வியாழன், 1 ஜூன், 2023

ஹஜ்ஜின் நினைவிடங்களும் படிப்பினைகளும்

 


02-06-2023

துல்கஃதா

 

بسم الله الرحمن الرحيم 

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 


 

மக்கா மதீனாவில் ஹாஜிகள் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களும் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதை அறிந்து கொண்டு ஹாஜிகளை அந்த இடங்களை சந்திக்கும்போது அது உணர்வுப் பூர்வமானதாக அமையும்.

அறியாமைக் காலத்தில்  குரைஷிகளிடமும் ஹலால் பேணுதல் இருந்ததன் அடையாளம்   ஹதீம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ " سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ؟ قَالَ: إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ: فَعَلَ ذَلِكَ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ" (بخاري

சுருக்கம்- ஹதீமைப் பற்றி அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது அதுவும் கஃபா தான் என்று கூறினார்கள் ஏன் அதை கஃபாவில் இணைக்கவில்லை என ஆயிஷா ரழி அவர்கள் கேட்ட போது அதற்கு நபி ஸல் உன்னுடைய சமூகத்தினர் அதாவது குறைஷிகள் கஃபாவைக் கட்டியபோது பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள் ஏன் அதன் வாசல் இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று ஆயிஷா ரழி அவர்கள் கேட்க, அனைவரும் எளிதாக அதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் விரும்பும் முக்கியமானவர்கள் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காகவும் குறைஷிகள் அவ்வாறு கட்டினார்கள் குறைஷிகள் இஸ்லாத்திற்கு புதிய நபர்களாக இருந்திருக்கா விட்டால் அதாவது நான் புதிதாக எதை எதையோ செய்கிறேன் என்று எண்ணைப் பற்றி அவர்கள் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள் என்றிருந்தால் நான் ஹதீமை கஃபாவுடன் இணைத்துக் கட்டியிருப்பேன். மேலும் வாசலை தரைக்கு நெருக்கமாகவும ஆக்கியிருப்பேன்   

عَنْ أَبِي وَهْبٍ الْمَخْزُومِيِّ أَنَّهُ قَالَ لِقُرَيْشٍ : لَا تُدْخِلُوا فِيهِ مِنْ كَسْبِكُمْ إلَّا طَيِّبًا وَلَا تُدْخِلُوا فِيهِ مَهْرَ بَغِيٍّ وَلَا بَيْعَ رِبًا وَلَا مَظْلَمَةٌ أَحَدٍ مِنْ النَّاسِ

குறைஷிகளுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற விளக்கம் ஃபத்ஹுல் பாரி நூலில் பின்வருமாறு உள்ளது   அபூ வஹ்ப் என்பவர் எழுந்து குறைஷிகளிடம் பேசினார் மக்களே நிச்சயமாக கஃபா ஆலயத்தின் கட்டிடப் பணியில் முறையான சம்பாத்தியத்தைத் தவிர  பயன்படுத்த வேண்டாம். வட்டிப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம். யாரிடமிருந்தும் அநியாயமாகப் பெறப்பட்ட பணத்தையும் பயன்படுத்த வேண்டாம்.

أن أبا وهب بن عايذ بن عمران بن مخزوم قال لقريش لا تدخلوا من كسبكم إلا طيبا ولا تدخلوا فيه مهر بغي ولا بيع ربا ولا مظلمة أحد من الناس وعند موسى بن عقبة أن الوليد بن المغيرة قال لا تجعلوا فيها مالا أخذ غصبا ولا قطعت فيه رحم ولا انتهكت فيه حرمة  وفي  رواية لا تدخلوا في بيت ربكم إلا طيب أموالكم وتجنبوا الخبيث فإن الله طيب لا يقبل إلا طيبا فلعلهما جميعا قالا ذلك (شرح الزرقاني

படிப்பினை- அறியாமைக் காலத்திலும் குறைஷிகளிடம் இத்தகைய பேணுதல் இருந்துள்ளது என்றால் இன்று நம்முடைய நிலை எவ்வாறு உள்ளது என்று சிந்திக்க வேண்டும்.

கஃபா கட்டப்பட்ட வரலாறு

   கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்.  3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்களிடமிருந்து அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது என்று சொல்லிக்கொண்டு,  ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு அப்பணியை செய்து முடித்தனர். ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர்.

قال مجاهد : خلق الله موضع هذا البيت قبل أن يخلق شيئا من الأرض بألفي سنة وأن قواعده لفي الأرض السابعة السفلى (قرطبي

5. யஜீத் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹிப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆளுநராக இருந்த போது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பிய படி கஃபாவை சீரமைத்தார்கள். 6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார். அப்துல்லாஹிப்னு ஜுபைர்  ரழிஅவர்களை கொலை செய்ததும் ஹஜ்ஜாஜ் தான். அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.  இப்னு ஜுபைர் ரழி அவர்கள் கட்டியதை ஹஜ்ஜாஜ் இடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அதை மாற்ற ஆலோசனை நடந்த போது கஃபா மன்னர்களின் விளையாட்டு மைதானமாக ஆகி விடக்கூடாது எனக்கூறி இமாம் மாலிக் ரஹ்அதை தடுத்து விட்டார்கள்

فَدَلَّ هَذَا عَلَى صَوَاب مَا فَعَلَهُ ابْن الزُّبَيْر فَلَوْ تُرِكَ لَكَانَ جَيِّدًا وَلَكِنْ بَعْد مَا رَجَعَ الْأَمْر إِلَى هَذَا الْحَال فَقَدْ كَرِهَ بَعْض الْعُلَمَاء أَنْ يُغَيَّر عَنْ حَاله كَمَا ذُكِرَ عَنْ أَمِير الْمُؤْمِنِينَ هَارُون الرَّشِيد أَوْ أَبِيهِ الْمَهْدِيّ أَنَّهُ سَأَلَ الْإِمَام مَالِكًا عَنْ هَدْم الْكَعْبَة وَرَدّهَا إِلَى مَا فَعَلَهُ ابْنُ الزُّبَيْر فَقَالَ لَهُ مَالِك يَا أَمِير الْمُؤْمِنِينَ لَا تَجْعَل كَعْبَة اللَّه مَلْعَبَة لِلْمُلُوكِ لَا يَشَاء أَحَد أَنْ يَهْدِمهَا إِلَّا هَدَمَهَا فَتَرَكَ ذَلِكَ الرَّشِيد (تفسير ابن كثير    

அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

عَنْ أَبِي ذَرّ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قُلْت يَا رَسُول اللَّه أَيّ مَسْجِد وُضِعَ أَوَّل ؟ قَالَ " الْمَسْجِد الْحَرَام " قُلْت : ثُمَّ أَيّ ؟ قَالَ " الْمَسْجِد الْأَقْصَى " قُلْت : كَمْ بَيْنهمَا ؟ قَالَ " أَرْبَعُونَ سَنَة (بخاري

  கஃபாவை நபி இப்றாஹீம் அலை அவர்கள் புதுப்பித்துக்  கட்டினார்கள். அதேபோல பைத்துல் முகத்தஸை நபி சுலைமான் அலை  புதுப்பித்துக்  கட்டினார்கள் என்பதே சரியான கருத்தாகும் காரணம் நபி இப்றாஹீம் அலை அவர்களின் காலத்திற்கும் நபி சுலைமான் அலை அவர்களின் காலத்திற்குமிடையே ஆயிரத்திற்கும் அதிகமான காலங்கள் இடைவெளி உள்ளது ஆனால் நபி ஸல் அவர்கள் கூறும்போது கஃபா கட்டப்பட்டதற்கும் பைத்துல் முகத்தஸ் கட்டப்பட்டதற்கும் இடையே இடைவெளி நாற்பது வருடம் இடைவெளி என்று கூறினார்கள் அப்படியானால் முதன் முதலில் இந்த இரண்டு பள்ளிகளும் மலக்குகளால் கட்டப்பட்ட போது நாற்பது வருட இடைவெளி என்று  தான் நபி ஸல் கூறியுள்ளார்கள்.

   நான்கு பொருட்களை மனிதன் எத்தனை முறை  பயன்படுத்தினாலும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள். முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது. மேலும் ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான். மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும். அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞர் கூறுகிறார். இப்பூமியின் மையத்தில் புள்ளி வைக்க வேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.

மகாமே இப்றாஹீம் வரலாறு

عَنْ أَنَسٍ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلَاثٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ{وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ}فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ (بخاري 402

ஹழ்ரத் உமர் ரழி அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மூன்று தருணங்களில் என் கருத்துக்குத் தோதுவாக ஆயத்தை இறக்கினான். 1.அல்லாஹ்வின் தூதரே மகாமே இப்றாஹீம் அருகே தொழ வேண்டும் என்று கூறினேன் அல்லாஹ் நான் கூறிய அதை வார்த்தையை ஆயத்தாக இறக்கினான்.  அல்லாஹ்வின் தூதரே உங்கள் வீட்டுக்கு நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் மனைவியரை ஹிஜாப் அணியச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று கூறினேன் அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான். 3. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீது மனைவிமார்கள் ஆட்சேபனை  தெரிவித்தார்கள். (அதாவது செலவுக்குக் கொடுக்கும் விஷயத்தில் ஆட்சேபனை  தெரிவித்தார்கள்.) அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இவர்களை தலாக் சொன்னாலும் அல்லாஹ் இவர்களுக்கு பதிலாக சிறந்த மனைவிமார்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தருவான் என்றேன். அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான். 

சஃபா மர்வாவில் ஸயீ செய்வது வாஜிப். அவ்வாறு இருந்தும் ஸயீ செய்தால் குற்றமில்லை என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துவதற்குக் காரணம்.  

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا (158) البقرة

ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا .....

وَكَانَ مِنْ أَهْل لَهَا يَتَحَرَّج أَنْ يَطُوف بِالصَّفَا وَالْمَرْوَة فَسَأَلُوا عَنْ ذَلِكَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُول اللَّه إِنَّا كُنَّا نَتَحَرَّج أَنْ نَطُوف بِالصَّفَا وَالْمَرْوَة فِي الْجَاهِلِيَّة فَأَنْزَلَ اللَّه عَزَّ وَجَلَّ " إِنَّ الصَّفَا وَالْمَرْوَة مِنْ شَعَائِر اللَّه فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اِعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّف بِهِمَا " قَالَتْ عَائِشَة : ثُمَّ قَدْ سَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ الطَّوَاف بِهِمَا فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَدَع الطَّوَاف بِهِمَا (تفسير ابن كثير

 அதாவது முன்புள்ள காலத்தில் சிரியாவில் இருந்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் கஃபாவுக்குள் வைத்து தவறாக நடந்து கொண்டனர். முத்தமிட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது அவர்களின் பெயர் இஸாஃப், நாஇலா என்று கூறப்படுகிறது. உடனே அல்லாஹ் அவர்களை கல்லாக மாற்றி  விட்டான். கல்லாக மாற்றப்பட்ட அவ்விரு சிலைகளும் சில காலம் கஃபாவுக்குள்ளேயே இருந்தன.சில காலங்களுக்குப்பின் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சஃபா மர்வா என்ற இரு மலைகளில் வைக்கப்பட்டன.  அதாவது சஃபாவில் ஒன்றும் மர்வாவில் ஒன்றும் வைக்கப் பட்டது. காலப்போக்கில் மக்கள் அதையும் வணங்க ஆரம்பித்து விட்டனர்.பின்னர் சில நல்லவர்களின் முயற்சியால் அது அங்கிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டது. இச்சம்பவம் நடந்த காரணத்தால் சஹாபாக்களுக்கு இந்த சஃபா, மர்வா இடையே ஸயீ செய்வதில் ஒரு நெருடல் இருந்த து என்ன இருந்தாலும் சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என்று தயங்கினார்கள். அதனால் அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கி வைத்தான். ஆக இன்றைக்கு நாம் அவ்விரு மலைக்குன்றுகளுக்கு நடுவே ஸயீ செய்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஹாஜரா அம்மையார் அவர்களின் நினைவாக நாம் ஓடுகிறோம். அந்த அன்னையின் உள்ளத்தில் எத்தகைய பயபக்தி இருந்த தோ  எப்படியேனும் அல்லாஹ் நமக்கு நமக்கு  உதவி செய்தான் என்று எப்படி உறுதியாக நம்பினார்களோ அதே போன்று நாமும் அல்லாஹ்வின் அருளை நாடி ஓட வேண்டும் என்பது இதன் கருத்தாக இருக்கிறது.

 இப்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம். சஃபா, மர்வா இடையே ஆண்கள் மட்டும் ஓட வேண்டும் என்றும் பெண்கள் நடந்து சென்றால் போதும் என்று சட்டம் உள்ளது ஆனால் உண்மையில் அன்றைக்கு ஓடியது ஒரு பெண்தானே அதன்படி இன்றைக்கும் பெண்கள் தானே ஓத வேண்டும் என்ற கேள்வி வருமானால் அதற்கு ஒரு பதில் கூறப் படுகிறது அதாவது ஒட்டு மொத்த பெண்களுக்கும் சேர்த்து அன்றைக்கு அன்னை ஹைஜரா அம்மையார் அவர்கள் ஓடி விட்டார்கள். எனவே இன்று பெண்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.

நினைவுச் சின்னங்கள் எதுவும் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது

பழைய தூண்கள் அப்படியே இருக்க அதற்கு மேலே தான் தற்போதைய தூண்கள் கட்டப்பட்டுள்ளன. நபி ஸல் அவர்களின் மிம்பரைக்கூட நல்லெண்ணத்தில் அடிப்படையில் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற நினைத்த போது அல்லாஹ் அதை விரும்பாததால் பல்வேறு எச்சரிக்கைகளை ஏற்படுத்தி எச்சரித்து அம்முயற்சியை தடுத்தான்

عن أبن الزناد أن النبي صلى الله عليه وسلم كان يجلس على المجلس ويضع رجليه على الدرجة الثانية فلما ولى أبو بكر رضي الله عنه قام على الدرجة الثانية ووضع رجليه على الدرجة السفلى فلما ولى عمر رضي الله عنه قام على الدرجة السفلى ووضع رجليه على الأرض إذا قعد فلما ولى عثمان رضي الله عنه فعل ذلك ست سنين من خلافته ثم علا إلى موضع النبيّ صلى الله عليه وسلم قالوا فلما أستخلف معاوية زاد في المنبر فجعل له ست درجات وكان عثمان أوّل من كسا المنبر قبطية قالوا فلما قدم معاوية عام حج حرك المنبر وأراد أن يخرجه إلى الشام فكسفت الشمس يومئذ حتى رؤيت النجوم فاعتذر معاوية رضي الله عنه إلى الناس وقال أردت أنظر إلى ما تحته وخشيت عليه من الأرضة وفي رواية له إن معاوية كتب إلى مروان بذلك فقلعه فأصابتهم ريح مظلمة بدت فيها النجوم نهارا فقال مروان إنما كتب إلى أن أرفعه من الأرض فدعا النجاجرة فعمل هذه الدرجات ورفعوه عليها وهي يعني الدرجات التي زادها ست درجات ولم يزد فيه أحد قبله ولا بعده- الكتاب:خلاصة الوفا بأخبار دار المصطفى                            

 சுருக்கம்- நபி ஸல் அவர்கள் மிம்பரில் மூன்றாம் படியில் அமர்ந்து 2-வது படியில் கால் வைப்பார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மரியாதை காரணமாக இரண்டாவது படியில் அமர்ந்து முதலாவது படியில் கால் வைத்தார்கள். உமர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் முதலாவது படியில் அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். உஸ்மான் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  வேறு வழியில்லாமல் உமர் ரழி அவர்களைப்போல் முதலாவது படியில்  அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். இவ்வாறு ஆறு மாதங்கள் செய்தார்கள். அதற்குப் பிறகு மஷ்வரா அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அமர்ந்த படிக்கட்டின்மீதே அமர்ந்தார்கள். முஆவியா ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  மிம்பரில் ஆறு படிக்கட்டுகளை அமைத்தார்கள். அதற்குப் பிறகு அதை விட யாரும் அதை அதிகப் படுத்தவில்லை. முஆவியா ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஆட்சி மையம் ஷாம் பகுதியாக இருந்த தால் நபி ஸல் அவர்களின் மிம்பரை அப்படியே இடம் பெயர்த்து ஷாமுக்குக் கொண்டு செல்ல எண்ணி அதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் அந்த முயற்சியில் ஈடுபட்டபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது மற்றொரு அறிவிப்பில் பட்டப் பகல் நேரத்திலேயே கடும் இருள் ஏற்பட்டு நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்தன. உடனே அந்த முயற்சி கை விடப்பட்டது. அப்போது தான் ஆறு படிக்கட்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதாவது நபி ஸல் அமர்ந்த படிக்கட்டு மேலே இருக்கும். அதில் யாரும் அமர வேண்டாம் என்ற மரியாதைக்காக அவ்வாறு செய்யப்பட்டது.

 

 

ரவ்ழாவைச் சுற்றி அமைக்கப் பட்ட பாதுகாப்புச் சுவர் பற்றி...

ஹிஜ்ரி 650 ல் எகிப்தை தலைமையாக கொண்டு அரபுலகை ஆட்சி செய்து நீதமானவராகவும், இரவில் நீண்ட நேரம் நின்று தொழும் பழக்கம் உடைய மன்னராகிய சுல்தான் நூருத்தீன் என்ற மன்னருடைய கனவில் நபி(ஸல்) தோன்றி, இந்த இரண்டு நபர்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று கூறி, பயங்கர கண்களுடைய இரு வரைக் காட்டி  விட்டு மறைந்து விட்டார்கள்.

உடனே திடுக்கிட்டு கண் விழித்து எழுந்த  மன்னர் அவர்கள் உளூச் செய்து தொழுது விட்டு தூங்கினார். அப்போதும் ஏதே கனவு தோன்றியது. இவ்வாறு மூன்று தடவை ஏற்பட்ட பிறகு இனியும் தாமதிக்கக் கூடாது என்றெண்ணி நற்குணம் கொண்ட தன் மந்திரி ஜலாலுதீனிடம் கூற, அதைக் கேட்ட அவர் நாம் இனியும் தாமதிக்காமல் உடனே மதீனாவுக்கு புறப்பட வேண்டும்.மேலும் இத்தகவலை நாம் யாரிடமும் சொல்லக் கூடாது என்றார். மன்னர் அன்று இரவிலேயே மதீனா செல்லும் ஏற்பாடுகளைச் செய்து, வேகமாகச் செல்லும் வாகனத்தில் பல செல்வங்களை ஏற்றிக் கொண்டு இருபதுவேலையாட்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகலாக பயணம் செய்து பதினாறு நாட்களில் மிஸ்ரில் (எகிப்து) இருந்து மதீனாவந்தடைந்தார்கள்.

பிறகு மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று ரவ்ழாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, மிகவும் கவலையுடன் அங்கு அமர்ந்திருந்திருந்தார். அப்போது மந்திரி மதீனாவாசிகளிடம் மக்களே! மன்னர் உங்களுக்காக நிறைய அன்பளிப்புகளை தர காத்திருக்கிறார். உங்களுக்காக மாபெரும் விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அனைவரும் வாருங்கள் என்று அறிவிப்புச் செய்தார். மன்னர் அவர்கள் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கும்போது அனைவரையும் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால் கனவில் கண்ட அந்த இருவர் அங்கே காணப் படவில்லை . அப்போது மன்னர் மதீனாவாசிகளை நோக்கி இன்னும் யாரேனும் இங்கே வராமல் விடுபட்டுள்ளார்களா? என விசாரித்தார். அப்போது மக்கள் ஆம்! மொராக்கோ  நாட்டைச் சார்ந்த இரு  நபர்கள் விடுபட்டுள்ளனர். அவர்கள் இங்கு வரவில்லை என்றார்கள். உடனே மன்னர்  அந்த இருவரையும் அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அங்கே வந்தவுடன் கனவில் கண்ட அவ்விருவர் இவர்கள் தான் என்று  உணர்ந்து கொண்டார்.

உடனே மன்னர் அவ்விருவரை.ம் நோக்கி  நீங்கள் யார்? என விசாரித்தார். அதற்கு அவர்கள் நாங்கள் மொராக்கோ நாட்டைச் சார்ந்தவர்கள். ஹஜ்ஜை முடித்து விட்டு ஜியாரத்திற்காக நாங்கள் இங்கு வந்தோம். பிறகு எங்களுக்கு நபியவர்களின் அருகாமையிலேயே இருக்க ஆசை ஏற்பட்டது. ஆகையால் இங்கேயே தங்கி விட்டோம் என்றார்கள்

மன்னர் அவ்விருவரை நோக்கி உண்மையைக் கூறி விடுங்கள் என்று கடுமையாக கேட்ட பின்பும்,  அவர்கள் முன்பு சொன்னதையே உறுதிப் படுத்தினார்கள். மன்னர் அவர்கள் அடுத்த படியாக அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்று மிக நுட்பமாக ஆராய்ந்தார்கள். ஆனால்  அங்கே எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதனால் மன்னர் அவர்கள் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அங்கு அவ்விருவரின் முஸல்லாக்கள் ஒரு பாயின் மீது விரிக்கப் பட்டிருந்தது. அதை எடுத்துப் பார்த்த போது அங்கு ஒரு கல் போடப் பட்டிருந்தது. அந்தக் கல்லை நீக்கிப் பார்த்த போது அங்கே ஒரு ஆழமான குழி வெட்டப் பட்டிருந்தது. அதை ஆராய்ந்து பார்த்த போது  அது நபி (ஸல்)  அவர்களின் கப்ரு ஷரீஃபின் அருகாமை வரை சென்றிருந்தது. அதைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

பிறகு மன்னர் கடும் கோபத்துடன் அந்த இருவரிடமும் உண்மையை கூறும்படி நையப் புடைத்த போது அப்போது அவ்விருவரும் நாங்கள் முஸ்லிம்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவர்கள். எங்களுக்கு கிறிஸ்துவ அரசர்கள் அதிகமான பணத்தைக் கொடுத்து இன்னும் அதிகமாக தருவதாகக் கூறி ஆசை காட்டி எங்களை இந்த உடலை எடுத்து வர ஏவினர். எனவே நாங்கள் ஹாஜிகளின் கோலத்தில் இங்கு வந்தோம். இரவு நேரங்களில் சுரங்கம் தோண்டுவோம். தோண்டிய மண்ணை இரவோடு இரவாக பகீஃ கப்ருஸ்தானில் கொட்டி விடுவோம் என்றனர்.  மன்னர் தம் மீது சுமத்தப்பட்ட  மிகப் பெரும் கடமையை நிறைவற்றியதாக உணர்ந்தார் அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த விஷயத்தை கண்டு பிடிக்க தம்மைத் தேர்ந்தெடுத்ததற்காக  நன்றி செலுத்தினார். பிறகு அந்த இரு கிறிஸ்துவர்களையும் வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு ரவ்ழாவைச் சுற்றி நீர் மட்டம் வரை அகலமான அகழ் வெட்டச் செய்து அதில் இரும்பையும், ஈயத்தையும் காய்ச்சி ஊற்றி நபி (ஸல்) அவர்களின் உடல் வரை யாரும் செல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு அமைத்தார்.   நூல் – வஃபாஉல் அவ்வல்

 

 

 

தவாஃபில் கவனிக்க வேண்டியவை

1.உடல் சுத்தம் 2. மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தல் 3. உளூவுடன் இருத்தல். 4. ஹதீமையும் சேர்த்து தவாஃப் செய்தல். 5. பைத்துல்லாஹ்வை ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டே இருக்காமல் கீழேகுனிந்து படி திக்ரு துஆக்களை ஓதிய படி தவாஃப் செய்தல். 6. தவாஃபின் போது நெஞ்சை அல்லது முதுகை கஃபாவின் பக்கம் திருப்பாமல் இருத்தல். 7. அவசியமின்றி பேசாமல் இருத்தல். 8. அவசியம் இன்றி உட்காராமல் இருத்தல். ஓடாமல் இருத்தல்.  9.யாருக்கும் தொந்தரவு தராமல் தவாஃப் செய்தல் 10. ருக்னுல் யமானீயை கடக்கும்போது இஹ்ராம் இல்லாத பட்சத்தில் இரு கைகளால் அல்லது வலது கையால் இஸ்திலாம் செய்தல் தொட்டு முத்தமிடல் அங்கு தூரத்திலிருந்து சைகை செய்வது கூடாது. அது ஹஜருல் அஸ்வதுக்கு மட்டும் தான். 11.ஹஜருல் அஸ்வதில்தொடங்கி ஹஜருல்அஸ்வதில் முடிப்பது 12.எந்த சுற்றிலும் ஹஜருல் அஸ்வதை இஸ்திலாம் அல்லது சைகை செய்யாமல் கடந்து செல்லக்கூடாது

தவாஃப் ஏழு வகை

1.தவாஃபுல் குதூம். இதற்கு தவாஃபுத் தஹிய்யத், தவாஃபுல் லிகா,தவாஃபுல்உரூத் என்ற பெயர்களும் உண்டு. மஸ்ஜிதுக்குள் நுழைந்தவுடன் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகிறோமே, அது போல் மக்காவுக்கு வந்ததும் இந்த தவாஃப் செய்ய வேண்டும். ஹஜ் இஃப்ராத் ஹஜ் கிரான் செய்யும் ஹாஜிகளுக்கு இந்த தவாஃப் சுன்னத்தாகும்.

2. தவாஃப்  ஜியாரா ZIYARAH

இதை தவாஃபுல் இஃபாழா என்றும் கூறப்படும். இது ஹஜ்ஜுடைய ஃபர்ளுகளில் ஒன்றாகும். பிறை 10 ம் நாளில் பெரிய ஷைத்தானுக்கு கல் எறிந்ததில் இருந்து 12 ம் நாளுக்குள் இந்த தவாஃபை செய்திட வேண்டும். இல்லையென்றால் ஹஜ் கூடாது

3. தவாஃபுல் விதாஃ- இதை தவாஃபே சத்ர் என்றும் கூறப்படும்.ஊருக்குத் திரும்பும்போது இதை செய்ய வேண்டும்.

4. தவாஃபுல் உம்ரா உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிய பின் இதை செய்ய வேண்டும். இது உம்ராவுடைய ஃபர்ளுகளில் ஒன்று.

5. தவாஃபுன் நத்ர்  தவாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றுவது.

6. தவாஃபுத் தஹிய்யத் அதாவது கஃபாவில் நுழைந்தவுடன் செய்ய வேண்டும். இது மஸ்தஹப்பு விரும்பத்தக்கது. ஆனால் மற்ற தவாஃப் செய்யும் எண்ணத்தில் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தால் இந்த தவாஃப் செய்த நன்மையும் கிடைக்கும்.

7.மனம் நாடும்போது கஃபாசென்று தவாப் செய்வது 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...