வியாழன், 12 ஜனவரி, 2023

கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று கூடுவோம்

 


23-01-2023

 

بسم الله الرحمن الرحيم 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

     




 இன்ஷா அல்லாஹ் வருகிற ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஈரோட்டில் தேச ஒற்றுமை மாநாடு பிரமாண்டமான வகையில் நடைபெறவுள்ளது. இதுபற்றி உலமாக்கள் ஜும்ஆவில் அறிவிப்புச் செய்ய வேண்டுகிறோம்.                               

-

முன்னுரை & முடிவுரை- மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேச ஒற்றுமை மாநாடு மிக அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் வட்டாரங்களிலும் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்து நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகளை மாற்றாரிடம் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

 மஹல்லா தோறும் சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தி நம்மைப் பற்றி நல்ல சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும். 

عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا (بخاري)

 கருத்து- நபி ஸல் அவர்களுடைய இஃதிகாஃபின் போது மனைவி சஃபிய்யா ரழி வந்தார்கள். திரும்பிச் செல்லும்போது இரவு நேரமாக இருந்ததால் தெருமுனை வரை நபி ஸல் அவர்கள் உடன் சென்றார்கள். இதை தூரத்தில் இருந்து இருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். நபி ஸல் அவர்கள் தன் மனைவியை அனுப்பி வைத்து விட்டு அவ்விருவரை நோக்கி சற்று நில்லுங்கள் என்றார்கள். பிறகு அவ்விருவரிடமும் இவர் வேறு யாருமல்ல. என் மனைவி சஃபிய்யா தான் என்றார்கள். அதற்கு அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ் நாங்கள் உங்களைப் பற்றி தவறாக எதுவும் எண்ணவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இப்போது உங்கள் மனதில் எதுவும் இல்லாதிருக்கலாம் ஆனால் ஷைத்தான் உங்கள் மனதில் ஏதேனும் எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.

படிப்பினை- இச்சம்பவம் பல படிப்பினைகளை உள்ளடக்கியது. நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை தீய சக்திகள் பரப்புவதற்கு முன்பே நாம் உஷாராகி, நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதும் அடங்கும்.

முஸ்லிம்களின் ஒன்றிணைந்த தக்பீர் சப்தம் எதிரிகளின் கூடாரத்தை இல்லாமல் ஆக்கி விடும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ (مسلم)

 நபி (ஸல்) அவர்கள், "ஒரு  பகுதி  கரையிலும்  மற்றொரு  பகுதி  கடலிலும்  அமைந்துள்ள  ஒரு நகரத்தைப்  பற்றி  நீங்கள்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''என்று  கேட்டார்கள்.மக்கள்,"ஆம்என்று பதில் அளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின்  மீது  போர்  தொடுக்காதவரை  யுக முடிவு நாள் இறுதிநாள்  வராது.  அவர்கள்  வந்து (அந்நகரத்தில்இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக்  கொண்டும் சண்டையிடமாட்டார்கள்; அம்பெய்மாட்டார்கள்  அவர்கள்"லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத் தவிர  வேறு  இறைவனில்லை; அல்லாஹ்  மிகப்  பெரியவன்)என்றேகூறுவார்கள். உடன் அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் இரண்டாவது முறை தக்பீர் கூறுவார்கள். அதன்  மறுபகுதி  வீழ்ந்து விடும்  பிறகு அவர்கள் மூன்றாவது முறைதக்பீர்  கூறுவார்கள்.உடனே அவர்களுக்குவழி  திறக்கும். அதில்  நுழைந்து போர்ச்செல்வங்களைத்  திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப்  பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது  ஒருவர்  வந்து  உரத்த  குரலில்"தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்'' என்று  அறிவிப்பார்.  உடனே  அவர்கள்  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு(தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் பின்வருமாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157

கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.                                             

படிப்பினை- ஆரம்பத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் வெற்றியைத் தரவேண்டும் என்பது நியதி அல்ல

நாம் நடத்தும் சமய நல்லிணக்க விழாக்களில் மாற்றார்களை அழைத்துப் பேச வைப்பதில் தவறில்லை

தாயிஃபில் இருந்து திரும்பிய நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக முத்இம் இப்னு அதீ அன்று பேசினார்.

وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته . وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت . وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

 நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பலதோழர்கள் மக்காவில் இருக்கும்போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு  வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூது அனுப்பினார்கள். அதற்கு முத்இம்  சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தனர். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியானால் உன்னுடைய பொறுப்பில் உள்ள  உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அபூ ஜஹ்ல் அங்கீகரித்தான்.

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் இதுபோல் நிறைய உள்ளன ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயமாக பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச நலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள்.

பதவி ஆசையும். பண ஆசையும் தான் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் ஒன்றிணைவதை தடுக்கிறது

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى5 عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا6 فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ7 وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ رواه أبوداود

கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். உணவைத் தட்டை நோக்கி விருந்து கொடுப்பவர் அழைப்பது போல முஸ்லிம்களுக்கு எதிராக ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வார்கள் என நபி ஸல் அவர்கள் கூறும்போது அல்லாஹ்வின் தூதரே அந்த நாளில் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்பதால் அவ்வாறு நடைபெறுமா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள்  எண்ணிக்கையில் நீங்கள் அதிகமாகவே இருப்பீர்கள். எனினும் கரை புரண்டு வெள்ளம் வரும்போது இரண்டு புறமும் சேரும் நுரை போன்று நீங்கள் பார்ப்பதற்கு அதிகம் இருந்தாலும் வலுவிழந்து இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயம் கலந்த மரியாதையை அல்லாஹ் நீக்கி, உங்களின் உள்ளத்தில் அல்லாஹ் வஹ்னை ஏற்படுத்தி விடுவான் என்று கூறியவுடன் அல்லாஹ்வின் தூதரே வஹ்ன் என்றால் என்ன என்று கேட்க, உலக ஆசையும் மவ்த்தை வெறுப்பதும் என நபி ஸல் பதிலளித்தார்கள்.                                             

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رض قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى رَجُلَانِ مِنْ الْمُسْلِمِينَ فَقَالَ خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ(بخاري

ஆரம்பத்தில் நபி ஸல்அவர்கள் தங்கத்தால் மோதிரம் அணிந்தார்கள். அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற சின்னம் பதிக்கப் பட்டிருந்தது. அரசாங்க முத்திரையாக அதை நபி ஸல் பயன் படுத்தினார்கள். அதைப் பார்த்து மக்களும் தங்க மோதிரம் அணிந்த போது அதைக் கழற்றி வீசிய நபி ஸல் அவர்கள் இனிமேல் நான் ஒருபோதும் அதை அணிய மாட்டேன். என்றார்கள். அதன் பிறகு வெள்ளி மோதிரம் அணிந்தார்கள். அரசாங்க முத்திரையான அந்த மோதிரம் நபி ஸல் அவர்களுக்குப் பிறகு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களிடம் இருந்தது. அவர்களுக்குப் பிறகு ஹழ்ரத் உமர் ரழி அவர்களிடம் இருந்தது. அவர்களுக்குப் பிறகு ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்களிடம் இருந்தது. ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் ஒரு சாரார் கிளம்பினர். அதைப் பற்றிய கவலையில் ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்கள் ஒரு கிணற்றின் விளிம்பில் அமர்ந்திருந்த போது அது தவறி விழுந்து விட்டது. கிணறு முழுவதையும் தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.                

குறிப்பு- உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாகவே காலம் காலமாக பாதுகாத்து வைக்க வேண்டிய மோதிரம் தொலைந்த து.  உதுமான்(ரழி) அவர்களும் கொல்லப்பட்டார்கள்

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

பனீ இஸ்ராயீல் சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் திரும்பி வரும்வரை அமைதி காத்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قال الله تعالي قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ (85) فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي (86)قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِيُّ (87) فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ فَقَالُوا هَذَا إِلَهُكُمْ وَإِلَهُ مُوسَى فَنَسِيَ(88) أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَلَا نَفْعًا (89) وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِنْ قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنْتُمْ بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي (90) قَالُوا لَنْ نَبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّى يَرْجِعَ إِلَيْنَا مُوسَى (91) قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي(94)سورة طه   إِنِّي خَشِيتُ } قَالَ: خشيت إِنَّ يتبعني بعضهم ويتخلف بعضهم". (تفسير ابن أبي حاتم)

 خفت أن تقول ان فارقتهم واتبعتك ولحق بي فريق وتبع السامري فريق  (تفسير النسفي)

சமூக ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிக்கு என்றும் ஆதரவு தருவது நம் கடமையாகும்.

 

 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...