வியாழன், 15 ஜூன், 2023

முதல் பத்து நாட்கள் மற்றும் குர்பானியின் சிறப்புகள்

 


16-06-2023

 

 

بسم الله الرحمن الرحيم  

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்வது கூடாது. ஆனால் அல்லாஹ் தன் படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்வான். அவ்வாறு அல்லாஹ் சத்தியம் செய்பவைகளில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஒன்றாகும்.

قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح  رواه الحاكم في المستدرك

روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان  يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين}

அல்லாஹ் வருடத்தில் மூன்று பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கி வைத்துள்ளான். 1.ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கியுள்ளான். காரணம் லைலத்துல் கத்ரு என்ற சிறந்த இரவின் பரக்கத் உள்ளது என்பதற்காக. 2 .துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் தர்வியா எனும் துல்ஹஜ்  8-ம் நாளும் அரஃபா நாளும் குர்பானியின் நாட்களும் அதில் உள்ளது என்பதற்காக.

3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் ஆஷூரா எனும் சிறந்த நாள் அதில் உள்ளது என்பதற்காக.                                                        

 ஃபுகஹாக்கள் கூறுவார்கள். ஒருவர் நான் இந்த வருடத்தில் ரமழானுக்கு அடுத்து சிறப்பான நாட்களில் நோன்பு வைப்பேன் என நேர்ச்சை செய்தால் அவர் துல்ஹஜ் பத்து நாட்களில் அந்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ (ترمذي)

 இந்த பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயலை விட வருடத்தின் வேறு எந்த நாளில் செய்யப்படும் நற்செயலும் அல்லாஹ்விடம் மிகப் பிரியமானதாக இல்லை என நபி ஸல் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே மற்ற நாட்களில் செய்யும் ஜிஹாதை விட இந்த நாட்களில் செய்யப்படும் சிறிய அமல் அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததா என்று கேட்க, ஆம் என்று நபி ஸல் பதில் கூறி விட்டு. யார் ஜிஹாதுக்கு தனது உயிர் மற்றும் உடைமையுடன்  சென்று அவற்றில் எதனுடனும் வீடு திரும்பவில்லையோ அவரைத்  தவிர என்று கூறினார்கள்.                      

இந்த நாட்களில் தக்பீர் மற்றும் தஹ்மீத் தஹலீல் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும்.

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّحْمِيدِ وَالتَّكْبِيرِ وَالتَّهْلِيلِ

குர்பானி தர விரும்புவர் பிறை ஆரம்பித்த நாளில் இருந்து நகம் முடி களையக் கூடாது

يستحب للمضحي أن لايأخد من شعره وأظفاره شيئا من أول دي الحجة الي أن يضحي  لقول النبي صلي الله عليه وسلم من أراد أن يضحي منكم  فلا يأخد من شعره وأظفاره شئا 

من لم ينو الأضحية في أول دي الحجة فأخد شعره وأظفاره ثم نوي الأضحية يجوز فلا يأخد شعره وأظفاره بعد النية

குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)

கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள்.      

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)

விளக்கம்- குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல் பதில் கூறினார்கள்.                 

வறிய நிலையிலும் வருடம் தோறும் குர்பானி கொடுத்தவரின் சிறப்பு

عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}

அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள் கூறினார்கள். அவர் தன்னுடைய வறிய நிலையிலும் வருடம் தோறும் ஆடு குர்பானி கொடுப்பார். ஒருநாள் அவர் வஃபாத்தாகி விட்டார். அவர் இறந்த பின்பு அவரைப் பற்றிய மறுமை வாழிவின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அல்லாஹ் அவரை என் கனவில் காட்டு. நான் அவரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என துஆச் செய்தேன். நான் உளூவுடன் தூங்கினேன். அப்போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டதைப் போன்றும் மக்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போன்றும் கனவில் கண்டேன். அப்போது அந்த நண்பரையும் கண்டேன். அவர் ஒரு உயர்ந்த குதிரையின் மீது சவாரி செய்த படி இருந்தார். அவருக்கு முன்னால் கால்நடை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவரிடம் நான் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என விசாரித்தபோது அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். எதனால் என்று நான் கேட்க, ஒரு வயதான, ஏழ்மையான பெண்ணுக்கு ஒரு திர்ஹம் நான் தர்மம் செய்தேன். அதனால் அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். நான் அவரிடம் இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இதுவெல்லாம் நான் குர்பானி கொடுத்த வாகனங்கள். நான் ஏறிப் பயணம் செய்திருக்கும் இந்த வாகனம் தான் நான் முதலில் கொடுத்த குர்பானி என்று கூறி என் கன்னை விட்டும் மறைந்து விட்டார்.                   

விளக்கம்-ஆடாக இருந்தாலும் அதில் சவாரி செய்யும் வகையில் பெரிய உருவமாக அல்லாஹ் மறுமையில் மாற்றியமைக்க வாய்ப்புண்டு

வசதி இருந்தும் குர்பானி கொடுக்கா விட்டால்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا (ابن ماجة

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ

சுருக்கம்- ஆயிஷா ரழி அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த நேரம் பார்த்து அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. என்னால் அந்த அமலும் செய்ய முடியாதே என்று அழ ஆரம்பித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த விஷயம் அல்லாஹ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தியுள்ளதாகும். இதற்காக கவலை கூடாது. நீ எல்லா அமல்களையும் நிறைவேற்றலாம். அரஃபாவில் தங்கலாம். மினாவில் தங்கலாம். குர்பானி கொடுக்கலாம். முஜ்தலிஃபாவில் தங்கலாம். தவாஃப் மட்டும் செய்யக் கூடாது. அதை பிறகு நீ நிறைவேற்ற முடியும் என்றார்கள்.

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் இதன் பின்பு நான் மினாவில் தங்கியிருக்கும்போது என்னிடம் கூட்டுக் குர்பானிக் கறி கொண்டு வந்து தரப்பட்டது. இது ஏது என்று கேட்டேன். நபி ஸல் அவர்கள் தம் மனைவிமார்கள் பெயரில் கொடுத்த மாட்டின் இறைச்சி என்று எனக்கு பதில் கூறப்பட்டது.                               

குர்பானி விஷயத்தில் முக்கியமான விளக்கம்.

 ஒரு குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது.  தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர் பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில் பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர் தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி.

தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை முதலில்  தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத் தாண்டினால் ஜாயிஸ்.  ஆனால் குர்பானி என்பது  வாஜிப்.

وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري

குர்பானி கொடுப்பதற்கு ஆடு தான் சிறந்தது

{ وفديناه بذبح عظيم}{37:107 } أي عظيم القدر ولم يرد عظيم الجثة وإنما عظم قدره لأنه فدى به الذبيح أو لأنه متقبل

 உளத்தூய்மையுடன்  ஹாபீல் கொடுத்த  ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ் பாதுகாத்தான்

وقال ابن عباس : هو الكبش الذي تقرب به هابيل وكان في الجنة يرعى حتى فدىالله به إسماعيل-

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة      -     عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

காபீல் ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில் தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால் தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை. அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில் அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.              

அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல் ஙனீமத் பொருட்களையும் மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது அக்கால நடைமுறை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس

   சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது.                      

عن أبي هريرة ، رضي الله عنه قال : نزل جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم ، فقال له النبي صلى الله عليه وسلم : يا جبريل كيف رأيت عيدنا ؟ » فقال : لقد تباهى به أهل السماء . اعلم يا محمد أن الجذع من الضأن خير من السيد من المعز ، وأن الجذع من الضأن خير من السيد من البقر ، وأن الجذع من الضأن خير من السيد من الإبل ، ولو علم الله ذبحا خيرا منه فدى به إبراهيم عليه الصلاة والسلام (كنز العمال)

குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில்  கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப் பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர்.

நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம்  குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள்

عن يُونُس بْن مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَخَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ

யூனுஸ் இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம் இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.                                                         

 

குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்

 

குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது.

أَنَّ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ضَحَّى اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ ، سَمِينَيْنِ أَقْرَنَيْنِ ، أَمْلَحَيْنِ مَوْجُوئَيْنِ (أحمد

 

நபி ஸல் குர்பானி கொடுத்தால் பருமனான, கொம்பு உள்ள, காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுப்பார்கள்

وإن قطع من الذنب أو الأذن أو العين أو الإلية الثلث أو أقل أجزأه وإن كان أكثر لم يجزه لأن الثلث نتفذ فيه الوصية من غير رضا الورثة فاعتبر قليلا وفيما زاد لا تنفذ إلا برضاهم فاعتبر كثيرا (هداية

வால், காது ஆகியவை மூன்றில் ஒரு பகுதி அறுபட்டிருந்தாலோ அல்லது அதை விடக் குறைவாக அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம்.  கொம்பும் இவ்வாறே மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். அதற்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது.

மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும் என்பதற்கு இமாம்கள் கூறும் ஆதாரமாகிறது. வஸிய்யத் உடைய சட்டமாகும். ஒருவர் தன்னுடைய வாரிசுகளின் அனுமதி இல்லாமலேயே மூன்றில் ஒரு பகுதியை வாரிசு அல்லாதவருக்கு வஸிய்யத் செய்ய அனுமதி உண்டு. காரணம் அதுபோக மீதி இரண்டு பங்கு என்பது வாரிசுகளுக்கு மிச்சமிருப்பது என்பது முழுவதும் மிச்சமிருப்பதைப் போன்றே கருதப்படும். பிறருக்கு வஸிய்யத் செய்த மூன்றில் ஒரு பங்கு என்பது குறைந்த அளவு என்பதால் வாரிசுகளுக்குச் சேர வேண்டிய சொத்தில் குறைவு செய்ததாக கவனிக்கப்படாது. அதுபோல் குர்பானிப் பிராணியில் மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும்.

குர்பானிப் பிராணியின் கண்களில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது

عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم استشرفوا العين والأذن أي اطلبوا سلامتهما (طبراني

குர்பானிப் பிராணியின் கண்களில் மூன்றில் ஒரு பங்கு குறை இருக்கிறதா அல்லது அதைவிடக் கூடுதலாக உள்ளதா என்பதை பரிசோதிக்க ஹிதாயா நூலில் கூறப்படும் விளக்கம்

ثم معرفة المقدار في غير العين متيسر وفي العين قالوا تشد العين المعيبة بعد أن لا تعتلف الشاة يوما أو يومين ثم يقرب العلف إليها قليللا قليلا فإذا رأته من موضع أعلم على ذلك المكان ثم تشتد عينها الصحيحة وقرب إليها العلف قليلا قليلا حتى إذا رأته من مكان أعلم عليه ثم ينظر إلى تفاوت ما بينهما فإن كان ثلثا فالذاهب الثلث وإن كان نصفا فالنصف (هداية

மற்ற உறுப்புக்களில் குறை இருந்தால் வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணில் குறை இருப்பதை வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இதற்காக நாம் செய்ய வேண்டியது நீண்ட நேரம் ஆட்டுக்கு எந்த தீனியும் தராமல் இருந்த பிறகு அதற்கான தீனியை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டின் இரு கண்களில் குறையுள்ளதாக கருதப்படும் கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது ஆரோக்கியமான கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஆடு தன்னுடைய தீனியைப் பார்த்து அதை நோக்கி வர ஆரம்பிக்கிறது என அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். பின்பு அடுத்த நாள் அதே மாதிரி மற்றொரு ஆரோக்கியமான கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது குறையுள்ள கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த முறை தூரத்தில் இருந்தே ஆடு தன்னுடைய தீனியை அடையாளம் கண்டு அதை நோக்கி வர ஆரம்பிக்கும். அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். தற்போதைய அடையாளத்தை விட முதல் நாள் போட்ட அடையாளம் மூன்றில் ஒரு பகுதியை விட தூரம் குறைவாக இருந்தால் அல்லது மூன்றில் ஒரு பகுதி மட்டும் இருந்தால் அந்த ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.                  

 

அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى

  விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது

குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب الأضاحى

அபூசயீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன் காதை) ஒரு ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள்.

வாங்கிய பிறகு ஏற்படும் குறை சம்பந்தமான அபூர்வமான மஸாயில்

وفي مَجْمُوعِ النَّوَازِلِ أَرْبَعَةُ نَفَرٍ اشْتَرَى كُلُّ وَاحِدٍ منهم شَاةً وَلَبَنُهَا وَسَمْنُهَا وَاحِدٌ فَحَبَسُوهَا في بَيْتٍ فلما أَصْبَحُوا وَجَدُوا وَاحِدَةً منها مَيِّتَةً وَلَا يدري لِمَنْ هِيَ فَإِنَّهَا تُبَاعُ هذه الْأَغْنَامُ جُمْلَةً ويشتري بِقِيمَتِهَا أَرْبَعُ شِيَاهٍ لِكُلِّ وَاحِدٍ منهم شَاةٌ ثُمَّ يوكل كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ بِذَبْحِ كل وَاحِدَةٍ منها وَيُحَلِّلُ كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ لِتَجُوزَ عن الْأُضْحِيَّةِ (البحر الرائق شرح كنز الدقائق)

மஜ்மூஉன் நவாஜில் என்ற நூலில் ஒரு மஸாயில் உள்ளது. நான்கு நபர்கள் சேர்ந்து ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்ட நான்கு ஆடுகளை தனித்தனியாக வாங்கினார்கள் என்றால் அதை அடைத்து வைத்திருக்கும்போது அதில் ஒரு ஆடு இறந்து விட்டது என்றால் அது யாருடைய ஆடு என்பது தெரியா விட்டால் மீதமுள்ள மூன்று ஆடுகளையும் விற்க வேண்டும். அந்தப் பணத்தை மொத்தமாக சேர்த்தால் எவ்வளவு வருமோ அந்தப் பணத்துக்கு நான்கு ஆடுகள் வாங்க வேண்டும். அதாவது மூன்று ஆடுகளுக்கான பணத்தில் நான்கு ஆடுகள் வாங்க வேண்டும்.அதை நான்கு பேரும் குர்பானி கொடுக்க வேண்டும். எனினும் அவரவர் ஆட்டை அவரவர் அறுத்தார் என்று முழுமையாக கூறி விட முடியாது. அதாவது அவர் அறுக்கும் ஆடு அவருடையது தான் என்று உறுதியாக கூறி விட முடியாது. எனவே ஒவ்வொருவரும் ஆட்டை அறுக்கும்போது இன்னொருவருக்கு வக்கீலாக இருக்கிறார் நிய்யத் வேண்டும்.

இறந்தவருக்காக குர்பானி கொடுக்கலாம்

عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود

நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.

شروط الأضحية

لابد أن تكون الضحية بما يجزئ، فلا تجزئ الصغيرة التي لم تبلغ سناً ينتفع بها، وحدد ذلك في الإبل بخمس سنين، فإذا تمت السنة الخامسة فهي ناقة أو بعير يضحى به، وتجزئ البقر إذا بلغت السنتين، والمعز إذا بلغت سنة، والضأن إذا بلغت نصف سنة، هكذا حددت أسنانها (شرح عمدة الاحكام)

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...