வியாழன், 30 ஜூன், 2022

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் - குர்பானி சிறப்பு

 


01-07-2022

துல்ஹஜ் - 1

 

بسم الله الرحمن الرحيم

العشر من ذي الحجة وفضائل الأضحية

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان  يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين}

துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு

عن جابر ، رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}  عشر الأضحية والوتر يوم عرفة-  والشفع يوم النحر   « هذا حديث صحيح  رواه الحاكم في المستدرك عن ابن عباس ، قال : « الليالي التي أقسم الله عز وجل بهن العشر الأول من ذي الحجة ، والشفع يوم النحر  ، والوتر يوم عرفة رواه البيهقي

عن مسروق : ( وليال عشر ، قال : « العشر عشر الأضحى التي وعد الله عز وجل موسى عليه السلام ( وأتممناها بعشر » رواه البيهقي

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ رواه الترمدي

 

குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)

கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள்.      

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)

குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல் பதில் கூறினார்கள்.

عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}

அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் கூறினார்கள் எனக்கு ஒரு ஏழை சகோதரர் இருந்தார். அவர் ஏழ்மை நிலையிலும் வருடா வருடம் குர்பானி கொடுப்பார். அவர் இறந்த பின் நான் பிரத்தியேகமாக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் அவரை என் கனவில் காட்டு என துஆ செய்தேன். அவ்வாறே நான் உளூச் செய்து விட்டு தூங்கிய போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டது போலவும் மக்கள் அவரவர் கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போலவும் அப்போது அவர் உயர் தரமான குதிரையில் வருவது போன்றும் அவருக்கு முன்னால் பல சவாரி வாகனங்கள் அணி வகுத்து வருவது போலவும் கண்டு அவரிடம் நான் அல்லாஹ் உம்மிடம் எப்படி நடந்து கொண்டான் என்று கேட்டேன். அதற்கு அவர் அல்லாஹ் மன்னித்தான் என்றார். எதனால் என்று நான் கேட்க, ஒரு மூதாட்டிக்கு நான் செய்த தர்ம ம் என்றார். இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இவை எனது குர்பானிப் பிராணிகள். நான் ஏறிச் செல்வது நான் முதன் முதலில் கொடுத்த குர்பானிப் பிராணி என்றார். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்றேன் அதற்கு அவர் சுவனத்தை நோக்கி.. என்றார்கள். 

கருத்து- குர்பானிப் பிராணிகள் ஆடுகளாக இருந்தாலும் பயணம் செய்ய உகந்ததாக மாற்ற அல்லாஹ்வினால் முடியும்.

குர்பானி என்பது தியாகம். அந்த தியாகத்தை யார் உளத்தூய்மையுடன் செய்கிறார்கள் என்பதை அந்தக் காலத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

உலகின் முதல் குர்பானி உளத்தூய்மை உள்ளவரிடம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது

 உளத்தூய்மையுடன்  ஹாபீல் கொடுத்த  ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ் பாதுகாத்தான்

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة      -     عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

காபீல் ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில் தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால் தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை. அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில் அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.        

அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல் ஙனீமத் பொருட்களையும் மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது அக்கால நடைமுறை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس

சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது

குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில்  கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப் பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர்.

நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம்  குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள்

عن يُونُس بْن مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَخَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ

யூனுஸ் இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம் இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.

 

குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்

 

குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. வால், காது ஆகியவை பாதிக்குக் கீழ் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம். கொம்பும் இவ்வாறே பாதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். பாதிக்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது.         

அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى

விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது

குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب الأضاحى

அபூசயீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன் காதை) ஒரு ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள்.

வாங்கிய பிறகு ஏற்படும் குறை சம்பந்தமான அபூர்வமான மஸாயில்

وفي مَجْمُوعِ النَّوَازِلِ أَرْبَعَةُ نَفَرٍ اشْتَرَى كُلُّ وَاحِدٍ منهم شَاةً وَلَبَنُهَا وَسَمْنُهَا وَاحِدٌ فَحَبَسُوهَا في بَيْتٍ فلما أَصْبَحُوا وَجَدُوا وَاحِدَةً منها مَيِّتَةً وَلَا يدري لِمَنْ هِيَ فَإِنَّهَا تُبَاعُ هذه الْأَغْنَامُ جُمْلَةً ويشتري بِقِيمَتِهَا أَرْبَعُ شِيَاهٍ لِكُلِّ وَاحِدٍ منهم شَاةٌ ثُمَّ يوكل كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ بِذَبْحِ كل وَاحِدَةٍ منها وَيُحَلِّلُ كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ لِتَجُوزَ عن الْأُضْحِيَّةِ (البحر الرائق شرح كنز الدقائق)

மஜ்மூஉன் நவாஜில் என்ற நூலில் ஒரு மஸாயில் உள்ளது. நான்கு நபர்கள் சேர்ந்து ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்ட நான்கு ஆடுகளை தனித்தனியாக வாங்கினார்கள் என்றால் அதை அடைத்து வைத்திருக்கும்போது அதில் ஒரு ஆடு இறந்து விட்டது என்றால் அது யாருடைய ஆடு என்பது தெரியா விட்டால் மீதமுள்ள மூன்று ஆடுகளையும் விற்க வேண்டும். அந்தப் பணத்தை மொத்தமாக சேர்த்தால் எவ்வளவு வருமோ அந்தப் பணத்துக்கு நான்கு ஆடுகள் வாங்க வேண்டும். அதாவது மூன்று ஆடுகளுக்கான பணத்தில் நான்கு ஆடுகள் வாங்க வேண்டும்.அதை நான்கு பேரும் குர்பானி கொடுக்க வேண்டும். எனினும் அவரவர் ஆட்டை அவரவர் அறுத்தார் என்று முழுமையாக கூறி விட முடியாது. அதாவது அவர் அறுக்கும் ஆடு அவருடையது தான் என்று உறுதியாக கூறி விட முடியாது. எனவே ஒவ்வொருவரும் ஆட்டை அறுக்கும்போது இன்னொருவருக்கு வக்கீலாக இருக்கிறார் நிய்யத் வேண்டும்.

வியாழன், 23 ஜூன், 2022

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்

 


24-06-2022

துல் கஃதா - 23

 

بسم الله الرحمن الرحيم 

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





விஷச் செடிகளைப் போன்று வேகமாக வளர்ந்து வரும் விரோதிகளுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا (31 الفرقان

முஃமின்களுக்கு விரோதிகள் ஒவ்வொரு காலத்திலும் இருந்துள்ளார்கள். குறிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்காவிலும் எதிரிகள் இருந்தனர். மதீனாவிலும் எதிரிகள் இருந்தனர். மக்காவை விட மதீனாவில் மூன்று வகையான எதிரிகள் இருந்தனர். இவர்களின் தீமைகளை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொள்கையில் மாறுபட்டவர்களுடனும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து எதிரிகளை சமாளித்தார்கள் என்பது நமக்குப் படிப்பினையான விஷயம்.   

எதிரிகளை வெல்வதற்காக கொள்கையில் மாறு பட்டவர்களுடன் கூட்டணி வைத்த நபி அலைஹி வஸல்லம்

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக, மதீனாவுக்குச் சென்றவுடன் யூதர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தைக் கூறலாம்.

பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் தரப்பட்டவர்கள் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம்.

الم (1) غُلِبَتِ الرُّومُ (2) فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ (3) فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (4)  ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோஷமடைந்தார்கள். காரணம் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதறகாக...

அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா  காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக்கெதிரான கூட்டணியில்  ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து,  அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயம் பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு  உலக விவகாரங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேசநலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயல்பட்டுள்ளார்கள்.

وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته .وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت .وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாட்களுடன் கஃபாவிற்குள்  நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலேவந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து  வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ (بخاري

பத்ருப் போரின் கைதிகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது இப்போது முத்இம்பின் அதி உயிரோடு இருந்து இந்த நாற்றமெடுத்தவர்கள் விஷயத்தில் சிபாரிசு செய்திருந்தால் அவருக்காக இவர்களை நான் விடுதலை செய்திருப்பேன்

மாற்றார்களையும் இணைத்துக் கொண்டு ஓரணியில் திரள வேண்டிய நாமே பல பிரிவுகளாப் பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை இலகுவாக அழித்து விடுவார்கள்.

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

அபூரஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம். ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும்  21 பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் அந்தப் பிரயாணத்த்தில் இருந்த அனைவரும் சாப்பிட்டோம்.  உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்கள்

கடந்த காலங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தபோது

 பாசிச சக்திகள்  தலை தூக்கவில்லை

காஞ்சி மடத்தின் பெரியவர்களில் ஒருவரான சந்திர சேகர சுவாமிகள் பற்றிய ஒரு குறிப்பு..

அவர் முஸ்லிம்களைச் சந்திக்கும்போது நீங்கள் எத்தனை நேரம் தொழுவீர்கள் என்று கேட்பார். அவர்கள் நாங்கள் ஐவேளைத் தொழுகிறோம் என்று கூறினால் அதற்கு அவர் இல்லை நீங்கள் ஆறு வேளை தொழ வேண்டும். அதாவது அதிகாலை தஹஜ்ஜத் தொழுகை மிக முக்கியமானது. உங்கள் மீது இரக்கப்பட்டுத் தான் அது உங்களுக்குக் கடமையாக்கப் படவில்லை. என்று கூறுவாராம். அதேபோல முன்பு காஞ்சி கோவிலுக்கு அருகில் பள்ளிவாசல் இருந்தது. ஐந்து வேளையும் அங்கு பாங்கு சொல்லப் படும். அப்போது அவரோடு இருந்தவர்கள் இந்த பாங்கு சப்தம் உங்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லவா? குறிப்பாக அதிகாலை பாங்கு உங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அல்லவா? அதை நிறுத்தும்படி நாங்கள் கூறலாமா? என்று கேட்டபோது காஞ்சிப் பெரியவர் தன் தோழர்களிடம்  இந்த சப்தம் கேட்டுத் தான் நான் தினமும் அதிகாலையில் எழுகிறேன். எனவே எக்காரணத்தைக் கொண்டும் அது நிறுத்தப்படக் கூடாது என்று பதில் கூறியுள்ளார்.  இச்சம்பவத்தை 1992-ல் பாபரி மஸ்ஜித் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவரைச் சந்திக்க வந்த மெளலானா துல்ஃபிகார் சாஹிப் அவர்களிடம் காஞ்சிப் பெரியவரே கூறியுள்ளார். 

இப்படியெல்லாம் முற்காலத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை இருந்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டிய செவிலித்தாய் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார்.

 

சேதுபதி மன்னர்களைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். (ஷீது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களைத் தான் சேதுபதி மன்னர்கள் என்றும் கூறப்படுகிறது.) இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களில் ஒருவர் விஜயரகுநாத சேதுபதி. இவர்  1713-ல் இருந்து 1725 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழ் அப்போது கீழக்கரையும் இருந்தது.  இவரது ஆட்சியின்போது கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவை தனது மந்திரி சபையில் இடம்பெற இவர் அழைத்தபோது எனக்கு அதில் விருப்பமில்லை. வேண்டுமானால் உங்களுக்கு நல்ல ஒரு நபரை நான் தருகிறேன் என்று கூறி வள்ளல் சீதக்காதி அவர்களை சதக்கத்துல்லா அப்பா அறிமுகப்படுத்தினார். அதன்படி வள்ளல் சீதக்காதி சேதுபதி மன்னரின் மந்திரி சபையில் இடம்பெற்றார். அப்போது இராமேஸ்வரம் தீவில் பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும் என்று மன்னர் ஆசைப்பட்ட போது அதற்கான பொறுப்பை வள்ளல் சீதக்காதியிடமே ஒப்படைத்தார். எந்தப் பகுதியில் இருந்து கற்களைச் சேகரித்துக் கட்டினால் கட்டிடம் நிலைத்திருக்கும் என்றெல்லாம் நன்கு ஆய்வு செய்து வள்ளல் சீதக்காதி அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். வாலி நோக்கம் பகுதியில் இருந்து சுமார் 100 யானைகளில் ஆலயம் கட்டத் தேவையான தூண்கள் இராமேஸ்வரத்திற்கு சுமந்து வரப்பட்டன. ஆலயம் கட்டி முடித்த பின் மிச்சத் தூண்கள் இருந்தன. அதை வைத்து கீழக்கரையில் ஒரு ஆலயம் எழுப்பி விடலாமா? என்று வள்ளல் சீதக்காதி கேட்டபோது வேண்டாம். கீழக்கரை என்பது முஸ்லிம்கள் நிறைந்த இடம். அங்கு கோவில் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் ஒரு பள்ளிவாசல் கட்டுங்கள் என்று மன்னர் கூறினார். அதன்படி அங்கு பள்ளிவாசல் கட்டப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டிய செவிலித்தாய் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார்.

இந்து -முஸ்லிம் ஒற்றுமை தழைத்தோங்கிய இம்மண்ணில் இன்று சில பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளால் அந்த ஒற்றுமைக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. மதத்தால் இந்த நாட்டு மக்களைப் பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் புதுப்புது சட்டங்கள் போட்டு முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நினைக்கும் தீய சக்திகள் மறுபுறம் முஸ்லிம்களின் மீதான வெறுப்பை மற்ற சகோதர சமய மக்களிடம் விதைத்து வருகிறார்கள். பாசிச சக்திகள் தங்களின் பிள்ளைகளுக்கு சிறிய வயதில் இருந்தே முஸ்லிம்கள் மீதான வெறுப்பை விதைத்தே வளர்க்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் இது பாடமாகவே போதிக்கப்படுகின்றது. நாளடைவில் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நன்கு பதிகின்றன. அவர்கள் வாலிப வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு முஸ்லிமைக் கண்டாலே வெறுக்கும் நிலை அவர்களிடம்  உருவாகி விடுகிறது.தமிழக மக்கள் அந்த சூழ்ச்சிக்கு ஒருபோதும் பலியாகி விட மாட்டார்கள். தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் மாற்றார்களும் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள் என்பதே அகற்கு சாட்சி. எனினும் நாம் இந்த நாட்டின் ஒற்றுமை நீடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்                             .    

 

இந்து - முஸ்லிம் ஒற்றுமை  (இந்தியஅளவில்)

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம். ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். பணம் தேவையில்லை என்றார்கள்.  

 

இந்து- முஸ்லிம் ஒற்றுமை நீடிக்க நாம் செய்ய வேண்டியவை

நம் வீட்டு வைபவங்களில் நமக்கு அருகிலுள்ள பிற சமய சகோதரர்களை அழைக்க வேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைப்பதில் நாம் பங்கெடுக்க வேண்டும். இதுவும் நபிகளார் காட்டித் தந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.

நமது மஹல்லா மஸ்ஜிதில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் பிற சமய சகோதரர்களை, குறிப்பாக மத குருமார்களையும் காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சமய நல்லிணக்க விழாக்கள் நடத்தி அவர்களை கண்ணியப் படுத்துவதுடன் அவர்களின் நாவினால் நம்முடைய இஸ்லாத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வைக்க வேண்டும்.ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் குழந்தைகளுக்கு ஓதிப் பார்க்க வரும் பிற சமய சகோதரர்கள் அமருவதற்கு சிறந்த இட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்தால் ஸ்நாக்ஸ் ஏதேனும் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். நமது வாகனங்களில் மாற்றார்களின் மனதை ஈர்க்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்ல நபிமொழிகளை எழுதி ஒட்ட வேண்டும். மத பாகுபாடு பார்க்காமல் நோயாளிகளை நலம் விசாரிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்கு ஒரு குழுவாகச் சென்று அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கித் தர வேண்டும். கிறிஸ்தவ மதம் பரவியது இப்படித்தான். மாற்றார்களுடன் வியாபாரம் செய்யும்போது நம்பிக்கை, நாணயம், குறைந்த லாபம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இஸ்லாம் இவ்வாறு தான் பரவியது.எல்லாவற்றும் மேலாக அனைத்து விஷயங்களிலும் நம்மிடம் இறையச்சம் மேலோங்க வேண்டும். நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக மாறி விட்டால் வெகு விரைவில் பாசிச ஆட்சியை அல்லாஹ் இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விடுவான் என்பது நிச்சயம்.

 

ஒற்றுமையின்மையால், ஒழுங்கான தலைமை இல்லாததால் இந்தியாவில் நாம் தலித்துகளை விட பின் தங்கி...

சச்சார் குழு அறிக்கையின் படி இந்தியாவில் முஸ்லிம்கள் சுமார் 14 கோடி. அதாவது இந்திய மக்கட் தொகையில் 14 சதவீதம். ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் எத்துறையிலும் நம்முடைய பங்களிப்பு இல்லை. முஸ்லிம்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 சதவீதமே. ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 சதவீதம் தான். சர்வதேச விவகாரங்களை தீர்மானிக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் ஒரு சதவீதம் தான். மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்புப்படை இரண்டிலும் 2 சதவீதமே. மாவட்ட நீதிபதிகள் 2 சதவீதமே. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 4 % தான்..... கல்வி நிலை: பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி செல்வோர் முஸ்லிம்களில் 4 சதவீதமே. மீதம் 7 சதவீதம் பேர் பள்ளிப்படிப்போடு நின்று..பொருளாதாரம் :  வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கணக்குப் பார்த்தால் முஸ்லிம்கள் தான் அதிகம்.தலித்துகளை விட– சராசரியாக தலித்களின் மாத வருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவு. நீதித்துறையில் தலித்கள் 20 சதவீதம் பேர் என்றால் முஸ்லிம்கள் 7 சதவீதம் மட்டுமே. ரயில்வே துறையில் முஸ்லிம்கள் 4 சதவீதம் மட்டுமே. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தலித்கள் 32 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் 22 சதவீதம் மட்டுமே. குடிநீர் குழாய் மூலம் நீர் சப்ளை பெறும் தலித்கள் 23 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் 19 சதவீதம் மட்டுமே. இது 2006-ல் சச்சார் குழு அளித்த அறிக்கை.                                                 

இந்தியாவின் 2-வது பெரும்பான்மை சமூகம், இந்தியாவை 800 வருடம் ஆண்ட சமூகம் இன்று அரசியலில்..

நம் சதவீதத்தின் படி 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 73 பேர் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ அதில் பாதியை விடக் குறைவு. சட்டமன்றத்தில் அதை விட மோசம். ஒரு காலத்தில் 27 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். 

பதவி ஆசையும். பண ஆசையும் தான் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் ஒன்றிணைவதை தடுக்கிறது

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

முஸ்லிம்கள் சிறு சிறு பதவிகளுக்கும்,பணத்துக்கும் அடிமைப்பட்டு கிடக்கும் வரை நம் அவல நிலை மாறாது

قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                                                              

பனீ இஸ்ராயீல் சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் திரும்பி வரும்வரை அமைதி காத்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قال الله تعالي قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ (85) فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي (86)قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِيُّ (87) فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ فَقَالُوا هَذَا إِلَهُكُمْ وَإِلَهُ مُوسَى فَنَسِيَ(88) أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَلَا نَفْعًا (89) وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِنْ قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنْتُمْ بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي (90) قَالُوا لَنْ نَبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّى يَرْجِعَ إِلَيْنَا مُوسَى (91) قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي(94)سورة طه

மக்களை வழி கெடுத்து திசை திருப்பும் தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள், அவர்களை வாள் கொண்டு வெட்ட ஆரம்பித்தால் கியாமத் வரை வெட்டிக்கொண்டே இருப்பேன் என்ற நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ أَوْ قَالَ إِنَّ رَبِّي زَوَى لِي الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ بِعَامَّةٍ وَلَا يُسَلِّطَ عَلَيْهِمْ

عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ8 وَإِنَّ رَبِّي قَالَ لِي يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ وَلَا أُهْلِكُهُمْ بِسَنَةٍ بِعَامَّةٍ وَلَا أُسَلِّطُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَلَوْ اجْتَمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنِ أَقْطَارِهَا أَوْ قَالَ بِأَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَحَتَّى يَكُونَ بَعْضُهُمْ يَسْبِي بَعْضًا وَإِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ قَالَ ابْنُ عِيسَى ظَاهِرِينَ ثُمَّ اتَّفَقَا لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ (أبوداود)

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...