வியாழன், 8 பிப்ரவரி, 2024

பரக்கத் என்பதன் விரிவான விளக்கம்


உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும் பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.

ஒருவரின் அழகு நம்மை ஆச்சரியப்படுத்தினால் பாரகல்லாஹு என்று கூறுவதால் கண்திருஷ்டி ஏற்படாது

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.) 

மணமக்களை வாழ்த்தும்போது பரக்கத்துக்காக துஆ செய்வதன் தாத்பரியமும், அவர்எப்படி துஆ செய்யக்கூடாது என்ற ஹதீஸும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ (ابن ماجة) بَاب مَا يُقَالُ لِلْمُتَزَوِّجِ- كِتَاب النِّكَاحِ- عَنْ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ فَقَالُوا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ (ابن ماجة) بَاب تَهْنِئَةِ النِّكَاحِ- كِتَاب النِّكَاحِ - (بارك الله لك)أي في زوجك (وبارك عليك) أي أدخل عليك البركة في مؤنتها ويُسِرَّها لك (فيض القدير) ودَلَّ صنيع المؤلف على أن الدعاء للمتزوج بالبركة هو المشروع (فتح الباري)- بِالرِّفَاءِ وَالْبَنِينَ كَلِمَة تَقُولهَا أَهْل الْجَاهِلِيَّة فَوَرَدَ النَّهْي عَنْهَا -وَاخْتُلِفَ فِي عِلَّة النَّهْي عَنْ ذَلِكَ قِيلَ لِمَا فِيهِ مِنْ الْإِشَارَة إِلَى بُغْض الْبَنَات لِتَخْصِيصِ الْبَنِينَ بِالذِّكْرِ وقال بن المنير الذي يظهر أنه صلى الله عليه وسلم كره اللفظ لما فيه من موافقة الجاهلية (مرقاة)

அகீல் ரழி அவர்கள் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார்கள்

அப்போது அங்கு வந்தவர்கள் சிறந்த வாழ்க்கையைக் கொண்டும் ஆண் மக்களைக் கொண்டும் சுபச் செய்தி சொல்லி வாழ்த்திய போது அதைக் கேட்ட அகீல் ரழி அவர்கள் அவ்வாறு வாழ்த்த வேண்டாம். மாறாக நபி ஸல் அவர்கள் வாழ்த்தியது போன்று வாழ்த்துங்கள் என்று கூறி பாரகல்லாஹ்.. துஆவைக் கற்றுத் தந்தார்கள்.

பிர்ரிஃபாஇ வல்-பனீன் என்று துஆ கேட்கக் கூடாது என அகீல் ரழி அவர்கள் கூறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளுதல் என்பதும் இதில் இருக்கிறது. மேலும் மணமக்களை இவ்வாறு வாழ்த்துவது அறியாமைக்காலத்தின் பழக்கம். அதனால் நபி ஸல் அவர்கள் மணமக்களுக்கு பரக்கத்தை வேண்டி துஆச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள்.

உயஉஉ யாஅல்லாஹ் இவர்களின் உடலுறவில் பரக்கத் செய்வாயாக என்ற துஆவின் பலன்

عَنْ أَنَسٍ قَالَ مَاتَ ابْنٌ لِأَبِي طَلْحَةَ مِنْ أُمِّ سُلَيْمٍ فَقَالَتْ لِأَهْلِهَا لَا تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بِابْنِهِ حَتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ قَالَ فَجَاءَ فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً فَأَكَلَ وَشَرِبَ فَقَالَ ثُمَّ تَصَنَّعَتْ لَهُ أَحْسَنَ مَا كَانَ تَصَنَّعُ قَبْلَ ذَلِكَ فَوَقَعَ بِهَا فَلَمَّا رَأَتْ أَنَّهُ قَدْ شَبِعَ وَأَصَابَ مِنْهَا قَالَتْ يَا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لَوْ أَنَّ قَوْمًا أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ فَطَلَبُوا عَارِيَتَهُمْ أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ قَالَ لَا قَالَتْ فَاحْتَسِبْ ابْنَكَ قَالَ فَغَضِبَ وَقَالَ تَرَكْتِنِي حَتَّى تَلَطَّخْتُ ثُمَّ أَخْبَرْتِنِي بِابْنِي فَانْطَلَقَ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا كَانَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللَّهُ لَكُمَا فِي غَابِرِ لَيْلَتِكُمَا. (مسلم

அபூதல்ஹா ரழி, உம்மு ஸுலைம் ரழி ஆகிய இரு தம்பதிகளின் ஆண் குழந்தை இறந்த சம்பவம்.

அந்த சோகத்திலும் அந்த மனைவி தன் குழந்தையின் மவ்த்தை மறைத்து வெளியூர் சென்று விட்டு வந்த கணவனை உடனே சங்கடப் படுத்தக் கூடாது என்று அவரை திருப்திப் படுத்தும் வகையில் நடந்து கொள்வார்... இறுதியாக நபி ஸல் அவர்களுக்கு விஷயம் கொண்டு செல்லப் படும்போது அவர்கள்

بَارَكَ اللَّهُ لَكُمَا فِى غَابِرِ لَيْلَتِكُمَا

அல்லாஹ் உங்களுடைய இந்த உடலுறவில் பரக்கத் செய்வானாக என்று துஆச் செய்தார்கள்.

قَالَ ابنُ عُيَيْنَةَ : فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصارِ : فَرَأيْتُ تِسعَةَ أوْلادٍ كُلُّهُمْ قَدْ قَرَؤُوا القُرْآنَ ، يَعْنِي : مِنْ أوْلادِ عَبدِ الله المَولُودِ (رياض الصالحين

அந்த கர்ப்பம் மூலமாக அப்துல்லாஹ் என்ற குழந்தை பிறக்கும். அந்த அப்துல்லாஹ் பெரியவாகி அவருக்கு திருமணம் நடந்து அவருக்கு பத்து ஆண் மக்கள் பிறந்தார்கள். அந்த பத்து பேரும் ஹாஃபிழ்களாக இருந்தார்கள்

படிப்பினை-அந்தக்குடும்பத்தில் பத்து பேரும் ஹாஃபிழ்கள் என்பது நபி ஸல் அவர்களுடைய துஆவின் பலனாகும்

உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

இமாம் நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள்

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير) عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (بخاري)باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِى مِعًى وَاحِدٍ- الْأَشْرِبَةِ

இப்னு உமர் ரழி அவர்கள் விருந்தாளி இல்லாமல் உணவு உண்ண மாட்டார்கள். ஒரு தடவை ஒரு விருந்தாளியை நான் அழைத்து வந்தேன். அப்போது இப்னு உமர் ரழி அவர்கள் இனிமேல் இவரை அழைத்து வராதே என மேற்படி ஹதீஸை சுட்டிக் காட்டினார்கள்.

நபி ஸல் அவர்களின் விரல்களில் சுரந்த நீரை நபித்தோழர்கள் அருந்திய சம்பவத்தை கூறும்போது நீரை அருந்துவது என்று கூறாமல் பரக்கத்தை அருந்துவது என்ற தலைப்பில் புஹாரீ இமாம் கொண்டு வந்துள்ளார்கள்

عَنْ جَابِرِ قَالَ قَدْ رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَضَرَتْ الْعَصْرُ وَلَيْسَ مَعَنَا مَاءٌ غَيْرَ فَضْلَةٍ فَجُعِلَ فِي إِنَاءٍ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ فَأَدْخَلَ يَدَهُ فِيهِ وَفَرَّجَ أَصَابِعَهُ ثُمَّ قَالَ حَيَّ عَلَى أَهْلِ الْوُضُوءِ الْبَرَكَةُ مِنْ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَتَفَجَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ وَشَرِبُوا فَجَعَلْتُ لَا آلُوا مَا جَعَلْتُ فِي بَطْنِي مِنْهُ فَعَلِمْتُ أَنَّهُ بَرَكَةٌ قُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ (بخاري)بَاب شُرْبِ الْبَرَكَةِ وَالْمَاءِ الْمُبَارَكِ

ஜாபிர் ரழி அவர்கள் கூறினார்கள் நபி ஸல் அவர்களுடன் நான் இருந்தேன். எங்களுடன் சிறிதளவு மிச்சத் தண்ணீர் தவிர வேறு எதுவும் இல்லை. அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டது. நபி ஸல் அவர்களிடம் அந்தப் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் தங்களது முபாரக்கான கரத்தை நுழைத்தார்கள் விரல்களை விரித்து வைத்தார்கள். உளூச் செய்வதற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். அப்போது அவர்களின் கை விரல்களில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுத்த தை நான் கண்டேன். அதிலிருந்து மக்கள் அனைவரும் உளூச் செய்தார்கள். தாகம் தீர்ந்தார்கள். நானும் என் வயிற்றுக்குள் செலுத்த வேண்டியதை குறைவின்றி செலுத்தினேன். பருகினேன். அதை நான் பரக்கத் என்று விளங்கினேன். என ஜாபிர் ரழி அவர்கள் கூறி முடிந்த போது நீங்கள் எத்தனை பேர் அந்த சமயத்தில் இருந்தீர்கள் என்று கேட்கப் பட்ட போது 1400 பேர் என்று கூறினார்கள்.

தட்டை வழித்துச் சாப்பிடுவதிலும், கைகளை சூப்பி சாப்பிடுவதிலும் பரக்கத்

عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ (مسلم)وعنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ لِيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ (مسلم) -كتاب الاشربة

சேர்ந்து சாப்பிடுவதிலும் பரக்கத்

عن وَحْشِي بْن حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ (ابوداود) بَاب فِي الِاجْتِمَاعِ عَلَى الطَّعَامِ- كِتَاب الْأَطْعِمَةِ

நபி ஸல் அவர்களிடம் சில தோழர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா என்று கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறியவுடன் இனிமேல் நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள் பிஸ்மி சொல்லி உண்ணுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான் என்று கூறினார்கள்.

பெற்றோரை மதிப்பதாலும், உறவினர்களை அனுசரிப்பதாலும் பரக்கத் பெருகும் என்பதன் விளக்கம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ (بخاري) بَاب مَنْ أَحَبَّ الْبَسْطَ فِي الرِّزْقِ-كتاب البيوع قَالَ الْعُلَمَاءُ : مَعْنَى الْبَسْطِ فِي الرِّزْق الْبَرَكَة فِيهِ ، وَفِي الْعُمُر حُصُولُ الْقُوَّةِ فِي الْجَسَدِ ، لِأَنَّ صِلَةَ أَقَارِبِهِ صَدَقَةٌ وَالصَّدَقَةُ تُرَبِّي الْمَالَ وَتَزِيدُ فِيهِ فَيَنْمُو بِهَا وَيَزْكُو (فتح الباري)

யாருக்கு தனது ஆயுளிலும் ரிஜ்கிலும் பரக்கத் செய்யப் படுவதும் சந்தோஷத்தை ஏற்படுதுத்துமோ அவர் உறவினர்களுடன் இணைந்து வாழட்டும்.ஆயுளில் பரக்கத் என்பதன் பொருள் உடல் ஆரோக்கியம் ஏற்படுவதாகும்.

நூறு சதவீதம் நல்லவர்கள் பூமியில் பெருகும்போது பரக்கத் பெருகும்

ففي تفسير ابن كثير في قوله تعالى{ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ}أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لَحَدٌّ يُقام في الأرض أحبُّ إلى أهلها من أن يمطروا أربعين صباحاً والسبب في هذا أن الحدود إذا أقيمت اِنْكَفَّ الناس أو أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية وهو تركها فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, (قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس ويستظلون بقحفها ويكفي لبن اللقحة الجماعة من الناس وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب.(تفسير ابن كثير)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான் என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது அந்த கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின் அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் பெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்து விடும்.

நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வது பற்றி..

பொருள்-வாகனத்தை கயிற்றால் கட்டி வைக்கும் நேரத்திற்குள் தாவூத் அலை ஜபூரை ஓதி முடிப்பார்கள். அதாவது பொறுமையாகவே ஓதுவார்கள். ஆனால் குறுகிய நேரத்தில் முடிப்பார்கள். நபிகளாரின் மிஃராஜ் பயணம் போல்..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ يَعْنِي الْقُرْآنَ اي الزبور (بخاري) باب قَوْلِهِ ( وَآتَيْنَا دَاوُدَ زَبُورًا ) كتاب التفسيبر- وَفِي الْحَدِيث أَنَّ الْبَرَكَة قَدْ تَقَع فِي الزَّمَن الْيَسِير حَتَّى يَقَع فِيهِ الْعَمَل الْكَثِير . قَالَ النَّوَوِيّ : أَكْثَر مَا بَلَغَنَا مِنْ ذَلِكَ مِنْ كَانَ يَقْرَأ أَرْبَع خَتَمَات بِاللَّيْلِ وَأَرْبَعًا بِالنَّهَارِ ، وَقَدْ بَالَغَ بَعْض الصُّوفِيَّة فِي ذَلِكَ فَادَّعَى شَيْئًا مُفْرِطًا وَالْعِلْم عِنْد اللَّه (فتح الباري) وفيه أن الله تعالى يطوي الزمان لمن شاء من عباده كما يطوي المكان(عمدة القاري)

மேற்படி ஹதீஸின் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமாக வேலைகளை முடிப்பதும் பரக்கத் என்று தெரிகிறது. இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறும்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி ஒரே இரவில் நான்கு தடவை குர்ஆனை முடித்த தாகவும் ஒரே பகலில் நான்கு தடவை குர்ஆனை முடித்த தாகவும் கேள்விப்பட்டுள்ளோம். சில சூஃபிய்யாக்களைப் பற்றி இதை விட அதிகமாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்தையும் அல்லாஹ் அறிவான். எனினும் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நேரத்தை சுருக்கித் தருவான் என்பது உண்மை.

சமுதாயத்தில் ஒற்றுமை சிதைந்தால் பரக்கத் குறையும்

اِرْتَفَعَتْ الْبَرَكَة عِنْد وُقُوع التَّنَازُع وَالتَّشَاجُر . عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي) بَاب مَنَاقِبِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ- كِتَاب الْمَنَاقِبِ

அபூஹுரைரா ரழி கூறினார்கள் (நான் ஒரு பிரயாணத்தில்) நபி ஸல் அவர்களிடம் சில பேரீத்தம்பழங்களைக் கொண்டு வந்தேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இவற்றில் பரக்கத்துக்காக துஆச் செய்யுங்கள் என்றேன். அவற்றை நபி ஸல் அவர்கள் ஒன்றாக சேர்த்து வைத்து அவற்றில் பரக்கத்துக்காக துஆச் செய்தார்கள். மேலும் சொன்னார்கள். இவற்றை எடுத்துக் கொண்டு உன்னுடைய சுருக்குப் பையில் வைத்துக் கொள். எப்போதெல்லாம் அதை உண்ண வேண்டும் என்று நீர் விரும்புவீரோ அப்போதெல்லாம் அதில் கையை விட்டு எடுத்துக் கொள். எக்காரணத்தைக் கொண்டும் அதைக் கவிழ்த்துக் கொட்டுவது கூடாது என்றார்கள். நானும் அதை என்னுடன் சுமந்து கொண்டே இருந்தேன். நாங்கள் அதிலிருந்து உண்ணுவோம். பசியாறுவோம். அது என்னுடைய இடுப்பை விட்டும் நீங்காமல் இருந்தது. ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்கள் (விஷயத்தில் முஸ்லிம்களிடையே குழப்பம் ஏற்பட்டு அவர்கள் முஸ்லிம்களாலேயே) கொல்லப்பட்டார்களோ அதே நாளில் என்னுடைய பையும் காணாமல் போய் விட்டது. படிப்பினை- ஒற்றுமையின்மை என்பது தனி மனிதனையும் பாதிக்கும். ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனின் வியத்திலும் பரகத்தை நீக்கும். சமுதாயத்திலும் பரக்கத்தை நீக்கும்

காலங்காலமாக பாதுகாக்க வேண்டிய பரக்கத்

நம்மை விட்டும் சென்றதற்கு ஒற்றுமையின்மை தான் காரணம்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد)

நபி ஸல் அவர்கள் ஆரம்ப காலத்தில் தங்க மோதிரம் அணிந்தார்கள். அதன் குமிழ் அவர்களின் உள்ளங்கையை ஒட்டிய பகுதியில் இருந்தது. அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. (அது அரசாங்க முத்திரைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தங்கமாக இருந்தால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பதாலும் அனுமதிக்கப்பட்டிருந்தது) காலப்போக்கில் நபி ஸல் அணிவதைப் பார்த்து மக்களும் தங்க மோதிரம் அணிய ஆரம்பித்த போது நபி ஸல் அவர்கள் அதை தூக்கி எறிந்து இனிமலே இதை நான் அணிய மாட்டேன் என்றார்கள். அதன் பிறகு வெள்ளி மோதிரம் அணிந்து கொண்டார்கள். அதிலும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பின்பு அதை அபூபக்கர் ரழி அவர்கள் அணிந்தார்கள்.

அவர்களுக்குப் பின்பு அதை உமர் ரழி அவர்கள் அணிந்தார்கள். அவர்களுக்குப் பின்பு அதை உஸ்மான் ரழி அவர்கள் அணிந்தார்கள். அப்போது (அவர்களுக்கு எதிராக சில முஸ்லிம்கள் புரட்சி செய்வதை எண்ணி கவலையுடன்) அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பில் அமர்ந்து ஏதோ ஒரு சிந்தனையில் மோதிரத்தைக் கழற்றுவதும் போடுவதுமாக இருந்த போது கை தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

இன்னும் சில அறிவிப்புகளில் ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்கள் அதை தேடுவதற்காக கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. இதற்கு இமாம் அபூதாவூத் ரஹ் அவர்கள் விளக்கம் கூறும்போது ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக சில முஸ்லிம்கள் புரட்சி செய்து முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லாமல் ஆகி விட்டதால் காலங்காலமாக பாதுகாக்க வேண்டிய பரக்கத் நம்மை விட்டும் காணாமல் ஆகி விட்டது என்று எழுதியுள்ளார்கள்.

ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆ செய்ததன் தாத்பரியம்

عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ... (بزار,كنز العمال) (مشكاة, باب الجمعة) عن أنس رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس) (اللهم بارك لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال الصالحة فيهما(مرعاة شرح مشكاة) وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير)

ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாத த்திலும் உன்னை அதிகம் வணங்குவதற்கு அருள் புரிவாயாக என்பது இதன் விளக்கம். மேலும் ரமழான் வரை எங்களை வாழச் செய்து அந்த ரமழானிலும் இன்னும அதிகம் வணங்குவதற்கு அருள் புரிவாயாக என்பது இதன் விளக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யூதர்களின் அழிவு

 20-10-2023 بسم الله الرحمن الرحيم   யூதர்களின் அழிவு காலம் எப்போது?   https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOT...