வியாழன், 2 மார்ச், 2023

பராஅத்தும் பாவமன்னிப்பும்

 


03-03-2023

 

بسم الله الرحمن الرحيم 

 பராஅத்தும் பாவமன்னிப்பும்

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 


 பராஅத்தும் பாவமன்னிப்பும்


பராஅத்தை முன்னிட்டு நாம் செய்ய வேண்டிய முக்கியமான அமல்களில் அன்று இரவு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பதும் அன்று பகலில் நோன்பும் முக்கியமான ஒன்றாகும். ஷஃபான் 15-ம் நாளின் நோன்புக்கு முன்பு பிறை, 14, 15 ஆகிய நோன்புகளையும் சேர்த்து வைத்தால் பராஅத் நோன்பு, மற்றும் அய்யாமுல் பீழ் நோன்புகள் என இரண்டையும் சேர்த்து கடைபிடித்த நன்மைகளைப் பெறலாம்.    

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُفْطِرُ أَيَّامَ الْبِيضِ فِي حَضَرٍ وَلَا سَفَرٍ (نسائ) عَنْ أَبِي ذَرٍّ قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَصُومَ مِنْ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ الْبِيضَ ثَلَاثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ (نسائ)

கீழ்காணும் ஹதீஸை சிலர் தவறாகப் புரிந்து ஷஃபான் 15-ல் நோன்பு வைக்க க்கூடாது என்று கூறுவார்கள். அவர்களின் கருத்து மேற்படி ஹதீஸுக்கு மாற்றமானது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُومُوا (ابوداود)

இந்த ஹதீஸின் கருத்து ஷஃபான் நடுப்பகுதி முடிந்து விட்டால் நோன்பு வைக்க வேண்டாம் என்பதாகும். இதை பின்வரும் ஹதீஸ் விபரிக்கிறது.

عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا بقي نصف شعبان ، فلا تصوموا " (شرح السنة)

ஷஃபானின் ஒரு பாதி முடிந்து மற்றொரு பாதி மீதம் இருக்கும்போது நோன்பு வைக்காதீர்கள்.

 

பராஅத் இரவில் பாவ மன்னிப்புத் தேடுவது முக்கியமான விஷயம்

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ (ابن ماجة)

ஒரு முஸ்லிம் அவ்வப்போது தனது பாவங்களுக்காக தவ்பா செய்யா விட்டால் உள்ளம் துருப்பிடித்து விடும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رض عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ.. وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (احمد)عَنْ أَبِى هُرَيْرَةَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِى قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِى ذَكَرَهُ اللَّهُ فِى كِتَابِهِ ( كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ(المطففين14) ابن ماجة

ஒரு அடியான் ஒரு பாவம் செய்தால் அவனது உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டு விடுகிறது. அவன் தவ்பா செய்தால் அது நீங்கி விடுகிறது. தவ்பா செய்யாமல் தொடர்ந்து பாவம் செய்தால் துருப்பிடித்து திருந்தாத உள்ளமாக ஆகி விடும்.                                                      

தொடர் பாவங்களால் உள்ளம் முத்திரையிடப்படுவதை அல்லாஹ் குர்ஆனில் பல உவமைகளுடன் விபரிக்கிறான்

خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ (7) البقرة - أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (108)النحل - وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا (125)الانعام - كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (14)المطففين

1.முத்திரையிடுதல்- சீல் வைத்து விட்டால் வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது. எத்தனை உபதேசங்கள் கேட்டாலும் பலன் இருக்காது 2. அச்சுப்பதித்தல்-print  செய்யப்பட்டால் நீக்க முடியாது குறிப்பாக நாணயங்களில் print  செய்யப்பட்டு விட்டால் நீக்க முடியாது 3.இறுகிய உள்ளமாக ஆக்கி விடுதல் 4. துருப்பிடித்து விடுதல்  

 

பாவ மன்னிப்பு பல பிரச்சினைகளைத் தீர்க்கும்

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا –(القرطبي)

நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.                                       

وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا  إن الله تعالى يقول في سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي)

 ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.                                                                 

قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي  

உமர் ரழி அவர்கள் மழைத் தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம் சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்கு முன் அதன் அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம் மழையை வேண்டினேன். அல்லாஹ் மழையை இறக்கினான் என்றார்கள் 

عَنِ الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ:  " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ "  وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ، فَسُقُوا".  (تفسير  ابن ابي حاتم

 திமிஷ்க் நகரில் ஏற்பட்ட பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள் உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள் நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம் முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும் கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை இறக்கினான்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابوداود

 

யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.                                                         

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்

كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் என் தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.         

 قال علي بن خشرم: "رأيت وكيع بن الجراح وما رأيتُ بيده كتابًا قط، إنما هو يحفظ، فسألتُه عن دواء الحفظ، فقال: تركُ المعاصي، ما جرَّبْتُ مِثلَه للحفظ"؛ (تهذيب التهذيب - لابن حجر العسقلاني - ج- 2 - ص- 129).

வகீஃ ரஹ் அவர்களை நான் கையில் கிதாப் இல்லாமலேயே மனப்பாடமாக பல விஷயங்களைக் கூறுவதை அவர்களின் மனன சக்திக்கான காரணத்தை நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பாவங்களை விடுவது தான் மனன சக்திக்கு முக்கியக்காரணம் என் அனுபவத்தில் இதை விட முக்கியக் காரணத்தை கண்டதில்லை என்றார்கள்.   

قال مالك بن أنس للشافعي: "إن اللهَ ألقى على قلبك نورًا، فلا تُطفئه بظُلمة المعصية"؛ (تهذيب الأسماء - للنووي - ج- 1 - ص- 47).

قال الشافعي: شكوتُ إلى وكيعٍ سوءَ حِفظي فأرشَدني إلى ترك المعاصي  وأخبَرني بأن العلمَ نورٌ ونورُ الله لا يُهدى لعاص(ديوان الشافعي
மனப்பாடம் என்பது அல்லாஹ் உள்ளத்தில் உருவாக்கும் பிரகாசம். அதை உனது பாவத்தால் இருளாக்கி விடாதே என மாலிக் ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். மேலும் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது நான் வகீஃ ரஹ் அவர்களிடம் என மன ன சக்தியின் குறைபாட்டை விபரித்த போது பாவங்களை விட்டு விடும்படி கூறியதுடன் மனனம் என்பது அல்லாஹ் ஏற்படுத்தும் பிரகாசம். பிரகாசத்தை அல்லாஹ் பாவிக்குத் தர மாட்டான்.

 قال ابن عباس رضي الله عنه (إن للحسنة ضياء في الوجه ونوراً في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الناس. وإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً في الرزق وبغضاً في قلوب الناس).

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். நன்மை செய்வதால் முகத்திலும், உள்ளத்திலும் ஒளி ஏற்படும். ரிஜ்கில் பரக்கத், உடல் வலிமை, மக்களின் பிரியம் ஆகியவை ஏற்படும். ஆனால் பாவம் செய்வதால் இதற்கு மாற்றமான நிலை தான் ஏற்படும்.

இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த நல்லடியாரின் வரலாறு

كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن يمكث فيه فقال الإمام سوف أنام موضع قدمي فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجد  وكان الإمام أحمد شيخا وقورا تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر لينام في منزله، فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار فوائد عظيمة، فقال له هل وجدت لاستغفارك هذا ثمرة، فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما عدا دعوة واحدة، قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟ قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبل فقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தவில்லை  என்பதாலும் அவர்   இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க் கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது கண்ட முஅத்தின் காலைப் பிடித்து  இழுத்து வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது  ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச் சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன் காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம் அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின் இஸ்திஃபார்  வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும் துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு வருத்தத்துடன்  நான் பல வருடமாக கேட்டும் ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக  அவர்களைக் காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று கூறிய போது இமாம் அவர்கள்  மிகவும் ஆச்சரியத்துடன்  நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல்  அல்லாஹ்வின் மீது சத்தியமாக  உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்.                     

 இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ்  ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான் 

وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال

கருத்து – இரண்டு விதமான பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள் நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது  முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது சாத்தியம்.

தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும்.

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார். 

 

(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                             

கீழ்காணும் பாவிகள் திருந்தி தவ்பா செய்யாத நிலையில் பராஅத் இரவிலும் இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது

عن معاذ بن جبل رض عن النبي صلى الله عليه وسلم قال:يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن (صحيح ابن حبان) -وزاد البيهقي "ولا إلى قاطع رحم ولا مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر"وهو ضعيف

பாவ மன்னிப்புக் கேட்காமல் தொடர்ந்து பாவம் செய்வதால் பாதிப்புகள்.1. மறதி ஏற்படும்

قال عبدالله بن مسعودٍ رضي الله عنه: "إني لأحسب أن الرجلَ ينسى العلم قد علِمه بالذنب يعمَله"؛ (جامع بيان العلم - لابن عبدالبر –

இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதன் தான் கற்ற கல்வியை அவன் செய்யும் பாவங்களால் மறந்து விட வாய்ப்புண்டு

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ (بخاري) عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ الْإِبِلِ فِي عُقُلِهَا (بخاري) ) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ .- فضائل القرآن                                        

ஒருவருக்கு குர்ஆன் மறந்து விட்டால் நான் மறந்து விட்டேன் என்று கூறாதீர்கள். மாறாக மறக்கடிக்கப்பட்டு விட்டது. ஒட்டகத்தை அவிழ்த்து விடப்பட்டால் பிடிக்க முடியாதது போல் குர்ஆன் ஓதி மறந்து விட்டால் எளிதில் மீட்க முடியாது

هذا ذم، وسببه ما فيه من الإشعار بعدم الاعتناء بالقرآن، إذ لا يقع النسيان إلا بكثرة التغافل وترك التعاهد، فإذا قال الإنسان نسيت آية كذا وكذا فقد شهد على نفسه بالتفريط، فيكون متعلق الذم ترك الاستنكار والتعاهد لأنه الذي يورث النسيان قاله القرطبي  (: الفجر الساطع على الصحيح الجامع

குர்ஆனை நான் மறந்து விட்டேன் என்று ஒருவர் கூறுவது அவர் செய்த பாவத்திற்கு அவரே சாட்சி சொன்னவரைப் போன்றாகி விடுவார். என இமாம் குர்துபீ ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ،" " وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ "((7) العاديات)  ، قَالَ: الْإِنْسَانُ شَاهِدٌ عَلَى نَفْسِهِ،

பாவங்களால் பரக்கத் நீங்கும்.

ومعنى قوله تعالى: {ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ}الروم 41 -أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لحد يقام في الأرض أحب إلى أهلها من أن يمطروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أقيمت انكف الناس أو أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية, وهو تركها, فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس ويستظلون بقحفها, ويكفي لبن اللقحة الجماعة من الناس, وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب. (تفسير ابن كثير)

ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான்  என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது  அந்த  கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின்  அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும்.                                                            

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (سبا19)

    இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர்.

குர்ஆனில் சபா என்னும் சூராவில் அல்லாஹ் சபா ஊர்வாசிகளைப் பற்றிக் கூறும்போது அவர்களுக்கு நாம் நிறைய அருட்கொடைகளை வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் அவற்றைப் புறக்கணித்ததால் நாம் அவற்றைப் பறித்துக் கொண்டோம் என்ற கருத்தில் நிறைய வசனங்கள் உள்ளன. அதுபற்றி மேற்படி 15,16,17,18 ஆகிய வசனங்களின் விரிவுரைகளிலும் பல செய்திகள் உள்ளன.

تفسير{فَأَعْرَضُوا}عن أمره واتباع رسله بعد أن كانوا مسلمين قال السدي ووهب:بعث إلى أهل سبأ ثلاثة عشر نبيا قال القشيري: وكان لهم رئيس يلقب بالحمار وقيل:كان له ولد فمات فرفع رأسه إلى السماء فبزق2 وكفر -{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (قرطبي                                                                                                       

 

وقال عبدالرحمن بن زيد: إن الآية التي كانت لأهل سبأ في مساكنهم أنهم لم يروا فيها بعوضة قط ولا ذبابا ولا برغوثا ولا قملة ولا عقربا ولا حية ولا غيرها من الهوام، وإذا جاءهم الركب في ثيابهم القمل والدواب فإذا نظروا إلى بيوتهم ماتت الدواب. وقيل: إن الآية هي الجنتان، كانت المرأة تمشي فيهما وعلى رأسها مكتل4 فيمتلئ من أنواع الفواكه من غير أن تمسها بيدها (تفسير القرطبي)

மேற்படி வசனங்களின் விளக்கவுரைகளில் சபா என்ற அந்த ஊரின் செழிப்பைப் பற்றிக் கூறப்படும்போது அந்த ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை வெறும் காலிக் கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு ஒருபெண் நடந்து சென்றால் அந்தக்கூடையில் தானாக வந்து விழும் பழங்களால் கூடை நிரம்பி விடும். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களுக்குச் செழிப்பைத் தந்த பிறகும் அவர்கள் நன்றி செலுத்தவில்லை.மேலும் அவர்கள் பயணம் செய்தால் அருகருகே ஊர்கள் இருக்கும் அமைப்பில் அல்லாஹ் அவர்களுக்கு வசதியை ஏற்படுத்தினான். அப்போது தான் நீண்ட தூர பிரயாணத்தில் அவர்கள் நினைத்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக இவ்வாறு அல்லாஹ் ஆக்கி வைத்தான். ஆனால் அவர்கள் அந்த வெகுமதிகளை மறுத்து அல்லாஹ்விடம்எங்களுடைய ஊர்களை தூர தூரமாக ஆக்கி வைப்பாயாக! எனக்கேட்டார்கள். அவ்வாறே அல்லாஹ் அவர்களை ஆக்கி வைத்து அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அருட்கொடைகளை அல்லாஹ் பிடுங்கிக் கொண்டான். அதுபற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது

فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ

 

ஆனால், அவர்கள் எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி, தமக்குத்தாமேஅநீதம் செய்து கொண்டனர்;ஆகவே, அவர்களை(ப்பற்றி அதிசயமாக ஜனங்கள் பேசும்) செய்திகளாக்கிவிட்டோம்.இன்னும் அவர்களை (பல ஊர்களில்) சிதறச்செய்துவிட்டோம்;

 அல்லாஹ் அந்த ஊர்மக்களை அழிக்க எண்ணியபோது அவ்வூரின் தண்ணீர் வளத்துக்கு ஆதாரமாக இருந்த மஆரிப் நீர்த்தேக்கத்தை முதலில் அழித்தான். எங்கிருந்தோ எண்ணிலடங்காத  எலிகள் அங்கு வந்து அந்த அணையைச் சிறிதுசிறிதாக அரிக்கத் துவங்கின. இதைக்கண்ட அம்மக்கள் அதிர்ச்சியடைந்து எலிகளை வேட்டையாட பல ஊர்களிலிருந்தும் பூனைகளை வரவழைத்தனர்.ஆனால் அந்தப் பூனைகளால் அல்லாஹ்வின் படைகளான அந்த எலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அந்த அணைக்கட்டு உடைந்து நீர் பெருக்கெடுத்தது. ஊர் அழிந்தது.

பாவங்களின் காரணமாக சொத்து சுகங்கள் அழியும்.

إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) .......... فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ (79) وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ (80) فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ (81) وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَنْ مَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ (82)القصص

பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.

அதாவது இன்று ஒரு பாவம் செய்தால் இன்ரு ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாக முதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போதுதான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும்.யாரேனும் ஷைகுமார்களிடம் பைஅத் வாங்கியிருந்தால் ஷைகுடனான தொடர்பு துண்டித்து விடும். பின்பு அன்றாட திக்ருகள் விடுபடும். பின்பு தஹஜ்ஜுத் விடுபடும். அதற்குப் பின்பு வெளிப்படையான அமல்களும் தடைபட்டு விடும்.

 

2 கருத்துகள்:

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...