து விட்டார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ ، قَالاَ :سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَنَّ وَمَسَّ مِنَ الطِّيبِ إِنْ كَانَ عِنْدَهُ , وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ , ثُمَّ جَاءَ إِلَى الْمَسْجِدِ , وَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ , ثُمَّ رَكَعَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَرْكَعَ , ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي كَانَتْ قَبْلَهَا (صحيح ابن حبان)

ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா?  அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள்- நூல் பைஹகீ                       

மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் மறுமையில் தான் செய்த நன்மைகளை இழப்பான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ

பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.  

பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம்.

ஒன்று நம்மை நாமேஅழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا (29) النساء

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாகஇருக்கிறான்.அல்குர்ஆன் 4:29

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195) البقرة

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மைசெய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195

பட்டாசுக்காக செய்த செலவுகளும் வீண் விரயமாகும். அதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)الاعراف

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ (ترمذي)

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு காது கேட்பதில் மந்த நிலை நீடிப்பதற்கு பட்டாசு முக்கிய காரணம்

சப்தங்களை டெசிபல் என்ற அளவில் கணக்கிடுவார்கள் நாம் பேசும் சப்தங்கள் 30 டெசிபலுக்கு மேலே போகாது அதிக பட்சம் 60 டெசிபல் சப்த த்திற்கு மேல் கேட்டால் அது காதை பாதிக்கும். ஜவ்வு கிழிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் வாகனங்களின் ஹாரன் கூட 80 டெசிபலுக்கும் மேலே இருக்க க் கடாது என போக்குவரத்து துறை சட்டம் இயற்றியுள்ளது ஆனால் பட்டாசுக்கு அதற்கும் மேலாக அதிக பட்சம் 125 டெசிபல் வரை  அரசாங்கம் அனுமதி தந்துள்ளது.125 டெசிபலுக்கு மேலே வெடிகளை வெடித்தால் அவர் 1986 ஆம் ஈண்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர் தண்டனைக்குரியவர் ஆவார். ஆனால் அதையும் மீறி 150 முதல் 200 டெசிபல் வரை பட்டாசுகள்  வரைமுறையை மீறி தயாரிக்கப் படுகின்றன. இதனால் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 10 ஒருவருக்கு காது சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கு மீறிய சப்தத்துடன் காதுகளில் வாக்மேன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது. வாகன இரைச்சல், திருவிழாக்களில் அதிக சப்தத்துடன்  ஒலி பரப்பப்படும் பாட்டுகள், அதிக சப்தத்துடன்  தியேட்டர் மற்றும் டிவி முன்பு அமருதல் மற்றும் பட்டாசு வெடி சப்தங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகும்

சப்தம் மட்டுமன்றி பட்டாசுகள் ஏற்படுத்தும் புகையும் மனித உடலுக்கு ஆபத்து

பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக்கொண்டே இருக்கின்றது.அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாககலக்கையில்  மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.
ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டகுழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தரஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது.அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்இந்தக் கால கட்டத்தில் இத்தகையநோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளிவிபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில்மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப்பருவத்தில் கூடி விடுகின்றது” என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர்.நரசிம்மன் கூறுகின்றார்.இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்துவிடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய்,அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது.அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப்போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியைஏற்படுத்துகிறது.தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும்பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அதுவெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தைஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல்,மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களதுநுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலானநோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  எல்லாவற்றுக்கும் மேலாக நாம் வசிக்கும் இந்த பூமிக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் 8 சதவீதம் அரிக்கப்பட்டு விட்டதாகவும் அது 10 சதவீதமாக ஆகி விட்டாலே இந்த பூமியின் SKIN நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது உள்ளதை விட இரு மடங்காக ஆகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் பட்டாசு புகை போன்ற பல்வேறு புகைகள் தான் எனவும் தெரிவித்துள்ளனர்

முடிவுரை மாற்றார்களின் எந்த ஒரு பண்டிகைகளையும் நாம் கொண்டாடுவது காஃபிர்களுக்கு ஒப்பாகுவதாக ஆகி விடும் மேலும் அவர்களின் பண்டிகைகளில் பல பிறருக்கு தொந்தரவு தரும் விதமாக அமைந்துள்ளது என்பதை விளங்குவதுடன் பிறருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்ட நம்முடைய இரு பெருநாட்கள் மட்டுமே நம்முடைய பெருநாட்கள் என்பதையும் விளங்கி செயல் பட வேண்டும்

 

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...