வியாழன், 1 பிப்ரவரி, 2024

மிஃராஜின் காட்சிகளும் படிப்பினைகளும்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات فرعون) وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه فَقَالَتْ بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ أَوَلَك رَبّ غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه . قَالَ فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك اللَّه عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ " قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن كثير)

மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச் செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும். இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர். ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக் கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால் நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக் கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன் உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின் உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப் பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும் அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில் அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய குழந்தைகளில் இதுவும் ஒன்று.  சுமார் பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக தஃப்ஸீர்களில் உள்ளது. 

இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன

فقال لها : ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها الحيات والعقارب وقال لها : اكفري بالله وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ فأتى بابنتها فلما اضطجعت على صدرها وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان ابنتها فتكلمت وهي من الأربعة الذين تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه لا تجزعي فإن الله قد بنى لك بيتاً في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين في طلبه فانتهى إليه الرجلان , وهو يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما رأوا ذلك انصرفوا فقال , حزقيل : اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم يظهر عليّ أحد فأيما هذين الرجلين كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله وأيما هذين الرجلين أظهر عليّ فعجل عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى النار فانصرف الرجلان إلى فرعون فأما أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون بالقصة على رؤوس الملأ فقال له فرعون وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن

சில அறிவிப்புகளில் அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும் அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன் என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை செய்தாலும் நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில் போடப்பட்டது. மேலும் இவர்களைக் கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து அவரைக் கொண்டு வர இருவரை ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு அருகில் நெருங்க முயற்சித்த போது திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும் என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ் இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா.. யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார். இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன் அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம் கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக் காட்சியையும் நான் பார்க்கவில்லை என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக் கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்- தஃப்ஸீர் காஜின்                                                                    

படிப்பினை- அல்லாஹ் முஃமினைக் காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்


மாஷிதா அம்மையாரின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்த ஆசியா அம்மையார் இஸ்லாத்தை ஏற்றார்கள்

 وذلك كله بعين امرأة فرعون وسمعت كلام روح ابنها الأكبر ، ثم الأصغر ، فآمنت امرأة فرعون ، وقبض روح امرأة خازن فرعون ، وكشف الغطاء عن ثوابها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأته فازدادت إيمانا ويقينا وتصديقا ، واطلع فرعون على إيمانها ، فخرج إلى الملأ ، فقال لهم : ما تعلمون من آسية بنت مزاحم ؟ فأثنوا عليها ، فقال لهم : وإنها تعبد ربا غيري ، فقالوا له : اقتلها ، فأوتد لها أوتادا ، وشد يديها ورجليها فدعت آسية ربها فقالت : ( رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين (11) ) فكشف لها الغطاء فنظرت إلى بيتها في الجنة ووافق ذلك أن حضرها فرعون وضحكت حين رأت بيتها في الجنة ، فقال فرعون : ألا تعجبون من جنونها ، إنا نعذبها وهي تضحك فقبض روحها  (تفسير مجاهد)

மாஷிதா அம்மையாருக்கு ஃபிர்அவ்ன் கொடுமைகளை ஆசியா அம்மையார் பார்த்து வேதனைப்பட்டார்கள். மாஷிதா அம்மையாரின் ஒவ்வொரு குழந்தைகளாக ஃபிர்அவ்ன் கொல்லும் நேரத்தில் அவர்களின் ஆன்மா மேலேறிச் செல்லும்போது தனது தாய்க்கு சுபச்செய்தி சொல்லும் காட்சியை ஆசியா அம்மையார் பார்த்தார்கள். இறுதியாக மாஷிதா அவர்களையும்  ஃபிர்அவ்ன் கொன்றபோது அல்லாஹ் வானத்தின் திரைகளை விலக்கி ஆசியா அம்மையாரின் கண்களுக்கு இறந்த மாஷிதா அவர்களின் அந்தஸ்தையும் சிறப்பையும் அறிய வைத்தான். இது அவர்களின் ஈமானை இன்னும் அதிகமாக்கியது. இறுதியில் தன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்ற விபரம் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வந்த போது ஃபிர்அவ்ன் தனது சபையினரைக் கூட்டி, என் மனைவி ஆசியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான். அவர்கள் ஆரம்பத்தில் புகழ்ந்து பேசினார்கள். பின்பு ஃபிர்அவ்ன் கூறினான் அவள் என் அல்லாத வேறு கடவுளை வணங்குகிறாள் என்றவுடன் அனைவரும் அப்படியே கட்சி மாறி, அவளை உடனே கொல்ல வேண்டும் என்று கொக்கரித்தனர். இறுதியில் தன் மனைவியையே கொல்ல ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போடவிருக்கும் நிலையில் அந்த அம்மையார் மேற்படி துஆவைச் செய்தார்கள். அல்லாஹ் அதை அப்படியே ஏற்றான். அவர்கள் கல்லை தூக்கிப் போடுவதற்கு சில நொடிகள் முன்பே உயிர் கைப்பற்றப்பட்டது. கடைசி நேரத்தில் சுவனத்தைப் பார்த்தவர்களாக சிரித்தபடி இருக்க வெறும் உடம்பின் மீது கல்லைப் போட்டனர். அங்கு வந்த ஃபிர்அவ்ன் பைத்தியக்காரி இவளை நான் கொல்லுகிறேன். இவளோ சிரிக்கிறாள்  என்றான்

புராக் விமானம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு...

அமெரிக்கா மற்றும் ஜெர்மன்  மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர்.அதில் வளைகுடா நாடுகளே அதிகம் இடம்பெற்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்களை சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன                              

நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்

காஃபிர்கள் மிஃராஜை  பொய்ப்படுத்தும் விதமாக பைத்துல் முகத்தஸை நேரில் பார்த்த படி வர்ணிக்கச் சொன்ன போது நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் பைத்துல் முகத்தஸைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பார்த்த படி வர்ணித்தார்கள்.           

عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ (بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار

நபி ஸல் கூறினார்கள் மிஃராஜ் பயண விஷயமாக குரைஷிகள் என்னைப் பொய்ப் படுத்திய போது நான் கஃபாவின் ஹிஜ்ரில் நின்றேன். (பைத்துல் முகத்தஸுக்கு சென்று வந்ததாக  நீர் கூறுவது உண்மையென்றால் அந்த பைத்துல் முகத்தஸைப் பற்றி இப்போது  வர்ணித்துக் காட்டு என்றார்கள்.) அப்போது அல்லாஹ் என் கண் முன்னால் பைத்துல் முகத்தஸைக் காட்டினான் நான் பைத்துல் முகத்தஸை நேரில் பார்ப்பது போன்று அவர்களுக்கு வர்ணித்துக் காட்டினேன்    

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் 

    “எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி) 

அறிவு ஏற்கா விட்டாலும் கண்டிப்பாக நம்ப வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري)- باب فَضْلِ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ – الدعوات

 இந்த பூமியிலே, அல்லாஹு சில மலக்குகளை ஏற்பாடு செய்திருக்கிறான். அவர்கள் பாதைகளிலே, சுற்றுவார்கள். அல்லாஹ்வுடைய திக்ரை பேசக்கூடியவர்களை, தேடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வை திக்ரு செய்யகூடியவர்களை அவர்கள் பார்த்துக்கொண்டால், ,தங்களுக்கு  மத்தியிலே அவர்கள்  அழைப்பார்கள்.உங்களுடைய உங்களுடைய நோக்கம் இங்கே இருக்கிறது. இங்கே வாருங்கள் என்று. அந்த வானவர்கள், அந்த திக்ர் உடையவர்களை அப்படியே சூழ்ந்து கொள்வார்கள். சூழ்ந்து கொள்வார்கள். தங்கள் இறக்கைகளால் அடுக்கடுக்காக அவர்கள் அமர்ந்துகொண்டு வானம் வரை அவர்கள் உயர்ந்து விடுவார்கள். அல்லாஹு அக்பர். பிறகு அந்த வானவர்கள், ரப்பிடத்திலே திரும்பச் செல்லும் பொழுது, அவர்களுடைய இறைவன் அவர்களிடத்திலே கேட்பான். என் அடியார்கள் என்ன பேசினார்கள்? அந்த வானவர்கள் சொல்வார்கள், உனது அடியார்கள் இறைவா!உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள்.உன்னை பெருமை படுத்தினார்கள்.உனது புகழை பேசினார்கள்.அல்லாஹ் கேட்பான்,அவர்கள் என்னைப் பார்த்து இருக்கிறார்களா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ரப்பே! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை.

அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்பான்,அவர்கள் என்ன கேட்டார்கள்? அவர்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தது? மலக்குகள் சொல்லுவார்கள்,

  அவர்களது கோரிக்கைகள் எல்லாம் சொர்க்கமாக இருந்தது. அல்லாஹ் கேட்பான், அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா? பார்த்திருக்கிறார்களா? வானவர்கள் சொல்லுவார்கள்,எங்கள் இறைவா! அவர்கள் சொர்க்கத்தை பார்க்கவே இல்லையே சத்தியமாக. அல்லாஹ் கேட்பான், அந்த சொர்க்கத்தை அவர்கள் பார்த்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள். அதற்கு மலக்குகள் கூறுவார்கள்அந்தச் சொர்க்கத்தை பார்த்துவிட்டால், அதன் மீது பேராசை கொள்வார்கள். அதை அதிகம் தேடுவார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டினார்கள்? அப்பொழுது வானவர்கள் சொல்வார்கள், ஆம் இறைவா! நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ் கேட்பான், நரகத்தை பார்த்து இருக்கிறார்களா?நரகத்தை கண்டிருக்கிறார்களா? சொல்வார்கள் அல்லாஹ்வே! சத்தியமாக நரகத்தை அவர்கள் பார்த்ததில்லை. அல்லாஹ் கேட்பான் அந்த நரகத்தை அவர்கள் பார்த்தால், அவர்களது நிலை எப்படி இருக்கும். மலக்குகள் சொல்வார்கள், அந்த நரகத்தை அவர்கள் பார்த்தால், விரண்டோடுவார்கள். அதை பயந்து கொண்டே இருப்பார்கள். மலக்குள் இவ்வாறு கூறியதும் அல்லாஹ் கூறுவான் அவர்களை அந்த நிலையில் பார்த்த உங்களை நான் சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை மன்னித்து விட்டேன்.  அப்பொழுது பாருங்கள், ஒரு வானவர் கேட்பார். அல்லாஹ்வே! இவர்களில் ஒருவர் அந்த சபையிலே கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரவில்லை வேறு ஏதாவது தேவைக்காக வந்தார் அவர் அந்த இடத்தில் சபை முடிவடையும் வரை உட்கார்ந்துகொண்டார் இவரைப் பற்றி உன்னுடைய தீர்ப்பு என்ன? அதற்கு அல்லாஹ் கூறுவான் அவர்களுக்கு அருகிலே அமர்பவன் கூட துர்பாக்கியவனாக, நன்மையை இழந்தவனாக ஆகமாட்டான். வேறு தேவைக்காக வந்திருந்தாலும் அவனின் பாவங்களையும் நான் மன்னித்து விட்டேன்

படிப்பினை- அல்லாஹ், மலக்குள், சுவனம், நரகம் அனைத்தையும் பார்க்காமலேயே நம்புகிறோம். மிஃராஜையும் அவ்வாறே நம்புகிறோம் இதுதான் ஈமான். 

விஞ்ஞானம் வளராத அக்காலத்தில் நபி(ஸல்) அவர்களின்  மிஃராஜ் பயணத்தை நிறைந்த ஈமான் உடையவர்கள் மட்டுமே நம்பினர்

قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)

தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் தொழுகையைப் பற்றி விபரித்துப் பேசுவதும்  பொருத்தமானது.

ஐம்பது நேரத் தொழுகையை முதலில் கடமையாக்கி பிறகு ஐந்தாக குறைக்கப்பட்ட ஹதீஸ்

قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلَاةً قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ فَرَاجَعْتُهُ فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي  (بخاري)  وقال القاضي عياض المراد بالشطر ههنا الجزء وهو الخمس (شرح)

خمس وهي خمسون يعني خمس من جهة العدد في الفعل وخمسون باعتبار الثواب(عمدة القاري)

ஐம்பதை ஐந்து ஐந்தாக குறைத்து கடைசியில் ஐந்து மட்டும் மிச்சமிருக்கும்போது அல்லாஹ் இது ஐந்து தான். அதாவது எண்ணிக்கையில் ஐந்து. ஆனால் நன்மையில் ஐம்பது 50 நேரத்தொழுகையின் நன்மை கிடைக்கும் என்று கூறினான்.

குறைந்த நேரம் வேலை வாங்கி, நிறைந்த நன்மைகளை அல்லாஹ் தருவது இந்த உம்மத்துக்கு மட்டும் தான் 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلَا مِنْ الْأُمَمِ مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتْ الْيَهُودُ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتْ النَّصَارَى مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ أَلَا فَأَنْتُمْ الَّذِينَ يَعْمَلُونَ مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ أَلَا لَكُمْ الْأَجْرُ مَرَّتَيْنِ فَغَضِبَتْ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ عَطَاءً قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لَا قَالَ فَإِنَّهُ فَضْلِي أُعْطِيهِ مَنْ شِئْتُ (بخاري3459

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதாரணம்.(அதாவது அந்தஸ்தில் வேறுபாடாகிறது)ஒருவரால் கூலிக்கு நியமிக்கப்பட்ட மனிதர்களாவர்! ‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து) நடுப்பகல் நேரம்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலைசெய்தார்கள். பிறகு,அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை, இரண்டிரண்டு கீராத் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள்; யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமுற்று, ‘அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?’ என்று கேட்டனர். அதற்கு அவர் ‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்டார். அவர்கள் ‘இல்லை!”என்றனர். ‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது என்னுடைய அருட் கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!”என்று அம்மனிதர் கூறினார். அம்மனிதருக்கு உதாரணம் அல்லாஹ்வாகும். அவன் குறைந்த அமல் மூலமாக நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறான்.                                            

தொழுகைக்கு ஒரு போதும் விடுமுறை இல்லை. 

தஜ்ஜால் இருக்கும் நேரத்தில் ஆறு மாதங்கள் பகலாக இருக்கும் நிலையில் அந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக இரண்டு தொழுகை தொழுதால் மட்டும் போதுமா என்று கேட்கும்போது நபி ஸல் அவர்கள்  இல்லை.  நேரத்தைக் கணக்கிட்டு தினமும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். தொழுகைக்கு விதி விலக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.

عن النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ  لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم

விளக்கம்- தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள் பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம் நாள்  ஒரு மாதம் போன்றும்,  மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம் நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள் கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு மாதம் பகலாகவே இருக்கும்போது  இரண்டு தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது.  மாறாக சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர்  தொழுது கொண்டிருப்போம்.  நன்கு இருட்டு இருக்கும். லுஹர்  தொழுது கொண்டிருப்போம்.  


போர்க்களத்தில் எதிரிகளின் நிறைந்த, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொழுகை விதி விலக்கு இல்லை

وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً.. (102) النساء   -   أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْ مَعَهُ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ (بخاري)

இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்புகள் வழியாக வந்துள்ளது. நபி ஸல் அவர்களுடன் தாத்துர் ரிகாஉ போரில் பங்கெடுத்த சஹாபி கூறினார்கள். அப்போரில் நபி ஸல் அவர்கள் போர்க்களத்தொழுகை தொழுதார்கள். (ஆயுதங்களை கீழே வைத்து விடாமல் அவற்றை சுமந்தபடியே தொழ வேண்டும்.)நபி ஸல் அவர்களுடன் இருப்பவர்கள் முதல் ஒரு ரக்அத்தை இமாமுடன் தொழும் வரை மீதிப் பேர் எதிரிகளை நோக்கி நிற்பர். நபி ஸல் அவர்கள் ஒரு ரக்அத்தை முதல் அணிக்குத் தொழ வைத்து விட்டு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து சற்று நேரம் நிற்பார்கள். அதற்குள் இந்த முதல் அணியினர் தங்களுக்கு மீதமுள்ள ஒரு ரக்அத்தை  தனியாக சீக்கிரம் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு எதிரிகளை நோக்கி நின்று கொள்வார்கள். உடனே இரண்டாம் அணியினர் வந்து நபி ஸல் அவர்களுடன் இரண்டாம் ரக்அத்தில் இணைவார்கள். அவர்களுடன் நபி ஸல் அவர்கள் தன்னுடைய இரண்டாவது ரக்அத்தை தொழ வைத்து ஸலாம் கொடுத்தவுடன் அந்த அணியினர் தங்களுக்கு விடுபட்ட ஒரு ரக்அத்தை தனியாக எழுந்து தொழுது ஸலாம் கொடுப்பார்கள்.  

படிப்பினை- போர்க் காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.  ஜமாஅத்தின் முக்கியத்துவத்தையும்  உணர்த்துகின்றன. தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியதை வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விட்டு விடப்படும் அமல் தொழுகை தான்.

உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இஸ்லாத்தில் தொழுகை முக்கியம்.

عَنِ ابْنِ عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ  وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ  إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ(رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال) 

மறுமை நாளில் முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவர் தொழுகையில் பேணுதலாக இருக்கவும்

عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد(كنز العمال) 

தொழுகையை விட சிறந்த வேறு வணக்கம் இருந்திருக்கும் என்றால் அல்லாஹ் மலக்குகளுக்கு அவற்றைச் செய்யும்படி உத்தரவிட்டிருப்பான். ஆனால் மலக்குகள் ருகூவு சுஜூது போன்ற தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களை மட்டுமே அல்லாஹ்வுக்கு செலுத்தி வருகின்றனர்.                عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ فِيَّ والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் நான் பூமியில் உள்ளவர்களை அவர்களின் பாவத்தின் காரணமாக தண்டிக்க நாடும்போது எனது வீட்டை (மஸ்ஜிதை எப்பொழுதும்) வணக்கத்தால் நிலை நிறுத்துபவர்களையும், அல்லாஹ்வுக்காக ஒருவரொருவர் நேசிப்பவர்களையும் சஹரில் எழுந்து பாவமன்னிப்புத் தேடுபவர்களையும் பார்த்து என் வேதனையை மக்களை விட்டும் திருப்பி விடுகிறேன்.              

நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் காலத்தில் முஸ்லிம்கள் தொழுகையைவிட தொழிலை பெரிதாக  கருதவில்லை

قَالَ عَمْرو بْن دِينَار الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة " رِجَال لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه"(النور)ثُمَّ قَالَ هُمْ هَؤُلَاءِوَقَالَ مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء وَمِيزَانه فِي يَده خَفَضَهُ وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (ت: ابن كثير)

அம்ர் ரஹ் கூறினார்கள். நான் ஸாலிம் ரஹ் அவர்களுடன் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது கடைவீதியைக் கடந்து செல்வோம். மஸ்ஜிதில் தொழுகைக்காக மக்களெல்லாம் நின்றிருப்பார்கள். ஆனால் கடை வீதிகளில் அப்படி அப்படியே பொருட்களை துணியால் மூடிய நிலையில் மட்டும் வைத்து விட்டு அனைவரும் தொழுகைக்குச் சென்றிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் ஸாலிம் ரஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.               

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவரது ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري)

தொழுவதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே அல்லாஹ் ஆக்கி விடுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள்- அடியானே என்னை வணங்குவதற்கு நீ நேரம் ஒதுக்கு. உன் மனதில் எல்லாவற்றிலும் மனநிறைவை உண்டாக்கி, உன் வறுமையை நீக்குவேன். அவ்வாறில்லாமல் எனக்கு நேரமில்லை என்று நீ தட்டிக் கழித்தால் உனக்கு நேரமே பற்றாத அளவுக்கு உன் கை நிறைய வேலைகளை நான் திணித்து விடுவேன். உனக்கு மன நிறைவையும் நான் ஏற்படுத்த மாட்டேன்.   

உடுத்த உடை இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது

ومن لم يجد ثوبا صلى عريانا قاعدا يومئ بالركوع والسجود فإن صلى قائما أجزاه والأول أفضل (مختصر القدوري

உளூச் செய்த தண்ணீர் இல்லாத நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது

وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا (6) المائدة


உலகில் வேறு யாரும் தொழாத இடத்தில் தொழுகை நடத்திய மாமனிதர். மீன் வயிற்றுக்குள் இருந்தும் தொழுகையை விடவில்லை

قَالَ اِبْن مَسْعُود وَابْن عَبَّاس وَغَيْرهمَا رضي الله عنهم وَذَلِكَ أَنَّهُ ذَهَبَ بِهِ الْحُوت فِي الْبِحَار يَشُقّهَا حَتَّى اِنْتَهَى بِهِ إِلَى قَرَار الْبَحْر فَسَمِعَ يُونُس تَسْبِيح الْحَصَى فِي قَرَاره فَعِنْد ذَلِكَ وَهُنَالِكَ قَالَ "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي كُنْت مِنْ الظَّالِمِينَ" وقيل" فَلَمَّا اِنْتَهَى بِهِ إِلَى أَسْفَل الْبَحْر سَمِعَ يُونُس حِسًّا فَقَالَ فِي نَفْسه مَا هَذَا ؟ فَأَوْحَى اللَّه إِلَيْهِ وَهُوَ فِي بَطْن الْحُوت إِنَّ هَذَا تَسْبِيح دَوَابّ الْبَحْر قَالَ وَسَبَّحَ وَهُوَ فِي بَطْن الْحُوت وَقَالَ عَوْف الْأَعْرَابِيّ لَمَّا صَارَ يُونُس فِي بَطْن الْحُوت ظَنَّ أَنَّهُ قَدْ مَاتَ ثُمَّ حَرَّكَ رِجْلَيْهِ فَلَمَّا تَحَرَّكَتْ سَجَدَ مَكَانه ثُمَّ نَادَى يَا رَبّ اِتَّخَذْت لَك مَسْجِدًا فِي مَوْضِع لَمْ يَبْلُغهُ أَحَد مِنْ النَّاس وَقَالَ سَعِيد بْن أَبِي الْحَسَن الْبَصْرِيّ مَكَثَ فِي بَطْن الْحُوت أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير

ஆழ் கடலுக்குள் கடல் வாழ் உயிரினங்களின் தஸ்பீஹை யூனுஸ் அலை கேட்டார்கள். அந்த நேரத்தில் லாஇலாஹ இல்லா அன்த்த... என்ற தஸ்பீஹை ஓதினார்கள். அந்த இருட்டான, இறுக்கமான இடத்தில் தொழ முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. முதலில் கை, கால்களை அசைத்துப் பார்த்தார்கள். அசைந்தன. மகிழ்ச்சியுடன் தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் உலகில் வேறு யாருக்கும் ஏற்படுத்திக் கொள்ளாத மஸ்ஜிதை நான் ஏற்படுத்திக் கொண்டேன் என்று சந்தோஷத்துடன் கூறினார்கள்.                     ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்ததன் தாத்பரியம்

 عن أنس رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ  وَكَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ الجُمُعَةِ قالَ هذِهِ لَيْلَةٌ غَرَّاءُ وَيَوْمٌ أَزْهَرُ (بزار,كنز العمال)(مشكاة, باب الجمعة) عن أنس بن مالك رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس)

(اللهم بارك لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال الصالحة فيهما(مرعاة شرح مشكاة

ரஜப் மாத த்திலும் ஷஃபான் மாத த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்பதன் தாத்பரியம் இந்த இரண்டு மாதங்களிலும் அதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தருவாயாக என்பதாகும். இந்த இரண்டு மாதங்களிலும் அமல் செய்வதன் மூலமாக ரமழானில் இன்னும் அதிகமாக அமல் செய்யும் பாக்கியம்  கிடைக்கும்.  

وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير) قال الطيبي:الأزهر الأبيض ومنه أكثروا الصلاة عليّ في الليلة الغراء، واليوم الأزهر أي ليلة الجمعة ويومها والنورانية فيهما معنوية لذاتهما،

ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று கேட்பதன் நோக்கம் அதுவரை அல்லாஹ் நம்மை ஹயாத்தாக வைத்திருக்க வேண்டும். என்பதாகும்.

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார்.தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப்பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.

துஆ ஏற்கப்படுவதில் குறிப்பிட்ட நேரங்கள், மாதங்கள் உண்டு. ரஜப் மாதமும் அப்படிப்பட்டது

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ أَنَّكُمْ تَكُونُونَ إِذَا خَرَجْتُمْ مِنْ عِنْدِي كُنْتُمْ عَلَى حَالِكُمْ ذَلِكَ لَزَارَتْكُمْ الْمَلَائِكَةُ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ كَيْ يُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ......ثُمَّ قَالَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الْغَمَامِ وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (ترمذي

கண்ணியமான மாதங்களில், நேரங்களில் அதிகம் துஆச் செய்வது  துஆ ஏற்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.

நபி யஃகூப் அலை அவர்களின் பிள்ளைகள் தங்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி வேண்டிய போது குறிப்பிட்ட நேரம் வரும். அந்த நேரத்தில் துஆச் செய்வேன் என்றார்கள்.

தமக்கு அநீதம் செய்தவர்களுக்கு எதிராக சங்கையான மாதத்தில் துஆ செய்ததால் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي يَوْمٍ يَعْرِضُ فِيهِ الدِّيوَانَ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ أَعْمَى أَعْرَجُ قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ حِينَ رَآهُ وَأَعْجَبَهُ شَأْنُهُ:" مَنْ يَعْرِفُ هَذَا؟"، .........


உமர் ரழி அவர்களின் சபையை ஒருவர் கடந்து சென்றார். குருடராகவும் நொண்டியாகவும் அவர் இருந்தார். மற்றவரின் தயவு இல்லாமல் அவரால் எங்கும் செல்ல முடியாதவராக இருந்தார். அவரைப் பற்றி உமர் விசாரித்த போது இவர் பனீ ஸன்ஆ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சாபத்தின் காரணமாக அந்தக் குடும்பமே இப்படி ஆகி விட்டது என்று கூறப்பட்டது. அது கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரழி இதற்கு சாட்சி உண்டா என்று கேட்க, யார் சபித்தாரோ அந்த  நபரையே அழைத்து வரப்பட்டது. அவரிடம் உமர் ரழி அவர்கள் நடந்ததை விசாரித்தார்கள். அப்போது அவர் கூறினார்.  பனீ ஸன்ஆ குடும்பத்தாருக்கு அருகில் வசிப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் 12 பேர். அவர்கள் எனக்கு நிறைய அநீதம் செய்தனர். என் சொத்துகளை அனுபவித்தனர். என் குடும்பம் பற்றி அவதூறாகப் பேசினர். நான் எவ்வளவோ தூரம் பொறுமை கொண்டேன். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்தேன். குறிப்பிட்ட சிறந்த கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்தேன். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அக்குடும்பத்தில் ஒருவன் பின் ஒருவராக இறந்தனர். கடைசியில் நீங்கள் பார்த்த இவர் மட்டும் தான் மிச்சமிருக்கிறார். அவரும் இந்நிலையில் இருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இது  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                    

                         

  இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் கூறினார் இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் தெரியும். குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்தைச் சார்ந்த, அண்டை வீட்டாரான மற்றொருவருக்கு  நிறைய அநீதம் செய்தனர். அவரும் முடிந்த வரை பொறுமை கொண்டார். இறுதியில் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக ஒரு பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்திற்குள் சிலரும் பள்ளத்திற்கு மேலே சிலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதி அப்படியே குலுங்க ஆரம்பித்தது. இதில் பள்ளத்திற்கு மேல்  இருந்தவர்களுடன் பள்ளத்திற்குள் இருந்தவர்களும் சேர்ந்து அனைவரும் புதையுண்டு போயினர். அதுவே அவர்களின் கப்ராக மாறி விட்டது. என்று கூறியவுடன் அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.            

                                                                                               

இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாரிசுரிமை என்ற அடிப்படையில் நிறைய சொத்துக்கள் கிடைத்த து. அந்தக் குடும்பத்த்துக்கு அவர் மட்டும் தான் வாரிசு என்பதால் கால்நடைகள் உட்பட நிறைய சொத்துக்களை அவர் பெற்றார்.  அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கோத்திரத்தின் ஒரு பிரிவான பனூ முஅம்மல் குடும்பம் வசிக்கும் இடத்தில் தன்னுடைய வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு குடி பெயர்ந்தார். ஆனால் அவர்கள் அதற்கு நேர் மாற்றமாக இவர் மீது பொறாமை கொண்டனர். இவரது சொத்துக்களை அநியாயமாக இவரிடமிருந்து பிடுங்கினர்.  எனக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. ஆனால் அவர்களிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் பெயர் ரபாஹ். அவர் அந்தக் குடும்பத்தாரிடம் நம்மை நம்பி வந்தவருக்கும் துரோகம் செய்யாதீர்கள் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறி பரிந்து பேசினார். ஆனால் அதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட அந்த நபர்  பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஒருநேரத்தில்  அனைவரும் மலையடிவாரத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்கியிருந்த போது மலை உச்சியில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து வழியில் உள்ள அனைத்தையும் நிர்மூலமாக்கியது. அந்தப் பாறை இவர்களின் மீது விழுந்து அவர்களை நசுக்கி சாகடித்தது. இதில் ரபாஹ் மட்டும் தப்பித்தார். அவருக்கு மட்டும் எதுவும் ஆகிவில்லை. என்று கூறியவுடன் உமர் ரழி அவர்கள்  சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                                                    

                                                                                                        

இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர்  பனீ ழம்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு அருகில் வசித்தார். ரீஷா என்பது அவரின் பெயர். ரீஷா இவருக்கு மிகவும் அநீதம் செய்தார். இவரின் ஒட்டகங்களை அவ்வப்போது பிடித்து அறுத்து  உணவாக்கி விடுவார். இறுதியில் அந்த ரீஷாவின் உறவினர்களிடம் சென்று இவர் முறையிட்ட போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் தடுத்தாலும் அவன் கேட்க மாட்டான்.  எங்களுடைய  பங்காளிகளில் ஒருவன் என்பதால் அவன் விஷயத்தில்  நாங்கள் தலையிட மாட்டோம்.நீ  வேண்டுமானால் அவனைக்  கொன்று விடு. என்று கூறினார்கள். ஆனால் இவர் குறிப்பிட்ட மாதம் வருவதை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் கையேந்தினார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அதன் விளைவாக அல்லாஹ் வைரஸ் கிருமியை ரீஷா என்பவன் மீது சாட்டினான். அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அழித்து துஆ கேட்ட ஒரு வருடத்திற்குள் அவனை சாகடித்தது. என்றவுடன் இதையெல்லாம கேட்ட உமர் ரழி அவர்கள் அல்லாஹ் முந்தைய காலங்களில் பிறருக்கு அநியாயம் செய்பவர்களை இப்படியெல்லாம் உடனுக்குடன் தண்டித்துள்ளான். ஆனால் இஸ்லாம் வந்த பின்பு, நபியின் துஆ காரணமாக அநியாயம் செய்பவர்களுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்கியுள்ளான் என்றுகூறி சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.  

       


நூல்-பைஹகீ. ஷுஃபுல் ஈமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

 27-06-2025 بسم الله الرحمن الرحيم   ஹிஜ்ரீ வருடமும்  ஹிஜ்ரத்  தரும் படிப்பினைகளும்   https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரி...