நோன்பு
சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட வரும்போது
நோன்பாளியாக
வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً
وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً
(142)الاعراف
قَالَ
الْمُفَسِّرُونَ فَصَامَهَا مُوسَى عَلَيْهِ السَّلَام وَطَوَاهَا فَلَمَّا تَمَّ
الْمِيقَات اِسْتَاك بِلِحَاءِ شَجَرَة فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يُكْمِل
الْعَشَرَة أَرْبَعِينَ (تفسير ابن كثير
விளக்கம்-
அல்லாஹ் கூறியது போன்றே நோன்பே திறக்காமல் ஸ்வ்முல் விசால் எனப்படும் தொடர் நோன்பை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் நிரைவேற்றினார்கள்.
கடைசியில் அல்லாஹ்விடம் உரையாடப் போகிறோம் என்று கருதி மிஸ்வாக் செய்தார்கள்.
அல்லாஹ் அதைக் கண்டித்தான். மிஸ்வாக் செய்த தற்காவே இன்னும் 10 நாட்கள் நோன்பு
திறக்காமல் நோன்பு நோற்கும்படியும் அதன் பிறகு மிஸ்வாக் செய்யாமல் தன்னிடம் உரையாட
வரும்படியும் அல்லாஹ் உத்தரவிட்டான்.
தன் சமூகம் காளை மாட்டை வணங்கியதால் ஏற்பட்ட
கோபத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் தாம் வாங்கி வந்த தவ்ராத் ஏடுகளை கோபத்தில் கீழே
போட்டு உடைத்த போது அதற்கு அல்லாஹ்
நோன்பையே பரிகாரமாக ஆக்கினான். அதற்காக
மீண்டும் நாற்பது நோன்புகள் வைக்கும்படி அல்லாஹ் கூறினான். மற்றொரு ரிவாயத்தில்
எத்தனை துண்டுகளாக உடைந்ததோ அத்தனை
நோன்புகளை அல்லாஹ் கடமையாக்கினான். நோன்பு வைக்க வைக்க அவை ஒவ்வொன்றாக ஒன்று
சேர்ந்த து. மூஸா அலை வைத்த ஒவ்வொரு நோன்பின் போதுஅவை மீண்டும் ஒன்று சேருவதற்கு
وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ
أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ
رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ (150) الاعراف
قال
ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد
الله تعالى الألواح (تفسير الرازي
பகல் முழுக்க பசியுடனும் தாகத்துடனும் இருப்பது சிரமமான
விஷயமாக இருப்பினும் சிறந்த முஃமினுக்கு அது சுகமானதாக ஆகி விடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ
وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ (بخاري)كتاب الرقاق ولأن عمل الخير مكروه للنفوس الأمارة
بالسوء فتجد كثيراً من الناس عند عمل الخير يُرغم نفسه ويُكرهها على ذلك ولكن هذا
يوصله إلى الجنة ومع هذا إذا تجاوز الإنسان هذه المكاره صارت بالنسبة إليه محابّ
وصار لا يأنس إلا بهذه الأعمال كما قال النبي عليه الصلاة والسلام:( جُعِلَتْ
قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ(نسائ) وقال بعض السلف: لو يعلم الملوك وأبناء الملوك ما
نحن فيه لجالدونا عليه بالسيوف فالإنسان إذا اعتاد فعل الطاعة مع الإخلاص
والمتابعة صارت الطاعة أحب شيء إليه ذَلِكَ (شرح كتاب الرقاق)
அல்லாஹ்வின் பொருத்தம் கிடைப்பதால்
நல்லடியார்களுக்கு அந்த சிரமங்களே சுகமான சந்தோஷமாக மாறி விடும். முன்னோர்களில்
ஒருவரின் கூறியது. முஜாஹதா மூலம் சிரமப்பட்டு நாங்கள் செய்யும் அமல்களால்
எங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷங்களைப் பற்றி மிகப் பெரும் மன்னர்களும் அவர்களின்
வாரிசுகளும் அந்த இன்பங்களைப் பெறுவதற்காக எங்களிடம் யுத்தம் செய்யத் தயாராகி
விடுவார்கள்.
அக்காலத்தில் எந்த நாட்டு அரசாங்கம் அதிக வளங்களை
வைத்துள்ளதோ அந்த நாட்டுடன் மற்ற நாடுகள் போர் தொடுப்பது வழமை. இந்தியாவை
ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததும் அந்த வகையில் தான்.
நோன்பு வைப்பதில் எந்த அளவுக்கு சிரம ம் இருந்ததோ
அந்த அளவுக்கு அதை சுகமானதாக
சஹபாக்கள் கருதினார்கள்
عن
سعيد بن جبير قال لما أصيب ابن عمر قال : ما تركت خلفي شيئا من الدنيا آسي عليه
غير ظما الهواجر وغير مشي إلى الصلاة.
இப்னு உமர் ரழி அவர்கள் கூறும்போது எனக்குப் பின்னால் இரண்டு விஷயங்களைக்
குறித்து நான் கவலைப் படுவது போன்று வேறு எதற்கும் நான் கவலைப்படவில்லை. 1.வெயில் காலத்தில் நோன்பு
வைக்கும் பாக்கியம் இனி கிடைக்காதே என்றும் தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம்
இனி கிடைக்காதே
عَنْ
قَتَادَةَ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ قَيْسٍ، لَمَّا حَضَرَهُ الْمَوْتُ جَعَلَ
يَبْكِي، فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ ؟، قَالَ: " مَا أَبْكِي جَزَعًا مِنَ
الْمَوْتِ وَلَا حِرْصًا عَلَى الدُّنْيَا، وَلَكِنْ أَبْكِي عَلَى ظَمَأِ
الْهَوَاجِرِ عَلَى قِيَامِ اللَّيْلِ فِي الشِّتَاءِ " ((شعب الإيمان
முஆத் ரழி அவர்கள் மரண நேரத்தில் அழுத போது அதற்கான காரணம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் மவ்த்தை நினைத்து வருந்தவில்லை. மாறாக வெயில் காலத்தில் நோன்பு
வைக்கும் பாக்கியம் இனி கிடைக்காதே என்றும் கடும் குளிரில் தொழுகைக்காக நடந்து
செல்லும் பாக்கியம் இனி கிடைக்காதே என்று நினைத்து அழுகிறேன் என்றார்கள்.
عَنْ
عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ قال لِي عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: "
عَلَيْكَ بِخِصَالِ الْإِيمَانِ: الصَّوْمُ فِي الصَّيْفِ، وَضَرْبُ الْأَعْدَاءِ
بِالسَّيْفِ، وَتَعْجِيلُ الصَّلَاةِ فِي يَوْمِ الْغَيْمِ، وَإِبْلَاغُ
الْوُضُوءِ فِي الْيَوْمِ الشَّاتِ، وَالصَّبْرُ عَلَى الْمُصِيبَاتِ، وَتَرَكُ
رَدْغَةِ الْخَبَالِ "، قَالَ: وَمَا رَدْغَةِ الْخَبَالِ قَالَ: "
شُرْبُ الْخَمْرِ " (شعب الإيمان
ஹழ்ரத் உமர் ரழி அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள்.
ஈமானுடைய நற்குணங்களை நீ அவசியமாக்கிக் கொள். 1.வெயில் காலத்தில் நோன்பு வைத்துப்
பழகு.. 2.எதிரிகளிடம் போரில் ஈடுபடு. 3.மேக மூட்டத்தின் போது தொழுகையை
பிற்படுத்தாமல் தொழு. 4.குளிர் காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்று.
5.துன்பங்களின் போது பொறுமையாக இரு. 6.மதுவை அறவே விட்டு விடு
ரய்யான் (அதிகம் தாகம் தீருதல்) என்ற பொருள் கொண்ட
வாசல் வழியாக நோன்பாளிகளை பிரவேசிக்க வைப்பதின் தாத்பரியம்
وقوله : (( إن في الجنة بابًا يقال له : الرَّيَّان وهو الكثير الرِّيّ
، الذي هو نقيض العطش . وسُمِّي هذا الباب بهذا الاسم : لأنه جزاء الصائمين على
عطشهم وجوعهم ، واكتفى بذكر الرِّي عن الشبع لأنه يدل عليه من حيث إنه يستلزمه
.(شرح مسلم)
விளக்கம்-தவறுகளுக்கு
அல்லாஹ் தரும் தண்டனைகளும், நன்மைகளுக்கு அல்லாஹ் தரும் சன்மானமும் பெரும்பாலும்
பொருத்தமாக அமையும். தற்கொலை செய்தவர்களுக்கு தற்கொலையே தண்டனை, புறம் பேசியவர்கள்
மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் என்ற அடிப்படையில் தங்களின் உடம்பை தாங்களே கீறிக்
கொள்ளும் தண்டனை, அந்த வகையில் அல்லாஹ்விற்காக தாகத்துடன் இருந்தவர்கள் நுழையும்
வாசலே தாகம் தீருதல் என்ற பெயருள்ளதாக இருக்கிறது என்றால் அதற்குள்ளே அவர்களுக்கு
எவ்வளவு குடிபானங்கள் காத்திருக்கும் என்பதை விளங்க முடியும். மேலும்
நோன்பாளி தாகத்தை மட்டுமல்ல. பசியையும் அடக்கிக்
கொள்கிறார் அப்படியிருந்தும் இங்கே தாகத்தை மட்டுமே மையமாக ஆக்கப்படுவதின் காரணம்
நோன்பாளியைப் பொறுத்த வரை பசியை விட தாகம் தான் அதிகம் ஏற்படுகிறது என்பதால்.
பசியை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்து விடலாம். ஆனால் தாகத்தை அடக்கிக்
கொண்டு நீண்ட நேரம் இருப்பது கடினம்.
நோன்பின்
இன்பமான அனுபவத்தை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி அவர்கள் சகராத் நிலையிலும்
நோன்பு திறக்க மறுத்து நான் எனது ரப்பிடம்
சென்று நோன்பு திறந்து கொள்கிறேன் என்று கூறிய நிலையில் உயிர் பிரிந்த து
وأخرج
البيهقي عن أبي قتادة قال بعث رسول الله {صلى الله عليه وسلم} جيش الامراء وقال
عليكم زيد بن حارثة فان اصيب زيد فجعفر فإن اصيب جعفر فعبد الله بن رواحة فانطلقوا
فلبثوا ما شاء الله فصعد رسول الله {صلى الله عليه وسلم} المنبر وأمر فنودي
بالصلاة جامعة فاجتمع الناس فقال اخبركم عن جيشكم هذا انهم انطلقوا فلقوا العدو
فقتل زيد شهيدا ثم اخذ اللواء جعفر فشد على القوم حتى قتل شهيدا ثم أخذ اللواء عبد
الله بن رواحة فاثبت قدميه حتى قتل شهيدا ثم اخذ اللواء
خالد بن الوليد وهو أمير نفسه ثم قال رسول الله {صلى الله عليه وسلم} اللهم إنه
سيف من سيوفك فانت تنصره فمن يومئذ سمى خالد سيف الله
மூத்தா போரில் நபி ஸல் அவர்கள் வழமைக்கு மாற்றமாக
பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இப்போருக்கு ஜைதுப்னு ஹாரிஸா தளபதியாக
இருப்பார். ஒருவேளை அவர் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து ஜஃபர் ரழி தளபதியாக
இருப்பார். ஒருவேளை அவரும் கொல்லப்பட்டு
விட்டால் அடுத்து அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா ரழி தளபதியாக இருப்பார் என்றார்கள்
நபி ஸல் அவர்கள் சொன்னது போன்றே போரில் நடந்தது. அங்கே நடைபெறும் நிகழ்வை
மதீனாவில் இருந்த படி நபி ஸல் அவர்கள் நேரில் நடந்தது போன்று சொல்லிக்
காட்டினார்கள். கைகளில் கொடி இருக்கும் நிலையில் முடிந்த வரை கொடியைத் தாங்கிப்
பிடித்தவாறு மூவரும் கொல்லப்பட்டனர்.
இம்மூவருக்குப் பின்னால் கொடியை காலித் இப்னு வலீத் ரழி வாங்கினார்கள் அல்லாஹ்
வெற்றியைத் தந்தான்
வேறு சில அறிவிப்புகளில் அப்துல்லாஹ் இப்னு
ரவாஹா ரழி அவர்கள் அப்போது நேன்பாளியாக இருந்தார்கள் குற்றுயிராக இருக்கும்
நிலையில் தண்ணீர் தரப்பட்டபோது நான் என்னுடைய ரப்பிடம் சென்று நோன்பு திறப்பேன் என்று
கூறியதாக அறிவிப்புகள் உள்ளது.
நோன்பின் தத்துவங்கள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ
عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ
تَتَّقُونَ (183البقرة)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்துகளில் முக்கியமானவை 1. உடல் இச்சை.2- கோபம்.-3- தவறான உணவு முறை. -4- தவறான பேச்சு.
நோன்பு உடல் இச்சையை
கட்டுப்படுத்தும்
மனிதனிடம் இயல்பிலேயே
பாலியல் உணர்வு இருக்கின்றது. உலகில் வாழவும் உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த
உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த
உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது. இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக்
கொண்டவையாகும்.
பெற்ற
பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென
எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத
சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன. உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல்
நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத்
தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது
சாத்தியமாகின்றது.
عَنْ بْنِ
مَسْعُودٍ رضي الله عنهكُنَّا مَعَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ
لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ
أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ
بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (بخاري) -كتاب النكاح
நோன்பு கோபத்தை
கட்டுப்படுத்தும்
இன்று மனிதன் இயந்திர
மயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மிருகமாக மாறி
வருகின்றான். கணவன் மீது மனைவி
கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக் கல்லைத் தலையில் போட்டுக்
கொல்கிறாள். மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள். பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத்
தூக்கத்தைக் கெடுத்ததற்காக பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக்
கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம் பிடித்ததற்காகப்
பிள்ளையைத் தூக்கிச் சுவற்றில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் கழிவறைக்கு முதலில் யார் போவது என்ற
பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை
அன்றாடம் பார்த்து வருகின்றோம். ஆனால் நோன்பு மனிதனுடைய கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ
أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ(بخاري) باب فَضْلِ
الصَّوْمِ
நோன்பு தவறான பேச்சை விட்டும் தடுக்கிறது
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும்
ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம்
சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தை உணர வேறு ஆதாரம்
தேவையில்லை.
நோன்பு பேச்சில்
கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ
بِهِ وَالْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
(بخاري)
நோன்பு என்பது உணவு
முறையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது
தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய
பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு
நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டாலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன. மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு
முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு
மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது. நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற
உலக நலன்களை நாம் அடையலாம்.
“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற இறை வாக்கைப் பின்பற்றி வாழ்ந்த நபித்தோழர்கள் நோயற்றவர்களாக
வாழ்ந்திருந்தனர். அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே
உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும்.
நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான
ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது
பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம்
உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும்
தூய்மையாகின்றது. கண் பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப்
பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன.
முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், நோன்பு
மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள்
கரைக்கப்படும்.நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. காம உணர்வு தணிகிறது. தூய
சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப்
படுகிறார்கள். நோன்பு மேற்கொள்வதால் முதுமை தள்ளிப்போடப்படுகிறது. குடலில்
ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை
நீக்கப்படுகின்றன. வயிற்றில் புளிப்பு, குடலின்
செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமையை
உருவாக்குகிறது. நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை
உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும்
இன்றியமையாதது ஆகும். ஆகவே நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.“அமெரிக்கர்களின்
பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு
என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய்
முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத்
தடுக்கும் கருவியாக உள்ளது.”
நோன்பு வைப்பதால் புத்துணர்வு பெறும் நுரையீரல்
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும்
நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள்
இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக்
காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட
விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக
தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன. இந்த
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக)
நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று
சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன.
இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று
வீசும் நேரம் என்றும் கூறுவார்கள். “நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள்.
இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே” என அமெரிக்க
மருத்துவர் டியூவே கூறுகிறார். மற்றொரு
அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு
மையத்தின் இயக்குநர் “நோன்பு
மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு
முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது
எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர்
உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது” என்கிறார்
நோன்பின் சில சட்டங்கள்
சஹர் நேரத்தில்
ஜுனுபாளியாக இருப்பவர் அத்துடனே சஹர் சாப்பிட்டால் கூடுமா ?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ
بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى
تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ
الْفَجْرِ قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ
وَغَيْرُهُ سَوَاءٌ (ابن ماجة)
ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள்
ஒருநாள் இரவு வீட்டில் குளிப்பு கடமையானவர்களாக இருந்தார்கள். அப்போது பிலால் ரழி
அவர்கள் வந்து தொழுகைக்கு அழைப்பு விடுத்தார்கள். உடனே எழுந்து குளித்தார்கள்.
பின்பு புறப்பட்டார்கள்.அவர்களின் குரலை ஃபஜ்ரில் நான் கேட்டேன் என ஆயிஷாரழி
அறிவித்த இந்த ஹதீஸைக் கேட்ட முதர்ரஃப்
அவர்கள் தனக்கு அறிவித்த ஆமிர் ரழி அவர்களிடம் இந்த சம்பவம் ரமழானிலா நடைபெற்றது
என்று கேட்க, ரமழானும் மற்ற மாதங்களும் சமம் தான் என்றார்கள்.
மறதியாக சாப்பிட்டாலோ,
நீர் பருகினாலோ நோன்பு முறியாது. ஆனால் ஞாபகம் வந்தவுடன் அப்போதே நிறுத்த வேண்டும்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ
فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري-كتاب
الصوم وفي رواية للترمذي فَإِنَّمَا
هُوَ رِزْقٌ رَزَقَهُ
اللَّهُ فَإِنَّمَا هُوَ
رِزْقٌ رَزَقَهُ اللَّهُ- وقال الطيبي إنما
للحصر أي ما أطعمه أحد ولا سقاه إلا الله (فتح الباري
நோயாளி
நோன்பை விட அனுமதி உண்டு. நோய் நீங்கியவுடன் வேறு மாதத்தில் அதை களா செய்வார்
فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ
عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ (184البقرة)
ஆரோக்கியமாக இருப்பவரும்
நோன்புக்குப் பகரமாக ஃபித்யா கொடுப்பதற்கு
முன்பு அனுமதி இருந்தது. பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு தள்ளாத வயதை
அடைந்தவரும், தீராத வியாதி உள்ளவரும் மட்டுமே ஃபித்யா கொடுக்கலாம் என்ற சட்டம்
வந்தது
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ
كُنْتُمْ تَعْلَمُونَ (184البقرة) عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى
الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}كَانَ مَنْ أَرَادَ أَنْ
يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
(بخاري)وَأَمَّا الشَّيْخُ الْكَبِيرُ إِذَا لَمْ يُطِقْ الصِّيَامَ فَقَدْ
أَطْعَمَ أَنَسٌ بَعْدَ مَا كَبِرَ عَامًا أَوْ عَامَيْنِ كُلَّ يَوْمٍ مِسْكِينًا
خُبْزًا وَلَحْمًا (بخاري)وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ
அனஸ் ரழி அவர்கள் தனது தள்ளாத வயதில் ஃபித்யா
கொடுத்தார்கள்.
அவர்களின் வஃபாத் 93 வயதில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
பிரயாணத்தில் இருப்பவர்
முடிந்தால் நோன்பு வைக்கவும், முடியா விட்டால் இன்னொரு நாளில் களா செய்யவும்
அனுமதி உண்டு
عَنْ
عَائِشَةَ رضي الله عنها قَالَتْ سَأَلَ
حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ
شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ (ابن ماجة)عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ- عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ
قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ
الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ
وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ (رواهما ابن ماجة)إن كان مسافرا لا يستضر بالصوم
فصومه أفضل وإن أفطر وقضى جاز(قدوري
நபி ஸல்
அவர்கள் பிரயாணத்தில் சில சமயம் நோன்பு வைப்பார்கள் சில சமயம் விட்டு விடுவார்கள்.
அபுத்தர்தா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் எங்களுடன் பிரயாணத்தில் இருந்தபோது
பார்த்தோம் கடுமையான வெப்பம் காரணமாக தலையில் கை வைத்து மறைப்பவர்களாக
இருந்தார்கள் ஆனால் அந்த நிலையிலும் இரண்டு பேர் நோன்பு வைத்தார்கள் 1. நபி ஸல்
அவர்கள் 2. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக