வியாழன், 17 ஆகஸ்ட், 2023

முஃமின்களுக்கு மட்டும் சோதனைகள் ஏன்?


முஸ்லிம்களுக்கு சோதனைகள் அதிகரிப்பது அழிவு நாளின் அறிகுறியாகும்

عن الزبير بن عدي قال : أتينا أنس بن مالك فشكونا إليه الحجاج فقال : اصبروا ( فإنه لا يأتي عليكم يوم أو زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم ) سمعته من نبيكم صلى الله عليه و سلم (صحيح ابن حبان

 ஜுபைர் இப்னு அதீ ரஹ் அவர்கள் கூறினார்கள் நாங்கள் அனஸ் ரழி அவர்களிடம் வருகை தந்து ஹஜ்ஜாஜ் செய்யும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டோம். அப்போது அவர்களிடம் நீங்கள் பொறுமை கொள்ளுங்கள். காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் பெருகும்.அந்த சோதனைகள் மவ்த் வரையிலும் கூட நீடிக்கலாம் என்றார்கள்

காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் அதிகரிக்கலாம்.

தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ......   وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ.  (ابن ماجة)

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த  நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. ....

தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம்  அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.

மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை  முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர்,  தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)

 

தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم

தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.

படிப்பினை- முஃமின்கள் தங்களை திருத்திக்கொண்டால் சோதனைகளை அல்லாஹ் மாற்றிக் காட்டுவான்

 

.                        தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சோதனைகள் வருவதால் முஸ்லிம்கள் மனம் சோர்ந்து விடக்கூடாது

சிலுவை யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார். அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள் பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான் என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத் தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார். காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள். நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய் குரைக்கும். அப்போது அந்த  ஆடுகள் சீராகச் செல்லும். அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத் தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை

வைப்போன்ற உறுதியான ஈமான் அனைவருக்கும் வேண்டும்زِنِّيرة

وكانت زِنِّيرَةُ أمَةً رومية قد أسلمت فعذبت في الله، وأصيبت في بصرها حتى عميت، فقيل لها : أصابتك اللات والعزى، فقالت : لا والله ما أصابتني، وهذا من الله، وإن شاء كشفه، فأصبحت من الغد وقد رد الله بصرها، فقالت قريش : هذا بعض سحر محمد .(الرحيق المختوم)

அபூபக்கர் ரழி அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் தான் இவர். இவரை விடுதலை செய்த நாளில் அவருக்கு கண்பார்வை பறிபோனது அப்பொழுது காஃபிர்கள் இந்த பெண்ணை அபூபக்கர் விடுவித்ததால் தான் நம்முடைய லாத், உஜ்ஜாவிற்கு கோபம் வந்து சாமி கண்ணை குத்தி விட்டது என்றார்கள் ஆனால் அப்பெண்ணுக்கு இச்செய்தி கிடைத்த போது அவர் அதை மறுத்து என் பார்வையை அல்லாஹ் தான் போக்கினான். அவன் நினைத்தால் மறுபடியும் எனக்குப் பார்வையைத் தருவான் என்றார்கள். அவ்வாறு கூறிய அடுத்த நாளே அப்பெண்ணுக்கு கண் பார்வை வந்து விட்டது. அதைக் கேள்விப்பட்ட காஃபிர்கள் அப்போதும் திருந்தாமல் முஹம்மது ஏதோ சூனியம் செய்து பார்வையை வரவழைத்து விட்டார் என்றார்கள்.

 எவ்வாறு தனக்கு நிச்சயம் கண் பார்வை வரும் என உறுதியாக நம்பினாரோ அதுபோன்ற ஈமான் வேண்டும்زِنِّيرة

அல்லாஹ் எப்படியும் நமக்கு உதவி செய்வான் என்று நம்ப வேண்டும்.

கிஸ்ராவின் மாளிகையை சுராகாவுக்கு வாக்களிக்கும் அளவுக்கு வெற்றியின் நம்பிக்கை நபிகளாரின் உள்ளத்தில் இருந்தது

ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி ஸல் அவர்களைத் துரத்தி வந்த சுராகாவைக் கண்டு அபூபக்கர் ரழி பயந்தார்கள். நபியவர்களைக் கொன்று விட்டு நூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெற வேண்டுமென்ற வேகத்தில் அவர் இருந்தார். அவர் அருகில் வந்த பின்பு நடந்த விஷயம் நமக்கெல்லாம் தெரியும் இறுதியில் அவரிடம் நபி ஸல் அவர்கள் சுராக்காவே நீர் கிஸ்ராவின் அணிகலன்களை அணிந்தால் நீர் எப்படியிருப்பீர் தெரியுமா என்று கேட்க, அவர் வியந்தார். அவ்வளவு பெரிய அரசாங்கத்தின் அணிகலன்கள் எனக்கு எப்படி கிடைக்கப் போகிறது என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு நபி ஸல் கண்டிப்பாக கிடைக்கும் என்றார்கள் அப்படியானால் அகதை எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று சுராகா கேட்டார்.  நபி ஸல் அவர்கள் அருகில் நின்ற அபூபக்கர் ரழி அவர்களிடம் எழுதித் தருமாறு கூற, அபூபக்கர் ரழி அவர்கள் அங்கு கிடந்த எலும்புத் துண்டில் கிஸ்ராவின் அணிகலன்களை உமக்கு நாம் வாக்களிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்தார்கள். பிற்காலத்தில் சுராகா முஸ்லிமாகி விட்டார். பின்பு  உமர் ரழி அவர்களின் காலத்தில் காதிஸிய்யா போரில்  பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்ட போது கிடைத்த கனீமத் பொருட்கள் மஸ்ஜிதுன் நபவியில்  குவித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது சுராகாவை அழைத்து ஹழ்ரத் உமர் ரழி இதோ உங்களுக்கு நபி ஸல் அவர்கள் வாக்களித்த கிஸ்ராவின் அணிகலன்கள் என்று ஒப்படைத்தார்கள்.  

படிப்பினை- ஹிஜ்ரத் பயணத்திற்கும் காதிஸிய்யா போருக்கும் இடையே சுமார் 20 வருடங்கள் இடைவெளி இருந்தது. உயர்ந்த ஈமான் உடையவர்கள் நிறைந்த நபி ஸல் அவர்களின் காலத்திலேயே இலட்சியம் நிறைவேற இருபது வருடங்கள் ஆனது என்றால் இன்று பலவீனமான ஈமானை வைத்துக் கொண்டு உடனே பாசிச ஆட்சி முடிவுக்கு வந்து விட வேண்டும் என நினைக்கிறோம்.                        

நம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினால் சோதனைகளை வெல்ல முடியும்.

இதைத் தான் ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறும்போது

இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என அதிகமாக உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப் பாதுகாப்பதற்கு.... இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு விடும்

 

15    விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் நிகழ்ந்தால் உலகில் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع " . رواه الترمذي

1.பொதுச்சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.மேற்படி பாவங்கள் உலகில் பெருகி விட்டால் சோதனைகள் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றால் தஸ்பீஹ் மணி அறுந்து விழுந்தால் எவ்வாறு தொடர்ச்சியாக அதன் பாசிமாலைகள் சரசரவென விழுமோ அது போன்று தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் பூமியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கிடையில் கலந்து ஆலோசிக்கப்படுவைகளாகவும் இருக்குமோ அதுவரை  இந்த பூமியின் மேற்பரப்பு இந்த பூமியின் கீழ்பரப்பை விடவும் நல்லதாக இருக்கும். இந்த பூமி செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் பெண்களிடம் ஒப்படைக்கப் படக்கூடியதாகவும் ஆகி விடுமோ  அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு இந்த பூமியின் மேற்பரப்பை விடவும் மேலானது. அதாவது இந்த பூமியில் பல விதமான சோதனைகள் தோன்றி மனிதர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடும். (இந்த பூமியின்  செழிப்பு குறைந்து விடும்.)

தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டு அதை திருத்திக் கொள்ளாத சூழ்நிலை

முஸ்லிம்களிடம் அதிகமானால் சோதனைகள் அனைவருக்கும் ஏற்படும்.

 عن أبي أمية الشعباني قال : سألت أبا ثعلبة عن هذه الآية { يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم } فقال أبو ثعلبة لقد سألت عنها خبيرا أنا سألت عنها رسول الله صلى الله عليه و سلم قبلا فقال : يا أبا ثعلبة مروا بالمعروف و تناهوا عن المنكر فإذا رأيت شحا مطاعا و هوى متبعا و دنيا مؤثرة و رأيت أمرا لا بد لك من طلبه فعليك نفسك و دعهم و عوامهم فإن وراءكم أيام الصبر صبر فيهن كقبض على الجمر للعامل فيهن أجر خمسين يعمل مثل عمله  (حاكم) وفي رواية ابن حبان إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك نفسك

அபூ உமய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் அபூ தஃலபா ரழி அவர்களிடம் இறைவசனமாகிய உங்களை மட்டும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்ற வசனம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்கள் உண்மையில் மிகப் பெரிய விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் இது பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு  அவர்கள்  என்னிடம்  அபூ தஃலபாவே நன்மையை ஏவிக் கொண்டே இரு.. தீமையைத் தடுத்துக் கொண்டே இரு.. ஆனால் எப்போது மக்களிடம் மாபெரும் கஞ்சத்தனத்தையும், மனோ இச்சைக்கு அடிமைப் படுதலையும், உலகமே கதி என்ற நிலையையும், ஒவ்வொருவரும் தன் சிந்தனையை மட்டுமே பெரிதாகக் கருதி மற்றவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தும் காலம் வருமோ அப்போது நீ உன்னை மட்டும் பார்த்துக் கொள். நெருப்புக் கங்கை பற்றிப் பிடித்திருப்பது போன்ற சிரமமான அந்த சூழ்நிலையிலும் நபியின் நடைமுறையை செயல் படுத்துபவருக்கு  அவரைப் போன்ற ஐம்பது பேரின் நன்மை வழங்கப்படும்.                      

  عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"أَنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ أَنْ يَقُولَ الرَّجُلُ لأَخِيهِ: اتَّقِ اللَّهَ، فَيَقُولُ: عَلَيْكَ نَفْسَكَ أَنْتَ تَأْمُرُنِي".- عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"كَفَى بِالْمَرْءِ إِثْمًا إِذَا قِيلَ لَهُ: اتَّقِ اللَّهَ غَضِبَ". (المعجم الكبير للطبراني

 இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- பாவங்களில் மிகப்பெரிய பாவமாகிறது தன் முஸ்லிமான சகோதரரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று கூறும்போது நீ உன் வேலையைப் பார். நீ என்ன எனக்கு ஏவுவது என்று கூறுகிறானே அதுதான்  பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும். இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- ஒருவரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  எவன் கோபமடைகிறானோ அவன் பாவி என்பதற்கு அதுவே போதுமானதாகும்.

கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

அல்லாஹ் கூறுகிறான் என் அடியார்களே உங்களில் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் கூடி விடப்போவதில்லை. உங்களில் மிக மோசமான உள்ளம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் குறைந்து விடப்போவதில்லை.உங்களில் முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி நின்று நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு அதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற என்னுடைய கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும். உங்களின் அமல்கள் உங்களுக்குத் தான். அவற்றைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அதன் நற்கூலியை நிரப்பமாக தருவேன். நல்லதைப் பெற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள். கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்கள்.                                  

وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟ قالوا‏:‏ بلى‏. قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏. قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏  (البداية والنهاية                       

ஹிஜ்ரி  15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்க்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20

وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَى أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْلَا تَحْزَنُوا عَلَى مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ-ال عمران

   கருத்து- நீங்கள் விரும்பியது போல் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் அதாவது ஆரம்பத்தில் வெற்றியைத் தந்தான் எனினும் நீங்கள் மலை உச்சியின் நிற்க வேண்டுமென்ற நபியின் உத்தரவை நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். சிலர் போர் தான் முடிந்து விட்டதே இனி நாம் கீழே இறங்கி கனீமத்தை எடுக்கலாம் என்றும், வேறு சிலர் என்ன நடந்தாலும் நபிகளார் இங்கு தான் நிற்கும்படி கூறினார்கள் என்று உறுதியாக இருந்தீர்கள். இப்படி கருத்து வேறுபாடு கொண்டதால் உங்களுக்கு நாம் தோல்வியைக் கொடுத்தோம். ஏற்பட்டு சிலர் கீழே இறங்கி வந்தவுடன் அபூசுஃப்யான் தலைமையில் எதிரிகள் வந்து தாக்க முஸ்லிம்கள் நிலை குலைந்து போனார்கள்

படிப்பினை- சிறிய சருகுதலுக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் அதிலும் குறிப்பாக எல்லோரும் அந்த தவறை செய்யவில்லை. சிலர் மட்டுமே அந்தத் தவறைச் செய்தார்கள். அப்படியிருந்தும் அந்த சஹாபாக்களுக்கே அத்தகைய சோதனை என்றால் நாம் எம்மாத்திரம்.

قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)

என்னுடைய அடியார்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நான் அவர்களை ஆட்சி செய்யும் அரசர்களுடைய உள்ளங்கள் அந்த அடியார்களுக்கு ஆதரவாக நான் திருப்புவேன். அதற்கு மாறாக எனது அடியார்கள் எனக்கு மாறு நான் அவர்களை ஆட்சி செய்யும் அரசர்களுடைய உள்ளங்களை அந்த அடியார்களுக்கு எதிராக நான் திருப்புவேன். அந்த அரசர்கள் அந்த அடியார்களை கொடுமைப்படுத்துவார்கள். எனவே ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் உங்களுடைய நேரங்களை வீணாக்காதீர்கள். மாறாக என்னை நினைவு கூர்வதைக் கொண்டும் எனக்குப் பணிந்து நடப்பதிலும் நீங்கள் ஈடுபடுங்கள். உங்களுடைய ஆட்சியாளர்களை நான் பார்த்துக் கொள்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...