வியாழன், 12 மே, 2022

குர்ஆனைக் கற்பது எளிதானது

 


13-05-2022

SHAWWAL - 11

 

بسم الله الرحمن الرحيم 

 குர்ஆனைக் கற்பது எளிதானது

(கடந்த வாரத் தொடர்)

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



உலகின் மற்ற வேதங்களை விட குர்ஆன்  கற்றுக் கொள்வதற்கும் மனனம் செய்வதற்கும் எளிதானது

குர்ஆனுடைய மொழியான அரபு மொழியும் மற்ற மொழிகளை விட எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر أي سهلناه للحفظ   وأعنا عليه من أراد حفظه فهل من طالب لحفظه فيعان عليه (قرطبي

மற்ற மொழிகள் காலத்திற்குத் தகுந்தாற்போல மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கும். ஆனால் அரபு மொழி அவ்வாறல்ல. உதாரணமாக தமிழ் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பேசிய, எழுதிய தமிழுக்கும் அதே பகுதியில் இப்போது வசிக்கும் மக்கள் பேசும், எழுதும் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் எழுதிய சுழி எழுத்துக்கள் இப்போது இல்லை. அத்தகைய தாத்தா ஒருவர் நமக்கு தமிழ் கற்றுத் தந்தால் உங்க தமிழ் எங்களுக்கு வராது என்று சொல்வோம்.

ஆங்கிலத்திலும் கூட கழிவறைக்கு ஒருநேரத்தில் டாய்லெட் என்றார்கள்.தற்போது REST ROOM என்று மருவியுள்ளது. இன்னும் பல வருடங்கள் கடந்தால் டாய்லெட், பாத்ரூம் என்பதெல்லாம் மறந்து விட வாய்ப்புண்டு.               

  ஆனால் அரபு மொழி ஆரம்ப காலத்தில் எவ்வாறு பேசப்பட்டதோ எழுதப்பட்டதோ அவ்வாறே இப்போதும் உள்ளது.   

மற்ற மொழிகளில் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக ஒரு டீ கடைக்குச் சென்று தேநீர் தாருங்கள் என்று ஒருவர் கேட்டால் அவனை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். காரணம் டீ என்ற ஆங்கிலம் தமிழாகவே மாறிப்போனது. பேருந்து என்பதற்கு பதிலாக பஸ் என்ற ஆங்கிலம் தமிழாகவே மாறிப்போனது. ஆனால் அரபி அப்படியல்ல. சஹாபிகளில் எவரேனும் ஒருவரை கப்ரில் இருந்து எழுப்பி அல்லாஹ் இப்போது பேச வைத்தாலும் அவர்கள் பேசும் அரபி இப்போதுள்ள அரபிகளுக்குப் புரியும்.                                                             

கற்றுக் கொள்ள இலகுவான மொழி அரபு மொழி

அரபியில் SMALL  லட்டர் BIG  லட்டர் இடையே வடிவங்கள் மாறுவதில்லை. 29 அரபி எழுத்துக்களைக் கற்று அவை எவ்வாறு இணைகிறது என்று மட்டும் தெரிந்தால் போதும். அது மட்டுமல்ல அந்த 29 எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஒரே வடிவம் கொண்டவை. புள்ளிகள் மட்டுமே மாறும். உதாரணமாக

ب ت ث                     - س ش -                       ج  ح خ -                    د ذ  -                   ر ز                      -  ع غ   -     ض ص-           ط ظ

எழுத்துக்கள் வெவ்வாறாக இருந்தாலும் வடிவங்கள் ஒன்று ஆனால் ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. A என்ற எழுத்து SMALL ஆக எழுதும்போது வடிவமே மாறுகிறது. எழுத்துக்கள் ஒன்று. வடிவங்கள் வெவ்வேறு. காரணம் ஆங்கிலத்தில் SMALL  லட்டர்  BIG  லட்டர் என இரு வகை உண்டு. இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள். இரண்டும் சேர்த்து 54 எழுத்துக்கள்.  அதன் வடிவங்களும் மாறும்.  54 எழுத்துக்களையும் கற்க வேண்டும். ஆனால் அரபி அப்படியல்ல. ஐந்து அல்லது வடிவங்களை மட்டுமே அறிந்து புள்ளிகளையும், ஹரகத்துகளையும் அறிந்தால் போதும்.

மனப்பாடம் செய்வதற்கும் குர்ஆன் எளிதானது

குர்ஆனை மனனம் செய்யப் படுவது போன்று  வேறு எந்த வேதமும் மனனம் செய்யப்படவில்லை.

திருக்குறளை மனனம் செய்தவர்களை எண்ணி விடலாம். ஆனால் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை எண்ணுவது எளிதல்ல.

தவ்ராத் வேதத்தை முழுமையாக மனனம் செய்தவர்கள் நான்கு பேர் மட்டும் தான்

وقال سعيد بن جبير: ليس من كتب الله كتاب يقرأ كله ظاهرا إلا القران؛ وقال غيره: ولم يكن هذا لبني إسرائيل، ولم يكونوا يقرؤون التوراة إلا نظرا، غير موسى وهارون ويوشع بن نون وعزير صلوات الله عليهم، (تفسير القرطبي)

குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள் எத்தனை சிரமமான பாடங்களையும் படித்து விடுவார்கள். அவர்களிடம் மனதில் உள்ள குர்ஆன் கடினமான பாடங்களையும் அவர்களுக்கு இலகுவாக்கி விடும். எனவே தான் வட மாநிலங்களில் மேற்படிப்புக்கான சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்யும்போது ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தருவதுடன் அவர்களுக்கான கட்டணங்களிலும் சலுகை வழங்குகிறார்கள். காரணம் முழுக் குர்ஆனையும் மனப்பாடம் செய்த இவர் கல்லூரியின் பாடங்களையும் நன்றாகப் படித்து நமது கல்லூரிக்கு நற்பெயர் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை தான் இந்த முன்னுரிமைக்குக் காரணம். இதற்கு உதாரணமாக கர்நாடகாவில் உள்ள ஷாஹின் கல்லூரியைக் கூறலாம். இங்கு ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.                   

தவ்ராத்தை யூதர்களின் உள்ளங்களில் இருந்து  அல்லாஹ் முழுமையாக மறக்கடித்து உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளத்தில் மட்டும் அற்புதமாக அதை பதிய வைத்ததால் தான் அவரை கடவுள் என்று யூதர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்

وفي تفسير القرطبي في قوله تعالي "وقالت اليهود عزير ابن الله"أن سبب ذلك القول أن اليهود قتلوا الانبياء بعد موسى عليه السلام فرفع الله عنهم التوراة ومحاها من قلوبهم، فخرج عزير يسيح في الارض، فأتاه جبريل فقال: (أين تذهب) ؟ قال: أطلب العلم، فعلمه التوراة كلها فجاء عزير بالتوراة إلى بني إسرائيل فعلمهم.وقيل: بل حفظها الله عزيرا كرامة منه له، فقال لبني إسرائيل: إن الله قد حفظني التوراة، فجعلوا يدرسونها من عنده.وكانت التوراة مدفونة، كان دفنها علماؤهم حين أصابهم من الفتن والجلاء والمرض ما أصاب وقتل بختنصر إياهم.ثم إن التوراة المدفونة وجدت فإذا هي متساوية لما كان عزير يدرس فضلوا عند ذلك وقالوا: إن هذا لم يتهيأ لعزير إلا وهو ابن الله (تفسير القرطبي

பனீ இஸ்ராயீல் சமூகம் பல நபிமார்களைக் கொன்றதால் அல்லாஹ் அவர்கள் அனைவரின் உள்ளங்களில் இருந்தும் தவ்ராத் வேதத்தை எடுத்து விட்டான். அப்போது உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தஸ்பீஹ் செய்தவர்களாகபுறப்படுவதைக் கண்டு எங்கே செல்கிறீர்கள் என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்க, நான் கல்வியைத் தேடிப் புறப்படுகிறேன். என்று கூறியவுடன் அவர்களுக்கு மட்டும் தவ்ராத்தை வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கற்றுத் தந்தார்கள்.பின்பு தன் சமூகத்திடம் வந்த உஜைர் அலைஹிஸ்ஸலாம் அதை பிறருக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். தவ்ராத்தின் ஏடுகள் பாதுகாப்பிற்காக சில நல்லவர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு புதைக்கப்பட்ட ஏடுகளின் வரிகளும் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தன. யாருக்கும் தெரியாத தவ்ராத்தை உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் இதை மாபெரும் அற்புதம் என மக்கள் கருதியதால் ஒரு கட்டத்தில் மக்கள் இந்த அற்புதம் இறைவனின் மகனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என தவறாக விளங்கி உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

குர்ஆனை மனனம் செய்யப்பட்டது போன்று வேறு எந்த வேதங்களும் மன்னம் செய்யப்பட்டதில்லை

எனவே நபி ஸல் அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை குர்ஆனின் ஒரு புள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது. கவனக் குறைவால் அவ்வாறு நிகழ்ந்தால் அதைத் திருத்த உலகம் முழுவதும் நிறைய ஹாஃபிழ்கள் இருக்கிறார்கள்.

قال الامام الرازي في تفسير هذه الاية" فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا(77الكهف) رأيتُ في كتب الحكايات أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاؤوا إلى رسول الله صلى الله عليه وسلم بحمل من الذهب وقالوا: يا رسول الله نشتري بهذا الذهب أن تجعل الباء تاءاً حتى تصير القراءة هكذا: فأتوا أن يضيفوهما أي أتوا لأن يضيفوهما أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول الله صلى الله عليه وسلم وقال:إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام الله  وذلك يوجب القدح في الإلهية . » فعلمنا أن تغيير النقطة الواحدة من القرآن يوجب بطلان الربوبية والعبودية  (تفسير الرازي)

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் பற்றி குர்ஆன் கூறும் சம்பவத்தில் அன்தாகியா என்ற ஊருக்குச் சென்றார்கள். வெளியூர்வாசிகளை விருந்தாளிகளாக ஏற்க வேண்டும் என்பது அக்காலத்தில் கடமை போன்றே இருந்த து. ஆனால் அவ்வூர் வாசிகள் இவர்களை விருந்தாளிகளாக ஏற்கவில்லை. இதை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இச்சம்பவம் நடந்து நீண்ட காலங்களுக்குப்பின் அவ்வூர்வாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்கத்தால் பெரும் குவியலைக் கொண்டு அல்லாஹிவின் தூதரே இதை ஏற்றுக் கொண்டு அந்த வசனத்தில் உள்ள பா என்ற எழுத்தின் புள்ளியை மட்டும் மேலே மாற்றியமைத்து தா வாக  ஆக்கி விடுங்கள். அதாவது உணவு தர மறுத்தார்கள் என்பதற்கு பதிலாக உணவு தர முன் வந்தார்கள் என மாற்றியமைத்தால் எங்களின் ஊருக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் நீங்கி விடும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை மறுத்து இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்தியதாக ஆகி விடும். அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்துவது அல்லாஹ்வை பொய்ப் படுத்தியதாக ஆகி விடும் என்றார்கள்.       

சிறு வயதிலேயே குர்ஆனையும் மனனம் செய்து அதன் உட்கருத்துக்களையும் அறியும் ஆற்றல் பெற்ற சஹாபிகள்

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ وَقَدْ قَرَأْتُ الْمُحْكَمَ (بخاري) بَاب تَعْلِيمِ الصِّبْيَانِ الْقُرْآنَ- كتاب فضائل القرآن- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ فِي {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لَا نَدْرِي أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ لَا قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلَامَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ (بخاري) باب (فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا )كتاب التفسير

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவின் போது எனக்கு பத்து வயது. அப்போதே குர்ஆனை நான் மனப்பாடம் செய்து விட்டேன்.               

மற்றொரு அறிவிப்பில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தம் ஆலோசனைக் குழுவில் இருந்த மூத்த பத்ரிய்யீன்களுடன் என்னையும் அமர வைப்பார்கள். அப்போது அவர்களில் சிலர் சிறுவரை நம்முடன் அமர வைக்கிறார்களே.. அவருடைய வயதில் நமக்கு மகன்கள் இருக்கிறார்களே என இயல்பான வருத்தமாக வருத்தமடைந்த போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் கல்வியில் சிறந்தவர் என்று கூறி அமைதிப் படுத்தினார்கள். இதை நிரூபிப்பதற்காக ஒரு நேரத்தில் என்னையும் மற்றவர்களையும் அழைத்து சூரத்துன் நஸ்ரை ஓதிக் காட்டி இதன் கருத்து என்ன என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து கொண்டிருக்கிறது. எனவே அதிகம் தஸ்பீஹ் செய்யுங்கள் என்பது தான் இதன் கருத்து என்றார்கள். வேறு சிலர் இதன் விளக்கம் தெரியாது என்றார்கள். வேறு சிலர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை அழைத்து நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள். அப்போது நான் இந்த சூரா மக்கா வெற்றி ஏற்பட்டு விட்டது என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உலக வாழ்வு முடிவையும் அறிவிக்கும் முன்னறிவிப்பு என்றேன். அதற்கு உமர் நீர் விளங்கியது போன்று தான் நானும் விளங்கினேன். (அதை மற்றவர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தவே இவ்வாறு  செய்தேன்) என்றார்கள்.         

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ كَالرَّجُلِ الْمُسْلِمِ لَا يَتَحَاتُّ وَرَقُهَا وَلَا وَلَا وَلَا,- تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ قَالَ ابْنُ عُمَرَ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ لَا يَتَكَلَّمَانِ فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ (وفي رواية فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ) فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ يَا أَبَتَاهُ وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ قَالَ لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا قَالَ عُمَرُ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا (بخاري) باب قوله تعالي( يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ )كتاب التفسير

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள்போலவே இப்னுஉமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களும் சிறு வயதிலேயே குர்ஆனின் உட்கருத்துக்களை அறியும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். இதுபற்றி அவர்கள் கூறும்போது ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் நாங்கள் இருந்த போது மரங்களில் ஒரு மரம் உள்ளது. அது சிறந்த முஃமினுக்கு ஒப்பானது. அதன் இலைகள் உதிராது. எல்லா நிலையிலும் பலன் தரும் அது எந்த மரம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது என்னுடைய மனதில் அது பேரீத்த மரம் என எண்ணம் உதித்த து. ஆனால் அபூபக்கர் உமர் ரழியல்லாஹுஅன்ஹும் போன்ற மூத்தவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் இருந்த போது நான் முந்துவதற்கு வெட்கப்பட்டேன். எனினும் யாரும் பதில் சொல்லாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அது பேரீத்த மரம் என்று பதில் கூறினார்கள். அந்த மஜ்லிஸை விட்டும் நாங்கள் எழுந்த போது நான் என் தந்தையிடம் என் தந்தையே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கும்போது எனக்கு அந்த பதில் தெரியும். என்றேன். அப்போது என் தந்தை நீ அங்கேயே ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்க, அதற்கு நான் நீங்கள் யாரும் பதில் சொல்லாத தால் நான் சொல்லவில்லை என்றேன். அதற்கு என் தந்தை நீ சொல்லியிருந்தால் நான் சந்தோஷம் அடைந்திருப்பேனே என்றார்கள்.                                                          

படிப்பினை- இந்த விளக்கம் குர்ஆனில் இருந்து பெறப்படுகிறது. சஹாபாக்கள் குர்ஆனுடைய விளக்கங்களையும் கற்று சிறு வயதிலேயே கற்று வைத்திருந்ததுடன் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் சஹாபாக்கள் சிறு வயதிலேயே கற்று வைத்திருந்தார்கள். இக்காலத்தில் இந்த இரண்டும் பெரும்பாலும் இல்லை. ஒரு பிரபலமான டிவி ஷோ நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட எல்லா பொதுக் கேள்விகளுக்கும் உடனே பதிலளித்தாள். ஆனால் கடைசியாக இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு கேள்வியாக குரஆனில் ஒரு பெண்ணுடைய பெயரில் ஒரு சூரா உள்ளதே அது எந்த சூரா என்று கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாம் தெரிந்த அவளுக்கு இஸ்லாம் பற்றி அறவே தெரிந்திருக்கவில்லை. இன்று பல பிள்ளைகளின் நிலை இவ்வாறு உள்ளது

இன்றைய காலத்தில் அல்ஹம்து சூராவைக் கூட ஓதத் தெரியாததால் தந்தையின் ஜனாஸாவில் கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்குபவர்கள் நிறைய உள்ளனர்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)

பாழடைந்த வீட்டில் கெட்ட ஜின்களும், ஷைத்தான்களும் தான் குடியிருப்பர். அதுபோல் குர்ஆனின் எந்த வசனமும் மனதில் இல்லாதவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் குடியிருப்பான்

குர்ஆனின் மிக முக்கியமான சூராவான அல்ஹம்து சூரா கூட பலருக்கு சரிவர ஓதத்தெரியவில்லை

منزلة سورة الفاتحة : عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى قَالَ كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي فَقَالَ أَلَمْ يَقُلْ اللَّهُ {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} ثُمَّ قَالَ لِي لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ تَخْرُجَ مِنْ الْمَسْجِدِ ثُمَّ أَخَذَ بِيَدِي فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ قُلْتُ لَهُ أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ قَالَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ (بخاري) باب { فَضْلِ } فَاتِحَةِ الْكِتَابِ- كتاب فضائل القرآن

அல்ஹம்து  சூராவை சரியாக ஓதத் தெரியாதவர்கள்  எத்தனை பேர். ஷாஃபீ மத்ஹபில் அல்ஹம்து சூராவை நன்கு ஓதத் தெரிந்த ஒருவர் அதில் உள்ள 155 எழுத்துக்களில் ஒரு எழுத்தை விட்டாலும், அல்லது உச்சரிப்பை மாற்றி ஓதினாலும், அல்லது அதில் உள்ள 14 ஷத்துகளில் ஒன்றை விட்டாலும் தொழுகை கூடாது

குர்ஆனை நாமும் ஒதி, நம் பிள்ளைகளைகளுக்கும் பயிற்சி அளிப்பதால் நம்முடைய மவ்த்துக்குப் பின் நமக்காக குர்ஆன் ஓதி, துஆ செய்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். அதற்கு மாற்றமாக நம்முடைய ஜனாஸாவில் கூட கலந்து கொள்ள தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கி விடக் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ (مسلم)

عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا(ابواود)

குர்ஆனைக் கற்று அதன்படி அமல் செய்தவரின் பெற்றோருக்கு நாளை மறுமையில் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படும். பெற்றோருக்கே இவ்வளவு மரியாதை என்றால் அமல் செய்தவருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்பதே நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்

عَنْ عَائِشَةَ رضي الله عنها عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ فَلَهُ أَجْرَانِ (ابوداود) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ تَعَالَى يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ  (ابوداود)

அழகிய முறையில் உளத்தூய்மையுடன் குர்ஆனை ஓதுபவருக்காக மலக்குகள் விண்ணில் இருந்து இறங்குவார்கள்

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ قَالَ بَيْنَمَا هُوَ يَقْرَأُ مِنْ اللَّيْلِ سُورَةَ الْبَقَرَةِ وَفَرَسُهُ مَرْبُوطَةٌ عِنْدَهُ إِذْ جَالَتْ الْفَرَسُ فَسَكَتَ فَسَكَتَتْ فَقَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَسَكَتَ وَسَكَتَتْ الْفَرَسُ ثُمَّ قَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَانْصَرَفَ وَكَانَ ابْنُهُ يَحْيَى قَرِيبًا مِنْهَا فَأَشْفَقَ أَنْ تُصِيبَهُ فَلَمَّا اجْتَرَّهُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ حَتَّى مَا يَرَاهَا فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ قَالَ فَأَشْفَقْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ تَطَأَ يَحْيَى وَكَانَ مِنْهَا قَرِيبًا فَرَفَعْتُ رَأْسِي فَانْصَرَفْتُ إِلَيْهِ فَرَفَعْتُ رَأْسِي إِلَى السَّمَاءِ فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ الْمَصَابِيحِ فَخَرَجَتْ حَتَّى لَا أَرَاهَا قَالَ وَتَدْرِي مَا ذَاكَ قَالَ لَا قَالَ تِلْكَ الْمَلَائِكَةُ دَنَتْ لِصَوْتِكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَنْظُرُ النَّاسُ إِلَيْهَا لَا تَتَوَارَى مِنْهُمْ (بخاري)كتاب فضائل القرآن

உஸைத் இப்னு ஹுழைர் ரழியல்லாஹு அன்ஹு என்ற சஹாபீ  பகரா சூராவை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை யஹ்யா வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் அவரது குதிரை கட்டப்பட்டிருந்த து. இவர் ஓத ஓத குதிரை துள்ள ஆரம்பித்த து. இவர் ஓதுவதை நிறுத்தினால் குதிரையும் துள்ளுவதை நிறுத்தியது.  குழந்தைக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயம் இவருக்கு ஏற்பட குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு இவர் வெளியில் எழுந்து வந்து விட்டார். அப்போது அருமையான காட்சியைப் பார்த்தார். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபரித்துச் சொன்னார். நான் வானத்தில் பார்த்தபோது வானமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது போன்றும் மேகம் நிழல் தருவது போன்றும் நான் கண்டேன். அதைக் கண்டு என் குதிரை துள்ளியிருக்கிறது என்று சொன்ன போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் உம்முடைய குர்ஆனின் சப்தத்திற்காக மலக்குகளின் வருகை தான் நீர் பார்த்த காட்சியாகும். நீர் இன்னும் நிறுத்தாமல் ஓதியிருந்தால் நீங்கள் பார்த்த காட்சியை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று கூறினார்கள்.                                 

இன்றும் உளத்தூய்மையுடன் குர்ஆன் ஓதினால் மலக்குகள் வருகை தருகிறார்கள். ஆனால் அந்த ஒரு தடவை மட்டும் அல்லாஹ் கண்கூடாக காட்டித் தந்துள்ளான்.

குர்ஆனின் விளக்கத்தை எவ்வளவு தெரிந்து கொண்டாலும் அது போதாது என்று கருதிய சஹாபாக்கள்

عَنْ مَسْرُوقٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بن مسعود- رضى الله عنه - وَاللَّهِ الَّذِى لاَ إِلَهَ غَيْرُهُ مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ وَلاَ أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّى بِكِتَابِ اللَّهِ تُبَلِّغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ . (بخاري)

குர்ஆனின் எந்த ஒரு வசனமும் இறங்கினாலும் அது எங்கே இறங்கியது எதற்காக இறங்கியது என்பது பற்றி நான் தெரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டேன். இது பற்றி என்னை விட அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அவரிடம் சென்று அந்த விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு நான் சங்கடப்பட மாட்டேன்.- இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு   குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ  أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) شَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை மன ஓர்மையுடன் ஓத வேண்டும். சிந்தனை தடுமாறிய நிலையில் குர்ஆன் ஓதுவதை விட நிறுத்தி விடுவது நல்லது

عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله  عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ  فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ (بخاري

குர்ஆனைக் கற்று பின்பு அதன் தொடர்பு இல்லாமல் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ قَالَ النَّبِىُّ  صلى الله عليه وسلم مَا لأَحَدِهِمْ يَقُولُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ . بَلْ هُوَ نُسِّىَ (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

வயதான காலத்தில் தனக்கு மறந்து விட்ட சூராவை கற்றுத் தரும்படி பெருமானாரிடம் வேண்டிய சஹாபீ

عن عبد الله بن عمرو أن رجلا أتى النبي صلى الله عليه و سلم فقال : يا رسول الله أقرئني القرآن قال : ( اقرأ ثلاثا من ذوات ألر ) قال الرجل : كبر سني وثقل لساني وغلظ قلبي قال رسول الله صلى الله عليه و سلم : ( اقرأ ثلاثا من ذوات حم ) فقال الرجل مثل ذلك ولكن أقرئني يا رسول الله سورة جامعة فأقرأه رسول الله صلى الله عليه وسلم { إذا زلزلت الأرض } حتى بلغ : { من يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره } قال الرجل : والذي بعثك بالحق ما أبالي أن لا أزيد عليها حتى ألقى الله... (صحيح  ابن حبان)

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் மனப்பாடம் செய்வதற்கு சூராவை சொல்லும்படி வேண்டினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அலிஃப் லாம்  ரா  என்று ஆரம்பிக்கும் மூன்று சூராவைச் சொன்ன போது அவர் எனக்கு வயதாகி விட்டது. நாவும் தடுமாறுகிறது. மனதில் மனன சக்தியும் கடினமாகி விட்டது என்றார். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாமீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களைப் பரிந்துரைத்த போது அப்போதும் அவரின் இயலாமையைத் தெரிவித்தார். அதன் பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜில்ஜால் சூராவை கற்றுத் தந்தார்கள். அதைக் கற்றுக் கொண்ட அவர் நான் அல்லாஹ்வை சந்திக்கும் வரை இதுவே எனக்குப் போதும் என்று கூறிச் சென்றார்.

 

வியாழன், 5 மே, 2022

மக்தப் மதரஸா ஆரம்பம்

 


06-05-2022

SHAWWAL - 4

 

بسم الله الرحمن الرحيم 

மக்தப் மதரஸா ஆரம்பம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





   









எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகிவிடும் -  உர்தூ கவிதை

குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رضي الله عنهعَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلَا رِيحَ لَهَا(ابن ماجة)

குர்ஆனை ஓதுகின்ற முஃமினுக்கு உதாரணம் உத்ருஜ்ஜா பழத்தைப் போன்றது. அதன் மணம் நறுமணமாகும். அதன் சுவையும் இனிமையானதாகும்.குர்ஆனை ஓதாத முஃமினுக்கு உதாரணம் ஈத்தம்பழத்தைப் போன்றதாகும். அதற்கு நறுமணம் கிடையாது அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதக் கூடிய நயவஞ்சகனுக்கு உதாரணம் ரைஹானா பழத்தைப் போன்றதாகும். அதன் மணம் நல்லது அதன் சுவை கசப்பானது. குர்ஆனை ஓதாதவனுக்கு உதாரணம் ஹன்லலா பழததைப் போன்றதாகும்.  அதற்கு நறுமணமில்லை அதன் சுவை கசப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்)குர்ஆனுடன் வாழும் ஒரு முஸ்லிம் நறுமணம் வீசும் ஒரு முஸ்லிமாகவே எப்போதும் காட்சியளிப்பார்.நிச்சயமாக குர்ஆனின் மூலமே உள்ளங்கள் உயிர் பெறுகின்றன.குர்ஆனை ஓதுபவன் நிஃபாக் உடையவனாக இருந்தாலும் அவனையும் நபி ஸல் அவர்கள் நறுமணமுள்ள மலருக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.                                                                                                                                                                 

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة)

جاء شخص وعليه علامات الانكماش إلى أمير المؤمنين علي رضي الله عنه وقال له: أحس في نفسي أني أموت بعد ساعة، فقال له علي رضي الله عنه: (الموت ليس مشكلة، كلنا نموت).فقال له: ماذا أعمل في هذه الساعة؟قال (علي رضي الله عنه (اطلب العلم).

ஹழ்ரத் அலீ ரழி அவர்களிடம் ஒருவர் வந்து எனக்குள் மவ்த்துடைய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதுஎன்றார். அதற்கு அலீ ரழி இது எல்லோருக்கும் வருவது  தானே என்றுகூற, அதற்கு அவர் நான் இறுதிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க,கல்வியை கற்றுக் கொள் என்றார்கள்.                                             

நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லைஇது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.                  

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

عن قيس قال : قال خالد بن الوليد : لقد منعني كثيرا من القراءة الجهاد في سبيل الله  (مسند ابي يعلي

வேறு அறிவிப்புகளில் இச்சம்பவம் சற்று விரிவாக உள்ளது. காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் கடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என அழுதபடி அவர்களின் உயிர் பிரிந்தது                                                 

குர்ஆனை கற்று பின்பு மறந்தவர்களைப் பற்றி....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டபோது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும்.அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டதுகுர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்..

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதியவரை அல்லாஹ் மறுமையிலும் சங்கைப் படுத்துவான்

قال الله تعالي وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5)المزملترتيل القراءة : التأني فيها والتمهل وتبيين الحروف

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை மறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். ஓத ஓத அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) قَالَ كَانَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ عَلِّمُوا أَوْلادَكُمْ وَأَهَالِيكُمَ الْقُرْآنَ فَإِنَّهُ مَنْ كُتِبَ لَهُ مِنْ مُسْلِمٍ يُدْخِلُهُ اللَّهُ الْجَنَّةَ أَتَاهُ مَلَكَانِ فَاكْتَنَفَاهُ فَقَالا لَهُ : إقرأ وَارْتَقِ فِي دَرَجِ الْجَنَّةِ حَتَّى يَنْزِلانهِ حَيْثُ انْتَهَى عِلْمُهُ مِنَ الْقُرْآنِ(مصنف ابي شيبة)عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي)

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து கூடும்               

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

மார்க்கக் கல்வியை கற்றவரின்  சிறப்பைப் பற்றி இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறும் அற்புதமான சம்பவம்

قال ابن بطال في شرح صحيح البخاري: أول ما حدثنى مالك بن أنس حين أتيته طالبًا قال : قدم المدينة غلام من أهل الشام بحداثة سنك فكان معنا يجتهد ويطلب حتى نزل به الموت ، فلقد رأيت على جنازته شيئًا لم أر مثله على أحد من أهل بلدنا ، لا طالب ولا عالم ، فرأيت جميع العلماء يزدحمون على نعشه ، فلما رأى ذلك الأمير أمسك عن الصلاة عليه ، وقال : قدموا منكم من أحببتم ، فقدم أهل العلم ربيعة ، ثم نهض به إلى قبره ، قال مالك : فألحده فى قبره ربيعة ، وزيد بن أسلم ، ويحيى بن سعيد ، وابن شهاب ، وأقرب الناس إليهم محمد بن المنذر ، وصفون بن سليم ، وأبو حازم وأشباههم وبنى اللَّبِن على لحده ربيعة ، وهؤلاء كلهم يناولوه اللَّبِن ، قال مالك : فلما كان اليوم الثالث من يوم دفنه رآه رجل من خيار أهل بلدنا فى أحسن صورة غلام أمرد ، وعليه بياض ، متعمم بعمامة خضراء ، وتحته فرس أشهب نازل من السماء فكأنه كان يأتيه قاصدًا ويسلم عليه ، ويقول : هذا بَلَّغنى إليه العلم ، فقال له الرجل : وما الذى بلغك إليه ؟ فقال : أعطانى الله بكل باب تعلمته من العلم درجة فى الجنة ، فلم تبلغ بى الدرجات إلى درجة أهل العلم ، فقال الله تعالى : زيدوا ورثة أنبيائى ، فقد ضمنت على نفسى أنه من مات وهو عالم سنتى ، أو سنة أنبيائى ، أو طالب لذلك أن أجمعهم فى درجة واحدة فأعطانى ربى حتى بلغت إلى درجة أهل العلم ، وليس بينى وبين رسول الله ( صلى الله عليه وسلم ) إلا درجتان ، درجة هو فيها جالس وحوله النبيون كلهم ، ودرجة فيها جميع أصحابه ، وجميع أصحاب النبيين الذين اتبعوهم ، ودرجة من بعدهم فيها جميع أهل العلم وطلبته ، فسيرنى حتى استوسطتهم فقالوا لى : مرحبًا ، مرحبًا ، سوى ما لى عند الله من المزيد ، فقال له الرجل : ومالك عند الله من المزيد ؟ فقال : وعدنى أن يحشر النبيين كلهم كما رأيتهم فى زمرة واحدة ، فيقول : يا معشر العلماء ، هذه جنتى قد أبحتها لكم ، وهذا رضوانى قد رضيت عنكم ، فلا تدخلوا الجنة حتى تتمنوا وتشفعوا ، فأعطيكم ما شئتم ، وأشفعكم فيمن استشفعتم له ، ليرى عبادى كرامتكم علىَّ ، ومنزلتكم عندى . فلما أصبح الرجل حدث أهل العلم ، وانتشر خبره بالمدينة ، قال مالك : كان بالمدينة أقوام بدءوا معنا فى طلب هذا الأمر ثم كفوا عنه حتى سمعوا هذا الحديث ، فلقد رجعوا إليه ، وأخذوا بالحزم ، وهم اليوم من علماء بلدنا ،

இமாம் மாலிக் ரஹ் கூறியதாக அவர்களின் மாணவர் இப்னு பத்தால் ரஹ் கூறியுள்ளார்கள் ஷாமில் இருந்து ஒரு இளம் வயது மாணவர் கல்வி கற்க மதீனா வந்தார். முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்றார். இந்நிலையில் அவருக்கு மரணம் வந்து விட்டது. அவருடைய ஜனாஸாவில்  கலந்து கொண்டு கொண்ட கூட்டத்தைப் போல் வேறு யாருடைய ஜனாஸாவிலும் நான் கூட்டத்தை நான் காணவில்லை. அப்போதைய அமீர் கூட்டத்தை நோக்கி நீங்கள் யாரை விரும்பவீர்களோ அவர் இவருக்கு தொழ வைக்கட்டும் என்று கூற, ரபீஆ ரஹ் அவர்கள் தொழ வைத்தார்கள். அடுத்து அவரை அடக்கும் பணியில் முக்கியமான பெரும் பெரும் தாபியீன்கள் ஈடுபட்டார்கள். அடக்கம் செய்த மூன்றாவது நாள் அவரை அழகான தோற்றத்தில் மதீனாவின் மிகச் சிறந்த நல்லடியார் கனவில் பார்த்தார். வெண்மையான உருவத்தில் தலைப்பாகையுடன் அழகான குதிரையில் வானத்தில் இருந்து இறங்கி வருபவரைப் போல கண்டு, அவரிடம் அது பற்றி விசாரிக்க, என்னுடைய இல்மின் காரணமாக அல்லாஹ் இந்த நிலையை எனக்குத் தந்தான். நான் கற்ற ஒவ்வொரு கல்வியில் ஒவ்வொரு தலைப்புக்கும் பகரமாக சுவனத்தில் ஒரு அந்தஸ்து விதிக்கப்பட்டது. பிறகும் அல்லாஹ் மலக்குகளிடம் எனது நபிமார்களின் வாரிசாகிய இவருக்கு இன்னும் அந்தஸ்தை அதிகப் படுத்துங்கள். ஏனெனில் எனது நபிமார்களின் சுன்னத்தை கற்று அறிந்தவராக வந்துள்ளார் என்று கூற என் அந்தஸ்து இன்னும் அதிகமாக்கப்பட்டது. இறுதியாக எனது அந்தஸ்துக்கும் நபி ஸல் அவர்களின் அந்தஸ்துக்கும் இடையே இரண்டு படித்தரங்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். முதல் படித்தரம் அதில் நபி ஸல் அவர்களைச் சுற்றி நபிமார்கள் இருந்தார்கள். இரண்டாவது படித்தரம் சஹாபாக்கள் இருந்தார்கள். 3ம் தரஜாவில் இல்மும் அமலும் கொண்ட உலமாக்களும், அவர்களின் மாணவர்களும் இருந்தனர். அவர்களுக்கு நடுவில் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைக் கண்டவுடன் மர்ஹபா மர்ஹபா என்றுகூறி அனைவரும் வரவேற்றனர். மேலும் உலமாக்களே இதோ உங்களுக்கான சுவனம். நான் உங்களை பொருந்திக் கொண்டேன். சுவனத்தில் நீங்கள் விரும்பியதை நான் தருவேன். நீங்கள் யாருக்கு சிபாரிசு செய்கிறீர்களோ அவர்கள் விஷயத்தில் உங்களுடைய சிபாரிசை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அல்லாஹ் கூறியதாக சொல்லி விட்டு கனவை விட்டும் மறைந்து விட்டார்.இந்தக் கனவைக் கண்ட நல்லடியார் அதிகாலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல அந்தச் செய்தி மதீனா முழுவதும் பரவியது. எதுவரையெனில் இமாம் மாலிக் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சிலர் தீனுடைய கல்வியை கற்று பாதியோடு நிறுத்தியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் இச் சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் தங்களுடைய கல்வியை தொடர்பவர்களாக நான் கண்டேன்.                                               

பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அக்கறை காட்டும் பல  பெற்றோர்கள் தீனுடைய கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் கல்வி பெற்றவராவார்.  இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்தர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.ஆனால் இன்று ஸ்கூல், மதரஸா இரண்டையும் தனித்தனியாக பிரித்து விட்ட காரணத்தாலும், மதரஸாவுடைய கல்வியை கற்க முடியாத அளவுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் நேரங்கள் அதைத் தொடர்ந்து வீட்டுப் பாடங்கள் என துன்யாவின் தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் பாவம்.. நம் பிள்ளைகளில் எத்தனையோ பேருக்கு முறையாக தீனுடைய கல்வி கிடைக்காமலேயே இருக்கிறது.                             

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மாரக்கக் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவருடைய தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும்அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம் அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும்.                                                                   

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று எண்ணி சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்                                                                  

மார்க்கக்கல்வியால் உயர்ந்த மற்றொரு மாமேதை இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களைப் பற்றி...

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத் தாய்  என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்ல என்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது

 

 

இளம் வயதிலேயே கல்வியை கற்பது சிறந்தது

عن موسى بن علي عن أبيه:أن لقمان الحكيم قال لابنه :يا بني اِبتغ العلم صغيرا فإن ابتغاء العلم يشق على الكبير يا بني إن الموعظة تشق على السفيه كما يشق الوعث الصعود على الشيخ الكبير (الفقيه والمتفقه للخطيب البغدادي)عن ابن عباس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم حِفظُ الغلامِ كالوَشم في الحَجر عن الحسن البصري  قال:التعلم في الصغر كالنقش في الحجر-قال ابن بشران وحفظ الرجل بعدما كبر كالكتاب على الماء-قال علقمة :ما حفظتُ وأنا شاب فكأني أنظر إليه في قرطاس أو ورقة- عن معمر قال :جالست قتادة وأنا ابن أربع عشرة سنة فما سمعت منه شيئا وأنا في , ذلك السن إلا وكأنه مكتوب في صدري (الفقيه والمتفقه للخطيب البغدادي)

சிறு வயதில் தீன் கல்வி கற்பது சிற்பத்தில் செதுக்கும் ஓவியம் போல ...

ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறினார்கள் முதிய வயதில் மனப்பாடம் என்பது தண்ணீர் மீது எழுதுவது போல என்று கூறினார்கள்.  அல்கமா ரழி கூறினார்கள். இளம் வயதில் நான் கற்ற கல்வி என் மனதில் பதிந்தது. நான் பார்க்காமல் ஓதும்போது பேப்பரில் உள்ளதைப் படிப்பது போன்று இருக்கும். மஃமர் ரஹ் அவர்கள் கூறும்போது நான் 14 வயதில் கதாதா ரழி அவர்களிடம் கல்வி கற்றேன். அப்போது  நான் கற்ற அனைத்தும் என் மனதில் அப்படியே பதிந்தது.                                       

முடிவுரை - எந்தப் பொருளை வாங்கினாலும் எதில் பயன்பாடு அதிகம் என்று பார்க்கிறோம். ஒன்றுக்கு ஒன்றுக்கு free  என்றால் கியூவில் நின்று வாங்குவோம். அப்படியானால் உலகக் கல்வி உலக வாழ்வின் நன்மைக்கு மட்டுமே பயன்படும். தீன் கல்வி ஈருலகிலும் பயன்படும்.                                                         

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...