வியாழன், 6 நவம்பர், 2025

SIR

 06-11-2025

جمادي الاولي  - 15


بسم الله الرحمن الرحيم  

 (SIR) வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்

நாம் செய்ய வேண்டியது என்ன?



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


  (SiR) வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் என்பது இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெற்று வருவதாகும். இதற்கு முன்பு 2002 முதல் 2004 வரை (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. 1951-ஆம் ஆண்டு முதல் 2004 வரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை தேர்த  ல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் நடைபறும் பணிக்கு (எஸ்.எஸ்.ஆர்) - Special Summary Revision (SSR) என்றும் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபறும் பணிக்கு (எஸ்.ஐ.ஆர்) என்றும் கூறப்படும். இந்த  (எஸ்.ஐ.ஆர்) சம்பந்தமான விண்ணப்பப் படிவத்துடன் அதிகாரிகள் நமது வீட்டுக்கு வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஜமாஅத்துல் உலமாவின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். இந்த பயான் குறிப்பில் இந்த விஷயம் ஆரம்பத்தில் இடம் பெற்றிருந்தாலும் இதை ஜும்ஆ உரையின் இறுதியில் அல்லது ஜும்ஆ தொழுகை முடிந்து பேசினால் நல்லது.

யாருக்கு இது எளிதானது? 

 2002 முதல் 2004 வரை நடைபெற்ற (எஸ்ஐஆர்) அடிப்படையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இப்போதும் இருக்குமோ அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் 1987-க்கு முன்பு பிறந்தவர்களாகத் தான் இருக்க முடியும். அப்போது தான் அவர்கள் 2004-ல் 18 வயதை அடைந்து ஓட்டுரிமை பெற்றிருப்பார்கள். ஆனால் யாருடைய பெயர் முந்தைய (எஸ்ஐஆர்) பட்டியலில் இல்லையோ அப்படிப்பட்டவர்களின் பெற்றோர் பெயர் அதில் இடம் பெற்றிருந் தாலும் பிரச்சினை இல்லை. இந்த இரண்டும் இல்லாத போது தான் அவர்கள் தங்களுடைய குடியுரிமை ஆதாரங்களைக் காட்டி தனது  குடியுரிமையை நிரூபிக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பின் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாக பூத் பொறுப்பாளர்கள் வரும்போது நாம் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மாறாக அவர்கள் கொண்டு வரும் விண்ணப்பப் படிவத்தை முறையாக நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் நம் போட்டோ இருக்கும் என்றாலும் இன்னொரு போட்டோவுக்கான இடம் இருக்கும். அதற்கு போட்டோ தரலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு அதன் ஒரு நகல் நம்மிடம் தருவார்கள். அவ்வளவு தான். 

 இதற்குப் பிறகு டிசம்பர் 9 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் நம்முடைய பெயர் இடம் பெற்றிருந்தால் பிரச்சினை இல்லை. அதில் இடம் பெறவில்லையென்றால் நம்முடைய  குடியுரிமை ஆதாரங்களைக் காட்ட வேண்டியதிருக்கும்.

 

  (SIR) என்பது 20 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வழக்கமான நடைமுறை என்றாலும் இதை மத்திய அரசு செய்வதால் அதில் ஏதேனும் குளறுபடிகள் செய்து முஸ்லிம்களின் பெயர்களை நீக்கி விட வாய்ப்புண்டு என்ற அச்சம் முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (SIR) வாக்காளர் திருத்த பட்டியலை முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரை அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பீகாரில் நடந்த ‘எஸ்ஐஆர்’ பணிகளில் நீக்கப் பட்டவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தது. பீகாரின் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் பிண்ணனியில் "தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பவர்களை தக்க வைத்து, எதிர்த்து வாக்களிப்பவர்களை இனம் கண்டறிந்து நீக்குவதற்கான மத்தியில் ஆளும் பாசிச அரசின் சதி  என்ற குற்றச் சாட்டு, தொடர்ந்து வலுவாகவே வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு நாம் நான்கு விஷயங்களை நினைவு படுத்தக் கடமைப் பட்டுள்ளோம். 

1. சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்விடம் அதிகம் கெஞ்சி துஆ செய்ய வேண்டும்.

2. முஸ்லிம்களிடம் இது பற்றிய அச்சத்தை முற்றிலும் போக்க வேண்டும்

3. அல்லாஹ்விடம் துஆ செய்வதுடன் தற்காப்பும் வேண்டும். அதாவது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஏதேனும் குளறுபடி இருந்தால் விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். 


4. BOOTH LEVEL OFFICERS கொண்டு வரும்  ENUMERATION FORM ஐ கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் ஒரு வீட்டுக்கு மூன்று முறை வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்களைப் பெற்றிட  voters.eci.gov.in என்ற வெப்சைட்டிலும் சென்று தகவல் பெறலாம். எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

5. இது சம்பந்தமாக முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக அக்கறை கொண்ட நம் இளைஞர்களைத் தயார் படுத்தி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆவணங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்ளத் தேவையான உதவிகள் செய்யலாம். 

6. வாக்குரிமை பற்றி மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளவை இந்த நான்கு விஷயங்களைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

1. சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்விடம் அதிகம் கெஞ்சி துஆ செய்ய வேண்டும்.

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (54) ال عمران

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا سَتَكُونُ بَعْدِي أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا ذَلِكَ قَالَ تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ (مسلم)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! என(து வாழ்நாளு) க்குப் பிறகு உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான சுய நலப்போக்கும், நீங்கள் வெறுக்கக் கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறிய போது, தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள்? என வினவ, அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடமே நீங்கள் கேளுங்கள்!” என்று பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி )

தாயிஃபில் இருந்து கடும் மன வருத்தத்துடன் நபி (ஸல்) அவர்கள் 

திரும்பும்போது கேட்ட துஆவை நாமும் கேட்கும் நிலை உள்ளது

اللَّهُمَّ إلَيْكَ أشْكُو ضَعْفَ قُوَّتِي وقِلَّةَ حِيلَتِي وَهَوانِي على النَّاسِ يا أرْحَمَ الرَّاحِمِينَ إلى مَنْ تَكِلْني إلى عَدُوَ يَتَجَهَّمُنِي أمْ إلى قَرِيبٍ مَلَّكْتَهُ أمْرِي إِنْ لَمْ تَكُنْ ساخِطاً عَلَيَّ فلا أُبالِي غَيْرَ أنَّ عافِيَتَكَ أوْسَعُ لِي أعُوذُ بِنُورِ وَجْهِكَ الكَرِيمِ الَّذِي أضاءَتْ لَهُ السَّمواتُ والأرْضُ وأشْرَقَتْ لَهُ الظُّلُماتُ وصَلَحَ عليهِ أمْرُ الدُّنْيا والآخِرَةِ أنْ تُحِلَّ عَليَّ غَضَبَكَ أوْ تُنْزِلَ عَلَيَّ سَخَطَكَ وَلَكَ العُتْبى حَتَّى تَرْضى ولا حَوْلَ ولا قُوَّةَ إلاَّ بِكَ (طبراني

கருத்து- ரப்பே மற்றவர்கள் சூழ்ச்சி செய்வது போல் எங்களுக்கு எந்த சூழ்ச்சியும் எங்களுக்குத் தெரியாது. எங்களின் இயலாமையை உன்னிடமே முறையிடுகிறோம். வேறு யாரிடம் சென்று நாங்கள் முறையிட முடியும். மேற்காணும் கருத்தின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் மேற்படி துஆவை  ஓத வேண்டும். 

துஆ என்பது எதையும் சாதிக்கும் என்பதற்கும் உதாரணமாக ஹஜ்ஜாஜ் பற்றிய சம்பவம். 

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين "قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

 ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்தது ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

அநியாயக்காரனுக்கு அல்லாஹ் நிறைய அவகாசம் தருவான். தண்டிக்க ஆரம்பித்தால் கடுமையாக இருக்கும்

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ قَالَ ثُمَّ قَرَأَ {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ (هود102)(بخاري)كتاب التفسير-لَيُمْلِي لِلظَّالِمِ أي زيادة في استدراجه ليطول عمره ويكثر ظلمه فيزداد عقابه

2.முஸ்லிம்களிடம் அச்சம் நீங்க வேண்டும். தவக்குல் மட்டுமே பயத்தை நீக்கும்

சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநாட்டில் ப. சிதம்பரம் அவர்கள் பேசும்போது முஸ்லிம்கள் தேவையில்லாமல் பயப்படுவதை முதலில் விட்டு விட வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்திப் பேசினார்.

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران

أَيْ الَّذِينَ تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير ابن كثير

قال السدي: لما تجهز النبّي صلى الله عليه وسلم وأصحابه للمسير إلى بدر الصغرى لميعاد أبي سفيان أتاهم المنافقون وقالوا: نحن أصحابكم الذين نهيناكم عن الخروج إليهم وعصيتمونا، وقد قاتلوكم في دياركم وظفروا؛ فإن أتيتموهم في ديارهم فلا يرجع منكم أحد. فقالوا: "حسبنا الله ونعم الوكيل".  (تفسير القرطبي

 உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அபூ சுஃப்யான் மீண்டும் முஸ்லிம்களை தாக்குவதற்கு பத்ரில் சந்திப்போம் என்று கூறினார். ஆனால் அதற்காக பயப்படாத நபி ஸல் அபூ சுஃப்யான் சொன்ன அந்த இடத்தில் மறுபடியும் காஃபிர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சில முனாஃபிக்குகள் அங்கு வந்து நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நீங்கள் அவர்களுடன் மோத வேண்டாம். உங்களுடைய இடத்திற்கே வந்து அவர்கள் வெற்றியடைந்து விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது நீங்கள் அவர்களுடைய இடத்திற்குச் சென்றால் உங்களில் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று பயமுறுத்தினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும் முஸ்லிம்களும் சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹ்... என மொழிந்தார்கள். பயம் அதிகமாகும் என்று கருதி பயம் காட்டிய முனாஃபிக்குகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  மாறாக முஸ்லிம்களின் ஈமான் மேலும் வலுவடைந்தது.                                

கடைசி நிமிடம் வரை பயப்படாமல் இறைவனின் உதவி எப்படியும் வரும் என்று நம்பிய இப்றாஹீம் (அலை) அவர்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ أُلْقِيَ فِي النَّارِ وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} (بخاري) 4563

3. தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்.

அதாவது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஏதேனும் குளறுபடி இருந்தால் விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். ஆதாரங்கள் சரியாக இருந்தும் அரசு நமக்கு எதிராக சூழ்ச்சி முடிந்த வரை அதைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

நம் உரிமையை பிறர் அபகரித்துக் கொள்ள இடம் தரக் கூடாது...

 நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. வாக்களிக்கும் உரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் மகத்தான உரிமையாகும். அந்த உரிமையை நாம் நம்முடைய அலட்சிய போக்கினால் இழந்து விடக் கூடாது. 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنه قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ». [صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم 

 ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள். நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ”நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்” என்றார்கள். ”அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது... ”நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”. என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார் ”அவன் நரகவாதியே!” என்று பதில் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் ) இந்த ஹதீஸுக்கு மாற்றமாக இன்று நமக்கான உரிமைகளைப் பெறுவதில், இருக்கும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதில்,  ஆவணங்களை பாதுகாப்பதில் நம் சமுதாயம் மிகவும் பின் தங்கியுள்ளது.

4. BOOTH LEVEL OFFICERS கொண்டு வரும்  ENUMERATION FORM ஐ கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்

 கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சூழலில் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 01.07.1987-க்கு முன்பு பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். 01.07.1987 - 02.12.2004 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்றால் வாக்காளர் மற்றும் அவரின் தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். 02.12.2004-க்கு பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

இவை அனைத்துமே கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆனது. 

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? பின்வரும் ஆதாரங்களில் ஏதேனும் மூன்று

1.அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப் பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம்  (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)  2. பிறப்பு சான்றிதழ் 3. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) 4. பள்ளி அல்லது கல்வி சான்றிதழ் 5. நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் 6. வன உரிமைச் சான்றிதழ் 7. சாதிச் சான்றிதழ் 8. மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு 9. அரசால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கப்பட்ட சான்று. 10. ஆதார் அட்டை

குடும்பத்தில் சிலர் மட்டும் வெளியூரில், வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வாக்காளர்கள் தங்கள் பெயரை நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்றாலும் கல்வி, வேலை நிமித்தமாக யாரேனும் வெளியூரில் இருந்து, நேரடியாக வர முடியாத சூழல் இருந்தால் குடும்ப உறவினர் ஒருவர் அவர் சார்பில் உத்தரவாதம் வழங்கி பூர்த்தி செய்யலாம் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். படிவத்தில் அதற்கான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.12.2025, பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் - 09.12.2025 - 08.01.2026, விசாரணை மற்றும் சரிபார்த்தல் - 09.12.2025 - 31.01.2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 07.02.2026.

4. சமூக அக்கறை கொண்ட இளைஞர்களைத் தயார் படுத்தி  விழிப்புணர்வு ஏற்படுத்துவது

இளைஞர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை 

எத்தனையோ மூத்த சஹாபாக்கள் இருந்தும் கூட ஒரு இளைஞரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.

عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ - رضى الله عنه - قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ عِنْدَهُ قَالَ أَبُو بَكْرٍ - رضى الله عنه - إِنَّ عُمَرَ أَتَانِى فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقُرَّاءِ الْقُرْآنِ وَإِنِّى أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ بِالْمَوَاطِنِ ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ وَإِنِّى أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ .قُلْتُ لِعُمَرَ كَيْفَ تَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ عُمَرُ هَذَا وَاللَّهِ خَيْرٌ . فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِى حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِى لِذَلِكَ ، وَرَأَيْتُ فِى ذَلِكَ الَّذِى رَأَى عُمَرُ . قَالَ زَيْدٌ قَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ لاَ نَتَّهِمُكَ ، وَقَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ لِرَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِى نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَىَّ مِمَّا أَمَرَنِى مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ أَبُو بَكْرٍ يُرَاجِعُنِى حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِى لِلَّذِى شَرَحَ لَهُ صَدْرَ أَبِى بَكْرٍ وَعُمَرَ - رضى الله عنهما - فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنَ الْعُسُبِ وَاللِّخَافِ وَصُدُورِ الرِّجَالِ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِى خُزَيْمَةَ الأَنْصَارِىِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرَهُ ( لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ ) حَتَّى خَاتِمَةِ بَرَاءَةَ ، فَكَانَتِ الصُّحُفُ عِنْدَ أَبِى بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ عِنْدَ عُمَرَ حَيَاتَهُ ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ - رضى الله عنه – (بخاري                                                         

இறையச்சமுள்ள வாலிபர்கள் இன்றும்  உள்ளனர்.  அவர்கள் இல்லா விட்டால் எப்போதோ உலகம் அழிந்திருக்கும்

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير    ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا

இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்)  ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

6. வாக்குரிமை பற்றி ‘மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளவை

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமையைச் செலுத்துவதற்கு பின்வரும் மூன்று சட்ட நிலைகள் பொருந்தும் என முஃப்தீ முஹம்மது ஷஃபீஉ (ரஹ்) அவர்கள் தமது ‘மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். 

1.வாக்களிப்பது சாட்சியம் அளிப்பதற்குச் சமம்

 சாட்சியம் அளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே வாக்களிப்பதும் கடமையாகும். மேட்டுக்குடியினரும், பெரும் படிப்பாளிகளும் வரிசையில் நின்று வாக்களிப்பதைச் சிரமமாகக் கருதுகின்றனர்.  சிலர் எனது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என்று கருதி வாக்களிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஒரு வாக்கின் பெறுமதி மிகவும் கனமானது என்பதால்தான் வெயில், மழை பாராமல் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாக்குச் சேகரிக்கிறார் அரசியல்வாதி. தவிரவும், எனதொரு வாக்கால் என்னவாகி விடப்போகிறது என்று கருதும் அலட்சியமான குடிமக்கள்தான் கள்ள வாக்குச் செலுத்தும் நபர்களுக்கு வாசல்களைத் திறந்து விடுகின்றனர். நூறுபேர் இப்படி நினைத்து வாக்களிப்பதை அவர்கள் தவிர்த்தால்  யோக்கியமான  வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் அவலம் நேரலாம். 

 சாட்சி சொல்வதற்கு எவ்வாறு காசு எதிர்பார்க்கக்கூடாதோ அவ்வாறே வாக்களிப்பதற்கு காசு எதிர்பாரக்கக் கூடாது. ஆயிரம் அல்லது ஈராயிரம் ரூபாய்களுக்காகவும் கவர்ச்சிகரமான சில அன்பளிப்புகளுக்காகவும் ஆசைப்பட்டு தகுதியற்றவருக்கு வாக்களித்தால் அது பொய் சாட்சியம் சொல்லும் பாவத்திற்கு இணையானது.  கள்ள வாக்குச்செலுத்துவது, செலுத்த வழிவகுப்பது இவ்விரண்டும் பொய்ச்சாட்சியம் சொல்வது, பொய்ச்சாட்சியம் சொல்ல வழிவகுப்பது ஆகியவற்றுக்குச் சமம். 

عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الْأَسَدِيِّ عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الْأَسَدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالشِّرْكِ بِاللَّهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ { وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ }ِلَى آخِرِ الْآيَةِ (ترمذي)

 (ஒருமுறை) நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழ வைத்து விட்டுத் திரும்பியதும் (மக்களை நோக்கி) எழுந்து நின்று, “பொய் சாட்சி கூறுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதற்குச் சமமான (பாவச்) செயலாகும்” என்று மும்முறை கூறிய பின், “பொய்யுரைப்பதிலிருந்து விலகிவிடுங்கள்” (22:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் - 2223)

2.வாக்களிப்பது பரிந்துரை செய்வதற்குச் சமம்

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا (85) النساء

 “யார் ஒரு நல்ல பரிந்துரை செய்கிறாரோ அவருக்கும் அதில் ஒரு பங்கு உண்டு. யார் ஒரு தீய பரிந்துரை செய்கிறாரோ அவருக்கும் அதில் ஒரு பங்கு உண்டு. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” (4:85) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

  திருடன் ஒருவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யாரிடமாவது நாம் பரிந்துரை செய்வோமா? அல்லது மோசடிப் பேர்வழிக்குக் கடன் கொடுக்க நாம் பரிந்துரைப்போமா? அப்படிச்செய்தால் அதன் விளைவுகளுக்கு பொறுப்பாளிகளாக நாமும் ஆக வேண்டுமல்லவா? அதைப்போன்றே தகுதியற்றவருக்கு நாம் வாக்களித்து அவர் அதிகாரத்திற்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் செய்யும் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் அக்கிரமம் அனைத்திலும் நமக்கும் ஒரு பங்கு வந்து சேரும்.

3.வாக்களிப்பது பொறுப்பாளரை நியமிப்பதற்குச் சமம்

   அதாவது நாம் ஒருவருக்குச் செலுத்தும் வாக்கு, அவரை நாம் நம்முடைய பிரச்சினைகளை எடுத்து வைக்கும் பொறுப்பாளராக (வகீல்) நியமிப்பதற்குச் சமம்.  நாம் யாருக்கு வாக்களிக்கிறோமோ அவரை நம் ஒருவருக்கு மட்டும் பொறுப்பாளராக நாம் நியமிக்கவில்லை; மாறாக, தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் சேர்த்தே நாம் அவரைப் பொறுப்பாளர் ஆக்குகிறோம். எனவே, அவர் தவறு செய்தால் அது நம்மை மட்டுமன்றி அனைவரையும் சேர்த்தே பாதிக்கும். அதற்கு நாமும் துணை போனதாகவே அமையும்.

 ஆகவே, வாக்களித்தல் என்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மேற்கண்ட மூன்று விதமான சட்ட நிலைகளைக் கொண்டிருப்பதால், அது மிகுந்த விழிப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு என்பது தெளிவாகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...