வியாழன், 30 அக்டோபர், 2025

ஜும்ஆ நாளின் முக்கியத்துவம்

 31-10-2025

جمادي الاولي-  8


بسم الله الرحمن الرحيم  

 ஜும்ஆ நாள் & ஜும்ஆ உரையின் முக்கியத்துவம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ஜும்ஆ  நாளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் ஜும்ஆ உரைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் இந்த தலைப்பு அமைந்துள்ளது. இந்த தலைப்பின் கீழ் ஜும்ஆ தொழுகைக்கு முன்பு விரிவாக பேசினாலும் ஜும்ஆ தொழுகை முடிந்த பிறகு உண்டியல் வசூல் நடைபெறும் நேரத்தில் சுருக்கமாக இதன் சாராம்சத்தைப் பேசினால் தான் இது யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேரும்.   

ஒவ்வொரு உம்மத்துக்கும் வாரத்தில் ஒருநாள் பெருநாளாக இருந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உம்மத்துக்கு  சனிக்கிழமை பெருநாளாகும். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உம்மத்துக்கு  ஞாயிற்றுக்கிழமை, இந்த உம்மத்துக்கு வெள்ளிக்கிழமை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ أَنَّ كُلَّ أُمَّةٍ أُوتِيَتْ الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ ثُمَّ هَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَهُ اللَّهُ عَلَيْنَا هَدَانَا اللَّهُ لَهُ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ (مسلم

    இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இருப்பினும் எந்த ஜும்ஆ நாளை பெருநாளாக அல்லாஹ் நமக்கு வழங்கினானோ அதன் மூலம் அல்லாஹ் நமக்கு ஹிதாயத் வழங்கினான். காலத்தில் நாம் பிந்தி இருந்தாலும் வாரத்தின் பெருநாளை கொண்டாடுவதில் நாம் முந்தி விட்டோம். நமக்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

கண்ணியப்படுத்த பெருநாளை அலட்சியப்படுத்தியதால் (அதாவது சனிக்கிழமையை பெருநாளாக கடைபிடிப்பதற்கும், அன்று முழுவதும் வியாபாரத்தை விட்டு விடுவதற்கும் ஏவப்பட்ட யூதர்களில் ஒரு சாரார் அதை மீறியதால்) குரங்குகளாக உருமாற்றப்பட்டனர்

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ (163) وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (166الاعراف)

விளக்கம்- சனிக்கிழமை பெருநாள் என்பதால் அன்று முழுவதும் மீன் பிடிக்கக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டான் ஆனால் சனிக்கிழமை தான் மீன்கள் அதிகமாக கிடைக்கும். மற்ற நாட்களில் மீன்களின் வருகை குறைவாகவே இருக்கும். எனினும் அவர்கள் ஆரம்பத்தில் அந்தக் கட்டளையை முறையாக கடைபிடித்தார்கள். பின்பு அவர்களில் ஒரு நபர் சனிக்கிழமையில் ஒரு பெரிய மீனைப் பிடித்து அதை கயிற்றால் கட்டி, அந்தக் கயிற்றின் மறுமுனையை கரையில் ஒரு கொம்பில் கட்டி வைத்து விட்டு மீனை தண்ணீருக்குள்ளேயே மிதக்க விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அதை பிடித்தார். கேட்டால் நான் நேற்று கட்டி வைத்தாலும் இன்றைக்குத் தானே அதை பிடிக்கிறேன் என்று கூறினார். காலப்போக்கில் இதை பலரும் கடை பிடித்தனர். இதுவரை செய்த தந்திரத்தால் அல்லாஹ்விடமிருந்து எந்த வேதனையும் வரவில்லை என்று தைரியமடைந்த அவர்கள் சனிக்கிழமையிலேயே மீன் பிடிக்க ஆரம்பித்தனர் இதை நல்லவர்கள் கண்டித்தும் கேட்கவில்லை. அந்த நல்லவர்கள் உங்களுடன் சேர்ந்து வசித்தால் எங்களுக்கும் வேதனை வந்து விடும் என்று தம் வீடுகளை மாற்றியமைத்துக் கொண்டனர். ஆனால் வியாபாரம் செய்யும் இடம் ஒன்றாகவே இருந்தது ஒருநாள் வழக்கம் போல் மீன் மார்க்கெட் கூடியது ஆனால் சனிக்கிழமையில் வரம்பு மீறியவர்கள் யாரும் அன்று மாலை வரை வரவில்லை. உடனே மற்றவர்கள் அவர்களுக்கு வசிப்பிடங்களுக்குச் சென்று பார்த்த போது அனைத்துக் கதவுகளும் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை இறுதியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தால் அவர்கள் அனைவரும் குரங்குகளாக மாற்றப்பட்டிருந்தனர் அவர்களுடைய கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. படிப்பினை- கண்ணியப்படுத்த வேண்டிய பெருநாளை அவர்கள் கண்ணியப் படுத்த தவறியதால் தண்டிக்கப்பட்டனர். இன்றும் நம்மில் பலர் ஜும்ஆ நாளை கண்ணியப் படுத்துவதில்லை. ஜும்ஆ நாளில்  இரண்டு ரக்அத்துகள் தான் ஃபர்ளாகும். காரணம் அதற்கு இணையாக  ஜும்ஆ நாளின் உரை அமைந்துள்ளது. ஆனால் இன்று பலர் எப்படியேனும் தொழுகைக்கு வந்தால் போதும் என்று கருதி ஜும்ஆ உரையில் கலந்து கொள்வதில்லை. இது அந்த ஜும்ஆவை அலட்சியப் படுத்துவதாகும்.         

ஜும்ஆ உரைக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவே இஸ்லாத்தின் 

ஆரம்ப காலத்தில் ஜும்ஆ உரையை ஜும்ஆ தொழுகையை விட முற்படுத்தப்பட்டது.

عن مقاتل بن حيان قال: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الجمعة قبل الخطبة مثل العيدين، حتى كان يوم جمعة والنبي صلى الله عليه وسلم يخطب، وقد صلى الجمعة، فدخل، رجل فقال: إن دحية بن خليفة الكلبي قدم بتجارة، وكان دحية إذا قدم تلقاه أهله بالدفاف؛ فخرج الناس فلم يظنوا إلا أنه ليس في ترك الخطبة شيء؛ فأنزل الله عز وجل: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْواً انْفَضُّوا إِلَيْهَا}. فقدم النبي صلى الله عليه وسلم الخطبة يوم الجمعة وأخر الصلاة. (قرطبي)                              

قال رسول الله صلى الله عليه و سلم : والذي نفسي بيده لو تتابعتم حتى لا يبقى منكم أحد لسال بكم الوادي النار (فتح الباري

    விளக்கம்- நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஈத் பெருநாளைப் போல  முதலில் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு பிறகு உரை நிகழ்த்துபவர்களாக ஆயிருந்தார்கள். அவ்வாறு ஒரு தடவை  (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்குள் வந்தது. அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. எனினும் அந்த வாணிபக் கூட்டம் வந்தவுடன் தஃப் அடித்து அறிவிப்புச் செய்வார்கள். நமது ஊரில் சந்தை போன்றதாகும். அவ்வாறு தண்டோரா போட்டவுடன் முதலில் செல்பவர்களுக்குத் தான் நிரப்பமாக பொருட்கள் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாகி விட்டாலும் கைசேதம் தான். எனவே அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டதே இனி ஜும்ஆ உரை தானே மிச்சமுள்ளது என்று எண்ணி கடைவீதிக்கு  மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான்.  

'அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில்விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்'' (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

மேலும் நபி ஸல் கூறினார்கள். 12 பேர் மிச்சமாக இருந்திருக்கவில்லையென்றால் அதாவது அவர்களும் பின் தொடர்ந்து சென்றிருந்தால் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நெருப்பாக ஓடும் அளவுக்கு அல்லாஹ் தண்டனையை இறக்கியிருப்பான்

இதற்குப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை இரண்டாவதாக ஆக்கி, ஜும்ஆ உரையை முதலாவதாக ஆக்கினார்கள். ஆனால் அன்று எந்த தவறு நடந்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மாற்றியமைத்தார்களோ அதே தவறு இன்று நடந்து கொண்டிருக்கிறது. குத்பா முடிந்த பிறகு பலர் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜும்ஆவின் நன்மையை அடைந்து கொள்ள மாட்டார்கள்.

ஜும்ஆ நாளில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் பற்றி...

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُهْبِطَ وَفِيهِ تِيبَ عَلَيْهِ وَفِيهِ مَاتَ وَفِيهِ تَقُومُ السَّاعَةُ وَمَا مِنْ دَابَّةٍ إِلاَّ وَهِىَ مُسِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ مِنْ حِينَ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ شَفَقًا مِنَ السَّاعَةِ إِلاَّ الْجِنَّ وَالإِنْسَ وَفِيهِ سَاعَةٌ لاَ يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّى يَسْأَلُ اللَّهَ حَاجَةً إِلاَّ أَعْطَاهُ إِيَّاهَا (ابوداود

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அன்று தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள். அன்று தான் பூமிக்கு இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் தவ்பா ஏற்றுக் கொள்ளப் பட்டது. அன்று தான்  அவர்கள் வஃபாத்தானார்கள். அன்று தான்  கியாமத் ஏற்படும். அன்றைய தினம் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் கியாமத் வந்து விடுமோ என்ற பயத்திலேயே ஃபஜ்ருடைய நேரம் துவங்கி சூரியன் உதிக்கும் வரை அஞ்சி நடுங்காமல் இருப்பதில்லை. “ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறி விட்டு (அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.) “அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 

அந்த நேரம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

وفيها أكثر من أربعين قولا أرجحها ثلاثة : الأول أنها تنتقل كليلة القدر  ورجحه المحب الطبري تبعا للحجة ، الثاني أنها آخر ساعة من النهار واختاره أحمد ونقله العلائي عن الشافعي ، الثالث ما بين قعود الإمام على المنبر إلى انقضاء الصلاة وصححه النووي ، قال ابن حجر : وما عدا الثلاثة ضعيف (فيض القدير)

அந்த நேரம் எது என்பதில் 40 க்கும் அதிகமான  கருத்துக்கள் உள்ளன. அவற்ற்றில் மூன்று ஏற்றமானதாகும். 1. அது அல்லாஹ்வின் நாட்டப்படி மாறிக் கொண்டேயிருக்கும் 2. பகலின் கடைசி நேரம். 3.இமாம் மிம்பரில் அமர்ந்த தில் இருந்து தொழுகை முடியும் வரை.  

ஜும்ஆ நாளில் ஸலவாத்துகளை அதிகப் படுத்த வேண்டும்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام (نسائ

   உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். நூல் : அபூதாவூத் 883

ஜும்ஆ நாள் வந்தால் சஹாபாக்களுக்கு இரட்டை சந்தோஷம்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ

 ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் கூறினார்கள் வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காரணம் எங்களிடம் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரம் ஒன்றில் போட்டு அதில் கோதுமையைக் கலந்து கடைந்து வைப்பார். நாங்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியை அடைந்து வந்தோம்.                

 நாங்கள் வெள்ளிக் கிழமையில் மட்டும் ஜும்ஆ தொழுத பின்புதான் காலை உணவு உண்ணுவோம். கைலூலா எனும் ஓய்வையும் எடுப்போம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த மூதாட்டி பரிமாறிய அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை. நூல்-புகாரீ 5403 

ஜும்ஆவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும்

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ  أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ (مسلم

ஜும்ஆவை விடுவதை தவிர்த்துக் கொள்ளட்டும் அவ்வாறு தவிர்த்துக் கொள்ளா விட்டால் அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான்.  அவர்கள் (திருந்தாத உள்ளம் கொண்டவர்களாக) பொடு போக்கானவர்களாக மாறி விடுவார்கள்.     

عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ وَكَانَ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ (ابن ماجة

ஜும்ஆவை தகுந்த காரணமின்றி  போடுபோக்காக எவர்  விட்டு விட்டாரோ  அவரது உள்ளம் சீல் வைக்கப்படும்.


குறிப்பு- முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆவுக்கான ஏற்படீடுகள் பெரும்பாலும் இருக்கும். ஆனால் மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பெறரோர் அல்லது சம்பந்தப்பட்ட  ஜமாஅத் ஸ்கூல் நிர்வாகத்திடம்  போசி  கால் மணி நேரமேனும் அனுமதி தரச் சொல்ல வேண்டும். பெரிய மாணவர்கள் மூலமாகவே பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை  நிர்பந்தமான சூழ்நிலையில் இமாம் அல்லாத மூன்று பேர் இருந்தாலே ஜும்ஆ நிறைவேறும்

ومن شرائطها : الجماعة وأقلهم عند أبي حنيفة  ثلاثة سوى الإمام  (محتصر القدوري

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ(بخاري

   ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம் 1555

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஜும்ஆ பாங்கு சொல்லப்பட்ட பிறகும் வியாபாரம் செய்து கொண்டிருப்பது  நல்லதல்ல

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9)

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

عن أبي هريرة رضي الله عنه : أن رسول الله صلى الله عليه و سلم قال : الصلوات الخمس و الجمعة إلى الجمعة كفارات لما بينهن ما لم تغش الكبائر [ صحيح ابن خزيمة ]


ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَحْضُرُ الْجُمُعَةَ ثَلَاثَةُ نَفَرٍ رَجُلٌ حَضَرَهَا يَلْغُو وَهُوَ حَظُّهُ مِنْهَا وَرَجُلٌ حَضَرَهَا يَدْعُو فَهُوَ رَجُلٌ دَعَا اللَّهَ عَزَّ وَجَلَّ إِنْ شَاءَ أَعْطَاهُ وَإِنْ شَاءَ مَنَعَهُ وَرَجُلٌ حَضَرَهَا بِإِنْصَاتٍ وَسُكُوتٍ وَلَمْ يَتَخَطَّ رَقَبَةَ مُسْلِمٍ وَلَمْ يُؤْذِ أَحَدًا فَهِيَ كَفَّارَةٌ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا وَزِيَادَةِ ثَلَاثَةِ أَيَّامٍ وَذَلِكَ بِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ{ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا } (ابوداود

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),நூல் : அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.



ஜும்ஆவின் பலனை இழக்க வைக்கும் செயல்கள்:

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاَثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا ». (ابوداود)                             

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَهُوَ كَالْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ، وَالَّذِي يَقُولُ لَهُ أَنْصِتْ لَيْسَتْ لَهُ جُمُعَةٌ. (الكتاب : مُصنف ابن أبي شيبة)   

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுபவன் பொதி சுமக்கும் கழுதையைப் போன்றவன். அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று கூறினால் ஜும்ஆவின் நன்மை கிடையாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்தபின் ஆகுமான பிரயாணம் செய்வது ஹராம். ஆனால் இடைவழியில் ஜும்ஆ கிடைக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அல்லது வழித்தோழர்கள் அவனை விட்டுச் சென்று அதனால் சிரமம் ஏற்பட்டுவிடுமென்றிருந்தால் செல்வது ஹராமல்ல. வெள்ளிக்கிழமை இரவில் பிரயாணம் செய்வது மக்ரூஹ்.

قال الشافعي في رواية أبي سعيد : وبلغنا أنه من قرأ سورة الكهف وقي فتنة الدجال قال الشافعي : وأحب كثرة الصلاة على النبي صلى الله عليه وسلم في كل حال ، وأما في يوم الجمعة وليلتها أشد استحبابا ، وأحب قراءة الكهف ليلة الجمعة ويومها لما جاء فيها

الكتاب : معرفة السنن والآثار


1 கருத்து:

  1. ஆயத்துக்கள், ஹதீஸ்கள் அரபியில் போடுகிறீர்கள் தோடு சேர்த்து தமிழ் அர்த்தத்தோடு போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...