புதன், 11 ஜூன், 2025

உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடுவோம்

 13-06-2025

துல்ஹஜ் - 16


بسم الله الرحمن الرحيم  

உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடுவோம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


 வக்ஃப் திருத்தச் சட்டத்தை  திரும்பப் பெற வலியுறுத்தி  பல்வேறு வகையிலும் போராட்டங்கள் இதற்கு முன்பும் நடத்தப்பட்டன. எனினும் இப்போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்க வேண்டும். எப்படி விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக அச்சட்டம் வாபஸ் பெறப் பட்டதோ அதுபோன்று நம்முடைய தொடர் போராட்டங்கள் காரணமாக  வக்ஃப் திருத்தச் சட்டம் வாபஸ் பெறப் படலாம் என்ற நோக்கத்தில் வருகிற 13-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எழும்பூர் இராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து  முஸ்லிம் அமைப்புகளின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள இந்த ஜும்ஆவில் அறிவிப்புச் செய்ய வேண்டும்.                 

உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுவது அவசியம்

ஒவ்வொரு உரிமைகளையும் மீட்பதற்காக எப்படிப் போராட வேண்டும் என்பதை அதற்குரியவர்களிடம் கலந்து ஆலோசித்து ஜமாஅத்துல் உலமா அறிவிக்கும். அத்தகைய போராட்டங்களில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.          

துஆ இபாத த் மிகவும் அவசியம். அதை முதலில் நாம் செய்ய வேண்டும். அதற்கடுத்து ஜனநாயக அடிப்படையில் போராடுவதும் தேவையானது. அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள் அவர்கள் போகட்டும். நான் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பேன் என்று கருதுவது கோழைத்தனம். மேலும் துஆ இபாதத் ஆகியவை நாம் மட்டுமே செய்ய முடியும். போராட்டங்களில் சகோதர சமயத்தவர்களும் நம்முடன் இணைந்து போராடுவார்கள். இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இது நமக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல. இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம். இதனால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.             

ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய போராட்டங்களைப் பற்றி ஒரு கவிஞன் எழுதினான். ஹிட்லரின் படைகள் யூதர்களைத் தாக்க வந்தபோது நான் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று.  அடுத்து இன்னொரு மத த்தவரைத் தாக்க வந்தபோதும் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று. அடுத்து தொழிற்சங்கத்தினரைத் தாக்க வந்தபோதும் நான் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று.  அடுத்து என்னைத் தாக்க வந்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை.     

உரிமைகளை மீட்க  போராடுவதற்கு முன்பு சுய சீர்திருத்தம் மிகவும் முக்கியம்

நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பரிசுத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

(ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கூறினார்கள்- இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டும் விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது. அதனைப் பாதுகாப்பதற்கு.... படை பட்டாளம் தேவைப் படுவதற்கு.. மாறாக உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றுங்கள். நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள். இஸ்லாமும் பாதுகாக்கப் பட்டு விடும்.)                                                                                     

உங்களை வெளியேற்றுவோம் என எதிரிகள் மிரட்டியபோது நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்வில் என்னை அஞ்சி நடந்தால்  நான் இங்கேயே உங்களைக் குடியமர்த்துவேன் என அல்லாஹ் வாக்குறுதி அளித்தான்.

உங்களை வெளியேற்றி விடுவோம் என்ற மிரட்டல் நமக்குப் புதிதல்ல. ஒவ்வொரு காலத்திலும் முஃமின்களுக்கு இந்த மிரட்டல் வந்தது

فما كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ (56)النمل-لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا (88 الاعراف-  وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ (13) وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ  الانبياء (14

இதில் மற்றொரு கருத்தும் உள்ளது.ஆரம்பிக்கும்போது كفروا  என ஆரம்பித்து, முடிக்கும்போது لنهلكن الظالمين   என்று அல்லாஹ் முடித்துள்ளான். அவர்கள் காஃபிர்களாக மட்டுமன்றி ظالمين களாக ஆகி, நாம் مظلوم   களாக இருக்கும் நிலையில் நாம் உண்மை முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் வரும். கடைசி காலத்தில் உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி ஒதுங்க இடம் இல்லாத போது இமாம் மஹ்தீ அவர்களின் ஆட்சி வரும்  ஹதீஸ் உள்ளது.  

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ  [ مصنف عبد الرزاق 

ஐவேளைத் தொழுகையை முறையாக கடை பிடிக்க வேண்டும். தஹஜ்ஜத் தொழுகையையும் கடைபிடிக்க வேண்டும்.

பத்ருப் போர் நடைபெறுவதற்கு முன்பு ஆறு மாத காலம் நாங்கள் தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதோம் என அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். பத்ருப்போர் நடைபெறுவதற்கு முன்பு இரவில் யாஹய்யு யாகய்யூம் என்று அழுது துஆச் செய்ததால் தான் அல்லாஹ் வெற்றியைத் தந்தான் (என்பதை எந்த முஸ்லிம் மறுக்க முடியும்.  விஷயம் எல்லை மீறிப் போய் விட்டது இனிமேல் நாம் உட்கார்ந்து துஆ செய்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சிலர் பேசுவது வேதனையாக இருக்கிறது) 

ரப்புக்கு நாம் செய்யும் அதிகமான சஜ்தாக்கள் எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்தும்.

ஒரு மகான் கூறுவார்களாம். இந்த பூமிக்கென்று ஒரு தாகம் உண்டு. அதுதான் சஜ்தாவின் தாகம். நீங்கள் ரப்புக்கு சஜ்தா செய்வது கொண்டு அந்த தாகத்தை நீங்கள் தணிக்கா விட்டால் அதற்கு இரத்த வெறி பிடித்து விடும். 

ஒருமுறை இஸ்ரேலியப் பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர்  பேட்டி எடுத்தார்.  யூதர்களாகிய உங்களை கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம், மலைக்குப் பின்னால் நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும் மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்களே அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, அந்த அமைச்சர் இது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எப்போது நடக்கும் என்பதும் தெரியும்.  முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆவுக்கு ஒன்ரு கூடுவது போன்று ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள். அப்போது இது நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று பேசியுள்ளார். ஒட்டு மொத்த  முஸ்லிம்களிடமும் இறையச்சம் வந்து விட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான் என்பதில் முஃமினுக்கு சந்தேகம் இருக்காது. 

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمْ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوْ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ (مسلم) 5203

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا}- (بخاري) 3448

மொத்த உலகின் சொத்து சுகங்களை விட முஃமினின் உள்ளத்தில் சஜ்தாவின் மதிப்பு கூடும்போது எல்லாம் நமக்கு வசப்படும்

துஆ மாபெரும் ஆயுதம். அதைப் பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் நிராசையாகி விடக்கூடாது

கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் துஆ செய்வது போல அல்லாஹ்விடம் கெஞ்சி துஆசெய்ய வேண்டும்.

ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான் 

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்ய மன்னர் ஷாஜஹான் உத்தரவிட்ட போது ஹழ்ரத் செய்த துஆவின் விளைவு

மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது


 


வக்ஃப்  திருத்த சட்டத்தால் பாதிப்புகள்

நமது இந்திய நாட்டில் நம்முடைய முன்னோர்களான முஸ்லிம் மன்னர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை மஸ்ஜித், மதரஸா போன்ற பொதுச் சேவைகளுக்காக வக்ஃப் செய்து விட்டுச் சென்றனர். அவற்றில் சில சொத்துக்கள் மட்டும் தான் இன்று மஸ்ஜித் மற்றும் மதரஸாக்களாக தர்காக்களாக செயல் பட்டு வருகின்றன. நிறைய வக்ஃப் சொத்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்திய இராணுவம் மற்றும் ரயில்வேவிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக உள்ளது. இந்த மொத்த சொத்துக்களின் பரப்பளவு 9.4 இலட்சம் ஏக்கர். உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்  அளவிற்கு வக்ஃபு சொத்துக்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் அளவிற்கு தர்காக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. இதனால் தான் அரசாங்கத்தின் பார்வை இந்த வக்ஃபு சொத்துக்கள் மீது ஏற்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக வக்ஃப் செய்தார்களோ அந்த நோகத்தை சிதைக்கும் வகையில் இந்த வக்ஃப் திருத்த மசோதா  வடிவமைக்கப்பட்டுள்ளது.                                                            

வக்ஃப் திருத்த சட்டத்தின் ஆபத்துகளைப் பற்றிமஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் 

ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் கூறியது

   வக்ஃப் தொடர்பான புதிய சட்டத்திருத்தத்தில். வக்ஃப் வாரியத்தின் மொத்தமுள்ள  22 உறுப்பினர்களில்  10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில் 2 முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ள 12 பேர்...அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம்கள் ல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த பட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும்.                        

 “ மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போதைய புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லிம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப் பட முடியும்,”           

மஸ்ஜித் மதரஸாக்களுக்காக நம் முன்னோர்கள் செய்த தர்மங்கள் வீணாகி விடக்கூடாது. 

மஸ்ஜித்களை உருவாக்க வேண்டும் மஸ்ஜித்களை பாதுகாக்க வேண்டும்.

மஸ்ஜித்களை அழிக்க வேண்டும் என்றெண்ணியவர்களை அல்லாஹ் அழித்த வரலாறுகள் நிறைய உண்டு. 

அவர்களின் அழிவு உடனே நடைபெறும். அல்லது பல காலங்கள் கழித்தும் நடக்கும்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (4) فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (5)        -    وَأَرْسَلَ أَبَرْهَة يَقُول لِلنَّجَاشِيِّ إِنِّي سَأَبْنِي كَنِيسَة بِأَرْضِ الْيَمَن لَمْ يُبْنَ قَبْلهَا مِثْلهَا فَشَرَعَ فِي بِنَاء كَنِيسَة هَائِلَة بِصَنْعَاء رَفِيعَة الْبِنَاء عَالِيَة الْفِنَاء مُزَخْرَفَة الْأَرْجَاء سَمَّتْهَا الْعَرَب الْقُلَّيْس لِارْتِفَاعِهَا لِأَنَّ النَّاظِر إِلَيْهَا تَكَاد تَسْقُط قَلَنْسُوَته عَنْ رَأْسه مِنْ اِرْتِفَاع بِنَائِهَا وَعَزَمَ أَبَرْهَة الْأَشْرَم عَلَى أَنْ يَصْرِف حَجّ الْعَرَب إِلَيْهَا كَمَا يُحَجّ إِلَى الْكَعْبَة بِمَكَّة وَنَادَى بِذَلِكَ فِي مَمْلَكَته فَكَرِهَتْ الْعَرَب الْعَدْنَانِيَّة وَالْقَحْطَانِيَّة ذَلِكَ وَغَضِبَتْ قُرَيْش لِذَلِكَ غَضَبًا شَدِيدًا حَتَّى قَصَدَهَا بَعْضهمْ وَتَوَصَّلَ إِلَى أَنْ دَخَلَهَا لَيْلًا فَأَحْدَثَ فِيهَا وَكَرَّ رَاجِعًا فَلَمَّا رَأَى السَّدَنَة ذَلِكَ الْحَدَث رَفَعُوا أَمْره إِلَى مَلِكهمْ أَبَرْهَة وَقَالُوا لَهُ إِنَّمَا صَنَعَ هَذَا بَعْض قُرَيْش غَضَبًا لِبَيْتِهِمْ الَّذِي ضَاهَيْت هَذَا بِهِ فَأَقْسَمَ أَبَرْهَة لَيَسِيرَنَّ إِلَى بَيْت مَكَّة وَلَيُخَرِّبَنَّهُ حَجَرًا حَجَرًا .

ذَكَرَ الْوَاقِدِيّ بِإِسْنَادِهِ أَنَّهُمْ لَمَّا تَعِبُوا لِدُخُولِ الْحَرَم وَهَيَّئُوا الْفِيل جَعَلُوا لَا يَصْرِفُونَهُ إِلَى جِهَة مِنْ سَائِر الْجِهَات إِلَّا ذَهَبَ فِيهَا فَإِذَا وَجَّهُوهُ إِلَى الْحَرَم رَبَضَ وَصَاحَ وَجَعَلَ أَبَرْهَة يَحْمِل عَلَى سَائِس الْفِيل وَيَنْهَرهُ وَيَضْرِبهُ لِيَقْهَر الْفِيل عَلَى دُخُول الْحَرَم

அப்ரஹா தனது யானைப் படைகளை  ஹரமை நோக்கி அனுப்ப முயன்ற போது அந்த யானைகள் அந்த திசையில் செல்லாமல் அடம் பிடித்தன. மற்ற திசைகளில் செலுத்தினால் அடம் பிடிக்கவில்லை. ஹரமின் பக்கம் செலுத்த முனைந்த போது மட்டும் முரண்டு பிடித்தன. அப்ரஹா எப்படியேனும்  தனது யானையை ஹரமின் பக்கம் செலுத்துவதற்காக அதனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தான் அல்லாஹ் அபாபீல் பறவைகளை  அனுப்பினான்.                          

وَأَرْسَلَ اللَّه عَلَيْهِمْ طَيْرًا مِنْ الْبَحْر أَمْثَال الْخَطَاطِيف وَالْبَلَسَان . مَعَ كُلّ طَائِر مِنْهَا ثَلَاثَة أَحْجَار يَحْمِلهَا : حَجَر فِي مِنْقَاره وَحَجَرَانِ فِي رِجْلَيْهِ أَمْثَال الْحِمَّص وَالْعَدَس لَا يُصِيب مِنْهُمْ أَحَدًا إِلَّا هَلَكَ وَلَيْسَ كُلّهمْ أَصَابَتْ وَخَرَجُوا هَارِبِينَ يَبْتَدِرُونَ الطَّرِيق

அவை  கடலில் இருந்து கிளம்பி வந்தன. சிறிய அளவில் இருந்த அந்த ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் இரு நெருப்புக் கற்கள், அதன் வாயில் ஒரு கல் என, ஒவ்வொரு பறவையுடனும் மூன்று கற்கள் இருந்தன. அதை அப்பறவைகள் யானைக் கூட்டத்தின் மீது வீசின. அந்தக் கற்கள் வெறும் துவரம் பருப்பு அல்லது சிறிய கொண்டைக் கடலை அளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அவை பட்டு யாருடைய  உடம்புக்குள் சென்றதோ அவர்கள் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

وَقَالَ اِبْن إِسْحَاق فَخَرَجُوا يَتَسَاقَطُونَ بِكُلِّ طَرِيق وَيَهْلِكُونَ عَلَى كُلّ مَنْهَل وَأُصِيبَ أَبَرْهَة فِي جَسَده وَخَرَجُوا بِهِ مَعَهُمْ يَسْقُط أُنْمُلَة أُنْمُلَة حَتَّى قَدِمُوا بِهِ صَنْعَاء وَهُوَ مِثْل فَرْخ الطَّائِر فَمَا مَاتَ حَتَّى اِنْصَدَعَ صَدْره عَنْ لُبّه فِيمَا يَزْعُمُونَ.

அபாபீல் பறவைகள் வீசிய நெருப்புக் கற்கள் உடலுக்குள் ஊடுருவி சென்றவுடன் உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழுந்து பலர் இறந்தனர். (யானைகளின் உடலுக்குள்ளும் அவை ஊடுருவி அவை மதம் பிடித்து அங்குமிங்கும் அங்குமிங்கு ஓடி இறந்தன.)  அப்ரஹாவின் உடம்பிலும் நெருப்புக் கல் விழுந்த து. அவனை அல்லாஹ் உடனே சாகடிக்கவில்லை. அவனுடைய உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழும் நிலையில் அவனோடு இருந்த  மற்றவர்கள் அதாவது கல் யார் மீது விழவில்லோயோ அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து யமன் வரை அவனைத் தூக்கி வந்தார்கள். மிகவும் வேதனைப் பட்டு கோழிக் குஞ்சு போன்று எலும்பும் தோலுமாக ஆகி விட்ட நிலையில்  அவன் கடைசியில் இறந்தான்.  அவனுடைய வாய் வழியாக அவனுடைய இருதயம் வெளியே வந்த நிலையில் அவன் இறந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.                               

படிப்பினை- இறையில்லத்தை பாழ்படுத்த வந்தவனின் நிலையை அல்லாஹ் இப்படித் தான் ஆக்கினான்

புக்து நஸ்ர் என்பவன் பைத்துல் முகத்தஸை நாசமாக்கினான். இறுதியில் அவருக்கு ஏற்பட்ட கதி..

وَقَالَ سَعِيد عَنْ قَتَادَة : قَالَ أُولَئِكَ أَعْدَاء اللَّه النَّصَارَى حَمَلَهُمْ بُغْض الْيَهُود عَلَى أَنْ أَعَانُوا بُخْتُنَصَّرَ الْبَابِلِيّ الْمَجُوسِيّ عَلَى تَخْرِيب بَيْت الْمَقْدِس وَقَالَ السُّدِّيّ : كَانُوا ظَاهَرُوا بُخْتُنَصَّرَ عَلَى خَرَاب بَيْت الْمَقْدِس حَتَّى خَرَّبَهُ وَأَمَرَ أَنْ تُطْرَح فِيهِ الْجِيَف (تفسير ابن كثير

 ஸுலைமான் (அலை) மரணித்த பின்பு யூதர்களின் கை வசம் பைத்துல் முகத்தஸ் இருந்த து அப்போது அதை மஜூஸியான  புஹ்து நஸ்ர் என்பவன் அதைக் கைப்பற்றி மாபரும் அழிவை ஏற்படுத்தினான். பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி தீக்கிரையாக்கினான். தவ்ராத் வேதமும், பத்துக் கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும், மூஸா (அலை) அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை அவனது ஆட்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர். புக்துநஸர் கையில் அகப்படாமல் யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் இப்போதைய மதீனாவிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக 40 ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்தஸ் இருந்தது. 

புக்து நஸ்ரின் மோசமான அழிவு பற்றி பல விதமான அறிவிப்புகள் உள்ளன. 

وقوله تعالي : {ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ...  (سورة الاسراء} وعذب بختنصر بالمسخ سبع سنين ومسخ الله تعالى بختنصر من الدوابّ كلها، فجعل من كل صنف من الدوابّ رأسه رأس سبع من السباع الأسد، ومن الطير النسر،   (تفسير  الطبري

அல்லாஹ் புக்து நஸ்ரின் உருவத்தை  வன விலங்குகளின் ஒன்றின் உருவத்தைப் போல மாற்றியமைத்தான் என மேற்படி அறிவிப்பு... 

மற்றொரு அறிவிப்பில் நம்ரூதைப் போல அவனது மூளையில் கொசு புகுந்து  வேதனை செய்த து என்றும் கூறப்பட்டுள்ளது

ثم لما أراد الله هلاك بختنصر انبعث فقال لمن في يده من بني إسرائيل: أرأيتم هذا البيت الذي خربته والناس الذين قتلت منهم؟ وما هذا البيت؟ قالوا: هذا بيت الله وهؤلاء أهله كانوا من ذراري الأنبياء فظلموا وتعدوا فسلطت عليهم بذنوبهم وكان ربهم رب السموات والأرض ورب الخلق كلهم يكرمهم ويعزهم فلما فعلوا ما فعلوا أهلكهم الله وسلط عليهم غيرهم فاستكبر وظن أنه بجبروته فعل ذلك ببني إسرائيل. قال: فأخبروني كيف لي أن أطلع إلى السماء العليا فأقتل من فيها وأتخذها ملكا لي فإني قد فرغت من الأرض، قالوا: ما يقدر عليها أحد من الخلائق قال: لتفعلن أو لأقتلنكم عن آخركم، فبكوا وتضرعوا إلى الله تعالى فبعث الله عليه بقدرته بعوضة فدخلت منخرة حتى عضت بأم دماغه فما كان يقر ولا يسكن حتى يوجأ له رأسه على أم دماغه فلما مات شقوا رأسه فوجدوا البعوضة عاضة على أم دماغه ليري الله العباد قدرته (تفسير البغوي)

சுருக்கம்- பைத்துல் முகத்தஸை நாசப்படுத்திய புக்து நஸ்ரை அல்லாஹ் உடனே அழிக்கவில்லை. அவன் கடைசி காலத்தில் மிகவும் அட்டூழியம் செய்தான். அவனுக்குள் பெருமை குடி கொண்டது. மோசமான கூட்டமான யூதர்கள் விஷயத்தில் நிறைய யூதர்களைக் கொன்றதன் மூலம் நபிமார்களால் செய்ய முடியாத செயலை தாம் செய்ததாக அவன் பெருமை கொண்டான். அதனால் இன்னும் நிறைய அநியாயம் செய்தான். அப்போது பனீ இஸ்ராயீல் சமூகத்தில் சில நல்லவர்கள் அவனது அழிவுக்காக துஆ செய்தனர். இறுதியில் அவனுடைய மூளைக்குள் ஒரு கொசு புகுந்தது. அது அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் அவன் இறந்தான். அவன் இறந்த பின் அவனது தலையை பிளந்து பார்த்த அவனது மூளையை தாக்கிக் கொண்டிருந்த கொசு கண்டு பிடிக்கப்பட்டது.                

கடைசி காலத்தில் இறையில்லமான கஃபாவை தாக்க வரும் கும்பலை அல்லாஹ் அழிப்பான் என்ற முன்னறிவிப்பு

عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري

கடைசி காலத்தில் கஃபாவை தாக்க ஒரு கும்பல்  படையெடுத்து வரும் அப்போது அவர்கள் வரும் வழியிலேயே பூமி பிளந்து உள்வாங்கப் படுவார்கள். அப்போது அந்தக் கும்பல் மட்டுமல்லாமல் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் உட்பட அனைவரும் அழிந்து விடுவார்கள். இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறிய போது அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கெட்டவர்கள் அழிக்கப்படுவது நியாயம் தான் ஆனால் நல்லவர்களும் ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று காரணம் கேட்கும்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். தீயவர்கள் அழிக்கப்படும்போது நல்லவர்களும் அழிக்கப்படுவார்கள். பின்பு அவரவர் நிய்யத்துக்குத் தகுந்த மாதிரி எழுப்பப் படுவார்கள் என்று கூறினார்கள். அதாவது அதற்குத் தகுந்த நற்கூலி வழங்கப் படுவார்கள்.   

மஸ்ஜித்களை திட்டமிட்டு எதிரிகள்  அழித்தாலும் அதற்கு பதிலாக எண்ணற்ற மஸ்ஜித்கள் உருவாகின்றன. ஆனாலும் ஒரு மஸ்ஜிதுக்கு எதிரிகள் மூலம் ஆபத்து வந்தாலும் அதைப்  பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் முஃமினல்ல. 

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கிறது என்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும். 

அதுமட்டுமல்ல. உலகம் முழுவதும் முஸ்லிம்களே கிடையாது என்று சொல்லப்பட்ட பல நாடுகளில்  இன்று முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. 

சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்ததாகக் கூறுவார்கள். ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 24,000 மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். ஃபிரான்ஸில் 2014 ம் ஆண்டுகளுக்கு முன்பு  20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் உள்ளன.  ஜெர்மனியில் 1999- ல் 40  பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று 4000  மஸ்ஜித்கள் உள்ளன. இங்கிலாந்தில் 1890- ல் ஒரு  பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான  மஸ்ஜித்கள் உள்ளன. இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார். 

ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸேஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

 27-06-2025 بسم الله الرحمن الرحيم   ஹிஜ்ரீ வருடமும்  ஹிஜ்ரத்  தரும் படிப்பினைகளும்   https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரி...