30-12-2022 |
|
بسم
الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் அழிவு நாளின் அறிகுறிகளும் |
அனாச்சாரங்கள் அதிகம் நடைபெறும் கால கட்டத்தில் அதைச் சுட்டிக் காட்டுவது முக்கியமான கடமையாகும்.
ஆங்கிலப் புத்தாண்டை கிறிஸ்தவர்களும்
ஏனைய சமூக மக்களும் கொண்டாடுகின்றனர் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால்
முஸ்லிம்களும் அதைக் கொண்டாடுவது தான் வேதனையான விஷயம்.
புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான
செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு
அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது
காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல.
காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும்.
ஒருவரின் 80 வருட வாழ்க்கையில் 20 வயது முடிந்து
21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30
வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம்
தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது
வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை என் ஆயுள்
குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும்
இல்லை. இது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும், புத்தாண்டுக்
கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில் இதுபோன்ற புத்தாண்டு தினங்களில் ஒரு
முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப்
பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணி, நல்ல நடைமுறைகளைத் துவங்குவதற்கான கணக்காக
இந்த நாட்களை ஆக்கிக் கொள்வதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை.
மற்றவர்களின்
கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும்.
அல்லது வெறுக்க வேண்டும்.
அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.
عن ابن مسعودٍ
رضي الله عنه قال: قال رسول الله صلى
الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل
أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل
لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده،
فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ
كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ
ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ
فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ
يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ
" إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 ثم قال: كلا، والله
لتأمرن بالمعروف، ولتنهون عن المنكر، ولتأخذن على يد الظالم، ولتأطرنه على الحق
أطراً، ولتقصرن على الحق قصراً، أو ليضربن الله بقلوب بعضكم على بعضٍ، ثم
لَيَلْعَنَنَّكم كما لعنهم رواه أبو داود،
பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு
பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு
பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே
தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு
செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில்
அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு
செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு
விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று
ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.
عن جابر رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ
عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ:
فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ
عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ
فِيَّ سَاعَةً قَطُّ "(شعب الايمان
முற்காலத்தில் அல்லாஹ்
பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்
ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட
உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து
விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில்
வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.
புத்தாண்டுக்
கொண்டாட்டம் என்ற பெயரில் அழிவு நாளின் அறிகுறிகள்
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு
தினத்தில் வருடத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகம் நடைபெறும். இது
வருடத்திற்கு வருடம் கூடிக் கொண்டே இருக்கிறது. கடந்த புத்தாண்டில் தமிழகத்தில்
மட்டும் 273 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளின்
விற்பனையை விட ஒரு மடங்கு அதிகம்.
அதிகமாக
போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை
விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில்
அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிம் போதை இளைஞர்கள்தான். எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே
நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு
வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென்றே தனியாக விழிப்புணர்வுக்
கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி, கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை
ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து
அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது கடமையாகும்.
உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இவர்களுல் 80% ஆண்களும்
20% பெண்களும்
அடங்குவர். பள்ளி, கல்லூரி
மாணவர்கள் மத்தியில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வ சாதாரணம். சிறிய
டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை
செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள்.
அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக
யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச்
சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே
இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.
عن أنس قال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ
وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنَا وَيَكْثُرَ شُرْبُ الْخَمْرِ وَيَقِلَّ
الرِّجَالُ وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً
الْقَيِّمُ الْوَاحِدُ (بخاري
عنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"
إِذَا اسْتَحَلَّتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ
التَّلَاعُنُ، وَشَرِبُوا الْخُمُورَ، وَلَبِسُوا الْحَرِيرَ، وَاتَّخذُوا
الْقِيَانَ ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ
" (بيهقي في شعب الايمان- الترغيب
والترهيب
என் சமூகத்தினர் ஐந்து காரியங்களை ஆகுமாக்கிக் கொண்டால்
அவர்களை அழிவு சூழ்ந்து கொள்ளும். 1.ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டால் 2.மது
அதிகரித்தால் 3.பட்டாடைகளை அணிந்தால் 4.இசைக் கருவிகளை பொழுது போக்காக ஆக்கிக்
கொண்டால் 5.ஆண் ஆணோடும் பெண் பெண்ணோடும் ஜோடி சேர ஆரம்பித்தால்.
15
விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் பரவ ஆரம்பித்தால் உலகம் பல ஆபத்துகளை சந்திக்கும்
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- « إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا
وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ
امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ
الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ
الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ
الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ
الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ
وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ
قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي
1.பொதுச்
சொத்துக்கள் அபகரிக்கப்பட்டால் அதாவது ஊழல் பெருகினால் 2. அமானிதம் துஷ்பிரயோகம்
செய்யப் பட்டால் 3.ஜகாத் என்பது நிறைவேற்றப்படாத கடனாகவே ஆகி விட்டால் 4.மார்க்கம்
அல்லாத நோக்கத்திற்காக மார்க்கக் கல்வி கற்றுக் கொள்ளப்பட்டால் 5. மனைவிக்கு
முற்றிலும் கட்டுப்படும் நிலை பரவி விட்டால் 6. தாயை வெறுத்து 7.தந்தையை
ஒதுக்கி 8.நண்பனை நெருக்கமாக்கிக்
கொண்டால் 9.மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விட்டால். 10. சமூகத்தில்
நல்லவர்கள் ஓரங் கட்டப்பட்டு 11.கெட்டவர்கள் தலைவர்களாக ஆக்கப்பட்டால் 12.
ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செலுத்துவது பெருகி விட்டால்
13.இசைப் பாடகிகள் 14. இசைக் கருவிகள் பெருகி விட்டால் 15. இந்த உம்மத்தில்
பிந்தியவர்கள் முன்னோர்களான நல்லவர்களை சபித்து, குறை கூற ஆரம்பித்தால்.. ஆக
இதுவெல்லாம் அதிகரித்து விடும்போது அடிக்கடி பூகம்பம், சிவப்பு அனல் காற்று
வீசுதல், நிலச்சரிவு, உருமாற்றம், விண் கற்கள் வீசப்படுதல் ஆகிய ஆபத்துகளை எதிர் பாருங்கள்.
எந்த அளவுக்கெனில் ஒரு தஸ்பீஹ் மணி அறுந்து விழுந்தால் அதன் பாசிகள் எவ்வாறு
தொடர்ச்சியாக விழுமோ அதுபோல் தொடர்ச்சியாக இந்த பூமியில் ஆபத்துகள்
அதிகரிக்கும்.திர்மீதீ (கொரோனாவும் இதில்
கட்டுப்படும்.)
மக்களிடம் பகைமையை
உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க
ஷைத்தான்
அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும்
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ
وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ
تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ
الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ
ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة
மதுவைத் தடை செய்த பின் அதன் ஞாபகமும்
வரக்கூடாது என
மது ஊற்றப் பயன்படும் பாத்திரத்தை நபி ஸல் தடை
செய்தார்கள்
عَنْ
ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ
فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا (مسلم)
வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் பச்சையாக
சாப்பிட்டு
அதனால் ஏற்படும் வாடையைக் கூட மார்க்கம்
விரும்புவதில்லை
عَنْ
جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ ... مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ
مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو
آدَمَ (مسلم
யார் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வேக வைக்காத
நிலையில் சாப்பிட்டாரோ அவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.
பீடி, சிகரெட் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டவை
என்பதற்கு இதுவும் ஆதாரம்
அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும்
மதுவைத் தொட்டதில்லை.
அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது
عن
أبي العالية الرياحي قال : قيل لأبي بكر الصديق في مجمع من أصحاب رسول الله صلى
الله عليه و سلم : هل شربت الخمر في الجاهلية ؟ فقال : أعوذ بالله فقيل : و لم ؟
قال : كنت أصون عرضي و أحفظ مروءتي فإن من شرب الخمر كان مضيعا في عرضه و مروءته
قال : فبلغ ذلك رسول الله صلى الله عليه و سلم فقال : صدق أبو بكر صدق أبو بكر
مرتين ( تاريخ الخلفاء
அபூபக்கர் ரழி கூறினார்கள்-
நான் என் மனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதுவை அருந்துபவர் மனிதத் தன்மையை
இழந்து விடுகிறான் என்றார்கள். ஹழ்ரத் அபூபக்கர் ரழி கூறியதை நடைமுறையில் நாம்
பார்க்கிறோம். வக்கிர புத்தியும் வன்முறை குணமும் குடிகாரனுக்கு ஏற்பட்டு
விடுகிறது. மஹ்ரமான பெண்களிடம் கூட தவறாக நடந்து கொள்வார்கள்.
كان لفضيل بن عياض رح تلميذ
يُعدّ من أعلم تلاميذه - لمّا حضرت لاحد
تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض رح وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ
المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا
إله إلاّ الله .
فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً
شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله
الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء
أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك والثاني : بالحسد ، حسدت أصحابي والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته
عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت
عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)
ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத்
நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள்.
அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம்
ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா
சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன்
என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.இதைக்கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ்
அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும்
வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச்
செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம் ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த
மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர்
கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம்.
நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப்
பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன். 3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி
மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி
விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த
ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது
பாவங்களுக்கெல்லாம்
தாய் என மதுவை உஸ்மான் ரழி அவர்கள் வர்ணித்தார்கள்
عن
عُثْمَانَ رَضِ يَقُولُ
اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ
مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ
فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ
لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا
أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ
وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ
وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ
كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ
كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ
عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا
يَجْتَمِعُ الْإِيمَانُ وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ
أَحَدُهُمَا صَاحِبَهُ (نسائ
உஸ்மான் ரழி அவர்கள்
கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு நடத்தை
கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.
ஒருநாள் அவள் தன் பணிப் பெண்ணை
அனுப்பி ஒரு பிரச்சினையில் மாட்டிக்
கொண்டதால் தனக்காக சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ
வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு வந்தார்.
ஆனால் அவர் வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில்
அவள் இருக்க அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது. அப்போது அப்பெண் அவரிடம் சாட்சி சொல்ல உம்மை அழைக்கவில்லை. மாறாக
நீ என்னிடம் உறவு கொள்ள வேண்டும். அல்லது
மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல வேண்டும். இம்மூன்றில்
ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று கூற,அவரால் அங்கிருந்து
தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர் மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று
விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித் தரக்கூறினார்.சற்றுநேரத்தில்
போதை ஏறியதும் அவளிடம் உறவும் கொண்டு விட்டார்.போதையில் அக்குழந்தையையும் கொன்று
விட்டார்.எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக ஈமானும்
மதுப்பழக்கத்தில் மூழ்குவதும் ஒரு மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என
உஸ்மான் ரழி கூறினார்கள்.
மதுவுக்கு அடிமையானவன்
சிலை வணக்கம் செய்தவனைப் போன்று அல்லாஹ்வை சந்திப்பான்
عَنْ
أَبِي الدَّرْدَاءِ رض عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ
مُدْمِنُ خَمْرٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ
وَثَنٍ (ابن ماجة- عن ابن عباس قال: قال
رسول الله صلى الله عليه وسلم: "من
لقي الله مدمن خمر, لقيه كعابد وثن" (صحيح ابن حبان.
மது அருந்திய நிலையில்
இருப்பவனிடம் ஈமான் இருக்காது. அதே நிலையில் இறந்து விட்டால்...
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا
يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ
وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا
أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (بخاري
இணை வைப்புக்குரிய படங்களை காலண்டரில் நாம் அச்சிட்டுத்தரலாமா?
முஸ்லிம் வியாபாரிகளில்
சிலர் தங்களுடைய மாற்று மத நண்பர்களுக்கு அவர்களுடைய தெய்வங்களின் உருவப்படங்களை
அச்சிட்டு காலண்டர் அன்பளிப்பாக வழங்குகின்றனர். இது ஷிர்க்குக்கு துணை போகும்
செயலாகும். அதற்கு பதிலாக இயற்கைக்காட்சிகளை அச்சிட்டுத் தருவது தவறில்லை
قال الله تعالي وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ
اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (المائدة)2
عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ:" " وَالَّذِينَ لا
يَشْهَدُونَ الزُّورَ " , قَالَ: لا يُمَالِونَ أَهْلَ الشِّرْكِ عَلَى
شِرْكِهِمْ وَلا يُخَالِطُونَهُمْ" ابن ابي حاتم
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رض أَمَّا بَعْدُ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَامَعَ الْمُشْرِكَ وَسَكَنَ مَعَهُ
فَإِنَّهُ مِثْلُهُ أبوداود2405
وفي الصحيحين:أنّ رسول الله صلى الله عليه وسلم قال إنّ الله حرّم بيع
الخمر والميتة والخنزير والأصنام.....متفق عليه
மாற்றாரின் பண்டிகையின்
போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது பற்றி இப்னுல் கைய்யிம் ரஹ்
قال ابن القيم رحمه الله وأما التهنئة بشعائر الكفر المختصة به فحرام
بالاتفاق مثل أن يهنئهم بأعيادهم
وصومهم فيقول عيد مبارك عليك ، أو تهنأ بهذا العيد ونحوه ،
فهذا إن سلم قائله من الكفر فهو من المحرمات ، وهو بِمَنْزِلة أن يُهَنِّئه بسجوده
للصليب ، بل ذلك أعظم إثماً عند الله ، وأشد مقتاً من التهنئة بشرب الخمر ، وقتل
النفس ، وارتكاب الفَرْج الحرام ونحوه
وكثير ممَن لا قَدْر للدِّين عنده يقع في ذلك ولا يدري قبح ما فعل ، فمن
هنأ عبداً بمعصية أو بدعة أو كُفر فقد تَعَرَّض لِمَقْت اللّه وسَخَطه (احكام اهل
الذمة)
இமாம் இப்னுல் கைய்யிம்
(ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின்
விசேஷ நிகழ்ச்சிகளின் போது
அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார்
என்பதில் சந்தேகம் இல்லை.
சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் என்று கூடச்
சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக வாழ்த்துகிறாரோ (உதாரணமாக, மது
அருந்தியதற்காக, அல்லது கொலை செய்ததற்காக, அல்லது விபச்சாரத்திற்காக) அல்லது
பித்அத்திற்காக அல்லது குஃப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்' (வாழ்த்தப்படுபவர்
நம்முடன் தொழில்
புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ
அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!)
மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால்
அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில்
அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை. அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.மேலும்
சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள்
போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும்
ஹராமாகும்.