வியாழன், 20 நவம்பர், 2025

தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்

21-11-2025
جمادي الاولي  - 29 بسم الله الرحمن الرحيم  
 தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் அனைத்தும் நடைபெறுகின்றன என்றாலும் ஒரு முஃமின் பல்வேறு விஷயங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதுடன் அவனிடம் தற்காப்பும் முயற்சியும் முன்னெச்சரிக்கையும் தேவை என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது.
قال رجل للنبي صلى الله عليه وسلم أرسل ناقتي وأتوكل؟ قال: "اعقلها وتوكل" (ححيح ابن حبان)
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கட்டுமா என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிப் போடுங்கள் பிறகு  அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு போரின் போது இரண்டு கவச உடைகள் அணிந்தார்கள். காரணம் தற்காப்புக்காக.  
அல்லாஹ்வின் ரஸூல் தானே எதுவும் நமக்கு ஏற்படாது என்று எண்ணி தற்காப்பு நடவடிக்கைகளை விடவில்லை. அகழ்ப் போரின் போது எதிரிகள் படை திரண்டு மிகவும் அருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தி தாமதமாக வந்த போது ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் என்று கூறியதுடன் நின்று விடாமல் மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். 
 தற்காப்பு, முன்னெச்சரிக்கை என்பது பலவகைப்படும். நோய்கள் வராதிருக்க துஆச் செய்வதுடன் நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளும். மேலும் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் நாம் இந்தியர் என்பதற்கான ஆவணங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வதும் தற்காப்பு என்ற வகையில் சேரும். நம் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் செல்வதும் தற்காப்பு என்ற வகையில் சேரும்.
நமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம்  தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்
 தங்களின் ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்ட், வங்கி புத்தகம், ஸ்கூல் T.C., நிலப் பத்திரம், லைசென்ஸ், போன்ற அனைத்து ஆவணங்களிலும் பெயர்கள் ஒரே மாதிரி இருக்கும்படி திருத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஆவணங்களில் வேண்டுமென்றே குளறுபடி ஏற்படுத்தப்படுவதுடன் அதை சரி செய்ய முஸ்லிம்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வதில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் கவனக் குறைவாக இருக்கிறோம். வேலூர் மாவட்டத்தில் ஜைத்தூன் பீவி என்ற பெண்ணின் பெயரை சைத்தான் பீவி என்று அச்சடிக்கப் பட்டுள்ளது. 
ஆவணங்களை சரி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு முஸ்லிம்கள் வசிக்கும் எத்தனையோ கிராமப் பகுதிகளுக்கு போய்ச் சேரவில்லை. அங்குள்ளவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கப்பட்டு நீண்ட நாட்கள் கழித்தும் விபரம் தெரியாமல்  இரண்டு மூதாட்டிகள் பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்தார்கள் என்ற செய்தியை அறிவோம். அந்த அளவுக்கு அறியாத ஜனங்கள் இருக்கிறார்கள். 

நோய்கள் ஏற்படாமல் இருக்க தவக்குல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ « سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ ». ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّانِى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ « فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِى الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ».(ترمذي
துஆக்களில் எது சிறந்தது என ஒருவர் கேட்ட போது ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பது என்றார்கள். அடுத்த நாளும் அதே கேள்வியைக் கேட்ட போது அவ்வாறே பதில் கூறினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே கூறி விட்டு, இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தை அல்லாஹ் உனக்குத் தந்து விட்டால் நீ வெற்றியடைந்து விட்டாய் என்றார்கள்.                               
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கும் ஆரோக்கியத்தை கேட்கும்படி நபி ஸல் கற்றுத் தருவார்கள்
عن أَبي مَالِكٍ الْأَشْجَعِيُّ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي (مسلم)
ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதற்கு பதிலாக நோயை அல்லாஹ்விடம் கேட்டவரை  நபி ஸல் கண்டித்தார்கள்.
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ اللَّهُمَّ { آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ } قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ (مسلم) بَاب كَرَاهَةِ الدُّعَاءِ بِتَعْجِيلِ الْعُقُوبَةِ فِي الدُّنْيَا- كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ
கருத்து-ஒரு முஸ்லிமை நபி ஸல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் ஆரோக்கியத்துடன் இருந்தவர் தான். ஆனால் திடீரென்று ஏற்பட்ட நோயால் உடல் சுருங்கி கோழிக்குஞ்சு போலாகி விட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க க் கூடாத ஏதேனும் கேட்டீர்களா என்றார்கள். அதற்கு அவர் ஆம் நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் மறு உலகில் ஏதேனும் தண்டனை கொடுப்பதாக இருந்தால் அதை இந்த உலகிலேயே தந்து விடு என துஆச் செய்தேன் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் சுப்ஹானல்லாஹ் அவ்வாறு கேட்கலாமா.. அவ்வாறு அல்லாஹ் தந்தால் உங்களால் தாங்க முடியுமா.. நீங்கள் அல்லாஹ்விடம் ரப்பனா ஆதினா... யாஅல்லாஹ் இங்கேயும் நலவைத் தா.. மறுமையிலும் நலவைத் தா.. என்று தான் கேட்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே அவர் கேட்டார். நலம் பெற்றார்.                 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري
இரண்டு நிஃமத்துகளை சரியாக பயன்படுத்துவதில் மக்கள் பொடுபோக்காக உள்ளனர்.1.ஆரோக்கியம். 2.ஓய்வு
عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (مسلم
நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு'                                                         
பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக! அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி

நோய்கள் அணுகாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ،  رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"الْمَعِدَةُ حَوْضُ الْبُدْنِ، وَالْعُرُوقُ إِلَيْهَا وَارِدَةٌ، فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ، وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسَّقَمِ". (: المعجم الكبير للطبراني
கருத்து- இரைப்பை குடல் என்பது ஒரு தடாகம் போன்றதாகும். ஒரு குளத்தில் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வது போன்று உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் நரம்புகள் வழியாக சத்துக்கள் சப்ளை ஆகின்றன. தனக்குத் தேவையான சத்துக்களை இந்த இரைப்பையில் இருந்தே நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. இங்கிருந்து தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எனவே இரைப்பை குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரைப்பை கெட்டுப் போய் விட்டால் உடல் உறுப்புக்கள் கெட்டுப்போய் நோய் ஏற்படும். தப்ரானீ                  
கண்ட உணவுகளை உண்டு தன் ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை இதில் கூறப்பட்டுள்ளது
குணமடைந்த நோய் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில உணவுகளை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள்
عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ قَيْسٍ الأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ عَلِىٌّ رضي الله عنه وَعَلِىٌّ نَاقِهٌ وَلَنَا دَوَالِى مُعَلَّقَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْكُلُ مِنْهَا وَقَامَ عَلِىٌّ لِيَأْكُلَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ لِعَلِىٍّ « مَهْ إِنَّكَ نَاقِهٌ ». حَتَّى كَفَّ عَلِىٌّ عَلَيْهِ السَّلاَمُ. قَالَتْ وَصَنَعْتُ شَعِيرًا وَسِلْقًا فَجِئْتُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَلِىُّ أَصِبْ مِنْ هَذَا فَهُوَ أَنْفَعُ لَكَ ». (ابوداود
 அலி (ரழி) அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அப்போதுதான் குணமடைந்த நிலையில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது பேரீத்தங்காயின் ஒரு கொப்பு வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நபி (ஸல்) உண்ண ஆரம்பித்த போது அலீ (ரழி) அவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து “உமக்கு இப்போது தான் உடல் நலம் சற்று தேறியுள்ளது. நீங்கள் இதை உண்ண வேண்டாம்” என தடுத்தார்கள். பின்பு உம்முல் முன்திர் (ரழி) அம்மையார் அவர்கள் கீரையையும் கோதுமை உணவையும் கொண்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை நோக்கி“இதை உண்ணுங்கள்”இது உமக்குப் பயனுள்ளது என்றார்கள். அபூதாவூத்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த பல்வேறு வகையான பழங்களைச் சாப்பிட வேண்டும்.
عن علي رضي الله عنه قال: إذا أكلتم الرمان فكلوه بشحمه، فإنه دباغ المعدة.    (كنز العمال)   ورُوي في رواية مرفوعا الي النبي صلى الله عليه وسلم 
அலீ ரழி கூறினார்கள். மாதுளையை நீங்கள் உண்டால் அதன் உட்புறத் தோலுடன் சேர்த்து உண்ணுங்கள். 
ஏனெனில் அது குடலை சுத்தப்படுத்தும்.  
عن مرجانة قالت: رأيت عليا يأكل رمانا فرأيته يتتبع ما يسقط منه ويأكله (كنز العمال)    
அலீரழி அவர்களை மாதுளை உண்பதாக நான் கண்டேன். அப்போது அவர்கள் அதில் ஒன்றைக்கூடவீணாக்காமல் கீழே விழுந்ததையும் எடுத்து சுத்தப்படுத்தி உண்பதை நான் கண்டேன் என மர்ஜானா என்ற பெண் கூறினார்கள்    
பேரிக்காய் இதயத்திற்கு நல்லது
عَنْ طَلْحَةَ رض قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ سَفَرْجَلَةٌ فَقَالَ دُونَكَهَا يَا طَلْحَةُ فَإِنَّهَا تُجِمُّ الْفُؤَادَ (ابن ماجة
தல்ஹா ரழிஅவர்கள் பேரிக்காயை கையில் வைத்திருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களிடம் வந்தபோது நபி ஸல் தல்ஹாவே பேரிக்காயை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் அது இதயத்திற்கு உற்சாகத்தைத் தரும் என்றார்கள்.
பிஞ்சு வெள்ளரிக்காயுடன் பேரீத்தங்காயை சாப்பிட்ட நபி ஸல் அவர்கள் 
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ (ترمذي
அசைவ உணவுகளையும் அவ்வப்போது உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
عن عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت: لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه  ابن جرير".
عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)
உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது  என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத் என்று குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஷைபா            
  நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒவ்வொரு கினாயாவான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.
மருந்து உட்கொள்வது தவக்குலுக்கு மாற்றம் அல்ல 
عَنْ أُسَامَةَ بن شَرِيكٍ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَتَاهُ نَاسٌ مِنَ الأَعْرَابِ فَسَأَلُوهُ ، فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، أَنَتَدَاوَى ؟ قَالَ : نَعَمْ ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلا أَنْزَلَ لَهُ شِفَاءً . (طبراني
சில கிராமவாசிகள் நபி ஸல் அவர்களிடம் வந்து நாங்கள் மருந்து உட்கொள்ளலாமா அது தவக்குலுக்கு மாற்றமாக ஆகுமா என்ற சந்தேகத்தை கேட்ட போது நபி ஸல் அவர்கள் நீங்கள் மருந்து உட்கொள்ளுங்கள். அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்றார்கள்.
عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ ».
மேற்படி ஹதீஸில் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்ற ஹதீஸைக் கூறும்போது பின்வரும் ஹதீஸையும் கூறுவது கடமையாகிறது
عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : كَانَ نَبِيّ اللَّه سُلَيْمَان عَلَيْهِ السَّلَام إِذَا صَلَّى رَأَى شَجَرَة نَابِتَة بَيْن يَدَيْهِ فَيَقُول لَهَا مَا اِسْمك ؟ فَتَقُول كَذَا فَيَقُول لِأَيِّ شَيْء أَنْتِ فَإِنْ كَانَتْ تُغْرَس غُرِسَتْ وَإِنْ كَانَتْ لِدَوَاءٍ كُتِبَتْ فَبَيْنَمَا هُوَ يُصَلِّي ذَات يَوْم إِذْ رَأَى شَجَرَة بَيْن يَدَيْهِ فَقَالَ لَهَا مَا اِسْمك ؟ قَالَتْ الْخَرُّوب قَالَ لِأَيِّ شَيْء أَنْتِ ؟ قَالَتْ لِخَرَابِ هَذَا الْبَيْت فَقَالَ سُلَيْمَان عَلَيْهِ السَّلَام اللَّهُمَّ عَمّ عَلَى الْجِنّ مَوْتِي حَتَّى يَعْلَم الْإِنْس أَنَّ الْجِنّ لَا يَعْلَمُونَ الْغَيْب فَنَحَتَهَا عَصًا فَتَوَكَّأَ عَلَيْهَا حَوْلًا مَيِّتًا وَالْجِنّ تَعْمَل فَأَكَلَتْهَا الْأَرَضَة فَتَبَيَّنَتْ الْإِنْس أَنَّ الْجِنّ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْب مَا لَبِثُوا حَوْلًا فِي الْعَذَاب الْمُهِين (تفسير ابن كثير
  நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஒருமுறை மலக்குல் மவ்த் அவர்களிடம் தம் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டபோது நீங்கள் சஜ்தா செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு செடி முளைக்கும். அதில் கடைசியாக ஹர்னூபா என்ற முட்செடி முளைக்கும். அன்று தான் உங்களுடைய மரணம் நிகழும் என்று மலக்குல் மவ்த் கூறினார்கள்.அதன் பின் நபி சுலைமான் அலை எங்கெல்லாம் சஜ்தா செய்தார்களோ அங்கெல்லாம் செடி முளைத்தது. அந்தச் செடியிடம் நபி சுலைமான் அலை பேசுவார்கள். முதலாவதாக விளைந்த செடியிடம் நீ யார்? எனக் கேட்க, நான் இன்ன மருத்துவ குணத்திற்காக உருவாக்கப்பட்டேன் என்று கூறியது. அதை எடுத்து மஸ்ஜிதுக்கு வெளியே தோட்டத்தில் நட்டினார்கள்.இவ்வாறு ஒவ்வொரு சஜ்தா செய்யும் போதும் விளைந்த அந்த செடிகளிடம் அதன் பயன்பாடு பற்றி நபி சுலைமான் (அலை) கேட்கஅந்தந்த செடிகள் தனது பயன்பாட்டைக் கூறும்.அதைசுலைமான்(அலை)தோட்டத்தில் நட்டுவார்கள். இப்படியாக ஒரு மூலிகைத் தோட்டமே உருவானது. கடைசியாக ஒரு இடத்தில் அவர்கள் சஜ்தா செய்த போது அந்த முட்செடி உருவானது. நீ யார்? எனக் கேட்க, நான் பைத்துல் முகத்தஸை சேதப்படுத்தவே விளைந்துள்ளேன். எனக் கூறியது. அதைத் தூக்கி தோட்டத்தில் வீசி எறிந்த சுலைமான் (அலை) தனக்கு மவ்த் நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள்.ஆனாலும்அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! பைத்துல் முகத்தஸ் கட்டி முடிக்கப்படும் வரை எனது மவ்த்தை ஜின்களுக்கு காட்டித் தராதே! என துஆ செய்தார்கள்- நூல் தஃப்ஸீர் இப்னு கஸீர்                                                     
இந்த வரலாற்றில் பல்வேறு படிப்பினைகள் உள்ளன. 1.சித்த மருத்துவத்தின் முன்னோடியாக நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இருந்துள்ளார்கள் 2. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடைசி காலத்தில் எத்தனையோ சஜ்தாக்கள் செய்திருக்கலாம். ஒவ்வொரு சஜ்தாவுக்கும் ஒரு மூலிகைச் செடி என்றால் இன்று எதுவெல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளாகவும், கீரைகளாகவும் உள்ளதோ அவற்றில் பல  சுலைமான் (அலை) அவர்களின் சஜ்தாவினால் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம் என அறிய முடிகிறது.               
3. நபி சுலைமான் (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு சஜ்தாவும் ஒரு மருந்தை இந்த உலகுக்குத் தந்திருக்கிறது எனும்போது சஜ்தாவுக்கும் மருந்துக்கும் தொடர்பு உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இன்று அந்த சஜ்தாவுக்கு பஞ்சம் நிகழுவதால் புதிய நோய்கள் பல்வேறு பெயர்களில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மருந்து கண்டு பிடிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அதற்காக மருந்துகள் இல்லை என்பதல்ல. ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள். “எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு.  (மனிதனால் அது கண்டு பிடிக்கப்பட்டு) உரிய முறையில் செலுத்தப் பட்டால் அல்லாஹ்வின் அருளால் நோய் குணமாகும்.-நூல் முஸ்லிம்.
காலாவதியான மருந்துகளை உட்கொள்வதை விட்டும் நபி ஸல் தடுத்துள்ளார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الدَّوَاءِ الْخَبِيثِ (ابوداود)
அல்லாஹ் மீது தவக்குல் என்பதை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது
عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رضي الله عنه يُخْبِرُ أَنَّ رَجُلًا أَصَابَهُ جُرْحٌ فِي رَأْسِهِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَصَابَهُ احْتِلَامٌ فَأُمِرَ بِالِاغْتِسَالِ فَاغْتَسَلَ فَكُزَّ فَمَاتَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَتَلُوهُ قَتَلَهُمْ اللَّهُ أَوَلَمْ يَكُنْ شِفَاءَ الْعِيِّ السُّؤَالُ قَالَ عَطَاءٌ وَبَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ غَسَلَ جَسَدَهُ وَتَرَكَ رَأْسَهُ حَيْثُ أَصَابَهُ الْجِرَاحُ (ابوداود)
  சுருக்கம்- ஒரு பிரயாணத்தில் இருக்கும்போது ஒரு சஹாபிக்கு காயம் ஏற்பட்டது. அந்த நிலையில் அவருக்கு குளிப்பும் கடமையானது தோழர்களிடம் இந்த நிலையில் நான் குளிக்கலாமா என ஆலோசனை  கேட்க, நீங்கள் குளித்தே ஆக வேண்டும் என ஆலோசனை சொல்லி அவர் குளித்தார். காயத்திற்குள் தண்ணீர் சென்றதால் அவர் இறந்து விட்டார். இந்த விஷயம் நபி ஸல் அவர்களுக்குத் தெரிந்த போது அந்த நண்பர்களை கடுமையாக எச்சரித்தார்கள். உங்களுக்கு சட்டம் தெரியா விட்டால் தெரிந்தவர் யாரிடமேனும் கேட்டிருக்கலாமே. அறியாமை என்ற குருட்டுத் தனத்திற்கான நிவாரணம் கேட்டுத் தெரிந்து கொள்வது தானே என்று கூறி எச்சரித்தார்கள். 
  விளக்கம்- புனிதமான போருக்காக சென்றதில் தான் காயம் ஏற்பட்டது அது சிறந்த அமல் தான் ஆனால் அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது நடந்தே தீரும். அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்றாலும் அல்லாஹ் சில விதிகளுக்கு சில காரணங்களை வைத்துள்ளான். உதாரணமாக விஷம் குடித்தால் இறந்து விடுவோம் என்பது அல்லாஹ்வின் விதியாகும். அவ்வாறிருக்க ஒருவன் விஷம் குடித்தான்.  அதனால் இறந்து போனான். இச்சமயத்தில் அல்லாஹ் தானே இவனின் உயிரைக் கைப்பற்றினான் இந்த மனிதன் மீது என்ன தவறு இருக்கிறது என்ற வாதம் நியாயமல்ல. விஷம் குடித்தால் இறந்து விடுவான் என்று அல்லாஹ்வின் நியதி இருக்கும்போது அந்த விதியை நோக்கி இவனாகச் சென்றது இவன் மீதுள்ள தவறாகும். 
நம் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் செல்வதும் முன்னெச்சரிக்கை என்ற வகையில் சேரும்
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرُ قَالَ لَا قُلْتُ الثُّلُثُ قَالَ فَالثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ (بخاري
  நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026 RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم          ஜும்ஆ பயான்- இஸ்திகாமத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவர...