சனி, 29 மார்ச், 2025

ஈத் பயான்

 ஈத் பயான்




சங்கையான இந்த ஈதுப் பெருநாள் தினத்தில் இந்த ரமழானில் கற்றுக் கொண்டதை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக இஸ்திகாமத் பற்றியும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளைப் பற்றியும் மேலும் பிரிந்த உறவுகளை வலியச் சென்று சேர்த்துக் கொள்ள வேண்டிய நாளாகவும் இது இருப்பதால் உறவினர்களுடன் இணைந்து வாழ்வது பற்றியும் இந்த தலைப்பில் காண்போம்.    

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)المؤمن

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة -   عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري 

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்வது தான் அல்லாஹ்வுக்குப் பிடிக்கும்

தொடர்படியான அமல் நல்ல மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந்நிலையில் அவரை மவ்த்தாக்குவான்

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي -   كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

மற்ற மாதங்களிலும் அமல்களை தொடர்ந்து செய்வதற்கான பயிற்சியாகத் தான் ரமழானின் அமல்கள் கடமையாக்கப்பட்டுள்ளது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة) ذَكَرَ كَعْب رضي الله عنه أَنَّهُ مَنْ صَامَ رَمَضَان وَهُوَ يُحَدِّث نَفْسه إِذَا أَفْطَرَ رَمَضَان أَنْ لَا يَعْصِي اللَّه دَخَلَ الْجَنَّة بِغَيْرِ مَسْأَلَة وَلَا حِسَاب (تفسير ابن كثير)

ரமழான் முடிந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டேன் என்ற நல்ல மன உறுதியுடன் யார் ரமழானில் நோன்பு வைப்பாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்.

ஷைத்தான்கள் சிறை பிடிக்கப்படும் மாதமான ரமழானில் அமல்கள் செய்வது வாகன நெரிசல் இல்லாத நேரங்களில் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது போல... இவ்வாறு வண்டி ஓட்டுபவனை டிரைவர் என்று கூற முடியாது.  வாகன நெரிசல் உள்ள நேரங்களிலும் வண்டி ஓட்டுபவன் தான் உண்மையான டிரைவர். அதுபோல் ஷைத்தான்கள் அவிழ்த்து விடப்படும் மற்ற மாதங்களிலும் அமல்கள் செய்பவர் தான் உண்மையான வணக்க சாலி ஆவார்.

முனாஃபிக்கின் அடையாளம் எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

 நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும் மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது என்றார்கள்.                                        

விளக்கம்- அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.  

சீசன் தொழுகையாளிகளிடம் சில கேள்விகள்

ஒரு முதலாளியாக நாம் இருந்து கற்பனை செய்து பார்க்கிறோம் - நம்மிடம் ஒரு தொழிலாளி வேலை செய்கிறான் மாதத்தில் எல்லா வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று நாம் கட்டளையிட்டிருக்கும் நிலையில்,  ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அவன் வரா விட்டால் பொறுத்துக் கொள்வோம். ஆனால் அவன் வருவதே மாதத்தில் மூன்று நாட்கள் தான். அல்லது வாரத்தில் ஒரு நாள் தான் என்றால் நாம் அவனை என்ன செய்வோம். அவனை மிரட்டுவோம்   வாரத்தில் ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வதற்கு நீ என்ன பெரிய அதிகாரியா?  ஒழுங்காக வேலைக்கு வரா விட்டால் நீ நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்வோம் அல்லவா?  சம்பளம் மட்டுமே கொடுக்கும் நமக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது நம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கட்டளை தினமும் ஐந்து வேளை என்றிருக்க, POINT  to POINT  மாதிரி ஜும்ஆ to ஜும்ஆ என்ற நிலையை அல்லாஹ் பொறுத்துக் கொள்வானா? 

ரமழான் முடிந்தவுடன் ஐவேளை தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்

உதாரணம் 1- ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப்பற்றி என்ன நினைப்போம்

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل

قَالَ عَبْد اللَّه بْن كَثِير السُّدِّيّ : هَذِهِ اِمْرَأَة خَرْقَاء كَانَتْ بِمَكَّة كُلَّمَا غَزَلَتْ شَيْئًا نَقَضَتْهُ بَعْد انْبِرَامِهِ  (تفسير ابن كثير

மக்காவில் முட்டாள் தனமான இப்படியொரு பெண் இருந்தாள். அழகாக நூல் நூற்று அதை ஒரு கோர்வையாக கஷ்டப்பட்டு ஆக்கிய பின் கடைசியில் அணைத்தையும் கலைத்துப் போட்டு விடுவாள். அதுபோல ரமழானில கஷ்டப்படு அமல் செய்து இறுதியில் அனைத்தையும் வீணாக்கி விடுகிறோம்

உதாரணம் 2  ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

உதாரணம்- 3-   ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம்- 4-  ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி. அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும்  ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.  

தொழுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.

பிரிந்த சொந்தங்களை வலியச் சென்று சேர்த்துக் கொள்ள வேண்டிய நாள் இந்த ஈதுப் பெருநாள்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -

கருத்து- மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் பேசாமல் இருப்பது கூடாது. குறைந்த பட்சம் ஸலாம் கூறுவதாலும் அந்தப் பாவம் நீங்கும். இருவரில் யார் முதலில் சலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவராவார்.

விளக்கம்- சொந்த விஷயத்திற்காக பகையுடன் இருப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது. தீனுடைய விஷயத்திற்காக சில நாட்கள் ஒருவரிடமும் பேசாமல் இருப்பது தவறல்ல. நபி ஸல் அவர்கள் வேண்டுமென்றே போருக்கு வராமல் பின் தங்கிய சிலரிடம் பேசாமல் இருந்தார்கள். 

وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

தன் சகோதரரிடம் ஒரு வருடம் பேசாமல் இருப்பது  அவரைக் கொன்று இரத்தத்தை ஓட்டுவதற்குச் சமம்.

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) أي المجازي غيره بمثل فعله

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப் போன உறவுகளையும் வலியச் சென்று சேர்த்துக் கொள்பவரே உண்மையில் உறவைப் பேணுபவர்.

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

 மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டால் நானும் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்து கொண்டால் நானும் அவர்களிடம் தீய முறையில் நடந்து கொள்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். மாறாக மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டாலும் நான் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்து கொண்டாலும் நான் அவர்களிடம் நல்ல முறையிலேயே நடந்து கொள்வேன் என்று கூறும் பொதுநலவாதிகளாக இருங்கள்.

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

மிஸ்தஹ் என்பவர் அபூபக்கர் ரழி அவர்களின் சிறிய தாயாரின் மகன் ஆவார். இவருக்கு மாதாமாதம் உதவித் தொகையை அபூபக்கர் ரழி அவர்கள் வழங்கி வந்தார்கள். இவர் ஆயிஷா ரழி அவர்கள் மீதான அவதூறு விஷயத்தில் இவரும் தலையிட்டு விட்டார். பின்பு தவ்பா செய்தார். அவதூறுக்காக தண்டனையும் தரப்படு விட்டது. இருந்தாலும் தன்னிடம் உதவித் தொகை பெற்று வந்த நிலையிலும் தன் மகள் மீது அவதூறு சொன்னதால் இவர் மீது  அபூபக்கர் ரழி அவர்களுக்கு ஏற்பட்ட வருத்தம் காரணமாக இவருக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி நீங்கள் ஒரு தவறு செய்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்புவீர்கள் அல்லவா.. உங்களைப் போன்றவர்கள் இவ்வாறு சத்தியம் செய்யக் கூடாது என்றவுடன் உடனே அபூபக்கர் ரழி அவர்கள் தான் சொன்னதை வாபஸ் பெற்று தொடர்ந்து உதவி செய்தார்கள்.                                  

கண் கூடாக பார்க்காமல் பிறரைப் பற்றி தவறாக எண்ணுவதும் பகைமையை உண்டாக்கும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ (الحجرات12) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا (بخاري)

عَنْ حَارِثَةَ بن النُّعْمَانِ قَالَ:قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثٌ لازِمَاتٌ لأُمَّتِي :الطِّيَرَةُ وَالْحَسَدُ وَسُوءُ الظَّنِّ فَقَالَ رَجُلٌ :مَا يُذْهِبُهُنَّ يَا رَسُولَ اللَّهِ مِمَّنْ هُوَ فِيهِ ؟ قَالَ:إِذَا حَسَدْتَ فَاسْتَغْفَرِ اللَّهَ، وَإِذَا ظَنَنْتَ فَلا تُحَقِّقْ ،وَإِذَا تَطَيَّرْتَ فَامْضِ (طبراني

ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்து பழகுவதாலும் பகைமை நீங்கி உறவு மலரும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ تَهَادَوْا تَحَابُّوا (حاكم) وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ (ترمذي) عَنْ أَنَسٍ :أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  لَوْ أُهْدِىَ إِلَىَّ كُرَاعٌ لَقَبِلْتُ وَلَو دُعِيتُ إِلَى ذِرَاعٍ لأَجَبْتُ وَكَانَ يَأْمُرُنَا بِالْهَدِيَّةِ صِلَةً بَيْنَ النَّاسِ (بيهقي)

பொதுவாக அனைவருடனும் நற்குணத்துடன் பழகுவதின் சிறப்பு

இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي

நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]

உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின்அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.

படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம். திருமணம் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிய வருகிறது

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள்.

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.                                 

அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.                                             

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).         

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள் பற்றி......

عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ(مسلم) باب اسْتِحْبَابِ صَوْمِ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ- كتاب الصيام -قال أصحابنا والأفضل أن تصام الستة متوالية عقب يوم الفطر فان فرقها أو أخرها عن أوائل شوال إلى اواخره حصلت فضيلة المتابعة لأنه يصدق أنه أتبعه ستا من شوال قال العلماء وانما كان ذلك كصيام الدهر لان الحسنة بعشر امثالها فرمضان بعشرة أشهر والستة بشهرين (شرح النووي) 

யார் ரமழான் மாதத்தின் நோன்புகளையும் வைத்து அதற்குப் பிறகு ஷவ்வால் மாத ஆறு நோன்புகளையும் நோற்பாரோ அவர் காலமெல்லாம் நோன்பு வைத்தவர் போன்றாவார்.  விளக்கம்- ஒன்றுக்கு பத்து மடங்கு என்ற அடிப்படையில் ரமழான் மாத நோன்பையும் சேர்த்து மொத்தம் 35 அல்லது 36 நோன்புகள் வைக்கும்போது ஒரு வருடத்திற்கு 360 நோன்புகள் என்ற கணக்கு வந்து விடும். ஒவ்வொரு வருடமும் அவர் இவ்வாறு செய்யும்போது அவர் காலமெல்லாம் நோன்பு வைத்தவராக ஆகுவார்.                                           

இதில் சிறப்பு என்பது ஷவ்வால் பிறை 2 ல் ஆரம்பித்து தொடர்ந்து ஆறு நோன்புகள் வைப்பதாகும். ஒருவேளை அதை ஷவ்வால் மாதத்தின் வேறு நாட்களில் வைத்தாலும் அல்லது அதே மாத த்தில் பிரித்துப் பிரித்து வைத்தாலும் கூடும். களா நோன்புகளுடன் இதை இணைக்க முடியாது. ஷாஃபிஈ மத்ஹபில் சிலர் அதை  இணைக்க அனுமதிக்கிறார்கள்.  

ரமழான் மாதத்தின் நோன்புகளைத் தொடர்ந்து ஷவ்வால் மாத ஆறு நோன்புகளையும் நோற்பவர் வருடமெல்லாம் நோன்பு வைத்தவரைப் போன்று என்று கூறுவதற்கு பதிலாக  காலமெல்லாம் நோன்பு வைத்தவர் என்று கூறியதற்குக் காரணம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இவ்வாறு  செய்பவர் தான் இந்த சிறப்புக்குத் தகுதியானவர் என்பதே உணர்த்துவதற்கே நபி ஸல் அவ்வாறு கூறினார்கள்.

ஆயத்துல் குர்ஸீ விஷயத்திலும் நபி ஸல் அவ்வாறே கூறினார்கள் எவர் தொடர்ந்து ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் இதை வழமையாக ஓதுவாரோ அவர் சுவனம் செல்வதற்கு மவ்த்தைத் தவிர வேறு தடையில்லை என்றார்கள். காரணம் தொடர்ந்து ஓதினால் இந்த சிறப்பு.

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் இதை ஓதுபவர் என்ற வாசகத்தின் மூலம் ஒவ்வொரு நேரமும் தொழ வேண்டும் என்ற கருத்தும் தானாக வந்து விடும்.

வியாழன், 27 மார்ச், 2025

ஃபித்ரா & ஈத் ஒழுக்கங்கள்

 28-03-2025

رمضان - 27 بسم الله الرحمن الرحيم  

ஃபித்ரா & ஈதுப் பெருநாள் முன் தயாரிப்புகள்


ஃபித்ராவைப்பற்றியும் ஈதுப் பெருநாளுக்கு முதல் நாள் மஃரிபில் இருந்தே நாம் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்கங்களைப் பற்றி..

ஃபித்ரா பற்றிய இறை வசனம்

{قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى} ولإبن خزيمة من طريق كثير بن عبد الله عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه و سلم سئل عن هذه الآية فقال نزلت في زكاة الفطر (فتح الباري

மேற்படி வசனம் பற்றி நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது இவ்வசனம் சதக்கத்துல் ஃபித்ரு விஷயமாக இறங்கியது என பதில் கூறியதாக ஃபத்ஹுல் பாரீ போன்ற நூல்களில் உள்ளது.                                    

  ஏழைகளுக்கு உணவாக கொடுக்கப்படுபவைகளில் பல விதம் உள்ளன. ஃபித்ரா, ஃபித்யா, கஃப்பாரா இன்னும் இது போன்ற பல வகைகள் உள்ளன. நம்முடைய மார்க்கத்தின் தனித்துவம் என்னவென்றால் ஒரு முஸ்லிம் ஏதேனும் தவறு செய்தால் அதற்கு தண்டனையாக நீ இத்தனை ரக்அத் தொழு அல்லது  இத்தனை  திக்ருகள் செய் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம் ஆனால் நம்முடைய மார்க்கம் நாம் செய்த குற்றத்திற்கான பரிகாரத்தைக் கூட  ஏழைகளின் பசியைப் போக்கும் விதமாக ஆக்கி வைத்து பசித்தவருக்கு உணவு கொடுப்பதில்தான் இறைக்கடமை விஷயத்தில் நீ செய்த தவறுகளுக்கான நிவர்த்தி உள்ளது என்றும் நீ முதலில் ஏழைகளை திருப்திப் படுத்தினால் அல்லாஹ்வை திருப்திப் படுத்தியவராக ஆக முடியும் என்பதையும் உணர்த்தியது.      

 வெடி வெடித்து வழியில் நடந்து செல்பவர்களை பயமுறுத்துவதை பண்டிகை என்றும்,  வருவோர் போவோர் அனைவர் முகத்திலும் கலர் பொடிகள் பூசுவதை பண்டிகை என்றும் பல மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இஸ்லாம் இரண்டு பெருநாட்களை நமக்கு அறிமுகப் படுத்தி அந்த இரு பெருநாட்களிலும் ஃபித்ரா, குர்பானி என்ற அடிப்படையில் தர்மம் செய்யும்படி கட்டாயப் படுத்துகிறது.         

ஃபித்யா, ஃபித்ரா, வேறுபாடு

ஃபித்யா என்பது அறவே நோன்பு வைக்க முடியாதவர்கள்  தாம் வைக்க முடியாத ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு இரு வேளை  உணவு தானியங்கள் கொடுப்பதாகும். அதனுடைய அளவும் ஃபித்ராவின் அளவும் ஒன்று தான்.  

ஃபித்ரா என்பது  ஈதுப் பெருநாள் அன்று காலையில் ஈதுத் தொழுகைக்கும் வருவதற்கு முன்பு கொடுக்கப்படும் தர்மமாகும். இது நான்கு நோக்கங்களுக்காக கொடுக்கப் படுகிறது. 

 ஃபித்ராவின் நான்கு விதமான நோக்கங்கள்

الاول :  إغناء الفقراء عن ذل السؤال في هذا اليوم العظيم   -   الثاني: إدخال الفرح والسرور عليهم في هذا اليوم الذي يفرح فيه المسلمون جميعا   - الثالث :  تطهير مال الصائم بعد أن تطهر جسده بالصوم   الرابع:  جبر ما عساه أن يكون من خلل في صومه 

قال سيدنا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث (نور الايضاح

1.மகத்தான அந்த நாளில் எந்த ஏழைகளையும் கையேந்தும் நிலையை விட்டும் பாதுகாப்பது 2.அனைவரும் சந்தோஷமாக இருக்கும் அந்த நாளில் ஏழைகளையும் மகிழ்ச்சியாக்கி வைத்தல் 3.நோன்பாளி தம் உடலை பல்வேறு நோய்களை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று ஃபித்ரா மூலம் தம் பொருளை சுத்தப் படுத்துவது 4.நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம்

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ. (ابوداود

நோன்பு வைக்காதவர்கள் ஃபித்ரா கொடுக்கலாமா ? 

ஃபித்ரா என்பது நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காதவர்கள் தர வேண்டிய அவசியமில்லை என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். அது தவறாகும்.  ஃபித்ரா வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது

ஃபித்ராவின் அளவு

நபி ஸல் அவர்களின் காலத்தில் கோதுமையாகவோ, பேரீத்தம்பழமாகவோ, பாலாடைக்கட்டியாகவோ, உலர் திராட்சையாகவோ கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கான ஃபித்ரா என்பது தோல் நீக்காத கோதுமையாக இருந்தால் ஒரு ஸாஃ என்றும் தோல் நீக்கிய கோதுமையாக இருந்தால் அரை ஸாஃ என்றும் சட்ட நூல்களில் கூறப்படும்.                           

அந்தக் காலத்தில் உணவு தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தும் ஸாஉ என்ற அளக்கும் பாத்திரத்தை நம்முடைய காலத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு வருவதால் தான் ஃபித்ராவின் அளவிலும் கருத்து வேறுபாடு வருகிறது. அதன்படி  ஹனஃபி மத்ஹபின் படி ஒரு கிலோ 600 கிராம் என்றும் ஷாஃபிஈ மத்ஹபின் அடிப்படையில் 2 கிலோ 400 கிராம் என்றும் கூறப்படும்.    பெருநாள் தொழுகைக்கு வரும் முன் கொடுத்து விட வேண்டும்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ (بخاري -  عن أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيب(بخاري) بَاب صَدَقَةِ الْفِطْرِ صَاعٌ مِنْ طَعَامٍ-كتاب الزكاة

ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக்  கொள்ளலாம். என்பது அவர்களின் கருத்து

الدَّقِيقُ أَوْلَى مِنْ الْبُرِّ وَالدَّرَاهِمُ أَوْلَى مِنْ الدَّقِيقِ فِيمَا يُرْوَى عَنْ أَبِي يُوسُفَ وَهُوَ اخْتِيَارُ الْفَقِيهِ أَبِي جَعْفَرٍ لِأَنَّهَا أَدْفَعُ لِلْحَاجَةِ وَأَعْجَلُ بِه(هداية)الدَّقِيقُசலித்தகோதுமை

ஜகாத், ஃபித்ரா வேறுபாடு

ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர்கள் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டுத் தர வேண்டும்.                                      

هي صدقة يعطيها المسلم في يوم عيد الفطر لمن تصرف إليهم الزكاة - أمرنا بها سيدنا النبي صلى الله عليه وسلم في السنة الثانية من الهجرة

ஜகாத்தை எந்த ஏழைகளுக்குத் தர முடியுமோ அத்தகையவர்களுக்கு இந்த ஃபித்ராவைத் தரலாம். எனவே இந்த ஃபித்ராவை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக்கூடாது.  ஹிஜ்ரி இரண்டாம் வருடம் இது கடமையானது

ஈதுப் பெருநாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு கொடுக்கலாமா ?

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ.. فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنْ الصَّغِيرِ وَالْكَبِيرِ حَتَّى إِنْ كَانَ لِيُعْطِي عَنْ بَنِيَّ  وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ .(بخاري) باب صَدَقَةِ الْفِطْرِ عَلَى الْحُرِّ وَالْمَمْلُوك-كتاب الزكاة

இப்னு உமர் ரழி அவர்கள் தன்னுடைய பெரிய பிள்ளைகளுக்கும் சிறிய பிள்ளைகளுக்கும் சேர்த்தே ஃபித்ரா கொடுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் ஈத் பெருநாளுக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பாக கொடுப்பவர்களாக இருந்தார்கள்

وقال : هذا حسن ، وأنا أستحبه - يعني تعجيلها قبل يوم الفطر – (فتح الباري 

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பே கொடுப்பதை விரும்புபவர்களாக ஆயிருந்தார்கள்

ويصح أداؤها مقدما عن يوم الفطر أو مؤخرا عنه إلا أنه يستحب أداؤها قبل الخروج الى المصلى (نور الايضاح

ஃபித்ரா கடமையாகுவது பெருநாள் அன்று அதிகாலையின் தான் என்றாலும் ஃபித்ராவை ஈதுப் பெருநாளுக்கு முன்பு கொடுத்தாலும் கூடும். நிர்பந்தம் காரணமாக சற்று பிற்படுத்துவதும் கூடும் எனினும் ஈதுத் தொழுகைக்கு வரும் முன்பு தருவது முஸ்தஹப்பாகும்- நூருல் ஈழாஹ்

 ஃபித்ராவை முன்பே கொடுக்கலாம் என்பதற்குத் தோதுவான சம்பவம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لَا أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ وَهَذَا آخِرُ ثَلَاثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لَا تَعُودُ ثُمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ (بخاري)2311

شرح: (وكلني رسول الله - صلى الله عليه وسلم - بحفظ زكاة رمضان) أي في حفظ زكاة الفطر من رمضان (مرعاة المفاتيح شرح مشكاة المصابيح)

சுருக்கம்- ஃபித்ரா தானியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அபூஹுரைரா ரழி அவர்கள் ஈடுபட்டிருந்த போது தான் மேற்படி சம்பவம் நடந்தது. ஷைத்தான் மூன்று தடவை அதைத் திருட முற்பட்டான். அவன் ஷைத்தான் என அந்த சஹாபிக்குத் தெரியாது. முதல் இரண்டு தடவைகளில் அவன் தனது வறுமையைச் சொல்லி கெஞ்சியதால் விட்டு விட்டார்கள் மூன்றாவது முறை அவனை எப்படியேனும் பிடித்து நபி ஸல் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணிய போது தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸீயை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற இரகசியத்தைக் கூறி அவன் தப்பித்தான். ஆகா அற்பதமான விஷயம் கூறியுள்ளானே என்று அந்த சஹாபீ அவனை விட்டு விட்டார்கள். நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அவன் சொன்னது உண்மை தான் என்று கூறியதுடன் அவன் தான் ஷைத்தான் என்றும் கூறினார்கள்.        

ஆயத்துல் குர்ஸீயை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஸலாம் கொடுத்தவுடன் எப்போதும் ஓதினால் சுவனம் செல்வதற்கு மவ்த்தைத் தவிர வேறு தடை இல்லை என்ற நபிமொழி 

: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ:"مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلا الْمَوْتُ"،(طبراني

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓத வேண்டிய வேறு சில திக்ருகள். 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى فُقَرَاءُ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ،"ذَهَبَ ذَوُو الأَمْوَالِ بِالدَّرَجَاتِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَحُجُّونَ كَمَا نَحُجُّ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ مِنْهَا، وَلَيْسَ لَنَا مَا نَتَصَدَّقُ، فَقَالَ: أَلا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يَلْحَقْكُمْ مِنْ خَلْفِكُمْ إِلا مَنْ عَمِلَ بِمِثْلِ مَا عَمِلْتُمْ بِهِ؟ تُسَبِّحُونَ اللَّهَ دُبُرَ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ، وتحَمَدُونَهُ ثَلاثًا وَثَلاثِينَ، وَتُكَبِّرُونَهُ أَرْبَعًا وَثَلاثِينَ، فَبَلَغَ ذَلِكَ الأَغْنِيَاءَ، فَقَالُوا مِثْلَ مَا قَالُوا، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ، فَقَالَ: ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ"، (معجم الكبير للطبراني

ஏழைகள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே செல்வந்தர்கள் எங்களை விட அந்தஸ்தால் முன் சென்று விட்டனர் எங்களைப் போன்று தொழுகின்றனர். எங்களைப் போன்று நோன்பு வைக்கின்றனர். எங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்கின்றனர் ஆனால் அவர்களுக்கு வசதி உள்ளது தர்மம் செய்கின்றனர் எங்களால் செய்ய முடியவில்லையே என்றபோது நபி ஸல் அவர்கள் நான் உங்களுக்கு ஒரு செயலை அறிவிக்கிறேன். அதைச் செய்தால் உங்களை விட முந்தி விட்டவர்களின் சிறப்பை நீங்கள் அடைவீர்கள் என்று கூறி, தஸ்பீஹே பாத்திமாவை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓதும்படி கற்றுத் தந்தார்கள் எப்படியோ இவ்விஷயம் செல்வந்தர்களுக்கும் தெரிய வந்தபோது அவர்களும் இந்த தஸ்பீஹை ஓத ஆரம்பித்தார்கள் மறுபடியும் ஏழைகள் வந்து நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தரும் அருள் என்றார்கள்.               

عَنْ وَرَّادٍ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا سَلَّمَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (بخاري

ரமழான் 29 நோன்புகளுடன் முடிவதால் நாம் பாக்கியசாலிகள் இல்லை என்றாகி விடுமா?

عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : لَمَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْتُ مَعَهُ ثَلاَثِينَ. (صحيح ابن خزيمة

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  நபி ஸல் அவர்கள் இருக்கும்போது நாங்கள் முப்பது நோன்புகள் வைத்ததை விட 29 நோன்புகள் வைத்ததே அதிகம்.- நூல் இப்னு குஜைமா

படிப்பினை - நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் அதிகமாக 29 நோன்புகள் தான் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றால் முப்பதாவது நோன்பைப் பெறாதவர்கள் பாக்கியமற்றவர்கள் என்று கருதுவதற்கு இடமில்லை.      

ஈதுப் பெருநாளின் சில சுன்னத்தான செயல்கள் முதல் நாள் மஃரிபில் இருந்தே துவங்கி விடுகின்றன

وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)البقرة   - معناه الحض على التكبير في آخر رمضان في قول جمهور أهل التأويل. واختلف الناس في حده، فقال الشافعي: روي عن سعيد ابن المسيب وعروة وأبي سلمة أنهم كانوا يكبرون ليلة الفطر ويحمدون، قال: وتشبه ليلة النحر بها. وقال ابن عباس: حق على المسلمين إذا رأوا هلال شوال أن يكبروا وروي عنه: يكبر المرء من رؤية الهلال إلى انقضاء الخطبة، ويمسك وقت خروج الإمام ويكبر بتكبيره. وقال قوم: يكبر من رؤية الهلال إلى خروج الإمام للصلاة  (قرطبي

மேற்படி வசனத்தில் அல்லாஹ் ரமழான் கடைசி நேரத்தில் தக்பீர் கூறுவதைத் தூண்டுகிறான் என பெரும்பாலான விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இன்னும் விரிவாக இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது பெருநாள் இரவு தக்பீர் கூற வேண்டும் என்று கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். ஷவ்வால் பிறையைப் பார்த்து விட்டால் முஸ்லிம்கள் தக்பீர் கூறவேண்டும். மறுநாள் காலை வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தக்பீர் கூறலாம். இமாம் பெருநாள் தொழுகைக்காக வெளியேறிய பின் அவரும் இணைந்து சிறிது நேரம் கூறுவார். அத்தோடு அதற்கான நேரம் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு தக்பீர் கிடையாது. அதாவது ஈதுத் தொழுகை முடிந்த பிறகு கிடையாது.                     

وكان الشافعي يقول إذا رأى هلال شوال: أحببت أن يكبر الناس جماعة وفرادى، ولا يزالون يكبرون ويظهرون التكبير حتى يغدوا إلى المصلى وحين يخرج الإمام إلى الصلاة، وكذلك أحب ليلة الأضحى لمن لم يحج (قرطبي.  

ஈதுகாவுக்குச் செல்லும் வழியிலும் தக்பீர் சொல்வது ஸாஹிபைன் ரஹ் அவர்களின் கூற்றுப்படி சுன்னத்

ولا يكبر عند أبي حنيفة رحمه الله في طريق المصلى وعندهما يكبر اعتبارا بالأضحى  (هداية

ஈதுடைய இரவில் முடிந்தவரை தனித்தனியாக வணக்கங்களில் ஈடுபடுவது நல்லது

இதற்காக ஜமாஅத் வைப்பது ஹனஃபி மத்ஹபில் மக்ரூஹ்

( و ) ندب ( إحياء ليلة العيدين ) الفطر والأضحى لحديث " من أحيا ليلة العيد أحيا قلبه يوم تموت القلوب " ويستحب الإكثار من الاستغفار بالأسحار وسيد الاستغفار " اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت " والدعاء فيها مستجاب (مراقي الفلاح حنفي   عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ (ابن ماجة)  وَالْمَرْجُوّ أَنَّ قِيَام التَّهَجُّد يَكْفِي (حاشية السندي)( ويكره الاجتماع على إحياء ليلة من هذه الليالي ) ومعنى القيام أن يكون مشتغلا معظم الليل بطاعة وقيل بساعة منه يقرأ أو يسمع القرآن أو الحديث أو يسبح أو يصلي على النبي صلى الله عليه و سلم (مراقي الفلاح حنفي فقه) 

 நபி ஸல் கூறினார்கள் எவர் இரு பெருநாட்களில் இரவை முடிந்த வரை விழித்திருந்து வணங்குவாரோ அவருடைய சிறப்பாகிறது மற்ற உள்ளங்கள் பாவங்களின் காரணமாக மரணித்து விடும் நாளில் இவரின் உள்ளம் மட்டும் ஹயாத்தாக இருக்கும்.அதாவது உள்ளம் மரணித்து விட்டவர்களின் பட்டியலில் இவர் சேர மாட்டார். அன்று இரவு தஹஜ்ஜுத் தொழுது விட்டாலே அதுவே இந்த சிறப்புகளை அடைய வாய்ப்பைத் தரும். பெருநாள் இரவில் ஸய்யிதுல் இஸ்திஃபாரை அதிகம் ஓதுவது நல்லது                                              

ஐந்து இரவுகளில் வணக்கம் புரிவது நல்லது

وقال صلى الله عليه و سلم " من أحيا الليالي الخمس وجبت له الجنة ليلة التروية وليلة عرفة وليلة النحر وليلة الفطر وليلة النصف من شعبان "  (مراقي الفلاح حنفي فقه) 

ஈதுப் பெருநாளுக்காக குளிப்பதும், புத்தாடைகள்  உடுத்துவதும் சுன்னத்தான செயல்

عن فَاكِهِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ وَيَوْمَ عَرَفَةَ وَكَانَ الْفَاكِهُ يَأْمُرُ أَهْلَهُ بِالْغُسْلِ فِي هَذِهِ الْأَيَّامِ  (ابن ماجة

عَنْ أَبِي رِمْثَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ رواه النسائ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ - يَعْنِى تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ (وفي رواية البخاري "تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ") فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِى الآخِرَةِ ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ قُلْتَ فِى حُلَّةِ عُطَارِدَ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنِّى لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ.رواه ابوداود (السيراء : ثياب من الحرير)

இமாம் புகாரீ ரஹ் அவர்கள் ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது, தன்னை சந்திக்க வருபவர்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மாற்றார்களுக்கு அன்பளிப்பு வழங்குவது போன்ற தலைப்புகளின் கீழ்காணும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்கள் 

கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை மஸ்ஜிதின் வாசலில் பட்டு கலந்த ஆடை விற்கப் படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை விலைக்கு வாங்கிக் கொண்டால் ஈதுப் பெருநாளுக்காகவும் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்காகவும் இதை அணிந்து கொள்ளலாமே என்று கேட்க அதற்கு நபி ஸல் அவர்கள் மறுமையில் யாருக்கு எவ்வித நற்கூலியும் இல்லையோ அவர் தான் இதை வாங்குவார் என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்பு சில தினங்கள் கழித்து அதே போன்ற பட்டாடை நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டதோ அதை உமர் ரழி அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உடனே உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை வேண்டாம் என்று தடுத்தீர்கள். இப்போது நீங்களே இதை எனக்கு அணியக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இதை உமக்காக நான் கொடுத்தனுப்பவில்லை. மக்காவில் இருக்கும் உமது காஃபிரான சகோதரருக்கு கொடுத்து விடுங்கள் என்றார்கள்.                                                

இதில் நிறைய படிப்பினைகள் உள்ளன. முக்கியமான படிப்பினை ஈதுப் பெருநாளுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவதை நபி ஸல் விரும்பியதால் தான் இதை தாங்கள் வாங்கிக் கொள்ளலாமே என உமர் ரழி கேட்டார்கள். ஆனாலும் பட்டு என்பதால் நபி ஸல் மறுத்தார்கள்.

ஈதுப் பெருநாளில் செய்ய வேண்டிய சுன்னத்தான செயல்களில் இன்னும் சில...

தொழ வரும்போது ஒரு பாதையிலும் செல்லும் போது வேறு பாதையிலும் செல்வது சுன்னத்

عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ ربخاري) عَنْ ابْنِ عُمَر رضي الله عنهما أَنَّهُ كَانَ يَخْرُجُ إِلَى الْعِيدِ فِي طَرِيقٍ وَيَرْجِعُ فِي أُخْرَى وَيَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ (ابن ماجة)

முடிந்த வரை நடந்து வருவது சுன்னத். பார்க்கிங் வசதி இல்லாத மஸ்ஜித்களுக்கு இதுவே நல்லது

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ إِلَى الْعِيدِ مَاشِيًا وَيَرْجِعُ مَاشِيًا (ابن ماجة)  عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ إِنَّ مِنْ السُّنَّةِ أَنْ يُمْشَى إِلَى الْعِيدِ ابن ماجة

நபி ஸல் அவர்கள் ஈதுத் தொழுகைக்கு வரும்போது நடந்து வருவார்கள் போகும்போது நடந்து செல்வார்கள்

நகர்ப்புறங்களில் பல மஸ்ஜித்களில் பார்க்கிங் வசதி இல்லை. அவ்வாறிருக்க சிலர்  நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு தொழ வருவதால் பொது மக்களுக்கு நிறைய இடையூறுகள் உள்ளது. 

عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - « يُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ (بخاري

மக்களுக்கு நோவினை தரும் பொருட்களை நடைபாதையில் இருந்து அப்புறப்படுத்துவது சுன்னத் என்றிருக்க நாம் அதற்கு நேர் மாற்றமாக நடைபாதையில் வண்டியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் நம் தொழுகைக்கும் பலனிருக்காது

ஈதுப் பெருநாளில் சாப்பிட்டு விட்டு வருவது சுன்னத்

 عَنْ بُرَيْدَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يُصَلِّيَ(ترمذي) وَقَدْ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ لَا يَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا وَيُسْتَحَبُّ لَهُ أَنْ يُفْطِرَ عَلَى تَمْرٍ (ترمذي)

ஈதுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் நஃபில் தொழுவது மக்ரூஹ். தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்த பின் தொழுகலாம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا وَمَعَهُ بِلَالٌ رواه البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ  (ابن ماجة

27 ம் இரவு பயான்

 28-03-2025

RAMZAN – 27


بسم الله الرحمن الرحيم  

27 வது இரவு பயான் 


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3)

லைலத்துல் கத்ரை இறுதி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப் படை இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த 27 வது இரவும்  லைலத்துல் கத்ர் இரவாக இருக்கலாம் என்ற ஆதரவில் நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம். லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பை நாம் அறிந்திருப்போம். எனவே லைலத்துல் கத்ரு இரவில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுருக்கமாக முதலில் காண்போம். 1. இந்த இரவில் தொழுகை, பயான் கேட்குதல், திக்ரு ஆகிய அமல்கள் செய்வதுடன் இது பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய இரவு என்பதால் அதிகமாக பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். 2. பல்வேறு மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி  இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அது லைலத்துல் கத்ரு இரவு என்று கூறும் மார்க்க அறிஞர்களும் நிறைய  உள்ளனர். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்.  



லைலத்துல் கத்ரு இரவில் பாவமன்னிப்புக் கேட்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي(ابن ماجة

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் நான்  என்ன துஆ ஓத வேண்டும் என ஆயிஷா ரழி அவர்கள் கேட்க, நபி  ஸல் அவர்கள் பாவ மன்னிப்புக்கான மேற்படி துஆவை கற்றுத் தந்தார்கள். 

  விளக்கம்- இதில் அஃபுவ்வுன் என்ற பயன்படுத்தப் பட்டுள்ளது.  மஃபிரத் என்றாலும்  அஃப்வ் என்றாலும் மன்னித்தல் என்பது பொருளாக இருந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. மஃபிரத் என்பதில் இல்லாத கூடுதலான அர்த்தம் அஃப்வ் என்பதில் உள்ளது. அஃப்வ் என்பது தடயமே இல்லாமல் மன்னிப்பதைக் குறிக்கும். உதாரணமாக காவல் நிலையத்தில் ஒருவர் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படும் அத்துடன் அவருக்கு விடுதலையும் கொடுக்கப்படும். ஆனால் சிலருக்கு குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படாமலேயே அவருக்கு விடுதலை கொடுக்கப்படும். இதுபோல மறுமையில் சில அடியார்களை தனியாக அழைத்து நீ இன்ன பாவங்களைச் செய்தாயா என்று கேட்டு பிறகு மன்னிப்பு வழங்குவான். வேறு சில அடியார்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அல்லாஹ்வின் அருளால் அப்போதே அழிக்கப்பட்டிருக்கும்



பாவ மன்னிப்புக் கேட்பது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابن ماجة

யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.                

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا –(القرطبي)

நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.                                                

وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا  إن الله تعالى يقول في سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي) 

 ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.                                  

قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي  

உமர் ரழி அவர்கள் மழைத் தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம் சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்குமுன் அதன் அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டினேன். மழையை இறக்கினான் என்றார்கள்  

عَنِ الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ:  " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ "  وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ، فَسُقُوا".  (تفسير  ابن ابي حاتم

 திமிஷ்க் நகரில் ஏற்பட்ட பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள் உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள் நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம் முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும் கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை இறக்கினான்.                             

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்

كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் அவர்கள் என்னுடைய தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.                                                                     

இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த நல்லடியாரின் வரலாறு

كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن يمكث فيه فقال الإمام سوف أنام موضع قدمي فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجد  وكان الإمام أحمد شيخا وقورا تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر لينام في منزله، فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار فوائد عظيمة، فقال له هل وجدت لاستغفارك هذا ثمرة، فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما عدا دعوة واحدة، قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟ قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبل فقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப் படுத்தவில்லை  என்பதாலும் அவர்   இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க் கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது கண்ட முஅத்தின் காலைப் பிடித்து  இழுத்து வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது  ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச் சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன் காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம் அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின் இஸ்திஃபார்  வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும் துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு வருத்தத்துடன்  நான் பல வருடமாக கேட்டும் ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக  அவர்களைக் காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று கூறிய போது இமாம் அவர்கள்  மிகவும் ஆச்சரியத்துடன்  நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல்  அல்லாஹ்வின் மீது சத்தியமாக  உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்.                                 

 இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ்  ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான்  وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال

கருத்து – இரண்டு விதமான பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள் நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது  முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது சாத்தியம். 

தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். 

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.  

 (எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                                 

தவ்பா இல்லாத பாவங்களால் பரக்கத் நீங்கும்.

ومعنى قوله تعالى: {ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ}الروم 41 -أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لحد يقام في الأرض أحب إلى أهلها من أن يمطروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أقيمت انكف الناس أو أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية, وهو تركها, فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس ويستظلون بقحفها, ويكفي لبن اللقحة الجماعة من الناس, وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب. (تفسير ابن كثير)

ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான்  என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது  அந்த  கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின்  அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும்.                                         

தவ்பா இல்லாத பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.

அதாவது இன்று ஒரு பாவம் செய்தால் இன்று ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாக முதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போதுதான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும்.


பராஅத் இரவில் மூன்று விதமான துஆக்களை அல்லாஹ்விடம் கேட்பது போல் இந்த இரவிலும் துஆ  கேட்கலாம்

இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  பல அறிஞர்களின் கருத்து லைலத்துல் கத்ரு என்பதாகும். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ- فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(سورة الدخان) أَيْ فِي لَيْلَة الْقَدْر يُفْصَل مِنْ اللَّوْح الْمَحْفُوظ إِلَى الْكَتَبَة أَمْر السّنَة وَمَا يَكُون فِيهَا مِنْ الْآجَال وَالْأَرْزَاق وَمَا يَكُون فِيهَا إِلَى آخِرهَا وَهَكَذَارُوِيَ عَنْ اِبْن عُمَر وَمُجَاهِد وَأَبِي مَالِك وَالضَّحَّاك وَغَيْر وَاحِد مِنْ السَّلَف (تفسير ابن كثير) عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه قَالَ:إِنَّكَ لَتَرَى الرَّجُلَ يَمْشِي فِي الْأَسْوَاقِ وَقَدْ وَقَعَ اسْمُهُ فِي الْمَوْتَى، ثُمَّ قَرَأَ" إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ-فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ  يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ قَالَ: فَفِي تِلْكَ اللَّيْلَةِ يُفْرَقُ أَمْرُ الدُّنْيَا إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ مَوْتٌ أَوْ حَيَاةٌ أَوْ رِزْقٌ كُلُّ أَمْرِ الدُّنْيَا يُفْرَقُ تِلْكَ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ (تفسير ابن ابي حاتم    

واعلم أن تقدير الله لا يحدث في تلك الليلة فإنه تعالى قدر المقادير قبل أن يخلق السموات والأرض في الأزل ، بل المراد إظهار تلك الليلة المقادير للملائكة في تلك الليلة بأن يكتبها في اللوح المحفوظ وهذا القول اختيار عامة العلماء (تفسير الرازي)

ரிஜ்கில் பரக்கத்தை தரும்படி அல்லாஹ்விடம் கேட்பது. ரிஜ்க் என்பது விசாலமான பொருள் கொண்டது

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும்  பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ (151)الانعامعَنْ عَلِيِّ بْنِ بَكَّارٍ، قَالَ: شَكَا رَجُلٌ إِلَى إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ كَثْرَةَ عِيَالِهِ، فَقَالَ لَهُ إِبْرَاهِيمُ: " يَا أَخِي، انْظُرْ كُلَّ مَنْ فِي مَنْزِلِكَ لَيْسَ رِزْقُهُ عَلَى اللهِ فَحَوِّلْهُ إِلَى مَنْزِلِي "شعب الايمان

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து தன் குடும்பம் பெருகி விட்டதையும்  அதனால் உணவு நெருக்கடி ஏற்படுமோ என்ற தனது பயத்தையும் தெரிவித்தார் அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் உனது வீட்டில் யாருக்கு அல்லாஹ் ரிஜ்க் தர மாட்டான் என்று நீ நினைக்கிறாயோ அவர்களை என்னிடம் அனுப்பி வை.. எனது பொறுப்பில் உள்ளவர்களுக்கெல்லாம் சேர்த்தே அல்லாஹ் எனக்கு ரிஜ்க் தருவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்கள். 

1. உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

இமாம் நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள் 

உணவில் பரக்கத் இருந்தால் கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகும் என்பதற்கு உதாரணம்.

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களின் முன்னால் மாணவரான அஹமத் இப்னு ஹன்பல் அவர்கள் தம் ஆசிரியரை பார்க்க தாம் வரவிருப்பதாக சொல்லியனுப்புகிறார்கள் அதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் மிகவும் மிகவும் மகிழ்ந்து தம்முடைய இந்நாள் மாணவர்களிடம்  என்னுடைய மாணவர்  வருகிறார் அவரை நீங்கள் நன்கு உபசரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.                                                                

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் வந்தவுடன் ஆசிரியரை நலம் விசாரித்து விட்டு புறப்பட எண்ணிய போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள்  இருங்கள் இங்கே தங்கி விட்டு நாளை செல்லுங்கள் அன்புடன் கூற, அதை ஏற்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள்  அங்கே தங்குகிறார்கள். அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தம் மாணவர்களை அழைத்து அவரை நன்கு உபசரியுங்கள் மறக்காமல் அவர் தங்கும் அறையில் உளூச் செய்ய தண்ணீர் வைக்க வேண்டும் ஏனெனில் என் முன்னால் மாணவர் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பவர் என்று கூற, மாணவர்களும் அவ்விதமே செய்தார்கள். அதிகாலையில் மாணவர்கள் சென்று பார்த்த போது தண்ணீர் அப்படியே இருக்கிறது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயம் மாணவர்களின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த அதை ஆசிரியரிம் கூறினார்கள் அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கும் இந்த விஷயத்தை நீங்கள் விட்டு விடுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்கள் அதிகாலையில் சுப்ஹுக்கு வந்த போது அவர்களிடம் நைசாகப் பேசி  நேற்று நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தொழவில்லையா மாணவர்கள் வைத்த தண்ணீர் அப்படியே இருந்ததாக கூறினார்களே  என அன்புடன் கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் சொன்ன பதில் - ஆசிரியர் அவர்களே கடந்த பல நாட்களாக  ஹலாலான உணவு எனக்குக் குறைவாகவே கிடைத்த து. இந்த நிலையில் நேற்று இஷா முடிந்த பின் நீங்கள் வழங்கிய ஹலாலான உணவை திருப்தியாக சாப்பிட்ட பின் எனக்கு நல்ல சிந்தனைகளும், அதில் ஓர்மையும் ஏற்பட்டது நான் இஷாவிற்குச் செய்த உளூவுடன் இரவு முழுவதும் தூங்காமல்  குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து பல சட்டங்களை எடுத்தேன். அப்படியே தஹஜ்ஜுத் நேரம் ஆகி விட்டது உளூவுடன் இருந்ததால் அப்படியே தஹஜ்ஜுத் தொழுது விட்டு சற்று நேரம் தூங்கி விட்டேன். அந்த நேரத்தில்தான் மாணவர்கள் வந்து பார்த்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة- 

عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும்  அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.                               

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير) 

عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (بخاري)باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِى مِعًى وَاحِدٍ- الْأَشْرِبَةِ

2.3. நலவான அமலின் பேரில் ஆயுளை அல்லாஹ் நீளமாக்கிடவும் இந்த இரவில் துஆச் செய்யலாம்

காரணம் இந்த வருடம் முதல் அடுத்த வருடம் வரையிலான விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும்போது அடுத்த வருடத்திற்குள் நமக்கு மவ்த் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் முஸீபத்துகள் ஏற்படும் என்றிருந்தாலோ நம்முடைய துஆவின் காரணமாக அது தடுக்கப்படும். 

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة) 

நற்காரியங்கள் ஆயுளை அதிகரிக்கும். துஆ விதியை மாற்றும். ஒருவன் செய்யும் பாவங்களால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய அபிவிருத்தி தடுக்கப்படும்.

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : الدعاء ينفع مما نزل و مما لم ينزل فعليكم عباد الله بالدعاء (حاكم)

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (مسند)

அல்லாஹ் விதியை மாற்றியமைப்பதற்கு ஒரு உதாரணம்

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)الرعد

  மேற்படி வசனத்திற்கு விரிவான விளக்கம் உள்ளது. அதில் ஒரு துளி என்னவென்றால் வலது இடது தோளில் உள்ள கிராமன் காதீபீன் அல்லாத இன்னும் இரு மலக்குகள் நமக்கு முன்னும் பின்னும் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றனர். சமீபத்தில் ஒரு நண்பர் வந்து சொன்னார் சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. பயணம் செய்த பலர் இறந்து விட்டனர். ஆனால் நான் மட்டும் எந்தக் காயமும் இல்லாமல் தப்பித்தேன். மயக்கம் மட்டும் இருந்த நிலையில் நான் வெளியில் கிடந்தேன். விபத்து நடக்கும் நேரத்தில் என்னை யாரோ காரில் இருந்து வெளியே வீசியிருக்கலாம் என்று நெகிழ்வுடன் ஆதாரத்துடன் கூறினார்.

விபத்தில் ஒருவரின் உயிர் பிரிய வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டால் சிறிய விபத்திலும் கூட அவரின் உயிர் பிரிந்து விடலாம். ஆனால் அவரின் உயிர் இப்போது பிரியக்கூடாது என்று அல்லாஹ் நாடி விட்டால் எவ்வளவு பெரிய விபத்தாக இருந்தாலும் தப்பித்து விடுவார். மேற்படி மலக்குகளைக் கொண்டு அல்லாஹ் தப்பிக்க வைப்பான். செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டும் ஒருவன் எதிரில் வேகமாக லாரி வருவதைக் கூட கவனிக்காமல் இருப்பான். கடைசி நொடியில் அதைக் கவனித்து வண்டியை வேறு பக்கம் திருப்பி சிறு காயத்துடன் தப்புவான். கடைசி நேரத்தில் அந்த இரு மலக்குகள் தான்  அவனை உஷார் படுத்திப் பாதுகாத்திருப்பார்கள். 

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் துஆவின் காரணமாக அபுல் முழஃப்பர் அவர்களின்  ஆயுள் அதிகரித்த சம்பவத்தை இங்கே சுட்டிக்காட்டலாம்

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் காலத்தில் அபுல் முழஃப்பர் என்பவர் இருந்தார், அவர் எப்போது வியாபார விஷ.மாக வெளியூர் சென்றாலும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் செல்லும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தார், அப்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் இப்பயணம் முடித்து விட்டு நீங்கள்   திரும்பும்போது உங்களுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தர்கள் அவர் கவலையுடன் திரும்பிய போது வழிய.ல் ஹம்மாத் ரஹ அவர்களை சந்தித்தார்கள் கவலைக்கு காரணம் கேட்ட போது அபுல்முழஃஃப்பர் அவர்கள் காரணத்தைக் கூற, அதற்கு ஹம்மாத் ரஹ் அவர்கள் நீங்கள் சென்று வாருங்கள். அல்லாஹ்வின் விதி அப்படி இருந்தாலும் அவன் உங்களைப் பாதுகாப்பான் என்று கூறி அனுப்பினார்கள், அவர் சென்று சரக்குகளை விற்பனை செய்து விட்டு பணப்பையுடன் திரும்பும்போது வழி.யில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ஒரு இடத்தில் பையை வைத்தார் ஆனால் அதை எடுக்க மறந்து விட்டார். அதை தாண்டி சற்று தூரம் வந்து ஓரிடத்தில் ஓய்வெடுத்த போது அயர்ந்து தூங்கினார். அதில் ஒரு கனவு கண்டார் தன்னோடு பல வியாபாரிகள் பணப்பைகளுடன் இருப்பது போலவும் அவற்றைப் பறிக்க கொள்ளைக் கூட்டம் ஆயதங்களுடன் வருவது போலவும் கனவு கண்டார். அதில் ஒரு கொள்ளையன் இவருக்கு அருகில் வந்து இவரைக் கழுத்தில் தாக்கி இவரிடமிருந்து பணப்பையைப் பறித்தான். அத்துடன் கனவு கலைந்தது. ஆனால் அருகில் யாரும் இல்லை. ஆனால் கழுத்தில் மட்டும் காயத்தின் தழும்பு இருந்த து. அப்போது தான் மறந்த பணப்பையின் நினைவு வந்தது, உடனே அந்த இடத்திற்குச் சென்றபோது அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அவர் ஊர் திரும்பியவுடன் வழியில் ஹம்மாத் ரஹ் அவர்களைச் சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறியவுடன் ஹம்மாத் ரஹ் அவர்கள் கறினார்கள் நீங்கள் கனவில் பார்த்த அத்தனை விஷயங்களும் நிஜத்தில் நடைபெற வேண்டியவை ஆனால் அவையனைத்தும் அல்லாஹ் கனவில் நிகழ்த்தி அல்லாஹ் உங்களைப் பாதுகாத்துள்ளான் இதற்குக் காரணம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள்  தான். அவர்கள் நீங்கள் சென்றதை அறிந்த தில் இருந்து உங்களுக்காக  எழுபது தடவை துஆ செய்தார்கள். அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்கள் 

வாழ்நாள் விஷயத்தில் பெற்றோரின் சாப பிரார்த்தனையும் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்தத் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது.                                                                   

லைலத்துல் கத்ரு இரவின் அடையாளங்களில் சில...

عَنْ جَابِر بْن عَبْد اللَّه أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنِّي رَأَيْت لَيْلَة الْقَدْر فَأُنْسِيتهَا وَهِيَ فِي الْعَشْر الْأَوَاخِر مِنْ لَيَالِيهَا طَلْقَة بَلْجَة لَا حَارَّة وَلَا بَارِدَة كَأَنَّ فِيهَا قَمَرًا لَا يَخْرُج شَيْطَانهَا حَتَّى يُضِيءَ فَجْرُهَا (تفسير ابن كثير)

 லைலத்துல் கத்ரு இரவை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். எனவ ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் அதை தேடுங்கள். அதன் அடையாளங்களாகிறது அந்த இரவில் அதிக உஷ்ணமும் இருக்காது அதிக குளிரும் இருக்காது. நடுநிலையாக இருக்கும். மற்ற நாட்களில் ஷைத்தான் சூரியனுடன் இணைந்து வெளியாகுவதைப் போல அன்றைய இரவு முடிந்து சூரியன் உதிக்கும் போது அதனுடன் ஷைத்தான் வெளியாக மாட்டான். 

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه الشَّيْطَانُ يَطْلُعُ مَعَ الشَّمْسِ كُلَّ يَوْمٍ إِلاَّ لَيْلَةَ الْقَدْرِ  قَالَ : وَذَلِكَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا (مصنف ابن ابي شيبة) عَنِ الْحَسَنِ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةٌ بَلْجَةٌ سَمْحَةٌ تَطْلُعُ شَمْسُهَا لَيْسَ لَهَا شُعَاعٌ(مصنف ابن ابي شيبة)  عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى 

வியாழன், 20 மார்ச், 2025

ரமழான் கடைசி பத்து நாட்கள்

 21-03-2025

RAMZAN - 20 بسم الله الرحمن الرحيم 


ரமழான் கடைசி பத்து நாட்களின் சிறப்பு

عن عَائِشَة رض كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ(مسلم) باب الاِجْتِهَادِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ – كتاب الاعتكاف 

மற்ற நாட்களை விட ரமழான் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் அதிகம் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்

عَنْ عَائِشَةَ رَضِ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَه(بُخاري) باب الْعَمَلِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-كتاب فضل ليلة القدر- قِيلَ لأَبِي بَكْرٍ مَا رَفْعُ الْمِئْزَرِ؟ قَالَ:اعْتِزَالُ النِّسَاءِ (مصنف ابن ابي شيبة) 

ரமழானின் கடைசி பத்து நாட்களில் முடிந்த வரை இரவில் விழித்திருந்து வணங்க வேண்டும் என்பதே லைலத்துல் கத்ரை அடைவதற்குத் தான். அந்த லைலத்துல் கத்ர் இறுதிப் பத்து நாட்களில் மறைக்கப்பட்டுள்ளது அது ஏன் மறைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிப் பேசும் முன்பு லைலத்துல் கத்ரை அல்லாஹ் நமக்கு வழங்கியதன் நோக்கம் அறிய வேண்டும். குறைந்த வேலையை நிறைய நன்மைகள் பெறுபவர்களாக நம்மை ஆக்குவதற்குத் தான் அல்லாஹ் லைலத்துல் கத்ரை வழங்கினான். 

குறைந்த அமல் நிறைந்த நன்மை என்பது இந்த  உம்மத்துக்கு மட்டும் தான். அதில் லைலத்துல் கத்ரும் அடங்கும்

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الْكِتَابَيْنِ كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتْ الْيَهُودُ ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتْ النَّصَارَى ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ الْعَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ فَأَنْتُمْ هُمْ فَغَضِبَتْ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالُوا مَا لَنَا أَكْثَرَ عَمَلًا وَأَقَلَّ عَطَاءً قَالَ هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوا لَا قَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ (بخاري)

 ‘உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு ‘கீராத்’ கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப் பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு ‘கீராத்’ கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு ‘கீராத்’ வழங்கப்பட்டோம். ‘எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் ‘உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்பான். அவர்கள் ‘இல்லை’ என்பர். ‘அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்’ என்று இறைவன் விடையளிப்பான். 

கருத்து – மிகவும் குறைந்த அளவு வேலை அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்வது இந்த உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பாகும். லைலத்துல் கத்ரு இரவில் வணங்கினால்  ஆயிரம் மாதங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும். அதாவது 84 வருடங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவரின் வாழ்நாளில் 50 லைலத்துல் கத்ரு கிடைத்து விட்டால் அவர் 4200 வருடங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும். 

லைலத்துல் கத்ரு இரவை இந்த உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கியதற்கான அடிப்படைக் காரணங்களில் சில....

عَنْ مَالِكٍ أَنَّهُ سَمِعَ مَنْ يَثِقُ بِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُرِىَ أَعْمَارَ النَّاسِ قَبْلَهُ أَوْ مَا شَاءَ اللَّهُ مِنْ ذَلِكَ فَكَأَنَّهُ تَقَاصَرَ أَعْمَارَ أُمَّتِهِ أَنْ لاَ يَبْلُغُوا مِنَ الْعَمَلِ مِثْلَ الَّذِى بَلَغَ غَيْرُهُمْ فِى طُولِ الْعُمْرِ فَأَعْطَاهُ اللَّهُ لَيْلَةَ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (مؤطا مالك)

நபி ஸல் அவர்களுக்கு முந்திய உம்மத்துமார்கள் அதிகமாக வயது கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடு பட்ட நபர்களை காட்டப்பட்டது அப்போது நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு அதுபோன்று இல்லையே என்று ஏங்கினார்கள். அப்போது  கத்ரு சூராவை அல்லாஹ் இறக்கினான்

عَنْ مُجَاهِد قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيل رَجُل يَقُوم اللَّيْل حَتَّى يُصْبِح ثُمَّ يُجَاهِد الْعَدُوّ بِالنَّهَارِ حَتَّى يُمْسِي فَفَعَلَ ذَلِكَ أَلْف شَهْر فَأَنْزَلَ اللَّه هَذِهِ الْآيَة "لَيْلَة الْقَدْر خَيْر مِنْ أَلْف شَهْر" قِيَام تِلْكَ اللَّيْلَة خَيْر مِنْ عَمَل ذَلِكَ الرَّجُل(تفسير ابن كثير)-

மற்றொரு அறிவிப்பில் பனீ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவர் இரவில் தொழுவார் பகலில் ஜிஹாது செய்வார். இவ்வாறே  ஆயிரம் மாதங்கள் செய்தார். அவரின் அமலை விட அதிகமானதாக இந்த உம்மத்தின் நன்மையை ஆக்கிட அல்லாஹ் லைலத்துல் கத்ரு இரவை வழங்கினான்

 عَنْ عَلِيّ بْن عُرْوَة قَالَ:ذَكَرَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَرْبَعَة مِنْ بَنِي إِسْرَائِيل عَبَدُوا اللَّه ثَمَانِينَ عَامًا لَمْ يَعْصُوهُ طَرْفَة عَيْن فَذَكَرَ أَيُّوب وَزَكَرِيَّا وَحِزْقِيل بْن الْعَجُوز وَيُوشَع بْن نُون قَالَ فَعَجِبَ أَصْحَابُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ فَأَتَاهُ جِبْرِيل فَقَالَ يَا مُحَمَّد عَجِبَتْ أُمَّتُك مِنْ عِبَادَة هَؤُلَاءِ النَّفَر ثَمَانِينَ سَنَة لَمْ يَعْصُوهُ طَرْفَة عَيْن فَقَدْ أَنْزَلَ اللَّه خَيْرًا مِنْ ذَلِكَ فَقَرَأَ عَلَيْهِ " إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَة الْقَدْر وَمَا أَدْرَاك مَا لَيْلَة الْقَدْر لَيْلَة الْقَدْر خَيْر مِنْ أَلْف شَهْر  هَذَا أَفْضَل مِمَّا عَجِبْت أَنْتَ وَأُمَّتك قَالَ فَسُرَّ بِذَلِكَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاس مَعَهُ (تفسير ابن ابي حاتم) وقال أبو بكر الوراق: كان ملك سليمان خمسمائة شهر وملك ذي القرنين خمسمائة شهر فصار ملكهما ألف شهر فجعل الله تعالى العمل في هذه الليلة لمن أدركها خيرا من ملكهما (قرطبي)

லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி....

أنه تعالى أخفى هذه الليلة لوجوه أحدها: أنه تعالى أخفاها كما أخفى سائر الأشياء فإنه أخفى رضاه في الطاعات حتى يرغبوا في الكل وأخفى الإجابة في الدعاء ليبالغوا في كل الدعواتوأخفى الاسم الأعظم ليعظموا كل الأسماء وأخفى في الصلاة الوسطى ليحافظوا على الكل وأخفى قبول التوبة ليواظب المكلف على جميع أقسام التوبة وأخفى وقت الموت ليخاف المكلففكذا أخفى هذه الليلة ليعظموا جميع ليالي رمضان وثانيها : كأنه تعالى يقول : لو عينت ليلة القدر وأنا عالم بتجاسركم على المعصية  فربما دعتك الشهوة في تلك الليلة إلى المعصية فوقعت في الذنب فكانت معصيتك مع علمك أشد من معصيتك لا مع علمك  فلهذا السبب أخفيتها عليك روي أنه عليه السلام دخل المسجد فرأى نائماً فقال : يا علي نَبِّهْه ليتوضأ  فأيقظه علي  ثم قال علي: يا رسول الله إنك سباق إلى الخيرات فلم لم تنبهه؟ قال : لأن رده عليك ليس بكفر ففعلت ذلك لتخف جنايته لو أبى فإذا كان هذا رحمة الرسول فقس عليه رحمة الرب تعالى فكأنه تعالى يقول: إذا علمت ليلة القدر فإن أطعت فيها اكتسبت ثواب ألف شهر وإن عصيت فيها اكتسب عقاب ألف شهر ودفع العقاب أولى من جلب الثواب ثالثها:أني أخفيت هذه الليلة حتى يجتهد المكلف في طلبها فيكتسب ثواب الاجتهاد ورابعهاأن العبد إذا لم يتيقن ليلة القدر فإنه يجتهد في الطاعة في جميع ليالي رمضان على رجاء أنه ربما كانت هذه الليلة هي ليلة القدر فيباهي الله تعالى بهم ملائكته يقول:كنتم تقولون فيهم يفسدون ويسفكون الدماء  (تفسير الرازي 

முதலாவது காரணம்

1. (அ)அல்லாஹ் சிலவற்றை சிலவற்றில் மறைத்து வைத்துள்ளான். எத்தனையோ வணக்க வழிபாடுகள் நாம் செய்தாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தி நம் மீது உண்டாகும். அது எந்த அமல் என்பது மறைக்கப்ப்பட்டுள்ளது. இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் வஃபாத்தான பின்பு அவர்களைக் கனவில் கண்ட போது அல்லாஹ் உங்களின் எந்த செயலைக் கொண்டு பொருந்திக் கொண்டான் என்று கேட்டபோது நான் ஒருமுறை பேனாவைக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த போது அதில் உள்ள மையை உறிஞ்சுவதற்காக ஒரு ஈ வந்து அமர்ந்தது. நான் அந்த ஈ தானாக பறந்து போகும் வரை அந்த பேனாவை சற்றும் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தேன். இதனால் அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொண்டான் என்றார்கள் 

ஆ. துஆக்களில் எந்த துஆ ஏற்கப்படும் என்பதை மறைந்து வைத்துள்ளான். ஒரே கோரிக்கையை பல முறை கேட்கிறோம்.ஒவ்வொரு துஆவையும் இஜாபதுக்குரியதாக கருதி துஆ செய்ய வேண்டும் என்பதற்காக...                

இ. இஸ்முல் அஃழமை மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு திருநாமத்தையும் இஸ்முல் அஃழமாக கருதி துஆ செய்வதற்காக.

ஈ. நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு தொழுகையையும் நடுத்தொழுகையாக கருதி தொழ வேண்டும். முதல் நாள் மஃரிப்  முதல் மறுநாள் மஃரிப் வரை என்ற கணக்கில் பார்த்தால் ஃபஜ்ர் நடுத்தொழுகை. ஜிப்ரயீல் அலை முதலில் கற்றுத் தந்தது லுஹர் என்ற கணக்கில் பார்த்தால் மஃரிப் நடுத்தொழுகை. இப்படி ஒவ்வொரு தொழுகையும் நடுத்தொழுகையாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.           

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) البقرة

உ. தவ்பா கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரம் மன்னிப்பு வழங்கப்படும் என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்

ஊ. மவ்த்தை மறைத்து வைத்துள்ளான். எந்த நேரமும் மவ்த் வரலாம் என்று அஞ்சி நடக்க வேண்டும் என்பதற்காக.                      

இதே மாதிரி லைலத்துல் கத்ரை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ராக இருக்கலாம் என்று எண்ணி அமல் செய்வதற்காக....எனவே ரமழானின் கடைசி பத்து நாட்களிலும் நாம் அதிகமான அமல்களில் ஈடுபட வேண்டும்                                         இரண்டாவது காரணம்

2. லைலத்துல் கத்ரு எது என்று அறிவித்துத் தரப்பட்டு அது சிறந்த இரவு என்று தெரிந்தே ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அவன் மீது தண்டனைகள் அதிகமாகி விடுமல்லவா அல்லாஹ்வின் விதியில் ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில் நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில் நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர் மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி விட்டார்.                                                    

மூன்றாவது காரணம்

3. லைலத்துல் கத்ரைத் தேடி ஒவ்வொரு இரவிலும் அமல் செய்பவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்

நான்காவது காரணம்

4. மனிதர்களின் அமல்களை மலக்குகளிடம் காட்டி அல்லாஹ் மனிதனைப்  பெருமைப் படுத்துவற்காக அல்லாஹ் இவ்வாறு மறைத்து வைத்துள்ளான். என்னுடைய அடியார்கள் பத்து நாட்களும் விழித்திருந்து வணக்கம் செய்கிறார்கள் என நம்மைப் பற்றி மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப் படுத்துவான்.

 இதற்கு உதாரணம் நாம் நுத்ஃபா வாக இருக்கும்போது நம்மைக்கழுவி அப்புறப்படுத்தும் பெற்றோர்கள் நம்மை அழகிய உருவில் பார்க்கும்போது கொஞ்சுகின்றனர். அதுபோல் மனிதனை முதலில் அல்லாஹ் படைத்த போது பாவம் செய்யும் தோற்றத்தில் கண்டு இவர்களை ஏன் படைக்கிறாய் என்று கேட்ட மலக்குகள், மனிதனின் அழகிய வணக்க வழிபாடுகளைக் கண்டு வாழ்த்துகின்றனர் 

قوله تعالى : { تَنَزَّلُ الملائكة والروح فِيهَا } وفيه مسائل :المسألة الأولى : اعلم أن نظر الملائكة على الأرواح ونظر البشر على الأشباح ثم إن الملائكة لما رأوا روحك محلاً للصفات الذميمة من الشهوة والغضب ما قبلوك فقالوا : أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء وأبواك لما رأوا قبح صورتك في أول الأمر حين كنت منياً وعلقة ما قبلوك أيضاً بل أظهروا النفرة واستقذروا ذلك المني والعلقة وغسلوا ثيابهم عنه ثم كم احتالوا للإسقاط والإبطال ثم إنه تعالى لما أعطاك الصورة الحسنة فالأبوان لما رأوا تلك الصورة الحسنة قبلوك ومالوا إليك فكذا الملائكة لما رأوا في روحك الصورة الحسنة وهي معرفة الله وطاعته أحبوك فنزلوا إليك معتذرين عما قالوه أولاً(تفسير الرازي)

விண்ணுலகில் எவ்வளவோ வணக்க வழிபாடுகள் நடைபெற்றாலும் அங்கு இல்லாத வித்தியாசமான வணக்க வழிபாடுகளை காண்பதற்காக மலக்குகள் வருகிறார்கள்

أنهم يرون في الأرض من أنواع الطاعات أشياء ما رأوها في عالم السموات أحدها:أن الأغنياء يجيئون بالطعام من بيوتهم فيجعلونه ضيافة للفقراء والفقراء يأكلون طعام الأغنياء ويعبدون الله وهذا نوع من الطاعة لا يوجد في السموات وثانيهاأنهم يسمعون أنين العصاة وهذا لا يوجد في السموات وثالثها: أنه تعالى قال لأنين المذنبين أحب إلي من زجل المسبحينفقالوا: تعالوا نذهب إلى الأرض فنسمع صوتاً هو أحب إلى ربنا من صوت تسبيحنا

செல்வந்தர்கள் இந்த இரவில் உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவர்.இந்த நற்செயலை விண்ணுலகில் பார்க்க முடியாது. பாவிகளின் அழுகையை இந்த உலகில் தான் பார்க்க முடியும். விண்ணுலகில் பார்க்க முடியாது. 3. தஸ்பீஹ் செய்பவர்களின் தஸ்பீஹை விட பாவிகளின் அழுகை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது அதனால் மலக்குகள் தங்களுக்குள் பேசும்போது வாருங்கள் பாவிகளின் அழுகுரலைக் கேட்போம் என்று பேசிக் கொள்வார்கள்.                                 

லைலத்துல் கத்ரு இரவின் அடையாளங்களில் சில...

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه الشَّيْطَانُ يَطْلُعُ مَعَ الشَّمْسِ كُلَّ يَوْمٍ إِلاَّ لَيْلَةَ الْقَدْرِ  قَالَ : وَذَلِكَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا (مصنف ابن ابي شيبة) عَنِ الْحَسَنِ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةٌ بَلْجَةٌ سَمْحَةٌ تَطْلُعُ شَمْسُهَا لَيْسَ لَهَا شُعَاعٌ(مصنف ابن ابي شيبة)  عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَيُّكُمْ يَذْكُرُ حِينَ طَلَعَ الْقَمَرُ وَهُوَ مِثْلُ شِقِّ جَفْنَةٍ (مسلم) باب فَضْلِ لَيْلَةِ الْقَدْرِ وَالْحَثِّ عَلَى طَلَبِهَا- كتاب الصيام- عَنْ زِرٍّ قَالَ قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ يَا أَبَا الْمُنْذِرِ....أَنَّى عَلِمْتَ ذَلِكَ قَالَ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِزِرٍّ مَا الْآيَةُ قَالَ تُصْبِحُ الشَّمْسُ صَبِيحَةَ تِلْكَ اللَّيْلَةِ مِثْلَ الطَّسْتِ لَيْسَ لَهَا شُعَاعٌ حَتَّى تَرْتَفِعَ (ابوداود) بَاب فِي لَيْلَةِ الْقَدْرِ- كِتَاب الصَّلَاةِ

இஃதிகாஃபின் சிறப்புகளும் சட்டங்களும்

இஃதிகாஃப் என்பதன் பொருள்

وَالِاعْتِكَافُ فِي اللُّغَةِ مُشْتَقٌّ مِنْ الْعُكُوفِ وَهُوَ الْمُلَازَمَةُ وَالْحَبْسُ وَالْمَنْعُ وَمَحَاسِنُ الِاعْتِكَافِ ظَاهِرَةٌ فَإِنَّ فِيهِ تَسْلِيمَ الْمُعْتَكِفِ كُلِّيَّتَهُ إلَى طَاعَةِ اللَّهِ لِطَلَبِ الزُّلْفَى وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (جوهرة النيرة)

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனைதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு. இஸ்லாத்தில் ‘இஃதிகாஃப்’ என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு பெயராகும். அவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளையும் பேசாமலும் பள்ளியில் தங்கியிருந்து தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும்.

இஃதிகாஃபின் நன்மைகள்

عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. (شعب الايمان-لبيهقى-3680)

ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு  ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-

عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم, والبيهقى-3965)

இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருப்பவருக்கு, அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, ஹாகிம், பைஹகீ-

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)

ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)

இஃதிகாஃப் மூன்று வகை 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்]  2, சுன்னத் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3,  நஃபில்

الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف-

வாஜிபான இஃதிகாஃப் என்பது நேர்ச்சை இஃதிகாஃபைக் குறிக்கும் செய்யும் உமர் ரழி அவர்கள் நபி ஸல்அவர்களிடம் நான் மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்தேன் அதை இப்போது நிறைவேற்றவா என கேட்க, ஆம் நிறைவேற்றுங்கள் என்றார்கள்

الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ- 

சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப். இதுதான் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்]   

நபி (ஸல்) அவர்கள் கடைசி காலம் வரை ரமளான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்துவந்தனர்.

-الثالث  فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)

மஸ்ஜிதில் நுழையும் போது இஃதிகாஃப் நிய்யத்தில் நுழைவது. சிறிது நேரமாக இருந்தாலும் சரி. இதற்கு காலம் நிர்ணயம் இல்லை. எப்போது அவர் வருவாரோ அத்தோடு அது நிய்யத் முடிந்து விடும்.

கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாக ஆகாது 

قَالَ الزُّهْرِيُّ  يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة

ஆச்சரியமாக இருக்கிறது. நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்பு  ஒரு வருடம் கூட விடாத இந்த சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃபை மக்கள் எவ்வாறு விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது இந்த இஃதிகாஃப் நோன்பு என்ற வணக்கத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இரண்டு வணக்கமாக நிறைவேறுகிறது. உள்ளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பதும் உலக சிந்தனைகளில் இருந்து தூரமாக இருப்பதும் இதில் இருக்கிறது 

இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்

وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ  (الجوهرة)

இஃதிகாஃப் ஆரம்பித்த பின் நிர்பந்தத்தால் விடுபட்டால் அதை இன்னொரு நாளில் களா செய்ய வேண்டுமா ?

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري) بَاب مَنْ أَرَادَ أَنْ يَعْتَكِفَ ثُمَّ بَدَا لَهُ أَنْ..

 ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை  அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப்  பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது  நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன  என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை  ஆயிஷா , ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற , இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன.  பின்பு நபி ஸல் அவர்கள் நான்  இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் புஹாரீ – 2041, 

  இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி ஸல் அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில்  நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல.. 

அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன ?

கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் ( ஃபத்ஹுல் பாரீ) 

இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும்

ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள் 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ..قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ1 فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ2 تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)(باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى الطِّينِ)كتاب الأذان

ஒரே ஒரு லைலத்துல் கத்ரு இரவை பத்து நாட்களிலும் தேட வேண்டுமா என்று சங்கடப்பட்டு 27-ம் இரவில் மட்டும் அமல் செய்தால் அந்த இரவு கிடைத்து விடும் என்று எண்ணுபவர்களுக்கு மேற்படி ஹதீஸ் பகதிலடியாக  அமைந்துள்ளது. நபி ஸல் அவர்களை மூன்று பத்து நாட்களிலும் அந்த இரவை அல்லாஹ் தேட வைத்துள்ளான்

இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்- 

عن ابن عباس والحسن رض قالا  لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي)

ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود) بَاب الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ-الصَّوْمِ- 

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை நலம் விசாரிக்க வெளியே செல்ல மாட்டார். ஜனாஸாவில் கலந்து கொள்ள வெளியே வர மாட்டார். மனைவியைத் தொடக் கூடாது. மனைவியைதக் கட்டித் தழுவக் கூடாது. அவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். நோன்பு இல்லாமல் இந்த இஃதிகாஃப் கூடாது- ஆயிஷா ரழி 

المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة  قاله ابن خويز منداد عن مالك (قرطبي)

குர்துபி யில் உள்ள வாசகம்.  இஃதிகாஃப் இருப்பவர் பெரும்பாவம் செய்து விட்டால் அவரின் இஃதிகாஃப் முறிந்து விடும். காரணம் பெரும்பாவம் என்பது இஃதிகாஃபின் நோக்கத்திற்கு நேர் மாற்றமான செயலாகும் எவ்வாறு காற்றுப் பிரிந்தால் சுத்தம் இல்லாமல் ஆகி விடுமோ அதுபோல. -  இமாம் மாலிக் ரஹ்

வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும் இது பற்றி எல்லா சட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.                                               

பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்

أَنْ لاَ يَعُودَ مَرِيضًا : عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ4 يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ  أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)

நபி ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது  நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிப்பார்கள் நின்று கொண்டு நலம் விசாரிக்க மாட்டார்கள்

மலம்,ஜலம் கழிக்கச் செல்பவர் யாரிடமும் தேவையின்றி பேசிக் கொண்டிருக்காமல் உடனே திரும்பி விடுவது நல்லது

وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ  مِنْ الطَّهُورِ (الهداية)

கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது

நபி[ஸல்] ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது அதுவரை இறங்கிய குர்ஆனை முழுவதும் வானவர் ஓதிக்காட்டுவார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ (ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ

இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு

மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது

عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)

மஸ்ஜிதில் நான்கு செயல்களை நபி ஸல் தடுத்தார்கள்.1.விற்பது வாங்குவது 2.(அல்லாஹ்வை நினைவு படுத்தாத) கவிகள் படிப்பது 3.காணாமல் போன பொருளை சப்தமிட்டுத் தேடுவது4. தொழுகைக்கு முன்னால் மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசுவது

இஃதிகாஃப் இருப்பவர் யாரிடமும் பேசக் கூடாது என்று கருதுவதும் தவறாகும், முந்திய உம்மத்தினருக்கு அந்த அனுமதி இருந்தது

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم) 26فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.(اضواء البيان) عَنْ حَارِثَةَ قَالَ:كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلاَنِ فَسَلَّمَ أَحَدُهُمَا وَلَمْ يُسَلِّمِ الآخَرُ فَقُلْنَا أَوْ قَالَ مَا بَالُ صَاحِبِكَ لَمْ يُسَلِّمْ قَالَ : إِنَّهُ نَذَرَ صَوْمًا لاَ يُكَلِّمُ الْيَوْمَ إِنْسِيًّا. قَالَ عَبْدُ اللَّهِ بِئْسَمَا قُلْتَ إِنَّمَا كَانَتْ تِلْكَ امْرَأَةً قَالَتْ ذَلِكَ لِيَكُونَ لَهَا عُذْرا وَكَانُوا يُنْكِرُونَ أَنْ يَكُونَ وَلَدٌ مِنْ غَيْرِ زَوْجٍ إِلاَّ زِنًا - فَسَلِّمْ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ خَيْرٌ لَكَ(تفسير ابن كثير

ஹாரிஸா ரழி கூறினார்கள் நான் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அமர்ந்திருந்தேன் அப்போது இரு நபர்கள் வந்தார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் ஸலாம் கூற, மற்றவர் ஸலாம் கூறவில்லை. அப்போது நாங்கள் அதுபற்றி எங்களுக்கு சலாம் சொன்ன நபரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறினார் அந்த நபர் நோன்பு வைத்துள்ளார் அதனால் யாரிடமும் பேச மாட்டார் என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. மர்யம் அலைஹிஸ்ஸலாம் என்ற பெண்ணுக்கு மட்டும் அந்த அனுமதி இருந்த து. கணவன் இல்லாமல் குழந்தை பெற்றதால் அந்த சமூகம் அதைப் பழித்துப் பேசியதால் அல்லாஹ் அவ்வாறு உத்தரவிட்டான். இது நமக்குக் கிடையாது எனவே நீங்கள் பேசுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையைத் தடுங்கள் நன்மை கிட்டும்.                                                               

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ فَرَآهَا لَا تَكَلَّمُ فَقَالَ مَا لَهَا لَا تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً5 قَالَ لَهَا تَكَلَّمِي فَإِنَّ هَذَا لَا يَحِلُّ هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ فَتَكَلَّمَتْ (بخاري) باب أَيَّامِ الْجَاهِلِيَّةِ – كتاب مناقب الأنصار عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ وَلَا يَسْتَظِلَّ6 وَلَا يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ (بخاري)باب النَّذْرِ فِيمَا لاَ يَمْلِكُ وَفِى مَعْصِيَةٍ- كتاب الَأيمان والنذور

ஜைனப் என்ற பெண்ணிடம் அபூபக்கர் ரழி வருகை தந்தார்கள் அவர் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கண்டு இவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டது. உடனே அபூபக்கர் ரழி அவர்கள் அதைக் கண்டித்து இது அறியாமைக் காலத்தின் செயல் என்றார்கள் அதன் பிறகு அவர் பேசினார்

இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியின் வாசலில் நின்று நபி ஸல் மனைவியிடம் பேசிய சம்பவம்

عن صَفِيَّةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بُخاري)2038 باب هَلْ يَخْرُجُ الْمُعْتَكِفُ لِحَوَائِجِهِ إِلَى بَابِ الْمَسْجِدِ- كتاب الاعتكاف-شرح : (ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ )أَيْ تَرُدُّ إِلَى بَيْتِهَا(فَقَامَ مَعَهَا يَقْلِبُهَا )أَيْ يَرُدُّهَا إِلَى مَنْزِلِهَا (عَلَى رِسْلِكُمَا )أَيْ عَلَى هِينَتِكُمَا فِي الْمَشْي فَلَيْسَ هُنَا شَيْءٌ تَكْرَهَانِهِ (فتح الباري) وَالْمُحَصَّلُ مِنْ هَذِهِ الرِّوَايَات أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْسُبْهُمَا إِلَى أَنَّهُمَا يَظُنَّانِ بِهِ سُوءًا لِمَا تَقَرَّرَ عِنْده مِنْ صِدْقِ إِيمَانِهِمَا وَلَكِنْ خَشِيَ عَلَيْهِمَا أَنْ يُوَسْوِسَ لَهُمَا الشَّيْطَان ذَلِكَ لِأَنَّهُمَا غَيْرُ مَعْصُومَيْنِ فَقَدْ يُفْضِي بِهِمَا ذَلِكَ إِلَى الْهَلَاكِ فَبَادَرَ إِلَى إِعْلَامهمَا (فتح الباري)

  கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருந்த நேரத்தில் அவர்களுடைய மனைவி அங்கு வந்தார்கள் இரவு நேரமாக இருந்ததால் மனைவியை அனுப்புவதற்காக தெருமுனை வரை சென்றார்கள். அப்போது இரண்டு நபித் தோழர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அழைத்து இவர் என்னுடைய மனைவிதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த இருவரும் அல்லாஹ்வின் தூதரே தங்களை குறித்து எந்த சந்தேகமும் நாங்கள் கொள்ளவில்லை என்று கூறினார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமின் மகனுடைய உடம்பில் ஷைத்தான் ரத்தம் ஓடும் இடமெல்லாம் ஓடுகிறான் என்றார்கள். அதாவது இப்போது உங்கள் மனதில் சந்தேகம் இல்லா விட்டாலும் பின்னால் உங்களின் மனதில் சந்தேகத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். எனவே நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.

படிப்பினை- நம் மீது தவறு இல்லா விட்டாலும் பிறர் தவறாக எண்ணும்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற பாடமும்  இதில் உண்டு இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட சந்தேகப்படும்படி நடந்து கொள்பவர்கள்தான் அதிகம். ஏனெனில்அவர்களின் தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் மற்றவர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வதை காணலாம் சந்தேகக்கோடு அது வந்தாலே கேடு என்று சொல்வார்கள். எனவே இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். சில சமயங்களில் நாம் என்னதான் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும் கூட ஷைத்தான் நம்மைப்பற்றி மற்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு உண்டு. எனவே அந்த சந்தேகம் ஏற்படும் முன்பே அதை நீக்குவது கட்டாயமாகும்

பொருள்-1,எந்த இரவைத் தேடுகிறீர்களோ அந்த இரவு இனிமேல் தான் வரவிருக்கிறது, 2, மூக்கின் நுனி 3, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது 4,நிற்க மாட்டார்கள் 5,மவுனமாகவே இருந்து ஹஜ் செய்வதாக, 6,நிழலில் ஒதுங்க மாட்டேன் 7,சிறைக்கைதிகள்

மார்க்கக் கல்வியின் அவசியம்

ஒவ்வொரு மஹல்லா தோறும் மக்தப் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தா...