جمادي الثانية –24 بسم الله الرحمن الرحيم
தடுக்கப்பட்ட கொண்டாட்டங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு இஸ்லாமிய நாடுகளும் இன்றைக்கு அடிமையாகி விட்டன. கடைசி காலத்தில் அரபுலகில் என்னென்ன அனாச்சாரங்கள் உருவாகும் என நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அவை இன்று இஸ்லாமிய நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. கட்டுக் கதைகளான மாகபாரதம், இராமாயணம் ஆகியவற்றை அரபியில் மொழி பெயர்த்து அதை இந்தியப் பிரதமருக்கு அன்பளிப்பாக தரும் அளவுக்கு அது உச்ச கட்டம் அடைந்துள்ளது. மேலும் சமீபத்தில் மவ்ஸமுர் ரியாத் என்ற பெயரில் சவூதியின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சி உண்மையான முஃமின்களின் உள்ளத்தில் மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மின் விளக்குகளால் கஃபா போன்று அமைக்கப்பட்ட அதைச் சுற்றி அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனமாடும் அசிங்கம் புனித மண்ணில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய உலகின் முன்னோடியாக இருக்க வேண்டிய சவூதி இன்று தலைகீழாக மாறி ஹராமான கொண்டாட்டங்களின் புகலிடமாக மாறியுள்ளது. அதைப் பற்றிப் பேசும் முன்பு ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் தீமைகளைப் பற்றிக் காண்போம்.
ஆங்கிலப் புத்தாண்டை ஏன் நாம் கொண்டாடுவது கூடாது.
ஆங்கிலப் புத்தாண்டை கிறிஸ்தவர்களும் ஏனைய சமூக மக்களும் கொண்டாடுகின்றனர் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் முஸ்லிம்களும் அதைக் கொண்டாடுவது தான் வேதனையான விஷயம்.
புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும். ஒருவரின் 80 வருட வாழ்க்கையில் 20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. இது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில் இதுபோன்ற புத்தாண்டு தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணி, நல்ல நடைமுறைகளைத் துவங்குவதற்கான கணக்காக இந்த நாட்களை ஆக்கிக் கொள்வதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை.
வாழ்க்கை என்பது மவ்த்தை நோக்கிய ஒரு பயணம்
ஷைத்தான், நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.
ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில் ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது
عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ، فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ، وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر بإذن الله فأنت الراكب وأنا الراجل.( تفسير الرازي
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற ஒருவர் “ இப்றாஹீமே எங்கு செல்கிறீர்? எனக்கேட்க, நான் கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் “ உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா? என்றார். அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் “உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன. அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால் நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின் படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான் வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில் செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார்.
மற்றவர்களின் கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும்.
அல்லது வெறுக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.
عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ " إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 ثم قال: كلا، والله لتأمرن بالمعروف، ولتنهون عن المنكر، ولتأخذن على يد الظالم، ولتأطرنه على الحق أطراً، ولتقصرن على الحق قصراً، أو ليضربن الله بقلوب بعضكم على بعضٍ، ثم لَيَلْعَنَنَّكم كما لعنهم رواه أبو داود،
பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.
عن جابر رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ "(شعب الايمان
முற்காலத்தில் அல்லாஹ் பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.
புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவில் மூழ்கும் முஸ்லிம் இளைஞர்கள்
புத்தாண்டு என்றாலே மதுவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு வருடத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகம் நடைபெறும் நாள் ஜனவரி 1 ம் தேதி ஆகும். மேலும் இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.
மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة
மதுவைத் தடை செய்த பின் அதன் ஞாபகமும் வரக்கூடாது என மது ஊற்றப் பயன்படும் பாத்திரத்தை நபி ஸல் தடை செய்தார்கள்
عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا (مسلم)
அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது
عن أبي العالية الرياحي قال : قيل لأبي بكر الصديق في مجمع من أصحاب رسول الله صلى الله عليه و سلم : هل شربت الخمر في الجاهلية ؟ فقال : أعوذ بالله فقيل : و لم ؟ قال : كنت أصون عرضي و أحفظ مروءتي فإن من شرب الخمر كان مضيعا في عرضه و مروءته قال : فبلغ ذلك رسول الله صلى الله عليه و سلم فقال : صدق أبو بكر صدق أبو بكر مرتين ( تاريخ الخلفاء
அபூபக்கர் ரழி கூறினார்கள்- நான் என் மனித த்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதுவை அருந்துபவர் மனிதத் தன்மையை இழந்து விடுகிறான் என்றார்கள். அபூபக்கர் ரழி இவ்வாறு கூறினார்கள் என்ற விஷயத்தை நபி ஸல் அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்ட போது அபூபக்கர் ரழி கூறியது உண்மை தான் என்று இரண்டு தடவை கூறினார்கள்.
ஹழ்ரத் அபூபக்கர் ரழி கூறியதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். வக்கிர புத்தியும் வன்முறை குணமும் குடிகாரனுக்கு ஏற்பட்டு விடுகிறது. மஹ்ரமான பெண்களிடம் கூட தவறாக நடந்து கொள்வார்கள்.
ஒருமுறை மட்டும் ருசித்துப் பார்க்கலாம் என நினைப்பவர் காலம் முழுவதும் அதற்கு அடிமையாகி விடுவார்
كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك والثاني : بالحسد ، حسدت أصحابي والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)
ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார். இதைக் கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம் ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன். 3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது
மதுவுக்கு அடிமையானவன் சிலை வணக்கம் செய்தவனைப் போன்று அல்லாஹ்வை சந்திப்பான்
عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ (ابن ماجة- عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من لقي الله مدمن خمر, لقيه كعابد وثن" (صحيح ابن حبان).
மது அருந்திய நிலையில் இருப்பவனிடம் ஈமான் இருக்காது. அதே நிலையில் இறந்து விட்டால்...
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (بخاري
மதுவில் சில நிவாரணங்கள் இருக்கிறதே என்று பலமுறை கேள்வி எழுப்பியவர்களிடம் நபி ஸல் கூறிய ஒரே பதில் அது நோயை உண்டாக்குமே தவிர நோயை குணப்படுத்தாது என்பதாகும். இன்றும் மது அருந்துவர்கள் பல காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவார்கள்.
عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا وَلَكِنَّهَا دَاءٌ (ترمذي
போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
‘அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ (புகாரி)
அரபு நாடுகளும் இன்று பல்வேறு விதமான அனாச்சாரங்களிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கியுள்ளன.
அரபு நாடுகளிலேயே அவ்வாறு நடைபெறுகிறது என்று கூறி யாரும் அதை நியாயப் படுத்த முடியாது. காரணம் நமக்கு நபி ஸல் அவர்கள் தான் முன்மாதிரியே தவிர அரபு நாடுகள் நமக்கு முன்மாதிரி அல்ல.
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ (بخاري)
யூத, கிறிஸ்தவ (மேற்கத்தியர்களின்) கலாச்சாரத்தை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் புகுந்தாலும் நீங்களும் புகுந்து விடூவீர்கள் – புகாரீ
قال النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ..(بخاري
என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய விபச்சாரத்தையும், பட்டாடையையும், மதுவையும், இசைக்கருவிகளையும் ஹலாலாக்கி விடுவார்கள் - நூல் புகாரீ
விளக்கம் – மேற்படி ஹதீஸ்களின் படி பல முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மீறப்படுகின்றன. இன்னும் சொல்வதானால் இந்திய முஸ்லிம்களிடம் இருக்கும் பேணுதல் கூட சில முஸ்லிம் நாடுகளில் உள்ள பலரிடம் இல்லை என்பதே உண்மையாகும். குறிப்பாக சவூதியில் தற்போதைய மன்னர் சல்மான் ஏற்படுத்திய ‘விஷன் 2030’ என்ற மறுசீரமைப்பு திட்டத்தின் படி பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக சமீபத்தில் மவ்ஸமுர் ரியாத் என்ற பெயரில் சவூதியின் தலைநகர் ரியாத்தில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி உண்மையான முஃமின்களின் உள்ளத்தில் மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி விஷயங்களை எதிர்த்த பல வயதான உலமாக்கள் கூட சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தூக்கு தண்டனை கிடைக்கலாம் ன்றும் கூறப்படுகிறது. இப்படியாக மெல்ல மெல்ல ஷரீஅத் சட்டங்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன . இதுபோன்று வேறு சில அரபு நாடுகளிலும் மெல்ல மெல்ல ஷிர்க் நுழைந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அபுதாபியில் ஒரு கோவிலை நமது பிரதமர் சென்று திறந்து வைத்தது பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபலமான விஷயம். மாகபாரதம், இராமாயணம் ஆகியவற்றை அரபியில் மொழி பெயர்த்து அதை இந்தியப் பிரதமருக்கு அன்பளிப்பாக தந்தது சமீபத்தில் நடைபெற்ற விஷயம்.
‘நடுநிலை இஸ்லாத்தை அறிமுகம் செய்யப்போகிறோம்’‘ முழு உலகுடனும் உறவாடும் திறந்த சமூகமாக சவூதி அரேபியாவை மாற்றப்போகிறோம்’ என்பதெல்லாம் தற்போது சவூதி அரசாங்கம் அறிவிக்கும் வாசகங்களாகும். இதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான இமாம்கள் மஸ்ஜித்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களின் கருத்துக்களை ஏற்பவர்கள் மட்டுமே பணியில் தக்க வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் அங்குள்ள ஒரு இமாம் பெண்கள் புர்கா அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறியதே இதற்கு சான்றாகும். முற்கால மாமேதைகள் ஆய்வு செய்தஹதீஸ்களை மறு ஆய்வு செய்யும் நோக்கில் ‘மன்னர் ஸல்மான் ஹதீஸ் கலை ஆய்வகம் திறக்கப்படும்’ என்று சவூதி அறிவித்துள்ளது. ஹதீஸ்களுக்கு நம் முன்னோர்கள் சொன்ன விளக்கங்கள் சரியில்லை என்பதும் நாங்கள் புதிதாக ஆய்வு செய்வோம் என்பதும் இதன் கருத்தாகும்.
அரபுலகிலும் சிலை வணக்கம் தலை தூக்கும் என அன்றே நபி ஸல் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்
عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ (بخاري
'தவ்ஸ்' இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7116).
விளக்கம்-அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே.இக்குலத்தினர் கடைசி காலத்தில் இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட 'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).
அரபுலகிலும் சிலை வணக்கம் தலை தூக்கும் என்பதைப் பற்றிய மற்றொரு முன்னறிவிப்பு
عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ زُوِيَتْ لِي الْأَرْضُ حَتَّى رَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَصْفَرَ أَوْ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ يَعْنِي الذَّهَبَ وَالْفِضَّةَ وَقِيلَ لِي إِنَّ مُلْكَكَ إِلَى حَيْثُ زُوِيَ لَكَ وَإِنِّي سَأَلْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ ثَلَاثًا أَنْ لَا يُسَلِّطَ عَلَى أُمَّتِي جُوعًا فَيُهْلِكَهُمْ بِهِ عَامَّةً وَأَنْ لَا يَلْبِسَهُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَهُمْ بَأْسَ بَعْضٍ وَإِنَّهُ قِيلَ لِي إِذَا قَضَيْتُ قَضَاءً فَلَا مَرَدَّ لَهُ وَإِنِّي لَنْ أُسَلِّطَ عَلَى أُمَّتِكَ جُوعًا فَيُهْلِكَهُمْ فِيهِ وَلَنْ أَجْمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنَ أَقْطَارِهَا حَتَّى يُفْنِيَ بَعْضُهُمْ بَعْضًا وَيَقْتُلَ بَعْضُهُمْ بَعْضًا وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي فَلَنْ يُرْفَعَ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّ مِمَّا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي أَئِمَّةً مُضِلِّينَ وَسَتَعْبُدُ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَسَتَلْحَقُ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ (ابن ماجة)
மேற்படி கால கட்டத்தில் புனித கஃபாவையே இடித்து தகர்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும்
عَنْ أَبِى أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ اتْرُكُوا الْحَبَشَةَ مَا تَرَكُوكُمْ فَإِنَّهُ لاَ يَسْتَخْرِجُ كَنْزَ الْكَعْبَةِ إِلاَّ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ (بخاري)عن ابْن عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ أَسْوَدَ أَفْحَجَ يَنْقُضُهَا حَجَرًا حَجَرًا يَعْنِي الْكَعْبَةَ (مسند أحمد)الأفحج : الذى إذا مشى باعد بين رجليه
கஃபாவின் ஒவ்வொரு செங்கலையும் அவர்கள் பெயர்த்து எடுப்பதை நான் இப்போதே கண்ணால் பார்ப்பது போன்றிருக்கிறது என கவலையுடன் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மோசமாக காலத்தில் அல்லாஹ் நல்லவர்களின் ரூஹை மிக மிக இலகுவாக அல்லாஹ் கைப்பற்றுவான். அதன் பின் கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது தான் உலகம் அழியும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ (مسلم)عَنْ ابْنِ عُمَرَرضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ وَهُوَ يَأْرِزُ بَيْنَ الْمَسْجِدَيْنِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ فِي جُحْرِهَا (مسلم) بَاب بَيَانِ أَنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا-كِتَاب الْإِيمَانِ قال النووي : قال القاضي عياض : وظاهر الحديث العموم وأن الإسلام بدأ في آحاد من الناس وقلة ثم انتشر وظهر ثم سيلحقه النقص والإخلال حتى لا يبقى إلا في آحاد وقله أيضا كما بدأ
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இஸ்லாம் என்பது குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களில் இருந்தே துவங்கியது. மீண்டும் அவ்வாறே திரும்பும். நூல் முஸ்லிம்
மேற்படி ஹதீஸின் படி அரபகத்து மண்ணில் மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு துவங்கிய இந்த இஸ்லாம் இன்று 170 கோடியை தொட்டுள்ளது. இனியும் இன்ஷா அல்லாஹ் அதிகமாகும். பிரபலமான ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தற்போது உலகின் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக இருக்கிற முஸ்லிம்கள் வருகிற 2050 ம் ஆண்டில் உலகின் முதன்மை சமூகமாக இருக்கும். அந்த அளவுக்கு மிக வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருப்பினும் இதற்குப் பின் கடைசியில் ஒரு காலம் வரும் அது ஈஸா அலை அவர்களின் வருகை, மற்றும் அவர்களின் மரணத்திற்குப் பின்னுள்ள காலமாக இருக்கலாம். அப்போது இஸ்லாம் மீண்டும் குறைவை நோக்கி செல்லும் இறுதியில் அல்லாஹ் என்று கூற ஒருவர் கூட இல்லாத நிலையில் கியாமத் ஏற்படும்.