31-01-2025 ★ ஷஃபான் 01 ★ ஹிஜ்ரி : 1446 ★ بسم الله الرحمن الرحيم
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى (55) طه
இது சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கம்
31-01-2025 ★ ஷஃபான் 01 ★ ஹிஜ்ரி : 1446 ★ بسم الله الرحمن الرحيم
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى (55) طه
24-01-2025 ★ ரஜப் 23 ★ ஹிஜ்ரி :1446 ★ بسم الله الرحمن الرحيم
அறிவு ஏற்கா விட்டாலும் கண்டிப்பாக நம்ப வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري)- باب فَضْلِ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ – الدعوات
கருத்து- அல்லாஹ்வுக்கு சில மலக்குகள் உள்ளனர். அவர்கள் பூமியெங்கும் பல குழுக்களாக சுற்றித் திரிந்து அல்லாஹ்வை திக்ரு செய்பவர்களைத் தேடி அலைவார்கள். அப்படியொரு கூட்டத்தை அவர்களில் ஒரு சாரார் கண்டால் அவர்கள் மற்ற மலக்குகளையும் அங்கு அழைத்து வாருங்கள் நாம் தேடியவர்கள் இங்கே உள்ளனர் என்று கூறி அழைப்பார்கள். அனைவரும் அந்த மனிதர்களை தங்களுடைய இறக்கைகளால் ஒன்றன் மேல் ஒன்றாக ஆகாயம் வரை சூழ்ந்து கொண்டு அந்த மனிதர்களுக்காக துஆச் செய்வார்கள். பின்பு அல்லாஹ்விடம் சென்று அந்த அடியார்களின் நன்மைகளை சமர்ப்பிக்கும்போது அல்லாஹ் அவர்களிடம் என்னுடைய அடியார்கள் எதை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்பான். அனைத்தையும் அவன் அறிந்திருந்தும் கூட இவ்வாறு கேட்பான். அதற்கு மலக்குகள் உன்னுடைய அடியார்கள் உன்னை தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றனர் உன்னை புகழந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் என்னைப் பார்க்காமலேயே இந்த அளவு என்னைத் துதிப்பவர்கள் என்னைப் பார்த்தால் எந்த அளவு திக்ரு செய்வார்கள் என்று கேட்பான். உன்னைப் பார்த்தால் இன்னும் அதிகமாக உன்னை திக்ரு செய்வார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் எதை என்னிடம் கேட்கிறார்கள் என்று வினவும்போது உன்னுடைய அடியார்கள் உன்னிடம் சுவனத்தைக் கேட்கின்றனர் என்று கூறுவர். அதையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் சுவனத்தைப் பார்க்காமலேயே இந்த அளவுக்கு சுவனத்தைக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவு அதைக் கேட்பார்கள் என்று வினவும்போது சுவனத்தைப் பார்த்தால் இன்னும் அதிகமாக அதை உன்னிடம் கேட்பார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் எதை விட்டும் என்னிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள் என்று வினவும்போது உன்னுடைய அடியார்கள் உன்னிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றனர். என்று கூறுவர். அதையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் நரகத்தைப் பார்க்காமலேயே இந்த அளவுக்கு அதைவிட்டும் பாதுகாப்புக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவு பாதுகாப்புக் கேட்பார்கள் என்று வினவும்போது நரகத்தைப் பார்த்தால் இன்னும் அதிகமாக அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கேட்பார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள். அடுத்து அல்லாஹ் அம்மலக்குகளிடம் உங்களை சாட்சியாகவைத்து நான் இவர்களை மன்னித்து விட்டேன் என்று கூறுவான். அதற்கு அந்த மலக்குகல் ரப்பே இவர்களில் ஒருவர் வேறு ஒரு தேவைக்காக வந்தவர் இவர்களுடன் அமர்ந்துள்ளார்.அவரிடம் உளத்தூய்மை இல்லை என்று கூறுவர். அதற்கு அல்லாஹ் கூறுவான். பரவாயில்லை. இவர்களுடன் சேர்ந்து இருந்த தால் அவரையும் நான் மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான்.
இவ்வாறு அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும் அதை முஃமின் நம்புவார். அது போன்று தான் மிஃராஜ்.
விஞ்ஞானம் வளராத அக்காலத்தில் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தை நிறைந்த ஈமான் உடையவர்கள் மட்டுமே நம்பினர்.
قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)
நிறைந்த ஈமான் உள்ளவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மேற்கொள்ளும் விண்ணுலகப் பயணம் அவருடைய ஆன்மா ஏழாவது வானம் வரை சென்று வரும். அந்த ஆன்மாவுக்கான வரவேற்பு பற்றிய நீண்ட ஹதீஸ்
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمَّا يُلْحَدْ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَلَسْنَا حَوْلَهُ وَكَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ وَفِي يَدِهِ عُودٌ يَنْكُتُ فِي الْأَرْضِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ثُمَّ قَالَ إِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنْ السَّمَاءِ بِيضُ الْوُجُوهِ كَأَنَّ وُجُوهَهُمْ الشَّمْسُ مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ وَحَنُوطٌ مِنْ حَنُوطِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ عَلَيْهِ السَّلَام حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ فَيَقُولُ أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنْ اللَّهِ وَرِضْوَانٍ قَالَ فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ فِي السِّقَاءِ فَيَأْخُذُهَا فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَأْخُذُوهَا فَيَجْعَلُوهَا فِي ذَلِكَ الْكَفَنِ وَفِي ذَلِكَ الْحَنُوطِ وَيَخْرُجُ مِنْهَا كَأَطْيَبِ نَفْحَةِ مِسْكٍ وُجِدَتْ عَلَى وَجْهِ
الْأَرْضِ قَالَ فَيَصْعَدُونَ بِهَا فَلَا يَمُرُّونَ يَعْنِي بِهَا عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الطَّيِّبُ فَيَقُولُونَ فُلَانُ بْنُ فُلَانٍ بِأَحْسَنِ أَسْمَائِهِ الَّتِي كَانُوا يُسَمُّونَهُ بِهَا فِي الدُّنْيَا حَتَّى يَنْتَهُوا بِهَا إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَسْتَفْتِحُونَ لَهُ فَيُفْتَحُ لَهُمْ فَيُشَيِّعُهُ مِنْ كُلِّ سَمَاءٍ مُقَرَّبُوهَا إِلَى السَّمَاءِ
الَّتِي تَلِيهَا حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ اكْتُبُوا كِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ وَأَعِيدُوهُ إِلَى الْأَرْضِ فَإِنِّي مِنْهَاخَلَقْتُهُمْ وَفِيهَا أُعِيدُهُمْ وَمِنْهَا أُخْرِجُهُمْ تَارَةً أُخْرَى قَالَ فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ فَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ رَبِّيَ اللَّهُ فَيَقُولَانِ لَهُ مَا دِينُكَ فَيَقُولُ دِينِيَ الْإِسْلَامُ فَيَقُولَانِ لَهُ مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ فَيَقُولُ هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولَانِ لَهُ وَمَا عِلْمُكَ فَيَقُولُ قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ فَيُنَادِي مُنَادٍ فِي السَّمَاءِ أَنْ صَدَقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنْ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنْ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ قَالَ فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ قَالَ وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ حَسَنُ الثِّيَابِ طَيِّبُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ لَهُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الصَّالِحُ فَيَقُولُ رَبِّ أَقِمْ السَّاعَةَ حَتَّى أَرْجِعَ إِلَى أَهْلِي وَمَالِي..
قَالَ وَإِنَّ الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مِنْ السَّمَاءِ مَلَائِكَةٌ سُودُ الْوُجُوهِ مَعَهُمْ الْمُسُوحُ فَيَجْلِسُونَ مِنْهُ مَدَّ الْبَصَرِ ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ فَيَقُولُ أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ اخْرُجِي إِلَى سَخَطٍ مِنْ اللَّهِ وَغَضَبٍ قَالَ فَتُفَرَّقُ فِي جَسَدِهِ فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُّودُ مِنْ الصُّوفِ الْمَبْلُولِ فَيَأْخُذُهَا فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَجْعَلُوهَا فِي تِلْكَ الْمُسُوحِ وَيَخْرُجُ مِنْهَا كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ وُجِدَتْ عَلَى وَجْهِ الْأَرْضِ فَيَصْعَدُونَ بِهَا فَلَا يَمُرُّونَ بِهَا عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الْخَبِيثُ فَيَقُولُونَ فُلَانُ بْنُ فُلَانٍ بِأَقْبَحِ أَسْمَائِهِ الَّتِي كَانَ يُسَمَّى بِهَا فِي الدُّنْيَا حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُسْتَفْتَحُ لَهُ فَلَا يُفْتَحُ لَهُ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ{لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ}فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ اكْتُبُوا كِتَابَهُ فِي سِجِّينٍ فِي الْأَرْضِ السُّفْلَى فَتُطْرَحُ رُوحُهُ طَرْحًا ثُمَّ قَرَأَ{وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ}فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيَقُولَانِ لَهُ مَا دِينُكَ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيَقُولَانِ لَهُ مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيُنَادِي مُنَادٍ مِنْ السَّمَاءِ أَنْ كَذَبَ فَافْرِشُوا لَهُ مِنْ النَّارِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا وَسَمُومِهَا وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ وَيَأْتِيهِ رَجُلٌ قَبِيحُ الْوَجْهِ قَبِيحُ الثِّيَابِ مُنْتِنُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُوءُكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالشَّرِّ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الْخَبِيثُ فَيَقُولُ رَبِّ لَا تُقِمْ السَّاعَةَ (أحمد)حدبث البراء بن عازب رضي الله عنه –مشكاة- باب ما يقال عند من حضره الموت-كتاب الجنائز
மிஃராஜ் உடைய சம்பவம் பல்வேறு படிப்பினைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த மிஃராஜ் சம்பவத்தை நாம் ஒவ்வொரு வருடமும் செவியுறும்போது நம் வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்
நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்
மிஃராஜ் பயணத்தை நம்பாத காஃபிர்கள் நீங்கள் சென்று வந்த பைத்துல் முகத்தஸை வர்ணித்துக் காட்டுங்கள் என நபி ஸல் அவர்களிடம் கூறிய போது அல்லாஹ் பைத்துல் முகத்தஸை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டினான் அதைப் பார்த்த படியே நபி ஸல் வர்ணித்துக் காட்டினார்கள்
عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ
குறைஷிகள் என்னை பொய் படுத்திய போது நான் (கஃபா) ஹிஜ்ர் அருகே நின்றிருந்தேன்
அப்போது அல்லாஹ் பைத்துல் முகத்தஸை என் கண் முன்னால் காட்சி அளிக்க வைத்தான்
நான் அதை நேரடியாக பார்ப்பது போல குரைஷிகளுக்கு பைத்துல் முகத்தஸை விவரித்துக் கொண்டிருந்தேன்
(بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق
கருத்து - எனது அடியான் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் மூலம் என்னை நெருங்குவதில்லை மாறாக உபரியான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்குகிறான் அப்படி அவன் நெருங்கும்போது அவன் பார்க்கும் கண்ணாக அவன் பிடிக்கும் கரமாக அவன் நடக்கும் கால்களாக நான் மாறி விடுகிறேன் அதாவது அவனுடைய காரியங்களை நான் நடத்துவேன்
புராக் விமானம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு...
அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர்.அதில் வளைகுடா நாடுகளே அதிகம் இடம்பெற்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்களை சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன.
நபி ஸல் அவர்களுக்கு மிஃராஜ் இரவிலும் ஆன்மீக ஆபரேஷன் நடத்தப்பட்டது. சிறு வயதில் நடத்தப்பட்டதைப் போன்று
عَنْ أَنَس رض يَقُولُ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ فَقَالَ آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ فَكَانَتْ تِلْكَ اللَّيْلَةَ فَلَمْ يَرَهُمْ حَتَّى أَتَوْهُ لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ وَتَنَامُ عَيْنُهُ وَلَا يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الْأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلَا تَنَامُ قُلُوبُهُمْ فَلَمْ يُكَلِّمُوهُ حَتَّى احْتَمَلُوهُ فَوَضَعُوهُ عِنْدَ بِئْرِ زَمْزَمَ فَتَوَلَّاهُ مِنْهُمْ جِبْرِيلُ فَشَقَّ جِبْرِيلُ مَا بَيْنَ نَحْرِهِ إِلَى لَبَّتِهِ حَتَّى فَرَغَ مِنْ صَدْرِهِ وَجَوْفِهِ فَغَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ بِيَدِهِ حَتَّى أَنْقَى جَوْفَهُ ثُمَّ أُتِيَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهِ تَوْرٌ مِنْ ذَهَبٍ مَحْشُوًّا إِيمَانًا وَحِكْمَةً فَحَشَا بِهِ صَدْرَهُ وَلَغَادِيدَهُ يَعْنِي عُرُوقَ حَلْقِهِ ثُمَّ أَطْبَقَهُ (بخاري) باب قَوْلِهِ ( وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا ) كتاب التوحيد
عَنْ أَنَسِ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ(مسلم)
கருத்து - ஹலீமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிள்ளைகளுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளையாடிக் கொண்டிருந்த போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அங்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை படுக்க வைத்து அவர்களின் இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து இது ஷைத்தானின் துண்டு என்று கூறி வெளியே எறிந்தார்கள்
இதைக் கண்ட அந்த சிறுவர்கள் தனது தாயாரிடம் முகமது யாரோ கொள்ளுகிறார்கள் என்று கூற பதட்டத்துடன் அவர்கள் ஓடி வருவதற்குள் இங்கே ஆன்மீக ஆபரேஷன் நடந்து முடிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருவித பதட்டத்துடன் இருந்த நின்று கொண்டு இருந்தார்கள்
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சில் அந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதன் அடையாளத்தை நான் கண்டேன் என்று கூறினார்கள்
புறம் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபியவர்களுக்கு காட்டப்பட்டது
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)
சில மனிதர்களை நான் கண்டேன் அவர்களுடைய மிகவும் கூர்மையான நகங்களால் தங்களுக்கு தாங்களே தங்களுடைய உடம்பில் குத்திக் கிழித்துக் கொள்ளக் கூடியவர்களாக நான் கண்டு இவர்கள் யார் என்று நான் கேட்க இவர்கள்தான் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் அதாவது புறம் பேசியவர்கள் என்று எனக்கு பதில் கூறப்பட்டது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)
இருப்பதைப் பேசுவது தான் புறம். இல்லாததைப் பேசினால் இட்டுக்கட்டு.
வட்டி உண்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபிகளாருக்கு காட்டப்பட்டது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ-
மிஃராஜ் உடைய பயணத்தில் சில மனிதர்களை நான் கண்டேன் அவர்களுடைய வயிறுகள் ஒரு அறை போன்று இருந்தது
அதற்குள் பாம்புகளும் விஷ ஜந்துக்களும் உள்ளே இருந்து அவரை தீண்டிக்கொண்டிருந்தன அவர் யார் என்று கேட்டபோது அவர்கள் தான் உலகில் வாழும் போது ஹராமான வட்டியின் மூலம் வயிற்றை நிரப்பி கொண்டவர்கள் என்று எனக்கு பதில் சொல் கூறப்பட்டது
عَنْ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَحَدٌ أَكْثَرَ مِنْ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ
வட்டியினால் வரும் வருமானம் பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும் இறுதியில் அது நஷ்டத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்கும்
மிஃராஜ் இரவில் பாலை நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுத்ததும் அதன் படிப்பினைகளும்
ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم) ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)
படிப்பினை - பால் தூய்மையான பானம். என்பதால் இஸ்லாத்தை பாலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப் படும்போது சுத்தமான பாலாக இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ, காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில் மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும். மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.
பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
عن ابْن عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ (بخاري)-كتاب التعبير
மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்
1. ஐந்து நேரத் தொழுகைகள்
2. பகரா சூராவின் கடைசி இரண்டு வசனங்கள்
3. இணை வைக்காத மனிதர்களுக்கு அவர்களின் பெரும் பாவங்கள் அல்லாஹ் நாடினால் மன்னிக்கப்படுதல்
فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم) بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ ( المقحمات ) معناه الذنوب العظام الكبائر التي تهلك أصحابها وتوردهم النار وتقحمهم إياها والتقحم الوقوع في المهالك ومعنى الكلام من مات من هذه الأمة غير مشرك بالله غفر له المقحمات ]
خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ لَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الْآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ فَقَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ (مسلم) (بخاري) باب فَضْلُ الْبَقَرَةِ- فضائل القرآن (كفتاه ) حفظتاه من الشر ووقتاه من المكروه قيل أغنتاه عن قيام الليل وذلك لما فيهما من معاني الإيمان والإسلام والالتجاء إلى الله عز و جل والاستعانة به والتوكل عليه وطلب المغفرة والرحمة منه ]
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِىٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ.(مسلم) باب فَضْلِ الْفَاتِحَةِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ وَالْحَثِّ عَلَى قِرَاءَةِ الآيَتَيْنِ مِنْ آخِرِ الْبَقَرَةِ.-كتاب صلاة المسافربن -
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அமர்ந்திருந்தபோது வானில் இருந்து ஒரு சப்தம் கேட்டது
அப்போது தன் தலையை உயர்த்திய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் வானத்தின் இந்த கதவு இதற்கு முன்பு திறக்கப்படவே இல்லை அதன் வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினார் அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் இந்த வானவர் இதற்கு முன்பு இந்த பூமிக்கு வந்ததே இல்லை என்று கூறினார்கள்
பிறகு அந்த மலக்கு சொன்னார் நபியே இரண்டு செய்திகளை கொண்டு நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள்
இதற்கு முன்பு எந்த நபிக்கும் இந்த பாக்கியம் வழங்கப்படவில்லை
முதலாவது பாத்திஹா சூரா
இரண்டாவது பகரா சூராவின் கடைசி வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளைக் கொண்டு துஆ செய்தால் அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றாமல் இருப்பதில்லை
என்று கூறினார்
عَنْ حُذَيْفَةَ قَالَ فُضِّلَتْ هَذِهِ الْأُمَّةُ عَلَى سَائِرِ الْأُمَمِ بِثَلَاثٍ جُعِلَتْ لَهَا الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَجُعِلَتْ صُفُوفُهَا عَلَى صُفُوفِ الْمَلَائِكَةِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَا وَأُعْطِيتُ هَذِهِ الْآيَاتِ مِنْ آخِرِ الْبَقَرَةِ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ لَمْ يُعْطَهَا نَبِيٌّ قَبْلِي (مسند أحمد)
உலகில் ஓடும் பிரபலமான நதிகளான நைல் நதி, யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி ஆகியவற்றின் பிறப்பிடங்களை நபி ஸல் அவர்கள் மிஃராஜில் பார்த்துள்ளார்கள். இதன் விளக்கம் பின்வருமாறு
وَفِي الْحَدِيثِ وَحَدَّثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ رَأَى أَرْبَعَةَ أَنْهَارٍ يَخْرُجُ مِنْ أَصْلِهَا نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا هَذِهِ الْأَنْهَارُ قَالَ أَمَّا النَّهْرَانِ الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ...(مسلم) " فإذا في أصلها - أي في أصل سدرة المنتهى
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ (مسلم)
قال النووي : أن أصل النيل والفرات من الجنة ، وأنهما يخرجان من أصل سدرة المنتهى ، ثم يسيران حيث شاء الله ، ثم ينزلان إلى الأرض ، ثم يسيران فيها ثم يخرجان منها ، وهذا لا يمنعه العقل ، وقد شهد به ظاهر الخبر فليعتمد . ، وكذا سيحان وجيحان .
பூமியில் ஓடும் அத்தனை நதிகளும், ஆறுகளும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் தான். எனினும் இங்கே நான்கு நதிகளை முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் நைல் நதி எகிப்து, சூடான், உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்து செய்து கொண்டிருக்கும் நதியாகும். அதேபோல் யூப்ரடீஸ் நதி சிரியா, ஈராக் உள்ளிட்ட எத்தனையோ நாடுகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது
மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்களிடம் மலக்குகள் மிகவும் வலியுறுத்திய ஹிஜாமா
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِمَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا كُلُّهُمْ يَقُولُ لِي عَلَيْكَ يَا مُحَمَّدُ بِالْحِجَامَةِ (ابن ماجة )
விண்ணுலகப் பயணத்தின் போது நான் கடந்து சென்ற வானவர்களில் எவரும்
ஹிஜாமாவைப் பற்றி வலியுறுத்தாமல் இருக்கவில்லை
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنْ كَانَ فِي شَيْءٍ مِمَّا تَدَاوَوْنَ بِهِ خَيْرٌ فَالْحِجَامَةُ (ابن ماجة
நீங்கள் சிகிச்சை செய்து கொள்ளும் முறைகளில் மிகச் சிறந்தது ஹிஜாமாவாகும்
- عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَ الْعَبْدُ الْحَجَّامُ يَذْهَبُ بِالدَّمِ وَيُخِفُّ الصُّلْبَ وَيَجْلُو الْبَصَرَ (ابن ماجة - بَاب الْحِجَامَةُ- كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْتَجِمُ عَلَى هَامَتِهِ وَبَيْنَ كَتِفَيْهِ وَيَقُولُ مَنْ أَهْرَاقَ مِنْهُ هَذِهِ الدِّمَاءَ فَلَا يَضُرُّهُ أَنْ لَا يَتَدَاوَى بِشَيْءٍ لِشَيْءٍ (ابن ماجة
தொழுகை கடமையாக்கப்பட்ட இந்த இரவில் தொழுகையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்
عَنِ ابْنِ عُمَرَ ،رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ ، وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ ، وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ ، إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني) عَنْ أَبِي هُرَيْرَةَ رض أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ صَلَاتُهُ فَإِنْ وُجِدَتْ تَامَّةً كُتِبَتْ تَامَّةً وَإِنْ كَانَ انْتُقِصَ مِنْهَا شَيْءٌ قَالَ انْظُرُوا هَلْ تَجِدُونَ لَهُ مِنْ تَطَوُّعٍ يُكَمِّلُ لَهُ مَا ضَيَّعَ مِنْ فَرِيضَةٍ مِنْ تَطَوُّعِهِ ثُمَّ سَائِرُ الْأَعْمَالِ تَجْرِي عَلَى حَسَبِ ذَلِكَ (ابن ماجة)
தொழுகையை விட வியாபாரத்தை பெரிதாக கருதுபவர்களுக்கு எச்சரிக்கை
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة
பொழுது போக்கான விஷயங்களால் தொழுகையை மறந்தவர்கள் ஸகர் எனும் நரகத்தில் இருப்பார்கள்
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ (40) عَنِ الْمُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ (44) وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ (45) وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ (46) حَتَّى أَتَانَا الْيَقِينُ (47)المدثر
கடும் குளிர் காலத்திலும் அதிகாலை எழுந்து உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة
إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)
பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
رجب – 16 بسم الله الرحمن الرحيم
அழிவு நாளின் அடையாளங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இறுதி நாளின் கடைசி பத்து அடையாளங்களை தற்போது ஞாபகப் படுத்துவது அவசியமாகி விட்டது. ஏனெனில் இந்த அடையாளங்கள் நிகழ்வதற்கு இன்னும் காலங்கள் இருந்தாலும் அவற்றை ஞாபகப் படுத்துகின்ற சில நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ போன்று இறுதி நாளின் அடையாளமாக யமன் நாட்டில் துவங்கும் தீ யாராலும் அணைக்க முடியாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி மக்களை ஷாம் தேசத்தை நோக்கி விரட்டும். அதை நினைவு படுத்தும் வகையில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அமைந்துள்ளது அதுபோன்று போகிப் பண்டிகை என்ற பெயரில் வருடம் தோறும் மக்களால் ஏற்படுத்தப்படும் புகைமூட்டம் கியாமத்தின் அடையாளமான மாபெரும் புகை மூட்டத்தை ஞாபகப்படுத்துகிறது. எனவே அவற்றை நினைவு கூருவதுடன் தவ்பாவுக்கான வாய்ப்புகளை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும்போதே தவ்பா செய்ய வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ள மற்றொரு அடையாளத்தையும் (சூரியன் மேற்கில் உதயமாகுதல்) நினைவில் நிறுத்துவது அவசியமாகும்.
கியாமத் நாளின் பெரிய அடையாளங்கள் மொத்தம் பத்து.
عَنْ حُذَيْفَةَ رضي الله عنه اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)5558 كِتَاب الْفِتَنِ (تطرد الناس (إلى المحشر) وهو الشام (فيض القدير)
விளக்கம்- பத்து அடையாளங்கள் நிகழாமல் கியாமத் ஏற்படாது 1. தஜ்ஜால் வெளிப்படுவது. 2. ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருவது 3. யஃஜூஜ் மஃஜூஜ் வெளிப்படுவது 4.5.6. மாபெரும் மூன்று பூகம்பங்கள் இது வரலாறு காணாத அளவுக்கு இருக்கும். மேற்குலகில் ஒரு பூகம்பம் இன்னொன்று உலகில் மத்தியப் பகுதியில் இன்னொன்று இந்தியா போன்ற தென் பகுதியில்.. 7. மாபெரும் புகை மூட்டம் இது முஃமினுக்கு தலைவலி போன்று தான் இருக்கும். ஆனால் காஃபிர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்படும். 8. தாப்பதுல் அர்ழ் எனும் அதிசய பிராணி மினா அருகில் இருந்து வெளிப்படுவது 9. சூரியன் மேற்கில் உதயமாகுவது 10. யமனில் துவங்கும் மாபெரும் நெருப்பு உலக மக்களை ஷாம் தேசத்தில் கொண்டு வந்து சேர்க்கும். அதாவது தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ போன்று யமனில் துவங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி மக்களை ஷாம் தேசத்தை நோக்கி விரட்டும் மற்றொரு அறிவிப்பில் மஹ்ஷரை நோக்கி அந்த நெருப்பு விரட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகில உலகையும் அல்லாஹ் அழிக்கும் முன்பு அல்லாஹ் உலகின் பல பகுதிகளிலும் பரவும் நெருப்பு மூலம் அப்போதிருக்கும் அனைத்து மக்களும் ஷாமில் ஒன்று திரட்டப் படுவார்கள். பின்பு அனைத்தும் அழிக்கப்படும். பின்பு அனைத்தையும் அல்லாஹ் மீண்டும் உண்டாக்கும்போது மக்கள் அழிக்கப்படும்போது இருந்த அந்த ஷாம் பகுதி தான் மஹ்ஷர் மைதானமாக மீண்டும் உருவாக்கப்படும். பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட இன்றைய 16 நாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம் எனப்படும்.
கியாமத் நாளின் கடைசி அடையாளங்கள் அதிகமாக ஷாம் தேசத்தில் நிகழும்
عن سالم بن عبد الله عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ( سنخرج عليكم نار في آخر الزمان من حضر موت تحشر الناس ) قال : قلنا : بما تأمرنا يا رسول الله ؟ قال : ( عليكم بالشام ) (ابن حبان
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”கியாமத் நாளின் சமீபத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, ”அப்போது எங்கு அடைக்கலம் தேட வேண்டும்? என நாங்கள் கேட்டோம். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள்!” என்று பதில் கூறினார்கள்.
கடைசி காலத்தில் முஸ்லிம்கள் தஞ்சமடையும் இடமாக ஷாம் தேசம் இருக்கும்.
عن عبد الله بن حوالة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إنكم ستجندون أجنادا جندا بالشام، وجندا بالعراق، وجندا باليمن"، قال: قلت: يا رسول الله خِرْ لي؟ قال: "عليك بالشام فمن أبي فليلحق بيمنه وليسق من غدره، فان الله تكفل لي بالشام وأهله" (صحيح ابن حبان
அப்துல்லாஹ் இப்னு ஹவாலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”சிரியா படை, ஈராக் படை, யமன் படை என நீங்கள் பல ராணுவப் படைகளை பார்ப்பீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் பங்கு பெற்று போர் செய்வதற்கு இம்மூன்றில் எந்தப் படையை தேர்வு செய்ய வேண்டும்? என கேட்டேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! ஏனெனில், அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்!” அல்லாஹ் சிரியாவையும், அங்கு வாழும் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான்! கூறினார்கள்.
தஜ்ஜால் வருகை போன்ற குழப்பங்கள் நிகழும்போது சிரியா தான் முஃமின்களின் ஈமானுக்கு பாதுகாப்பான பூமியாக இருக்கும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَتَكُونُ هِجْرَةٌ بَعْدَ هِجْرَةٍ فَخِيَارُ أَهْلِ الأَرْضِ أَلْزَمُهُمْ مهَاجرَ إِبْرَاهِيمَ وَيَبْقَى فِى الأَرْضِ شِرَارُ أَهْلِهَا تَلْفِظُهُمْ أَرَضُوهُمْ6 تَقْذَرُهُمْ نَفْسُ اللَّهِ وَتَحْشُرُهُمُ النَّارُ مَعَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ (ابوداود) ضعيف- باب فِى سُكْنَى الشَّامِ-كتاب الجهاد- معنى الهجرة الثانية الهجرة إلى الشام والمراد بمهاجر إبراهيم الشام فإن إبراهيم لما خرج من العراق مضى إلى الشام (تقذرهم نفس الله) أي: أن الله تعالى يكرههم (مرقاة-عمدة القاري)
தஜ்ஜால் வெளியாகுவது பற்றிய செய்திகள்.
தஜ்ஜால் இப்போதும் இருக்கிறான். அல்லாஹ் நாடும்போது வெளிப்படுவான்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَأْتِى الْمَسِيحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ هِمَّتُهُ الْمَدِينَةُ حَتَّى يَنْزِلَ دُبُرَ أُحُدٍ ثُمَّ تَصْرِفُ الْمَلاَئِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ وَهُنَالِكَ يَهْلِكُ ». (مسلم) ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه
”கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான்”
தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ...... وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ. (ابن ماجة)
அபூ உமாமா ரழி அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை.
தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.
மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர், தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)
தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم
தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.
நபி ஈஸா அலை வருவதற்கு முன் இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலேயே இந்த பூமி செழிப்பாக இருக்கும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة وعَنْه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُعْطِي الْمَالِ بِغَيْرِ عَدَدٍ
கருத்து- முஸ்லிம்களுக்கு எதிராக உலகெங்கும் நடைபெறும் அநியாயம் காரணமாக அவர்கள் தஞ்சம் அடைய எங்கும் இடம் இல்லாத சூழ்நிலையில் இமாம் மஹ்தீ அலை அவர்களை அல்லாஹ் என்னுடைய குடும்பத்தில் பிறக்கச் செய்து அல்லாஹ் அவர்களை ஆட்சியாளராக ஆக்குவான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எந்த அளவுக்கு அநியாயம் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தால் பூமியை நிரப்புவார்கள். அவர்களை விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்கள் பொருந்திக் கொள்வார்ரகள். வானம் சரியான முறையில் மழையை இறக்கும். பூமி அதன் செழிப்புகளை சரியான முறையில் தந்து கொண்டிருக்கும். உயிருடன் இருப்பவர்கள் தங்களில் இறந்தவர்கள் குறித்து இன்ன மனிதர்களுக்குஅல்லாஹ் இன்னும் ஆயுளை அதிகமாக்கி இவருடைய காலத்தில் வாழ வைத்திருக்கலாமே என்று எண்ணுவார்கள்.மற்றொரு அறிவிப்பில் அவர்கள் கணக்குப்பார்க்காமல் மக்களுக்கு வாரி வழங்குவார்கள். என்றும் கூறப்பட்ட்டுள்ளது.
நபி ஈஸா அலை எங்கே எப்படி எந்த நேரம் இறங்குவார்கள் என தெளிவான முறையில் விபரிக்கப்பட்டுள்ளது
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلاَّتٍ دِينُهُمْ وَاحِدٌ وَأُمَّهَاتُهُمْ شَتَّى وَأَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ لأَنَّهُ لَمْ يَكُنْ بَيْنِى وَبَيْنَهُ نَبِىٌّ وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ فَإِنَّهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ سَبْطٌ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ بَيْنَ مُمَصَّرَتَيْنِ فَيَكْسِرُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُعَطِّلُ الْمِلَلَ حَتَّى يُهْلِكَ اللَّهُ فِى زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا غَيْرَ الإِسْلاَمِ ...(احمد وفي رواية لمسلم فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِىَّ دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأَسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلاَّ مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِى حَيْثُ يَنْتَهِى طَرْفُهُ ( مسلم)
நபிமார்கள் அனைவரும் ஒரே தந்தையின் மூலம் பல தாய்மார்களுக்குப் பிறந்த சகோதரர்களைப் போன்றாவார்கள். (அதிலும் குறிப்பாக) ஈஸா அலை அவர்களுடன் எனக்கு நெருக்கம் அதிகம். எனக்கும் ஈஸா அலை அவர்களுக்குமிடையில் வேறு நபி வரவில்லை. நிச்சயமாக ஈஸா அலை கடைசி காலத்தில் வருவார்கள். அவர்கள் இறங்கி வரும்போது அவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவர்கள் நடுத்தர உயரம் கொண்ட மாநிறமான மனிதராக படிந்த தலைமுடி கொண்டவர்களாக இருப்பார்கள். (முடிகள் கீழ்நோக்கி தொங்கும் விதமாக தலை முடி இருக்கும்.) இலேசான மஞ்சள் நிறம் கொண்ட இரண்டு ஆடைகளுடன் இரண்டு மலக்குகளின் இறக்கைகளின் மீது கை வைத்தவர்களாக டமாஸ்கஸ் நகரத்துடைய மஸ்ஜிதின் கிழக்குப் பகுதி மினாரா மீது இறங்குவார்கள். அவர்கள் தலையைத் தூக்கினாலும் தாழ்த்தினாலும் முத்துக்களைப் போன்று தண்ணீர் சொட்டுகள் அவர்களின் தலையில் இருந்து சொட்டும். அவர்களின் மூச்சுக் காற்று பட்டாலே காஃபிர் இறந்து விடுவான். அவர்களின் மூச்சுக் காற்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படும்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி வருவது ஃபஜ்ரு தொழுகையின் நேரமாக இருக்கும்.
அப்போது இமாம் மஹ்தீ அலை அவர்களும் இருப்பார்கள். ஈஸா அலை அவர்களைத் தொழ வைக்கச் சொல்லி இமாம் மஹ்தீ அலை கூறும்போது அதை அவர்கள் மறுத்து வேண்டாம் இந்த உம்மத்தில் ஒருவர் தொழ வைக்க நான் பின்னால் நின்று தொழுகிறேன் என்பார்கள் அதன்படி இமாம் மஹ்தீ அலை தொழ வைப்பார்கள். ஈஸா அலை பின்னால் நின்று தொழுவார்கள். أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ (بخاري
عن جَابِر رض قال سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ (مسلم
فيقول أميرهم أي المهدي - فيقول لا أي لا أصير إماما لكم لئلا يتوهم بإمامتي لكم نسخ دينكم (مرقاة
ஈஸா அலை காலத்தில் மஸ்ஜித்கள் நிரம்பி வழியும். உலகின் அத்தனை சொத்து சுகங்களையும் விட சஜ்தாவை அதிகம் விரும்புபவர்களாக மக்கள் ஆகி விடுவார்கள்
( حَتَّى تَكُون السَّجْدَة الْوَاحِدَة خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ) فَمَعْنَاهُ وَاَللَّه أَعْلَم أَنَّ النَّاس تَكْثُر رَغْبَتهمْ فِي الصَّلَاة وَسَائِر الطَّاعَات لِقِصَرِ آمَالهمْ بِقُرْبِ الْقِيَامَة ، وَقِلَّة رَغْبَتهمْ فِي الدُّنْيَا لِعَدَمِ الْحَاجَة إِلَيْهَا . وَهَذَا هُوَ الظَّاهِر مِنْ مَعْنَى الْحَدِيث (شرح النووي
ஒருமுறை இஸ்ரேலியப் பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தார். யூதர்களாகிய உங்களை கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம், மலைக்குப் பின்னால் நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும், மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்களே.. அது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டபோது அந்த அமைச்சர் “இது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இது எப்போது நடக்கும் என்பதும் தெரியும்.முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆ தொழுகைக்கு ஒன்று கூடுவது போல் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள். அப்போது இது நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று பேசியுள்ளார். முஸ்லிம்களிடம் இறையச்சம் வந்து விட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான்
யஃஜூஜ் மஃஜூஜ் பற்றிய செய்திகள்
حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ (96) الانبياء
கஹ்ஃப் ஸூராவில் துல்கர்னைன் அலை பற்றிக் குறிப்பிடும் போது இந்த யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் பற்றிக் கூறப்பட்டுள்ளது உலகை ஆண்ட துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன் மறையாத இடங்களுக்கெல்லாம் பிரயாணம் செய்தபோது ஒரு சமூகத்தினரை சந்தித்தார்கள். அவர்களின் கோரிக்கைப்படி யஃஜூஜ் மஃஜூஜ் செய்யும் அநியாய அட்டூழியங்களிலிருந்து காக்க இரு மலைகளிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பினார்கள். இன்றுவரை அந்த தடுப்புச்சுவர் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. கடைசி காலத்தில் ஈஸா அலை வந்த பின்பு இந்தக் கூட்டம் பெரிய அளவில் வெளியாகுவார்கள். தஜ்ஜாலைக் கொன்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால்கூட இக் கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது. நிறைய அட்டூழியம் செய்வார்கள். இறுதியில் அல்லாஹ் அவர்களில் ஒவ்வொருவரின் உடம்பிலும் ஒரு புழுவை சாட்டுவான். ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் இறந்து போவார்கள். அவர்களின் பிணங்களால் பூமி நிறைந்திருக்கும்போது அல்லாஹ் எண்ணற்ற பறவைகளை அனுப்புவான். அவை அப் பிணங்களை கடலில் கொண்டு சென்று வீசும். பின்பு மழை பெய்யும். பூமி சுத்தமாகும்.
தவ்பாவின் எல்லை (சூரியன் மேற்கில் உதயமாகுதல்)
இது இறுதி அடையாளம் என்றாலும் ஆரம்பத்தில் கூறுவது நல்லது.அடியானின் தவ்பா உண்மையாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் எப்போதும் ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கும் ஒரு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகள் 2 வகை. 1.ஒட்டு மொத்த மனிதர்களையும் கவனித்து 2.தனி மனிதனைக் கவனித்து.. முதலாவது வகை ஒட்டு மொத்த மனிதர்களுக்கானது. அதாவது கடைசி காலத்தில் சூரியன் மேற்கில் உதயமான பின்பு யாருடைய தவ்பாவும் ஏற்கப்படாது. இரண்டாவது வகை ஒரு மனிதனுக்கு மரண நேரம் நெருங்கும்போது நரகத்தை கண்கூடாக பார்த்த பின்பு அவனது தவ்பா ஏற்கப்படாது. இது ஒவ்வொரு தனி மனிதனுக்கானது.
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ (18) النساء
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ (مسلم)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ (مسلم
‘தாப்பதுல் அர்ள்’ எனும் அதிசயப் பிராணி தோன்றுவது
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل
தாப்பதுல் அர்ழ் குர்ஆனில் சுலைமான் அலை அவர்களின் சம்பவத்தில் கரையான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப் படுகிறது
فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض } الأرضة { تأكل منسأته } عصاه }سبأ 12 - 14 /
சூரியன் மேற்கில் உதயமாகுவதும் இந்த மிருகம் தோன்றுவதும் அடுத்தடுத்து நடைபெறும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَوَّلُ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى ». قَالَ عَبْدُ اللَّهِ فَأَيَّتُهُمَا مَا خَرَجَتْ قَبْلَ الأُخْرَى فَالأُخْرَى مِنْهَا قَرِيبٌ (ابن ماجة
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் மனனமிட்டேன். இன்னும் நான் அதனை மறக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்வதை நான் கேட்டேன். ‘அடையாளங்களில் முதலாவது வெளியாவது சூரியன் மேற்கில் உதிப்பதும், முற்பகல் நேரத்தில் அம்மிருகம் தோன்றி மக்களிடம் வருவதும் தான். இவற்றில் எது முதலில் தோன்றுகிறதோ அடுத்தது அதனையடுத்து கிட்டடியிலேயே தோன்றி விடும்.’ (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)
தாப்பதுல் அர்ழ் வெளியானவுடன் அது ஒவ்வொருவரின் நெற்றியிலும் அடையாளமிடும்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة) معانى بعض الكلمات : تجلو : تنوِّر - الحواء : البيوت المجتمعة من الناس على ماء - تخطم : تسم
‘தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும். எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர்.
அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும் பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப் பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு.
தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்
عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا. (ابن ماجة
புரைதா ரழி அவர்கள் கூறினார்கள் என்னை நபி ஸல் அவர்கள் மக்காவுக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அந்த இடம் முற்றிலும் காய்ந்து கிடந்தது. அதைச் சுற்றி மணல் இருந்த து அங்கு வைத்து நபி ஸல் அவர்கள் இங்கிருந்து தான் தாப்பதுல் அர்ழ் வெளியாகும் என்றார்கள் அப்போது அங்கே ஒரு கைத்தடி இருந்த து. என புரைதா ரழி கூறினார்கள் பிற்காலத்தில் புரைதா ரழி தன்னுடைய மகனுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற போதும் அந்த கைத்தடியைக் காட்டினார்கள்
سُئِلَ عَبْد اللَّه بْن عَمْرو عَنْ الدَّابَّة فَقَالَ الدَّابَّة تَخْرُج مِنْ تَحْت صَخْرَة بِجِيَادٍ وَاَللَّه لَوْ كُنْت مَعَهُمْ أَوْ لَوْ شِئْت بِعَصَايَ الصَّخْرَة الَّتِي تَخْرُج الدَّابَّة مِنْ تَحْتهَا قِيلَ فَتَصْنَع مَاذَا يَا عَبْد اللَّه بْن عَمْرو فَقَالَ تَسْتَقْبِل الْمَشْرِق فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الشَّام فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْمَغْرِب فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْيَمَن فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَرُوح مِنْ مَكَّة فَتُصْبِح بِعُسْفَانَ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ لَا أَعْلَم (تفسير ابن كثير
சுருக்கம்- அது வெளியானவுடன் கிழக்கு நோக்கி ஒரு சப்தமிடும். ஷாமை நோக்கி ஒரு சப்தமிடும். மேற்கு நோக்கி ஒரு சப்தமிடும். யமன் நோக்கி ஒரு சப்தமிடும். மக்கா நோக்கி ஒரு சப்தமிடும்.
மக்களெல்லாம் மினாவில் இருக்கும்போது இரவு நேரத்தில் வெளியாகும் என்ற நபிமொழி
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ لَيْلَةَ جَمْعٍ وَالنَّاسُ يَسِيرُونَ إِلَى مِنًى فَتَحْمِلُهُمْ بَيْنَ عَجُزِهَا وَذَنَبِهَا فَلاَ يَبْقَى مُنَافِقٌ إِلاَّ خَطَمَتْهُ ، قَالَ : وَتَمْسَحُ الْمُؤْمِنَ ، قَالَ : فَيُصْبِحُونَ وَهُمْ أَشَرُّ مِنَ الدَّجَّالِ. (مصنف ابن شبية
புகை மூட்டம் பற்றி...
قَالَ حُذَيْفَة رَضِيَ اللَّه عَنْهُ يَا رَسُول اللَّه وَمَا الدُّخَان ؟ فَتَلَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَة " فَارْتَقِبْ يَوْم تَأْتِي السَّمَاء بِدُخَانٍ مُبِين يَغْشَى النَّاس هَذَا عَذَاب أَلِيم " - يَمْلَأ مَا بَيْن الْمَشْرِق وَالْمَغْرِب يَمْكُث أَرْبَعِينَ يَوْمًا وَلَيْلَة وَأَمَّا الْمُؤْمِن فَيُصِيبهُ مِنْهُ كَهَيْئَةِ الزُّكْمَة وَأَمَّا الْكَافِر فَيَكُون بِمَنْزِلَةِ السَّكْرَان يَخْرُج مِنْ مَنْخِرَيْهِ وَأُذُنَيْهِ وَدُبُره" (تفسير ابن كثير
விளக்கம்- உலகம் முழுக்க ஏற்படும் மிகப் பெரிய புகை மண்டலம். இது முஃமினுக்கும் காஃபிருக்கும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முஃமின் இலேசான தலைவலி போன்ற நிலை மட்டுமே ஏற்படும். ஆனால் காஃபிருக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு மயக்க நிலையில் கொண்டு போய் விட்டு விடும். இந்த பூமியின் மத்தியப் பகுதியான அரபுலகிலும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகிலும் இந்தியாவை உள்ளடக்கிய கிழக்குப் பகுதியிலும் வரலாறு காணாத மூன்று பூகம்பங்கள் ஏற்படும்
10-o1-2025
رجب – 9 بسم الله الرحمن الرحيم
ஹலால் உணவுகளுக்கு பஞ்சம் ?
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ (145) الانعام
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ (نسائ) بَاب اجْتِنَابِ الشُّبُهَاتِ فِي الْكَسْبِ-كِتَاب الْبُيُوعِ
மேற்காணும் நபிமொழியின் அடிப்படையில் தற்காலத்தில் ஹராமை விட்டும் விலக நினைத்தாலும் விலக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் இன்று முஸ்லிம்களில் பலர் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இதுவெல்லாம் இல்லாமல் வாழ முடியாது என்று வசனம் பேசுகின்றனர். மற்றொரு வகையில் உண்மையான முஸ்லிம் ஹராமை விட்டும் விலக நினைத்து முழுக்க முழுக்க ஹலால் உணவுகளை சாப்பிட நினைத்தாலும் நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் நாம் உண்ணும் உணவுகளில் எது ஹலால் எது ஹராம் என்று பிரித்து அறிய முடியாத அளவுக்கு இன்றைக்கு சூழ்நிலைகள் மாறி விட்டது. பெரிய உணவகங்களில் ஹலால் என்று விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அந்த சான்றிதழ் அந்த உணவகங்களுக்கு முறையாக வழங்கப்பட்டது தானா என்ற சந்தேகம் நிலவுகிறது.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் ஹராமான உயிரினங்களின் பாகங்கள் கலந்த நிலையில் விற்கப் படுகின்றன. அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் அதை வெள்ளை நிறமாக ஆக்குவதற்காக மாட்டின் சில பாகங்கள் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது. அவை முறையாக அறுக்கப்பட்ட மாடுகள் தானா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. குறிப்பாக நம்முடைய பிள்ளைகள் உண்ணும் திண்பண்டங்கள் மூலமாக அவர்கள் வளர்ந்து வரும்போதே ஹராம் என்ற நஞ்சைக் கொடுத்துப் பழக்கும் விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யூதர்களின் சூழ்ச்சியால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சில திண்பண்டங்களில் ஹராம் கலக்கப்படுகிறது.
யூதர்களின் தயாரிப்புகளான சில திண்பண்டங்களில் பன்றியின் கொழுப்புகளும் கலக்கப்படுகின்றன. எந்தெந்த உணவுகளில் அவ்வாறு கலக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியா விட்டாலும் எந்தப் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ளதோ அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளது என்பது உறுதியான விஷயமாகும். பச்சை நிற அடையாளம் இருந்தால் அது சைவம் என்பதற்கான அடையாளமாகும். எனவே சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ள அசைவத்தை தவிர்க்க வேண்டும்.
KFC, PIZZA HUT, OREO, ORAL-B, colgate ,citi bank , nike, pepsi, LEE, esso, dunhill, Motorola
ஆகிய நிறுவனங்கள் யூதர்களுடையதாகும்
ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்தவுடன் முதல் வேலையாக உலகம் முழுவதும் உள்ள
பன்றிகளை ஏன் கொல்வார்கள் என்பதற்கான காரணம் இப்போது நமக்குப் புரியும்
காலங்கள் செல்லச் செல்ல பன்றியின் உலக மயமாக்கல் பெருகி விடும் என்பதால் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்தவுடன் முதல் வேலையாக உலகம் முழுவதும் உள்ள பன்றிகளைக் கொல்ல உத்தரவிடுவார்கள்.
عَنِ ابْنِ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ ، وَيَضَعَ الْجِزْيَةَ ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ » (بخاري
எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அத்தகைய அல்லாஹ் மீது சத்தியமாக மிகச் சிறந்த நீதிமானாக ஆட்சி செய்யும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கும் காலம் நெருங்கி விட்டது. அவ்வாறு அவர்கள் இறங்கியுவுடன் சிலுவையை ஒழிப்பார்கள். பன்றிகளைக் கொல்வார்கள். (இறை மறுப்பாளர்கள் மீது) ஜிஸ்யாவை ஏற்படுத்துவார்கள். செல்வம் பெருகும். இறுதியில் (அதற்கான) ஜகாத்தை யாரிடம் கொடுத்தாலும் வாங்காத சூழ்நிலை ஏற்படும்
உணவுப் பொருட்களில் பெரும்பாலும் கலப்படங்கள் பெருகுவதற்கு உற்பத்திக் குறைவு முக்கியமான காரணம்.
மனிதர்களின் பாவங்கள் பெருகும் போது உற்பத்திப் பொருட்களில் அல்லாஹ் பரக்கத்தை குறைப்பான்.
عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக அமையாவிட்டாலும் உற்பத்திக் குறைவு ஏற்படும். பரக்கத் நீங்கும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي
எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கிடையில் கலந்து ஆலோசிக்கப்படுவைகளாகவும் இருக்குமோ அதுவரை இந்த பூமியின் மேற்பரப்பு இந்த பூமியின் கீழ்பரப்பை விடவும் நல்லதாக இருக்கும். இந்த பூமி செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் பெண்களிடம் ஒப்படைக்கப் படக்கூடியதாகவும் ஆகி விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு இந்த பூமியின் மேற்பரப்பை விடவும் மேலானது. அதாவது இந்த பூமியில் பல விதமான சோதனைகள் தோன்றி மனிதர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடும். (இந்த பூமியின் செழிப்பு குறைந்து விடும்.)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழும்போது உற்பத்திப்பொருட்களில் அல்லாஹ் பரக்கத் தருவான்
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ (96)الاعراف -
{ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ (41الروم) أي بان النَّقْصَ في الزروعِ والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لَحَدٌّ يُقَامُ في الأرض أحبُّ إلى أهلها مِنْ أن يُمْطَروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أُقِيمتْ اِنْكفَّ الناسُ أو أكثرُهم أو كثيرٌ منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يَحْكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسرِ الصَّليب7 ووضعِ الجزية, (وهو تركها), فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أُخْرُجي بركتَكِ, فيأكل من الرُّمانة8 الفِئَامُ من الناس ويستظلون بقحفها ويكفي لبن اللقحة الجماعة من الناس وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أُقِيمَ العدلُ كَثُرَتِ البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب.(تفسير ابن كثير)
பொருள்- 7,சிலுவை 8,மாதுளை அந்த மாதுளையின் தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிதாக இருக்கும்
ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான் என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது அந்த கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின் அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும். இது ஹலால் உணவுகளால் கிடைக்கும் பரக்கத்.
நல்லவர்கள் நிறைந்திருக்கும்போது பரக்கத் பெருகும், கலப்படம் இருக்காது என்பதற்கு மற்றொரு உதாரணம்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقِيءُ الْأَرْضُ أَفْلَاذَ كَبِدِهَا أَمْثَالَ الْأُسْطُوَانِ مِنْ الذَّهَبِ وَالْفِضَّةِ قَالَ فَيَجِيءُ السَّارِقُ فَيَقُولُ فِي مِثْلِ هَذَا قُطِعَتْ يَدِي وَيَجِيءُ الْقَاتِلُ فَيَقُولُ فِي هَذَا قَتَلْتُ وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ فِي هَذَا قَطَعْتُ رَحِمِي ثُمَّ يَدَعُونَهُ فَلَا يَأْخُذُونَ مِنْهُ شَيْئًا (مسلم
கருத்து-கடைசி காலத்தில் இந்தபூமி தன் ஈரக்குலையை தங்கம் வெள்ளியால் ஆன தூண்களாக வெளியே தள்ளும். அதாவது இந்த பூமியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தங்க உலோகங்கள் தானாக மேலே வரும். எந்த தங்கம் இன்று பல மைல் தூரம் பூமியைத் தோண்டி வெட்டி எடுத்தாலும் சிறிதளவு மட்டுமே கிடைக்கிறதோ அத்தகயை தங்கம் வெள்ளி படிமங்கள் பெரும் பெரும் தூண்களாக ஆங்காங்கே பாறைகளைப் போன்று கிடக்கும். ஒரு காலத்தில் தங்கத்தை திருடி அதற்காக கை வெட்டப்பட்டு அப்போது திருந்தி வாழும் ஒரு மனிதர் இதற்காகவா என் கை வெட்டப்பட்டது என்று கூறுவார்.தங்கத்திற்காக கொலை செய்தவர் இதற்காகவா நான் கொலை செய்தேன் என்று கூறுவார். நகை (சம்பந்தமான தகராறு) காரணமாக உறவுகளைத் துண்டித்தவர் (உதாரணமாக நகை குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் அல்லது கணவர்) இதற்காகவா நான் உறவினர்களுடன் சண்டையிட்டேன் என்று கூறுவார். கடைசியில் யாரும் அதை எடுக்க மாட்டார்கள். அது அப்படியே அனாமத்தாக கிடக்கும். அந்த அளவுக்கு அல்லாஹ் பரகத்தைத் தருவான்.
நல்லோர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு கோதுமை என்பது பேரீத்தங்கொட்டை அளவு இருந்தது
وقد ذكر الامام أحمد فى مسنده فى ضمن حديث قال وجدت في خزائن بعض بني أمية حنطة الحبة بقدر نواة التمرة وهي في صرة مكتوب عليها كان هذا ينبت في زمن من العدل وكثير من هذه الأفات أحدثها الله سبحانه وتعالى بما أحدث العباد من الذنوب (تفسير لابن القيم
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் தனது நூலில் எழுதியுள்ளார்கள். நான் பனூ உமய்யா குலத்தாரில் சிலர் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்களில் ஒரு கோதுமையை பார்த்தேன். அது ஒரு பையில் இருந்தது. பேரீத்தம்பழத்தின் கொட்டை அளவுக்கு பெரிதாக இருந்தது. அதிலே பின்வரும் வாசகம் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில் விளைந்ததாகும்.
நல்லோர்கள் குறைந்து, பரக்கத்தும் குறைந்து ஹராம் அதிகரித்து விட்டால் துஆ ஏற்கப்படாது
ஹராம் என்பது நமக்கே தெரியாத நிலையில் அதை உண்டாலும் அதன் பிரதிபலிப்பு சிறிதளவேனும் இருக்கும்
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஒரு கொடுங்கோலர் என்பதை நாம் அறிவோம். அவர் கொல்லப்பட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்கள். காரணம் அவருடைய கப்ரு எங்கே என்று தெரிந்தால் மக்கள் தோண்டி எடுத்து அந்த உடலை சித்ரவதை செய்வார்கள் என்னும் அளவுக்கு அவருடைய ஆட்சியில் கொடுமைகள் அதிகம் இருந்தன. அவர் ஆட்சிக்கு வந்த புதிதில் ஒரு சிலர் ஹஜ்ஜாஜிடம் உங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கையேந்தி துஆ செய்தால் உங்களுடைய ஆட்சி உடனே அகற்றப்பட்டு விடும் என்றனர். உடனே ஹஜ்ஜாஜ் ஒருவேளை செய்தார். ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முக்கியமாக எவர்களுடைய துஆக்கள் உடனே ஏற்கப்படும் என்று கூறப்பட்டதோ அவர்களும் அழைக்கப்பட்டனர். அனைவரும் விருந்து உண்டனர். விருந்து முடிந்தவுடன் ஹஜ்ஜாஜ் மக்களை நோக்கி இனிமேல் உங்களில் யாருடைய துஆவைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் கொடுத்த உணவு ஹராமான உணவாகும். அது உங்களின் வயிற்றுக்குள் சென்று விட்டது எனவே எனக்கு எதிராக யார் துஆ செய்தாலும் அது ஏற்கப்படாது என்றார். தங்களை அறியாமல் வயிற்றுக்குள் சென்று விட்ட ஹராமான உணவுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிப்பான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இங்கே ஹஜ்ஜாஜ் சொன்ன வார்த்தை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்று ஹஜ்ஜாஜ் செய்த வேலையை இன்றைய முஸ்லிம் உலகிற்கு எதிராக யூத பயங்கரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள் பலவற்றில் பன்றியின் உதிரி பாகங்களை கலந்து விற்கப்படுகின்றன. இது போதாதா? நமது துஆக்களின் பவர் குறைவதற்கு...?
பன்றியை எவ்வளவு தான் ஆரோக்கியமான சூழலில் வளர்த்தினாலும் பன்றி பன்றி தான். அதன் இயற்கை குணம் மாறப் போவதில்லை. இன்று பெரும்பாலும் மக்களிடம் வெட்கம் எடுபட்டுப் போனதற்கு பன்றி இறைச்சியின் உலக மயமாக்கலும் ஒரு காரணம். ஹராமை ஹராம் என்று தெரியாமல் உண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
தன் உணவு ஹராமானதா அல்லது ஹலாலானதா என்பதைப் பற்றி அறவே பொருட்படுத்தாத காலம் வரும் என்ற முன்னறிவிப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ (بخاري) بَاب قَوْلِ اللَّهِ تَعَالَى {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} (كتاب التفاسير)
ஷரீஅத்தை பேணி வாழ முடியாத காலத்திலும் தன்னால் முடிந்த வரை பேணுதலாக வாழ்பவரின் சிறப்பு
عَنْ الْمُعَلَّى بْنِ زِيَادٍ رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ (مسلم) بَاب فَضْلِ الْعِبَادَةِ فِي الْهَرْجِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ- المراد بالهرج هنا الفتنة واختلاط أمور الناس وسبب كثرة فضل العبادة فيه أن الناس يغفلون عنها ويشتغلون عنها (شرح النووي علي مسلم)
சோதனையான காலத்திலும் இபாதத் செய்வது (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வது) என்னுடன் ஹிஜ்ரத் செய்வதற்கு ஈடாகும்
ஹலால் உணவு நிறைவாக கிடைக்காத சூழ்நிலைகளில்
கிடைத்த வரை மட்டுமே ஹலால் உணவை உண்டு பசியுடன் காலம் கழித்த நம் முன்னோர்கள்
இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களின் முன்னால் மாணவரான அஹமத் இப்னு ஹன்பல் அவர்கள் தம் ஆசிரியரை பார்க்க தாம் வரவிருப்பதாக சொல்லியனுப்புகிறார்கள் அதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் மிகவும் மிகவும் மகிழ்ந்து தம்முடைய இந்நாள் மாணவர்களிடம் என்னுடைய மாணவர் வருகிறார் அவரை நீங்கள் நன்கு உபசரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் வந்தவுடன் ஆசிரியரை நலம் விசாரித்து விட்டு புறப்பட எண்ணிய போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இருங்கள் இங்கே தங்கி விட்டு நாளை செல்லுங்கள் அன்புடன் கூற, அதை ஏற்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் அங்கே தங்குகிறார்கள். அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தம் மாணவர்களை அழைத்து அவரை நன்கு உபசரியுங்கள் மறக்காமல் அவர் தங்கும் அறையில் உளூச் செய்ய தண்ணீர் வைக்க வேண்டும் ஏனெனில் என் முன்னால் மாணவர் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பவர் என்று கூற, மாணவர்களும் அவ்விதமே செய்தார்கள். அதிகாலையில் மாணவர்கள் சென்று பார்த்த போது தண்ணீர் அப்படியே இருக்கிறது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயம் மாணவர்களின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த அதை ஆசிரியரிம் கூறினார்கள் அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கும் இந்த விஷயத்தை நீங்கள் விட்டு விடுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்கள் அதிகாலையில் சுப்ஹுக்கு வந்த போது அவர்களிடம் நைசாகப் பேசி நேற்று நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தொழவில்லையா மாணவர்கள் வைத்த தண்ணீர் அப்படியே இருந்ததாக கூறினார்களே என அன்புடன் கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் சொன்ன பதில் - ஆசிரியர் அவர்களே கடந்த பல நாட்களாக ஹலாலான உணவு எனக்குக் குறைவாகவே கிடைத்த து. இந்த நிலையில் நேற்று இஷா முடிந்த பின் நீங்கள் வழங்கிய ஹலாலான உணவை திருப்தியாக சாப்பிட்ட பின் எனக்கு நல்ல சிந்தனைகளும், அதில் ஓர்மையும் ஏற்பட்டது நான் இஷாவிற்குச் செய்த உளூவுடன் இரவு முழுவதும் தூங்காமல் குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து பல சட்டங்களை எடுத்தேன். அப்படியே தஹஜ்ஜுத் நேரம் ஆகி விட்டது உளூவுடன் இருந்ததால் அப்படியே தஹஜ்ஜுத் தொழுது விட்டு சற்று நேரம் தூங்கி விட்டேன். அந்த நேரத்தில்தான் மாணவர்கள் வந்து பார்த்துள்ளார்கள் என்று கூறினார்கள்
கூடுமா கூடாதா என்ற சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் தான் ஒருவர் இறையச்சமுடையவராக ஆக முடியும்
عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ابن ماجة- بَاب الْوَرَعِ وَالتَّقْوَى-كتاب الزهد
சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொள்ளும் பேணுதல் குணம் ஒருவரிடம் இருந்தால் சிறந்த வணக்கசாலியாக மாறுவார்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ(ابن ماجة- بَاب الْوَرَعِ وَالتَّقْوَى-كتاب الزهد
அபூஹுரைராவே நீர் பேணுதலாக நடந்து கொண்டால் மக்களில் சிறந்த வணக்கசாலியாக ஆக முடியும்.உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்பவராக நடந்து கொண்டால் மக்களில் மிகச்சிறந்த நன்றியுள்ளவராக ஆக முடியும். உமக்கு எதை நீர் விரும்புவீரோ அதையே பிறர் விஷயத்திலும் நீர் விரும்பினால் நீர் உண்மை முஃமினாக இருக்க முடியும். உனது அண்டை வீட்டாரிடம் நீர் உபகாரமாக நடந்து கொண்டால் நீர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியும். சிரிப்பை குறைத்துக் கொள். ஏனெனில் அதிகம் சிரிப்பது உள்ளத்தை மவ்த்தாக்கி விடும்.
எந்த ஒரு பாக்கெட் உணவில் ஹராம் கலக்கப் பட்டுள்ளதாக
சந்தேகம் கொள்கிறோமோ அதையும் விட்டு ஒதுங்குவது நல்லதாகும்
عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاري)2051 قال ابنُ رجب في شرحِ حديث النعمان رضي الله عنه :يُستَدلُّ بهذا الحديثِ مَن يذهب إلى سدِّ الذرائع إلى المحرمات وتحريم الوسائل إليها؛ ويدلُّ على ذلك أيضا قواعد الشريعة تحريم قليل ما يُسكر كثيره، وتحريم الخلوة بالأجنبية، وتحريم الصلاة بعد الصبح وبعد العصر؛ سَدّاً لذريعةِ الصلاةِ عند طلوعِ الشمسِ وعند غروبها, ومنع الصائم من المباشرة إذا كانت تحرك شهوته, ومَنعَ كثيرٌ من العلماءِ مُباشَرةَ الحائضِ فيما بين سُرتها ورُكبتها إلا من وراء حائل كما كان النبي صلى الله عليه وسلم يأمر امرأته إذا كانت حائضا أن تتزر فيباشرها من فوق الإزار (موسوعة البحوث والمقالات العلمية)
விளக்கம்- மார்க்கத்தின் சட்டங்களை நாம் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டவை 2. ஹராம் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டவை 3. மேற்கூறப்பட்ட இரண்டுக்கும் மத்தியில் உள்ளவை.
இவற்றில் மூன்றாவதாக கூறப்பட்ட விஷயங்கள் தான் இன்று நம்முடைய ஈமானுக்கு சோதனையாக விஷயங்களாகும். அவை கூடுமா கூடாதா என்பது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருக்கும். அதன் உண்மை நிலையை பலர் அறிய மாட்டார்கள். யார் பேணுதல் அடிப்படையில் அவற்றையும் விட்டு விடுகிறார்களோ அவர் தனது மார்க்கத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமானவற்றில் விழுந்து விடுவாரோ அவருக்கு உதாரணம் வேலியைச் சுற்றி ஆடுகளை மேய விடும் ஆட்டு இடையனைப் போன்றாகும். தனக்கு அனுமதிக்கப்படாத வேலிக்கு அருகாமையில் தனது ஆடுகளை அவர் மேய விடும்போது அந்த ஆடுகள் வேலிக்குள்ளேயும் மேய்வதற்கு நீண்ட நேரம் ஆகாது. அதுபோல சந்தேகமானவற்றில் இவர் ஈடுபடும் போது அதற்கு நெருக்கமாக உள்ள ஹராமிலும் அவர் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்.
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ الشُّبُهَاتِ.
பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும் பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள் கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன் என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண் யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர் இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
ஜகாத்துடைய பேரீத்தம்பழமாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில் அதை சாப்பிடுவதை தவிர்த்த நபி ஸல் அவர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي فَأَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْقِيهَا (بخاري)2055قَالَ الْمُهَلَّب : لَعَلَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْسِم الصَّدَقَة ثُمَّ يَرْجِع إِلَى أَهْله فَيَعْلَق بِثَوْبِهِ مِنْ تَمْرِ الصَّدَقَة شَيْء فَيَقَع فِي فِرَاشه
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் என்னுடைய வீட்டுக்குச் சென்ற போது ஒரு பேரீத்தம்பழம் எனது படுக்கை விரிப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். அதை உண்ணுவதற்காக என் வாயருகே உயர்த்திய போது அது ஜகாத்துடைய பேரீத்தம்பழமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனவே அதை கீழே போட்டு விட்டேன்.
ஷுப்ஹாத் உடைய விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் மற்றொரு சம்பவம்
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ جَاءَتْ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْرَضَ عَنْهُ وَتَبَسَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَيْفَ وَقَدْ قِيلَ وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ (بخاري)2052 بَاب تَفْسِيرِ الْمُشَبَّهَاتِ
விளக்கம்-நபித் தோழர் உக்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், அவரின் மனைவி உம்மு யஹ்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அவ்விருவரும் குழந்தைகளாக இருந்த போது தாய்ப்பால் ஊட்டியதாக ஒரு பெண் வந்து கூறுகிறார். இது உண்மையானால் பால்குடி சகோதரத்துவ அடிப்படையில் இருவரும் கணவன், மனைவியாக நீடிக்க முடியாது.அப்பெண்ணின் வாக்கு மூலத்தை உக்பா ரழி நம்பவில்லை. அதை உறுதி செய்வதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இந்நிலையில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபித்தோழரிடம் “இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி அவளுடன் நீர் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அந்த மனைவியை விட்டு விலகி விடுமாறு அறிவுறுத்தினார்கள்
குறிப்பு- “ஷுப்ஹாத்” துக்குரிய விஷயங்கள் இன்று நம் சமுதாயத்தில் எவ்வளவோ உள்ளன. அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று சில விஷயங்களில் உலமாக்களின் ஃபத்வாக்கள் மாறி மாறி இருக்கலாம். அப்படிப்பட்ட விஷயங்களிலும் பேணுதல் அவசியம்.
முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...